Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
நடிகர் ஜெய் – Touring Talkies https://touringtalkies.co Mon, 14 Nov 2022 07:52:36 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png நடிகர் ஜெய் – Touring Talkies https://touringtalkies.co 32 32 சூப்பர் ஹீரோவாக அவதாரமெடுக்கும் நடிகர் ஜெய்! https://touringtalkies.co/actor-jai-turns-to-be-super-hero-character-in-breaking-news-movie/ Mon, 14 Nov 2022 07:52:03 +0000 https://touringtalkies.co/?p=27052 தமிழ் சினிமாவில் தனி கதாநாயகன், இன்னொரு கதாநாயகனுடன் சேர்ந்து நடிப்பது, பல நட்சத்திரங்களுடன் சேர்ந்து நடிப்பது எனப் பல படங்களில் பார்த்து ரசித்த நடிகர் ஜெய்  கூடிய விரைவில் ஒரு சூப்பர் ஹீரோவாக நடிக்க உள்ளார். ராகுல் ஃபிலிம்ஸ் புரொடக்‌ஷன் சார்பாக K திருக்கடல் உதயம் படத்தைத் தயாரிக்க, சயின்ஸ் ஃபிக்‌ஷன் ஆக்‌ஷன் த்ரில்லர் கதையாக உருவாகி வரும் படம் BREAKING NEWS.  இந்தப் படத்தில் நாயகனாக நடிகர் ஜெய் நடித்திருக்கிறார். நாயகியாக தெலுங்கின் பானுஸ்ரீ நடிக்கிறார். […]

The post சூப்பர் ஹீரோவாக அவதாரமெடுக்கும் நடிகர் ஜெய்! appeared first on Touring Talkies.

]]>
தமிழ் சினிமாவில் தனி கதாநாயகன், இன்னொரு கதாநாயகனுடன் சேர்ந்து நடிப்பது, பல நட்சத்திரங்களுடன் சேர்ந்து நடிப்பது எனப் பல படங்களில் பார்த்து ரசித்த நடிகர் ஜெய்  கூடிய விரைவில் ஒரு சூப்பர் ஹீரோவாக நடிக்க உள்ளார்.

ராகுல் ஃபிலிம்ஸ் புரொடக்‌ஷன் சார்பாக K திருக்கடல் உதயம் படத்தைத் தயாரிக்க, சயின்ஸ் ஃபிக்‌ஷன் ஆக்‌ஷன் த்ரில்லர் கதையாக உருவாகி வரும் படம் BREAKING NEWS. 

இந்தப் படத்தில் நாயகனாக நடிகர் ஜெய் நடித்திருக்கிறார். நாயகியாக தெலுங்கின் பானுஸ்ரீ நடிக்கிறார். ராகுல் தேவ், தேவ் கில் வில்லன்களாகவும் சிநேகன் முக்கியக் கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். மேலும், பழ கருப்பையா, இந்திரஜா, ஜெய் பிரகாஷ், சந்தானபாரதி மற்றும் பலர் நடிக்கின்றனர்.

ஆக்‌ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் நடிகர் ஜெய் ரோபோக்களுடன் சண்டையிடும் ஆக்‌ஷன் காட்சிகள் மிக பிரம்மாண்டாகவும் அற்புதமாகவும் படமாக்கி உள்ளனர். படத்தில் இரண்டு பாடல்கள் உள்ளன. படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஆண்ட்ரூ பாண்டியன் இயக்குகிறார். படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது நடந்து வருகிறது.

படத்தின் தொழில் நுட்பக் குழு விவரம்:

ஒளிப்பதிவு: ஜானிலால், செவிலோ ராஜா,
விஷுவல் எஃபெக்ட்ஸ் சூப்பர்வைசர்: பிரபாகர் மேற்பார்வையில் இந்தியாவில் உள்ள பல ஸ்டுடியோக்களில் பணி நடந்து வருகிறது.
எடிட்டர்: அந்தோணி,
கலை: NM மகேஷ்,
சண்டைப் பயிற்சி: ஸ்டன்னர் சாம்,
நடனம்: ராதிகா,
பாடல்கள் இசை: விஷால்  பீட்டர்,
பின்னணி இசை: LV முத்து கணேஷ்.
ஒலி வடிவமைப்பு: ரமேஷ்,
சவுண்ட் FX: ரேண்டி,
எழுத்து & இயக்கம்: ஆண்ட்ரூ பாண்டியன்

The post சூப்பர் ஹீரோவாக அவதாரமெடுக்கும் நடிகர் ஜெய்! appeared first on Touring Talkies.

]]>
எண்ணித் துணிக – சினிமா விமர்சனம் https://touringtalkies.co/yenni-thuniga-movie-review/ Sun, 07 Aug 2022 07:21:11 +0000 https://touringtalkies.co/?p=23634 ஐ.டி. துறையில் பணியாற்றும் நாயகனான கதிர் என்னும் ஜெய் தனது கல்லூரி தோழியான நர்மதாவை தற்செயலாக சந்திக்கிறார். கல்லூரியில் படிக்கும்போது தன்னால் ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டு கல்லூரியில் இருந்து வெளியேறிய நர்மதா மீது கதிருக்கு ஒரு காதல் இருக்கிறது. இந்தக் காதலை வளர்த்தெடுக்க அவர் நினைக்கிறார். இன்னொரு பக்கம் நர்மதா சுற்றுச் சூழல், மது ஒழிப்பு போன்ற சமூகப் பிரச்சினைகளுக்காக களத்தில் இறங்கிப் போராடும் பெண்ணாகவும் இருக்கிறார். ஆனாலும் ஜெய்யின் உண்மையான காதலைப் புரிந்து கொண்டு […]

The post எண்ணித் துணிக – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
ஐ.டி. துறையில் பணியாற்றும் நாயகனான கதிர் என்னும் ஜெய் தனது கல்லூரி தோழியான நர்மதாவை தற்செயலாக சந்திக்கிறார். கல்லூரியில் படிக்கும்போது தன்னால் ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டு கல்லூரியில் இருந்து வெளியேறிய நர்மதா மீது கதிருக்கு ஒரு காதல் இருக்கிறது. இந்தக் காதலை வளர்த்தெடுக்க அவர் நினைக்கிறார்.

இன்னொரு பக்கம் நர்மதா சுற்றுச் சூழல், மது ஒழிப்பு போன்ற சமூகப் பிரச்சினைகளுக்காக களத்தில் இறங்கிப் போராடும் பெண்ணாகவும் இருக்கிறார். ஆனாலும் ஜெய்யின் உண்மையான காதலைப் புரிந்து கொண்டு கல்யாணத்துக்கு சம்மதிக்கிறார் அதுல்யா.

இந்த நேரத்தில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரத்தில் இருக்கும் சர்வதேச நகைக் கடத்தல் கும்பலின் தலைவன் 2000 கோடி மதிப்புள்ள 10 வைரக் கற்களை பறிகொடுத்துவிட்டான். இந்த வைரக் கற்கள் தற்போது தமிழ்நாட்டில் மாநில அமைச்சராக இருக்கும் சுனில் ரெட்டியிடம் இருப்பதாகத் தெரிய வருகிறது.

சுனில் ரெட்டியோ அந்த வைர நகைகளை அவரது பினாமி நடத்தும் நகைக்கடையில் பத்திரமாக வைத்திருக்கிறார். இந்தத் தகவலும் அந்த சர்வதேச கொள்ளையருக்குத் தெரிகிறது. உடனேயே சென்னையில் இருக்கும் வம்சி கிருஷ்ணாவின் தலைமையில் ஒரு டீமை அமைத்து அந்த நகைக்கடையைக் கொள்ளையடித்து வைரக் கற்களை கொண்டு வரும்படி சொல்கிறார்.

இந்த கொள்ளையர் டீம் நகைக் கடைக்குள் வரும்போது அங்கே தனது கல்யாணத்திற்கு நகை வாங்குவதற்காக அதுல்யாவும் வந்திருக்கிறார். அதேபோல் தனது குழந்தையின் மருத்துவ சிகிச்சைக்காக தனது நகையை விற்க வந்திருக்கிறார் இன்னொரு நாயகியான அஞ்சலி நாயர்.

நகைக் கடையில் நடக்கும் கொள்ளையடிப்பு சம்பவத்தில் அதுல்யாவும், அஞ்சலி நாயரின் கணவரும் கொல்லப்படுகிறார்கள். அஞ்சலி நாயர் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தும் உயிர் பிழைக்கிறார்.

இவர் உயிர் பிழைத்தால் மட்டுமே கொள்ளையர்கள் பற்றிய முழு தகவலும் தெரிய வரும் என்பதால் இவரை தனியார் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று சிகிச்சையளிக்கிறார் அமைச்சர் சுனில் ரெட்டி.

இன்னொரு பக்கம் போலீஸை நம்பினால் இதில் எதுவும் நடக்காது என்று நி்னைக்கும் ஜெய் தானே இந்த வழக்கில் துப்பறிய இறங்குகிறார். அமைச்சர் ஒரு பக்கம் தனது வைரக் கற்களுக்காக மல்லுக்கட்ட.. உயிர் பிழைக்கும் அஞ்சலி நாயர் தனது குழந்தையைக் காப்பாற்ற நினைக்க.. தனது காதலியை கொன்றவனை பழி வாங்க ஜெய் துடிக்க.. யாருடைய எண்ணம் நிறைவேறியது என்பதுதான் இந்த ‘எண்ணித் துணிக’ படத்தின் திரைக்கதை.

‘எண்ணித் துணிக’ என்ற இப்படத்தின் தலைப்பு திருக்குறளிலிருந்து எடுக்கப்பட்டதாகும். எண்ணித் துணிக கர்மம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு…’ என்ற அற்புதமான குறளை மையப்படுத்திய படம் இது,  

ஒரு செயலில் ஈடுபடத் தொடங்கும் முன் அது குறித்து எத்தனை முறை வேண்டுமானல் சிந்திக்கலாம். ஆனால் முடிவெடுத்துவிட்டால் எக்காரணத்தை முன்னிட்டும் அதிலிருந்து பின் வாங்கக் கூடாது என்பதை அழுத்தமாகச் சொல்கிறது இந்தக் குறள்.

இதை மையப்படுத்திதான் இப்படத்தின் கதாநாயகன் கதிரின் கதாப்பாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இதுவரையிலும் எளிதான காதல் நாயகனாகவே நடிக்க வைக்கப்பட்டிருந்த நடிகர் ஜெய்க்கு இந்தப் படத்தில் முழு நீள ஆக்சனை கொடுத்து ஆக்சன் ஹீரோவாக்கியிருக்கிறார்கள்.

ஜெய் தனது வழக்கமான நடிப்பையே பதிவு செய்திருக்கிறார். சண்டை காட்சிகளில் வேகத்தைக் காட்டியிருக்கிறார். காதல் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். சிரிக்கவும், காதலிக்கவும் வரும் அவரது முகம் சோகத்திற்கும், கோபத்திற்கும் மட்டுமே ஒத்துழைக்க மறுக்கிறது.

வில்லனாக நடித்திருக்கும் வம்சி கிருஷ்ணாவின் நடிப்பு பார்வையாளர்களை ஈர்க்கிறது. இன்னும் வித்தியாசமான வில்லனாக இவரைக் காட்டியிருக்கலாம். அதுல்யா காதல் காட்சிகளுக்காகவும், டூயட் பாடலுக்காகவும் படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்.

வித்யா பிரதீப் வில்லி கதாபாத்திரத்தில் தனது உருண்ட விழிகளை உருட்டியே நடித்திருக்கிறார். அஞ்சலி நாயர் சென்டிமெண்ட் காட்சிகள் முழுவதிலும் தனது ஆளுமையைக் காட்டி படத்தின் பெரும் பாரத்தை தானே சுமந்திருக்கிறார்.

திருட்டு அமைச்சராக சுனில் ரெட்டி தனது டயலாக் டெலிவரியில் பின்னியெடுத்திருக்கிறார். போலீஸ் உயரதிகாரியை அவர் வார்த்தைகளால் படுத்தும்பாடு உச்சக்கட்ட கேவலம். வில்லத்தனம் கலந்த நகைச்சுவையான நடிப்பில் இறுதியில் அவர் ஈர்க்கிறார்.

பாசமான அப்பாவாக மாரிமுத்துவும், கண்டிப்பான அப்பாவாக கோபி கண்ணதாசனும் தத்தமது கேரக்டர் ஸ்கெட்ச்சுக்கேற்ற நடிப்பைக் காண்பித்திருக்கிறார்கள்.

சாம் சி.எஸ் பின்னணி இசையில் அடித்து ஆடியிருக்கிறார் என்றாலும் பாடலுக்கான இசை அவ்வளவு ஈர்ப்பாக இல்லை. குர்டிஸ் ஆண்டனின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறது.

‘ஒரு அப்பனுக்கு பொறந்திருந்தா?’ என்ற வசனத்தை இன்னும் எத்தனை வருடத்திற்குத்தான் தமிழ்ச் சினிமாவில் கேட்பது. இதற்கொரு எண்ட் கார்டு போடக் கூடாதா..? மற்றபடி அமைச்சர் சுனில் ரெட்டி பேசும் பல வசனங்கள் புத்திசாலித்தனமாக, கோர்வையாக, கதைக்கு உதவுவதைப் போலவே இருக்கிறது.

படத்தின் முதல் பாதியை எடுத்துக் கொண்டால், நகைகளை கொள்ளையடிக்கும் காட்சி விறுவிறுப்புடனே நடக்கிறது. ஆனாலும், அந்த நகைக்கடை இருக்கும் சாலைகளில் சிசிடிவி கேமிராவே இல்லையா..? அதை வைத்து கண்டறியலாமே..? இதை மட்டும் திரைக்கதையாசிரியர் தன் வசதிக்காக சொல்லாமலேயே மறைத்துவிட்டார்.

இடைவேளைக்குப் பின்புதான் படத்தின் திரைக்கதை வேகமெடுக்கிறது. முதல் பாதியை ஒப்பிடும்போது, இரண்டாம் பாதி சற்று ஆறுதலைத் தருகிறது. இடைவேளைக்குப் பின்பு டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட்டாக திரைக்கதை பறந்து கொண்டே போவதால் படம் இடைவேளைக்குப் பின்புதான் அதிக அலப்பறையாக இருக்கிறது.

கடைசியாக அந்த வைரக் கற்களை வைத்தே வில்லனின் கதையை முடிக்கும் திரைக்கதைக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டு..!

மொத்தத்தில் இந்த ‘எண்ணி்த் துணிக’ படத்தைப் பார்க்கலாம்தான்…!

RATING : 3.5 / 5

The post எண்ணித் துணிக – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
“அஞ்சலியுடன் காதலா..?”-குழப்பமாக பதில் சொன்ன நடிகர் ஜெய் https://touringtalkies.co/actor-jai-explained-about-his-co-star-anjali/ Mon, 16 Aug 2021 11:33:25 +0000 https://touringtalkies.co/?p=17066 நடிகர் ஜெய்யும், நடிகை அஞ்சலியும் காதலிப்பதாகவும், இருவரும் திருமணம் செய்யவிருப்பதாகவும் தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டிருந்த நிலையில் இப்போது இருவருமே சைலண்ட் மோடுக்கு சென்றுவிட்டார்கள். காதல் பிரிவா.. அல்லது அமைதியா என்ற கேள்விக்கு இருவருமே பதில் சொல்லாமல் தவிர்த்து வந்த நிலையில் ஜெய் மட்டும் இதற்குப் பதிலளித்துள்ளார். அவர் அளித்துள்ள பதிலில், “நான் படங்களில் காதல் நாயகனாக நடிப்பதால்தான் இப்படியெல்லாம் என்னைச் சுற்றி வதந்திகள் பரவி வருகின்றன. எனக்கு இளைஞர்கள் வட்டாரத்தில்தான் நிறைய ரசிகர், ரசிகைகள் இருக்கிறார்கள். […]

The post “அஞ்சலியுடன் காதலா..?”-குழப்பமாக பதில் சொன்ன நடிகர் ஜெய் appeared first on Touring Talkies.

]]>
நடிகர் ஜெய்யும், நடிகை அஞ்சலியும் காதலிப்பதாகவும், இருவரும் திருமணம் செய்யவிருப்பதாகவும் தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டிருந்த நிலையில் இப்போது இருவருமே சைலண்ட் மோடுக்கு சென்றுவிட்டார்கள்.

காதல் பிரிவா.. அல்லது அமைதியா என்ற கேள்விக்கு இருவருமே பதில் சொல்லாமல் தவிர்த்து வந்த நிலையில் ஜெய் மட்டும் இதற்குப் பதிலளித்துள்ளார்.

அவர் அளித்துள்ள பதிலில், “நான் படங்களில் காதல் நாயகனாக நடிப்பதால்தான் இப்படியெல்லாம் என்னைச் சுற்றி வதந்திகள் பரவி வருகின்றன. எனக்கு இளைஞர்கள் வட்டாரத்தில்தான் நிறைய ரசிகர், ரசிகைகள் இருக்கிறார்கள். இதனால்தான் இந்த இமேஜ் எனக்கு ஏற்பட்டுள்ளது.

நான் காதலில் விழுந்ததெல்லாம் சினிமாவுக்குள் வந்த பின்புதான். ஒண்ணு, ரெண்டுன்னா சொல்லலாம். நிறைய இருக்கு. அதனால் எல்லாத்தையும் சொல்ல முடியாது. நான் நிறைய பேர்களைக் காதலித்தேன். இப்போது அவர்களின் பெயர்களைச் சொன்னால் அவர்களின் கணவர்கள் சண்டைக்கு வந்துவிடுவார்கள். அவர்கள் எல்லாருக்குமே இன்று குழந்தைகள் இருக்கிறார்கள்.

அஞ்சலியைப் பற்றியே எல்லாரும் என்னிடம் கேள்வி கேட்கிறார்கள். அவருக்கும், எனக்கும் காதலா என்பது பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. அவர் தற்போது அவரது வேலையைப் பார்க்கிறார். நான் எனது வேலையைப் பார்க்கிறேன். நாங்கள் இருவருமே தற்போது சுதந்திரப் பறவைகள். ஆனால் நிச்சயமாக நான் காதல் திருமணம்தான் செய்வேன்..” என்று சொல்லி முடித்திருக்கிறார்.

The post “அஞ்சலியுடன் காதலா..?”-குழப்பமாக பதில் சொன்ன நடிகர் ஜெய் appeared first on Touring Talkies.

]]>
ஜெய் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘பிரேக்கிங் நியூஸ்’ விரைவில் வெளியாகவுள்ளது https://touringtalkies.co/breaking-news-movie-news/ Sun, 22 Nov 2020 07:00:27 +0000 https://touringtalkies.co/?p=10282 நடிகர் ஜெய் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படம் ’பிரேக்கிங் நியூஸ்.’ நாகர்கோவிலைச் சார்ந்த தயாரிப்பாளர் திருக்கடல் உதயம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் ஜெய்க்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகையான பானுஸ்ரீ நடிக்கிறார். நடிகை பானுஸ்ரீ தெலுங்கு மொழி திரைப்படங்களில் குறுகிய காலத்தில் மிகவும் பிரபலமானவர். ‘தெலுங்கு பிக்பாஸ் சீசன்-2’-வில் அதிகப் புகழ் பெற்றவர் இவர்தான். ‘மகதீரா’, ‘சுறா’ ஆகிய படங்களில் நடித்த நடிகர் தேவ் கில், ‘வேதாளம்’ படத்தில் நடித்த ராகுல் தேவ் ஆகியோர் […]

The post ஜெய் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘பிரேக்கிங் நியூஸ்’ விரைவில் வெளியாகவுள்ளது appeared first on Touring Talkies.

]]>
நடிகர் ஜெய் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படம் ’பிரேக்கிங் நியூஸ்.’

நாகர்கோவிலைச் சார்ந்த தயாரிப்பாளர் திருக்கடல் உதயம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தில் ஜெய்க்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகையான பானுஸ்ரீ நடிக்கிறார். நடிகை பானுஸ்ரீ தெலுங்கு மொழி திரைப்படங்களில் குறுகிய காலத்தில் மிகவும் பிரபலமானவர். தெலுங்கு பிக்பாஸ் சீசன்-2’-வில் அதிகப் புகழ் பெற்றவர் இவர்தான்.

மகதீரா’, ‘சுறா’ ஆகிய படங்களில் நடித்த நடிகர் தேவ் கில், ‘வேதாளம்’ படத்தில் நடித்த ராகுல் தேவ் ஆகியோர் வில்லன் வேடங்களில் நடிக்கிறார்கள்.

ஜானி லால் ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி படத் தொகுப்பை கையாள்கிறார். உலக அளவில் 450 CG தொழில் நுட்ப வல்லுநரான வி.தினேஷ்குமாரின் மேற்பார்வையில் VFX பணிகளை செய்து வருகிறார்கள். அறிமுக இயக்குநரான ஆண்ட்ரூ பாண்டியன் படத்திற்கு  கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.

விஷுவல் புரொமோக்கள் மற்றும் பாடல்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், விரைவில் இத்திரைப்படம் வெளியாகவுள்ளது.

இயக்குநர் ஆண்ட்ரு பாண்டியன் படம் குறித்து பேசும்போது, “படத்தின் படப்பிடிப்பை முழுதாக முடித்துவிட்டோம். போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளும் தற்போது முடியும் தருவாயில் உள்ளது.

நடிகர் ஜெய்யுடன் இப்படத்தில் பணிபுரிந்த அனுபவம் எனக்கு மிகவும் அற்புதமாக இருந்தது. அவரது ஒத்துழைப்பும் படத்தின் மீதான அவரது ஈடுபாடும் அபாரமானதாக இருந்தது. படத்தின் துவக்க நாள் முதலாக, படத்தின் மீது பெரும் ஈடுபாட்டுடன், மிக கடினமான கதாப்பாத்திரத்தை முழுதாக உள்வாங்கி,  தனது மிகச் சிறந்த நடிப்பை முழு மூச்சுடன் வழங்கினார்.

படத்தின் புட்டேஜ்களை எடிட் செய்தபோது நடிகர் ஜெய்யின் நடிப்பை கண்டு பிரமித்து போனேன். இப்படம் அவரை தமிழ் சினிமாவில் மிகப் பெரிய நட்சத்திர அந்தஸ்திற்கு அழைத்து செல்லும்.

இத்திரைப்படம் பெரும் உற்சாகத்தையும் அதே நேரம் படத்தை தரமான படைப்பாக ரசிகர்களுக்கு அளிக்க வேண்டுமென்கிற பொறுப்புணர்வையும் அளித்துள்ளது.

இப்படத்தின் பெரும் பகுதி கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் கொண்டதாக  உள்ளது.  அதற்காக கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் செய்யும் 450 பணியாளர்கள் பணி புரிந்து வருகிறார்கள்…” என்றார்.

The post ஜெய் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘பிரேக்கிங் நியூஸ்’ விரைவில் வெளியாகவுள்ளது appeared first on Touring Talkies.

]]>