The post “வாரிசு’ ரிலீஸ் ஆகலைன்னா வேற எந்தப் படமும் வெளியாகாது” – இயக்குநர் பேரரசு எச்சரிக்கை appeared first on Touring Talkies.
]]>இது குறித்து இயக்குநர் பேரரசு பேசும்போது, “தற்போது ஆந்திராவில் பண்டிகை காலங்களில் தமிழ் படங்களை திரையிடக் கூடாது. தெலுங்கு படங்களுக்குத்தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்திருக்கிறது.
நாம் மொழி பார்த்து படம் பார்ப்பதில்லை. இந்த வருடம் பொங்கலுக்கு ‘பீஸ்ட்’ படம் வெளியான அதே சமயத்தில்தான், ‘கே.ஜி.எப்.-2’ படமும் வெளியானது. அந்தப் படத்தின் முதல் பாகத்திற்கு ஏற்கனவே கிடைத்த வெற்றியால் ‘பீஸ்ட்’ படத்திற்கு போலவே, கே.ஜி.எப். படத்தின் 2-ம் பாகத்திற்கும் அதிகமான தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டது.
இதேபோலத்தான் ‘பொன்னியின் செல்வன்’ வெளியான சமயத்தில் கன்னடத்திலிருந்து வெளியான ‘காந்தாரா’ திரைப்படம் இங்கே வரவேற்பை பெற்றதால் அதிக தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டன.
நாம்தான் திராவிடம் என்கிற பாசத்துடன் அனைவரையும் ஒன்றாக பார்க்கிறோம். ஆனால் அவர்கள் நம்மை தமிழர்களாக மட்டும்தான் பார்க்கிறார்கள். ‘வாரிசு’ படத்தை தயாரித்தவரும், இயக்கியவரும் தெலுங்கு திரையுலகை சேர்ந்தவர்கள்தான். ஹீரோ மட்டும்தான் தமிழ். அதனால் ஹீரோவை கார்னர் பண்றாங்க.
இப்போது அவர்கள் கொண்டு வந்திருக்கும் புதிய நடைமுறை நம்மை அவமானப்படுத்துவது போல இருக்கிறது. இதை சாதாரண பிரச்சினையாக கடந்து போக முடியாது. இது நமது மானப் பிரச்சனை.
தென்னிந்திய மொழிகள் அனைத்துக்கும் சரிசமமான முடிவெடுக்க வேண்டிய தென்னிந்திய வர்த்தக சபை இதில் தலையிடவேண்டும். மவுனமாக இருப்பது தப்பாக போய்விடும். அதுமட்டுமல்ல, இந்த விஷயத்தில் தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கமும் குரல் கொடுக்க வேண்டும்.
‘வாரிசு’ படம் தெலுங்கில் ரிலீஸ் ஆகவில்லை என்றால் அடுத்து இங்கே வேறு எந்த மொழி படமும் ரிலீஸ் ஆகாத அளவுக்கு பிரச்சனை பெரிதாக மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் இது நம் ரோஷத்தையும், உணர்வையும் தூண்டி விடக்கூடிய ஒரு விஷயம்..” என்றார்.
The post “வாரிசு’ ரிலீஸ் ஆகலைன்னா வேற எந்தப் படமும் வெளியாகாது” – இயக்குநர் பேரரசு எச்சரிக்கை appeared first on Touring Talkies.
]]>The post “வாரிசு’க்கு முன்.. ‘வாரிசு’க்கு பின்” என்று நிலைமை மாறும்” – இயக்குநர் லிங்குசாமி எச்சரிக்கை appeared first on Touring Talkies.
]]>இது குறித்து இயக்குநர் லிங்குசாமி கருத்து தெரிவிக்கையில், “தற்போது ஆந்திராவில் பண்டிகை காலங்களில் தமிழ் படங்களை திரையிடக் கூடாது என தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்திருப்பது தவறானது. இப்போது வெளியாகும் படங்கள் எல்லாம் நன்றாக ஓடுகின்றன. இது சினிமாவிற்கு ஒரு பொற்காலம். இந்த சமயத்தில் இப்படி ஒரு பிரச்சனை வரவே கூடாது.
‘வாரிசு’ ரிலீஸ் விஷயத்தில் சரியான ஆட்கள் பேசி இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும். குறுகிய எண்ணத்தோடு யாராவது இப்படி ஒரு முடிவெடுத்து இருந்தால், நிச்சயமாக ‘வாரிசு’க்கு முன்; ‘வாரிசு’க்கு பின் என்று இந்திய சினிமாவும் மாறிவிடும். அதனால் இப்போது ஏற்பட்டிருப்பது ஒரு சின்ன சலசலப்புதான். இது விரைவில் சரியாகிவிடும் என நம்புகிறேன்..” என்றார்.
The post “வாரிசு’க்கு முன்.. ‘வாரிசு’க்கு பின்” என்று நிலைமை மாறும்” – இயக்குநர் லிங்குசாமி எச்சரிக்கை appeared first on Touring Talkies.
]]>The post “100 கோடி கொடுத்தாலும் இனி இவருடன் நடிக்க மாட்டேன்” – நடிகர் அர்ஜூன் அறிவிப்பு! appeared first on Touring Talkies.
]]>இதற்காக தெலுங்கு சினிமாவில் வளர்ந்துவரும் நடிகரான விஷ்வக் சென்னை படத்தின் நாயகனாகவும் ஒப்பந்தம் செய்துள்ளார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருப்பதாக சொல்லப்பட்ட நிலையில், நேற்றைக்கு செய்தியாளர்களை அவசரமாக அழைத்த அர்ஜுன் தான் இயக்கவிருந்த படத்தின் நாயகன் விஷ்வக் சென் குறித்து பலவித குற்றச்சாட்டுகளை வரிசையாக அடுக்கினார்.
“என் மகளை தெலுங்குத் திரையுலகிற்கு அறிமுகப்படுத்துவதற்காக இந்தப் படத்தைத் தொடங்கினேன். நான் கதையைச் சொன்னதும் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் விஷ்வக் சென். அவர் கேட்ட சம்பளத்தையும் நாங்களும் தர தயாராக இருந்தோம்.
இருப்பினும், ஜெகபதி பாபு போன்ற மற்ற மூத்த நடிகர்களுடன் திட்டமிடப்பட்ட தேதிகளில் அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை. அவரை பல முறை தொடர்பு கொண்டும் பதில் இல்லை.
என் வாழ்நாளில் நான் அவருக்கு போன் செய்ததுபோல் போல் வேறு யாருக்கும் அத்தனை முறை தொடர்பு கொண்டது இல்லை. பெரிய ஸ்டாராக இருந்தாலும் அல்லு அர்ஜுன், ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் தொழில் ரீதியாக மிக அர்ப்பணிப்புடனும் பணியாற்றுகிறார்கள். ஒரு நடிகன் தனது தொழிலில் மிகவும் அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும். அந்த அர்ப்பணிப்பு விஷ்வக் சென்னிடம் இல்லை.
இப்படி ஒரு விரோதமான சூழலில் அவரை வைத்து இந்தப் படத்தைத் தொடர வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன். அவருக்கு பதிலாக வேறொரு நடிகரை நடிக்க வைக்க இருக்கிறேன். எனினும் விஷ்வக் சென் பற்றி அனைவருக்கும் தெரிவிக்கவே இந்த பத்திரிகையாளர் சந்திப்பை நடத்துகிறேன். அந்த அளவுக்கு அவர் என்னையும், எனது குழுவையும் டார்ச்சர் செய்துள்ளார். இனிமேல் 100 கோடி கொடுத்தாலும் அவருடன் பணிபுரிய மாட்டேன்” என்று பொங்கித் தீர்த்துவிட்டார் அர்ஜூன்.
The post “100 கோடி கொடுத்தாலும் இனி இவருடன் நடிக்க மாட்டேன்” – நடிகர் அர்ஜூன் அறிவிப்பு! appeared first on Touring Talkies.
]]>The post நிர்வாணப் போராட்டம் நடத்தியது ஏன்? – நடிகை ஸ்ரீரெட்டியின் விளக்கம் appeared first on Touring Talkies.
]]>சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் என்று பலரும் தன்னை படுக்கையில் பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றி விட்டதாக குற்றம் சாட்டினார் ஸ்ரீரெட்டி.
தன்னை ஏமாற்றியவர்களாக தமிழ், தெலுங்கு திரையுலகத்தின் முக்கியஸ்தர்களின் பெயர்களையெல்லாம் வெளியிட்டு அதிர வைத்தார் ஸ்ரீரெட்டி.
இதனால் நாளை ஸ்ரீரெட்டி யாரை கை காட்டப் போகிறாரோ.. என்ன சொல்லப் போகிறாரோ? யாரை காலி பண்ண போகிறாரோ என பீதியில் இருந்தது கோலிவுட் சினிமாவும், டோலிவுட் சினிமாவும்.
இந்நிலையில் சமீபத்தில் நடிகை ஷகிலாவின் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஸ்ரீரெட்டி தான் ஆடையை கழட்டி போராட்டம் நடத்தியது ஏன் என்பதை மனம் திறந்து பேசியுள்ளார்.
“சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருகிறேன், போட்டோஷூட் நடத்த வேண்டும் வாருங்கள் என அழைப்பார்கள். அதைக் காட்டுங்கள், இதைக் காட்டுங்கள், அப்படி காட்டுங்கள், இப்படி காட்டுங்கள், டிரெஸை தூக்குங்கள், பேண்ட்டை இறக்குங்கள் என அவர்களுக்கு என்னவெல்லாம் ஆசையோ அதையெல்லாம் செய்துவிட்டு, என் உடம்பையும் பார்த்துவிட்டு அனுப்பி விடுவார்கள். ஆனால் வாய்ப்பு மட்டும் கொடுக்க மாட்டார்கள்.
வாய்ப்பு கொடுப்பதாக கூறி அழைப்பவர்களும் தயாரிப்பாளரிடம் அட்ஜெஸ்ட் செய்ய வேண்டும். அவர் கேட்பதையெல்லாம் செய்ய வேண்டும் என்று கூறுவார்கள். அப்படி செய்தபோதும்கூட வாய்ப்பு கொடுக்காமல் ஏமாற்றி விடுகிறார்கள். டாப் நடிகர்கள், டாப் இயக்குநர்கள்கூட படுக்கையில் என்னை பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றி விட்டார்கள்.
அவர்கள் எல்லோரும் பார்த்த என் உடம்பை எனக்கு நியாயம் கேட்டு காட்டினேன். அவர்கள் என்னை பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றியது மட்டும் சரி.. நான் செய்தது தவறா? எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் ஆடைகளை அவிழ்த்து போராட்டம் நடத்தினேன்..” என கூறியுள்ளார் நடிகை ஸ்ரீரெட்டி.
The post நிர்வாணப் போராட்டம் நடத்தியது ஏன்? – நடிகை ஸ்ரீரெட்டியின் விளக்கம் appeared first on Touring Talkies.
]]>The post பிரகாஷ்ராஜூக்கு எதிராக விஜயசாந்தி..! appeared first on Touring Talkies.
]]>தெலுங்கு நடிகர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு இதுவரையிலும் பிரகாஷ் ராஜ், விஷ்ணு மஞ்சு, ஜீவிதா ராஜசேகர், ஹேமா ஆகிய நால்வர் மட்டுமே தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாக அறிவித்திருந்தனர்.
இவர்களில் ஜீவிதாவைத் தவிர மற்ற மூவரும் தனியாக அணி அமைத்திருக்கிறார்கள். ஜீவிதா மட்டுமே தனித்து தலைவர் பதவிக்கு நிற்கப் போவதாகத் தெரிகிறது.
இந்த நேரத்தில் திடீரென்று பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த நடிகரான சி.வி.எல்.நரசிம்ம ராவ் இந்த நடிகர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாக நேற்றைக்கு அறிவித்தார்.
ஐந்தாவது நபராக இவர் களத்தில் குதித்து அனைவருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. அதைவிட ஆச்சரியம், இந்த நரசிம்மராவிற்கு நடிகை விஜயசாந்தி ஆதரவு கொடுத்திருப்பதுதான். விஜயசாந்தி தற்போது பாரதீய ஜனதா கட்சியில் இருக்கிறார். அதனால், அந்தக் கட்சி சார்பிலான பாசத்தில்தான் நரசிம்மராவிற்கு அவர் ஆதரவு கொடுத்திருக்கிறாராம்.
இது குறித்து விஜயசாந்தி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் “இன்றைய இளம் நடிகர், நடிகைகளுக்கு நிறைய உதவிகள் தேவைப்படுகிறது. அதை சரியாக செய்யக் கூடிய ஒரு ஆள் தேவை. என்னுடைய ஆதரவை நான் நரசிம்மராவிற்கு வழங்குகிறேன். நான் அந்த சங்கத்தில் உறுப்பினராக இல்லையென்றாலும் சினிமா துறையைச் சேர்ந்தவள் என்பதால் எனது ஆதரவினை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டியிருக்கிறது..” என்று குறிப்பிட்டுள்ளார்.
விஜயசாந்தி தெலுங்கு நடிகர்கள் சங்கத்தில் இதுவரையிலும் சேரவே இல்லை. ஆனாலும் இந்தத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியின் முக்கிய பிரமுகர் போட்டியிடுவதுகூட பிரகாஷ்ராஜை தோற்கடிப்பதற்காகத்தான் என்று ஆந்திரா திரையுலகத்தில் பேச்சு அடிபடுகிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே நடிகர் பிரகாஷ்ராஜ் மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சியையும், மோடியையும் கடுமையாக சாடி வருகிறார். சென்ற பாராளுமன்றத் தேர்தலில்கூட பெங்களூரில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.
பிரகாஷ்ராஜை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவே நரசிம்மராவை கட்சியே களத்தில் இறக்கியிருக்கிறது என்கிறார்கள் ஆந்திர மாநில பா.ஜ.கட்சியினர். அதே நேரம் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் இன்னொரு வேட்பாளரான நடிகை ஜீவிதா ராஜசேகரும் பாரதீய ஜனதா கட்சியின் உறுப்பினர்தான். எனவே இவர்கள் இருவரை வைத்தே பிரகாஷ்ராஜை தோற்கடிக்க பாரதீய ஜனதா கட்சி திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
திரைப்பட சங்கங்களில் கட்சிகள் தலையிட்டால் அவற்றின் நிலைமை என்னாகும் என்பது தமிழ்த் திரைப்பட சங்கங்களை பார்த்தாலே தெரியும். இப்போது இதே நிலைமை தெலுங்கு திரையுலகத்திலும் வரப் போகிறது.
The post பிரகாஷ்ராஜூக்கு எதிராக விஜயசாந்தி..! appeared first on Touring Talkies.
]]>The post “ஆரம்பத்தில் எனக்கும் ‘மீ டூ’ தொல்லைகள் இருந்தன..” – சொல்கிறார் நடிகை அனுஷ்கா..! appeared first on Touring Talkies.
]]>இந்திய சினிமாவிலும் பல பிரபலங்களின் முகத்திரையை இந்த ‘மீ டூ’ பிரச்சாரம் கிழித்தெறிந்தது.
தமிழ்ச் சினிமாவில் பெயர் சொல்லாமல் பலரும், அறியப்பட்ட சிலரும் இந்தக் குற்றச்சாட்டுக்களைச் சொல்லிப் பரபரப்பாக்கினார்கள்.
இத்தனை நாட்கள் கழித்து தென்னிந்தியாவின் புகழ் பெற்ற நடிகையான அனுஷ்காவும் இந்தக் குற்றச்சாட்டை இப்போது சொல்லியுள்ளார்.
இது குறித்து அவர் சமீபத்தில் அளித்திருக்கும் ஒரு பேட்டியில், “பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் அனைத்து துறைகளிலும் இருந்து வருகிறது. சினிமாவில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பிரச்சினைகள் இல்லை என்று நான் சொல்ல மாட்டேன். அந்த தொல்லையை ஆரம்பக் கட்டத்தில் நானும் அனுபவித்தேன். ஆனால், நான் அதற்கு ஒப்புக் கொள்ளாததால் அதற்கு பிறகு என்னை யாரும் தொந்தரவு செய்யவில்லை.
திரையுலகில் மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் இந்த பிரச்சனை இருக்கிறது. ஆனால், திரையுலகம் கவர்ச்சியானது என்பதால் அது வெளியே தெரிகிறது. ஒரு பெண்ணுக்கு விருப்பம் இல்லாதபோது அவளை நிர்ப்பந்தம் செய்வது தவறு…” என்று நடிகை அனுஷ்கா தெரிவித்துள்ளார்.
The post “ஆரம்பத்தில் எனக்கும் ‘மீ டூ’ தொல்லைகள் இருந்தன..” – சொல்கிறார் நடிகை அனுஷ்கா..! appeared first on Touring Talkies.
]]>