The post கார்த்தியை பார்த்தால் கூச்சமாக இருக்கும் – சூர்யா appeared first on Touring Talkies.
]]>தமிழ் சினிமாவில் கார்த்தி ,சூர்யா இருவரது படங்களும் வேறு வேறு கோணத்தில் இருந்தாலும் வெற்றியில் சரிசமமாக இருப்பவர்கள். சிக்ஸ் பேக் நடிகராக வலம் வருபவர் சூர்யா.
தம்பியுடன் விமானத்தில் பயணிக்கும் போது, எனக்கு ஒரு மாதிரி அவனை பார்த்தால் பொறாமையாக இருக்கும்.கம்ப்யூட்டர் சுத்தி புக் நெரைய வைத்திருப்பான். படிச்சிட்டே இருப்பான்.என்ன படிக்கிறே சொல்லுனு கேட்பேன். அவன் படித்ததை பேசும் போது அவனிடம் இருந்து அறிவை எடுத்துப்பேன்.
500 பக்கம் இருந்தாலும் அசால்ட்டா படிச்சிருவான். அவனை பார்க்கும் போது எனக்கு கொஞ்சம் கூச்சமா இருக்கும் என்னால் படிக்க முடியலேன்னு.ஒரு பேட்டியின் போது சூர்யா தனது தம்பி கார்த்திக் பற்றி பகிர்ந்து கொண்டார்.
The post கார்த்தியை பார்த்தால் கூச்சமாக இருக்கும் – சூர்யா appeared first on Touring Talkies.
]]>The post கிண்டலை பொருட்படுத்தாமல் தன்னம்பிக்கையுடன் வெற்றி கண்ட இயக்குநர்! appeared first on Touring Talkies.
]]>ஆனால் துவக்ககாலத்தில் அவரை அவமானப்படுத்தினார் ஒரு பிரபல நடிகர். அந்த சம்பவத்தை இயக்குநர் – நடிகர் மனோபாலா சமீபத்தில் தெரிவித்து உள்ளார்.
பிரபல கதாசிரியரான கலைமணியிடம் உதவியாளராக இருவந்தவர் ஏ.ஆர். முருகதாஸ். அப்போதிலிருந்தே மனோபாவுடன் முருகதாஸுக்கு நட்பு உண்டு.
“தினா”, “ரமணா” போன்ற திரைப்படங்களை இயக்கிய முருகதாஸ் அடுத்த படத்தை இயக்கும் முயற்சியில் இருந்தார்.
அப்போது மனோபாலா மூலமாக, ஒரு பிரபல நடிகரிடம் கதை சொல்ல சென்றார் முருகதாஸ். இவர் கதை சொல்ல ஆரம்பிக்க, அந்த நடிகரோ தனது வீட்டு நாய்களை சொல்லம் கொஞ்ச ஆரம்பித்துவிட்டார். கதையைக் கவனிக்கவே இல்லை.
பொறுத்துப் பார்த்தல் முருகதாஸ் “சார், நான் கதை சொல்லிட்டு இருக்கேன். நீங்களோ நாயுடன் விளையாடிக் கொண்டு இருக்கிறீர்களே” என ஆதங்கத்துடன் கேட்டார்.
அதற்கு நடிகர், “உன் கதை நல்லா இருந்தா நான் நாயுடன் விளையாட மாட்டேனே” என்று கிண்டலாகச் சொல்லி அவமானப்படுத்தி இருக்கிறார்.
முருகதாஸுடன் வந்த மனோபாலாவுக்கு இது கடும் கோபத்தை ஏற்படுத்தியது. உடனே முருதாஸை அழைத்துக் கொண்டு வெளியேறிவிட்டார்.
ஆனால் இந்த அவமானத்தைப் பொருட்படுத்தாத முருகதாஸ், அடுத்து சூர்யாவிடம் கதை சொல்ல, அதுதான் கஜினியாக வெளியாகி பெரும் வெற்றிபெற்றது.
தடைக்கற்களையே படிக்கல்லாக மாற்ற வேண்டும் என்பதற்கு முருகதாஸ் ஒரு உதாரணம்.
The post கிண்டலை பொருட்படுத்தாமல் தன்னம்பிக்கையுடன் வெற்றி கண்ட இயக்குநர்! appeared first on Touring Talkies.
]]>The post 6 பிலிம்ஃபேர் விருதுகளை வென்ற ‘சூரரைப் போற்று’ திரைப்படம் appeared first on Touring Talkies.
]]>இப்படத்தில் நடித்த சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான விருதும், சூர்யாவின் அம்மாவாக நடித்த ஊர்வசிக்கு சிறந்த துணை நடிகைக்கான விருதும், சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜி.வி.பிரகாஷுக்கும், சிறந்த பின்னணி பாடகருக்கான விருது ‘ஆகாசம்’ பாடலை பாடிய கிறிஸ்டியன் ஜோஸ் மற்றும் கோவிந்த் வசந்தா ஆகியோருக்கும் வழங்கப்பட்டது.
மேலும், சூர்யா தயாரித்து நடித்த ‘ஜெய் பீம்’ திரைப்படமும் 2 விருதுகளை வென்றுள்ளது. இப்படத்தில் நாயகியாக நடித்திருந்த லிஜோ மோல் ஜோஸ் சிறந்த நடிகைக்கான விருதையும், சிறந்த திரைக்கதைக்கான விருதினை த.செ.ஞானவேலும் பெற்றனர்.
அத்துடன் பா.ரஞ்சித் – ஆர்யா கூட்டணியில் வெளியாகி வெற்றி பெற்ற ‘சார்பட்டா பரம்பரை’ படமும் மூன்று விருதுகளை வென்றது. இந்தப் படத்தில் ரங்கன் வாத்தியாராக நடித்த பசுபதிக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. இதில் ஹீரோவாக நடித்த ஆர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான விருதும், ‘நீயே ஒலி’ என்ற பாடல் வரிகளை எழுதிய ‘தெருக்குரல் அறிவு’க்கு சிறந்த பாடலாசிரியருக்கான விருதும் வழங்கப்பட்டது.
The post 6 பிலிம்ஃபேர் விருதுகளை வென்ற ‘சூரரைப் போற்று’ திரைப்படம் appeared first on Touring Talkies.
]]>The post ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படம் appeared first on Touring Talkies.
]]>Studio Green & UV Creations நிறுவனங்களின் சார்பில் தயாரிப்பாளர்கள் வம்சி கிருஷ்ணா, பிரமோத் & K.E.ஞானவேல் ராஜா ஆகியோர் இணைந்து இப்படத்தினை தயாரிக்கின்றனர்.
மிகப் பெரும் பட்ஜெட்டில் பிரம்மாண்டமான படைப்பாக உருவாகும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி நாயகியாக நடிக்கிறார். இப்படத்தை பிரபல கமர்ஷியல் இயக்குநரான ‘சிறுத்தை’ சிவா இயக்குகிறார்.
எழுத்து, இயக்கம் – சிவா, இசை – ‘ராக் ஸ்டார்’ தேவி ஸ்ரீபிரசாத், ஒளிப்பதிவு – வெற்றி பழனி சுவாமி, கலை இயக்கம் – மிலன், படத் தொகுப்பு – நிஷாத் யூசுப், சண்டைப் பயிற்சி இயக்கம் – சுப்ரீம் சுந்தர், இணை எழுத்து – நாராயணா, வசனம் – மதன் கார்க்கி, நடனப் பயிற்சி இயக்கம் – ஷோபி, உடைகள் – ராஜன், உடை வடிமைப்பு – தாட்சயணி, அனுவர்தன், ஒப்பனை – குப்புசாமி, தயாரிப்பு ஒருங்கிணைப்பு – R.S.சுரேஷ் மணியன், VFX – ஹரிஹர சுதன், புகைப்படங்கள் – C.H.பாலு, விளம்பர வடிவமைப்பு – கபிலன் செல்லையா, பத்திரிகை தொடர்பு – Suresh Chandra & Rekha D’One, தயாரிப்பு – K.E.ஞானவேல் ராஜா, வம்சி, பிரமோத், பேனர்: Studio Green, UV creations.
இப்படத்திற்கு தற்காலிகமாக ‘சூர்யா42’ என தலைப்பிடப்பட்டு தற்போது படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இதையொட்டி இப்படத்தின் மோஷன் போஸ்டரை தயாரிப்பாளர்கள் தற்போது வெளியிட்டுள்ளனர்.
இது ரசிகர்களிடம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. போஸ்டரில் சூர்யா கூர்மை மிகு போர் வீரனாக, மிடுக்கான தோற்றத்தில் அசத்தலாக இருக்கிறார். ‘வலிமை மிகு வீரம்’ எனும் அடைமொழியுடன் வரும் டைட்டில், கதையின் தன்மையை சொல்வதாக அமைந்துள்ளது. DSPயின் பின்னணி இசையும் விஷுவலும் ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை அளிப்பதாக அமைந்துள்ளது.
இப்படம் 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பும், மற்ற விவரங்களும் விரைவில் ஒவ்வொன்றாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
The post ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படம் appeared first on Touring Talkies.
]]>The post “சினிமாக்களில் யாரையும் தாழ்த்தி பேச வேண்டாம்” – சந்தானத்தின் கோரிக்கை appeared first on Touring Talkies.
]]>நடிகர் சந்தானம் ஹீரோவாக நடித்த ‘சபாபதி’ படம் வரும் வெள்ளிக்கிழமையன்று தியேட்டர்களில் வெளியாகவுள்ளது.
இதையொட்டி இன்று பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் “ஜெய் பீம் பட விவகாரம் பற்றி உங்களது கருத்து என்ன..?” என்று கேள்வி சந்தானத்திடம் கேட்கப்பட்டது.
அதற்கு சந்தானம் பதிலளித்தபோது, “ஜெய் பீம்’ படமென்று இல்லை, எந்தப் படமாக இருந்தாலும், நாம் ஏதோ ஒரு கருத்தை பேசுகிறோம் என்றால், உதாரணமாக நாம் இந்துக்களை பற்றி பேசுகிறோம் என்றால், எவ்வளவு உயர்த்தியும் பேசலாம்.. அதில் தப்பில்லை. ஆனால், கிறிஸ்துவர்கள் தவறானவர்கள்.. அவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்றெல்லாம் பேசக் கூடாது.
யாரையும் உயர்த்தி பேசலாம். ஆனால் அடுத்தவர்களை தாழ்த்தி பேசக் கூடாது. அது தேவையில்லாத விஷயம். அடுத்தவங்களை புண்படுத்துற மாதிரி பேச கூடாது. இதுதான் என் கருத்து.
ஏனென்றால், சினிமா என்பது 2 மணி நேரம் எல்லா மதத்தினரும், ஜாதியினரும் ஒன்றாக அமர்ந்து பார்ப்பது. உங்கள் படத்தில் நீங்கள் யாரையும் உயர்த்தி பேசிக்கொள்ளுங்கள், ஆனால் அடுத்தவர்களை தாழ்த்தி பேசாதீர்கள். அது தேவையில்லாத விஷயம்.
இனி வரும் இளைஞர்கள் சமூதாயத்திற்கு நாம் நல்ல சினிமாவை தர வேண்டும். 2 மணிநேரம் செலவழித்து கவலைகளை மறந்து ஜாதி, மதம் கடந்து திரையரங்கு வருபவர்களுக்கு, அதற்கான விருந்தாகத்தான் திரைப்படம் இருக்க வேண்டும். நான் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன். என் பக்கம் எதுவும் தவறு இருந்தால் சொல்லுங்கள்.. திருத்திக் கொள்ள வேண்டியதை திருத்திக் கொள்கிறேன்…” என்றார்.
The post “சினிமாக்களில் யாரையும் தாழ்த்தி பேச வேண்டாம்” – சந்தானத்தின் கோரிக்கை appeared first on Touring Talkies.
]]>The post ‘ஜெய் பீம்’ பட உண்மை நாயகியான பார்வதிக்கு 15 லட்சம் நிதியுதவியை வழங்கினார் சூர்யா appeared first on Touring Talkies.
]]>சமீபத்தில் அமேஸான் ஓடிடி தளத்தில் நடிகர் சூர்யாவின் தயாரிப்பு மற்றும் நடிப்பில் இயக்குநர் த.செ.ஞானவேலின் இயக்கத்தில் வெளியான படம் ‘ஜெய் பீம்.’ படம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
1994-ம் ஆண்டில் கடலூரில் நடைபெற்ற ஓர் உண்மைச் சம்பவத்தை மையாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது. படம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்ற போதிலும், உண்மை நிகழ்வில் ராஜ்கண்ணுவை கொடூரமாக சித்ரவதை செய்து, கொலை செய்த அந்தோணிசாமி என்ற சப் இன்ஸ்பெக்டர் பாத்திரத்தின் பெயரை குரு மூர்த்தி என்று மாற்றியதும், வன்னியர்களின் பண்பாட்டுச் சின்னமான அக்னி கலச காலண்டர் படத்தில் இடம் பெற்றதும் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
இதையடுத்து பாட்டாளி மக்கள் கட்சியினர் சூர்யாவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அந்த காலண்டர் காட்சி படத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டது.
இதற்கிடையே நடிகர் சூர்யாவுக்கு 9 கேள்விகளை எழுப்பி பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி கடிதம் எழுதியிருந்தார். இந்தக் கடிதத்துக்கு நடிகர் சூர்யாவும் பதில் கடிதம் எழுதியிருந்தார்.
இதற்கிடையே நடிகர் சூர்யாவை முதலில் எட்டி உதைப்பவருக்கு ரூ. 1 லட்சம் வழங்கப்படும் என்று மயிலாடுதுறை பாமக சர்ச்சையான அறிவிப்பை வெளியிட்டது.
இந்நிலையில் சூர்யா, ஜோதிகா ஆகியோர் 24 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் 5 கோடி ரூபாய் நஷ்டஈடு தர வேண்டும் என்றும் வன்னியர் சங்கம் சார்பில் சூர்யாவுக்கு வக்கீல் நோட்டீஸூம் அனுப்பட்டுள்ளது. சூர்யாவுக்கு எதிராக சமூக ஊடங்களில் பா.ம.க. தொண்டர்கள் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் அக்னி கலச காலாண்டருக்குப் பதில் மகாலட்சுமி காலாண்டர் மாற்றப்பட்டதற்கு பா.ஜ.க. எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஏசுநாதர் காலாண்டரை மாட்டாமல், மகாலட்சுமி காலாண்டரை மாற்றியது பற்றி தமிழக பா.ஜ.க. மூத்த தலைவர் ஹெச்.ராஜா கண்டித்திருந்தார்.
இதற்கிடையே ‘ஜெய் பீம்’ படத்தில் செங்கேணி கதாபாத்திரத்தின் உண்மையான ராஜ்கண்ணுவின் மனைவியான பார்வதி, “என் வாழ்க்கை கதையை வைத்து கோடி கோடியா சம்பாதிக்கிறார்கள். எனக்கு சூர்யா ஒரு உதவியும் செய்யவில்லை” என்று பேசிய காணொலி சமூக ஊடங்களில் வைரலானது.
இதற்குப் பிறகு சிபிஎம் தமிழ் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனின் வேண்டுகோள்படி பார்வதிக்கு 10 லட்சம் ரூபாயை வங்கியில் டெபாசிட் செய்வதாக சூர்யா ஏற்கெனவே அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் ராஜ்கண்ணுவின் மனைவியான பார்வதி – நடிகர் சூர்யா சந்திப்பு இன்று மாலை சென்னையில் உள்ள சிபிஎம் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பின்போது தமிழ் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோரும் உடன் இருந்தனர்.
இச்சந்திப்பின்போது நடிகர் சூர்யாவின் சார்பில் 15 லட்சம் ரூபாய்க்கான வங்கி காசோலை ராஜாகண்ணுவின் மனைவி பார்வதியிடம் கே.பாலகிருஷ்ணன் வழங்கினார். ரூ.10 லட்சம் டெபாசிட் செய்வதாக சூர்யா அறிவிந்திருந்ததற்கு மாறாக, கூடுதலாக 5 லட்சம் ரூபாயை தற்போது சூர்யா வழங்கியிருக்கிறார்.
The post ‘ஜெய் பீம்’ பட உண்மை நாயகியான பார்வதிக்கு 15 லட்சம் நிதியுதவியை வழங்கினார் சூர்யா appeared first on Touring Talkies.
]]>The post ஜெய் பீம் படத்தின் டிரெயிலர் appeared first on Touring Talkies.
]]>The post ஜெய் பீம் படத்தின் டிரெயிலர் appeared first on Touring Talkies.
]]>The post உடன்பிறப்பே – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.
]]>தொடர்ந்து பல்வேறு வகையான படங்களாகத் தயாரித்து வந்த 2D நிறுவனம் அண்ணன், தங்கை பாசத்தை அடிப்படையாக கொண்டு இந்த ‘உடன்பிறப்பே’ படத்தைத் தயாரித்திருக்கிறது.
தஞ்சை மாவட்டத்தில் கணவன், மகள் என வாழ்ந்து வரும் ஜோதிகாவிற்கு தன் அண்ணன் சசிகுமார் என்றால் உயிர். ஆனால், அவர் சசிகுமாருடன் பேசாமல் இருக்கிறார். காரணம், தன் கணவர் சமுத்திரக்கனி சசிகுமாரிடம் பேசாமல் இருப்பதுதான்.
சசிகுமாரிடம், சமுத்திரக்கனி பேசாமல் இருப்பதற்கான காரணம் என்ன..? பிரிந்து நிற்கும் அண்ணன் தங்கை முடிவில் எப்படி இணைந்தார்கள்..? இதற்கிடையே ஊரில் தவறான சில விசயங்களைச் செய்து வரும் கலையரசனை சசிகுமார் எப்படி துவம்சம் செய்கிறார்…? இவைகளுக்கான பதில்தான் இந்த ‘உடன்பிறப்பே’ திரைப்படம்.
பத்திரிகை துறையில் பணியாற்றி இயக்குநர் ஆனவர் இரா.சரவணன். அதனால் அவருடைய படம் என்றால் சமூக அக்கறை நிறையவே இருக்கும். அவரது முதல் படமான ‘கத்துக்குட்டி’யில் அது மிகச் சிறப்பாகவே வொர்க்கவுட் ஆகியிருந்தது. இரண்டாவது படமான இந்த ‘உடன்பிறப்பே’விலும் அது ஓரளவு எடுபட்டிருக்கிறது.
படத்தில் இரா.சரவணன் எழுதியுள்ள வசனங்கள் பல இடங்களில் கை தட்ட வைக்கின்றன.
படத்தின் முதன்மைக் கதாப்பாத்திரம் ஜோதிகாவிற்கு. கண்களாலே சோக மொழிகளை கடத்தும் காட்சிகளில் மிரட்டி இருக்கிறார். செண்டிமெண்ட் காட்சிகளில் அவரது நடிப்பு தனித்துத் தெரிகிறது. அவரது அண்ணனாக வரும் சசிகுமார் தன் அளவு உணர்ந்து நடித்து ஸ்கோர் செய்கிறார். சமுத்திரக்கனியின் கதாப்பாத்திரம் நேர்மையின் அடையாளமாக உருவாக்கப்பட்டுள்ளது. அந்தக் கேரக்டருக்கு அவரும் நியாயம் செய்துள்ளார்.
‘ஆடுகளம்’ நரேன், கலையரசன் இவர்கள் இருவரும் படத்தின் வீணடிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான போர்ஷனில்தான் திரைக்கதை சற்று தொய்வாக இருக்கிறது. சூரியின் காமெடி போகிற போக்கில் சிரிக்க வைக்கிறது..
டி.இமானின் இசையில் பாடல்கள் ஒவ்வொன்றும் நச் ரகம். பின்னணி இசையிலும் காட்சிகளோடு நம்மை ஒன்ற வைக்கிறார்.. படத்தின் ஒளிப்பதிவு நேர்மறை வெளிச்சம். மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது. யுகபாரதி, சினேகனின் பாடல் வரிகளை ரசிக்க முடிகிறது. படத்தின் லொக்கேசன்களை தேர்ந்தெடுத்திருக்கும்விதம் சிறப்பு. நல்ல ரசனை. சூரக்கோட்டையில் உள்ள ‘நடிகர் திலகம்’ சிவாஜி வீட்டில் சில காட்சிகளை எடுத்துள்ளார்கள்.
அண்ணன், தங்கை பேசாமல் இருப்பதற்கான காரணம் என்ன..? என்ற ஒரு இழையை வைத்து மட்டுமே இப்படத்தை ஒரு பாசப் போராட்டமாக கொண்டு சென்றிருக்க முடியும். அதை விட்டுவிட்டு ஏனோ இயக்குநர் இரண்டாம் பாதியில் அநியாயத்திற்கு சறுக்கியிருக்கிறார்.
அண்ணன் தங்கை அன்பின் வெளிப்பாடுகளை இன்னும் கூர்மையாக காட்சிப்படுத்தியிருக்கலாம். படம் எதை நோக்கிப் போகிறது என்ற குழப்பம் சற்று மிகையாகிவிட்டது இரண்டாம் பாதியில்.
ஆயினும், அன்பை உறவைப் போற்றும் படங்களை நாம் கொண்டாட வேண்டும். அதனால் சிறு, சிறு குறைகள் இருந்தாலும் எக்காலத்திலும் பார்க்கத் தகுதியான படம் இது.
The post உடன்பிறப்பே – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.
]]>The post “சிறுத்தை’-‘சிங்கம்’ படங்கள்தான் எனக்கு லாபத்தைக் கொடுத்தன” – தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேச்சு appeared first on Touring Talkies.
]]>தயாரிப்பாளரும், இயக்குநருமான சி.வி.குமார் தயாரித்திருக்கும் பன்றிக்கு நன்றி சொல்லி படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. இந்த விழாவில் பேசும்போது ஞானவேல்ராஜா இதைக் கூறினார்.
அந்த விழாவில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசும்போது, “இந்த விழா ‘அட்டக்கத்தி’ படத்திற்காக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பு போல் இருக்கிறது. இந்தப் படக் குழுவினரிடம் பழகும் போது கல்லூரி மாணவர்களிடம் பேசியது போன்று இருந்தது. குறைந்த பட்ஜெட்டில் சிறப்பான படத்தை இயக்கி இருக்கிறார்கள்.
‘அட்டக்கத்தி’ படத்தில் பணியாற்றிய பா.ரஞ்சித், தினேஷ் ஆகியோருக்கு எப்படி பெரிய படங்கள் வாய்ப்பு கிடைத்ததோ, அதுபோல் இந்த ‘பன்றிக்கு நன்றி சொல்லி’ படக் குழுவினருக்கும் எதிர்காலத்தில் பெரிய படங்களில் பணியாற்றும் வாய்ப்பு அமையும்.
எனக்கு சினிமா வாழ்க்கையில் லைப் கொடுத்தது சிங்கமும் சிறுத்தையும்தான். அதாவது சூர்யா நடித்த ‘சிங்கம்’ படமும், கார்த்தி நடித்த ‘சிறுத்தை’ படமும்தான் எனக்கு நல்ல லாபத்தையும், பெயரையும் பெற்று தந்தது.
அதுபோல் இப்போது ‘பன்றிக்கு நன்றி சொல்லி’ படம் எனக்கும் படக் குழுவினருக்கும் நல்ல பெயரை பெற்று தரும் என்று நம்புகிறேன்…” என்றார்.
The post “சிறுத்தை’-‘சிங்கம்’ படங்கள்தான் எனக்கு லாபத்தைக் கொடுத்தன” – தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேச்சு appeared first on Touring Talkies.
]]>The post ஜோதிகாவின் 50-வது படமாக உருவாகிறது ‘உடன்பிறப்பே’ திரைப்படம் appeared first on Touring Talkies.
]]>நடிகை ஜோதிகா 1998-ம் ஆண்டு Doli Saja Ke Rakhna என்ற இந்திப் படத்தின் மூலமாகத் திரையுலகத்திற்குள் நுழைந்தார்.
இதற்கடுத்த ஆண்டே 1999-ம் ஆண்டு ‘பூவெல்லாம் கேட்டுப் பார்’ படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து தமிழ்த் திரையுலகத்திற்குள் பிரவேசித்தார்.
அன்று துவங்கிய அவரது நடிப்பு கேரியர் இன்றுவரையிலும் 22 வருடங்களாக நீடித்து வருகிறது.
திருமணத்திற்குப் பின்பும் நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வரும் ஜோதிகா தற்போது தனது 50-வது படத்தைத் தொட்டுவிட்டார்.
அவருடைய 50-வது திரைப்படம் அவரும், அவரது கணவரான சூர்யாவும் இணைந்து தயாரித்து வரும் ‘உடன்பிறப்பே’ என்ற திரைப்படம்தான்.
இந்தப் படத்தில் ஜோதிகாவுடன் சசிகுமார், சமுத்திரக்கனி, கலையரசன் ஜா ரோஸ், சூரி, ‘ஆடுகளம்’ நரேன், வேல ராமமூர்த்தி என்று மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறது.
இசை – இமான், ஒளிப்பதிவு – வேல்ராஜ், படத் தொகுப்பு – ரூபன், கலை இயக்கம் – முஜிபூர், உடைகள் வடிவமைப்பு – பூர்ணிமா ராமசாமி என்று வலிமை வாய்ந்த தொழில் நுட்பக் கலைஞர்கள் இந்தப் பட.த்தில் பணியாற்றுகிறார்கள்.
கத்துக்குட்டி படத்தை இயக்குநரான இரா.சரவணன் இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.
அண்ணன்-தங்கை பாசத்தை மையக் கருவாகக் கொண்ட படம் என்பதால்தான் இந்தப் படத்திற்கு ‘உடன்பிறப்பே’ என்று பெயர் வைத்திருக்கிறார்களாம்.
கணவரான சமுத்திரக்கனிக்கும், அண்ணனான சசிக்குமாருக்கும் இடையில் மாட்டிக் கொண்டு முழிக்கும் தங்கை ‘மாதங்கி’யாக ஜோதிகா நடிக்கிறார்.
இதில் ஜோதிகாவின் கெட்டப் புதிய தோற்றத்தில் பார்ப்பதற்கே கிராமத்துப் பெண் போலவே தோன்றுகிறார். இரட்டை மூக்குத்தி, திருமண் பூசிய நிலையில் அவரது புகைப்படங்கள் படத்தின் நேட்டிவிட்டியை அடையாளம் காட்டுகிறது.
வெறுமனே குடும்பம், அண்ணன், தங்கை பாசம், மோதல் என்றில்லாமல் இன்றைய டிரெண்ட்டுக்கேற்ப கிராமப் பகுதிகளில் நிலத்தடி நீர் சுரண்டப்படும் கொடுமையையும் படம் பேசுகிறதாம்.
21 வருடங்களில் 50 படங்களைத் தொட்டிருக்கும் ஜோதிகாவுக்கு நமது வாழ்த்துகள்..!
The post ஜோதிகாவின் 50-வது படமாக உருவாகிறது ‘உடன்பிறப்பே’ திரைப்படம் appeared first on Touring Talkies.
]]>