The post மொக்கை வசனத்தை மாஸாக மாற்றிய சூப்பர் ஸ்டார்! appeared first on Touring Talkies.
]]>இப்படத்தில் ரஜினி பேசும், “நான் ஒரு தடவ சொன்னா, நூறு தடவ சொன்ன மாதிரி” என்ற பஞ்ச் டயலாக் இன்றும் பிரபலம். இந்த வசனத்தை மீம்ஸ் கிரியேட்டர்கள் பலரும் இப்போதுவரையிலும் சமூக வலைத்தளங்களில் பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் அரசியல் மேடைகளிலும் பல கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும், தொண்டர்களும் ஒரு சேர இந்த டயலாக்கைச் சொல்லி வருகிறார்கள்.
ஆனால், இந்த வசனம் முதலில் ஷூட்டிங்கிற்குத் தயாராகியிருந்தபோது இப்படியில்லை. படப்பிடிப்பின்போது இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா சொன்னதே வேறு. “நான் ஒரு வாட்டி சொன்னா நூறு வாட்டி சொன்ன மாதிரி” என்றுதான் அவர் எழுதியிருந்தார். இந்த டயலாக்கை பலமுறை தனக்குள் பேசிப் பார்த்த ரஜினிக்கு இதில் ஏதோ ரிதம் குறைவதாகப் பட்டது. யோசித்த அவர், அதிலிருந்த ‘வாட்டி’ என்பதை ‘தடவை’ என மாற்றினார். பிறகுதான், “நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி” என்ற வசனம் பிறந்தது.
The post மொக்கை வசனத்தை மாஸாக மாற்றிய சூப்பர் ஸ்டார்! appeared first on Touring Talkies.
]]>The post ஒய்.ஜி.மகேந்திராவின் ‘சாருகேசி’ நாடகக் குழுவினரை வீட்டிற்கு அழைத்துப் பாராட்டிய ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி appeared first on Touring Talkies.
]]>இது தொடர்பாக நடிகர் ஒய்.ஜி.மகேந்திரா பேசும்போது, “எனது உறவினர் என்பதைவிட எனக்கு ஒரு நல்ல நண்பராகத்தான் ரஜினிகாந்த் இத்தனையாண்டுகளாக என்னோடு பழகி கொண்டிருக்கிறார்.
குறிப்பாக எனது நாடகங்களுக்கு அவர் மிகப் பெரிய ரசிகர். நான் தற்போது நடத்தி வரும் ‘சாருகேசி’ நாடகம் பற்றி நான் ஏற்கனவே அவரிடம் கூறியிருந்தேன். அதை தொடர்ந்து திடீர் என்று ஒரு நாள் எனக்கு அவரிடமிருந்து அழைப்பு வந்தது. “நாரத கான சபாவில் நடைபெறும் ‘சாருகேசி’ நாடகத்தைப் பார்க்க நான் வருகிறேன்…” என்றார் ரஜினி.
சொன்னதைப் போலவே மனைவி மற்றும் மகளுடன் வந்த ரஜினி, நாடகத்தை முழுமையாக பார்த்து நாடகம் முடிந்தவுடன் மேடைக்கு வந்து நாடகக் குழுவினர் அனைவரையும் வெகுவாகப் பாராட்டினார்.
அப்போது என்னை கட்டிப் பிடித்துப் பாராட்டிய ரஜினி, “இந்த நாடகத்தில் நான் மகேந்திரனை பார்க்கவில்லை, ‘நடிகர் திலகம்’ சிவாஜி அவர்களைத்தான் பார்த்தேன்…” என்று கூறியதைவிட பெரிய பாராட்டு எனக்கு வேறு எதுவும் இல்லை.
மேலும் அன்று கூட்டம் அதிகமாக இருந்ததால் ரஜினியால் எனது நாடகக் குழுவினருடன் அதிக நேரம் செலவிட முடியவில்லை. வீட்டுக்கு ஒரு நாள் அனைவரையும் அழைப்பதாக சொல்லிவிட்டு சென்றார்.
அன்று இரவு ‘சாருகேசி’ நாடகத்தின் கதாசிரியரான வெங்கட் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வெகு நேரம் பேசியுள்ளார். அந்த நாடகம் அவரிடம் அப்படி ஒரு தாக்கத்தை அவருக்குள் ஏற்படுத்தும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
கடந்த சனிக்கிழமை ஜூன் 25-ம் தேதி திடீரென்று ரஜினி வீட்டில் இருந்து எனக்கு ஒரு போன் அழைப்பு வந்தது. “நாளைய தினம் ‘சாருகேசி’ நாடகக் குழுவினரை அழைத்து கொண்டு வீட்டிற்கு வருமாறு” கூறினார்கள்.
அந்த அழைப்புக்கிணங்க நேற்று ஜூன் 26, ஞாயிற்றுக்கிழமையன்று எங்களது ஒட்டு மொத்தக் குழுவும் ரஜினிகாந்த் அவர்களின் இல்லத்திற்கு சென்றோம். அப்பொழுது எங்களது நாடகக் குழுவில் இருந்த அனைவரையும் தனித்தனியாக ரஜினிகாந்த் பாராட்டினார்.
மேலும் அப்போது அவரது நாடக அனுபவங்களையும் எங்களிடம் கூறினார். “ஒரு நாடக ஒத்திகைக்கு எனது நண்பர் ராஜ்பகதூர் என்னையும் அழைத்து சென்றிருந்தார். அன்று அந்த நாடகத்தில் துரியோதனனாக நடிக்க வேண்டியவர் வராததால் அவருக்கு பதிலாக என்னை நடிக்கும்படி அந்த குழுவினர் கேட்டுக் கொண்டனர்.
ஒத்திகையில் எனது நடிப்பைக் கண்டு வியந்த குழுவினர் என்னையே அந்த நாடகத்தில் துரியோதனன் வேடத்தில் நடிக்க வைத்தனர். எனது நடிப்பிற்கு ரசிகர்களின் பாராட்டுகளும் கிடைத்தது.
அந்தப் பாராட்டுக்களைப் பெற்ற அந்த தருணம்தான் எனது வாழக்கையே திசை திரும்பியது. அதுதான் தனது நடிப்புலக வாழ்க்கைக்கு ஆரம்பமாகவும் இருந்தது..” என்று ரஜினி பெருமையுடன் எங்களிடம் சொன்னார்.
‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி அவர்கள் ஒரு ரசிகராக, எங்களது நாடக் குழுவினரிடம் அன்றைய தினம் பழகியது எங்களது வாழ்வின் மிகவும் சிறப்பான ஒரு தருணம்.” என்று சொல்லி முடித்தார் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரா.
The post ஒய்.ஜி.மகேந்திராவின் ‘சாருகேசி’ நாடகக் குழுவினரை வீட்டிற்கு அழைத்துப் பாராட்டிய ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி appeared first on Touring Talkies.
]]>The post ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியின் படங்களை விமர்சித்தாரா ஆர்.ஜே.பாலாஜி..? appeared first on Touring Talkies.
]]>நடிகர் ஆர்.ஜே.பாலாஜி தற்போது ‘பதாய் கோ’ என்ற ஹிந்தி படத்தின் தமிழ் ரீமேக்கான ‘வீட்ல விசேஷம்’ என்ற படத்தில் நடித்து, இயக்கியிருக்கிறார்.
இப்படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி தனியார் கல்லூரியொன்றில் சமீபத்தில் நடந்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆர்.ஜே. பாலாஜி, நடிகர் ரஜினிகாந்த் நடித்த படங்களில் பெண்களை தவறாக சித்தரித்துள்ளனர் என்று குற்றஞ்சாட்டிப் பேசியுள்ளார்.
ஆணும் பெண்ணும் சமம் என்கிற கருத்தையும் பள்ளி, கல்லூரிகளில் ஆணும் பெண்ணும் பேசிக் கொள்ளக் கூடாது என்று பிரித்து வைப்பது தவறு என்கிற கருத்தையும் முன் வைத்து பேசும்போது, ‘படையப்பா’ மற்றும் ‘மன்னன்’ போன்ற படங்களை உதாரணமாகக் கொண்டு ஆர்.ஜே.பாலாஜி பேசியிருக்கிறார்.
இந்த விழாவில் ஆர்.ஜே.பாலாஜி பேசும்போது, “நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘மன்னன்’ மற்றும் ‘படையப்பா’ உள்ளிட்ட படங்களில் பெண்களை ரொம்பவும் தவறாகக் காட்டியதுதான் இன்றைய தலைமுறையில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையே மிகப் பெரிய வேற்றுமை உருவாகக் காரணமாக அமைந்துள்ளது.
‘படையப்பா’ படத்தில் “வீட்ல வேலை செய்ற பொண்ணு நல்லவ.. வெளிநாட்டில் படிச்சிட்டு வரும் பொண்ணு கெட்டவ” என்று சொல்லியிருப்பாங்க.
‘மன்னன்’ படத்தில் நல்லா படிச்சுட்டு கம்பெனி நடத்துற விஜயசாந்தியை கெட்டவங்க. வீட்ல காபி போட்டு கொடுக்கிற குஷ்புவை நல்லவங்களா காட்டியிருப்பாங்க…” என்று சொல்லியிருக்கிறார் ஆர்.ஜே.பாலாஜி.
இந்தப் பேச்சு ஆர்.ஜே.பாலாஜி மீது ரஜினி ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆர்.ஜே.பாலாஜியை வறுத்து எடுத்து வருகிறார்கள் ரஜினி ரசிகர்கள்.
The post ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியின் படங்களை விமர்சித்தாரா ஆர்.ஜே.பாலாஜி..? appeared first on Touring Talkies.
]]>The post “ரஜினிக்குப் பிறகு விஜய்தான் எல்லாருக்கும் ரோல் மாடல் ஹீரோ” – பாராட்டுகிறார் இயக்குநர் சித்திக்..! appeared first on Touring Talkies.
]]>இந்த நேரத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘பிரெண்ட்ஸ்’, ‘காவலன்’ ஆகிய படங்களின் இயக்குநரான சித்திக் விஜய்யின் பிறந்த நாளையொட்டி அவருடன் பணி புரிந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
அவர் இது குறித்துப் பேசும்போது, “நான் பாஸில் சாரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிக் கொண்டிருந்தபோது ‘ஹரிகிருஷ்ணன்’ படத்தின் ஷூட்டிங் சென்னையில் குஷால்தாஸ் கார்டனில் நடந்து கொண்டிருந்தது.
அந்தச் சமயத்தில் அதே பில்டிங்கில் விஜய் நடித்த வேறொரு படத்தின் படப்பிடிப்பும் நடந்து கொண்டிருந்தது. அப்போது கேமிராமேன் அனந்தக்குட்டன் விஜய்யை எங்களிடத்தில் அழைத்து வந்து என்னிடம், லால் மற்றும் பாசில் சாரிடம் அறிமுகம் செய்து வைத்தார்.
சில ஆண்டுகள் கழித்து நான் ‘பிரெண்ட்ஸ்’ படத்தை தமிழில் ரீமேக் செய்ய நினைத்தபோது விஜய்தான் முதலில் என் கவனத்திற்கு வந்தார். அவருக்குப் படத்தைப் போட்டுக் காட்டினோம். அவருக்குப் பிடித்திருந்தது. உடனேயே நடிக்க ஒத்துக் கொண்டார். அது எந்த அளவுக்கு ஹிட்டானது என்பது அனைவருக்கும் தெரியும்.
அதேபோல் ‘காவலன்’ படத்தின் கதையையும் நான் முன்பேயே விஜய்யிடம் கூறியிருந்தேன். அவருக்கு ஓகேதான் என்றாலும் தயாரிப்பாளருக்கு திருப்தியில்லை. அடிதடி, ஆக்சன் படமாக அதை விரும்பினார் தயாரிப்பாளர். ஆனால் மலையாளத்தில் அந்தப் படம் ஹிட்டானவுடன் விஜய் அதே பாணியில் அந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்.
விஜய் ஒரு முறை கதையையும், கதாபாத்திரத்தையும் கேட்டு திருப்திபட்டுவிட்டால் அதன் பின்பு யார் இடையில் புகுந்து என்ன சொன்னாலும் கேட்க மாட்டார். “எதுவாக இருந்தாலும் இயக்குநரிடம் கேளுங்கள்” என்பார்.
அதே நேரம் விஜய் போன்று நேரத்தைப் பின்பற்றும் நடிகரை நான் பார்த்ததில்லை. காலையில் 8.50 மணிக்கு மேக்கப்போடு செட்டுக்கு வந்துவிடுவார். அதற்குப் பிறகு 9 மணி நேரமானாலும் களைப்பில்லாமல் நடித்துக் கொடுப்பார்.
“ஷாட் ரெடி” என்ற தகவல் சொன்னவுடன் கேரவனில் எவ்வளவு முக்கியமான விஷயம் பேசிக் கொண்டிருந்தாலும் அப்படியே போட்டுவிட்டு கீழே இறங்கி வந்துவிடுவார். ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்குப் பிறகு விஜய் மட்டுமே மற்றவர்களுக்கு ரோல் மாடலாக இருக்கக் கூடியவர்..” என்று பாராட்டித் தள்ளியிருக்கிறார் இயக்குநர் சித்திக்.
The post “ரஜினிக்குப் பிறகு விஜய்தான் எல்லாருக்கும் ரோல் மாடல் ஹீரோ” – பாராட்டுகிறார் இயக்குநர் சித்திக்..! appeared first on Touring Talkies.
]]>The post உருவாகுமா ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியின் வாழ்க்கைப் படம்..? appeared first on Touring Talkies.
]]>பூலான் தேவியில் துவங்கி டோனி, ‘நடிகையர் திலகம்’ சாவித்திரி, மில்கா சிங், தங்கல், குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம், நீரஜா, பான் சிங் தோமர், நேதாஜி, சரப்ஜித், சர்தார் வல்லபபாய் பட்டேல், கமலா சுரைய்யா என்று பல்வேறு முக்கியப் பிரமுகர்களின் வாழ்க்கைக் கதைகளும் படமாக்கப்பட்டுவிட்டன.
இந்த வரிசையில் படமாக்கப்பட வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்களில் ஒருவர் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த். அவருடைய வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் ஆசை யாருக்குமே வரவில்லையா..?
வந்ததாம் இ்ந்தியாவின் மிகப் பெரிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு. அந்த நிறுவனத்தின் சார்பில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியை தொடர்பு கொண்டு இது குறித்துப் பேசியிருக்கிறார்கள்.
அப்போது ரஜினி அவர்களிடத்தில் சொன்னது, “நான் ரெடிதான். ஆனால், அந்தப் படத்தின் இயக்குநர் குறைந்தபட்சம் 6 மாதங்களாவது என்னுடனேயே இருக்க வேண்டும். எனக்கு நினைவு வரும்போதெல்லாம் என் வாழ்க்கையில் நடந்ததை ரீவைண்ட் செய்து நான் சொல்லும்போதெல்லாம் அவர் எழுத வேண்டும்.
மகாத்மா காந்தியாரின் ‘சத்திய சோதனை’ புத்தகத்தைப் படித்தபோது இப்படியெல்லாம் ஒரு மனிதன் வெளிப்படையாக எழுத முடியுமா..? வாழ்ந்திருக்க முடியுமா என்கிற எண்ணம் எனக்குள் வந்தது. அதேபோல் என் வாழ்க்கையில் நடந்த அனைத்து நல்லது, கெட்டதுகளையும் ஒளிவுமறைவில்லாமல் நான் வெளிப்படுத்துவேன். அவற்றையும் அப்படியே பதிவு செய்ய வேண்டும்..” என்று கேட்டுக் கொண்டாராம் ரஜினி.
கடைசியாக அவர் கேட்டது இந்தப் படத்திற்கான சம்பளமாக இதுவரையிலும் தான் வாங்காத மிகப் பெரிய சம்பளத்தைத்தான்..! “இது முழுக்க, முழுக்க என்னுடைய படம். படத்தின் துவக்கத்தில் இருந்து கடைசிவரையிலும் இருக்கப் போவது நான்தான். அதனால் இந்தச் சம்பளம் எனக்கு நியாயமானதுதான்..” என்று சொன்னாராம் ரஜினி.
இந்தப் பண விவகாரம்தான் அந்தப் பட நிறுவனத்தை சற்று யோசிக்க வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
தற்போது கூட்டல், கழித்தல், வகுத்தெல்லாம் போட்டுக் கொண்டிருக்கிறார்களாம். பேலன்ஸ் ஷீட் இரு தரப்பினருக்குமே திருப்தியளித்தால் மிக விரைவில் அறிவிப்பு வரவும் வாய்ப்புண்டு..!
The post உருவாகுமா ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியின் வாழ்க்கைப் படம்..? appeared first on Touring Talkies.
]]>The post ‘இசை ஞானி’ இளையராஜாவின் ஸ்டூடியோவை பார்த்து ரசித்த ரஜினி..! appeared first on Touring Talkies.
]]>இந்நிலையில் நேற்று காலை இளையராஜாவின் தி.நகர் வீட்டுக்கு வந்த நடிகர் ரஜினிகாந்த், அவருடன் பல விஷயங்கள் பேசியிருக்கிறார். பின்னர் இளையராஜா சொந்த ஸ்டூடியோ கட்டியிருப்பதை கேள்விப்பட்டு அந்த ஸ்டூடியோவுக்கு இளையராஜாவுடன் சென்றிருக்கிறார் ரஜினிகாந்த்.
ஸ்டூடியோவை சுற்றி பார்த்து, வியந்து, “கோவிலுக்குள் வந்தது போன்ற உணர்வு எனக்குள் ஏற்பட்டது” என பாராட்டி இருக்கிறார். பின்னர் இசை ஞானியுடன் நீண்ட நேரம் பல விஷயங்கள் பேசியிருக்கிறார்.
இந்நிலையில் இன்றும் 2-வது முறையாக இளையராஜா ஸ்டூடியோவுக்கு மீண்டும் வந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார் ரஜினிகாந்த்.
இன்று இளையராஜா ஒரு பாடலுக்கு இசையமைத்தவிதத்தையும் பொறுமையாக அமர்ந்திருந்து பார்த்து ரசித்துவிட்டுப் போயிருக்கிறார் ரஜினிகாந்த்.
The post ‘இசை ஞானி’ இளையராஜாவின் ஸ்டூடியோவை பார்த்து ரசித்த ரஜினி..! appeared first on Touring Talkies.
]]>The post ரஜினியின் ‘அண்ணாத்த’ 2021-ம் ஆண்டின் தீபாவளியன்று வெளியாகிறது..! appeared first on Touring Talkies.
]]>இந்த படம் வரும் இந்த வருடத் தீபாவளின்று அதாவது நவம்பர் 4-ம் தேதி வியாழக்கிழமையன்று வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தப் படத்தில் ரஜினியுடன், குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்திருக்கிறார்.
இந்த ’அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்தபோது படக் குழுவினர் ஒரு சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியதை அடுத்து படப்பிடிப்பு அதிரடியாக நிறுத்தப்பட்டது.
இதனை அடுத்து ரஜினிகாந்துக்கு ரத்த அழுத்தப் பிரச்சனை ஏற்பட்டது என்பதும் அதனால் அவர் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் ’அண்ணாத்த’ படத்தின் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு ஒரு சில மாதங்களுக்குப் பின்னர்தான் துவங்கும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனத்தினர் அறிவித்திருந்த நிலையில் தற்போது ’அண்ணாத்த’ திரைப்படம் வரும் நவம்பர் 4-ம் தேதி தீபாவளி அன்று வெளியாகும் என்று இப்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்த வருட தீபாவளியை ’தலைவர் தீபாவளி’ என ரஜினியின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
The post ரஜினியின் ‘அண்ணாத்த’ 2021-ம் ஆண்டின் தீபாவளியன்று வெளியாகிறது..! appeared first on Touring Talkies.
]]>The post “நீங்க கம்யூனிஸ்ட்டா..?” – இயக்குநர் திருச்செல்வத்திடம் கேள்வி கேட்ட ரஜினி..! appeared first on Touring Talkies.
]]>“கோலங்கள்’ சீரியல் முடிந்த பிறகு ரஜினி ஸாரை சந்திப்பதற்காக ராகவேந்திரா மண்டபத்திற்கு ஒரு நாள் சென்றிருந்தேன். நட்ராஜ் ஸார்தான் இந்தச் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தார்.
நான் அங்கே காத்திருந்த நேரத்தில் அவருடைய மனைவி லதா இஸபெல் மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் சேர்க்கப்பட்டிருந்தார். “ரஜினி ஸார், இஸபெல் மருத்துவமனைக்குச் சென்றுவிட்டு இங்கே வருவதால் அவர் வருவதற்கு 15 நிமிடங்கள் தாமதமாகும்…” என்று என்னிடம் வந்து சொன்னார்கள். இதுவே, எனக்கு ஒரு மிகப் பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது.
15 நிமிடத்தில் ரஜினி மண்டபத்திற்கு வந்தார். நானும், நட்ராஜ் ஸாரும் அவர் இருந்த அறைக்குள் போனோம். அந்த அறைக்குள் நான் இருந்த 40 நிமிடங்களும் ரஜினி ஸார் என்னிடம் மட்டுமே பேசினார். என்னப் பற்றி மட்டுமே கேள்வி கேட்டார்.
முதலில் சில நொடிகள் எதுவும் பேசாமல் என்னை ஊடுறுவி பார்த்தார். பின்பு மெதுவாக “எத்தனை எபிசோடுகள்…?” என்றார். “1500 எபிசோடுகள் ஸார்…” என்றேன். “முடிஞ்சிருச்சா…?” என்றார். “ஆமாம் ஸார்.. முடிஞ்சிருச்சு…” என்றேன்.
“எப்படி.. எப்படி செஞ்சீங்க.. நீங்களே கதை, திரைக்கதை எழுதி, நடிச்சு டைரக்ஷனும் செஞ்சு.. எப்படி முடிஞ்சது…?” என்றார் ஆச்சரியத்துடன்..! “ஸார்.. எங்களைவிட நீங்கதான் ஸார்.. சினிமால ரொம்பக் கஷ்டப்பட்டிருக்கீங்க…?” என்றேன்..
“நோ.. நோ.. நான் சினிமால நடிக்க வெளியூர் போறேன். பைவ் ஸ்டார் ஹோட்டல்ல தங்குறேன். காலைல பெல் அடிச்சு ஒருத்தங்க எழுப்பி விடுறாங்க. குளிச்சு, முடிச்சு ரெடியாகி வந்தா கீழ கார் ரெடியா இருக்கு. ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போனா டயலாக் பேப்பர் ரெடியா இருக்கு. ஒருத்தர் வசனத்தைச் சொல்லித் தர்றாரு. டைரக்டர் அப்படி, இப்படி நடிக்கணும்ன்னு சொல்றாரு. நடிக்கிறோம். சாப்பிடுறோம். கிளம்பி வர்றோம்.. இதுல என்ன கஷ்டம்.. ஆனால் உங்களை மாதிரியா.. நீங்களே எல்லாத்தையும் ரெடி பண்ணி வைச்சிட்டு இயக்கமும் செஞ்சிட்டு.. பெரிய விஷயம்..” என்று மூச்சுவிடாமல் சொல்லி முடித்தார். அவர் சொன்னதைக் கேட்டுத் திகைத்துப் போனேன்.
அதன் பிறகு அந்த சீரியலில் நடித்த நடிகர், நடிகைகள் பற்றிக் கேட்டார். நானும் சொன்னேன். திடீரென்று “நீங்க கம்யூனிஸ்ட்டா..?” என்றார். அவருடைய இந்தக் கேள்வியும் எனக்கு ஷாக்காக இருந்தது. எதுக்காக இந்தக் கேள்வியைக் கேட்டாருன்னு எனக்கு முதல்ல புரியலை..
“இல்ல. அதுல ஒரு கேரக்டர் வைச்சிருந்தீங்க. எனக்கு ரொம்பப் புடிச்சிருந்தது. அதான் கேட்டேன்…” என்றார். “இல்ல ஸார். நான் தீவிர கடவுள் பக்தியுள்ளவன். கம்யூனிஸத்துல சிலவை பிடிக்கும். அதுனாலதான் அந்தக் கேரக்டரை உருவாக்கினேன்…” என்றேன்.
“கதையெல்லாம் எழுதியிருக்கீங்களா..?” என்றார். திடுதிப்புன்னு கேட்டவுடனே எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை. அந்தச் சமயத்துல நாயகியை மையப்படுத்திய ஒரு கதையை உருவாக்கி வைச்சிருந்தேன். “ஒரு கதை இருக்கு ஸார்.. ஆனால், அது ஹீரோயின் சப்ஜெக்ட்..” என்றேன். “பரவாயில்லை.. சொல்லுங்க…” என்றார். நானும் அதை சுருக்கமா சொல்லி முடிச்சேன்.
“வேற ஏதாவது கதை இருக்கா..?” என்றார். அப்போது அவருக்கேற்ற ஒரு கதை என்னிடம் ஏற்கெனவே இருந்தது. சட்டென்று அது என் நினைவுக்கு வராமல் போய்விட்டது. “இப்ப இல்ல ஸார்.. ரெடி பண்ணணும்” என்றேன்.
அப்புறம் அங்கேயே இருக்கும் புகைப்படக்காரரை அழைத்து போட்டோ எடுக்கச் சொன்னார். அந்தப் புகைப்படமும் மூன்றுவித பிரேம்களில் என் வீட்டுக்கு அனுப்பி வைத்தார் ரஜினி ஸார்..
அன்றைக்கு அவர் ஆர்வத்துடன் கதை கேட்டவிதத்தை என்னால் சட்டென்று உணர முடியவில்லை. ஒரு வேளை நான் முன்னரே தயார் செய்து வைத்திருந்த அந்தக் கதையைச் சொல்லியிருந்தால் நிச்சயமாக நான் அவருடைய படத்தில் ஒரு கதாசிரியராகக்கூட அறிமுகமாயிருப்பேன். அந்த வாய்ப்பு மயிரிழையில் போய்விட்டதில் இப்போதுவரையில் எனக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது” என்று சொல்கிறார் இயக்குநர் திருச்செல்வம்.
The post “நீங்க கம்யூனிஸ்ட்டா..?” – இயக்குநர் திருச்செல்வத்திடம் கேள்வி கேட்ட ரஜினி..! appeared first on Touring Talkies.
]]>