The post சமுத்திரக்கனி நடிப்பில் தயாராகும் ‘சமுத்திரக்கனியின் பப்ளிக்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு appeared first on Touring Talkies.
]]>இந்தப் படத்தில் நடிகர் சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் நடிகர் காளி வெங்கட் மற்றும் நடிகை ரித்விகா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
ராஜேஷ் யாதவ் மற்றும் வெற்றி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார். பாடல்களை யுகபாரதி எழுத, படத்தை கே.எல்.பிரவீன் தொகுத்திருக்கிறார். அறிமுக இயக்குநரான ரா. பரமன் எழுதி, இயக்கியிருக்கிறார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியும், இயக்குநர் வெங்கட்பிரபுவும் இணைந்து வெளியிட்டனர்.
இந்தப் படம் பற்றி இயக்குநர் ரா.பரமன் பேசுகையில்,” தமிழ் திரை உலகில் அரசியலை மையப்படுத்தி திரைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. அரசியல் தலைவர்களை பற்றிய திரைப்படங்களும் வெளியாகி இருக்கிறது. முதன்முறையாக அரசியல் கட்சியில் பணியாற்றும் தொண்டர்களை பற்றிய படமாக இந்த ‘சமுத்திரக்கனியின் பப்ளிக்’ உருவாகி இருக்கிறது.” என்றார்.
சமுத்திரக்கனி – காளி வெங்கட் கூட்டணியில் உருவாகியிருக்கும் இந்த ‘சமுத்திரக்கனியின் பப்ளிக்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
The post சமுத்திரக்கனி நடிப்பில் தயாராகும் ‘சமுத்திரக்கனியின் பப்ளிக்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு appeared first on Touring Talkies.
]]>The post ‘உடன்பிறப்பே’ படத்தின் டிரெயிலர் appeared first on Touring Talkies.
]]>The post ‘உடன்பிறப்பே’ படத்தின் டிரெயிலர் appeared first on Touring Talkies.
]]>The post “என் சொந்தப் பிரச்சினைகளை ஏன் எழுதுறீங்க..? – மீடியாக்களிடம் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் கேள்வி appeared first on Touring Talkies.
]]>அவர் தயாரித்து, இயக்கியிருக்கும் ‘நான் கடவுள் இல்லை’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.
இந்த விழாவில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும்போது. “ஒவ்வொரு இயக்குநரும் சமூக நோக்கத்தோடு இருக்க வேண்டும். உண்மையை பயப்படமால் உரக்கச் சொல்ல வேண்டும்.
சமுத்திரக்கனி எப்போதும் ஆந்திராவில் தெலுங்கு படங்களில்தான் நடித்துக் கொண்டிருக்கிறார். தெலுங்கு படத்தில் நிறைய சம்பளம் கொடுக்கிறார்கள் என்பதற்காக சமுத்திரக்கனி தமிழ் படங்களை மறந்துவிடக் கூடாது.
நடிகை இனியாவிற்கு ஒரு படி மேலே ஷாக்சி அகர்வால். ‘துப்பாக்கி’ நான் ஆரம்பித்த படம். தவிர்க்க முடியாத காரணத்தினால் நான் அதை தொடர முடியவில்லை. தாணு தயாரித்தார். விஜய்க்கு மிகப் பெரிய வியாபாரம் செய்து கொடுத்த படமும் அதுவே.
விஜய்யை முதலில் சமூகம் சார்ந்த படங்களில் நடிக்க வைக்க வேண்டாம் என்று முடிவு செய்தேன். அதனால் இளைஞர்கள் மத்தியில் இடம் பிடிக்கும்விதத்தில் இளைஞர்களை கவரும் வகையிலான படங்களிலேயே விஜய்யை நடிக்க வைத்தேன்.
ஊடகங்களும் உண்மையை சொல்ல வேண்டும். நடக்குற தவறுகளை உரக்க சொல்ல வேண்டும். விஜய் என்ற பெயர் என் மகனுக்கு எப்படி வந்தது என்று நான் சொன்னதை இப்போது திரித்து சொல்லியிருக்கிறார்கள். விஜய்க்கு நாகி ரெட்டி பெயர் வைத்தார் என்று ஒரு வலைத்தளத்தில் எழுதியிருக்கிறார்கள். இது எவ்வளவு பெரிய பொய். விஜய்க்கு வெற்றி என்ற பெயர் இருப்பதால் நான்தான் அந்தப் பெயரை வைத்தேன். இப்படியெல்லாம் பொய்யான தகவல்களை மீடியாக்கள் எழுதுவது ஏன்..?
எழுதுவதற்கு இங்கே நிறையவே இருக்கிறது. தேதிகளைக் கொடுத்துவிட்டு நடிக்க வராத நடிகர்களைப் பற்றி எழுதுங்கள்.. சம்பளம் கொடுக்காத தயாரிப்பாளர்களைப் பற்றி எழுதுங்கள். இதைப் பத்தி ஏன் எழுதணும்.. அடுத்தவர்களின் சொந்த விவகாரங்களைப் பற்றி ஏன் எழுத வேண்டும்..?
எனக்கும் என் மகன் விஜய்க்கும் இடையில் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கிறது. அது எங்களின் குடும்ப கதை. குடும்பம் என்றால் ஆயிரம்பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். அப்பா மகன் இடையே பிரச்சினை இருக்கும். இன்று சண்டையிட்டுக் கொள்வார்கள். அடுத்து கட்டிப் பிடித்துக் கொள்வார்கள். அதேதான் எல்லார் வீட்டிலேயும்.. இதை ஏன் மற்றவர்கள் பேச வேண்டும்?…” என்று கேள்வியெழுப்பினார்.
The post “என் சொந்தப் பிரச்சினைகளை ஏன் எழுதுறீங்க..? – மீடியாக்களிடம் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் கேள்வி appeared first on Touring Talkies.
]]>The post ‘சுப்ரமணியபுரம்’ படம் வெளியாகி 12 ஆண்டுகளானது-சசிகுமாருக்கு குவிந்த வாழ்த்துகள்..! appeared first on Touring Talkies.
]]>1980-களின் மதுரையில் ‘சுப்ரமணியபுரம்’ என்ற பகுதியில் நடந்த சில உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து இத்திரைப்படம் உருவாக்கப்பட்டிருந்தது.
இதன் கதை, திரைக்கதையாக்கம், கலை இயக்கம், நடிப்பு, இசை ஆகியவற்றுக்காக படம் பெரிதும் கொண்டாடப்பட்டது. ஆனால் இந்தப் படம் வெளிவந்த பின்புதான் அரிவாள்களைத் தாங்கிய வன்முறை கலாச்சாரமும் தமிழ்ப் படங்களில் அதிகமானது என்பது உண்மைதான்.
இந்தப் படம் வெளியாகி 13 ஆண்டுகள் ஆனதையொட்டி டிவீட்டரில் இயக்குநர் சசிகுமார் இதனைக் குறிப்பிட்டு, “ஜூலை-4. இந்த நாளில்தான் எனது முதல் படமான ‘சுப்ரமணியபுரம்’ வெளியானது. 12 ஆண்டுகள் ஓடிவிட்டன. இந்தப் படத்தின் உருவாக்கத்திற்கு உதவியவர்களுக்கும், படத்தின் வெற்றிக்காக உழைத்தவர்களுக்கும் எனது நன்றிகள்..” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையொட்டி படத்தில் பங்கு பெற்ற கலைஞர்களும், ரசிகர்களும், சமூகவலைத்தளவாசிகளும் சசிகுமாருக்கு வாழ்த்துக்களை சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள்.
The post ‘சுப்ரமணியபுரம்’ படம் வெளியாகி 12 ஆண்டுகளானது-சசிகுமாருக்கு குவிந்த வாழ்த்துகள்..! appeared first on Touring Talkies.
]]>The post தெலுங்கில் ஹிட்டடித்த ‘க்ராக்’ படம் பிப்ரவரி 5-ல் தமிழில் வெளியாகிறது..! appeared first on Touring Talkies.
]]>இந்தப் படத்தைத் தயாரிப்பாளர் B.மது தனது சரஸ்வதி ஃபிலிம்ஸ் டிவிஷன் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார்.
தெலுங்கு திரையுலகில் ‘மாஸ் மகாராஜா’ என கொண்டாடப்படும் நடிகர் ரவி தேஜா நாயகனாக நடித்துள்ளார். நாயகியாக ஸ்ருதிஹாசன், முக்கிய கதாப்பாத்திரத்தில் வரலஷ்மி சரத்குமார், வில்லன்களாக சமுத்திரக்கனி, ‘ஸ்டன்’ சிவா என்று தமிழக நடிகர்களே இந்தப் படத்தில் அதிகம் நடித்துள்ளனர். தமிழ்த் தொழில் நுட்பக் கலைஞர்களும் இப்படத்தில் பங்கு கொண்டுள்ளனர்.
நீண்ட பொது முடக்கக் காலத்திற்குப் பிறகு சமீபத்தில் சங்கராந்தி தின சிறப்பு திரைப்படமாக 2021 ஜனவரி 9 அன்று திரையரங்குகளில் வெளியானது.
சில உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவான இத்திரைப்படம் மாஸூம், கிளாஸூம் கலந்த கமர்ஷியல் படமாக வெளிவந்து ரசிகர்களின் கோலாகல வரவேற்பில், பம்பர் ஹிட்டடித்துள்ளது. தமிழில் ‘மாஸ்டர்’ படம் போல் திரையரங்குகளுக்கு அலை, அலையாக பெரும் கூட்டத்தை கூட்டி வந்தது இத்திரைப்படம்.
பல முன்னணி நடிகர்களின் இதுவரையிலான பல்வேறு வசூல் சாதனையை முறியடித்து, சாதனை படைத்திருக்கிறது. பல மாதங்களுக்கு பிறகு தியேட்டர்களை திருவிழாக் கோலம் காண வைத்துள்ளது இப்படம்.
படத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய வரவேற்பால் ஆஹா ஓடிடி தளத்தில் இம்மாதம் வெளியாகவிருந்த இப்படம் தியேட்டர்களில் கூட்டம் குறையாததால் ஓடிடி வெளியீடு பிப்ரவரி 5-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களையும் தாண்டி தமிழ். மலையாளம் மொழிகளிலும் இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
தமிழகத்திலும், கேரளாவிலும் வரவேற்பை பெற்றுள்ள இப்படம் மொழி மாற்றம் செய்யப்பட்டால் மொழி தெரியாத ரசிகர்கள் கூட்டமும் ரசிக்க முடியும் என விநியோகஸ்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இக்கோரிக்கையினை ஏற்ற படக் குழு தற்போது ‘க்ராக்’ படத்தின் டப்பிங் பணிகளை தீவிரமாக செய்து வருகிறது.
தெலுங்கு ரசிகர்களை குதூகலப்படுத்திய ‘க்ராக்’ திரைப்படம் வரும் பிப்ரவரி 5-ம் தேதி முதல் தமிழ் மற்றும் மலையாள மொழிகளிலும் வெளிவரவுள்ளது.
The post தெலுங்கில் ஹிட்டடித்த ‘க்ராக்’ படம் பிப்ரவரி 5-ல் தமிழில் வெளியாகிறது..! appeared first on Touring Talkies.
]]>The post அக்டோபர் 13, தசரா விடுமுறையில் ஆர்.ஆர்.ஆர்.(RRR) திரைப்படம் வெளியாகிறது appeared first on Touring Talkies.
]]>இந்தப் படத்தில் என்.டி.ஆர்., ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, அல்லிசன் டூடி மற்றும் பல புகழ் பெற்ற நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
ஆந்திராவின் புகழ் பெற்ற சுதந்திர போராட்ட வீரர்களான கொமரம் பீம் மற்றும் அல்லூரி சீதாராம ராஜு ஆகியோரின் விடுதலைப் போராட்டத்திற்கு முந்தைய வாழ்க்கையை இந்தப் படத்தில் கற்பனை கலந்து காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் ராஜ மெளலி.
திரைப்படத்தின் வெளியீடு குறித்து பேசிய தயாரிப்பாளர் டி வி வி தனய்யா, “RRR’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவை எட்டியுள்ள நிலையில், ரசிகர்களுக்கு இத்திரைப்படம் மூலம் விருந்து படைப்பதற்கு நாங்கள் ஆவலாக உள்ளோம். தசரா பண்டிகை போன்ற இத்திரைப்படத்தை அதே நாளில் திரையரங்கில் ரசிகர்களோடு கொண்டாட இருப்பதில் நாங்கள் பெரிய மகிழ்ச்சியை அடைகிறோம்..” என்றார்.
டி.வி.வி. தனய்யாவின் தயாரிப்பில், இந்தியாவின் மிகவும் புகழ் பெற்ற இயக்குநர்களில் ஒருவரான எஸ்.எஸ்.ராஜமௌலியின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த ‘RRR’ திரைப்படம், தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடா மற்றும் பல்வேறு இந்திய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவிருக்கிறது.
The post அக்டோபர் 13, தசரா விடுமுறையில் ஆர்.ஆர்.ஆர்.(RRR) திரைப்படம் வெளியாகிறது appeared first on Touring Talkies.
]]>The post சமுத்திரக்கனி-கஸ்தூரி நடிக்கும் புராணப் படம் ‘சர்ப்ப கிரகங்கள்’ appeared first on Touring Talkies.
]]>படத்தில் சிவன் கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடிக்கிறார். திருமாலாக விக்னேஷும், துர்க்கையாக கஸ்தூரியும் நடிக்கவுள்ளனர்.
நாடகக் காவலர் என்று போற்றப்படும் ஆர்.எஸ்.மனோகரின் நாடகக் குழுவில் நடித்த துரை பாலசுந்தரம் இந்தப் படத்தை இயக்கி ஒரு முக்கியக் கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்.
படத்திற்கு கதை, வசனம், பாடல்களை கே.பி.அறிவானந்தம் எழுதியிருக்கிறார். இணை தயாரிப்பு எஸ்.ஆனந்த், வி.உமாதேவி. தயாரிப்பாளர் சாந்தி பாலசுந்தரம் இந்தப் படத்தினைத் தயாரித்துள்ளார்.
இந்த ‘சர்ப்ப கிரகங்கள்’ படம் பற்றிப் பேசிய இயக்குநர் துரை பாலசுந்தரம், “நாம் அன்றாடம் வணங்கும் நவக்கிரகங்களில் உள்ள ராகு, கேது உருவானவிதம், மனித வாழ்வில் அவைகள் ஏற்படுத்தும் தாக்கம் மற்றும் மகிமையைத்தான் இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறோம். படம் அதிகப் பொருட்செலவில் உருவாகியிருக்கிறது. நிறைய கிராபிக்ஸ் காட்சிகளும் படத்தில் உள்ளன. தற்போது படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்டது. தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் படம் வெளியாகவுள்ளது..” என்றார்.
The post சமுத்திரக்கனி-கஸ்தூரி நடிக்கும் புராணப் படம் ‘சர்ப்ப கிரகங்கள்’ appeared first on Touring Talkies.
]]>The post ‘வெள்ளை யானை’ படத்தின் டிரெயிலர் appeared first on Touring Talkies.
]]>The post ‘வெள்ளை யானை’ படத்தின் டிரெயிலர் appeared first on Touring Talkies.
]]>