The post OTT-யிலும் வெற்றியடைந்தது ‘யசோதா’ திரைப்படம் appeared first on Touring Talkies.
]]>நடிகை சமந்தாவுடைய ஆக்ஷன்- த்ரில்லர் திரைப்படமான ‘யசோதா’ சமீபத்தில் பாக்ஸ் ஆஃபிஸ் வசூலில் நல்ல சாதனை படைத்தது.
சமந்தாவுடைய வியக்கவைக்கும் சண்டைக் காட்சிகள் மற்றும் அவருடைய நடிப்பு, திரைக்கதையின் ட்விஸ்ட் இவை எல்லாம் பார்வையாளர்களின் அட்ரிலின் சுரப்பை திரையரங்குகளில் அதிகரித்தது. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய பின்பு தற்போது அமேசான் பிரைமில் ‘யசோதா’ ஸ்ட்ரீம் ஆகிக் கொண்டிருக்கிறது.
ஆச்சரியமாக, திரையரங்குகளில் கிடைத்ததற்கு இணையாக ஓடிடி தளத்திலும் யசோதாவிற்கு பார்வையாளர்களிடையே வரவேற்பு இருக்கிறது. தங்களது விமர்சனங்கள் மூலம் படத்திற்கு அன்பையும் ஆதரவையும் ரசிகர்கள் இணையத்தில் கொடுத்து வருகின்றனர். இதனால், ‘யசோதா’ திரைப்படம் ப்ரைமின் வாட்ச் லிஸ்ட்டில் டாப் ட்ரெண்டிங்கில் உள்ளது.
ஸ்ரீதேவி மூவிஸின் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் படத்தைத் தயாரித்து இருக்க, ஹரி மற்றும் ஹரிஷ் இயக்கத்தில் வாடகைத்தாய் கதாபாத்திரத்தில் சமந்தா நடித்திருந்தார். ‘மெலோடி பிரம்மா’ மணி ஷர்மா படத்திற்கு இசையமைத்து இருந்தார்.
உன்னி முகுந்தன் மற்றும் வரலக்ஷ்மி இருவரும் சமந்தாவுடன் கதைக்கு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ராவ் ரமேஷ், முரளி ஷர்மா, சம்பத் ராஜ், ஷத்ரு, மாதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்பிரிடா, பிரியங்கா ஷர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
The post OTT-யிலும் வெற்றியடைந்தது ‘யசோதா’ திரைப்படம் appeared first on Touring Talkies.
]]>The post யசோதா – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.
]]>நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் திடீரென்று வாடகைத் தாய் மூலமாக தாங்கள் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர் ஆனதாக அறிவித்ததையடுத்து, “இந்த வாடகைத் தாய் முறை என்றால் என்ன?” என்பது பற்றி பல்வேறு ரூபங்களில் தேடுதல்கள் தொடர்ந்தன.
அந்த வாடகை தாய் விவகாரத்தை மையக் கருத்தாக வைத்துத்தான் இந்த ‘யசோதா’ படமும் உருவாகியுள்ளது. ஆனால் இது முதல் முறையல்ல.. ஏற்கெனவே 1980-ம் ஆண்டு மே 14-ம் தேதியன்று வெளியான தமிழ்த் திரைப்படமான ‘அவன் அவள் அது’ என்ற படம்தான் இந்த வாடகைத் தாய் விஷயத்தை முதன்முதலாக திரையில் வெளிப்படுத்திய படமாகும்.
இத்திரைப்படம் பிரபல எழுத்தாளர் சிவசங்கரி எழுதிய ‘ஒரு சிங்கம் முயலாகிறது’ என்ற நாவலின் திரை வடிவமாக்கும். இந்தப் படத்தில் சிவக்குமாரும், லட்சுமியும் தம்பதிகளாக நடித்திருந்தனர். இவர்களுக்கு வாடகைத் தாய் முறையில் குழந்தையை பெற்றுத் தர வரும் பெண்ணாக நடிகை ஸ்ரீப்ரியா நடித்திருந்தார். தமிழ்த் திரையுலகத்தின் மூத்தத் தயாரிப்பாளரும், இயக்குநருமான முக்தா வி.சீனிவாசன், இந்தப் படத்தைத் தயாரித்து, இயக்கியிருந்தார்.
தற்போது உலகத்தின் பல்வேறு நாடுகளிலும் இந்த வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுத் தருவதற்கு சட்டப்பூர்வமான அனுமதியுண்டு. இந்தியாவிலும் சில, பல நிபந்தனைகளுடன் அனுமதித்துள்ளார்கள். இதற்காகவே இந்தியாவின் பல நகரங்களில் இந்த வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றெடுத்துக் கொடுப்பதற்கென்றே பல வர்த்தக மையங்களும் இருக்கின்றன.
இந்த வாடகைத் தாய் முறையில் சமீப ஆண்டுகளில் நடந்து வரும் சில மோசடிகளையும், சட்ட விரோதச் செயல்களையும் வெளிக்காட்டும் படமாகத்தான் இந்த ‘யசோதா’ படம் உருவாகியுள்ளது. ‘யசோதா’ என்று தலைப்பு வைத்ததற்கும் ஒரு காரணம் இருக்கிறது. மகாபாரத்தில் கிருஷ்ணரின் வளர்ப்புத் தாயின் பெயர் ‘யசோதா’. அதனால்தான் இந்த ‘வாடகைத் தாய்’ படத்தின் நாயகியின் பெயரும் ‘யசோதா’வாம். பொருத்தம்தான்.!
நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர் சமந்தா, தன் தங்கையின் ஆபரேஷன் செலவுக்காக பணத்திற்கு அல்லாடுகிறார். அந்த நேரத்தில்தான் குழந்தைகள் இல்லாத பணக்கார தம்பதிகளுக்கு வாடகைத் தாயாக கர்ப்பமாகி குழந்தை பெற்றுக் கொடுத்தால் லட்சங்களில் பணம் கிடைக்கும் என்பதை அறிகிறார் சமந்தா.
தனது தங்கையைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தனது கர்ப்பப் பையை வாடகைக்குவிட முடிவு செய்கிறார் சமந்தா. இது மாதிரியான வாடகைத் தாய்மார்களுக்காக வரலட்சுமி சரத்குமார் நடத்தும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படும் சமந்தாவுக்கு, அங்கு அவருக்கு அதற்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதற்கிடையில் பிரபலமான தொழிலதிபர் ஒருவர் பிரபலமான மாடலிங் பெண்ணை தனது எஸ்டேட்டுக்கு அழைத்து செல்கிறார். அவர்கள் செல்லும் செல்லும் கார் விபத்துக்குள்ளாகி இருவரும் இறக்கின்றனர். போலீஸ் விசாரணையில் அது விபத்தல்ல; திட்டமிட்ட கொலை என்று தெரிய வருகிறது. உயர் போலீஸ் அதிகாரியான முரளி சர்மாவின் உத்தரவுபடி போலீஸ் அதிகாரிகளான சம்பத்ராஜ், மற்றும் சத்ரு இருவரும் கொலையாளிகளை தேடத் துவங்குகின்றனர்..!
இதே நேரம் சிகிச்சை மூலமாக தன் வயிற்றில் கருவை சுமந்திருக்கும் நிலையில் வரலட்சுமி சரத்குமாரின் மருத்துவமனையில் தங்கியிருக்கிறார் சமந்தா. அந்த மருத்துவமனையில் சமந்தாவைப் போன்ற பல வாடகைத் தாய்மார்களும் இருக்கிறார்கள். இவர்களில் சமந்தாவுடன் நன்றாகப் பேசிப் பழகிய நிறை மாத கர்ப்பிணியான பிரியங்கா சர்மா பிரசவ நேரத்தில் இறந்து போகிறார். மேலும் அவரது குழந்தையும் வயிற்றுக்குள்ளேயே இறந்து விட்டது என்று சமந்தாவிடம், வரலட்சுமி சரத்குமார் சொல்கிறார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடையும் சமந்தா இது குறித்து சந்தேகப்படுகிறார். அந்த மருத்துவமனையில் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டிருக்கும் ரகசிய அறைக்கு சமந்தா சென்று பார்க்க.. அங்கே பிரியங்கா சர்மா உட்பட பல கர்ப்பிணி பெண்கள் பிணமாக இறந்து கிடக்கின்றனர். மேலும், இறந்து போன குழந்தைகளின் சிசுக்கள் பதப்பட்ட நிலையில் இருப்பதையும் பார்க்கிறார்.
வரலட்சுமி இந்த மருத்துவமனையின் மூலமாக வாடகைத் தாய்மார்களுக்கு சிகிச்சையளிப்பதுபோல மருத்துவத் துறையின் வேறொரு ரகசிய வேலையைச் செய்வதாக சமந்தாவுக்குத் தோன்றுகிறது. அடுத்து நடந்தது என்ன..? உண்மையில் இந்த மருத்துவமனையை வரலட்சுமி சரத்குமார் நடத்துவதற்கான நோக்கம்தான் என்ன..? போலீஸ் அதிகாரி சத்ரு தேடிய கொலையாளிகள் கிடைத்தார்களா..? அந்தக் கொலைக்கும் இந்த வாடகைத் தாய் வியாபாரத்திற்கும் என்ன சம்பந்தம்..? மருத்துவமனையில் இறந்து போன குழந்தை சிசுக்கள் பதப்படுத்தப்படுவது ஏன்? மருத்துவமனையில் நடக்கும் இந்த மர்மங்களின் பின்னணியை சமந்தா கண்டுபிடித்தாரா..? இல்லையா..? என்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லும் படம்தான் இந்த ‘யசோதா’ திரைப்படம்.
கதையின் நாயகி ‘யசோதா’வாக நடித்திருக்கும் சமந்தா ஒட்டு மொத்த படத்தையும் தனது தோளில் சுமந்திருக்கிறார். தங்கை மீது பாசம் கொண்ட அக்காவாகவும்.. தங்கையின் உயிரைக் காப்பாற்ற வேண்டி தான் கர்ப்பிணியாக முடிவெடுத்து அந்தக் கஷ்டத்தை அனுபவிப்பதும்… ஆக்க்ஷன் காட்சிகளில் அதிரடி நாயகியாகவும், படம் முழுவதும் நடிப்பில் ஜொலித்திருக்கிறார்..!
சமந்தாவிற்கு இணையான கதாபாத்திரத்தில் அழகான வில்லியாக வரலட்சுமி சரத்குமார் தனது சிறப்பான நடிப்பைக் காண்பித்திருக்கிறார். அதிலேயும் கைகளைக் குறுக்கேக் கட்டிக் கொண்டு தலையை ஒரு பக்கமாக சாய்த்துக் கொண்டு அவர் காட்டும் அலட்சிய பாவனை.. படு ஜோர்..! வரலட்சுமியின் காதலனாக உன்னி முகுந்தன், போலீஸ் அதிகாரிகளான சத்ரு, சம்பத் ராஜ் என்று மற்றைய முக்கியக் கதாபாத்திரங்களும் தங்களுக்கான நடிப்பை நல்முறையில் காட்டியிருக்கிறார்கள்.
முதல் காட்சியில் இருந்து கடைசிவரையிலும் ஒளிப்பதிவாளர் சுகுமாரின் ஒளிப்பதிவு இது ஹாலிவுட் படமா என்று யோசிக்க வைத்திருக்கிறது. பல்வேறு எமோஷன்களில் படம் நகரும்போதெல்லாம் ஒளிப்பதிவும் அதற்கேற்றாற்போல் நமது பார்வையையும் சிதறடிக்காத வண்ணம் படமாகியிருக்கிறது. பாராட்டுக்கள். மணி ஷர்மாவின் இசையில் பாடல்கள் வழக்கம்போல சுமார் ரகம் என்றாலும் பின்னணி இசை அதைவிட சிறப்பாக அமைந்துள்ளது.
வாடகைத் தாய் என்ற தொழிலுக்குப் பின்னால் இருக்கும் சுரண்டல், திருட்டுத்தனம், இவற்றை வெளிப்படையாகப் போட்டுட்டைத்திருக்கிறார்கள். இதற்காக ஏ டூ இஸட்வரையிலும் இது பற்றித் தெரிந்து வைத்துக் கொண்டுதான் இயக்குநர்கள் களத்தில் இறங்கியிருக்கிறார்கள். இதற்காகவே அவர்களுக்கு நமது பாராட்டுக்கள்..!
இத்துறையில் நடக்கும் தில்லு முல்லுகளையும், அநியாயங்களையும், சட்ட விரோதங்களையும் படிப்படியாக யசோதாவின் மூலமாக நமக்குக் கடத்துவதை ஒரு சுவாரசியமான திரைக்கதையில் த்ரில்லிங்கோடு கொடுத்திருக்கிறார்கள் இயக்குநர்கள். வேகமான திரைக்கதையில், கிளைமாக்சில் யாரும் யூகிக்க முடியாத திருப்பு முனையாக சமந்தாவின் ‘யசோதா’ கதாபாத்திரம் அமைந்திருப்பதும், அனைவரும் ரசிக்கும்விதமாக ஒரு க்ரைம் த்ரில்லர் கலந்த, அதிரடி ஆக்க்ஷன் படமாகவும் இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார்கள் இயக்குநர்கள் ஹரி – ஹரிஷ்.
லாஜிக் இல்லாத காட்சிகள் பல இருக்கின்றன என்றாலும், இத்திரைப்படம் சொல்ல வந்த விஷயத்துக்காக அவற்றைப் பொறுத்துக் கொண்டு நல்லவைகளை நாம் வாழ்த்துவோம். பாராட்டுவோம்…!
RATING : 3.5 / 5
The post யசோதா – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.
]]>The post சமந்தாவின் ஆக்ஷன் த்ரில்லர் படம் ‘யசோதா’ சென்சார் சான்றிதழ் பெற்றது..! appeared first on Touring Talkies.
]]>வாடகைத் தாய் மற்றும் அதைச் சுற்றியுள்ள மருத்துவக் குற்றங்களை அடிப்படையாகக் கொண்ட ஆக்ஷன் மற்றும் எமோஷன் உள்ளடக்கிய கதை என்பது படத்தின் ட்ரைய்லர் காட்சிகளில் தெளிவாகியுள்ளது.
இது மட்டுமல்லாது, சமந்தாவின் திறமையான நடிப்பு, பிரம்மாண்டமான தயாரிப்புப் பணிகள் மற்றும் கதைக்கு வலுவூட்டும் பின்னணி இசை பார்வையாளர்களின் அட்ரிலின் சுரப்பை அதிகப்படுத்தி பார்வையாளர்களுக்கு ஆர்வமூட்டும் கதையாக அமையும்.
பிரபல நடிகர்களான உன்னி முகுந்தன், வரலக்ஷ்மி சரத்குமார் மற்றும் பலர் ஸ்ரீதேவி மூவிஸ் பேனரின் கீழ் வெளியாகக் கூடிய இந்த பான் இந்தியா படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
’யசோதா’ திரைப்படம் சமந்தாவின் அதிக எதிர்ப்பார்ப்புகளுக்கு உள்ளாகியிருக்கக் கூடியத் திரைப்படம் மட்டுமல்ல முதல் முறையாக பான் இந்தியா படமாக ஐந்து மொழிகளில் உருவாகி வெளியாக இருக்கக் கூடிய முதல் கதாநாயகியை மையப்படுத்தியப் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வாடகைத் தாயாக சமந்தா நடித்திருக்கும் இந்தப் படம் திறமையான இயக்குநர்களான ஹரி மற்றும் ஹரீஷ் இயக்கத்தில், தயாரிப்பாளர் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரிப்பில் உலகம் முழுவதும் வரும் நவம்பர் மாதம் 11-ம் தேதி வெளியாக இருக்கிறது.
The post சமந்தாவின் ஆக்ஷன் த்ரில்லர் படம் ‘யசோதா’ சென்சார் சான்றிதழ் பெற்றது..! appeared first on Touring Talkies.
]]>The post ஹாலிவுட் சண்டைப் பயிற்சியாளரை வியக்க வைத்த சமந்தாவின் அர்ப்பணிப்பு! appeared first on Touring Talkies.
]]>படத்தின் மீது அதிக எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ள நிலையில், சமீபத்தில் வெளியான டிரெய்லரில் பார்த்த ஆக்ஷன், எமோஷன் மற்றும் த்ரில்லான பரபரப்புக் காட்சிகளை நாம் விரைவில் திரையரங்குகளில் காண இருக்கிறோம்.
படத்தின் ஆக்ஷன் காட்சிகளுக்குக் கிடைத்து வரும் நல்ல வரவேற்பால் மகிழ்ச்சியடைந்துள்ள சண்டைப் பயிற்சியாளர் யானிக் பென், இந்த அதிதீவிரமான சண்டைக் காட்சிகளில் சமந்தா நடித்துள்ளது குறித்து பகிர்ந்துள்ளார்.
“சமந்தாவின் தீவிரமான அர்ப்பணிப்பும் ஆர்வமும் மட்டுமே இந்த சண்டைக் காட்சிகளை அடுத்த நிலைக்கு எடுத்து சென்று பார்வையாளர்களுக்கு பரபரப்பூட்டுவதாக மாற்றியுள்ளது” எனவும் கூறியுள்ளார்.
இதற்கு முன்பு யானிக் பென் சமந்தாவுடன் ‘தி ஃபேமிலி மேன்2’ வெப் சீரிஸில் இணைந்து பணியாற்றினார். தற்போது சிறந்த ஆக்ஷன் காட்சிகளுக்காக மீண்டும் ‘யசோதா’ படத்தில் ஒன்றிணைந்துள்ளனர்.
ஐகிடோ, கிக் பாக்ஸிங், ஜீத் குனே டோ, ஜிம்னாஸ்டிக்ஸ் மற்றும் மணல் பயிற்சியில் நிபுணத்துவம் பெற்றவரான யானிக் பென் புகழ் பெற்ற ஹாலிவுட் படங்கள், நாற்பதுக்கும் மேற்பட்ட தெலுங்கு மற்றும் இந்தி படங்களுக்கு சண்டைப் பயிற்சி கொடுத்துள்ளார்.
‘ட்ரான்ஸ்போர்ட்டர் 3’, கிறிஸ்டோபர் நோலனின் ‘இன்செப்ஷன்’, ‘டன்கிர்க்’, ஷாருக்கானின் ‘ரயீஸ்’, சல்மான் கானின் ‘டைகர் சிந்தா ஹை’, பவன் கல்யாணின் ‘அத்தாரிண்டிகி தரேதி’, மகேஷ் பாபுவின் ’1- நேனோக்கடைன்’, அல்ல் அர்ஜூனின் ‘பத்ரிநாத்’, சூர்யாவின் ‘ஏழாம் அறிவு’ மற்றும் பல படங்களில் பணிபுரிந்துள்ளார்.
The post ஹாலிவுட் சண்டைப் பயிற்சியாளரை வியக்க வைத்த சமந்தாவின் அர்ப்பணிப்பு! appeared first on Touring Talkies.
]]>The post “யசோதா’ படத்தில் கதைதான் ஹீரோ..” – சொல்கிறார் நடிகை வரலட்சுமி சரத்குமார்! appeared first on Touring Talkies.
]]>திறமையான இயக்குநர்களான ஹரி & ஹரீஷ் இந்தப் படத்தை இயக்க, மூத்த தயாரிப்பாளரான சிவலெங்கா கிருஷ்ண பிரசாத், ஸ்ரீதேவி மூவிஸ் பேனரின் கீழ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமாரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த ’யசோதா’ படத்தில் நடித்தது பற்றி நடிகை வரலட்சுமி பேசும்போது, “இந்தக் கதை ஒரு அறிவியல் புனைவு. முதலில் இது போன்ற கதையையும் கதாபாத்திரங்களையும் எப்படி எழுதினார்கள் என்றுதான் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இதைப் பற்றி நான் இயக்குநர்களிடமும் கேட்டேன்.
இந்தப் படத்தில் நான் வாடகைத் தாய் மையத்தின் தலைவர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். என்னுடைய கதாபாத்திரம் வசதியான பணத்தை விரும்பக் கூடிய ஒருத்தி. என்னுடைய உண்மையான குணாதிசியம் வாழ்க்கை முறை, நான் உடுத்தும் உடை என பலவற்றில் இருந்தும் இந்தக் கதாபாத்திரம் முற்றிலும் வேறானது.
என்னுடைய கதாபாத்திரம் மிகவும் அமைதியாக இருக்கும். கதையின் போக்கில்தான் என்னுடைய எதிர்மறைத் தன்மை வெளிப்படும். எனக்கும் சமந்தாவுக்கும் இடையில் இருக்கும் உறவு பார்வையாளர்களுக்கு ஆர்வமூட்டுவதாக அமையும்.
என்னுடைய கதாபாத்திரம் சமந்தாவுக்கு இணையாக கதையில் பயணித்துக் கொண்டே இருக்கும். யசோதாவிற்கு யாருடைய உதவியாவது அவளுடைய வாழ்க்கையில் வேண்டும் என்ற நிலையில் இருக்கும்போதுதான் என்னுடைய கதாபாத்திரம் உள்ளே வரும்.
படத்தை இயக்கிய இரண்டு இயக்குநர்களும் மிகவும் அமைதியானவர்கள். இவர்களைப் போன்ற அமைதியான இயக்குநர்களை இதற்கு முன்பு நான் பார்த்தது இல்லை. ஒவ்வொரு கதாபாத்திரம் குறித்தும் அவர்கள் வலுவான ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் அவர்களுக்கு என்ன வேண்டும் என்பதும் தெரியும்.
வாடகைத் தாய் முறை என்பது அத்தனை சிக்கலானது கிடையாது. சில நடிகர்கள் அதை முயற்சி செய்ததால் அது மிகப் பெரிய விஷயமாக மாறி விட்டது. வாடகைத் தாய் என்பது படத்தில் ஒரு வரிதான். அதன் நன்மை, தீமை பற்றி நாங்கள் விவாதிக்கவில்லை. இது கற்பனைக் கதை என்று நினைப்பவர்களுக்கு இது போன்ற சில மனிதர்களும் உண்மையில் இருக்கிறார்கள் என்பதை காண்பித்து இருக்கிறோம்.
சமந்தாவை கடந்த பத்து, பன்னிரெண்டு வருடங்களாகவே எனக்குத் தெரியும். செட்டில் ஜாலியாக இருந்தோம். அவர் ஒரு வலுவான பெண்மணி. இந்தக் கதாபாத்திரத்தில் அவர் வாழ்ந்திருக்கிறார்.
படத்தில் யசோதா கதாபாத்திரம் மிகவும் வலுவானது. சமந்தா அதற்காகக் கடுமையாக உழைத்திருக்கிறார். எனக்குப் படத்தில் எல்லாக் கதாபாத்திரங்களும் பிடிக்கும். ஏனென்றால் கதைதான் படத்தின் ஹீரோ…” என்றார் நடிகை வரலட்சுமி.
The post “யசோதா’ படத்தில் கதைதான் ஹீரோ..” – சொல்கிறார் நடிகை வரலட்சுமி சரத்குமார்! appeared first on Touring Talkies.
]]>The post ‘மயோசிடிஸ்’ நோயுடன் போராடும் சமந்தா..! appeared first on Touring Talkies.
]]>மேலும் அப்பதிவில் “யசோதா டிரெய்லருக்கு உங்கள் வரவேற்பு அமோகமாக இருந்தது. உங்கள் அனைவருடனும் நான் பகிர்ந்து கொள்ளும் இந்த அன்பும் தொடர்பும்தான், வாழ்க்கை என் மீது வீசும் முடிவில்லாத சவால்களைச் சமாளிக்க எனக்கு வலிமை அளிக்கிறது.
சில மாதங்களுக்கு முன்பு எனக்கு மயோசிடிஸ் (Myositis) எனப்படும் ஆட்டோ இம்யூன் நோய் இருப்பது கண்டறியப்பட்டது. குணமடைந்த பிறகு இதைப் பகிரலாம் என்று எதிர்பார்த்தேன். ஆனால் குணமடைய நான் எதிர்பார்த்ததைவிட அதிக நாள் எடுத்துக் கொண்டது.
நாம் எப்பொழுதும் வலுவான நிலையில் முன்னிற்க அவசியம் இல்லை என்பதை நான் பொறுமையாக உணர்கிறேன். இந்த நோயில் இருந்து குணமடைய இன்னும் போராடிக் கொண்டிருக்கிறேன். விரைவில் நான் பூரண குணமடைவேன் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். எனக்கு உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும், நல்ல நாட்களும் கெட்ட நாட்களும் இருந்தன.
இன்னும் ஒரு நாளை என்னால் சமாளிக்க முடியாது என நினைக்கும்போதுகூட அந்த நிமிடம் எப்படியோ கடந்து செல்கிறது. என்னுடைய கணிப்பின்படி இன்னும் ஒரு நாளில் குணமடைவதை நெருங்கி விட்டேன் என நினைக்கிறேன். இதுவும் கடந்து போகும்” என்று உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
The post ‘மயோசிடிஸ்’ நோயுடன் போராடும் சமந்தா..! appeared first on Touring Talkies.
]]>The post சமந்தாவின் ‘ஷாகுந்தலம்’ படத்தின் ரிலீஸ் தேதி உறுதியானது appeared first on Touring Talkies.
]]>ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான தில் ராஜு, குணா டீம் வொர்க்ஸுடன் இணைந்து வழங்க, நீலிமா குணா இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.
இதில் நடிகை சமந்தா ‘ஷகுந்தலையாகவும்’, தேவ் மோகன், ‘ராஜா துஷ்யந்தனாகவும்’ நடித்துள்ளனர்.
மேலும் சச்சின் கேடேகர், கபீர் பேதி, டாக்டர் எம்.மோகன் பாபு, பிரகாஷ்ராஜ், மதுபாலா, கௌதமி, அதிதீ பாலன், அனன்யா நாகலா மற்றும் ஜிஷு சென்குப்தா போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் கூடுதல் ஈர்ப்பாக, நடிகர் அல்லு அர்ஜுனின் மகள் ‘அல்லு அர்ஹா’ இளவரசர் ‘பரதர்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தின் கதை, உலகப் புகழ் பெற்ற புராதன காவியமான மகாபாரதத்தில் உள்ள ஷகுந்தலை மற்றும் ராஜா துஷ்யந்தன் அவர்களின் காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. படத்தினை இயக்குநர் குணசேகர் எழுதி, இயக்கியிருக்கிறார்.
ராஜா துஷ்யந்தனின் ‘புரு’ வம்ச ஆட்சிக் காலத்தை, மிக அழகாக மற்றும் பிரம்மாண்டமாக காட்சியமைக்க, காஷ்மீரில் உள்ள கஷ்யப்பா கணுமாலுவில் இதன் படப்பிடிப்பை நடத்தியுள்ளார் இயக்குநர் குணசேகர்.
சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் முதல் அட்டவணை, ரசிகர்கள் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்து படத்தின் மேல் உள்ள எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்து உள்ளது.
இந்தப் படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் என பல்வேறு மொழிகளில் வெளியாக உள்ளது.
இந்தப் படம் வரும் நவம்பர்-4-ம் தேதி வெளிவரவுள்ளது.
The post சமந்தாவின் ‘ஷாகுந்தலம்’ படத்தின் ரிலீஸ் தேதி உறுதியானது appeared first on Touring Talkies.
]]>The post ‘புஷ்பா’ படத்தின் பாடலுக்கு ஆண்கள் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு appeared first on Touring Talkies.
]]>அதிலும் சமந்தா ஆடியிருக்கும் குத்துப் பாடலான ‘ம்’ சொல்றியா மாமா… ம்ஹூம் சொல்றியா மாமா’ பாடலுக்கு ஆண்கள் தரப்பில் இருந்தே எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்தப் பாடலால் தங்கள் மானத்துக்கு ஆபத்து வந்துள்ளதாக பல ஆண்கள் சமூக வலைத்தளங்களில் புலம்பி வருகின்றனர்.
இது குறித்து இந்தப் பாடலை எழுதிய கவிஞர் விவேகாவிடம் பேசியபோது, “தெலுங்கில் இந்த பாடல் வேறு மாதிரியாக இருந்தது. ‘கருப்போ சிவப்போ, ஆனால் நீ சந்தோஷமாக இரு! நீ குள்ளமா நெட்டையோ யாராவது உன்னை பார்த்தால் குதூகலமாக இரு!’ என்ற போன்ற பொருள் வரும் வகையில்தான் அந்த பாடல் முதலில் அமைந்திருந்தது.
‘எந்த தடையும் இல்லை. ஜாலியாக எழுதி கொடுங்கள்’ என்றுதான் என்னிடம் தேவிஸ்ரீபிரசாத் சொல்லியிருந்தார். நானும் அந்தப் பாடலைப் பார்த்துவிட்டு தமிழ்ப் பாடலுக்கு ஒரு பிரதியை எழுதி கொடுத்தேன். நான் எழுதிய தமிழ் வரிகளில் ‘ஆம்பள புத்தி’ என்ற வார்த்தை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. மேலும், ‘வெளக்க அணைச்சா போதும் எல்லா வெளக்கமாறும் ஒண்ணுதான்’ என்ற வரியோடு முடித்திருந்தேன்.
அதைப் பார்த்ததும் இன்னும் கூடுதல் சந்தோஷம் அவருக்கு. “பிரமாதம்” என என்னை பாராட்டியவர், “இந்த மாதிரியான கான்செப்ட்டில்தான் இந்தப் பாடல் வேண்டும்” என்று சொல்லியதோடு தெலுங்கு உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் ‘ஆம்பள புத்தி’ உள்ளிட்ட சில வரிகளில் மாற்றங்கள் செய்தார்கள். இப்படி ஒரு வித்தியாசமான பாடலாக செய்தது ரசிகர்களுக்கும் பிடித்திருக்கிறது…” என்றார்.
“இந்தப் பாடல் தொடர்பாக ஆண்கள் சங்கத்தினர் சிலர் புகார் எழுப்பியுள்ளார்களே..” என்று கேட்டபோது, “ஆண்கள் சங்கம் என்ற அமைப்பை இதற்கு முன்பு நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா..? சரி, அந்த ஆண்கள் சங்கத்தை எதற்கு வைத்திருக்கிறார்கள்..? இதற்கு முன்பு ஆண்களுக்காக எதற்காக இந்தச் சங்கத்தினர் போராடி இருக்கிறார்கள்? ஆண்களில் அயோக்கியர்கள் பலர் குழந்தைகளை பாலியல் வன்கொடுமைகளுக்கு உட்படுத்தி இருக்கிறார்கள். பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஆண்களால்தான் நடத்தப்பட்டு வருகிறது. இதையெல்லாம் எதிர்த்து இவர்கள் இதற்கு முன்பாகக் குரல் கொடுத்திருக்கிறார்களா?” என்று எதிர்க் கேள்வி எழுப்பினார்.
The post ‘புஷ்பா’ படத்தின் பாடலுக்கு ஆண்கள் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு appeared first on Touring Talkies.
]]>The post மகன்-மருமகள் பிரிவு குறித்து நாகார்ஜூனாவின் வருத்தம் appeared first on Touring Talkies.
]]>தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார் நடிகை சமந்தா. இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்துள்ளார்.
நடிகை சமந்தா தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் கிறிஸ்துவ, இந்து முறைப்படி கோலாகலமாக நடைபெற்றது.
4 ஆண்டுகள் கழித்து சில மாதங்களுக்கு முன்பு சமந்தாவுக்கும், அவரது கணவரான நாக சைதன்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளதாகவும், அவர்கள் இருவரும் விரைவில் விவாகரத்து செய்யவிருப்பதாகவும் பல சர்ச்சைகள் எழுந்து இருந்தது.
இந்த நிலையில் தாங்கள் இருவரும் பிரிந்துவிட்டதாக சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் நேற்று தங்கள் சமூக வலைதளத்தில் அறிவித்து இருந்தனர். ஆனால், அதில் என்ன காரணத்திற்காக இருவரும் பிரிகின்றனர் என்பதை இருவருமே சொல்லவே இல்லை.
மாறாக தாங்கள் இருவரும் நண்பர்களாக தொடருவோம் என்றும் தங்களின் இந்த முடிவுக்கு நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் மீடியா என அனைவருமே தங்களின் இந்த முடிவுக்கும் எங்களின் பிரைவசிக்கும் மதிப்பு கொடுங்கள் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
வரும் 7-ம் தேதி இவர்களின் 4-வது திருமண நாள் கொண்டாடப்பட இருந்த நிலையில் இருவரும் பிரிந்துவிட்டதாக அறிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் சமந்தா மற்றும் தனது மகனின் விவாகரத்து குறித்து நடிகர் நாகர்ஜுனா மிகவும் முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து பதிவிட்டுள்ள அவர், “மிகவும் கனத்த இதயத்துடன் இதை நான் சொல்கிறேன். சமந்தாவிற்கும், சைத்தன்யாவிற்கும் இடையே நடந்தது ஒரு எதிர்பாராத விஷயம். ஒரு கணவன் மனைவிக்குள் நடக்கும் விஷயம் மிகவும் தனிப்பட்ட ஒரு விஷயம். சமந்தா மற்றும் சைதன்யா இருவரையுமே எனக்கு மிகவும் பிடிக்கும். என்னுடைய குடும்பம் சமந்தா உடன் இருந்த அழகான தருணங்களை என்றும் நினைவில் கொள்ளும். இருவரையும் கடவுள் ஆசீர்வதித்து அவர்களுக்கு வலிமையை கொடுக்கட்டும்..” என்று பதிவிட்டுள்ளார்.
The post மகன்-மருமகள் பிரிவு குறித்து நாகார்ஜூனாவின் வருத்தம் appeared first on Touring Talkies.
]]>The post ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ இன்று துவங்கியது..! appeared first on Touring Talkies.
]]>இந்தப் படத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா மூவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
படத்தின் வெற்றிக்கு இப்பொழுதே உத்திரவாதம் தருவதுபோல படத்தின் இசைப் பணியை இசையமைப்பாளர் அனிருத் துவங்கியிருக்கிறார்.
இளைஞர்களை ஈர்க்கும் பக்கா எண்டர்டெய்ன்மெண்ட் சினிமாக்களைத் தொடர்ந்து தந்து கொண்டிருக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவன் இப்படத்தை எழுதி இயக்குகிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று காலை பூஜையோடு துவங்கியது.
முதல் நாள் படப்பிடிப்பில் விஜய் சேதுபதி, இயக்குநர் விக்னேஷ் சிவன், தயாரிப்பாளர் லலித்குமார் உள்ளிட்ட படக் குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.பெரிய பட்ஜெட்டில் ஸ்ட்ராங் எண்டெர்மெயிண்ட் விஷயங்களோடு தயாராகும் இப்படம் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக இருக்கும் என்று உறுதியாக நம்பலாம்.
The post ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ இன்று துவங்கியது..! appeared first on Touring Talkies.
]]>