The post “தமிழ் சினிமா தயாரிப்பாளர்களை கதற வைக்கும் கதாநாயகிகள்” – ‘தீ இவன்’ இயக்குநர் பரபரப்பு பேச்சு appeared first on Touring Talkies.
]]>‘நவரச நாயகன்’ கார்த்திக் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ராதாரவி, சுமன்.J, சிங்கம் புலி, இளவரசு, சுகன்யா,‘சேது’ அபிதா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இப்படத்தில் கவர்ச்சி ராணி சன்னி லியோன் ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார்.
‘மேலே ஆகாயம் கீழே பாதாளம்…’ எனத் தொடங்கும் அந்த பாடலின் படப்பிடிப்பு சென்னையில் பிரமாண்ட பொருட் செலவில் அரங்கு அமைக்கப்பட்டு நேற்று படமாக்கப்பட்டது. படப்பிடிப்பு தளத்திலேயே படத்தின் டீசரையும் வெளியிட்டனர்.
இதனைத் தொடர்ந்து படக் குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான டி.எம்.ஜெயமுருகன் பேசும்போது, “ரஜினி, கமலுக்கு நிகராக நவரச நாயகன் கார்த்திக்கும் பெரிய நடிகர். அவரது முழு பரிமானத்தையும் ‘தீ இவன்’ படத்தில் பயன்படுத்தியிருக்கிறேன். ஒரு இடைவெளிக்கு பிறகு இப்படம் அவருக்கு திருப்புமுனையாக அமையும் என்று நம்புகிறேன்.
நமது தமிழ்ச் சமூகம் கலை, கலாச்சாரம், உறவுகளோடு கட்டமைக்கப்பட்டது. உலக நாடுகளே நமது கலாச்சாரத்தை வியந்து பார்க்கிறார்கள். பின்பற்றவும் செய்கிறார்கள் அப்படிப்பட்ட நமது கலாச்சாரம் இன்று சீரழிக்கப்பட்டு வருகிறது.
இது போன்ற போக்கு வருங்காலத்தில் இன்றைய தலைமுறையினரின் பின்னடைவுக்கு காரணமாக அமைந்துவிடக் கூடாது என்ற கருத்தையும், படத்தை எடுத்துள்ளேன். இதில் சன்னி லியோன் ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார்.
சன்னி லியோனை மும்பையில் சந்தித்து இப்படத்தின் கதையை சொன்னபோது, “தமிழ் கலாச்சாரத்தை காப்பது போன்ற கதையுள்ள இப்படத்தில் நான் இடம் பெறுவதை மகிழ்ச்சியுடன் ஏற்கிறேன்” என்றும் மேலும் இந்தப் படத்தின் ஹீரோ ‘நவரச நாயகன்’ கார்த்திகை பற்றி சொன்னவுடன் உடனே ஒத்துக் கொண்டார். இது அவர் தமிழ் சினிமா மேல் கொண்ட ஆர்வத்தை காட்டுகிறது.
பட்ஜெட் என்ன? நடிகர்கள் யார் என்றெல்லாம் பார்க்காமல் கதைக்காக அவர் ஒத்துக் கொண்டது அவரது நல்ல மனசை காட்டியது. இப்போதுள்ள தமிழ் சினிமா நடிகர், நடிகைகள் ஒரு படத்தில் நடிக்க சம்மதித்த பிறகு என்ன மாதிரியெல்லாம் சேட்டை பண்ணுகிறார்கள், தயாரிப்பாளர்கள் எவ்வளவு கந்தலாகி போகிறார்கள் என்பது எல்லோருக்குமே தெரியும்.
அப்படியொரு சூழ்நிலையில் ஹாலிவுட் நாயகியாக இருந்தும் எந்த ஆடம்பரமும் பந்தாவும் இல்லாமல் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்து சன்னி லியோன் நடித்துக் கொடுத்ததற்கு நன்றி சொல்கிறேன்.
அவர் அழகாக நடனமாடியுள்ள அந்தப் பாடலில் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன்பாகவே முடித்துக் கொடுத்துள்ளார். நடன இயக்குநர் காதல் கந்தாஸ் அருமையான நடன அமைப்பை செய்துள்ளார். ‘தீ இவன்’ படம் நல்ல பெயரை பெற்றுத் தரும். இந்த படமும், பாடலும் அனைவரையும் கவரும் என்று நம்புகிறேன்…” என்றார்.
The post “தமிழ் சினிமா தயாரிப்பாளர்களை கதற வைக்கும் கதாநாயகிகள்” – ‘தீ இவன்’ இயக்குநர் பரபரப்பு பேச்சு appeared first on Touring Talkies.
]]>The post ‘தீ இவன்’ படத்தில் நடனமாடியிருக்கும் சன்னி லியோன்..! appeared first on Touring Talkies.
]]>‘நவரச நாயகன்’ கார்த்திக் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ராதாரவி, சுமன்.J, சிங்கம் புலி, இளவரசு, சுகன்யா,‘சேது’ அபிதா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இப்படத்தில் கவர்ச்சி ராணி சன்னி லியோன் ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார்.
‘மேலே ஆகாயம் கீழே பாதாளம்…’ எனத் தொடங்கும் அந்த பாடலின் படப்பிடிப்பு சென்னையில் பிரமாண்ட பொருட் செலவில் அரங்கு அமைக்கப்பட்டு நேற்று படமாக்கப்பட்டது. படப்பிடிப்பு தளத்திலேயே படத்தின் டீசரையும் வெளியிட்டனர்.
இதனைத் தொடர்ந்து படக் குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது நடிகை சன்னி லியோன் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அவர் பேசும்போது, “குறுகிய கால இடைவெளியில் மீண்டும் சென்னைக்கு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சென்னைக்கு வருவதற்கு முன்பு ஒருவித அயர்ச்சியில் இருந்தேன்.
ஆனால், இந்தப் படத்தின் பாடலுக்கு ஆடியபோது ரொம்பவும் கூலாகிட்டேன். டான்ஸ் மாஸ்டர் மிக அழகாக நடன அசைவுகளை அமைத்துக் கொடுத்ததால் ரொம்ப எளிதாகவும், நன்றாகவும் நடனமாட முடிந்தது. படத்தின் ஒட்டு மொத்தக் குழுவினருக்கும் எனது நன்றியும், வாழ்த்தும்.
நான் எப்போதும் வேலை, வேலை என்று ஓடிக் கொண்டே இருக்கிறேன். அதனால் திரைப்படங்கள் பார்க்க நேரம் கிடைப்பதில்லை. நேரம் கிடைக்கும்போது பொழுதுபோக்கு அம்சமுள்ள படங்கள் பார்ப்பதுண்டு. ஆனால் அது இந்த மொழிதான் என்று இல்லை. கலைக்கு மொழி இல்லை.
நான் இந்தப் பாடல் காட்சியில் ஏன் நடித்தேன் என்பதை நீங்கள் படம் பார்க்கும்போது தெரிந்து கொள்வீர்கள். தயாரிப்பாளர் உள்ளிட்ட ஒட்டு மொத்தக் குழுவினருக்கும் எனது நன்றிகள்.
இன்றைக்கு தேசிய பத்திரிகையாளர் தினம். நீங்கள் இல்லாமல் நாங்கள் மக்களை சென்று சேர முடியாது. உங்க வேலை என்றைக்குமே நிற்காது. இந்த நாளில் பத்திரிகையாளர்களுக்கு எனது வாழ்த்துகளை சொல்லிக் கொள்கிறேன்” என்றார்.
இந்நிகழ்ச்சியில் ஒளிப்பதிவாளர் Y.N.முரளி, காதல் கந்தாஸ், முக்கிய காதாபாத்திரத்தில் நடித்துள்ள சுமன் J, தயாரிப்பாளார் நிர்மலா தேவி ஜெயமுருகன் ஆகியோர் உடனிருந்தனர்.
இறுதியில் ‘தீ இவன்’ படத்தின் டீசரை சன்னி லியோன் வெளியிட்டார்.
The post ‘தீ இவன்’ படத்தில் நடனமாடியிருக்கும் சன்னி லியோன்..! appeared first on Touring Talkies.
]]>The post “சன்னி லியோன் நடித்ததால்தான், நானும் நடித்தேன்” – நடிகர் சதீஷின் ஜொள்ளு..! appeared first on Touring Talkies.
]]>நடிகை சன்னி லியோன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் சதீஷ் மற்றும் தர்ஷா குப்தா முக்கிய பாத்திரங்களில் நடிக்க, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ரவி மரியா, ரமேஷ் திலக், அர்ஜுனன், தங்கதுரை ஆகியோருடன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர்.
ஜாவித் ரியாஸ் இசையமைக்க, தீபக் D. மேனன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இயக்குநர் யுவன் இயக்கத்தில், வரலாற்று பின்னணியில் ஹாரர், காமெடி கலந்து இந்தப் படம் தயாராகியுள்ளது.
விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று திரை பிரபலங்கள் கலந்து கொள்ள பிரம்மாண்டமாக அரங்கேறியது.
இந்த விழாவில் நடிகர் சதீஷ் பேசும்போது, “இந்தப் படத்தின் கதையை இயக்குநர் கூறியபோது, அதில் ஒரு முக்கிய கதாபாத்திரம் இருந்தது. அதில் சன்னி லியோன் நடிக்கிறார் என்ற உடன், நான் இந்த படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டேன். சன்னி லியோன் ஒரு சிறந்த மனித நேயம் மிக்கவர். முதலில் அவரை நெருங்கவே நாங்கள் தயங்கி கொண்டு இருந்தோம். ஆனால் அவரோ மிக இயல்பாக எங்களிடம் பழகினார். அவர் இந்த படத்தில் மிகப் பெரிய அர்ப்பணிப்பை கொடுத்துள்ளார். சிறப்பாக நடித்துள்ளார். அனைவரும் கடின உழைப்பை கொடுத்து, இந்த படத்தை உருவாக்கியுள்ளோம். இந்த படம் உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்..” என்றார்.
இந்த விழாவில் நடிகை சன்னி லியோன் பேசும்போது, “தமிழகம் வந்து உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. நீங்கள் கொடுக்கும் வரவேற்பும், அன்பும் எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. இந்த ‘OMG’ படத்திற்காக அனைவரும் கடின உழைப்பையும், அர்ப்பணிப்பையும் கொடுத்துள்ளோம்.
இந்தப் படத்தை பார்க்க உங்களது நேரத்தையும் பணத்தையும் நீங்கள் ஒதுக்குவதற்கு நான் நன்றி கூறிக் கொள்கிறேன். எங்களது கனவை நீங்கள் பார்க்க போகிறீர்கள். உங்களது அன்பும் ஆதரவும் எங்களுக்கு தேவை..” என்றார்.
இயக்குநர் யுவன் பேசும்போது, “இந்தப் படத்தின் தயாரிப்பாளர் மிக தீவிரமான சினிமா ரசிகர். அவரிடம் இந்தக் கதையை சொன்ன போதே இந்தப் படத்தை வேறு உயரத்திற்கு கொண்டு சென்று விடுவார் என நம்பிக்கை வந்தது.
இந்தப் படம் சன்னி லியோன் வந்த பிறகுதான் மிகப் பெரிய படமாக மாறியது. அவர் மொழி தெரியாமல் மிக அர்ப்பணிப்புடன் கற்றுக் கொண்டு நடித்தார். அவருடன் வேலை பார்க்க மிக எளிதாக இருந்தது. சதீஷ் மிக அற்புதமாக நடித்துள்ளார். படத்தில் அனைவருமே கடினமாக உழைத்துள்ளார்கள். கண்டிப்பாக அனைவரும் திரும்ப திரும்ப பார்க்கும்படியான படமாக இருக்கும்…” என்றார்.
The post “சன்னி லியோன் நடித்ததால்தான், நானும் நடித்தேன்” – நடிகர் சதீஷின் ஜொள்ளு..! appeared first on Touring Talkies.
]]>The post படங்களில் குத்தாட்டம் போட சன்னி லியோன் விதிக்கும் முக்கியமான நிபந்தனை..! appeared first on Touring Talkies.
]]>தொடர்ந்து சில ஆண்டுகளாக பாலிவுட்டிலும், தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்து வருகிறார். குத்தாட்டமும் ஆடி வருகிறார். இந்த நிலையில் சன்னி லியோன் திரைப்படங்களில் கவர்ச்சி நடனமாடும்போது படக் குழுவினருக்கு ஒரு முக்கியமான நிபந்தனையை விதித்துள்ளாராம்.
இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், “நான் தொடர்ந்து பல படங்களில் குத்துப் பாடல்களுக்கு கவர்ச்சியாக நடனமாடி வருகிறேன். என்னைப் பற்றி யாருக்கும் தெரியாத விஷயம் ஒன்று இருக்கிறது. படப்பிடிப்பில் நான் கவர்ச்சி நடனம் ஆடும்போது சுற்றுப்புறத்தில் குழந்தைகள் இருக்கக்கூடாது என்று கண்டிப்பாக கூறியிருக்கிறேன். ஏனென்றால் குத்துப் பாடல் நடனத்தில் நிச்சயம் வயது வந்தோர் காட்சிகள் இருக்கும். அப்போது சுற்றுப்புறத்தில் குழந்தைகள் இருந்தால் நானே தலையிட்டு படப்பிடிப்பை நிறுத்திவிடுவேன்” என்றார்.
அட.. சூப்பரா இருக்குல்ல..!
The post படங்களில் குத்தாட்டம் போட சன்னி லியோன் விதிக்கும் முக்கியமான நிபந்தனை..! appeared first on Touring Talkies.
]]>The post கார்த்திக் நடிக்கும் ‘தீ இவன்’ படத்தில் சன்னி லியோன் நடனமாடுகிறாராம்..! appeared first on Touring Talkies.
]]>இந்தப் படத்தில் நவரச நாயகன் கார்த்திக், சுகன்யா, ராதாரவி, சுமன்.j, ஸ்ரீதர், ஹேமந்த் மேனன், அபிதா, அஸ்மிதா, யுவராணி, தீபிகா, சிங்கம் புலி, ஜான் விஜய், சரவண சக்தி, இளவரசு, சுப்புராஜ், விஜய் கணேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – Y. N.முரளி, படத் தொகுப்பு – மொகமத் இத்ரிஸ், பின்னணி இசை – A.J.அலி மிர்ஸா, தயாரிப்பு மேற்பார்வை – M.அப்பு, பத்திரிகை தொடர்பு – மணவை புவன், தயாரிப்பு – நிர்மலாதேவி ஜெயமுருகன்.
‘ரோஜா மலரே’, ‘அடடா என்ன அழகு’, ‘சிந்துபாத்’ ஆகிய படங்களை இயக்கி தயாரித்த T.M.ஜெயமுருகன் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் மற்றும் பாடல்கள் எழுதி இசையமைத்து இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் இடம் பெறும் ஒரு பாடலுக்கு நடிகை சன்னி லியோன் நடனமாட உள்ளாராம். இது பற்றி இயக்குநர் T.M. ஜெயமுருகன் பேசும்போது, “நம் தமிழ் சமூகம் கலை மற்றும் கலாச்சாரம், சமூக உறவுகளை கொண்டு கட்டமைக்கப்பட்டது. ஆனால் இன்று அவைகள் கட்டுப்பாடுகளை இழந்து வருகிறது. இன்றைய இளம் தலைமுறைக்கு நம் உறவையும், கலாச்சாரத்தையும் கொண்டுசெல்லும்விதமாக இந்தப் படம் உருவாக்கப்படுகிறது.
இந்தப் படத்தில் இடம் பெற உள்ள ‘மேலே ஆகாயம்; கீழே பாதாளம்; நடுவில் ஆனந்தம்’ என்ற பாடலுக்கு நடிகை சன்னி லியோனை நடனமாட வைக்க வேண்டும் என்று வெகு நாட்கள் காத்திருந்தோம். அந்த ஆசை தற்போது நிஜமாகியுள்ளது.
நேற்று முன் தினம் மும்பை சென்று நடிகை சன்னி லியோனை நேரில் சந்தித்து படம் பற்றி கூறினேன். கதை மற்றும் நடிகர்களை கேட்டவுடன் அந்த பாடலுக்கு நடமாட ஒப்புக் கொண்டார். அத்தோடு பாடல் வரிகள் சிறப்பாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்தப் பாடலின் படப்பிடிப்பு வரும் நவம்பர் 15-ம் தேதி சென்னையில் மிக பிரம்மாண்டமாக செட் அமைத்து நடைபெற உள்ளது…” என்றார் இயக்குநர் T.M.ஜெயமுருகன்.
The post கார்த்திக் நடிக்கும் ‘தீ இவன்’ படத்தில் சன்னி லியோன் நடனமாடுகிறாராம்..! appeared first on Touring Talkies.
]]>The post சன்னி லியோனின் தெறிக்கவிடும் ‘ஓ மை கோஸ்ட்’ டீசர்! appeared first on Touring Talkies.
]]>இதில் நாயகியாக பிரபல பாலிவுட் நடிகை ‘ஸ்டைலிஷ் தலைவி’ சன்னி லியோன் நடிக்கிறார். முக்கிய வேடங்களில் நகைச்சுவை நடிகர்கள் யோகி பாபு, சதீஷ் நடிக்கிறார்கள். இவர்களுடன் ரமேஷ் திலக், ரவி மரியா, அர்ஜுன், தர்ஷா குப்தா உட்பட ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
மலையாள சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளரான தீபக்மேனன் ஒளிப்பதிவு செய்து உள்ளார். ஜாவித் ரியாஸ் இசையமைத்திருக்கிறார். இவர் ‘மாநகரம்’, ‘யார் இவர்கள்’ உட்பட ஏராளமான படங்களுக்கு இசையமைத்துள்ளார். பாடல்களை பா.விஜய் எழுதியுள்ளார். சண்டைக் காட்சிகளை ‘கில்லி’ சேகர் வடிவமைத்திருக்கிறார். படத் தொகுப்பை அருள் சித்தார்த் ஏற்றுள்ளார். கலை இயக்குநர்களாக ராம்-ரமேஷ் பணியாற்றுகிறார்கள். பிரபல பாலிவுட் நடன கலைஞர் விஷ்ணு தேவா நடன காட்சிகளை அமைத்துள்ளார். D.வீரசக்தி, K.சசிகுமார் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறார்கள்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் R.யுவன். இவர் ஏற்கனவே ‘சிந்தனை செய்’ என்ற படத்தை நடித்து இயக்கியவர்.
படத்தைப் பற்றி தயாரிப்பாளர்கள் வீரசக்தி மற்றும் சசிகுமார் பேசும்போது, “வரலாற்று பின்னணி படம் என்றாலே பெரிய பட்ஜெட் படமாக இருக்கும். அந்த வகையில் இந்தப் படத்தை நாங்கள் பிரம்மாண்டமாக தயாரித்து உள்ளோம்.
பாலிவுட் ஸ்டார் சன்னி லியோன் ஒரு மிகப் பெரிய நடிகை. தமிழ் சினிமாவில் ஏற்கனவே பல இயக்குநர்கள், தயாரிப்பு நிறுவனங்கள் அவரை நடிக்க அழைத்தபோது அவர் ஏன் ஆர்வம் காண்பிக்கவில்லை என்று அவரை நேரில் சந்தித்தபோது தெரிந்தது.
இந்தப் படத்தின் கதையை கேட்கும்போது எங்களுடைய நன்கு வடிவமைக்கப்பட்ட திட்டங்கள் அவருக்கு பிடித்திருந்த காரணத்தினால் உடனே நடிக்க சம்மதித்தார்.
படப்பிடிப்புக்கு சிறந்த ஒத்துழைப்பு கொடுத்ததோடு படத்தின் எல்லாவிதமான புரமோஷனுக்கும் வருவதாக சொல்லி இருக்கிறார். இந்தப் படத்துக்குப் பிறகு சன்னி லியோனை தமிழ் சினிமா கொண்டாடும்.
அவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் இருப்பதால் வெளிப்புற படப்பிடிப்பு என்பது சாத்தியம் இல்லாத ஒரு விஷயமாக இருந்தது. படத்தின் பெரும்பாலான காட்சிகளை மும்பையில் பல அரங்குகளை அமைத்து படமாக்கினோம்.” என்றார்கள்.
படத்தைப் பற்றி இயக்குநர் R.யுவன் பேசும்போது, “இது ரசிகர்களை முழுக்க முழுக்க மகிழ்விக்கும் படமாக இருக்கும். இந்தப் படம் திகில் படமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், நகைச்சுவைக்கு முக்கியத்துவம் உள்ள படமாக இருக்கும். அதற்காக திரைக்கதையில் அதிக முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறோம்.
இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரமாக ராணி கதாபாத்திரம் வருகிறது. ராணி கேரக்டருக்கு யார் பொருத்தமாக இருப்பார்கள் என்று யோசித்தபோது சன்னி லியோன்தான் பொருத்தமாக இருப்பார் என்று தோன்றியது. கதை எழுதும்போதும் அவர்தான் என்னுடைய முதல் தேர்வாக இருந்தார்.
சன்னி லியோனை மும்பையில் சந்தித்து கதை சொன்னேன். அப்போது அவர் சொன்ன முதல் நிபந்தனை ‘எனக்கு ஆங்கிலத்தில் கதை சொல்ல வேண்டும்’ என்றார். அதற்காக நான் ஆங்கிலம் கற்றுக் கொண்டேன். சுமார் ஒரு மணி நேரம் ஆங்கிலத்தில் கதை சொன்னேன். அவருக்கு புரிந்ததா, புரியவில்லையா என்று தெரியவில்லை. ஆனால் நான் கதை சொல்லும்போது ஆர்வத்தோடு ரசித்து கேட்டார். அது மட்டுமல்ல, ‘நான் நடித்த படங்களில் இது வித்தியாசமான படமாக இருக்கும்’ என்று சொன்னார்.
படப்பிடிப்பில் அவருடைய முழு ஒத்துழைப்பு கிடைத்தது. காலையில் 9 மணிக்கு படப்பிடிப்பு என்றால் அதற்கு முன்பாகவே ஒப்பனை செய்து கொண்டு ஆயத்தமாக வந்து விடுவார். ஒரு முறை கேரவனை விட்டு வெளியே வந்து விட்டால் அன்றைய காட்சிகள் முழுவதையும் நடித்து கொடுத்த பிறகே மீண்டும் கேராவேனுக்குள் செல்வார். ஒரு நாளின் துவக்கத்தில் இருக்கும் அதே உற்சாகம் நாள் முழுவதும் அவரிடத்தில் இருப்பதை பார்க்க முடியும். எந்த ஒரு காட்சியாக இருந்தாலும் அந்த காட்சிக்கு அதிகபட்ச உழைப்பைக் கொடுக்க ஆயத்தமாக இருப்பார்.
யோகி பாபு பிளாஷ்பேக் காட்சிகளில் மன்னர் காலத்தில் வருகின்ற ஒரு மந்திரி கதாபாத்திரம் செய்திருக்கிறார். சதீஷ் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் வருகிறார். அவருடைய கதாபாத்திரம் மிகவும் புதியதாக இருக்கும்.
இது முழுக்க முழுக்க ரசிகர்களை மகிழ்விக்கும் படமாகவும் விஷுவலுக்கு அதிக முக்கியத்துவம் தரக்கூடிய படமாக இருக்கும். இது பிளாக் காமெடி படமாக இருந்தாலும் குலுங்கி குலுங்கி சிரிக்கும்படியான நகைச்சுவை காட்சிகள் அதிகம் இடம் பெற்ற படமாக இருக்கும்” என்றார்.
The post சன்னி லியோனின் தெறிக்கவிடும் ‘ஓ மை கோஸ்ட்’ டீசர்! appeared first on Touring Talkies.
]]>