The post இயக்குநர் சுந்தர்.சி-க்கு கவுரவ டாக்டர் பட்டம்..! appeared first on Touring Talkies.
]]>அவ்னி சினி மேக்ஸ் நிறுவனத்தின் சார்பில் குஷ்பு மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் ஏ.சி.எஸ். அருண்குமார் இணைந்து தயாரித்துள்ள படம் ‘காபி வித் காதல்’.
இயக்குநர் சுந்தர்.சி தனது வழக்கமான கலகலப்பான பாணியில் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் கதாநாயகர்களாக நடிக்க மாளவிகா சர்மா, ரைசா வில்சன், அம்ரிதா ஐயர், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
மேலும் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், திவ்யதர்ஷினி (டிடி), விச்சு விஸ்வநாத், சம்யுக்தா ஷண்முகம், அருணா பால்ராஜ், பேபி விர்த்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் இசை மற்றும் டிரெயிலர் வெளியீட்டு விழா நேற்று காலை லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த விழாவில் இந்தப் படத்தின் தயாரிப்பாளரும் புதிய நீதிக் கட்சி தலைவருமான ஏ.சி.சண்முகம் பேசும்போது, “நானும் சுந்தர்.சியும் ‘ரிஷி’ பட சமயத்தில் முதன்முதலாக விமானத்தில்தான் சந்தித்தோம். அப்போதிலிருந்து எங்களிடையே நல்ல நட்பு தொடர்ந்து வருகிறது.
‘அரண்மனை-3’ படத்தை அவரை நம்பி ஒப்படைத்தேன். நல்ல லாபம் கிடைத்தது. இப்போது இரண்டாவது முறையாக ‘காபி வித் காதல்’ படத்தையும் சிறப்பாகவே எடுத்துக் கொடுத்திருக்கிறார். அடுத்து நாங்கள் இருவரும் மூன்றாவதாக இணையும் படம் மிகப் பெரிய படமாக இருக்கும். இந்தப் படத்தில் ‘ரம்பம்பம்’ பாடலில் குஷ்புவும் ஆடியிருக்கலாம் என்பது என்னுடைய எண்ணம்.
இந்தப் இடத்தில் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிடுகிறேன். இந்தப் படத்தில் பணியாற்றியுள்ள 200 தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு என்னுடைய மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை தரும்விதமாக அனைவருக்குமே இலவச சிகிச்சை கார்டுகளை வழங்க இருக்கிறேன். சாதாரண சிகிச்சை முதல், அறுவை சிகிச்சைவரை இந்த 200 பேரின் குடும்பத்துக்குமே இலவசம்தான்.
அதேபோல என்னுடைய கல்லூரியில் படித்துள்ள 4000 மாணவர்களுக்கு அடுத்த மாதம் பட்டமளிப்பு விழா நடைபெற இருக்கிறது. அந்த நிகழ்வின்போது இயக்குநர் சுந்தர்.சி-யின் பன்முகத் தன்மை கொண்ட உழைப்பையும், பணியையும் பாராட்டி அவருக்கு ‘கௌரவ டாக்டர்’ பட்டம் வழங்க இருக்கிறோம்” என்று கூறினார்.Our Score
The post இயக்குநர் சுந்தர்.சி-க்கு கவுரவ டாக்டர் பட்டம்..! appeared first on Touring Talkies.
]]>The post “பொண்டாட்டி நினைப்பே இல்லை” – சுந்தர்.சி-யை கடிந்து கொண்ட குஷ்பூ..! appeared first on Touring Talkies.
]]>இயக்குநர் சுந்தர்.சி தனது வழக்கமான கலகலப்பான பாணியில் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் கதாநாயகர்களாக நடிக்க மாளவிகா சர்மா, ரைசா வில்சன், அம்ரிதா ஐயர், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
மேலும் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், திவ்யதர்ஷினி (டிடி), விச்சு விஸ்வநாத், சம்யுக்தா ஷண்முகம், அருணா பால்ராஜ், பேபி விர்த்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
தமிழகமெங்கும் இந்தப் படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட இருக்கிறது. வரும் அக்டோபர் 7-ம் தேதி இந்தப் படம் வெளியாக உள்ள நிலையில் இந்தப் படத்தின் டிரெயிலர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று காலை சென்னையில் லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்தப் படத்தின் தயாரிப்பாளரான நடிகை குஷ்பு பேசும்போது, ‘நான் ஒரு தயாரிப்பாளராக இங்கே இருக்க, எனது கணவர் சுந்தர்.சி.தான் காரணம். ஒரு தயாரிப்பாளராக சொல்கிறேன். அவரை நம்பி தாராளமாக காசு போடலாம்.. தயாரிப்பாளர்கள் நிம்மதியாக போய் தூங்கலாம்.
இந்தப் படத்தை 35 நாட்கள் ஊட்டியில் படமாக்கினார்கள். ஒரு நாள்கூட என்னை “படப்பிடிப்பிற்கு வா” என சுந்தர்.சி அழைத்ததே இல்லை. சுத்தமா பொண்டாட்டியை மறந்திட்டாரு. என்னுடைய கல்யாண நாள் வருதேன்னு நினைச்சு நானாத்தான் அவருக்கு போன் செய்து நான் கண்டிப்பா ஊட்டி வர்றேன்.. மூணு நாள் தங்கப் போறேன்னு சொல்லிட்டுத்தான் ஊட்டிக்கு வந்தேன்.
இந்தப் படத்தில் பிரதாப் போத்தன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் இந்த நேரத்தில் இல்லாதது மிகுந்த மன வருத்தத்தை தருகிறது. இந்தப் படத்தில் நான் நடித்த ‘ரம்பம்பம்’ பாடலை பயன்படுத்தியுள்ளார்கள். ஆனால், அதில் ஆடுவதற்கு என்னை அழைக்கவில்லை. நாளை பாடலை படமாக்க இருக்கிறார்கள் என்றால் சென்னையில் இருக்கும் என்னிடம் அதற்கு முதல் நாள்தான் இந்தப் பாடலை படமாக்கப் போகிறோம் என்றார் சுந்தர்.சி.
அப்போது மேடையின் கீழிருந்து குறுக்கிட்ட டிடி, “நாங்க ஏற்கெனவே சுந்தர் ஸார்கிட்ட கேட்டப்போ நீங்கதான் வரலைன்னு சொல்லிட்டீங்கன்னு சொன்னாரு…” என்று உண்மையை உடைத்தார். தொடர்ந்து பேசிய நடிகைகள் “மேடமும் நடிச்சிருந்தா இன்னும் நல்லாயிருந்திருக்கும்…” என்று சொல்ல குஷ்பூ மேடையிலேயே துள்ளிக் குதித்தார்.
இதையடுத்து மேடைக்கு வந்த சுந்தர்.சி. “அவங்க அந்தப் பாட்டுக்கு ஆடுனதை ஏற்கனவே எல்லாரும் பார்த்துட்டாங்க.. அதனால்தான் வேணாம்ன்னு நினைச்சேன். இப்போ என்ன.. மறுபடியும் அவங்களை ஆட வைச்சு மீடியாவைத் தவிர மத்தவங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்..” என்று கூறினார்.
The post “பொண்டாட்டி நினைப்பே இல்லை” – சுந்தர்.சி-யை கடிந்து கொண்ட குஷ்பூ..! appeared first on Touring Talkies.
]]>The post “என் ஆசை இந்தப் படத்தில்தான் நிறைவேறியது” – சுந்தர்.சி-யின் சந்தோஷம் appeared first on Touring Talkies.
]]>இயக்குநர் சுந்தர்.சி தனது வழக்கமான கலகலப்பான பாணியில் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் கதாநாயகர்களாக நடிக்க மாளவிகா சர்மா, ரைசா வில்சன், அம்ரிதா ஐயர், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
மேலும் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், திவ்யதர்ஷினி (டிடி), விச்சு விஸ்வநாத், சம்யுக்தா ஷண்முகம், அருணா பால்ராஜ், பேபி விர்த்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் இசை மற்றும் டிரெயிலர் வெளியீட்டு விழா நேற்று காலை லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த விழாவில் இயக்குநர் சுந்தர்.சி பேசும்போது, “நீண்ட நாட்களாகவே ஃபீல்குட் படம் ஒன்றை இயக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். படம் பார்க்கும் ரசிகர்கள் அனைவரும் படம் முழுவதும் ஒரு புன்சிரிப்புடன் படத்தைப் பார்க்க வேண்டும் என நினைத்தேன். ‘உள்ளத்தை அள்ளித் தா’ படத்தை அப்படித்தான் துவங்கினேன். அதில் முதலில் நக்மாதான் கதாநாயகியாக நடிப்பதாக இருந்தது. பின்னர் கதை வேறுவிதமாக மாறிவிட்டது.
அதேபோல்தான் ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தையும் அதேபோல் பீல் குட் படமாக எடுக்கவேண்டும் என்றுதான் ஆரம்பித்தேன். ஆனால் சந்தானம் வந்ததும் படத்தின் ரூட்டே மாறிவிட்டது. இந்த முறை இந்த ‘காபி வித் காதல்’ படத்தில் என்னுடைய ஆசை நிறைவேறிவிட்டது.
மூன்றுவிதமான குணாதிசயங்களுடன் உள்ள மூன்று சகோதரர்கள், அவர்களுக்கு இடையே ஏற்படும் காதல் மற்றும் குடும்ப பிரச்சினை ஆகியவடரை மையப்படுத்தி இந்த படத்தை உருவாக்கியுள்ளோம்.
இந்தப் படத்தில் ஆறு கதாநாயகிகள் நடித்துள்ளனர். நடிகர் யோகிபாபுவுக்கு இதில் ஸ்டைலிஷான கதாபாத்திரம். இந்த மூன்று கதாநாயகர்களில் ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ யாரென்று சொல்ல வேண்டுமென்றால் ஜீவாவை சொல்லலாம்.
இதுவரை நான் பணியாற்றிய நடிகைகளிலேயே சவாலான நடிகை என்றால் அது சம்யுக்தாதான். இந்தப் படத்தில் அவர் கண் சிமிட்டாமல் நடிக்க வேண்டிய ஒரு காட்சியை படமாக்குவது எனக்கு மிகப் பெரிய சவாலாக இருந்தது. அதேபோல ரைசாவை பார்க்கும்போது யாரிடமோ அட்ரஸ் கேட்டு வந்தவர்போல காட்சியளிப்பார். ஆனால் கேமரா முன் வந்துவிட்டால் அந்தக் கதாபாத்திரமாகவே மாறிவிடுவார். அம்ரிதாவை பொருத்தவரை நம்மைவிட இன்னொரு நடிகைக்கு அதிக காட்சிகள் கொடுக்கிறார்களோ என்கிற எண்ணம் ஓடிக் கொண்டே இருப்பது போல எந்நேரமும் ஒரு சந்தேகத்திலேயே இருப்பார்.
அதேபோல ஆக்சன் படத்தில் ஹீரோக்களுக்கு அடிபடுவது பற்றி கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் ரொமாண்டிக் படத்தின் கதாநாயகி அடிபடுவது என்பது புதுசாகத்தான் இருக்கும். அது வேறு யாருமல்ல மாளவிகா சர்மாதான். டேமேஜ் ஹீரோயின் என்றுகூட சொல்லலாம். அவர் ஒரு நாள் இருந்தாலும்கூட அது பற்றி எல்லாம் அலட்டிக் கொள்ளாமல் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார்.
இந்தப் படத்தில் நடித்த கதாபாத்திரங்களில் முக்கியமாக இடம் பெற்றுள்ள அந்த குழந்தை நட்சத்திரம்தான் படத்தின் திருப்பு முனை கதாபாத்திரம். நானும் யோகிபாபுவும் பேசிக் கொள்ளும்போதுகூட அந்த குழந்தையின் அப்பா, அம்மா நமக்காகவே புள்ளைய பெத்திருக்காங்களோ என்றுதான் பேசிக் கொள்வோம்.
படத்தில் வரும் அத்தனை கதாபாத்திரங்களையும் இணைக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் டிடி. இந்தக் கதாபாத்திரத்தை மட்டும் எழுதும்போது டிடியை தவிர வேறு யாரையும் நான் யோசிக்கவில்லை. காலில் அடிபட்டு இருந்த நிலையிலும்கூட கஷ்டப்பட்டு நடனமாடினார்” என்றார்.
The post “என் ஆசை இந்தப் படத்தில்தான் நிறைவேறியது” – சுந்தர்.சி-யின் சந்தோஷம் appeared first on Touring Talkies.
]]>The post “பிருந்தா நிஜ வாழ்க்கையிலேயே ஆக்ஷன் டைப்தான்” – தோழி குஷ்பூவின் பாராட்டு appeared first on Touring Talkies.
]]>இந்த விழாவில் நடிகர் ஆர்யா, இயக்குநர்கள் கே.பாக்யராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், ராதாகிருஷ்ணன் பார்த்திபன், தேசிங்கு பெரியசாமி, ரவியரசு, நடிகைகள் குஷ்பூ, பூர்ணிமா பாக்யராஜ், கலா மாஸ்டர் ஆகியோர் இவ்விழாவின் சிறப்பு விருந்தினர்களாக பங்கு பெற்றனர்.
இவ்விழாவில் நடிகர் ஆர்யா பேசும்போது, “நான் பிருந்தா மாஸ்டருடன் பல படங்களில் பணி புரிந்துள்ளேன். அவருடைய நிஜ கதாபாத்திரம் ஆக்ஷனோடுதான் இருக்கும். அது இந்தப் படத்தில் பிரதிபலித்து இருக்கிறது. பவர்புல்லான ஆக்ஷன் காட்சிகள் இந்தப் படத்தில் இருக்கிறது. படத்தின் டீசரில் ஆக்சன் காட்சிகள் சிறப்பாக இருக்கிறது. தயாரிப்பாளர் சிபு, எல்லாவற்றிலும் தனித்துவத்தை எதிர்பார்க்கும் ஒருவர், இந்தப் படம் அவர் நினைத்தது போல் இருக்கும். இந்த படத்திற்காக நான் ஆவலோடு காத்திருக்கிறேன். ஒட்டு மொத்த படக் குழுவிற்கும் எனது வாழ்த்துக்கள்.” என்றார்.
இயக்குநர் கௌதம் மேனன் பேசும்போது, “பிருந்தா ஒரு மான்ஸ்டர், என்னுடைய அனைத்து படங்களிலும் பாடல்கள் சிறப்பாக வர அவரும் ஒரு காரணம். ‘வேட்டையாடு விளையாடு‘ படத்தில் வரும் ‘கற்க கற்க’ பாடலில் வரும் ஆக்ஷன் பகுதிகளை அவர்தான் இயக்கினார். அதனால் அவர் ஆக்ஷன் திரைப்படத்தை உருவாக்குகிறார் என்பதில் எனக்கு எந்த ஆச்சர்யமில்லை, அவர் கண்டிப்பாக பெரிய இடத்தை தொடுவார். படக் குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்.” என்றார்.
இயக்குநர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் பேசும்போது, “ஒரு டீசர் மூலமாக கதாபாத்திரத்தை வெளிக்காட்டியது படத்தை பார்க்க வைக்கும் ஆவலை தூண்டுகிறது. பிருந்தா மாஸ்டருடன் பணிபுரிய எனக்கு பயமாக இருக்கும். வெவ்வேறு வகையான கதைக் களத்தை இயக்குநர் பிருந்தா தேர்ந்தெடுத்து இருப்பது ஆச்சரியத்தை தருகிறது. நடிகர்கள் அனைவரும் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர். இந்தப் படத்தில் பங்கு பெற்ற அனைத்து தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்“ என்றார்.
நடிகை குஷ்பூ பேசும்போது, “பிருந்தாவால் கண்டிப்பாக ஆக்ஷன் காட்சிகளை சுலபமாக எடுக்க முடியும், அவர் அதற்காகவே பழக்கப்பட்டவர். பிருந்தா மாஸ்டர்தான் உண்மையான தக். பிருந்தா சிறப்பானதை தவிர வேறு எதையும் கொடுக்க மாட்டார். ஒரு பெண் இயக்குநரால் இப்படி ஒரு படத்தை கொடுக்க முடியுமா என்ற பேச்சை அவர் உருவாக்குவார். படத்தின் நடிகர்கள் அனைவரும் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர். அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை கூறிக் கொள்கிறேன்.“ என்றார்.
இயக்குநர் கே.பாக்யராஜ் பேசும்போது, “படத்தின் டீசரில் ஆக்ஷன் திரைப்படத்திற்குண்டான அனைத்து அம்சங்களும் இருக்கிறது. இந்தப் படம் ‘குண்டர்கள்’ எனப்படும் ரவுடிகளை பற்றிய கதை என்றுதான் தெரிகிறது.
பிருந்தா மாஸ்டரின் முதல் படம் காதல் படமாக இருந்தது. இப்போது அவரது இரண்டாவது படம், அதற்கு நேர் எதிராக ஆக்ஷன் படமாக இருக்கிறது. இது அவர் பல வகையான திரைப்படங்களை எடுக்க விரும்புகிறார் என்று காட்டுகிறது.
படத்தின் அனைத்து தொழில் நுட்பக் கலைஞர்களும் கடின உழைப்பை கொடுத்துள்ளனர். டீசர் பார்க்கும்போது படம் பார்க்க வேண்டும் என்ற ஆவல் வருகிறது. இந்தப் படத்தின் வெற்றி விழாவில் சந்திக்கலாம்..” என்றார்.
நடிகர் ஆர்.கே.சுரேஷ் பேசும்போது, “தயாரிப்பாளர் சிபுவிற்கு எனது நன்றிகள். அவர் எல்லாவற்றிலும் அதிகமாக உழைப்பை தரும் ஒருத்தர். படத்தின் ஹீரோ ஹிருது, குமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு நபர் போல மாறி, படப்பிடிப்பு தளத்திற்கு வந்தார். அவருடைய அர்ப்பணிப்பு அவருக்கு பல வெற்றிகளை கொடுக்கும். இயக்குநர் பிருந்தா கடின உழைப்பை கொடுக்க கூடியவர், அவரது வேகம் எல்லோரையும் ஊக்கப்படுத்தும். இந்த திரைப்படம் ஒரு வித்தியாசமான கதைக்களமாக இருக்கும். என்னுடன் இந்த திரைப்படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர்களுக்கும் எனது நன்றிகளும், வாழ்த்துக்களும் தெரிவித்து கொள்கிறேன்.” என்றார்.
நடிகர் ஹிருது ஹரூன் பேசும்போது, “எனக்கு இந்த வாய்ப்பினையளித்த இயக்குநர் பிருந்தா அவர்களுக்கு நன்றி. படத்தின் தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும், உதவி இயக்குநர்களுக்கும் எனது நன்றியை கூறிக் கொள்கிறேன். இந்தப் படத்தின் கதாபாத்திரத்தை சிறப்பாக உருவாக்க அனைவரும் அதிக உழைப்பை கொடுத்துள்ளனர். படத்திற்கு உங்கள் ஆதரவு தாருங்கள்.” என்றார்.
தயாரிப்பாளர் ரியா சுபு பேசும்போது, “தக்ஸ்’ படத்தின் கதாப்பாத்திரங்களை வெளியிடும் இந்த நிகழ்ச்சிக்கு தமிழ் சினிமாவின் முக்கிய பிரமுகர்கள் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
ஒரு இயக்குநராக ஒரு சிறந்த படைப்பை உருவாக்கியுள்ள இயக்குநர் பிருந்தாவிற்கு எனது வாழ்த்துகள். பெண்களுக்கு உத்வேகம் கொடுக்கும் வகையில் அவருடைய வளர்ச்சி இருக்கிறது, அது எனக்கும் ஒரு உத்வேகம் அளிக்கிறது.
படத்தின் தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் சிறப்பான பணியை அளித்து சிறந்த படத்தை உருவாக்கியுள்ளோம். படத்தை பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள். நன்றி.” என்றார்.
இயக்குநர் பிருந்தா மாஸ்டர் பேசும்போது, “எனது முதல் படமான ‘ஹே சினாமிகா’வில் இருந்து வேறு ஒரு படத்தை பண்ண வேண்டும் என்று நினைத்து இந்தப் படத்தை உருவாக்கியுள்ளேன். எனது தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும், உதவி இயக்குநர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றி கூறிக் கொள்கிறேன். இந்த படத்தை எடுக்க எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர் சிபு அவர்களுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். அனைவருக்கும் நன்றி.“ என்றார்.
The post “பிருந்தா நிஜ வாழ்க்கையிலேயே ஆக்ஷன் டைப்தான்” – தோழி குஷ்பூவின் பாராட்டு appeared first on Touring Talkies.
]]>The post நடிகர் சங்கத் தேர்தல்-செயற்குழு உறுப்பினர்களில் குஷ்புவுக்கு அதிக ஓட்டு..! appeared first on Touring Talkies.
]]>நிர்வாகப் பதவிகளுக்குப் போட்டியிட்ட நாசர்-விஷால் தலைமையிலான பாண்டவர் அணி முழுமையாக வெற்றி பெற்றுள்ளது.
மேலும் செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தலிலும் அந்த அணியே பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இவர்களில் நடிகை குஷ்புதான் மிக அதிகமாக 1407 வாக்குகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்திருக்கிறார்.
செயற்குழு உறுப்பினர்கள் பெற்ற வாக்குகளின் முழு விபரம் :
1. குஷ்பூ – 1407
2. கோவை சரளா – 1399
3. ராஜேஷ் – 1384
4. மனோபாலா – 1372
5. அஜய் ரத்தினம் -1365
6. பசுபதி – 1335
7. ஜூனியர் பாலையா – 1312
8. சிபிராஜ் – 1296
9. லதா – 1288
10. விக்னேஷ் – 1279
11. சோனியா போஸ் – 1277
12. பிரசன்னா – 1275
13. நந்தா – 1272
14. ரமணா – 1258
15. தளபதி தினேஷ் – 1258
16. சரவணன் – 1247
17. பிரேம்குமார் – 1242
18. ஸ்ரீமன் – 1241
19. ஜெரோல்ட் – 1184
20. ரத்னப்பா – 1137
21. மா.பிரகாஷ் – 1106
22. வாசுதேவன் – 1105
23. ஹேமச்சந்திரா – 1077
24. காளிமுத்து – 1075
The post நடிகர் சங்கத் தேர்தல்-செயற்குழு உறுப்பினர்களில் குஷ்புவுக்கு அதிக ஓட்டு..! appeared first on Touring Talkies.
]]>The post “சின்னத்தம்பி-2’ படத்தை இப்போது எடுக்கலாமா..?” என்ற கேள்விக்கு பதிலளித்த குஷ்பூ..! appeared first on Touring Talkies.
]]>இதையடுத்து சில நாட்களுக்கு முன்பாக குஷ்பூ போலவே தனது அடையாளமாகவே இருந்த உடல் பருமனைக் குறைத்து சிக்கென்று அழகாகி குஷ்பூவுக்கே போட்டியாகிவிட்டார் நடிகர் பிரபு.
இப்படி இவர்கள் இருவருமே போட்டி போட்டிக் கொண்டு உடல் எடையைக் குறைத்துக் கொண்டு அதையும் போட்டோ எடுத்து அனுப்பியதைக் கண்டு பத்திரிகையாளர்களும் கொஞ்சம் ஷாக்காகித்தான் போனார்கள்.
ஏனெனில் பிரபு எப்போதும் தன்னுடைய புகைப்படங்களை தானே வெளியிட மாட்டார். ஆனால் இளைத்த காளையாக இருக்கும் தனது புதிய போட்டோவை அவரே வெளியிட்டதைப் பார்த்து ஒருவேளை.. இது குஷ்பூவின் போட்டோவுக்கு பதிலடியாக இருக்குமோ என்ற சந்தேகம் அனைவருக்குமே வந்திருக்கிறது.
இருந்தாலும் இப்படி இவர்கள் இருவருமே மறுபடியும் ஹீரோ, ஹீரோயின் ரேன்ச்சுக்கு மல்லுக் கட்டி நிற்பதால் இவர்களது நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்ற ‘சின்னத்தம்பி’ படத்தின் அடுத்தப் பாகத்தை ஆரம்பிக்கலாமே என்று ரசிகர்களும் நினைத்த ஆரம்பித்துவிட்டனர்.
1991-ம் வரும் வெளியான தமிழ்ச் சினிமாவில் அனைத்து ரெக்கார்டுகளையும் முறியடித்துவிட்டு பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. மேலும் இப்படம் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் மறு உருவாக்கம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ரசிகர் ஒருவர் டிவிட்டரில் பிரபு மற்றும் குஷ்புவின் புகைப்படத்தைப் பகிர்ந்து, “இயக்குநர் வாசு சார், சந்திரமுகி இரண்டாம் பாகத்துக்கு முன், சின்னத்தம்பி இரண்டாம் பாகம் எடுக்கலாம்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த நடிகை குஷ்பு சிரிப்பது போன்ற ஸ்மைலியை இதற்கான பதிலாக அளித்துள்ளார்.
உண்மையில் ‘சின்னத் தம்பி-2’ படத்தை இப்பொழுது எடுத்தால் நிச்சயமாக ஜெயிக்கும் என்பதே தமிழ்த் திரையுலக ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.
The post “சின்னத்தம்பி-2’ படத்தை இப்போது எடுக்கலாமா..?” என்ற கேள்விக்கு பதிலளித்த குஷ்பூ..! appeared first on Touring Talkies.
]]>The post நடிகை குஷ்பூவின் டிவீட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டது appeared first on Touring Talkies.
]]>நடிகை குஷ்பூ தற்போது பா.ஜ.கட்சியில் மிகத் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பாரதீய ஜனதா கட்சியின் சார்பான செய்திகளை தனது டிவீட்டர் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டுக் கொண்டிருந்தார்.
இந்த நிலைமையில் அவருடைய டிவீட்டர் பக்கத்தை சில விஷமிகள் இன்று ஹேக் செய்துள்ளனர். ஹேக் செய்த கையோடு குஷ்பூ இத்தனையாண்டுகளாக பதிவு செய்திருந்த அத்தனை பதிவுகளையும் அழித்துள்ளனர்.
மேலும் போலியாக briann என்ற பெயர் குறிக்கப்பட்டு அந்த டிவீட் பக்கம் இப்போதும் ஓப்பன் நிலையில் உள்ளது.
இது குறித்து நடிகை குஷ்பூ டிவீட்டர் நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளாராம். விரைவில் தனது டிவீட் பக்கம் மீட்கப்படும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார் நடிகை குஷ்பூ
The post நடிகை குஷ்பூவின் டிவீட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டது appeared first on Touring Talkies.
]]>The post அரை மணி நேரத்தில் உருவான ‘அண்ணாமலை’ படப் பாடல்..! appeared first on Touring Talkies.
]]>இது பற்றி பேட்டியொன்றில் குறிப்பிட்ட இசையமைப்பாளர் தேவா, ‘அண்ணாமலை’ படத்தின் தயாரிப்பு நடந்து கொண்டிருந்தபோது ஒரு நாள் மாலையில் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் எனக்கு போன் செய்தார். “தேவா.. அர்ஜண்ட்டா எனக்கு இன்னொரு பாட்டு வேணும். ரஜினியோட கால்ஷீட் 3 நாள் கைல இருக்கு. குஷ்பூவோட கால்ஷீட்டும் கிடைச்சிருக்கு. அதுனால கிடைச்ச கால்ஷீட்ல ஒரு பாட்டை ஷூட் பண்ணலாம்ன்னு பார்க்குறேன். அந்தப் பாட்டு நாளைக்குக் காலைல எனக்கு வேணும். நாளைக்கு ராத்திரி ஷூட்டிங் துவங்குது…” என்றார் கே.பாலசந்தர்.
எனக்குத் திக்குன்னு ஆயிருச்சு. “நைட்டுக்குள்ள எப்படி ஸார் பாட்டு ரெடி பண்றது..? அதோட இதுதான் ரஜினி ஸாரோட என்னோட முதல் படம். பாட்டு நல்லாயிருந்தால்தான் எனக்கு படங்கள் வரும். கொஞ்சம் நேரம் கொடுத்தால்தானே நல்லதா கொடுக்க முடியும்..?” என்று கேட்டேன். “அதெல்லாம் உன்னால முடியும் தேவா.. செஞ்சு கொடு..” என்று சொல்லி போனை வைத்துவிட்டார்.
வேற வழியில்லாமல் அன்னிக்கு ராத்திரி 7 மணிக்கே எல்லா ஆர்க்கெஸ்ட்ராவையும் வரவழைச்சுட்டேன். கிட்டத்தட்ட 36 பேர் வந்திருந்தாங்க. அனந்து ஸாரும், நடராஜன் ஸாரும் வந்துட்டாங்க. வைரமுத்துவும் பாட்டெழுத வந்துட்டாரு.
எல்லாரும் அசெம்பிள் ஆனப்புறம் நான் இசைக்க ஆரம்பித்தேன். முதலில் வந்த இசையே இந்தப் மெட்டுதான். வைரமுத்து மளமளவென எழுதிக் கொடுத்திட்டார். 7 மணிக்கு ஆரம்பித்த இசையமைப்பு 7.30 மணிக்கெல்லாம் முடிஞ்சிருச்சு.
அதுக்கப்புறம் ஆர்க்கெஸ்ட்ராவுக்கு நோட்ஸ் எல்லாம் கொடுத்திட்டு எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ராவை நைட்டோட நைட்டா வரவழைச்சு பாட வைச்சு.. அதிகாலைல 3 மணிக்கு நடராஜன் ஸார் கைல டேப்பைக் கொடுத்துட்டேன்.
இந்த அளவுக்கு ஸ்பீடா ஒர்க் செஞ்சது எனக்குக் கிடைத்த ஒரு புதிய அனுபவம்..” என்றார் இசையமைப்பாளர் தேவா.
The post அரை மணி நேரத்தில் உருவான ‘அண்ணாமலை’ படப் பாடல்..! appeared first on Touring Talkies.
]]>The post 100 சதவிகித இருக்கைகளுக்கு அனுமதி – கஸ்தூரி – குஷ்பூ திடீர் மோதல்..! appeared first on Touring Talkies.
]]>இதற்காக தமிழக அரசினை திரையுலகத்தின் பல்வேறு அமைப்புகள் பாராட்டியுள்ளன. நன்றி தெரிவித்துள்ளன. நடிகர்கள் விஜய், சிம்பு, நடிகை குஷ்பூ உள்ளிட்டோரின் வேண்டுகோள்களும் இதை நோக்கி இருந்ததால் இவர்களது ரசிகர்களும் தமிழக அரசினை பாராட்டி வருகிறார்கள்.
இந்த நேரத்தில் நடிகை கஸ்தூரி மட்டும் இந்த 100 சதவிகித அனுமதிக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
அவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், “சினிமா தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகள் அனுமதிக்கப்படுவது ஆபத்தான ஒன்றாகும். ஒரு சினிமாக்காரியாக நான் இதைச் சொல்லவில்லை. நாம் தற்போது இந்த வைரஸை ’கொரோனா வைரஸ்’ என்றும் ’சீனா வைரஸ்’ என்றும் அழைக்கின்றோம். 100 சதவீத இருக்கைகள் அனுமதியால் ’சினிமா வைரஸ்’ என்ற கெட்ட பெயரை நாம் எடுக்க வேண்டுமா..?
இந்த ஆபத்தான முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு தமிழக முதல்வரையும், திரைப்பட ஹீரோக்கள் மற்றும் திரையுலகத்தினரையும் நான் கேட்டுக் கொள்கிறேன். கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி ஒட்டு மொத்தமாக லாக் டவுன் ஆவதற்கு பதிலாக, தற்போது நமக்கு ஏற்பட்டிருக்கும் சிறிய இழப்பு மேல்தான்…” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த டிவீட் வெளியான சில நிமிடங்கள் கழித்து இந்த டிவிட்டுக்கு பதிலடியாக ஒரு டிவீட் செய்தியை பதிவிட்டுள்ளார் நடிகை குஷ்பூ.
குஷ்பூ தனது டிவீட் செய்தியில், “சினிமா தியேட்டர்களில் 100 சதவீதம் இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது குறித்து மாற்றுக் கருத்து உடையவர்களுக்கு ஒரு செய்தியை நான் சொல்ல விரும்புகிறேன்.
நீங்கள் தியேட்டருக்கு சென்றால் கொரோனா வைரஸ் பரவிவிடும் என்று கவலைப்பட்டால், தயவு செய்து தியேட்டருக்கு செல்ல வேண்டாம். உங்கள் பயம் புரிந்து கொள்ளக் கூடியதுதான். உங்களை யாரும் தியேட்டருக்கு வருமாறு கட்டாயப்படுத்தவில்லை. அதனால், உங்களை நீங்களே கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்…” என்று கூறியுள்ளார்.
இப்படி நடிகைகள் கஸ்தூரியும், குஷ்பூவும் மாறுபட்ட கருத்துக்களால் மோதிக் கொண்டது இன்றைய டிவிட்டர் களத்தைச் சூடு பறக்க வைத்துள்ளது.
The post 100 சதவிகித இருக்கைகளுக்கு அனுமதி – கஸ்தூரி – குஷ்பூ திடீர் மோதல்..! appeared first on Touring Talkies.
]]>