Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
கமல்ஹாசன் – Touring Talkies https://touringtalkies.co Wed, 14 Dec 2022 10:09:08 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png கமல்ஹாசன் – Touring Talkies https://touringtalkies.co 32 32 கமல்ஹாசன் வெளியிட்ட ‘தேவர் மகன்’ பட கிளைமாக்ஸ் ரகசியம்..! https://touringtalkies.co/kamal-haasan-released-devar-magan-movie-climax-secret/ Wed, 14 Dec 2022 10:08:36 +0000 https://touringtalkies.co/?p=28578 கமல்ஹாசன் தயாரித்து நடித்திருந்த ‘தேவர் மகன்’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சி மிகக் கொடூரமாக இருந்ததாகக்கூறி சென்சார் போர்டு அனுமதி தர மறுத்துவிட்டது. இதனால் கமல்ஹாசன் வேறொரு கிளைமாக்ஸ் காட்சியை எடுக்க வேண்டி வந்தது..! இந்நிலையில் சமீபத்தில் கமல் அளித்த பேட்டியில், ‘தேவர் மகன்’ படத்தில் சென்சார் செய்யப்பட்ட க்ளைமேக்ஸ் குறித்து பேசியுள்ளார்.  “தேவர் மகன்’ படத்தில் சென்சாரினால் வெட்டப்பட்ட அந்த க்ளைமேக்ஸ் காட்சி மிகச் சிறந்ததாக இருந்தது. ஒரு டெக்னிசியனாக அந்த காட்சியை பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக […]

The post கமல்ஹாசன் வெளியிட்ட ‘தேவர் மகன்’ பட கிளைமாக்ஸ் ரகசியம்..! appeared first on Touring Talkies.

]]>
கமல்ஹாசன் தயாரித்து நடித்திருந்த ‘தேவர் மகன்’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சி மிகக் கொடூரமாக இருந்ததாகக்கூறி சென்சார் போர்டு அனுமதி தர மறுத்துவிட்டது. இதனால் கமல்ஹாசன் வேறொரு கிளைமாக்ஸ் காட்சியை எடுக்க வேண்டி வந்தது..!

இந்நிலையில் சமீபத்தில் கமல் அளித்த பேட்டியில், ‘தேவர் மகன்’ படத்தில் சென்சார் செய்யப்பட்ட க்ளைமேக்ஸ் குறித்து பேசியுள்ளார். 

தேவர் மகன்’ படத்தில் சென்சாரினால் வெட்டப்பட்ட அந்த க்ளைமேக்ஸ் காட்சி மிகச் சிறந்ததாக இருந்தது. ஒரு டெக்னிசியனாக அந்த காட்சியை பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அந்த காட்சியில் எனக்கும், நாசருக்கும் சண்டை நடக்கும போது நாசரின் தலை வெட்டப்பட்டு துண்டாக உருண்டு ஓடும்.

அப்போது நான் அதன் பின்னால் ஓடி சென்று அழுவேன். “இப்போது உனக்கு சந்தோஷமா.. உன்ன மாதிரியே என்னையும் கிரிமினலாக்கிட்டியே..?” என்று அழுது கொண்டிருக்கும்போது நாசரின் தலை மட்டும் வாயில் எச்சி வடிய எதோ கூறுவது போல் இருக்கும். அந்த தலையில் இருந்து ரத்தம் வடிய மெதுவாக அந்த கண்கள் மூடும் காட்சி புல்லரித்துவிட்டது” என்று கமல் கூறினார்.

தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

The post கமல்ஹாசன் வெளியிட்ட ‘தேவர் மகன்’ பட கிளைமாக்ஸ் ரகசியம்..! appeared first on Touring Talkies.

]]>
‘ஹேராம்’ படத்தில் உதவி கலை இயக்குநர் பணிக்காக 150 ரூபாய் சம்பளம் பெற்ற வீர சமர்! https://touringtalkies.co/veera-samar-was-paid-rs-150-for-the-assistant-art-director-job-in-hey-ram-movie/ Tue, 06 Dec 2022 07:41:23 +0000 https://touringtalkies.co/?p=28124 இயக்குநர் ஷங்கரின் தயாரிப்பில் ‘காதல்’ திரைப்படத்திலிருந்து சுமார் 30 படங்களுக்குக் கலை  இயக்குநராகப் பணிபுரிந்தவர் வீரசமர். இவர்  ‘வெயில்’, ‘பூ’, ‘முத்துக்கு முத்தாக’, ‘பாண்டி’, ‘கொம்பன்’   போன்ற படங்களில்  நடிகராகவும் முகம் காட்டியவர்.அமலாபால் முதலில் அறிமுகமான ‘வீரசேகரன்’ படத்தில் கதாநாயகனாக நடித்த அனுபவமும் இவருக்கு உண்டு. துவக்கத்தில் பிரபல கலை இயக்குநரான சாபு சிரிலிடம் உதவியாளராகப் பணியாற்றினார் வீரசமர். அப்போது கமலின் ஹேராம் படத்திலும் வீர சமர் உதவி கலை இயக்குநராகப் பணியாற்றினார். அந்த சந்தர்ப்பத்தில் […]

The post ‘ஹேராம்’ படத்தில் உதவி கலை இயக்குநர் பணிக்காக 150 ரூபாய் சம்பளம் பெற்ற வீர சமர்! appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் ஷங்கரின் தயாரிப்பில் ‘காதல்’ திரைப்படத்திலிருந்து சுமார் 30 படங்களுக்குக் கலை  இயக்குநராகப் பணிபுரிந்தவர் வீரசமர். இவர்  ‘வெயில்’, ‘பூ’, ‘முத்துக்கு முத்தாக’, ‘பாண்டி’, ‘கொம்பன்’   போன்ற படங்களில்  நடிகராகவும் முகம் காட்டியவர்.அமலாபால் முதலில் அறிமுகமான ‘வீரசேகரன்’ படத்தில் கதாநாயகனாக நடித்த அனுபவமும் இவருக்கு உண்டு.

துவக்கத்தில் பிரபல கலை இயக்குநரான சாபு சிரிலிடம் உதவியாளராகப் பணியாற்றினார் வீரசமர். அப்போது கமலின் ஹேராம் படத்திலும் வீர சமர் உதவி கலை இயக்குநராகப் பணியாற்றினார். அந்த சந்தர்ப்பத்தில் அந்தப் படத்தில் ஒரு வருடத்திற்கும் மேலாகப் பணியாற்றியும் சம்பளமாக 150 ரூபாய்தான் பெற்றதாகக் கூறியுள்ளார் வீர சமர்.

இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “ஹேராம்’ படத்தில் சாபுசிரில் ஸாரிடம் உதவியாளர்களாகப் பணி புரிந்தோம். அப்போது எங்களுக்குப் படப்பிடிப்பு நாட்களில் சாப்பாடு கிடைக்கும். சம்பளம் எல்லாம் எதிர்பார்க்கவில்லை. அப்படித்தான் ஓராண்டாக உழைத்துக் கொண்டிருந்தோம்.

ஒரு நாள் சாபு சார் எங்களிடம் “உனக்கு சம்பளம் வருகிறதா?” என்று கேட்டார்..! சாப்பாடு போதும் என்கிற மனநிலைதான் அப்போது எங்களுக்கு. “இல்லை” என்றோம். உடனேயே எங்களுக்கு ஐம்பது ரூபாய் சம்பளம் கொடுக்கச் சொன்னார்.

அந்த ஐம்பது ரூபாய் சம்பளம் பெரிய காசாக அப்போது தோன்றியது. அதைக் கொண்டு வந்து நானும், என் அறை நண்பனுமான இயக்குநர் சீனு ராமசாமியும் கொண்டாடினோம். இப்படி ஹேராம் படத்தில் பணி புரிந்த ஓராண்டில் எங்களுக்கு மூன்று நாள்தான் சம்பளம் கிடைத்தது. அத்துடன் அந்தப் படப்பிடிப்பு முடிந்து விட்டது.

ஆக அந்தப் படத்தில் எனக்கு கிடைத்த சம்பளம் 150 ரூபாய். இப்போது நினைத்தால் வேடிக்கையாக இருக்கிறது. ஆனால் அந்தப் படப்பிடிப்பில் கிடைத்த அனுபவம் பல கோடி ரூபாய் மதிப்புள்ளது என்று இப்போது தோன்றுகிறது...” என்று சொல்லியிருக்கிறார் கலை இயக்குநர் வீரசமர்.

The post ‘ஹேராம்’ படத்தில் உதவி கலை இயக்குநர் பணிக்காக 150 ரூபாய் சம்பளம் பெற்ற வீர சமர்! appeared first on Touring Talkies.

]]>
“விஜய் சேதுபதியைப் போற்றவும் நடிகர்கள் வருவார்கள்” – நடிகர் கமல்ஹாசனின் வாழ்த்து https://touringtalkies.co/actors-will-also-come-to-admire-vijay-sethupathi-wishes-of-actor-kamal-haasan/ Sun, 27 Nov 2022 11:31:04 +0000 https://touringtalkies.co/?p=27666 கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில், ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் வழங்கும், இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் திரைப்படம் ‘டி.எஸ்.பி.’. கலகலப்பான கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசும்போது, “நான் இந்த விழாவுக்கு வந்தது விஜய் சேதுபதி எனும் பிரபல கலைஞனுக்காக அல்ல. என்னைப் போலவே சினிமா மீது அவர் வைத்திருக்கும் காதலுக்காகத்தான். என் […]

The post “விஜய் சேதுபதியைப் போற்றவும் நடிகர்கள் வருவார்கள்” – நடிகர் கமல்ஹாசனின் வாழ்த்து appeared first on Touring Talkies.

]]>
கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில், ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் வழங்கும், இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் திரைப்படம் ‘டி.எஸ்.பி.’.

கலகலப்பான கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.

இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசும்போது, “நான் இந்த விழாவுக்கு வந்தது விஜய் சேதுபதி எனும் பிரபல கலைஞனுக்காக அல்ல. என்னைப் போலவே சினிமா மீது அவர் வைத்திருக்கும் காதலுக்காகத்தான்.

என் தலைமுறையில் நான் பலரை வியந்து பார்த்திருக்கிறேன். அவர்கள் போல சாதிக்க ஆசைப்பட்டிருக்கிறேன். இப்போது என்னை இவர்கள் ஊக்கமாக எடுத்துக் கொள்வதில் எனக்குப் பெரும் மகிழ்ச்சி.

நாளை விஜய் சேதுபதியின் சாதனையை போற்றும் நடிகர்கள் வருவார்கள், அதுதான் சினிமாவின் சுழற்சி. இந்தப் படத்தில் உழைத்துள்ள அனைத்து கலைஞர்களுக்கும் எனது வாழ்த்துகள். படம் மிகப் பெரிய வெற்றி பெற வாழ்த்துகள்…” என்றார்.

The post “விஜய் சேதுபதியைப் போற்றவும் நடிகர்கள் வருவார்கள்” – நடிகர் கமல்ஹாசனின் வாழ்த்து appeared first on Touring Talkies.

]]>
கமலும், மணிரத்னமும் மீண்டும் இணைகிறார்கள் https://touringtalkies.co/kamal-and-manirathnam-rejoins-a-new-movie/ Sun, 06 Nov 2022 14:36:20 +0000 https://touringtalkies.co/?p=26676 நடிகர் கமல்ஹாசன் நடிக்கவிருக்கும் 234-வது படத்தை மணிரத்னம் இயக்கவிருக்கிறார் என்பதுதான் இன்றைய தமிழ்ச் சினிமாவின் ஹாட்டஸ்ட் செய்தி. நாளைய தினம் கமல்ஹாசனின் 68-வது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று மாலை இதற்கான அறிவிப்பை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். இந்தப் படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ், கமலின் ராஜ்கமல் நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் ஆகிய 3 நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றன. மணிரத்னம் இயக்கத்தில் கமல் 1987-ம் ஆண்டு நடித்த ‘நாயகன்’ படத்திற்குப் பிறகு இருவரும் இணையவில்லை. […]

The post கமலும், மணிரத்னமும் மீண்டும் இணைகிறார்கள் appeared first on Touring Talkies.

]]>
நடிகர் கமல்ஹாசன் நடிக்கவிருக்கும் 234-வது படத்தை மணிரத்னம் இயக்கவிருக்கிறார் என்பதுதான் இன்றைய தமிழ்ச் சினிமாவின் ஹாட்டஸ்ட் செய்தி.

நாளைய தினம் கமல்ஹாசனின் 68-வது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று மாலை இதற்கான அறிவிப்பை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.

இந்தப் படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ், கமலின் ராஜ்கமல் நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் ஆகிய 3 நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றன.

மணிரத்னம் இயக்கத்தில் கமல் 1987-ம் ஆண்டு நடித்த ‘நாயகன்’ படத்திற்குப் பிறகு இருவரும் இணையவில்லை. இப்போது 35 ஆண்டு காலம் கழித்து இருவரும் இந்தப் படத்திற்காக ஒன்றிணைகிறார்கள். இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இது குறித்து நடிகர் கமல்ஹாசன் பேசும்போது, “35 வருடங்களுக்கு முன், மணிரத்னத்துடன் நாயகன் படத்தில் பணிபுரியத் தொடங்கும்போது, இ​தே அளவு உற்சாகமாக இருந்தேன். தற்போதும் அதே மனநிலை என்னுடன் ஒத்துழைப்பது ஊக்கமளிக்கிறது. இந்த தூண்டுதலில் திரு.ரஹ்மானும் அடங்குவர். திரு.உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து எடுக்கவிருக்கும் இந்தப் படத்தை வழங்க ஆவலுடன் காத்திருக்கிறேன்…” என்று சொல்லியிருக்கிறார்.

இது குறித்து மணிரத்னம் பேசும்போது, “கமல் ஸாருடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன்..” என்றார்.

இது குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, “விக்ரம் மற்றும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியன்-2 படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு உலக நாயகன் கமல்ஹாசனின் 234-வது படத்தை வழங்குவதற்காக கமல் சாருடன் இணைவது எனக்குக் கிடைத்திருக்கும் அருமையான வாய்ப்பு. சிறப்பான கதையில் உருவாகும் இந்த படத்தை தயாரிப்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன். கமல் சார் மற்றும் மணி சார் இருவருமே உலக அளவில் தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்தவர்கள், இந்த இரண்டு சாதனையாளர்களின் தீவிர ரசிகனாகவும் நான் இருந்து வருகிறேன். இந்த சிறந்த வாய்ப்புக்கு கமல் ஸாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்..” என்று சொல்லியிருக்கிறார்.”

இந்தப் படம் அடுத்தாண்டு மத்தியில் துவங்கி 2024-ம் ஆண்டு வெளியாகுமாம்.

The post கமலும், மணிரத்னமும் மீண்டும் இணைகிறார்கள் appeared first on Touring Talkies.

]]>
BIGG BOSS-6 நிகழ்ச்சியிலிருந்து ஜி.பி.முத்து வெளியேறினார் https://touringtalkies.co/g-p-muthu-left-the-bigg-boss-6-season-programme/ Sat, 22 Oct 2022 18:01:59 +0000 https://touringtalkies.co/?p=25859 விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீஸனில் இன்றைக்கு புதிய திருப்பமாக முக்கிய வேட்பாளரான ஜி.பி.முத்து போட்டியில் இருந்து தானாகவே வெளியேறினார். ஜி.பி.முத்து டிக்டாக்கில் தனது அப்பாவித்தனமான பேச்சுக்கள் அடங்கிய வீிடியோக்களை வெளியிட்டதன் மூலமாக தமிழகத்தில் மிகவும் பிரபலமானார். அவர் இந்த பிக்பாஸ் 6-வது சீஸனில் நுழைந்ததில் இருந்தே பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மேலும் கூடுதலான பார்வையாளர்கள் கிடைத்தார்கள். கடந்த 2 வாரங்களுக்கு முன்பாக ஆரம்பித்த இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் சில நாட்கள் மட்டுமே […]

The post BIGG BOSS-6 நிகழ்ச்சியிலிருந்து ஜி.பி.முத்து வெளியேறினார் appeared first on Touring Talkies.

]]>
விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீஸனில் இன்றைக்கு புதிய திருப்பமாக முக்கிய வேட்பாளரான ஜி.பி.முத்து போட்டியில் இருந்து தானாகவே வெளியேறினார்.

ஜி.பி.முத்து டிக்டாக்கில் தனது அப்பாவித்தனமான பேச்சுக்கள் அடங்கிய வீிடியோக்களை வெளியிட்டதன் மூலமாக தமிழகத்தில் மிகவும் பிரபலமானார். அவர் இந்த பிக்பாஸ் 6-வது சீஸனில் நுழைந்ததில் இருந்தே பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மேலும் கூடுதலான பார்வையாளர்கள் கிடைத்தார்கள்.

கடந்த 2 வாரங்களுக்கு முன்பாக ஆரம்பித்த இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் சில நாட்கள் மட்டுமே தனது யதார்த்த பேச்சுக்களால் உடன் இருந்த போட்டியாளர்களை சமாளித்து வந்த ஜி.பி.முத்துவுக்கு சமீப நாட்களாக தனது குடும்பத்தின் மீது அக்கறையும், பாசமும், தவிப்பும் ஏற்பட்டது. அதிலும் தனது மகன் தன்னைக் காணாமல் தவிப்பான் என்று புலம்ப ஆரம்பித்தார்.

இதையடுத்து 2 முறை அவரை கன்பெக்சன் அறைக்கு அழைத்து பிக்பாஸ் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார். ஆனாலும் முத்து மனம் மாறாமல் நேற்றைக்கு சாப்பிடாமலேயே இருந்துவிட்டார். இதையறிந்த பிக்பாஸ் மீண்டும் அவரை அழைத்து அறிவுரை சொல்லி அனுப்பி வைத்திருந்தார்.

இன்றைக்கு வார இறுதி நாள் என்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்திருந்த நடிகர் கமல்ஹாசன் ஜி.பி.முத்துவை கன்பெக்சன் அறைக்கு அழைத்து பேசினார். அப்போதும் ஜி.பி.முத்து தான் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இதையடுத்து அவரை பிக்பாஸ் அரங்கத்தில் இருந்து வெளியேற அனுமதித்தார் கமல்ஹாசன்.

தொடர்ந்து உள்ளேயிருந்த சக போட்டியாளர்களிடமும் ஜி.பி.முத்து போட்டியில் இருந்து வெளியேறதையும் தெரிவித்தார் கமல்ஹாசன். அனைவருமே அதிர்ச்சியாகிவிட்டனர். “நல்ல போட்டியாளரை இழந்துவிட்டோம் என்பதைவிடவும் சிறந்த அப்பாவை அனுப்பி வைத்திருக்கிறோம் என்று நாம் பெருமைப்படுவோம்…” என்று சொல்லி அவர்களை சமாதானப்படுத்தினார் கமல்ஹாசன்.

The post BIGG BOSS-6 நிகழ்ச்சியிலிருந்து ஜி.பி.முத்து வெளியேறினார் appeared first on Touring Talkies.

]]>
“விக்ரம்-2′ உருவானால் ரோலக்ஸூம் நிச்சயமாக வருவான்” – நடிகர் சூர்யா வாக்குறுதி https://touringtalkies.co/if-vikram-2-is-made-rolex-will-surely-come-actor-suriya-promises/ Tue, 11 Oct 2022 08:08:19 +0000 https://touringtalkies.co/?p=25189 கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய் சேதுபதி நடித்து சூப்பர் ஹிட்டான படம் ‘விக்ரம்’.  இந்தப் படத்தில் சூர்யா, ‘ரோலக்ஸ்’ என்ற சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். படத்தின் கிளைமாக்ஸில் அவர் தோன்றும் கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், பெங்களூரில் நேற்று முன்தினம் நடந்த ஃபிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள வந்த நடிகர் சூர்யாவிடம், இந்த ‘ரோலக்ஸ்’ கேரக்டர் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த நடிகர் சூர்யா, “நான் இன்று என்னவாக இருந்தாலும் […]

The post “விக்ரம்-2′ உருவானால் ரோலக்ஸூம் நிச்சயமாக வருவான்” – நடிகர் சூர்யா வாக்குறுதி appeared first on Touring Talkies.

]]>
கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய் சேதுபதி நடித்து சூப்பர் ஹிட்டான படம் ‘விக்ரம்’.  இந்தப் படத்தில் சூர்யா, ‘ரோலக்ஸ்’ என்ற சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். படத்தின் கிளைமாக்ஸில் அவர் தோன்றும் கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், பெங்களூரில் நேற்று முன்தினம் நடந்த ஃபிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள வந்த நடிகர் சூர்யாவிடம், இந்த ரோலக்ஸ்’ கேரக்டர் பற்றி கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த நடிகர் சூர்யா, “நான் இன்று என்னவாக இருந்தாலும் அதற்கு ஊக்கமாக இருந்தவர் அண்ணன் கமல்ஹாசன்தான். அவர் இப்படி ஒரு வாய்ப்பு இருக்கிறது என்று சொன்னதும் என்னால் மறுக்க முடியவில்லை. அவருக்காகவே அந்த ‘ரோலக்ஸ்’ கேரக்டரில் நடித்தேன்..” என்றார்.

“ரோலக்ஸ் மீண்டும் திரையில் தோன்றுவாரா..?” என்ற கேள்விக்கு, “இதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும். அந்தப் படத்தின் 2-ம் பாகம் உருவானால் அந்த கேரக்டரில் நிச்சயமா நான் நடிப்பேன்” என்றார்.

The post “விக்ரம்-2′ உருவானால் ரோலக்ஸூம் நிச்சயமாக வருவான்” – நடிகர் சூர்யா வாக்குறுதி appeared first on Touring Talkies.

]]>
பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தவர்கள் இவர்கள்தான்..! https://touringtalkies.co/these-are-the-people-who-entered-the-bigg-boss-house/ Sun, 09 Oct 2022 07:53:28 +0000 https://touringtalkies.co/?p=24998 விஜய் தொலைக்காட்சி நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீஸன் முறைப்படி நேற்றைக்கு துவங்கிவிட்டது. இதில் பங்கு கொள்பவர்கள் நேற்று மாலை ஒருவர் பின் ஒருவராக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துவிட்டனர். வழக்கம்போல உலக நாயகன் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றவர்களின் இறுதி பட்டியல் இதுதான்..! 01. ஜி.பி முத்து (Tik Tok) 02. அசீம் (நடிகர்) 03. அசல் கோலார் (Musical Artist) 04. ஷிவின் கணேசன் (Transgender) 05. ராபர்ட் மாஸ்டர் […]

The post பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தவர்கள் இவர்கள்தான்..! appeared first on Touring Talkies.

]]>
விஜய் தொலைக்காட்சி நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீஸன் முறைப்படி நேற்றைக்கு துவங்கிவிட்டது. இதில் பங்கு கொள்பவர்கள் நேற்று மாலை ஒருவர் பின் ஒருவராக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துவிட்டனர். வழக்கம்போல உலக நாயகன் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றவர்களின் இறுதி பட்டியல் இதுதான்..!

01. ஜி.பி முத்து (Tik Tok)

02. அசீம் (நடிகர்)

03. அசல் கோலார் (Musical Artist)

04. ஷிவின் கணேசன் (Transgender)

05. ராபர்ட் மாஸ்டர் (Dance Master)

06. ஷெரினா (Model)

07. ராம் ராமசாமி (Cricketer / Model)

08. ஆர்யன் தினேஷ் (ADK)

09. ஜனனி (IBC Tamil)

10. அமுதவான் (Vijay TV)

11. மஹேஷ்வரி (VJ)

12. கதிரவன் (VJ)

13. ஆயிஷா (Actress)

14. தனலட்சுமி (Tik Tok)

15. ரச்சிதா (Actress)

16. மணிகண்டன் (Actor-Brother of Aishwarya Rajesh)

17. மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த் (Dance Master)

18. விக்ரமன் (VJ)

19. குயின்சி ஸ்டான்லி (Model / Actress)

20. நிவாஷினி (Singapore Model)

நேற்றைய முதல் நாள் நிகழ்வு இன்று இரவு முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒரு மணி நேர நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்பட இருக்கிறது. மேலும் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் இது 24 மணி நேரமும் நேரலையாக காண்பிக்கப்படவுள்ளது.

The post பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தவர்கள் இவர்கள்தான்..! appeared first on Touring Talkies.

]]>
“ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதம் இல்லை” – நடிகர் கமல்ஹாசன் விளக்கம் https://touringtalkies.co/hinduism-did-not-exist-during-rajaraja-cholas-time-actor-kamal-haasan-explains/ Thu, 06 Oct 2022 06:25:16 +0000 https://touringtalkies.co/?p=24886 மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன் பாகம் 1’ திரைப்படம் வெளியான 5 நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ.100 கோடியை வசூலித்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே, நடிகர் கமல்ஹாசன் நேற்று இந்தப் படத்தை நடிகர்கள் விக்ரம் மற்றும் கார்த்தி ஆகியோருடன் அமர்ந்து திரையரங்கில் ரசித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய கமல்ஹாசன், “இங்கே நான் வந்திருப்பது தமிழ் சினிமாவின் ரசிகனாக. தயாரிப்பாளராக, இந்த நடிகர்களை பார்த்து பொறாமைப்படும் ஒரு நடிகனாக, ஒரு சிறந்த படத்தில் இவர்கள் நடித்துள்ளார்கள் […]

The post “ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதம் இல்லை” – நடிகர் கமல்ஹாசன் விளக்கம் appeared first on Touring Talkies.

]]>
ணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன் பாகம் 1’ திரைப்படம் வெளியான 5 நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ.100 கோடியை வசூலித்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே, நடிகர் கமல்ஹாசன் நேற்று இந்தப் படத்தை நடிகர்கள் விக்ரம் மற்றும் கார்த்தி ஆகியோருடன் அமர்ந்து திரையரங்கில் ரசித்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய கமல்ஹாசன், “இங்கே நான் வந்திருப்பது தமிழ் சினிமாவின் ரசிகனாக. தயாரிப்பாளராக, இந்த நடிகர்களை பார்த்து பொறாமைப்படும் ஒரு நடிகனாக, ஒரு சிறந்த படத்தில் இவர்கள் நடித்துள்ளார்கள் என்பதுபோக இதற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

நாம் என்ற எண்ணத்துடன் ரசிகர்கள் இந்த படத்தை பார்க்கிறார்கள். பல நடிகர்கள் இந்த இந்த வேடத்தில் நடிக்க வேண்டும் என்று விரும்பியதை இவர்கள் செய்துள்ளனர். ஒரு ரசிகனாக இந்த படத்தை பார்க்கும்போது எனக்கு ஏற்பட்ட மலைப்பு கண்டிப்பாக எல்லா தமிழ் ரசிகர்களுக்கும் இருக்கும் என நம்புகிறேன்.

இந்த படத்தின் ஆரம்பத்தில் தமிழகத்தின் பொற்காலத்தைப் பற்றிய ஒரு வசனம் வரும்.. அது என் குரலில் வரும். அதை மீண்டும் ஒரு முறை சொல்ல ஆசைப்படுகிறேன்.. தமிழ் சினிமாவின் பொற்காலம் தொடங்கிவிட்ட ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. ஒரு சினிமா தயாரிப்பாளராக கலைஞராக எனக்கு அது பெருமிதம்.

ஆரோக்கியமான ஒரு போட்டியும், பொறாமையும் இருக்க வேண்டியதுதான். ஆனால், மற்றவர்கள் வீழ்ச்சியை பார்த்து மகிழ்வதில் எந்த சந்தோஷமும் கிடையாது. ஏனென்றால் இந்த படகில் நாங்கள் அனைவரும் பயணிக்கிறோம் என்பதுதான் உண்மை. இதில் ஓட்டை விழுந்தால் நானும் சேர்ந்து முழுகுவேன் என்பதுதான் உண்மை.

தமிழ் சினிமாவிற்கு 100 வயது. எனக்கு 67. இந்த நல்ல தருணத்தில் இவர்களுடன் சேர்ந்து வெற்றியை கொண்டாடுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இது ராஜ்கமல் பிலிம்ஸின் படமாக இருந்தால்தான் நான் மகிழ்ச்சி அடைவேன் என்று இல்லை. இது எங்கள் தமிழ் படம். இவர்களுடன் சேர்ந்து படம் பார்த்ததில் எனக்கு சந்தோஷம்.

இது வெற்றிப் படம். லைக்கா ப்ரொடக்ஷனையும், மணிரத்தினத்தையும் பார்த்து வியக்காமல் இருக்க முடியாது. இதில் நிறைய தொழில் நுட்ப கலைஞர்கள் பணியாற்றியுள்ளார்கள். நான் மலையாள படத்தில் ஆரம்பிக்கும்போது மொத்தமாகவே 12, 13 பேர்தான் இருப்போம். இவ்வளவு தூரம் கடந்து வந்துவிட்டதை பார்த்தால் மலைப்பாக உள்ளது. இப்படி ஒரு தயாரிப்புக்கு துணையாக இருந்த லைக்காவுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

கார்த்தி நடித்தது நான் நடிப்பதாக இருந்த வேஷம்.. இவருக்கு வந்தது. சிவாஜி சார் அருண்மொழிவர்மன் நான் செய்தால் நன்றாக இருக்கும் எனக் கூறியுள்ளார். பல வேஷங்களில் நானே நடிக்க ஆசைப்பட்டேன். இதை அருமையாக நடித்துள்ளார்கள். போர்க்களத்தில் வரும் காட்சிகளை எல்லாம் எடுப்பது எவ்வளவு கடினம் என்பது எனக்கு தெரியும். இந்த படத்தை நான் தயாரித்தது போல ஒரு சந்தோஷம். ஏனென்றால் தமிழ் சினிமா தயாரித்திருக்கிறது. அது நான் தயாரித்த மாதிரிதான். இந்த புத்துணர்ச்சி நீடிக்க வேண்டும். இந்த கூட்டுணர்வு நீடிக்க வேண்டும்.

நாளைக்கு என் படத்தை நீங்கள் இதுபோல கொண்டாட வேண்டும் என நடிகர்கள் விக்ரம் மற்றும் கார்த்தியிடம் கேட்டுக் கொண்டார். சுமாராக இருந்தால் ரகசியமாக என்னிடம் சொல்லி விடுங்கள்..” என கமலஹாசன் சொன்னதும் அரங்கில் சிரிப்பலை எழுந்தது.

மேலும், “ஒரு புத்தகத்தை படமாக்குவது போன்ற கஷ்டம் வேறு கிடையாது. ராமாயணத்தை எப்படி எடுப்பீர்கள்.. எங்கிருந்து தொடங்குவீர்கள். இந்த படத்தைப் பொறுத்தவரை இரண்டு பாகங்களாக எடுத்துள்ளார்கள். என்னைப் போன்ற புத்தகம் படித்தவர்களுக்கு இன்னும் நான்கு காட்சிகள் சேர்ந்து இருந்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றும்.

இதை விமர்சனமாக ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனென்றால் காட்ஃபாதர் புத்தகத்தை அப்படியே எடுக்க முடியாது. கதையில் எது தேவையோ அதை எடுத்துக் கொண்டு படம் எடுத்து உள்ளார்கள். தெரிந்த பாடலை எங்களோடு சேர்ந்து பாடுங்கள், இடையில் இரண்டு வரிகள் சரணம், பல்லவி விட்டால் கோவித்துக் கொள்ளாதீர்கள் என்றுதான் சொல்ல முடியும். தவறுகள் கண்டுபிடித்தால் எல்லாவற்றிலும் தவறுகள் கண்டுபிடிக்கலாம். காந்திக்கு பல்லு இல்லை என சொல்வது முக்கியமில்லை.

கல்கி எழுதியதிலேயே நிறைய வரலாற்று உண்மைகள் இருக்க முடியாது. மறைமலை அடிகளார் எழுதிய அம்பிகாபதி, அமராவதி கதாபாத்திரங்கள் இருந்ததற்கான சான்றுகளே இல்லை. இது சரித்திர புனைவுதானே தவிர சரித்திர புத்தகம் அல்ல.

பாலச்சந்தர் ஆந்திராவில் போய் படம் எடுத்த பொழுது ஆந்திர மக்கள் அதை கொண்டாடினர். மொழி அரசியலை சினிமா துறையில் பண்ணாமல் இருக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை.  நாம் சங்கரா புராணத்தை கொண்டாடியதுபோல ஆந்திராவில் சமமாக கொண்டாடினார்கள்.

கர்நாடகாவில் ஒரு முறை நான் பேசும்போது உங்கள் நாகேஷ் என்று சொல்லக் கூடாது, எங்கள் நாகேஷ் என்றுதான் சொல்ல வேண்டும் என கூறினேன். எனக்கு தெலுங்கு படம் பிடிக்கும். தெலுங்கு பட தயாரிப்பாளர்கள் யாரும் எனக்கு அட்வான்ஸ் கொடுக்கவில்லை. ஆனாலும் எனக்கு தெலுங்கு படம் பிடிக்கும். ஆரோக்கியமான போட்டி நிகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும். அதை நிகழ்த்தி காட்டுவதற்கான திறமைகள் தமிழ் சினிமாவில் இருப்பதற்கான சான்றுதான் இந்த பொன்னியின் செல்வன் படம்..” என்றார் கமல்ஹாசன்.

“பொன்னியின் செல்வன் படம் விக்ரம் பட வசூலை முறியடித்துள்ளது” தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த கமலஹாசன், “இதில் எனக்கு சந்தோஷம்தான், அதனால்தான் நான் இங்கே வந்துள்ளேன்.” என்றார்.

“படத்தில் உங்களுக்குப் பிடித்த கதாபாத்திரம் ஆதித்த கரிகாலனா,  வந்தியத்தேவனா, அருள்மொழிவர்மனா?” என்ற கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், “இவர்கள் 3 பேருக்கும் இடையில் சண்டை மூட்டிவிட பார்க்கிறீர்களா?” என கேட்டதும் சிரிப்பலை எழுந்தது. மேலும் தொடர்ந்த கமல், “கல்கிக்கே யாரைப் போற்றுவது என்ற குழப்பம் இருந்தது. இரண்டாவது பாகத்தை பார்த்துவிட்டு சொல்கிறேன். இப்பொழுது சொல்ல முடியாது. படத்தின் இடைவேளையில் படம் எப்படி இருக்கிறது என கேட்டால் என்ன சொல்ல முடியும்? அதுபோலத்தான் இதுவும்..” என்றார்.

தொடர்ந்து “இயக்குநர் வெற்றி மாறன் ராஜராஜ சோழன் இந்து மதம் இல்லை” என்று கூறிய கருத்து குறித்து கேள்வி கேட்கப்பட அதற்கு பதிலளித்த கமல்ஹாசன், “ராஜராஜசோழன் காலத்தில் இந்து மதம்’ என்ற பெயர் கிடையாது. ‘சைவம்’, ‘வைணவம்’, ‘சமணம்’ போன்ற சமயங்கள் இருந்தன. ‘இந்து’ என்பது ஆங்கிலேயர்கள் வைத்த பெயர். இங்கு மதங்கள் வெவ்வேறாக இருந்தது. அவற்றை 8-ம் நூற்றாண்டில் ஆதிசங்கரர் ஷண்மத ஸ்தாபனம்’ என்று கொண்டு வந்தார். இவையெல்லாம் வரலாற்றில் உள்ளவை. இந்த திரைப்படம் ஒரு வரலாற்றுப் புனைவு. இங்கு நாம் சரித்திரத்தை புனைய வேண்டாம், திரிக்க வேண்டாம், மொழி அரசியலை திணிக்கவும் வேண்டாம். நல்ல கலைஞர்களை கொண்டாடுவோம்.” என்றார்.

நடிகர் விக்ரம் பேசுகையில், “எங்களின் கனவு நிஜமாகியதில் சந்தோஷம். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அனைவருக்கும் நன்றி. அனைத்து தலைமுறையினரும் இந்தப் படத்தை பார்க்கிறார்கள் என்பது பெருமையாக உள்ளது. இந்த மாதிரி இதைப் போன்ற ஒரு படத்தில் நடிப்பது திருப்தியாக உள்ளது. இந்த படத்தின் ட்ரெய்லருக்கு கமல் சார் வாய்ஸ் கொடுத்தார். இந்தப் படத்தின் தொடக்கத்தில் கமல் சார் கொடுக்கும் descriptionதான் படத்தில் ஜிவ்வுனு ஏறி அப்படியே போகும்…” என்றார்.

நடிகர் கார்த்தி பேசுகையில், “அனைவரும் இந்தப் படத்தை நமது படம்… தமிழ்நாட்டின் படம் என கொண்டாடுகிறார்கள். விடியற்காலை ஐந்து முப்பது மணிக்கு அம்மாவையும், பாட்டியையும் உடன் அழைத்து வந்து படம் பார்க்கிறார்கள் என்றால் இது சந்தோஷமான விஷயம். நாங்கள் எவ்வளவு ஜெயித்தாலும் எங்கள் வெற்றி கமல்ஹாசன் சாரை சேரும். ‘பருத்தி வீரன்’ பட பூஜையின்போது மருதநாயகம் படத்தின் டிரைலர் போட்டு காட்டினார்கள். அந்த ட்ரெய்லரில் குதிரையில் நீங்கள் வருவது என் கண்ணுக்குள் அப்படியே இருக்கிறது…” என்றார்.

The post “ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதம் இல்லை” – நடிகர் கமல்ஹாசன் விளக்கம் appeared first on Touring Talkies.

]]>
பிக்பாஸ்-சீஸன்-6 போட்டியாளர்கள் இவர்கள்தானா..? https://touringtalkies.co/bigg-boss-season-6-participants-list/ Wed, 05 Oct 2022 10:18:01 +0000 https://touringtalkies.co/?p=24868 வரும் அக்டோபர் 9-ம் தேதியிலிருந்து விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீஸன் ஒளிபரப்பாக இருக்கிறது. எப்போதும் 14 போட்டியாளர்கள்தான் இதில் பங்கேற்பாளர்கள். ஆனால், இந்த 6-வது சீஸனில் இந்த எண்ணிக்கை கூடியிருக்கிறதாம். மக்கள் போட்டியாளர்கள் என்ற கேட்டகிரியில் மேலும் 6 சாமானியமானவர்களும் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லவிருக்கிறார்களாம். மேலும் விஜய் டிவியில் தினமும்1 மணி நேரம் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்போதே டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் தளத்திலும் 24 மணி நேரமும் இந்த பிக்பாஸ்-6 சீஸன் […]

The post பிக்பாஸ்-சீஸன்-6 போட்டியாளர்கள் இவர்கள்தானா..? appeared first on Touring Talkies.

]]>
வரும் அக்டோபர் 9-ம் தேதியிலிருந்து விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீஸன் ஒளிபரப்பாக இருக்கிறது.

எப்போதும் 14 போட்டியாளர்கள்தான் இதில் பங்கேற்பாளர்கள். ஆனால், இந்த 6-வது சீஸனில் இந்த எண்ணிக்கை கூடியிருக்கிறதாம். மக்கள் போட்டியாளர்கள் என்ற கேட்டகிரியில் மேலும் 6 சாமானியமானவர்களும் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லவிருக்கிறார்களாம்.

மேலும் விஜய் டிவியில் தினமும்1 மணி நேரம் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்போதே டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் தளத்திலும் 24 மணி நேரமும் இந்த பிக்பாஸ்-6 சீஸன் நிகழ்ச்சியைப் பார்க்கலாமாம்.

இந்த சீஸனில் போட்டியாளர்களாக யார் யார் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்பதை அறிய பிக் பாஸ் ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.

நிகழ்ச்சி தொடங்க சரியாக ஒரு வாரம் இருக்கும் நிலையில் போட்டியாளர்கள் அனைவருமே இறுதி செய்யப்பட்டு விட்டதாகத் தெரிகிறது.

நமக்குக் கிடைத்திருக்கும் தகவல்களின்படி நடிகை விசித்ரா, டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், சமீபத்தில் சின்னத்திரை நடிகை மகாலட்சுமியைத் திருமணம் செய்த திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், பாடகி ராஜலட்சுமி, ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் தோழிகளாக நடித்த ரச்சிதா, ‘மைனா’ நந்தினி, டிக் டாக் புகழ் ஜி.பி.முத்து, ஆயிஷா, வி.ஜே.மகேஸ்வரி, இயக்குநரும் நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன், ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன், வி.ஜே.கதிரவன், கானா பாடகர் வசந்த், ராம்சந்தர், நடன  இயக்குநரும், நடிகையுமான மெட்டி ஒலி சாந்தி, திருநங்கை சிவின் கணேசன், சிங்கப்பூர் தொகுப்பாளினி நிவாஷினி, மாடலிங் அழகியான நீது, இவர்களுடன் விஜய் டிவியின் தொகுப்பாளினியான திவ்யதர்ஷினி என்று இந்தப் பட்டியலில் பலதரப்பட்டவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

இவர்களில் கடைசி நேரத்தில் யாராவது இல்லாமலும் இருக்கலாம். சென்ற முறை விஜய் டிவியே பங்கேற்பாளர்கள் பற்றிய தகவல்களை லீக் செய்து பிக்பாஸ் பற்றிய பரபரப்பை உண்டு செய்தது. ஆனால் இந்த முறை எதையும் செய்யாமல் அமுக்கமாக இருந்து வருகிறது.

எப்படியும் இன்னும் இரண்டு நாட்களில் இது தொடர்பான பிரிவியூ வீடியோக்களை விஜய் டிவி வெளியும் என்று பிக்பாஸ் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

வழக்கம்போல இந்த பிக்பாஸ்-6 சீஸனையும் உலக நாயகன் கமல்ஹாசன்தான் தொகுத்து வழங்கப் போகிறார். கமலின் புரோமோ வீடியோக்கள் தற்போது தொடர்ச்சியாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்றன.

The post பிக்பாஸ்-சீஸன்-6 போட்டியாளர்கள் இவர்கள்தானா..? appeared first on Touring Talkies.

]]>
ரஜினி, கமல், விஜய்யை முந்திய தனுஷ்..! https://touringtalkies.co/dhanush-beat-rajini-kamal-vijay/ Tue, 13 Sep 2022 11:01:39 +0000 https://touringtalkies.co/?p=24507 டிவிட்டரில்  மிக அதிகமான பார்வையாளர்களைக் கொண்ட தமிழ் சினிமா பிரபலம் என்ற பெயரை நடிகர் தனுஷ் பெற்றுள்ளார். நடிகர் தனுஷை டிவிட்டரில் 11 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள். அதாவது 1 கோடியே 10 லட்சம் பேர். மற்றைய நடிகர்கள் பெற்றுள்ள பாலோயர்ஸ் லிஸ்ட் இதோ : நடிகர் சூர்யா – 8.1 மில்லியன் – 81 லட்சம் பேர் நடிகர் கமல்ஹாசன் – 7.5 மில்லியன் – 75 லட்சம் பேர் நடிகர் சிவகார்த்திகேயன் – […]

The post ரஜினி, கமல், விஜய்யை முந்திய தனுஷ்..! appeared first on Touring Talkies.

]]>
டிவிட்டரில்  மிக அதிகமான பார்வையாளர்களைக் கொண்ட தமிழ் சினிமா பிரபலம் என்ற பெயரை நடிகர் தனுஷ் பெற்றுள்ளார்.

நடிகர் தனுஷை டிவிட்டரில் 11 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள். அதாவது 1 கோடியே 10 லட்சம் பேர்.

மற்றைய நடிகர்கள் பெற்றுள்ள பாலோயர்ஸ் லிஸ்ட் இதோ :

நடிகர் சூர்யா – 8.1 மில்லியன் – 81 லட்சம் பேர்

நடிகர் கமல்ஹாசன் – 7.5 மில்லியன் – 75 லட்சம் பேர்

நடிகர் சிவகார்த்திகேயன் – 7.5 மில்லியன் – 75 லட்சம் பேர்

நடிகர் ரஜினிகாந்த் – 6.2 மில்லியன் – 62 லட்சம் பேர்

நடிகர் விஜய் 4 – மில்லியன் – 40 லட்சம் பேர்

நடிகர் கார்த்தி – 2.7 மில்லியன் – 27 லட்சம் பேர்

விஜய் சேதுபதி  – 2.6 மில்லியன் – 26 லட்சம் பேர்

நடிகர் சிம்பு – 634.9 K – 6 லட்சத்து 35 ஆயிரம் பேர்

The post ரஜினி, கமல், விஜய்யை முந்திய தனுஷ்..! appeared first on Touring Talkies.

]]>