The post முதன்முறையாக இணையும் ஜீ.வி.பிரகாஷ் குமார் – ஐஸ்வர்யா ராஜேஷ் appeared first on Touring Talkies.
]]>தமிழ் திரையுலகைச் சார்ந்த ஏராளமான பிரபலங்கள் கலந்துக் கொண்டு படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இப்படத்தின் படபிடிப்பு இன்று தொடங்குகிறது.
‘செத்தும் ஆயிரம் பொன்’ எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்தில் முதன்முறையாக ஜீ.வி.பிரகாஷ் குமாரும், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
இவர்களுடன் காளி வெங்கட், இளவரசு, ரோஹிணி, ‘தலைவாசல்’ விஜய், கீதா கைலாசம், ‘பிளாக் ஷீப்’ நந்தினி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு கதையின் நாயகனாக நடிக்கும் ஜீ. வி. பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். கிருபாகரன் பட தொகுப்பு பணிகளை மேற்கொள்ள, கலை இயக்கத்தை பிரகதீஷ் கவனிக்கிறார். ஆடை வடிவமைப்பாளராக அனுஷா மீனாட்சி பணியாற்றும் இந்த படத்தில் இடம் பெறும் பாடலொன்றை ராப் பாடகரும், பாடலாசிரியருமான அறிவு எழுதுகிறார்.
ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை நட்மெக் புரொடக்ஷன்ஸ் எனும் பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் வருண் திரிபுரனேனி, அபிஷேக் ராம் ஷெட்டி மற்றும் பிருத்விராஜ் ஆகியோர் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்கள்.
நடிகை அமலா பால் கதையின் நாயகியாக நடித்து மலையாளத்தில் வெளியாகி, வெற்றிப் பெற்ற ‘தி டீச்சர்’ என்ற படத்தைத் தயாரித்திருக்கும் நட்மெக் புரொடக்ஷன்ஸ், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்து விரைவில் வெளியாக இருக்கும் ‘மாணிக்’ எனும் படத்தையும் தயாரித்திருக்கிறது.
தமிழ் மற்றும் இந்தி என இரண்டு மொழிகளிலும் தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை பிரம்மாண்டமான முறையில் வெளியிடுவதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து மூன்றாவது படைப்பாக இந்த திரைப்படத்தை தயாரிக்கிறது.மேலும் இந்நிறுவனம், நடிகை ஐஸ்வர்யா ராஜேசுடன் இரண்டாவது முறையாக இணைந்திருக்கிறது.
இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் க்யூப் நிறுவனத்தைச் சார்ந்த சதீஷ் மற்றும் அனில், ‘கட்டப்பாவ காணோம்’ பட இயக்குநர் மணி, ‘பேச்சுலர்’ பட இயக்குநர் சதீஷ், ‘ஓ மணப்பெண்ணே’ பட இயக்குநர் கார்த்திக் சுந்தர், எஸ் பி சினிமாஸ் சங்கர் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாகி தேசிய விருதைப் பெற்ற ‘காக்கா முட்டை’ படத்திற்கு இசையமைத்தவர் ஜீ.வி. பிரகாஷ் குமார். இந்த இரண்டு திறமைசாலிகளும் முதன்முறையாக இணைந்து நடிக்கவிருப்பதால் இப்படத்தின் அறிவிப்பின்போதே ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
The post முதன்முறையாக இணையும் ஜீ.வி.பிரகாஷ் குமார் – ஐஸ்வர்யா ராஜேஷ் appeared first on Touring Talkies.
]]>The post ‘சிக்லெட்ஸ்’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டார் appeared first on Touring Talkies.
]]>இதனை முன்னணி நட்சத்திர நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
டீன்ஸ் டிராமா ஜானரில் தயாராகி இருக்கும் இந்தப் படத்தை எஸ்.எஸ்.பி.ஃபிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஏ.ஸ்ரீனிவாசன் குரு பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.
இதில் தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகரான சாத்விக் வர்மா கதையின் நாயகர்களில் ஒருவராக நடிக்கிறார். இவர் ‘பாகுபலி 1’ மற்றும் ‘எஃப் 3’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.
‘வலிமை’ படத்தில் நடித்திருக்கும் நடிகர் ஜாக் ராபின்சன் மற்றொரு கதையின் நாயகராக நடித்திருக்கிறார். நடிகைகள் நயன் கரிஷ்மா, அம்ரிதா ஹைதர், மஞ்சீரா ஆகியோர் கதையின் நாயகிகளாகவும் நடித்திருக்கிறார்கள்.
இவர்களுடன் ஸ்ரீமன், மனோபாலா, சம்பத்ராம், சுரேகா வாணி, ஜானகி, மீனாள் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.
கொளஞ்சி குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ‘ஹர ஹர மகாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்த பாலமுரளி பாலு இசையமைத்திருக்கிறார்.
‘வலிமை’ மற்றும் ‘துணிவு’ படப் புகழ் விஜய் வேலுக்குட்டி படத் தொகுப்புப் பணிகளை கவனிக்க, கலை இயக்கத்தை ராஜு மேற்கொண்டிருக்கிறார்.
தெலுங்கின் முன்னணி இயக்குநரான ஸ்ரீகாந்த் அடாலாவின் இணை இயக்குநரும், ‘திறந்திடு சிசே’ எனும் படத்தை இயக்கியவருமான இயக்குநர் எம்.முத்து இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக நிறைவு பெற்றது. தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்தப் படம் பற்றி இயக்குநர் முத்து பேசுகையில், ”2-கே கிட்ஸ் இளைஞர்களுக்கும், அவர்களுடைய பெற்றோர்களுக்கும் இடையே ஏற்படும் தலைமுறை இடைவெளியை மையப்படுத்தி இப்படத்தின் திரைக்கதை உருவாகியுள்ளது.
இன்றைய இளைய தலைமுறையினர் காதல் குறித்தும், காமம் குறித்தும் கொண்டிருக்கும் எண்ணங்களுக்கும், இது தொடர்பாக அவர்களுடைய பெற்றோர்களின் நிலைப்பாட்டிற்கும் இடையே உள்ள கருத்தியல் இடைவெளியை சுவாரசியமான சம்பவங்களுடன் சிக்லெட்ஸில் விவரித்திருக்கிறோம்.
இதனால்தான் இப்படத்தின் டைட்டிலுடன் ‘2-k கிட்ஸ்’ என்ற டேக் லேனையும் இடம் பெற வைத்திருக்கிறோம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தமிழகம், விசாகப்பட்டினம் மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது…” என்றார்.
‘சிக்லெட்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் நடிகர்களின் தோற்றம்.. பின்னணியில் இடம் பெற்றிருக்கும் வண்ணங்கள்.. இளைய தலைமுறையின் எண்ணங்களை பிரதிபலிப்பதால் இணையவாசிகளிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
The post ‘சிக்லெட்ஸ்’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டார் appeared first on Touring Talkies.
]]>The post ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் தமிழ், இந்தி மொழிகளில் உருவாகும் ‘மாணிக்’ படம்..! appeared first on Touring Talkies.
]]>இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை இரண்டு நிறுவனங்களும் இணைந்து வெளியிட்டுள்ளன.
உளவியல் திரில்லர் ஜானரில் தயாராகும் இந்தப் படத்தில் இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேசுடன் நடிகை சம்யுக்தா சண்முகநாதன், நடிகர் விவேக் பிரசன்னா, குழந்தை நட்சத்திரங்கள் சாய் ஜனனி மற்றும் ஸ்வர் காம்ப்ளே உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
இந்தியில் வெளியான ‘லுடோ’, ‘ஜக்கா ஜாசூஸ்’ மற்றும் ‘சத்ரசல்’ ஆகிய படங்களின் கதாசிரியரான சாம்ராட் சக்கரவர்த்தி, இந்தப் படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமாகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் நைனிடாலில் தொடங்குகிறது. அடுத்த ஆண்டு படத்தை வெளியிட திட்டமிடப்பட்டிருக்கிறது.
The post ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் தமிழ், இந்தி மொழிகளில் உருவாகும் ‘மாணிக்’ படம்..! appeared first on Touring Talkies.
]]>The post “சண்டை காட்சிகளில் டூப் போடாமல் நடித்தேன்” – ஐஸ்வர்யா ராஜேஷின் பெருமிதப் பேச்சு..! appeared first on Touring Talkies.
]]>18 ரீல்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.பி.சௌத்ரி தயாரித்திருக்கும் திரைப்படம் ‘டிரைவர் ஜமுனா’.
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் ஆடுகளம் நரேன், கவிதா பாரதி, அபிஷேக் குமார், இளைய பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். டான் பாலா கலை இயக்கத்தை கவனிக்க, படத் தொகுப்பு பணிகளை ஆர். ராமர் மேற்கொண்டிருக்கிறார். ‘வத்திக்குச்சி’ படத்தை இயக்கிய இயக்குநர் கின்ஸ்லின் இயக்கியிருக்கிறார்.
இந்தப் படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வரும் நவம்பர் 11-ம் தேதி படம் வெளியாகவுள்ளது. இதையொட்டி இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசுகையில், ”நீண்ட நாள் கழித்து கோவிட் தொற்று பாதிப்பிற்கு பிறகு இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தான் கலந்து கொண்டிருக்கிறேன். இதுவே மகிழ்ச்சியை அளிக்கிறது.
‘கனா’ படத்திற்குப் பிறகு திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படம் ‘டிரைவர் ஜமுனா’. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு திரையரங்குகளில் ‘டிரைவர் ஜமுனா’ வெளியாகிறது.
இயக்குநர் கின்ஸ்லின் கோவிட் தொற்றுக்கு முன்னர் என்னை சந்தித்து இப்படத்தின் கதையை விவரித்தார். அந்தத் தருணத்தில் கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இல்லை. ஏனெனில் அது மிகுந்த பொறுப்புடன் கூடிய பணி.
மேலும் அந்த தருணத்தில் ‘க / பெ ரணசிங்கம்’ படத்தை முடித்துவிட்டு, நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து, மிக மெதுவாக திரைத்துறையில் பயணிக்கலாம் என திட்டமிட்டிருந்தேன்.
ஆனால் டிரைவர் ஜமுனா படத்தின் கதையைக் கேட்டு ஒரே நாளில் இந்தப் படத்தில் நடிக்கலாம் என தீர்மானித்தேன். என்னுடைய திரையுலக அனுபவத்தில் ஒரு கதையைக் கேட்டு உடனே நடிக்க ஒப்புக் கொண்ட திரைப்படம் இதுதான்.
படப்பிடிப்பு தளத்தில் ஒவ்வொரு காட்சிக்கும் இயக்குநர், கதையின் சூழலையும், காட்சியின் சூழலையும் எளிதாக விவரித்ததால், சவாலான காட்சிகளில்கூட சரியாக நடிக்க முடிந்தது. என்னுடைய நடிப்புத் திறன் ரசிகர்களால் பாராட்டப்பட்டால்.. அதற்கான முழு புகழும் இயக்குநரையே சாரும்.
‘வத்திக்குச்சி’ படத்திற்குப் பிறகு மீண்டும் இயக்கத்திற்கு திரும்பியிருக்கும் இயக்குநர் கின்ஸ்லினுக்கு இந்த படம் மிகப் பெரிய பாராட்டையும், வெற்றியையும், வரவேற்பையும் அளிக்கும்.
எனது நடிப்பில் உருவான மூன்று திரைப்படங்கள் கொரோனா தொற்று காலகட்டத்தில் டிஜிட்டல் தளங்களில்தான் வெளியானது. ஆனால் ‘டிரைவர் ஜமுனா’ படத்தை பொறுமையுடன் காத்திருந்து திரையரங்குகளில் வெளியிடுவதற்காக படத்தின் தயாரிப்பாளர் எஸ்.பி. சௌத்ரி அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
சின்ன பட்ஜெட் படங்களுக்கு ரசிகர்கள் திரையரங்கத்திற்கு வருவது குறைந்துவிட்டது. அதிலும் டிஜிட்டல் தளங்களின் ஆதிக்கத்திற்கு பிறகு பெருமளவில் குறைந்துவிட்டது. ஆனால் சின்ன பட்ஜெட்டாக இருந்தாலும், ஒரு படம் வித்தியாசமானதாகவும், தரமானதாகவும் இருந்தால் அதற்கான ஆதரவு குறையவில்லை.
எனக்கு கார் ஓட்டுவது மிகவும் பிடிக்கும் அதிலும் வேகமாக கார் ஓட்டுவேன். அதனால் சண்டை பயிற்சி இயக்குநர் அனல் அரசிடம் அனைத்து சண்டை காட்சிகளிலும், சாகச காட்சிகளிலும் டூப் போடாமல் நானே நடிக்கிறேன் என வாக்குறுதி அளித்தேன்.
இந்தப் படத்தில் லாரியுடன் நேருக்கு நேர் மோதும் ஒரே ஒரு காட்சியில் சிறிய பகுதியை தவிர, படம் முழுவதும் அனைத்து சண்டை காட்சிகளிலும், சாகச காட்சிகளிலும் நானே காரை ஒட்டினேன்.
படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் நெடுஞ்சாலைகளில்தான் நடைபெற்றது. அதனால் எனக்கு இந்தப் படத்தில் நடித்தது மறக்க இயலாத அனுபவமாகவும் இருந்தது…” என்றார்.
The post “சண்டை காட்சிகளில் டூப் போடாமல் நடித்தேன்” – ஐஸ்வர்யா ராஜேஷின் பெருமிதப் பேச்சு..! appeared first on Touring Talkies.
]]>The post ஐஸ்வர்யா ராஜேஷின் ‘டிரைவர் ஜமுனா’ படம் நவம்பர் 11-ல் வெளியாகிறது appeared first on Touring Talkies.
]]>வத்திக்குச்சி’ படத்தை இயக்கிய இயக்குனர் பா.கின்ஸ்லின் இயக்கியுள்ள படம் ‘டிரைவர் ஜமுனா’.
இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் ‘ஆடுகளம்’, நரேன், ஸ்ரீரஞ்சனி, ‘ஸ்டான்ட் அப் காமடியன்’ அபிஷேக், ‘ராஜாராணி’ பட புகழ் பாண்டியன், கவிதா பாரதி, பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
அதன்படி, ‘டிரைவர் ஜமுனா’ திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதனை படக் குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
The post ஐஸ்வர்யா ராஜேஷின் ‘டிரைவர் ஜமுனா’ படம் நவம்பர் 11-ல் வெளியாகிறது appeared first on Touring Talkies.
]]>The post டோவினோ தாமஸ் 3 வேடங்களில் நடிக்கும் ‘அஜயந்தே ரண்டம் மோஷனம்’ துவங்கியது appeared first on Touring Talkies.
]]>மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை UGM Productions நிறுவனம் தயாரிக்கிறது. Magic Frames நிறுவனம் இந்தப் படத்தின் தயாரிப்பில் இணைந்துள்ளது.
இந்தப் படத்தில் கீர்த்தி ஷெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சுரபி லட்சுமி என மூன்று நாயகிகள் நடிக்கின்றனர். இளைஞர்களின் உள்ளம் கவர்ந்த தென்னிந்திய திரையுலகின் தற்போதைய பிரபல நடிகையான கீர்த்தி ஷெட்டி நடிக்கும் முதல் மலையாளப் படம் இதுவாகும்.
மேலும் இப்படத்தில் பாசில் ஜோசப், கிஷோர், ஹரிஷ் உத்தமன், ஹரீஷ் பேரடி, ஜெகதீஷ் ஆகியோர் மற்ற முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இசை – திபு நினன் தாமஸ், தயாரிப்பு வடிவமைப்பாளர் – கோகுல் தாஸ், ஆடை வடிவமைப்பாளர் – பிரவீன் வர்மா, ஒப்பனை – ரோனெக்ஸ் சேவியர், புரொடக்சன் கண்ட்ரோலர் – பாதுஷா, படத் தொகுப்பு – ஷமீர் முகமது, புகைப்படங்கள் – ஜோமோன் T.ஜான், விளம்பர வடிவமைப்பு – பப்பட் மீடியா, டிஜிட்டல் மார்க்கெட்டிங் – தனய் சூர்யா & திலீப் லெக்கலா (trendy tolly), பத்திரிகை தொடர்பு – சதீஷ் குமார் (AIM).
இப்படத்திற்கு கதை மற்றும் திரைக்கதையை சுஜித் நம்பியார் எழுதியுள்ளார். அறிமுக இயக்குநரான ஜிதின் லால் இயக்குகிறார்.
மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் நடக்கும் கதையை சொல்லும் இப்படத்தில் டோவினோ தாமஸ் மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கிறார். படத்தின் டைட்டில் கேரக்டர்களான ‘மணியன்’, ‘அஜயன்’, ‘குஞ்சிகேலு’ மூன்று பாத்திரங்களில் மாறுபட்ட தோற்றங்களில் டோவினோவே நடிக்கவுள்ளார்.
இப்படத்தின் திரைக்கதை கேரளாவின் ‘களரி’ எனும் தற்காப்புக் கலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டுள்ளது. இப்படத்தில் நிறைய ஆக்ஷன் காட்சிகள் இருப்பதால், இதற்காக நடிகர் டோவினோ தாமஸ் பிரத்யேகமாக களரி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
பான்-இந்திய திரைப்படமாக பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த ‘அஜயந்தே ரண்டம் மோஷனம்’ படம் 3-டி தொழில் நுட்பத்தில் வெளியாகவுள்ளது.
பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.
The post டோவினோ தாமஸ் 3 வேடங்களில் நடிக்கும் ‘அஜயந்தே ரண்டம் மோஷனம்’ துவங்கியது appeared first on Touring Talkies.
]]>The post ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ‘ஃபர்ஹானா’ appeared first on Touring Talkies.
]]>‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘அருவி’, ‘கைதி’ உள்ளிட்ட பல படங்கள் இதற்கு உதாரணம். தற்போது இந்த வெற்றிப் படங்களின் வரிசையில் அடுத்த படத்தினை உருவாக்கியுள்ளது ட்ரீம் வாரியர் நிறுவனம்.
‘ஃபர்ஹானா’ என்று பெயர் வைக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இயக்குநர் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், கிட்டி, அனுமோல், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
‘ஒரு நாள் கூத்து’, ‘மான்ஸ்டர்’ என வித்தியாசமான கதைக் களங்களை மக்கள் ரசிக்கும் வகையில் இயக்கிய இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.
‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘மான்ஸ்டர்’, ‘ராட்சசி’ உள்ளிட்ட படங்களின் மூலம் ஒளிப்பதிவில் முத்திரை பதித்த கோகுல் பினாய் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார். மெலடி பாடல்கள் மூலம் இளைஞர்கள் மனதினைக் கொள்ளை கொண்டு வரும் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பாளராக பணி புரிந்துள்ளார். தேசிய விருது வென்ற சாபு ஜோசப் படத் தொகுப்பு செய்துள்ளார். கலை இயக்குநராக சிவசங்கர் பணியாற்றியுள்ளார். பிரபல கவிஞரும், எழுத்தாளருமான மனுஷ்யபுத்திரன் வசனம் எழுதியுள்ளார். படத்தின் திரைக்கதையை இயக்குநர் நெல்சனுடன் இணைந்து கதாசிரியர்கள் சங்கர் தாஸ் மற்றும் ரஞ்சித் ரவீந்திரன் எழுதியுள்ளனர்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து தற்போது இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. வரும் அக்டோபர் 7-ம் தேதி இந்த ‘ஃபர்ஹானா’ படத்தின் முதல் பாடல் வெளியாகவுள்ளது. இந்தப் பாடல் கண்டிப்பாக அனைத்து தரப்பு மக்களையும் ஈர்க்கும் படக் குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
The post ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ‘ஃபர்ஹானா’ appeared first on Touring Talkies.
]]>The post ‘சொப்பன சுந்தரி’ படப்பிடிப்பு முடிவடைந்தது appeared first on Touring Talkies.
]]>வெளிநாடுகளில் பல இந்திய திரைப்படங்களை விநியோகம் செய்த முன்னணி நிறுவனமான ஹம்சினி என்டர்டெய்ன்மென்ட் எனும் நிறுவனம், ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் எனும் நிறுவனத்துடன் இணைந்து தமிழில் தயாரித்திருக்கும் முதல் திரைப்படம் ‘சொப்பன சுந்தரி’.
இந்தப் படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் நடிகைகள் லட்சுமி பிரியா, தீபா ஷங்கர், தென்றல், நடிகர்கள் கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி, சுனில் ரெட்டி, அகஸ்டின், பிஜான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
பாலமுருகன் மற்றும் விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு பின்னனி இசையை விஷால் சந்திரசேகர் அமைக்க, பாடல்களுக்கு அஜ்மல் இசையமைத்திருக்கிறார்.
டார்க் காமெடி ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ‘லாக்கப்’ படத்தை இயக்கிய இயக்குநரான எஸ்.ஜி.சார்லஸ் இயக்கியிருக்கிறார்.
ஏற்கனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இந்தப் படத்தின் இறுதி கட்டப் பணிகள் தொடங்கி இருக்கின்றன. விரைவில் டீசர் மற்றும் சிங்கிள் ட்ராக் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post ‘சொப்பன சுந்தரி’ படப்பிடிப்பு முடிவடைந்தது appeared first on Touring Talkies.
]]>The post இயக்குநர் S.G.சார்லஸ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் appeared first on Touring Talkies.
]]>அடுத்து, நகைச்சுவை, சண்டை காட்சிகள் நிறைந்த பெயரிடப்படாத ஒரு புதிய படத்தில் கதையின் நாயகியாக நடிக்கவிருக்கிறார்.
இந்தப் படத்தை ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் மற்றும் ஹம்சினி என்டர்டைன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் அவருடன் நடிகை லட்சுமி பிரியா, நடிகர்கள் சுனில் ரெட்டி, கருணாகரன், ‘மைம்’ கோபி, தீபா ஷங்கர், கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
பாலமுருகன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு கலை இயக்கத்தை ரவி கவனிக்கிறார். ‘லாக்கப்’ படத்தை இயக்கிய இயக்குநரான S.G.சார்லஸ் இயக்கம் செய்கிறார்.
படத்தில் பணியாற்றும் ஏனைய நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று எளிய முறையில் பூஜையுடன் துவங்கியது.
The post இயக்குநர் S.G.சார்லஸ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் appeared first on Touring Talkies.
]]>The post R.J.பாலாஜி-ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம்..! appeared first on Touring Talkies.
]]>இந்தப் படத்தில் R.J.பாலாஜி கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். மற்றொரு நாயகி வேடத்தில் நடிக்க தேர்வு நடந்து வருகிறது.
ஒளிப்பதிவு – எஸ்.யுவா, படத் தொகுப்பு – ஜி.மதன், கலை இயக்கம் – ஜி.வீரமணி, மக்கள் தொடர்பு – ஜான்ஸன், தயாரிப்பு நிர்வாகம் – ஏ.பால்பாண்டி, வசனம் – பாபு தமிழ், நேரடி தயாரிப்பு பொறுப்பு – கே.வி.துரை, இணை தயாரிப்பு – கிருபாகரன் ராமசாமி, தயாரிப்பு – பிரின்ஸ் பிக்சர்ஸ், தயாரிப்பாளர் – எஸ்.லஷ்மண் குமார், எழுத்து, இயக்கம் – ஜியன் கிருஷ்ணகுமார்.
இயக்குநர் ஜியன் கிருஷ்ணகுமார், பிரித்விராஜ் நடித்த மலையாள படமான ‘தியான்’(‘TIYAAN’) என்ற ஹிட் படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வித்தியாசமான கதை அம்சம் கொண்ட படங்களில் நடித்து மக்களிடம் தனி இடம் பிடித்து வரும் R.J.பாலாஜி நடிக்கும் இப்படத்தின் கதையும் வித்தியாசமான கதைக் களம் கொண்டதுதான். இப்படம் டார்க்-காமெடி-திரில்லர் படமாக உருவாகிறது.
படத்தின் பெயரும், மற்ற நடிகர், நடிகைகள் விவரமும் விரைவில் அறிவிக்கப்படுமாம்.
இந்தப் படத்தின் பூஜை நிகழ்வு இன்று காலை சென்னையில் மிக எளிமையாக நடை பெற்றது.
வரும் மார்ச் 23-ம் தேதியன்று சென்னையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது.
The post R.J.பாலாஜி-ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம்..! appeared first on Touring Talkies.
]]>