The post “தற்குறிகள் என்று நான் சொல்லவில்லை” – இயக்குநர் மிஷ்கின் மறுப்பு appeared first on Touring Talkies.
]]>இயக்குநர் மிஷ்கின் நேற்றைக்கு வெளியான ஒரு வாரப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் “சினிமா விமர்சகர்களை தற்குறிகள்” என்று கூறியதாக செய்தி வெளியாகியிருந்தது.
“காலைல எந்திரிச்சவுடனே புளியோதரையை சாப்பிட்டுட்டு புளிச்ச ஏப்பத்தோட பேஸ்புக்ல விமர்சனம் எழுதுறவங்களை நான் கண்டுக்க மாட்டேன். அப்படி என் படங்களை யாராவது விமர்சனம் செஞ்சாங்கன்னா அவங்களை தற்குறிகள்ன்னுதான் சொல்லணும்..” என்று அந்தப் பேட்டியில் மிஷ்கின் கூறியதாக அந்தப் பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.
இந்தப் பத்திரிகை வெளியானவுடன் இந்தச் செய்தியைப் படித்துவிட்டு பத்திரிகையாளர்களும், விமர்சகர்களும் சமூக வலைத்தளங்களில் இயக்குநர் மிஷ்கினுக்கு தங்களது கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.
எதிர்ப்புகள் கிளம்பியதையடுத்து இயக்குநர் மிஷ்கின் இன்றைக்கு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். தான் பேசியதை வேறு அர்த்தத்தில் அந்தப் பத்திரிகை பிரசுரித்து இருப்பதாக கூறியிருக்கிறார் மிஷ்கின்.
அந்த அறிக்கையில், “என் படத்தை விமர்சிப்பவர்கள் தற்குறிகள் என ஒரு பத்திரிகையில் குறிப்பிட்டதைப் பார்த்து மிகவும் வருத்தப்பட்டேன். தலைப்பு சுவையாக இருக்க வேண்டுமென நான் சொன்னதை வேறு மாதிரி புரிந்து கொண்டு செய்தி போட்டிருக்கிறார்கள், நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை.
என் படத்தைப் பாருங்கள். படம் நன்றாக இருந்தால் பாராட்டுங்கள். படம் நன்றாக இல்லையெனில் கடுமையாக விமர்சியுங்கள். இப்போதல்ல… என் முதல் படத்திலிருந்தே இதைச் சொல்கிறேன். விமர்சிப்பது அனைவரின் உரிமை. உரிமை மீறலை நான் என்றும் அனுமதிக்க மாட்டேன்…” என்று கூறியிருக்கிறார்.
The post “தற்குறிகள் என்று நான் சொல்லவில்லை” – இயக்குநர் மிஷ்கின் மறுப்பு appeared first on Touring Talkies.
]]>The post “தமிழ்ச் சினிமாவில் தற்போதைய பெரிய வில்லன் கவுதம் மேனன்தான்..” – இயக்குநர் மிஷ்கினின் பாராட்டு..! appeared first on Touring Talkies.
]]>இந்தப் படத்தில், ஜி.வி.பிரகாஷ், வர்ஷா பொல்லம்மா, கவுதம் வாசுதேவ் மேனன், வாகை சந்திரசேகர், சுப்பிரமணிய சிவா, டி.ஜி.குணாநிதி மற்றும் தொழிலதிபர் சாம் பால் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவையும், எஸ்.இளையராஜா படத் தொகுப்பையும் செய்துள்ளனர்.
இப்படத்தை இயக்குநர் வெற்றிமாறனின் உதவி இயக்குநரான மதிமாறன் இயக்கி இருக்கிறார்.
இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, நாயகன் ஜி.வி.பிரகாஷ், இயக்குநர் மதிமாறன், நடிகர்கள் சுப்பிரமணிய சிவா, டி.ஜி.குணாநிதி மற்றும் படக் குழுவினருடன் இயக்குநர்கள் வெற்றிமாறன், மிஷ்கின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இயக்குநர் மிஷ்கின் பேசும்போது, “ரொம்ப அழகான மாலை இது. என் நண்பன் வெற்றி மாறனின் உதவி இயக்குநர் அங்கீகரிக்கப்படும் மேடை இது. வெற்றிமாறன் எனக்கு கிடைத்த வைரம். என் உதவி இயக்குநர்களிடம் வெற்றிமாறன் ஜெயித்துக் கொண்டே இருப்பான் என்று சொன்னேன். அப்படிப்பட்ட வெற்றியின் பட்டறையில் இருந்து வந்தவன்தான் இந்த மதிமாறன்.
மதிமாறனின் முன் வெற்றி தெரிகிறது. தமிழ்நாட்டில் தற்போதைய பெரிய வில்லன் கவுதம் மேனன்தான். யாரையாவது குத்திக்கிட்டே இருக்கிறான். இந்தப் படம் ஒரு கமர்சியல் படமாக இருக்கும். தற்போது இருக்கும் தலைமுறையினரின் பார்வை ரொம்ப அழகாக இருக்கிறது.
இந்தப் படத்தின் டிரைலரில் ஒரு ஷாட்டில் சுப்பிரமணிய சிவா திறமையாக நடித்திருக்கிறார். இளைய தலைமுறை நிறைய பேருக்கு ஆலமரமாக தாணு சார் செயல்படுகிறார். தாணு சார் எனக்கு முதல் படம் முடிந்ததும் 50,000 ரூபாய் அட்வான்ஸ் கொடுத்தார். முதலில் ஒரு கதை சொன்னேன். அது அவருக்குப் பிடிக்கவில்லை. இதுவரையிலும் அவர் அட்வான்ஸ் பணத்தையும் திருப்பிக் கேட்கவில்லை.
ஜி.வி.பிரகாஷ்கூட நான் சீக்கிரம் வேலை செய்ய வேண்டும். சாமியின் காலில் விழுந்தால் ஒன்றும் கிடைக்காது. என்னை பொருத்தவரை நல்ல படம் எடுப்பவன்தான் சாமி. மதிமாறன் நல்ல படம் எடுத்தால் நிச்சயமாக அவர் காலிலும் விழுவேன்” என்றார்.
The post “தமிழ்ச் சினிமாவில் தற்போதைய பெரிய வில்லன் கவுதம் மேனன்தான்..” – இயக்குநர் மிஷ்கினின் பாராட்டு..! appeared first on Touring Talkies.
]]>The post மிஷ்கின் இயக்கும் ‘பிசாசு 2’ படப்பிடிப்பு நிறைவு பெற்றது appeared first on Touring Talkies.
]]>கதையின் நாயகியாக ஆண்ட்ரியா நடிக்க உடன் பூர்ணா, சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கவுரவ வேடத்தில் நடித்துள்ளார்.
திண்டுக்கல்லில் 3 கட்டமாக நடைபெற்ற ‘பிசாசு 2’ படப்பிடிப்பு நேற்று நிறைவடைந்தது. படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து இயக்குநர் மிஷ்கின் அனைவரின் ஒத்துழைப்பிற்கு தனது அன்பை தெரிவித்து வாழ்த்துக்களை கூறினார்.
பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைக்க சிவா சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கண்டிப்பாக திரையரங்குகளில்தான் ‘பிசாசு 2’ வெளியாகும் என்று கூறிய தயாரிப்பு தரப்பு விரைவில் இப்படத்தின் இசை வெளியீடு தேதி அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளது.
The post மிஷ்கின் இயக்கும் ‘பிசாசு 2’ படப்பிடிப்பு நிறைவு பெற்றது appeared first on Touring Talkies.
]]>The post “துப்பறிவாளன்-2 படத்தை நானே இயக்குவேன்..” – நடிகர் விஷால் உறுதி..! appeared first on Touring Talkies.
]]>நடிகர் விஷாலின் நடிப்பில் இயக்குநர் மிஷ்கினின் இயக்கத்தில் ‘துப்பறிவாளன்’ என்ற திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றது. அந்த வெற்றியைத் தொடர்ந்து ‘துப்பறிவாளன்-2’ படத்தை மிஷ்கினும், விஷாலும் இணைந்து துவக்கினார்கள்.
இந்தப் படத்தின் கதைப்படி படம் முழுவதும் லண்டனில்தான் நடைபெற்றாக வேண்டும். இதனால் லண்டனிலேயே இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. அந்தச் சமயத்தில் படப்பிடிப்பினை எப்படி நடத்துவது என்பது தொடர்பாக விஷாலுக்கும், மிஷ்கினுக்கும் இடையில் கருத்து வேறுபாடு எழுந்தது.
இதையொட்டி எழுந்த சர்ச்சையினால் மிஷ்கின் “இந்தப் படத்தை நான் இயக்க மாட்டேன்” என்று சொல்லிவிட.. விஷால் நானே இந்தப் படத்தை இயக்குவேன் என்றும் சொல்லியிருந்தார்.
இதற்குப் பிறகு விஷால் ‘எனிமி’ படத்தில் நடித்து முடித்துவிட்டார். தற்போது அவர் நடிக்கும் அவருடைய 31-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் மிஷ்கினுடனான மோதல் பற்றி நடிகர் விஷால் கூறுகையில், “மிகுந்த பொருட்செலவில், நிறைய கடன் வாங்கித்தான் அந்தப் படத்தைத் துவக்கினேன். அது மிஷ்கினுக்கும் தெரியும். இருந்தும் லண்டனில் ஷூட்டிங் நடந்தபோது ஒரு நாளைக்கு ஒரு காட்சியை மட்டுமே மிஷ்கின் படமாக்கினார். இதனால் எனக்கு நிறைய பொருட் செலவு ஆனது. இது பற்றிக் கேட்கப் போய்தான் பிரச்சினை துவங்கியது.
இப்போது நானே அந்தப் படத்தை இயக்கப் போகிறேன். இசை இளையராஜாதான். அதில் எந்த மாற்றமும் இல்லை. இந்தப் படம் 2022-ம் ஆண்டு துவங்கி, அந்த ஆண்டே வெளியாகும்..” என்று சொல்லியிருக்கிறார்.
The post “துப்பறிவாளன்-2 படத்தை நானே இயக்குவேன்..” – நடிகர் விஷால் உறுதி..! appeared first on Touring Talkies.
]]>The post மிஷ்கினின் ‘பிசாசு-2’ படப்பிடிப்பு துவங்கியது..! appeared first on Touring Talkies.
]]>தயாரிப்பாளர் T.முருகானந்தம் அவர்களின் ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படம் ‘பிசாசு-2.’
இந்தப் படத்தில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உடன் பூர்ணா, காய்த்ரி ரெட்டி (பிகில்) உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
கார்த்திக் ராஜா இசையமைக்க, லண்டனை சேர்ந்த சிவா சாந்தகுமார் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்திற்காக திண்டுகல்லில் பிரம்மாண்டமான செட் அமைக்கும் பணி நடந்து முடிந்த நிலையில், தைப் பூசத் திருநாளான நேற்று ‘பிசாசு-2’ படத்தின் படப்பிடிப்பு இனிதே துவங்கியது.
ஒரே கட்டமாக படப்பிடிப்பினை நடத்தி முடிக்க படக் குழு திட்டமிட்டுள்ளது.
The post மிஷ்கினின் ‘பிசாசு-2’ படப்பிடிப்பு துவங்கியது..! appeared first on Touring Talkies.
]]>The post பூஜையுடன் துவங்கியது மிஷ்கினின் ‘பிசாசு-2’ திரைப்படம்..! appeared first on Touring Talkies.
]]>‘சைக்கோ’ வெற்றிக்கு பிறகு இயக்குநர் மிஷ்கின் இயக்கவுள்ள இந்த ‘பிசாசு-2’ படத்தின் அறிவிப்பு வெளியான முதலே, திரை ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்படம் பெற்றுள்ளது.
இந்தப் படத்தில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும். ‘சவரக்கத்தி’ படத்தில் நடித்த பூர்ணா இந்தப் படத்தில் மீண்டும் மிஷ்கினுடன் இணைந்துள்ளார்.
தயாரிப்பு – T.முருகானந்தம் (ராக்போர்ட் என்டர்டைன்மென்ட்), எழுத்து இயக்கம் – மிஷ்கின், ஒளிப்பதிவு – சிவா சாந்தகுமார், இசை – கார்த்திக் ராஜா, கிரியேடிவ் புரொடியூஸர் – K.B.ஶ்ரீராம், தயாரிப்பு மேற்பார்வை – L.B. ஶ்ரீகாந்த் லக்ஷ்மணன், விளம்பர வடிவமைப்பு – கண்ணதாசன், மக்கள் தொடர்பு – சதிஷ் (AIM), பிரியா.
‘பிசாசு-2’ படத்தின் வேலைகள் இன்று இனிதே பூஜையுடன் தொடங்கியது. இந்தப் படத்திற்காக பிரம்மாண்டமான செட்டுகள் திண்டுக்கல்லில் அமைக்கப்பட்டு வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கி ஒரே கட்டமாக முடியவுள்ளது.
The post பூஜையுடன் துவங்கியது மிஷ்கினின் ‘பிசாசு-2’ திரைப்படம்..! appeared first on Touring Talkies.
]]>