The post ‘வணங்கான்’ படத்திலிருந்து சூர்யா விலகினார்..! appeared first on Touring Talkies.
]]>இதற்குப் பின்பு ‘நந்தா’, ‘பிதாமகன்’ ஆகிய படங்களில் சூர்யாவை வைத்து இயக்கி பெரும் வெற்றியடைந்தார் பாலா. அதோடு சூர்யாவின் அப்பா சிவக்குமாருடன் பாலாவுடனான நட்பு தனித்துவம் வாய்ந்தது. பாலாவுக்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைத்ததே சிவக்குமார்தான். அந்த அளவுக்கு பாலா சிவக்குமார் குடும்பத்தினருடன் நெருக்கமாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் ‘2-டி என்டேர்டைன்மெண்ட்’ சார்பில் சூர்யா – ஜோதிகா இணைந்து தயாரிக்க, சூர்யாவை வைத்து ‘வணங்கான்’ என்ற படத்தை துவங்கினார் பாலா. அப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நடைபெற்ற நிலையில் திடீரென படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதற்கு சூர்யா மற்றும் பாலா இடையே ஏற்பட்ட பிரச்சனைதான் காரணம் என பேசப்பட்டது. ஆனால் இந்த வதந்தியை சூர்யா தரப்பு மறுத்தது. இதையடுத்து இப்படத்தின் நிலை என்ன என்பதே தெரியாமல் இருந்தது.
இந்நிலையில் தற்போது ‘வணங்கான்’ படத்திலிருந்து நடிகர் சூர்யா விலகுவதாக இயக்குநர் பாலாவே அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று இரவு இயக்குநர் பாலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது இதுதான் :
“என் தம்பி சூர்யாவுடன் இணைந்து ‘வணங்கான்’ என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன். ஆனால், கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால், இந்தக் கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என்கிற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது.
என் மீதும் இந்தக் கதையின் மீதும் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார் சூர்யா. இவ்வளவு அன்பும், மதிப்பும், நம்பிக்கையும் வைத்திருக்கும் என் தம்பிக்கு, ஒரு அண்ணனாக என்னால் ஒரு சிறு தர்மசங்கடம்கூட நேர்ந்துவிடக் கூடாது என்பது என் கடமையாகவும் இருக்கிறது.
எனவே ‘வணங்கான் திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக் கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி, ஒருமனதாக முடிவெடுத்திருக்கிறோம். அதில் அவருக்கு மிகவும் வருத்தம்தான் என்றாலும், அவரது நலன் கருதி எடுத்த முடிவு இது.
‘நந்தா’வில் நான் பார்த்த சூர்யா, ‘பிதாமகன்’-இல் நீங்கள் பார்த்த சூர்யா போல் வேறு ஒரு தருணத்தில் உறுதியாக இணைவோம்.
மற்றபடி ‘வணங்கான்’ படப் பணிகள் தொடரும்…
இவ்வாறு அந்த அறிக்கையில் இயக்குநர் பாலா தெரிவித்துள்ளார்.
The post ‘வணங்கான்’ படத்திலிருந்து சூர்யா விலகினார்..! appeared first on Touring Talkies.
]]>The post “என் மானசீக குரு இயக்குநர் பாலாதான்” – இயக்குநர் விஜய் பாராட்டு..! appeared first on Touring Talkies.
]]>தமிழ்ச் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான இயக்குநர் விஜய் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ள இத்தொடரை விஜய், பிரசன்னா JK, மிருதுளா ஸ்ரீதரன் மூவரும் இணைந்து இயக்கியுள்ளனர். முழுக்க, முழுக்க நடனத்தைப் பின்னணி கதைக் களமாகக் கொண்டு இத்தொடர் உருவாகியுள்ளது.
இத்தொடரில் இளம் நடிகர்களான தித்யா சாகர் பாண்டே, சின்னி பிரகாஷ், விவேக் ஜோக்தாண்டே ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் நாகேந்திர பிரசாத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
வரும் நவம்பர் 18-ம் தேதி ஜீ-5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள இத்தொடரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, வடபழனி போரம் மாலில், பொதுமக்கள் மத்தியில் கலை நிகழ்ச்சிகளுடன் பிரமாண்டமாக நடைபெற்றது.
இவ்விழாவினில் இயக்குநர் மிருதுளா ஸ்ரீதரன் பேசும்போது, “இந்த விழா இவ்வளவு பெரிய அரங்கில் நடப்பது மிகப்பெரும் மகிழ்ச்சி. இங்கு நிறையப் பிரபலங்கள் வந்து எங்களை வாழ்த்துவது மகிழ்ச்சி. இந்த ஐடியா விதையாக இருந்த போதே எங்களை நம்பி வாய்ப்பளித்த, உடனிருந்து உருவாக்கிய ஜீ5 மற்றும் சிஜு சார் மற்றும் கௌஷிக் ஆகியோருக்கு நன்றி. இந்த தொடரில் உழைத்த குழுவினர் அனைவருக்கும் நன்றி. இந்த தொடர் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி…” என்றார்.
பாடலாசிரியர் மதன் கார்க்கி பேசும்போது, “டான்ஸை வைத்து ஓடிடியில் எதுவுமே இல்லை. ஏனென்றால் டான்ஸை வைத்து உருவாக்குவது மிக கடினம். அதிலும் குழந்தைகளை வைத்து உருவாக்குவது அதைவிடக் கடினம். ஆனால் விஜய் அதில் கைதேர்ந்தவராக இருக்கிறார். ஒரு பெண் குழந்தை தன்னுடைய உலகம் என்ன எனத் தேடி, வெளியே வந்து ஜெயிப்பதை பேசும், இந்த படைப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி..” என்றார்.
இசையமைப்பாளர் சாம் CS பேசும்போது, “123 படம் பார்த்தபோது இந்த மூன்று டான்ஸ் மாஸ்டர்களுடன் வேலை செய்ய வேண்டும் என நினைத்தேன் அது இப்போது நிறைவேறிவிட்டது. நான் வேலை பார்த்ததில் அதிகம் பேர் பார்த்தது ‘லஷ்மி’ படத்தின் ‘மொராக்கோ’ சாங்தான். அதே போன்ற கதை கொண்ட இந்த படைப்பும் கண்டிப்பாக கவனம் ஈர்க்கும். எனக்கு வாய்ப்பு தந்ததற்கு விஜய் சாருக்கு நன்றி. ஜீ-5 நிறுவனத்திற்கு நன்றி. இது வெறும் டான்ஸ் காம்படேஷன் பற்றிய படைப்பு மட்டுமல்ல… நிறைய உணர்வுகள் இதில் இருக்கிறது. உங்களுக்கு கண்டிப்பாகப் பிடிக்கும்…” என்றார்.
நடன இயக்குநர் நாகேந்திர பிரசாத் பேசும்போது, “இயக்குநர் விஜய் சார், சாம், கார்க்கி சார் மூவரும் திரைத்துறையில் எப்போதும் முன்னணியில் இருக்கும் கூட்டணி. அவர்களுடன் வேலை பார்க்க வாய்ப்பு கிடைத்தது ஆசீர்வாதம். விஜய் சார் இதனை அற்புதமாக இயக்கியுள்ளார். கிட்ஸ் உடன் நடனமாடியது சவாலாக இருந்தது. உங்கள் அனைவருக்கும் இந்த தொடர் கண்டிப்பாகப் பிடிக்கும் நன்றி…” என்றார்.
நடிகர் ஜீவா பேசும்போது, “ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்” டான்ஸ் ஸ்டெப் . இதைப் புரிந்து கொள்ளவே எனக்கு ரொம்ப காலம் ஆனது. இந்த தொடரில் நிறையப் புதுமுகங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்கள். பார்க்க மிகப் புதுமையாக இருக்கிறது. விஜய் சார் மற்றும் குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள். இத்தொடர் பார்க்க நானும் ஆவலாக உள்ளேன் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.” என்றார்.
இயக்குநர் விஜய் பேசும்போது, “பாலா சார் எனது மானசீக குரு. அவர் வந்து வாழ்த்துவது மகிழ்ச்சி. இத்தொடரில் மூன்று ஹீரோக்கள் இருக்கிறார்கள். பரேஷ் ஜீ, சாம் CS, மதன் கார்க்கி என்று அந்த மூவரின் பங்களிப்பும் அற்புதம். சந்தீப்பின் ஒளிப்பதிவு மிக தரமானதாக இருந்தது. பிரசன்னா JK, மிருதுளா ஸ்ரீதரன் மிகப் பெரும் உதவியாக இருந்துள்ளார்கள். அவர்களுக்கு நன்றி. குழந்தைகள் மிக அற்புதமாக நடித்துள்ளார்கள். இந்த மாதிரி தொடர் உருவாகியிருப்பது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை. உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன் நன்றி..!” என்றார்.
The post “என் மானசீக குரு இயக்குநர் பாலாதான்” – இயக்குநர் விஜய் பாராட்டு..! appeared first on Touring Talkies.
]]>The post தயாரிப்பாளரை அடித்து விரட்டிய இயக்குநர் பாலா appeared first on Touring Talkies.
]]>விக்ரம் – சூர்யா உள்ளிடோர் நடிப்பில் 2003-ம் ஆண்டு வெளியான ‘பிதாமகன்’ படத்தை எவர்கிரீன் இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வி.ஏ.துரை தயாரித்திருந்தார். அந்தப் படத்தை பாலா இயக்கினார்.
‘பிதாமகன்’ வெளியாகி விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் வெற்றி அடைந்தது. அந்தப் படப்பிடிப்பு சமயத்தில் தயாரிப்பாளர் வி.ஏ. துரை, மீண்டும் ஒரு திரைப்படத்தை தனக்கு இயக்கிக் கொடுக்குமாறு இயக்குநர் பாலாவிற்கு அப்போதே 25 லட்ச ரூபாய் முன் தொகை கொடுத்திருந்தாராம்.
ஆனால், அதற்குப் பிறகு பாலா மற்றும் வி.ஏ.துரை ஆகியோர் இணைந்து பணியாற்றவில்லை. இந்த நிலையில், 19 ஆண்டுகளுக்கு பிறகு தான் கொடுத்த முன் தொகையை திருப்பிக் கொடுக்குமாறு நேற்று தயாரிப்பாளர் வி.ஏ.துரை, இயக்குநர் பாலாவின் அலுவலகத்திற்கு சென்றார். ஆனால் அங்கு அவருக்கு முறையான பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.
இதன் காரணமாக நேற்று ஒரு நாள் முழுவதும் பாலா அலுவலகத்தில் தயாரிப்பாளர் வி.ஏ.துரை உள்ளிருப்பு போராட்டம் நடத்தியுள்ளார். இரவு 10 மணி ஆன போதும் அவர் அலுவலகத்தில் இருந்து கிளம்பவில்லை.
இந்த நிலையில் இயக்குநர் பாலா அலுவலக ஊழியர்கள் வி.ஏ.துரையை அலுவலகத்திலிருந்து வலுக்கட்டாயமாக கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளியுள்ளனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் இந்தப் பிரச்சனையை விரைவில் முடித்துக் கொடுப்பதாக தயாரிப்பாளர் வி.ஏ.துரைக்கு உத்திரவாதம் அளிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக அவர் பாலா அலுவலகத்தில் இருந்து நள்ளிரவில் புறப்பட்டார்.
இதைத் தொடர்ந்து இன்று இயக்குநர் பாலா மற்றும் தயாரிப்பாளர் வி.ஏ.துரை ஆகியோருக்கு இடையிலான பிரச்சினை குறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என கூறப்படுகிறது.
The post தயாரிப்பாளரை அடித்து விரட்டிய இயக்குநர் பாலா appeared first on Touring Talkies.
]]>The post நடிகர் சூர்யா – இயக்குநர் பாலா படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் துவக்கம்..! appeared first on Touring Talkies.
]]>தமிழ் சினிமாவை உலக தரத்திற்கு உயர்த்தும் தரமான படைப்பாளிகளில் ஒருவரான இயக்குநர் பாலாவும், தமிழ் திரையுலகின் நட்சத்திர நடிகருமான சூர்யா கூட்டணியில் உருவான ‘நந்தா’, ‘பிதாமகன்’ என இரு படங்களும் பிளாக் பஸ்டர் வெற்றியை குவித்ததுடன், உலக அளவில் பெரும் பாரட்டுக்களை பெற்றது.
19 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைந்து பணியாற்றுவதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பு ரசிகர்களை பெரும் உற்சாகம் கொள்ள வைத்ததுடன், படம் மீது பெரும் ஆவலை தூண்டியது.
இந்தப் படத்தை 2டி என்டர்டயின்மண்ட் சார்பில் ஜோதிகா மற்றும் சூர்யா தயாரிக்க ராஜசேகர் கற்பூரசுந்தர பாண்டியன் இணைந்து தயாரிக்கிறார்.
இதுவரை கண்டிராத முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் சூர்யா நடிக்க, ஜோடியாக டோலிவுட்டின் டாப் ஹீரோயின் கிரித்தி ஷெட்டி நடிக்கிறார். இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார் மமிதா.
ஒளிப்பதிவு – பாலசுப்பிரமணியெம், இசை – ஜி.வி.பிரகாஷ். கலை இயக்கம் – மாயப்பாண்டி. படத் தொகுப்பு – சதீஷ் சூர்யா.
சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி பரபரப்பாக நடந்து வந்த நிலையில், இப்படம் நிறுத்தப்படுவதாக படம் குறித்து சில தவறான தகவல்கள் இணையத்தில் பரவ ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில் வதந்திகள் அனைத்தையும் பொய்யாக்கும்விதமாக நடிகர் சூர்யா இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளதாக தன் சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளார்.
கன்னியாகுமரியில் துவங்கப்பட்ட முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு, சிறு இடைவேளைக்கு பிறகு, விரைவில் துவங்குமென நடிகர் சூர்யா தன் சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துளார்.
The post நடிகர் சூர்யா – இயக்குநர் பாலா படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் துவக்கம்..! appeared first on Touring Talkies.
]]>The post 18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சூர்யா – பாலா இணையும் படம் துவங்கியது appeared first on Touring Talkies.
]]>தற்காலிகமாக ‘சூர்யா-41’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் அவரது 2டி நிறுவனத்தின் 19-வது பெருமைமிக்க படைப்பாகும்.
இந்தப் படத்தை 2டி என்டர்டயின்மண்ட் சார்பில் ஜோதிகா மற்றும் சூர்யா தயாரிக்க ராஜசேகர் கற்பூரசுந்தர பாண்டியன் இணைந்து தயாரிக்கிறார்.
பாலாவின் இயக்கத்தில் சூர்யா ஏற்கெனவே ‘நந்தா’, ‘பிதாமகன்’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இப்போது நடிக்கவிருக்கும் இந்தப் படம் முற்றிலும் மாறுபட்ட கதைக் களனில் உருவாக்கியிருகியுள்ளதாம். இப்படத்தில் சூர்யா ஏற்றுள்ள பாத்திரம் இதுவரை தமிழ் சினிமாவின் காணாத ஒன்றாக இருக்கும் என்கிறது படக் குழு.
சூர்யாவுக்கு ஜோடியாக முதல்முறையாக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைக்கிறார் டோலிவுட்டின் தற்போதைய டாப் ஹீரோயினான கிரித்தி ஷெட்டி. இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார் மமிதா.
மிகுந்த பொருட்செலவில் உருவாக்கப்படும் இப்படத்தின் ஒளிப்பதிவை பாலசுப்பிரமணியெம் மேற்கொள்ள ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கலை இயக்கம் – மாயப்பாண்டி, படத் தொகுப்பு – சதீஷ் சூர்யா.
இந்த புதிய பயணம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சூர்யா, “மீண்டும் பாலா சாரின் ‘ஆக்க்ஷன்’ சப்தத்தை 18 ஆண்டுகளுக்குப் பிறகு கேட்கத் துவங்கியதால் பெரும் மகிழ்ச்சி. வேண்டும் உங்கள் ஆசிகள்…” என்று பதிவிட்டுள்ளார்.
The post 18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சூர்யா – பாலா இணையும் படம் துவங்கியது appeared first on Touring Talkies.
]]>The post இயக்குநர் பாலா இயக்கும் படத்தைத் தயாரிக்கிறார் நடிகர் சூர்யா appeared first on Touring Talkies.
]]>இயக்குநர் பாலா கடைசியாக நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் அறிமுகமான ‘வர்மா’ படத்தை இயக்கினார். ஆனால், அந்தப் படம் தியேட்டரில் வெளியாகாமல் கடைசியாக ஓடிடியில் வெளியானது.
இந்தப் படத்தின் விமர்சனமும் வழக்கம்போல பாலாவை கடுமையாகத் தாக்குவதைப் போலவே இருந்தது. உண்மையில் பாலாவின் இயக்கத்தில் கடைசியாக தியேட்டரில் வெளியான திரைப்படம் 2018-ல் வெளியான ‘நாச்சியார்’ திரைப்படம்தான்.
இதன் பின்பு இதோ துவக்குகிறார்.. அதோ துவக்குகிறார்.. என்றெல்லாம் சொல்லி வந்த நிலையில் தற்போதுதான் ஒரு முதல்கட்ட முன்னெடுப்புகள் நடந்து வருகிறதாம்.
பாலா இயக்கப் போகும் இந்தப் படத்தின் நாயகனாக அதர்வா நடிக்கிறாராம். தயாரிக்கப் போவது நடிகர் சூர்யாதான் என்கிறார்கள்.
இந்தப் படத்தின் படப்பிடிப்புக்கான லொகேஷன் பார்ப்பதற்காக இயக்குநர் பாலா கடந்த வாரம் கன்னியாகுமரி, முட்டம் ஆகிய பகுதிகளுக்கு விசிட் அடித்திருக்கிறார்.
ஆக மிக விரைவில் பாலா-சூர்யா-அதர்வா இணையும் படம் துவங்கும் என்று எதிர்பார்க்கலாம்.
The post இயக்குநர் பாலா இயக்கும் படத்தைத் தயாரிக்கிறார் நடிகர் சூர்யா appeared first on Touring Talkies.
]]>The post புதுமுகங்கள் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘சூறாவளி’ திரைப்படம் appeared first on Touring Talkies.
]]>இந்தப் படத்தில் தர்மா, தர்ஷினி, ஆலிஷா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இசை – ஜேக்கப் சாம்யேல், ஒளிப்பதிவு – சந்திரன் சாமி, கதை திரைக்கதை வசனம் இயக்கம் – பாலு & பால்கி, தயாரிப்பு – P.லால் பகதூா்.
இந்த ‘சூறாவளி’ படம் பற்றி இயக்குநர்கள் பாலு, பால்கி இருவரும் பேசும்போது, “வட மாநிலங்களில் போதை மருந்து கடத்தலில் ஈடுபட்ட ஒரு கும்பல் காவல்துறைக்குப் பயந்து அங்கிருந்து தப்பித்து தமிழ்நாட்டுக்குள் வருகிறது.
இங்கே வந்த அந்தக் கும்பல் பல வீடுகளில் வேலை செய்வது போல் சென்று அங்குள்ள குளியல் அறைகளில் கேமராவை மறைத்து, பெண்கள் குளிப்பதை படமெடுத்து, அதை வைத்து அப்பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்து பணம் பறிப்பதை ஒரு வேலையாக செய்கின்றனர்.
பல இடங்களில் இது போன்ற குற்றங்கள் தொடர்ந்து நடக்கவே காவல்துறை உஷாராகிறது.
ஒரு பண்னையாரிடம் கூலி வேலைக்கு சென்ற கதாநாயகனின் நேர்மையை நேசித்த பண்னையாரின் மகள்(கதாநாயகி), நாயகனை நேசிக்கிறாள். இப்படிப்பட்ட சூழலில் அந்த கும்பல் கதாநாயகி வீட்டிலும் அதே கைவரிசையை காட்டுகிறது.
நாயகி இவர்களால் பாதிக்கப்பட்டதை அறியும் ஹீரோ அக்கும்பலை ‘சூறாவளி’ போல் சூறையாட தயாராகிறார். அவர்களை காவல்துறை சூறையாடுகிறதா…? அல்லது ஹீரோ சூரசம்ஹாரம் செய்தாரா…? என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.
தமிழில் கவர்ச்சியில் புகழ் பெற்ற சில்க் ஸ்மிதா அளவுக்கு கன்னடத்தில் தற்போது கவர்ச்சியில் கலக்கும் நடிகை ஆலிஷா இந்த ‘சூறாவளி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருக்கார். இந்தப் பாடல் காட்சியை கர்நாடகாவில் மைசூர் அருகே அரசுக்கு சொந்தமான ஒரு காட்டு பங்களவில் அனுமதி வாங்கி படமாக்கியிருக்கிறோம். இந்தப் பாடல் காட்சிதான் படத்தில் ஹைலைட்டான விஷயம்..” என்கிறார்கள்.
The post புதுமுகங்கள் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘சூறாவளி’ திரைப்படம் appeared first on Touring Talkies.
]]>The post பாலாவின் அடுத்தப் படத்தில் அதர்வா, உதயநிதி ஸ்டாலின்..?! appeared first on Touring Talkies.
]]>பாலா கடைசியாக இயக்கிய ‘வர்மா’ திரைப்படம் சமீபத்தில்தான் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்தப் படத்தை இயக்கியதால் பாலாவுக்கும், விக்ரமுக்குமான பல வருட நட்பு சட்டென்று முறிந்தது. தன்னால் வளர்ந்த விக்ரம், தயாரிப்பாளருடன் சேர்ந்து தன்னைப் புறக்கணித்ததை பாலாவால் எளிதில் ஜீரணிக்க முடியவில்லை.
இதையடுத்து விக்ரமை வைத்து இயக்குவதாக இருந்த தனது அடுத்த ஸ்கிரிப்ட்டை தூக்கியெறிந்த பாலா.. வேறொரு கதையை தற்போது தயார் செய்துவிட்டாராம். நடிகர்கள் தலையசைத்துவிட்டால் ஷூட்டிங்கிற்குப் போகலாம் என்று நினைக்கிறார்.
ஆனால் நடிகர்கள்..?
தற்போதைக்கு தன்னை குருவாக நினைத்து மரியாதை காட்டும் அதர்வாவிடம் இது பற்றிப் பேசியிருக்கிறாராம் பாலா. கூடவே படத்தில் உதயநிதி ஸ்டாலினும் இருக்கப் போகிறார் என்கிறார்கள்.
உதயநிதி ஸ்டாலின் வேடத்திற்கு முன்பு ஆர்யா மற்றும் சூர்யாவிடம் பேசிப் பார்த்தார்களாம். அவர்கள் மறுத்துவிடவே உதயநிதியிடம் சான்ஸ் போயிருக்கிறது.
பாலாவின் திரைப்படம் என்றால் படம் முடியவே ஒரு வருடத்திற்கு மேலாகும்.. கெட்டப்பை மாற்றவே முடியாது என்பதால் கைவசம் இருக்கும் படங்களையெல்லாம் முடித்துவிட்டு வருவதாக அதர்வா சொல்லியிருப்பதாகத் தகவல். இந்தப் படத்தை நடிகர் ஆர்.கே.சுரேஷ் தயாரிக்கப் போவதாகவும் கூடுதல் தகவல்.
எப்படி, எந்த ரூபத்தில், எந்தக் கோலத்தில் வந்தாலும் பாலாவின் ரசிகர்கள் அவரை வரவேற்கக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
The post பாலாவின் அடுத்தப் படத்தில் அதர்வா, உதயநிதி ஸ்டாலின்..?! appeared first on Touring Talkies.
]]>The post “இயக்குநர் பாலா ஒரு சாடிஸ்ட்…” – கொதிக்கிறார் தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி..! appeared first on Touring Talkies.
]]>‘நான் கடவுள்’ படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர் தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி.
அந்தப் படத்தில் நடித்த அனுபவங்கள் பற்றி சமீபத்தில் ‘சாய் வித் சித்ரா’ யூடியூப் தளத்தில் பேசிய அழகன் தமிழ்மணி இயக்குநர் பாலாவை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். உச்சக்கட்டமாக பாலாவை ‘ஒரு சாடிஸ்ட்’ என்றே குற்றம்சாட்டியுள்ளார்.
அவர் ‘நான் கடவுள்’ படம் பற்றியும், பாலா பற்றியும் பேசும்போது, “2007-ம் வருடம் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்குத் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் நான் பொருளாளர் பதவிக்குப் போட்டியிட்டிருந்தேன். அதனால் வாக்கு சேகரிப்பு.. தேர்தல் வேலைகள் என்று அலைச்சல் இருந்ததால் சில நாட்களாக ஷேவ் செய்யாமல் அப்படியே விட்டிருந்தேன்.
தேர்தல் நாளன்று ஓட்டுப் போடுவதற்காக இயக்குநர் பாலாவும் அங்கே வந்தார். அவரிடத்திலும் நான் வாக்கு சேகரித்தேன். ஓட்டுப் போட்டுவிட்டு திரும்பிப் போகும்போது பாலா என்னிடத்தில் வந்து சில வார்த்தைகள் பேசிவிட்டு என்னைக் கூர்ந்து கவனித்துவிட்டுப் போனார்.
அந்தத் தேர்தலில் நான் ஜெயித்து சங்கத்திற்குப் பொருளாளராகவும் ஆகிவிட்டேன். அதன் பிறகு 3 அல்லது 4 நாட்கள் கழித்து எனது அலுவலகத்திற்கு பாலாவின் உதவியாளர்கள் மூன்று பேர் வந்து என்னை பாலா சந்திக்க விரும்புவதாகச் சொன்னார்கள். அதனால், நானும் பாலாவை சந்திக்க அவரது அலுவலகத்திற்குச் சென்றேன்.
முதலில் சாதாரணமாகப் பேசிய பாலா பின்பு ‘இப்போ நான் எடுக்கப் போற ‘நான் கடவுள்’ படத்துல நீங்க ஒரு முக்கியமான கேரக்டர்ல நடிக்கணும்…’ என்றார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ‘இல்ல தம்பி.. எனக்கு நடிப்பெல்லாம் வராது.. எப்பவும் இதே மாதிரிதான் பேசுவேன்’ என்று இழுத்தேன். ‘இது போதும். இப்போ பேசுற மாதிரியே பேசுங்க. உங்களை மாதிரி ஆளைத்தான் நான் தேடிக்கிட்டிருந்தேன். நீங்க கண்டிப்பா நடிச்சாகணும்’ என்றார்.
சரி.. இவ்வளவு தூரம் வற்புறுத்துறாரு.. பாலாவும் பெரிய இயக்குநர். அவருக்காகவாச்சும் நடிப்போமே என்றெண்ணி நானும் ஒத்துக் கொண்டேன்.
தயாரிப்பாளர் சங்கத்தில் பொருளாளர் என்ற முக்கிய பதவியில் இருந்தாலும் பாலாவுக்காக சிரமம் பார்க்காமல் அவுட்டோர் ஷூட்டிங்கிற்காக காசிக்குக் கிளம்பினோம். அங்கே 30 நாட்கள் ஷூட்டிங். அந்தப் படத்தின் தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன்.
அங்கே போன 3 நாட்களில் கொண்டு போன பணம் 5 லட்சம் முழுவதும் காலியாகிவிட்டது. படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளரும் பணம் கொண்டு வருவதாகச் சொல்லிவிட்டு சென்னைக்கு புறப்பட்டு சென்றுவிட்டார். அங்கே ஷூட்டிங்கே நின்றுபோய்விட்டது. திரும்பவும் சென்னையில் இருந்து பணம் வந்தால்தான் ஷூட்டிங் என்ற நிலைமை.
அப்போது பாலா பட்ட கஷ்டத்தைப் பார்த்து மனது தாங்காமல் நானே வலியப் போய் உதவி செய்தேன். ஜெமினி லேப் அதிபருக்கு நான் காசியில் இருந்து போன் செய்து 30 லட்சம் ரூபாயை கடனாக பெற்று பாலாவிடம் கொடு்த்தேன். அந்தப் பணத்தில்தான் அங்கே படப்பிடிப்பு நடந்தது.
படப்பிடிப்பு முழுவதுமே மிகவும் கஷ்டமான சூழலில் நடந்தது. ஒரு சட்டையும், வேட்டியும்தான் எனக்குக் காஸ்ட்யூம். அதையே மண்ணுல போட்டு புரட்டி.. கசக்கியெடுத்து கொடுத்தாங்க. அதைத் துவைக்கக்கூட மாட்டாங்க. துவைச்சா கன்டினியூட்டி போயிருமாம்..
கொடுமையான வெயிலில்.. சுடு மணலில் காலில் செருப்புகூட போடாமல் தவியாய் தவித்து நடித்து முடித்தேன். அந்த மணல்ல என்னை இழுத்துட்டுப் போற மாதிரியெல்லாம் சீன் வைச்சிருந்தார்.. டோட்டலா பார்த்தா பாலா ஒரு சாடிஸ்ட். எனக்கு மட்டுமல்ல.. ஆர்யா உட்பட அனைவருக்கும் சேர்த்துதான்..!
அங்கேயிருந்து சென்னை திரும்பியவுடன் எடுத்ததையெல்லாம் போட்டுப் பார்த்த பாலா.. அதில் மோகன் வைத்யாவின் நடிப்பு அவருக்குத் திருப்தியாக இல்லாததால் மீண்டும் வாரணாசிக்குக் கிளம்பிப் போய் இன்னும் ஒரு 30 நாட்கள் ஷூட்டிங் நடத்தினார். இதனாலும் கூடுதல் செலவானது.
படம் மொத்தமும் ரெடியாக ஒரு வருஷமாயிருச்சு. இந்த நேரத்துல தயாரிப்பாளர் தேனப்பன் இந்த பிராஜெக்ட்டில் இருந்து விலகிக் கொள்வதாகச் சொன்னார். ‘நான் இதுவரையிலும் 50 லட்சம் ரூபாயை இந்தப் படத்துக்காக செலவழிச்சிருக்கேன். அந்தப் பணத்தைத் கொடுத்திட்டு படத்தை நீங்களே ரிலீஸ் பண்ணிக்குங்க’ன்னு பாலாகிட்ட சொல்லிட்டாரு.
உடனே நான் ஜெமினி லேப்ல பேசி அவங்களை எடுத்துக்கச் சொன்னேன். அவங்களும் பாலாகிட்ட பேசிட்டு ‘இந்தப் படத்துக்கு ஐந்தரை கோடிக்கு மேல பண்ண முடியாது.. அதுனால எங்களுக்கு வேண்டாம்’ன்னு சொல்லிட்டாங்க. பாலா அப்போ அந்தப் படத்துக்கு ஏழரை கோடி கேட்டாரு.
அப்புறம் நான் ஆஸ்கர் ரவிச்சந்திரனை கூட்டிட்டு வந்தேன். ஆஸ்கர் ரவிச்சந்திரனும் வந்து பார்த்திட்டு, பேசிட்டு ‘அண்ணே இந்தப் படம் 6 கோடிக்கு மேல போகாது. அதுக்கு மேலன்னா எனக்கு வேண்டாம்’ன்னு சொல்லிட்டாப்புல.
இதுக்கு நடுவுல தேனப்பன் ‘எனக்கு 50 லட்சம் ரூபாய் கொடுக்காமல் இந்தப் படத்தை ரிலீஸ் பண்ணக் கூடாது’ன்னு தயாரிப்பாளர் கவுன்சில்ல புகார் கொடுத்திட்டாரு. நான் கவுன்சில்ல பொருளாளராக இருந்தாலும், இந்தப் பிரச்சினைல நான் பஞ்சாயத்து செய்ய முடியலை.. உக்காரவும் முடியலை.
ஆனால் கவுன்சில்ல ‘தேனப்பனுக்கு 50 லட்சம் ரூபாயைக் கொடுத்தாணும்’ன்னு உறுதியா சொல்லிட்டாங்க. அந்தச் சமயத்துல பஞ்சாயத்து பேசின சீனிவாசன் ‘இந்தப் படத்தை நான் எடுத்துக்குறேன்’னு சொல்லிட்டாரு. அப்புறம் நான் சீனிவாசன்கிட்ட பேசி ஜெமினி லேபுக்குக் கொடு்க்க வேண்டிய 30 லட்சம் ரூபாயை வாங்கிக் கொடுத்தேன்.
இப்போதான் பாலாவுக்கு என் மேல கோபம். ஏதோ நான்தான் படத்தை வித்துத் தரேன்னு சொல்லி ஏமாத்திட்டேன்னும்.. என்னாலதான் தேனப்பனுக்கு 50 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டி வந்ததுன்னும் என் மேல கோபப்பட்டாப்புல..
அதுக்கப்புறம் என்னை அவாய்ட் செய்ய ஆரம்பிச்சாரு.. என்னைப் பார்க்கவோ.. பேசவோ மறுத்தார்.. டப்பிங் பேச நான் போனபோது அங்கே என்னுடைய கதாபாத்திரத்திற்கு வேறொருவர் டப்பிங் பேசிக்கிட்டிருந்தார்.
படத்தில் போஸ்டரில் எனது பெயர் போடவே இல்லை. என்னுடைய புகைப்படத்தை போஸ்டரில் போட்டு டிஸைன் செய்த டிஸைசன் சசி அண்ட் சசியை உடனடியாக வேலை நீக்கம் செய்தார் பாலா. இத்தனைக்கும் படத்தின் ஹீரோவான ஆர்யாவைவிட அதிகமான காட்சிகளில் நான் நடித்திருக்கிறேன்.
இருந்தும், படத்தின் டைட்டில்ல என் பெயரை ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகளோட சேர்த்து போட்டிருந்தாரு. படத்தோட இசை வெளியீட்டு விழால நான் பின்னாடி உக்காந்திருந்தேன். ஆனால், என்னை மட்டும் கடைசிவரைக்கும் மேடைக்குக் கூப்பிடவே இல்லை.
ஒரு பத்திரிக்கைக்காரங்க இந்தப் படம் பத்தி என்கிட்ட பேட்டி கேட்டாங்க. நானும் கொடு்த்தேன். அந்தப் பேட்டில ‘இந்தப் படத்துல நான் நடிக்கலை.. வாழ்ந்திருக்கேன்’ அப்படீன்னு சொல்லியிருந்தேன். அதை யாரோ பாலாகிட்ட சொல்லிட்டாங்க போலிருக்கு.
என்னைக் கூப்பிட்டு விட்டாரு. ‘நீங்க இந்தப் படத்துல என்ன கிழிச்சிருக்கீங்க.. என்னைவிட பெரிசா உழைச்சிருக்கீங்களா.. யாரைக் கேட்டு பேட்டி கொடுத்தீங்க.. உங்களுக்கு அறிவிருக்கா..?’ என்று கத்தினார். நான் மெளனமா அவர் முன்னாடி கையைக் கட்டிட்டு நின்னுக்கிட்டிருந்தேன். ‘தப்புதான் தம்பி.. என்னை மன்னிச்சுக்குங்க’ன்னு சொல்லிட்டு வந்துட்டேன்.
இந்தப் படத்துல நடிச்சிட்டிருந்தப்போ என்னோட அம்மா திடீர்ன்னு இறந்துட்டாங்க. அப்போ நான் தாடியோட இருந்தேன். ‘தாடியை எடுத்தா கன்ட்டினியூட்டி போயிரும்’ன்னு சொன்னாங்க. சரி.. நம்மளால ஒரு படம் பாதிக்கப்படக் கூடாதேங்குறதுக்காக பெத்த அம்மாவுக்காக செய்ய வேண்டிய சடங்கைக்கூட செய்யாமல் தவிர்த்தேன்.
இப்படி இந்தப் படத்துக்காக என்னால முடிஞ்ச அத்தனையும் செஞ்சதுக்காக என்னை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ… அவ்வளவு கேவலப்படுத்திட்டாரு பாலா…” என்று கொதித்துப் போய் சொல்லி முடித்திருக்கிறார் தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி.
The post “இயக்குநர் பாலா ஒரு சாடிஸ்ட்…” – கொதிக்கிறார் தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி..! appeared first on Touring Talkies.
]]>The post இயக்குநர் பாலாவின் ‘வர்மா’ ஓ.டி.டி.யில் வெளியாகிறது..! appeared first on Touring Talkies.
]]>நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரமை வைத்து பாலா இயக்கிய ‘வர்மா’ படத்தை ஓடிடியில் வெளியிடுவதாக அந்தப் படத்தின் தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.
நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் தெலுங்கில் வெற்றிகரமாக ஓடிய ‘அர்ஜூன் ரெட்டி’ படத்தின் தமிழாக்கத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இந்தப் படத்தை இயக்குநர் பாலா இயக்கினார். படத்தின் பெயர் ‘வர்மா’. பாலாவின் படம் என்பதால் இந்தப் படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால், பாலா எடுத்த படத்தை பார்த்த தயாரிப்பாளருக்கு அது பிடிக்கவில்லை. அர்ஜூன் ரெட்டியின் கதையை தமிழுக்கு ஏற்றாற்போல் பாலா கொஞ்சம் மாற்றியிருந்தார். இது தொடர்பாக அவருக்கும், தயாரிப்பாளருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு கடைசியில் படத்தை வெளியிட முடியாது என்று தயாரிப்பாளர் மறுத்துவிட்டார்.
அதே கதையை வேறொரு இயக்குநரை வைத்து மீண்டும் ஷூட் செய்வதாக அறிவித்தார். தயாரிப்பாளரின் இந்த முடிவுக்கு நடிகர் விக்ரமும் சம்மதம் தெரிவிக்க பாலா உருவாக்கிக் கொடுத்த ‘வர்மா’ திரைப்படம் அப்போதைக்கு மூலைக்குப் போனது.
பின்னர் பாலாவுக்கு பதிலாக கிரிசாயா என்பவரை இயக்குநராக வைத்து ‘ஆதித்ய வர்மா’ என்ற பெயரிலேயே மீண்டும் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. பாலா இயக்கிய படத்தில் இருந்து எந்த காட்சியையும் பயன்படுத்தாமல் படத்தை எடுத்தனர். துருவ்வின் தோற்றத்தையும் மாற்றினர். கதாநாயகிகளாக பனிட்டா சந்து, பிரியா ஆனந்த் ஆகியோர் நடித்திருந்தனர்.
இந்த படம் கடந்த நவம்பர் மாதம் திரைக்கு வந்தது. ஆனால் படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை.
இந்த நிலையில் பாலா இயக்கி அமைதியாக மூலையில் முடங்கிக் கிடந்த ‘வர்மா’ படத்தை ஓ.டி.டி. தளத்தில் வெளியிட தயாரிப்பாளர் முடிவெடுத்துள்ளார். இதன்படி வருகிற 6-ம் தேதி ‘வர்மா’ திரைப்படம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஆனால் இப்போதைக்கு இந்தியா தவிர்த்து மற்றைய நாடுகளில் படம் ஒளிபரப்பாகும். இந்தியாவில் இருப்பவர்கள் பார்ப்பதற்கு சில மாதங்களாகும் என்கிறார்கள்.
The post இயக்குநர் பாலாவின் ‘வர்மா’ ஓ.டி.டி.யில் வெளியாகிறது..! appeared first on Touring Talkies.
]]>