The post “தமிழ் சினிமா தயாரிப்பாளர்களை கதற வைக்கும் கதாநாயகிகள்” – ‘தீ இவன்’ இயக்குநர் பரபரப்பு பேச்சு appeared first on Touring Talkies.
]]>‘நவரச நாயகன்’ கார்த்திக் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ராதாரவி, சுமன்.J, சிங்கம் புலி, இளவரசு, சுகன்யா,‘சேது’ அபிதா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இப்படத்தில் கவர்ச்சி ராணி சன்னி லியோன் ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார்.
‘மேலே ஆகாயம் கீழே பாதாளம்…’ எனத் தொடங்கும் அந்த பாடலின் படப்பிடிப்பு சென்னையில் பிரமாண்ட பொருட் செலவில் அரங்கு அமைக்கப்பட்டு நேற்று படமாக்கப்பட்டது. படப்பிடிப்பு தளத்திலேயே படத்தின் டீசரையும் வெளியிட்டனர்.
இதனைத் தொடர்ந்து படக் குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான டி.எம்.ஜெயமுருகன் பேசும்போது, “ரஜினி, கமலுக்கு நிகராக நவரச நாயகன் கார்த்திக்கும் பெரிய நடிகர். அவரது முழு பரிமானத்தையும் ‘தீ இவன்’ படத்தில் பயன்படுத்தியிருக்கிறேன். ஒரு இடைவெளிக்கு பிறகு இப்படம் அவருக்கு திருப்புமுனையாக அமையும் என்று நம்புகிறேன்.
நமது தமிழ்ச் சமூகம் கலை, கலாச்சாரம், உறவுகளோடு கட்டமைக்கப்பட்டது. உலக நாடுகளே நமது கலாச்சாரத்தை வியந்து பார்க்கிறார்கள். பின்பற்றவும் செய்கிறார்கள் அப்படிப்பட்ட நமது கலாச்சாரம் இன்று சீரழிக்கப்பட்டு வருகிறது.
இது போன்ற போக்கு வருங்காலத்தில் இன்றைய தலைமுறையினரின் பின்னடைவுக்கு காரணமாக அமைந்துவிடக் கூடாது என்ற கருத்தையும், படத்தை எடுத்துள்ளேன். இதில் சன்னி லியோன் ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார்.
சன்னி லியோனை மும்பையில் சந்தித்து இப்படத்தின் கதையை சொன்னபோது, “தமிழ் கலாச்சாரத்தை காப்பது போன்ற கதையுள்ள இப்படத்தில் நான் இடம் பெறுவதை மகிழ்ச்சியுடன் ஏற்கிறேன்” என்றும் மேலும் இந்தப் படத்தின் ஹீரோ ‘நவரச நாயகன்’ கார்த்திகை பற்றி சொன்னவுடன் உடனே ஒத்துக் கொண்டார். இது அவர் தமிழ் சினிமா மேல் கொண்ட ஆர்வத்தை காட்டுகிறது.
பட்ஜெட் என்ன? நடிகர்கள் யார் என்றெல்லாம் பார்க்காமல் கதைக்காக அவர் ஒத்துக் கொண்டது அவரது நல்ல மனசை காட்டியது. இப்போதுள்ள தமிழ் சினிமா நடிகர், நடிகைகள் ஒரு படத்தில் நடிக்க சம்மதித்த பிறகு என்ன மாதிரியெல்லாம் சேட்டை பண்ணுகிறார்கள், தயாரிப்பாளர்கள் எவ்வளவு கந்தலாகி போகிறார்கள் என்பது எல்லோருக்குமே தெரியும்.
அப்படியொரு சூழ்நிலையில் ஹாலிவுட் நாயகியாக இருந்தும் எந்த ஆடம்பரமும் பந்தாவும் இல்லாமல் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்து சன்னி லியோன் நடித்துக் கொடுத்ததற்கு நன்றி சொல்கிறேன்.
அவர் அழகாக நடனமாடியுள்ள அந்தப் பாடலில் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன்பாகவே முடித்துக் கொடுத்துள்ளார். நடன இயக்குநர் காதல் கந்தாஸ் அருமையான நடன அமைப்பை செய்துள்ளார். ‘தீ இவன்’ படம் நல்ல பெயரை பெற்றுத் தரும். இந்த படமும், பாடலும் அனைவரையும் கவரும் என்று நம்புகிறேன்…” என்றார்.
The post “தமிழ் சினிமா தயாரிப்பாளர்களை கதற வைக்கும் கதாநாயகிகள்” – ‘தீ இவன்’ இயக்குநர் பரபரப்பு பேச்சு appeared first on Touring Talkies.
]]>The post ‘தீ இவன்’ படத்திற்காக நவரசம் காட்டியிருக்கும் நாயகன் கார்த்திக்..! appeared first on Touring Talkies.
]]>இந்தப் படத்தை ‘ரோஜா மலரே’, ‘அடடா என்ன அழகு’ படங்களை இயக்கியவரும், ‘சிந்துபாத்’ படத்தை தயாரித்தவருமான டி.எம் ஜெயமுருகன் இயக்குகிறார். அவரே இந்தப் படத்திற்கு இசையமைத்து, கதை, திரைக்கதை, வசனம் பாடல்களையும் எழுதி அசத்தியுள்ளார்.
இந்த படத்தில் நவரச நாயகன் கார்த்திக் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கதாநாயகனாக நடிக்கிறார். அவருடன் சுகன்யா, ஐஸ்வர்யா லட்சுமி, அர்த்திகா, சேது அபிதா, ஜான் விஜய், சிங்கம்புலி, இளவரசு, மஸ்காரா அஸ்மிதா, ஹேமந்த் மேனன், இயக்குநர் சரவண சக்தி, ராஜேஸ்வரி, ஸ்ரீதர் ஆகியோரும் நடிக்கிறார்கள். இவர்களுடன் மறைந்த குணசித்திர நடிகர் பெரைரே முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும் இயக்குநர் ஜெய முருகன் மற்றும் அறிமுக நடிகர் சுமன்.ஜெ இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – ஒய்.என்.முரளி, பிண்ணனி இசை, படத் தொகுப்பு – அலிமிர்சாக், கலை இயக்கம் – சோலை அன்பு, நடன இயக்கம் – கூல் ஜெயந்த், சண்டை இயக்கம் – கிக்காஸ் காளி, மக்கள் தொடர்பு – மணவை புவன், தயாரிப்பு நிர்வாகம் -அப்பு, எழுத்து, இசை- பாடல்கள், இயக்கம் – டி.எம்.ஜெயமுருகன்.
படம் பற்றி இயக்குநர் இயக்குநர் டி.எம்.ஜெயமுருகன் பேசும்போது, “இன்றைய நவீன காலத்தில் நம் கிராமத்து பண்பாடும், நாகரீகமும், உறவுகளும் மறைந்து வருகிறது. அதனை இந்தத் தலைமுறைக்கு மீட்டுத் தரும் படமாக இது உருவாகியுள்ளது.
அண்ணன், தங்கை பாசத்தை சொல்ல நிறைய படங்கள் வந்திருந்தபோதும் இதில் ரத்தமும், சதையுமான அந்த உறவை சொல்கிறோம். உயிரைவிட மானம் பெரிது என்பதுதான் தமிழர்களின் உச்சபட்ட நாகரீகம். அதை உணர்த்தும் படமாக இது இருக்கும்.
இதுவரையிலும் படப்பிடிப்பு 70 சதவீதம் முடிவடைந்துள்ளது. தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஒரு பாடல் காட்சியை பிரபல பாலிவுட் நடிகையை வைத்து மும்பையில் பிரமாண்ட செட் அமைத்துப் படமாக்க இருக்கிறோம்.
இந்த படத்தில் நவரச நாயகன் கார்த்திக் ‘ஹார்லி டேவிட்சன்’ பைக்கில் டூப் போடாமல் பல சண்டைக் காட்சிகளில் பல சாகசங்களை செய்துள்ளார். இன்றைக்கு நடிக்க வரும்இளம் நடிகர்களே இந்த காட்சிகளை நடிக்க தயங்குவார்கள் அப்படியான காட்சிகளில்கார்த்திக் தானே நடித்து அசத்தியுள்ளார். அந்த சண்டை காட்சிகள் படத்தில் பிரம்மாண்டமாக இருக்கும்.
அது மட்டுமல்லாது ‘ஹம்மர்’ என்ற விலையுர்ந்த கார் ஒன்றை வைத்து பாடல் காட்சி ஒன்றை ஹாலிவுட் தரத்தில் எடுத்துள்ளோம் அதுவும் பிரம்மாண்டமாக வந்திருக்கிறது. இந்த படம் வெளியான பிறகு நடிகர் கார்த்திக் மீண்டும் பல படங்களில் நாயகனாக நடிப்பார்.
500 பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விளையாட்டு போட்டி ஒன்றை பிரம்மாண்டமாக அண்மையில் படமாக்கினோம். கொரோனா காலம் என்பதால் பள்ளி மாணவர்களை சமூக இடைவெளியுடன் நடிக்க வைத்து படமாக்கி இருக்கிறோம். மிகப் பெரிய பட்ஜெட்டில் இந்தப் படம் தயாராகி உள்ளது…” என்கிறார் படத்தின் இயக்குநரான டி.எம்.ஜெயமுருகன்.
The post ‘தீ இவன்’ படத்திற்காக நவரசம் காட்டியிருக்கும் நாயகன் கார்த்திக்..! appeared first on Touring Talkies.
]]>