The post நாளை மீண்டும் ரீ ரிலீஸ் ஆகும் இரட்டை வேடத்தில் எம்ஜிஆர் அசத்திய ‘சிரித்து வாழ வேண்டும்’ திரைப்படம்… appeared first on Touring Talkies.
]]>அந்த வகையில், ரசிகர்களால் புரட்சி நடிகராவும் மக்களால் இதய தெய்வமாக இன்று வரை கொண்டாடப்படும் மக்கள் திலகம் எம்ஜிஆரின் நடிப்பில் 1974 ஆம் ஆண்டு நவம்பர் 30ம் நாளில் வெளியான திரைப்படம் தான் ‘சிரித்து வாழ வேண்டும்.இப்படத்தின் சிறப்பு என்னவென்றால் ஒரு வேடத்தில் போலீஸ் அதிகாரியாகவும், மற்றொரு வேடத்தில் இஸ்லாமியராகவும் எம்ஜிஆர் அசத்தி என இரட்டை வேடத்தில் அசத்தி இருந்தார்.இந்தப்படத்தில் நம்பியார், மனோகர், தேங்காய் சீனிவாசன் ஐசரி வேலன், எஸ்.வி.ராமதாஸ், வி.எஸ்.ராகவன் உட்பட பல தலைச்சிறந்த நடிகர்கள் நடித்திருந்தனர்.
இப்படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருப்பார்.கவிஞர் வாலி, புலமைப்பித்தன் ஆகியோரது வரிகள் மேலும் அழுகு ஊட்டி இருக்கும். இப்படத்தின் பாடல்களும் சரி இப்படமும் சரி அனைத்தும் இன்றும் என்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன.
திரையில் ஓடிய இக்காவியம் ‘சிரித்து வாழ வேண்டும்’ தற்போது நாளை முதல்(27-04-2024) சென்னை ஆல்பர்ட் திரைஅரங்கில் தினசரி காட்சிகளாக திரையிடப்படுகிறது.
The post நாளை மீண்டும் ரீ ரிலீஸ் ஆகும் இரட்டை வேடத்தில் எம்ஜிஆர் அசத்திய ‘சிரித்து வாழ வேண்டும்’ திரைப்படம்… appeared first on Touring Talkies.
]]>The post விரைவில் உருவாகிறது சர்தார் 2! வெளிவந்த முக்கிய அப்டேட்… appeared first on Touring Talkies.
]]>கார்த்திக் 26 மற்றும் கார்த்திக் 27 ஆகிய படங்களை நலன் குமாரசாமி மற்றும் பிரேம்குமார் இயக்குகின்றனர். இப்படங்களுக்கு வா வாத்யாரே மற்றும் மெய்யழகன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த மாத இறுதியில் இந்த சர்தார் 2 படத்தின் பூஜை நடைபெறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. போதைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்தப் படத்தின் கதைக்கரு கவனமாக உருவாக்கப்பட்டுள்ளது என சொல்லப்படுகிறது.
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகும், இந்தப் படம் சர்தார் முதல் பாகத்தினை போலவே ரசிகர்களைக் நிச்சயம் கவரும் என்றும் சர்தார் 1 படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் மற்றும் படக்குழு பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post விரைவில் உருவாகிறது சர்தார் 2! வெளிவந்த முக்கிய அப்டேட்… appeared first on Touring Talkies.
]]>The post உதயநிதி கொடுத்த ஆஃபர்… மறுத்த ஸ்டார் பட தயாரிப்பாளர்… அப்போ ஸ்டார் படத்தின் கதி? appeared first on Touring Talkies.
]]>ஸ்டார் என்ற படத்தில் இயக்குனர் எலன் இயக்கத்தில் நடித்திருக்கிறார் கவின். இப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது. இந்த ஸ்டார் படத்தில் இவருக்கு ஜோடியாக ஆதிதி போஹன்கர் நடித்துள்ளார். இதற்கு முன்பு. ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் என்ற படத்தில் சரோஜாதேவி என்ற ரோலில் நடித்திருக்கிறார்.நடிகர் லால் கவினுக்கு அப்பாவாக நடித்திருக்கிறார்.
இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் . இளைஞர்களின் மனதை கொள்ளை கொள்ளும் ரொமான்டிக் படங்களில் நடிக்கும் கவின் தனக்கென ஒரு இளம் ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார்.இந்த ஸ்டார் படத்தை உதயநிதி தேர்தல் சமயத்தில் பிஸியாக இருந்த பொழுது கூட ரெண்டு மணி நேரம் உட்கார்ந்து படத்தை முழுவதுமாக பார்த்தாராம்.இந்த படம் அருமையாக உள்ளதென்றும் இப்படத்தை பார்த்த பின்பு இந்த படத்தை நானே வாங்கி கொள்கிறேன் என சொல்லியிருக்கிறார்.
இதில் என்னவென்றால் ரெட் ஜெயண்ட் நிறுவனத்தை பொருத்தவரை ஒரு படத்தை வாங்குகிறார்கள் என்றால் கடைசியில் தான் லாபத்தின் பங்கு கொடுப்பார்கள் என்பது வழக்கம் அந்த வகையில் ஸ்டார் படத்திலும் அதே ஆஃபரை உதயநிதி தந்திருக்கிறார் ஆனால் படத்தின் தயாரிப்பாளர் எனக்கு முதலிலேயே பணம் வேண்டும் என்று சொல்லி மறுத்தவிட்டாரம்.
இதனால் தற்போது ஸ்டார் படம் வியாபாரத்திற்காக காத்துக்கொண்டு இருப்பதாகவும் இது கவினுக்கு ஒரு தலைவலியாக அமைந்துள்ளது எனவும் கூறப்படுகிறது.இந்த காரணத்தால் படப்பிடிப்பு முடிந்த நிலையில் கூட ரிலீஸ் தேதியை முடிவுசெய்து அறிவிக்க முடியாமல் தடுமாறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
The post உதயநிதி கொடுத்த ஆஃபர்… மறுத்த ஸ்டார் பட தயாரிப்பாளர்… அப்போ ஸ்டார் படத்தின் கதி? appeared first on Touring Talkies.
]]>The post புறநானூறு படத்தை அப்புறம் பாத்துக்கலாம்… துருவ் விக்ரமை நோக்கி நகர்ந்த சுதா கொங்கரா… appeared first on Touring Talkies.
]]>அதன்பின்னர் 2016 ஆம் ஆண்டு மாதவன் மற்றும் ரித்திகா சிங் நடிப்பில் வெளிவந்த இறுதி சுற்றுபடத்தை இயக்கி இப்படத்தின் மூலம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது மட்டுமில்லாது அந்தப்படம் மாதவனுக்கு ஒரு கம் பேக் ஆக அமைந்தது. அப்படத்தில் ரித்திகா சிங் அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
இறுதிச்சுற்று வெற்றியை தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளிவந்த சூரரைப் போற்று என்ற மாபெரும் வெற்றி படத்தை இயக்கினார் சுதா கொங்கரா. இதுவே மிகப் பெரிய திருப்பு முனையாக அவரை அடுத்தகட்டத்திற்கு எடுத்து செல்ல அமைந்தது.
மீண்டும் சூர்யாவை வைத்து புறநானூறு படத்தை இயக்கவிருந்தார் அப்படம் சில காரணங்களால் தள்ளிபோனது. இந்நிலையில் விக்ரமின் மகனான துருவ் விக்ரமிற்கு ஒரு கதையை கூறியிருக்கிறார் என தகவல் வெளி வந்துள்ளது.விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடித்த மகான் திரைப்படத்திற்கு பின்னர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பா.ரஞ்சித் தயாரிப்பில் இப்படத்தில் கபடி வீரராக ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
The post புறநானூறு படத்தை அப்புறம் பாத்துக்கலாம்… துருவ் விக்ரமை நோக்கி நகர்ந்த சுதா கொங்கரா… appeared first on Touring Talkies.
]]>The post என்னது நாக சைதன்யா டேட்டிங்கா… யாரு கூடனு தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>இப்படியிருக்க விவாகரத்து செய்த பின்னர் படங்களில் நடிப்பது என பிஸியாக இருந்துவருகின்றனர்.இதுவரை இருவரும் வேறு யாரையும் திருமணம் செய்துக் கொள்ளவில்லை.அதேசமயம் 31 வயதான சோபிதா தூலிபால பொன்னியின் செல்வன் படத்தில் வானதியாக நடித்து அசத்தியிருப்பார்.தற்போது சோபிதா துலிபாலாவுடன் நாக சைதன்யா டேட்டிங் செய்து வருவதாக கடந்த 3 ஆண்டுகளாக கிசுகிசுகள் கிளம்பி வருகின்றன. தற்போது அப்படியொரு விஷயம் வெளிவந்து பரவி கொண்டு இருக்கிறது.
அதாவது அவர்கள் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்து மகாராஷ்ட்ராவில் ஒரு இடத்துக்கு இருவரும் ஒன்றாக சுற்றுலா சென்றுள்ளனர் இது டேட்டிங் தான் போல என்று ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.தேவ் படேல் நடிப்பில் உருவாகி உள்ள மங்கி மேன் படத்தில் சோபிதா துலிபாலா ஜோடியாக நடித்துள்ளார். வெளிநாடுகளில் வெளியான அந்தப்படம் சென்சார் பிரச்சனை காரணமாக இந்தியாவில் வெளியாகவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
The post என்னது நாக சைதன்யா டேட்டிங்கா… யாரு கூடனு தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>The post தடைகளை தாண்டி வெளியான ரத்னம்! நிம்மதி பெருமூச்சு விட்ட விஷால்… appeared first on Touring Talkies.
]]>இன்று படம் வெளியான நிலையில் நேற்று மாலைக்கு முன்னர் வரை பல திரையரங்கில் டிக்கெட் புக்கிங் தொடங்காமல் இருக்கவே என்ன காரணம் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில், கடைசி நேரத்தில் படத்தை வெளியிட விடாமல் சதி செய்வதாக விஷாலே வெளியிட்டுள்ள ஆடியோ பரபரப்பை கிளப்பியது.
தமிழ்நாட்டில் ரத்னம் திரைப்படத்தை திருச்சி மற்றும் தஞ்சாவூர் பகுதிகளில் ரிலீஸ் செய்ய விடாமல் தடுக்கிறாங்க என்றும் இதுக்கு பேர் கட்ட பஞ்சாயத்து என நடிகர் விஷால் அதிரடியாக குற்றச்சாட்டை முன் வைத்தார்.இப்படி ரத்தமும் வியர்வையும் சிந்தி இந்த படத்தில் நடிச்சிருக்கேன். என்னுடைய நண்பர்கள் இந்த படத்தை வாங்கி வெளியிடுகின்றனர்.இப்படி கடைசி நேரத்தில் இப்படி பண்ணால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படும், கடைசி நேரத்தில் ஒரு கடிதத்தை கொடுத்து விட்டார்கள் என படத்திற்கு தடை விதிப்பது சரியான நடைமுறை அல்ல என விஷால் எச்சரித்து பேசியிருந்தார்.
குறிப்பிட்ட திருச்சி மற்றும் தஞ்சாவூர் ஏரியா திரையரங்க உரிமையாளர் சங்கத்தில் கடிதம் ஒன்றை கடைசி நேரத்தில் கொடுத்தால் படத்தை வெளியிடாமல் தடுப்பீங்களா? எனவும் காலையில் இருந்து உங்களுக்கு கொள்ள போன் செய்கிறேன்.ஆனால் நீங்கள் வெயிட்டிங்கிலேயே வைத்து வருகிறீர்கள். பண்ணுங்க, எவ்ளோ பண்ண முடியுமோ பண்ணுங்க, என்று கூறியிருந்தார் எனக்கே இந்த நிலைமை அப்படி என்றால் மற்ற சாதாரண நடிகர்களுக்கு என்ன நிலை தமிழ் சினிமாவில் தெரிந்து கொள்ளட்டும் என்று பேசியிருந்தார்.
அதன்பின்னர், நேற்று மாலை ஒரு வழியாக பிரச்சினை தீர்ந்து இன்று திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் ரத்னம் திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
The post தடைகளை தாண்டி வெளியான ரத்னம்! நிம்மதி பெருமூச்சு விட்ட விஷால்… appeared first on Touring Talkies.
]]>The post ரிலீஸ் தேதி அறிவிக்க முடியாமல் திணறும் தமிழ் படங்கள்! கங்குவா முதல் ராயன் வரை… 600 கோடியை இழந்த பாலிவுட்? appeared first on Touring Talkies.
]]>சூர்யாவின் கங்குவா, சியான் விக்ரமின் தங்கலன், சூரியின் விடுதலை 2 மற்றும் தனுஷின் ராயன் ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராக இருந்தும் இன்னும் ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்படவில்லை.
படங்களின் வெற்றிக்கு சரியான திட்டமிடல் முக்கியமானது என்றும் ஏனெனில் அவற்றுள் கவனம் சிதறினால் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் வசூலில் தோல்வியடையும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் மலையாளத் திரையுலகம் இந்த ஆண்டு மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது, பிரம்மயுகம், பிரேமலு, மஞ்சுமேல் பாய்ஸ், ஆடு ஜீவிதம், அவேஷம், மற்றும் சேஷம் ஆகிய படங்கள் முதல் நான்கு மாதங்களில் 100 கோடியைத் தாண்டி தூள் கிளப்பி உள்ளன.
இருப்பினும் மற்றொரு புறம் ஃபைட்டர், படே மியான் சோடே மியான், மைதான் போன்ற படங்களின் தொடர்ச்சியான தோல்விகளால் பாலிவுட் திரையுலகம் சுமார் 600 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விஷாலின் ரத்னம் படம் இன்று ரிலீஸ் ஆன நிலையில் அரண்மனை 4, கவினின் ஸ்டார் , கமல்லின் இந்தியன் 2, சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு என அனைத்து படங்களும் அடுத்தடுத்து ரிலீசாக உள்ளன.இப்படியிருக்க பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் செய்ய தாமதமாகி வருவது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
The post ரிலீஸ் தேதி அறிவிக்க முடியாமல் திணறும் தமிழ் படங்கள்! கங்குவா முதல் ராயன் வரை… 600 கோடியை இழந்த பாலிவுட்? appeared first on Touring Talkies.
]]>The post இந்தியன் 2 டெய்லி ஆறுமணி நேரம் மேக்கப்… கமல் போட்ட உழைப்பு… appeared first on Touring Talkies.
]]>இந்த நிலையில், படத்தின் முதல் சிங்கிள் விரைவில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்தப் பாடலில் தாத்தா வரரு என்ற வரிகள் இணைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பாடல் எண்ணூர் உட்பட பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்டதாக முன்னதாக தகவல்கள் வெளியாகின.
இதில் சேனாபதியின் ஓவியங்கள் உள்ளன.ரசிகர்களிடம் இதன் தாக்கம் எந்த அளவிற்கு உள்ளது என்பது விரைவில் தெரியவரும். சேனாபதி கதாபாத்திரத்தாக கமல்ஹாசன் ஒவ்வொரு நாளும் ஆறு மணிநேரத்தை மேக்கப்காக செலவழித்துள்ளார்.
இந்தியன் 2 இல், கமல்ஹாசன் ஒரு தனி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்,இது இந்த படத்தின் கதைக்களம் குறித்த ஆர்வத்தை தூண்டியுள்ளது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இப்படம் ரசிகர்களால் நிச்சயம் கொண்டாப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post இந்தியன் 2 டெய்லி ஆறுமணி நேரம் மேக்கப்… கமல் போட்ட உழைப்பு… appeared first on Touring Talkies.
]]>The post தள்ளி போகிறதா ராயன்? கமல் தான் காரணமா? appeared first on Touring Talkies.
]]>ராயன் படம் தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது. முதலில் ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக ரிலீஸ் மே மாதத்துக்குத் தள்ளப்பட்டது. இந்நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை ஜூலை மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளதாக தகவல் வந்துள்ளது.
கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகவுள்ள நிலையில், குறைந்தபட்சம் மூன்று வாரங்களுக்கு திரையரங்குகளில் படம் வெற்றிகரமாக ஓடும் என நம்பப்படுகிறது.கமல்லின் இந்தியன் 2 படம் வெளியாகும் சமயத்தில் ராயன் படமும் வெளியானால் வசூல் பாதிக்கப்படலாம் என்பதால் தான் ராயன் பட ரிலீஸ் ஜூலைக்கு தள்ளி போனதாக கூறப்படுகிறது
ராயன் படத்தின் ரிலீஸ் தேதியை ஜூலைக்கு தள்ளி வைத்துள்ளதால், இந்த படத்தின் புரமோஷன் பணிகள் ஜூன் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிரெய்லர், இசை வெளியீடு மற்றும் பிற விளம்பர நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பா பாண்டி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான தனுஷ், தற்போது ராயன் படத்தை நடித்து இயக்கி முடித்துள்ளார். கேங்ஸ்டர் கதையை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் தனுஷ், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், அபர்ணா முரளி, துஷாரா விஜயன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
The post தள்ளி போகிறதா ராயன்? கமல் தான் காரணமா? appeared first on Touring Talkies.
]]>The post ஐபிஎல் ஸ்ட்ரீமிங் மோசடியில் தமன்னா? தமன்னாவுக்கு பறந்த சம்மன் அதிர்ச்சியில் திரையுலகம்! appeared first on Touring Talkies.
]]>சுந்தர் சி-யின் அரண்மனை 4 அடுத்த வாரம் வெளியாக உள்ள நிலையில் அப்படத்தில் தம்மன்னா நடித்துள்ளார், இந்நிலையில் ஐபிஎல் ஸ்ட்ரீமிங் தொடர்பான வழக்கில் தற்போது தமன்னா நன்றாக மாட்டியுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
தம்மன்னா ஃபேர் பிளே ஆப் மூலம் சட்டவிரோதமாக ஐபிஎல் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்ட மோசடியில் தமன்னா ஈடுபட்டதாக அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.நடிகை தமன்னாவுக்கு இதுகுறித்து மகாராஷ்ட்ரா சைபர் ஐடி விங் தற்போது சம்மன் அனுப்பி உள்ளனர். வருகின்ற ஏப்ரல் 29ம் தேதி நடிகை தமன்னா இதுகுறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சைபர் கிரைம் போலீஸார் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
இதேபோல் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தும் இந்த சட்ட விரோதமான ஐபிஎல் ஸ்ட்ரீமிங் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது ஆனால் அவர் படப்பிடிப்பில் பிசியாக உள்ளதாக சொல்லி தற்போது வர இயலாது வேறொரு தேதியில் ஆஜராகிரேன் என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
The post ஐபிஎல் ஸ்ட்ரீமிங் மோசடியில் தமன்னா? தமன்னாவுக்கு பறந்த சம்மன் அதிர்ச்சியில் திரையுலகம்! appeared first on Touring Talkies.
]]>