The post இசை மட்டும் பெரிசு பாட்டு வரிகள் மட்டும் என்ன சிறுசா? வைரமுத்து கிளப்பிய பரபரப்பு ! appeared first on Touring Talkies.
]]>இசை முக்கியமா, பாடல் வரிகள் முக்கியமா என்பது தற்போது திரையுலகில் விவாதப்பொருளாகியுள்ளது. இசையும் பாடல் வரிகளும் இணைந்திருக்க வேண்டும் அப்படி இருந்தால் தான் ஒரு நல்ல பாடல் பிறக்கும் என்றும் ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டுத்தான் அவரை அடையாளப்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார். பெயர் இல்லாமல் யாரை எப்படி அழைப்பது? வெறும் இசை மட்டுமே இருந்தால் அந்தப் பாடலை அடையாளப்படுத்த முடியுமா என்று கேள்வி எழுப்பினார்.
காலம் கடந்த பாடல்கள் இன்னும் நிலைத்திருப்பதற்கு இசை மட்டுமே காரணமா? கண்ணதாசனின் வரிகளில் உருவான பாடல்களை, எந்த இசையுமின்றி பாட முடியாதா? பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார், மருதகாசி, உடுமலைப்பேட்டை நாராயண கவி, ஆலங்குடி சோமு போன்ற பல கவிஞர்களின் சிந்தனைக்கூறும் பாடல் வரிகள், காலத்தை கடந்து நிற்கின்றன என்று கூறினார்.
இசையும் கவிதையும் இணைந்தால் தான் பாடல் உருவாகும். இல்லை என்று கூறுவது அறியாமை என்று வைரமுத்து கூறியது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது கருத்து யாரை நோக்கி கூறப்பட்டது எனவும் ஒருவேளை இவர் கருத்து பாடலுக்கு உரிமை கோரும் இளையராஜாவை தான் குறித்து வைத்து பேசுகிறாரோ என்று இணையத்தில் வினாவி வருகின்றனர்.
The post இசை மட்டும் பெரிசு பாட்டு வரிகள் மட்டும் என்ன சிறுசா? வைரமுத்து கிளப்பிய பரபரப்பு ! appeared first on Touring Talkies.
]]>The post நானும் அழகி தாங்க…ஒல்லி பெல்லியான ஷிவானி…ரசிகர்கள் சொன்ன வாவ்… appeared first on Touring Talkies.
]]>இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள், ஷிவானியின் உடற்பயிற்சியால் ஏற்பட்ட மாற்றத்தைப் பாராட்டி கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். ஷிவானிக்கு இன்ஸ்டாகிராமில் சுமார் 4 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர்.
தொடர்ந்து ஜிம்முக்கு சென்று தனது இடுப்பளவை ஸ்லிம் ஆக்கி விட்டார் ஷிவானி நாராயணன்.இப்படி லாஸ்லியா, ஷிவானி போன்ற பிக் பாஸ் பிரபலங்கள் ஸ்லிம்மாக மாறுவதன் மூலம் அவர்களுக்கு பட வாய்ப்புகள் அதிகரிக்குமா என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Video Link: https://www.instagram.com/reel/C6S18WuPWxx/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==
The post நானும் அழகி தாங்க…ஒல்லி பெல்லியான ஷிவானி…ரசிகர்கள் சொன்ன வாவ்… appeared first on Touring Talkies.
]]>The post அவர் எங்க அப்பா முன்னாடி தான் ப்ரப்போஸ் செஞ்சாரு…அவர் ஒன்னும் கடத்தல்காரர் இல்லை – வரலட்சுமி சரத்குமார் appeared first on Touring Talkies.
]]>பாலா இயக்கத்தில் வரலட்சுமி நடித்த தாரை தப்பட்டை படத்தில் அவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டாலும், அவர் எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் தொடர்ச்சியாக கிடைக்கவில்லை. இருப்பினும், அவர் தொடர்ந்து நடிப்பதை நிறுத்தவில்லை.தமிழில் அவர் மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் படத்தில் நடித்தார்.அடுத்து, தெலுங்கில் கொட்ட பொம்மாலி பிஎஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
நிக்கோலாய் குறித்து பேசும்போது வரலட்சுமி, எனது வருங்கால கணவர் நிக்கோலாய் சச்தேவையின் தந்தை கடந்த 30 ஆண்டுகளாக ஆர்ட் கேலரி ஒன்றை நடத்தி வந்தார். ஆனால் திடீரென அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டு, அவர் படுக்கைப் படுக்கையாகிவிட்டார். இதனால் 16 வயதில் நிக்கோலாய் அந்த ஆர்ட் கேலரியைப் பராமரிக்க ஆரம்பித்தார்.
ஆர்ட் கேலரி என்பது கலைப் பொருட்கள் விற்பனை செய்யும் இடம். அங்கு விலையுயர்ந்த கலைப் பொருட்கள் விற்கப்படுகின்றன. ஆனால் சிலர் அதனைக் கடத்தல் என்று தவறாகப் புரிந்துகொள்கின்றனர். கடந்த 14 ஆண்டுகளாக நிக்கோலாயை நான் அறிந்து வருகிறேன். இப்போதுதான் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளோம். எனது தந்தை சரத்குமார் முன்னிலையில்தான் நிக்கோலாய் எனக்கு பிரோப்போஸே செய்தார் என்றார்.
The post அவர் எங்க அப்பா முன்னாடி தான் ப்ரப்போஸ் செஞ்சாரு…அவர் ஒன்னும் கடத்தல்காரர் இல்லை – வரலட்சுமி சரத்குமார் appeared first on Touring Talkies.
]]>The post கூலி படத்தை கலாய்ச்சுட்டாரு பொங்கிய ரசிகர்கள்… சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த வெங்கட் பிரபு… appeared first on Touring Talkies.
]]>அதற்கு ரியாக்ஷன் அளிக்கும் விதமாக எமோஜி ஒன்றை பதிவிட்டார் வெங்கட் பிரபு. இதனால், கார்த்திக் குமார் ‘கூலி’ படத்தின் அறிமுக வீடியோவை கலாய்த்ததை ஆதரித்துள்ளார் என்று வெங்கட் பிரபு என் சர்ச்சை எழுந்தது. ஆனால், வெங்கட் பிரபு உடனடியாக பதிலளித்து, இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.
நெட்டிசன்கள் சிலர், லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள கூலி படத்தின் அறிமுக வீடியோவை பார்த்து விட்டு சோசியல் மீடியாவில் கார்த்திக் குமார் கலாய்த்ததை ஆதரித்துள்ளார் என்று வெங்கட் பிரபுவைக் குற்றம்சாட்டி கொளுத்தி போட்டனர்.
பதிலளித்த வெங்கட் பிரபு தனது விளக்கத்தில், இல்லவே இல்லை…கலாய்த்தாக தவறாகப் புரிந்துகொண்டனர் என்றும், இது எல்லா இயக்குநர்களுக்கும் பொதுவான கருத்து. ஒரே பாணியில் கமர்சியல் படங்களை எடுப்பதை அவரும் கலாய்த்திருந்தார். வித்தியாசமான டெம்ப்ளேட்டில் கமர்சியல் படங்களைக் கொடுத்தால் ரசிகர்கள் வரவேற்பு தருவார்களா? என்ற கேள்வியை வெங்கட் பிரபு எழுப்பினார்.
The post கூலி படத்தை கலாய்ச்சுட்டாரு பொங்கிய ரசிகர்கள்… சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த வெங்கட் பிரபு… appeared first on Touring Talkies.
]]>The post விஜய்க்கு நோ சொல்லி அஜித்க்கு எஸ் சொன்ன ஸ்ரீலீலா… அப்போ த்ரிஷா என்ன பண்ண போறாங்க…. appeared first on Touring Talkies.
]]>இதேபோல் தமிழிலும் ஸ்ரீலீலாவை நடிக்க வைக்க இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என ஆர்வம் காட்டுகின்றனர்.அந்த வகையில் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் அஜித்.இப்படத்தில் நடிகை ஸ்ரீலீலா முக்கியமான ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகின.
அதேசமயம் நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் பாடல் ஒன்றிற்கு ஸ்ரீலீலாவுடன் இணைந்து விஜய் ஒரு பாடலுக்கு ஆட்டம் போட இருப்பதாக தகவல் வெளிவந்தன ஆனால் ஸ்ரீலீலா இப்படியொரு பாடலுக்கு ஆட்டம் போட விருப்பம் இல்லை என சொல்லி மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.
இதனால் த்ரிஷா விஜய் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவதாக முன்பு சொன்னது தற்போது ஏறக்குறைய உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது.இதுகுறித்து படக்குழுவினர் விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கலாம்.
The post விஜய்க்கு நோ சொல்லி அஜித்க்கு எஸ் சொன்ன ஸ்ரீலீலா… அப்போ த்ரிஷா என்ன பண்ண போறாங்க…. appeared first on Touring Talkies.
]]>The post என்னது நாக சைதன்யா டேட்டிங்கா… யாரு கூடனு தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>இப்படியிருக்க விவாகரத்து செய்த பின்னர் படங்களில் நடிப்பது என பிஸியாக இருந்துவருகின்றனர்.இதுவரை இருவரும் வேறு யாரையும் திருமணம் செய்துக் கொள்ளவில்லை.அதேசமயம் 31 வயதான சோபிதா தூலிபால பொன்னியின் செல்வன் படத்தில் வானதியாக நடித்து அசத்தியிருப்பார்.தற்போது சோபிதா துலிபாலாவுடன் நாக சைதன்யா டேட்டிங் செய்து வருவதாக கடந்த 3 ஆண்டுகளாக கிசுகிசுகள் கிளம்பி வருகின்றன. தற்போது அப்படியொரு விஷயம் வெளிவந்து பரவி கொண்டு இருக்கிறது.
அதாவது அவர்கள் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்து மகாராஷ்ட்ராவில் ஒரு இடத்துக்கு இருவரும் ஒன்றாக சுற்றுலா சென்றுள்ளனர் இது டேட்டிங் தான் போல என்று ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.தேவ் படேல் நடிப்பில் உருவாகி உள்ள மங்கி மேன் படத்தில் சோபிதா துலிபாலா ஜோடியாக நடித்துள்ளார். வெளிநாடுகளில் வெளியான அந்தப்படம் சென்சார் பிரச்சனை காரணமாக இந்தியாவில் வெளியாகவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
The post என்னது நாக சைதன்யா டேட்டிங்கா… யாரு கூடனு தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>The post தடைகளை தாண்டி வெளியான ரத்னம்! நிம்மதி பெருமூச்சு விட்ட விஷால்… appeared first on Touring Talkies.
]]>இன்று படம் வெளியான நிலையில் நேற்று மாலைக்கு முன்னர் வரை பல திரையரங்கில் டிக்கெட் புக்கிங் தொடங்காமல் இருக்கவே என்ன காரணம் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில், கடைசி நேரத்தில் படத்தை வெளியிட விடாமல் சதி செய்வதாக விஷாலே வெளியிட்டுள்ள ஆடியோ பரபரப்பை கிளப்பியது.
தமிழ்நாட்டில் ரத்னம் திரைப்படத்தை திருச்சி மற்றும் தஞ்சாவூர் பகுதிகளில் ரிலீஸ் செய்ய விடாமல் தடுக்கிறாங்க என்றும் இதுக்கு பேர் கட்ட பஞ்சாயத்து என நடிகர் விஷால் அதிரடியாக குற்றச்சாட்டை முன் வைத்தார்.இப்படி ரத்தமும் வியர்வையும் சிந்தி இந்த படத்தில் நடிச்சிருக்கேன். என்னுடைய நண்பர்கள் இந்த படத்தை வாங்கி வெளியிடுகின்றனர்.இப்படி கடைசி நேரத்தில் இப்படி பண்ணால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படும், கடைசி நேரத்தில் ஒரு கடிதத்தை கொடுத்து விட்டார்கள் என படத்திற்கு தடை விதிப்பது சரியான நடைமுறை அல்ல என விஷால் எச்சரித்து பேசியிருந்தார்.
குறிப்பிட்ட திருச்சி மற்றும் தஞ்சாவூர் ஏரியா திரையரங்க உரிமையாளர் சங்கத்தில் கடிதம் ஒன்றை கடைசி நேரத்தில் கொடுத்தால் படத்தை வெளியிடாமல் தடுப்பீங்களா? எனவும் காலையில் இருந்து உங்களுக்கு கொள்ள போன் செய்கிறேன்.ஆனால் நீங்கள் வெயிட்டிங்கிலேயே வைத்து வருகிறீர்கள். பண்ணுங்க, எவ்ளோ பண்ண முடியுமோ பண்ணுங்க, என்று கூறியிருந்தார் எனக்கே இந்த நிலைமை அப்படி என்றால் மற்ற சாதாரண நடிகர்களுக்கு என்ன நிலை தமிழ் சினிமாவில் தெரிந்து கொள்ளட்டும் என்று பேசியிருந்தார்.
அதன்பின்னர், நேற்று மாலை ஒரு வழியாக பிரச்சினை தீர்ந்து இன்று திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் ரத்னம் திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
The post தடைகளை தாண்டி வெளியான ரத்னம்! நிம்மதி பெருமூச்சு விட்ட விஷால்… appeared first on Touring Talkies.
]]>The post ஐபிஎல் ஸ்ட்ரீமிங் மோசடியில் தமன்னா? தமன்னாவுக்கு பறந்த சம்மன் அதிர்ச்சியில் திரையுலகம்! appeared first on Touring Talkies.
]]>சுந்தர் சி-யின் அரண்மனை 4 அடுத்த வாரம் வெளியாக உள்ள நிலையில் அப்படத்தில் தம்மன்னா நடித்துள்ளார், இந்நிலையில் ஐபிஎல் ஸ்ட்ரீமிங் தொடர்பான வழக்கில் தற்போது தமன்னா நன்றாக மாட்டியுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
தம்மன்னா ஃபேர் பிளே ஆப் மூலம் சட்டவிரோதமாக ஐபிஎல் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்ட மோசடியில் தமன்னா ஈடுபட்டதாக அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.நடிகை தமன்னாவுக்கு இதுகுறித்து மகாராஷ்ட்ரா சைபர் ஐடி விங் தற்போது சம்மன் அனுப்பி உள்ளனர். வருகின்ற ஏப்ரல் 29ம் தேதி நடிகை தமன்னா இதுகுறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சைபர் கிரைம் போலீஸார் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
இதேபோல் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தும் இந்த சட்ட விரோதமான ஐபிஎல் ஸ்ட்ரீமிங் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது ஆனால் அவர் படப்பிடிப்பில் பிசியாக உள்ளதாக சொல்லி தற்போது வர இயலாது வேறொரு தேதியில் ஆஜராகிரேன் என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
The post ஐபிஎல் ஸ்ட்ரீமிங் மோசடியில் தமன்னா? தமன்னாவுக்கு பறந்த சம்மன் அதிர்ச்சியில் திரையுலகம்! appeared first on Touring Talkies.
]]>The post வலுக்கும் விஜய் ஆண்டனி ப்ளூசட்டை மாறன் மோதல்! appeared first on Touring Talkies.
]]>இதில் தமிழ் டாக்கீஸ் எனும் யூடியூப் சேனல் ஒன்றை வைத்துள்ளவர் தான் ப்ளூ சட்டை மாறன்.இவர் ப்ளூ சட்டை அணிந்து மட்டுமே பல விமர்சன வீடியோக்களை வெளியிடுவதால் அவருக்கு அந்த ப்ளூ சட்டையே அடையாளம் ஆனது. தொடர்ந்து பல படங்களுக்கு நெகட்டிவ் விமர்சனங்களை மட்டுமே அதிகம் கொடுத்து வருவதாக பல காலமாக அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.
இவர் பலருக்கு மிகப்பெரிய தலைவலியாக இருக்கிறார் எனவும் தங்கள் படங்களின் வசூலை காலி செய்து வருகிறார் என தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் தொடர்ந்து அவர் மீது குற்றச்சாட்டுகளை குவித்து வருகின்றனர். சமீபத்தில் விஜய் ஆண்டனி வெளியிட்ட பதிவு காரணமாக வெடித்துள்ள சர்ச்சையை விவரித்துப் பேசும் நோக்கத்தில் பிஸ்மி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
சிலநாட்களுக்கு முன் வெளியான ரோமியோ படம் ஓடாததற்கு மிகப்பெரிய காரணம் ப்ளூ சட்டை மாறன் சொன்ன தவறான விமர்சனம் தான் என்பதை போல விஜய் ஆண்டனி பதிவுகளை போட, அதற்கு விஜய் ஆண்டனிக்கு அவர்களுக்கு நடிக்கவே தெரியாது என பதிலடி கொடுத்தார் ப்ளூ சட்டை மாறன். இந்நிலையில், இதுதொடர்பாக விவரித்து ஒரு வீடியோவையே வலைப்பேச்சு பிஸ்மி வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோவில் நல்ல படங்களை எடுத்தால் எந்த ப்ளூ சட்டை மாறன் எவ்வளவு நெகடிவ் விமர்சனங்களை கொடுத்தாலும் படம் ஓடும் என பேசியுள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த ப்ளூசட்டை மாறன் என்ன நினைத்தாரோ ‘ப்ளூ சட்டை மாறன் அறிவு ஜீவியா? அரைவேக்காடா ? பிஸ்மி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! என ஒரு கேப்ஷனை போட்டு பதிவு செய்து இருக்கிறார்.இதைக்கண்ட ரசிகர்கள் இவர்கள் இருவரும் சேர்ந்துகொண்டு விஜய் ஆண்டனியை கடுப்பேத்துகிறார்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
The post வலுக்கும் விஜய் ஆண்டனி ப்ளூசட்டை மாறன் மோதல்! appeared first on Touring Talkies.
]]>The post 7 கோடியை சுருட்டி விட்டார்…மஞ்சும்மல் பாய்ஸ் பட தயாரிப்பாளர் மீது பாய்ந்த வழக்கால் பரபரப்பு! appeared first on Touring Talkies.
]]>மலையாளத்தில் கொடிக்கட்டி பறந்த இப்படம் கேரளா மட்டுமில்லாது தமிழகத்திலும் பட்டைய கிளப்ப காரணமே குணா குகையும் அந்த கண்மணி அன்போடு காதலன் பாடல் தான். கொடைக்கானால் மலையை சுற்றி 11 நண்பர்களை வைத்து இயக்கிய இப்படம் சிறிய தூண்டில் போட்டு பெரிய மீனை பிடித்தார் போல பல கோடியை அள்ளியது.படம் வெளியான போது படத்தை பார்த்த கமல்ஹாசன் படக்குழுவினரை அழைத்து பாராட்டினார். இவரை தொடர்ந்து ரஜினிகாந்த் மற்றும் சிம்பு என பலரும் படக்குழுவினரை நேரில் பாராட்டினர்.
இப்படத்தில் நண்பர்களுக்குள் இருக்கும் அற்புதமான காதலை அன்பை சொன்ன விதம் தனக்கு பிடித்து இருந்தது என்றும், இந்த படத்திற்கு பிறகு கண்மணி அன்போடு காதலன் பாடலின் மீதான கண்டோட்டமே மாறிவிட்டது என்று சிம்பு படக்குழுவினரை மனதார பாராட்டியிருந்தார்.இப்படம் மலையாள திரையுலகில் ரூ.200 கோடி கிளப்பில் இணைந்த முதல் படம் என்ற சாதனையை படைத்தது.
இவ்வாறு இருக்க இப்படத்தின் தயாரிப்பாளர் ஷான் ஆண்டனி இப்படத்தின் லாபத்தில் உனக்கு பங்கு தருகிறேன் என சொல்லி ஏமாற்றி விட்டதாக கேரளா அரூர் பகுதியைச் சேர்ந்த சிராஜ் என்பவர் எர்ணாகுளம் கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் அவர் மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்காக ரூ.7 கோடியை முதலீடு செய்தேன். பட தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரர் ஷான் ஆண்டனி லாபத்தில் 40 சதவீதம் பங்கு தருவதாக கூறினார் ஆனால் அவர் சொன்னபடி இதுவரை பணத்தை தரவில்லை.மேலும், நான் படத்திற்காக முதலீடு செய்த ரூ.7 கோடியையும் திருப்பி தரவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.இத்தகவல் திரையுலகில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post 7 கோடியை சுருட்டி விட்டார்…மஞ்சும்மல் பாய்ஸ் பட தயாரிப்பாளர் மீது பாய்ந்த வழக்கால் பரபரப்பு! appeared first on Touring Talkies.
]]>