The post சம்பளத்தை உயர்த்திய விஜய் சேதுபதி… எவ்வளவு கோடி தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>எடுத்த உடனே ஹீரோவாக எல்லாம் நடிக்காமல் சிறிய கதாப்பாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து பின்னர் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கி சூப்பர் ஹிட்டான தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடித்து பெரிதும் வரவேற்பைப் பெற்றார்.
அந்நேரத்தில் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் பங்கேற்ற கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி, பாலாஜி தரணிதரன் உள்ளிட்டோர் சினிமாவுக்குள் வர ஆரம்பித்தனர் இவர்களின் தேர்வு விஜய் சேதுபதியை வைத்து தங்களது படத்தை எடுப்பதாக இருந்தது.
விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், பீட்சா, சூதுகவ்வும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்களின் மூலம் வரிசையாக ஹிட் கொடுத்தார். தனது வித்தியாசமான தனித்துவமான நடிப்பின் மூலம் தனக்கென ரசிகர் கூட்டத்தை பெற்றார்.
ஹீரோவாக மட்டும்தான் நடிக்க வேண்டுமா என்ன வில்லனாகவும் நடிப்பேன் என பேட்ட, மாஸ்டர், விக்ரம், ஜவான் என அவர் வில்லனாக நடித்து கெத்து காட்டினார் விஜய் சேதுபதி.
அதோபோல ஃபர்ஸி, ஜவான் மூலம் ஹிந்தியிலும் நடித்து ரசிகர்களை ஈர்த்தார். கடைசியாக மெரி கிறிஸ்துமஸ் படத்தில் நடித்து இருந்தார். பின்னர் அவரது ரசிகர்களின் கோரிக்கைக்கு ஏற்ப மகாராஜா மற்றும் மிஷ்கின் இயக்கத்தில் ட்ரெய்ன் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்துவருகிறார். பிசாசு 2 படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தற்போது விஜய் சேதுபதி தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.அதாவது ராம்சரண் நடிக்கும் புதிய படத்தில் வில்லனாக நடிக்க வேண்டும் என படக்குழு கேட்டுக்கொண்டதற்கு தனது சம்பளமாக 20 கோடி ரூபாய் கேட்டதாகவும் அதை படக்குழு ஏற்கவில்லை எனவும் கூறப்படுகிறது.வில்லனாக நடிக்க வேண்டும் என வரும் கோரிக்கைகளை தடுக்கவே வில்லனாக நடிக்க சம்பள பணத்தை உயர்த்தியதாக கூறப்படுகிறது.
The post சம்பளத்தை உயர்த்திய விஜய் சேதுபதி… எவ்வளவு கோடி தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>The post படத்துக்கு படம் மாறிய விஜய்சேதுபதி. appeared first on Touring Talkies.
]]>‘சங்குதேவன்’ தெருக்கூத்து கலைஞர், செவ்வாய் தோழம் என்று ஒரு அருமையான கதை. அதுல தெரு கூத்துக்கலைஞன் என்றதும் எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. ஆனால், அப்போது அந்தப் படத்தோட இயக்குநர் சுதாகருக்கும் விஜய்சேதுபதிக்கும் இடையே பிரச்சனை வந்துவிட்டது. அதனால், அவர் எடுத்த காட்சியையே திரும்ப திரும்ப எடுத்து படம் ட்ராப் ஆயிடுச்சு.
அப்போது இருந்த விஜய்சேதுபதி வேற. ஆனால், அவர் ‘சேதுபதி’ படத்தில் நடிக்க வரும் போது அதைவிட வேறு சேதுபதி. உருமாற்றம், குண மாற்றம் என்று காரல் மார்க்ஸ் சொல்லுவாரே அதுபோல விஜய்சேதுபதி மாறி இருந்தார்.
மேலும் அந்தப் பேட்டியை முழுமையாக தெரிந்து கொள்ள கீழே உள்ள காணொளியை கிளிக் செய்து பாருங்க.
The post படத்துக்கு படம் மாறிய விஜய்சேதுபதி. appeared first on Touring Talkies.
]]>The post ‘தர்மம் வெல்லும்’ படத்தில் விஜய்சேதுபதி? appeared first on Touring Talkies.
]]>மிர்ச்சி சிவா, ஹரீஷா, வாகை சந்திரசேகர், எம்.எஸ்.பாஸ்கர், அருள்தாஸ் உட்பட பலர் நடித்துள்ள சூதுகவ்வும் இரண்டாம் பாகத்தை அர்ஜுன் எம்.எஸ். என்பவர் இயக்கி உள்ளார். இவர் பிரபுதேவா நடித்த ‘யங் மங் சங்’ படத்தை இயக்கியவர். இந்தப் படம் மே மாதம் வெளியாக உள்ளது.
‘சூதுகவ்வும்’ இரண்டாம் பாகம் படத்தை தொடர்ந்து ‘சூது கவ்வும்’ மூன்றாம் பாகத்தை எடுக்க இருப்பதாகவும், அதில் ‘சூதுகவ்வும்’ முதல் பாகத்தில் நடித்த விஜய்சேதுபதி நடிக்க இருப்பதாகவும் தயாரிப்பாளர் சி.வி.குமார் தெரிவித்திருக்கிறார்.
“சூதுகவ்வும் மூன்றாம் பாகமாக ‘தர்மம் வெல்லும்’ படம் உருவாகிறது. இதில் விஜய்சேதுபதியை நடிக்க கேட்டிருக்கிறேன். ஸ்கிரிப்ட் முழுவதையும் முடித்துவிட்டு அவரை வந்து பார்க்க சொல்லியிருக்கிறார்” என்று ஒரு பேட்டியில் சி.வி.குமார் தெரிவித்துள்ளார்.
The post ‘தர்மம் வெல்லும்’ படத்தில் விஜய்சேதுபதி? appeared first on Touring Talkies.
]]>The post விஜய் மகன் சஞ்சய் இயக்கும் முதல் ஹீரோ யார் தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>அதற்கு சஞ்சய், ‘இல்லை தாத்தா, நான் விஜய் சேதுபதியை வைத்துத்தான் முதல் படம் இயக்குவேன்.. ’ என்றார்” என கூறினார் எஸ்.ஏ.சி.
The post விஜய் மகன் சஞ்சய் இயக்கும் முதல் ஹீரோ யார் தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>