நடிகர் விஜய்யின் மகனான சஞ்சய், ‘வேட்டைக்காரன்’ திரைப்படத்தில், ‘நான் அடிச்சா தாங்கமாட்ட..’ என்ற பாடலில் நடனமாடியிருந்தார். அதன் பின் திரையில் தோன்றவில்லை.
அவர் தற்போது திரைத்துறை தொழில்நுட்பம் சார்ந்து வெளிநாட்டில் பயின்று வருகிறார். ‘அவர் வந்ததும் திரைப்படங்களை இயக்க இருக்கிறார்’ என்று தகவல்கள் உலவுகின்றன.
இந்த நிலையில் சஞ்சயின் தாத்தாவும், திரைப்பட இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு தகவலை பகிர்ந்துள்ளார்.
“என் பேரன் சஞ்சய், கனடாவில் படித்துக் கொண்டு இருக்கிறார். ஒரு முறை அவரிடம், ‘உனக்கு என்னாடா, நீ டைரக்ட் பண்ணனும்ன்னு நினைக்கும்போது உனக்கு ஒரு சூப்பர் ஸ்டார்.. அதான் உன் அப்பா.. இருக்குறாரு. நீ ஈஸியா டைரக்டர் ஆகிடலாம்.. படமும் நிச்சயம் ஹிட் ஆகிடும்’ என்றேன்.
அதற்கு சஞ்சய், ‘இல்லை தாத்தா, நான் விஜய் சேதுபதியை வைத்துத்தான் முதல் படம் இயக்குவேன்.. ’ என்றார்” என கூறினார் எஸ்.ஏ.சி.