The post விஜயகாந்த் மறைவு: தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் காலை காட்சி ரத்து appeared first on Touring Talkies.
]]>தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி இன்று (டிச.28) காலை காலமானார். அவருக்கு வயது (71). அவரது மறைவால் தேமுதிக கட்சித் தொண்டர்கள், திரை ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். விஜயகாந்த் இல்லத்தில் உள்ள தேமுதிக கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.
அவரது மறைவு தொடர்பாக மியாட் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், “நிமோனியா (நுரையீரல் அழற்சி) காரணமாக அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்த விஜயகாந்துக்கு மருத்துவப் பணியாளர்களின் கடின முயற்சி இருந்தபோதிலும் காலமானார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், விஜயகாந்த் மறைவையொட்டி தமிழகம் முழுவதுமுள்ள திரையரங்குகளில் காலை காட்சி ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். தனியார் சேனலுக்கு பேட்டியளித்துள்ள அவர் கூறியதாவது: விஜயகாந்த் மறைவு சினிமா உலகத்துக்கு பேரிழப்பு. ஹீரோவுக்கும் லைமேனுக்கும் அதே உணவு என்ற முறையை கொண்டு வந்தவர். அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று (டிச.28) தமிழ்நாடு முழுவதுமுள்ள திரையரங்குகளில் காலை காட்சி ரத்து செய்யப்படுகிறது” என்று தெரிவித்தார்.
The post விஜயகாந்த் மறைவு: தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் காலை காட்சி ரத்து appeared first on Touring Talkies.
]]>The post ‘லியோ’: கண்காணிக்க சிறப்பு குழுக்கள்! appeared first on Touring Talkies.
]]>தவிர, திரைப்படத்தை காண வரும் மக்களுக்கு தகுந்த பாதுகாப்பு, வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் போக்குவரத்து சீராக செல்ல ஏற்பாடுகள், உரிய கட்டணம் மட்டும் பெறுவது என்றும் அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.மேலும், லியோ திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளே ண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது எனவும், தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, சென்னை பெருநகர காவல்துறையில் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாடுகளை மீறி செயல்படும் திரையரங்குகள், அதன் நிர்வாகிகள், ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
The post ‘லியோ’: கண்காணிக்க சிறப்பு குழுக்கள்! appeared first on Touring Talkies.
]]>The post ‘விடுதலை’: தமிழ்நாட்டில் எத்தனை தியேட்டர்கள்? appeared first on Touring Talkies.
]]>இந்த படத்தின் இரண்டு பாகங்களின் படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது. தற்போது பின்னணி பணிகள் நடைபெற்று வருகின்றன.
இரண்டு பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் ‘விடுதலை – பாகம் 1’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இந்த திரைப்படம் வருகிற 31-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனை படக்குழு போஸ்டர்களை வெளியிட்டு அறிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் நானூறுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் படம் வெளியாகும் என ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
The post ‘விடுதலை’: தமிழ்நாட்டில் எத்தனை தியேட்டர்கள்? appeared first on Touring Talkies.
]]>The post திரையரங்கில் ஓடிக்கொண்டு இருந்த படம் நிறுத்தம்! appeared first on Touring Talkies.
]]>மலையாளத்தில் பிரியா வாரியர் நடித்த ‘ஒரு அடார் லவ்’ படத்தை இயக்கி பிரபலமான ஓமர் லூலு தற்போது ‘நல்ல சமயம்’ என்ற படத்தை இயக்கி உள்ளார். இதில் இர்ஷாத் அலி, விஜீஸ், காயத்ரி சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம், சில தினங்களுக்கு முன்பு திரைக்கு வந்தது.
இந்த நிலையில் படத்தில் போதைப்பொருளை ஊக்குவிக்கும் காட்சிகள் இருப்பதாகவும், அதில் எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெறவில்லை என்றும் மத்திய கலால் துறை படத்துக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தது. இயக்குனர் ஓமர் லூலு மற்றும் படத்தின் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நிலையில் நல்ல சமயம் படத்தை தியேட்டர்களில் இருந்து வாபஸ் பெறுவதாக படக்குழுவினர் அறிவித்தனர். இதையடுத்து தியேட்டர்களில் நல்ல சமயம் படம் திரையிடுவது நிறுத்தப்பட்டது. கலால் துறை நோட்டீசை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருப்பதாகவும், தீர்ப்பு வந்த பிறகு படத்தை மீண்டும் திரைக்கு கொண்டு வருவேன் என்றும் ஓமர் லூலு அறிவித்து இருக்கிறார்.
மத்திய கலால்துறை வழக்கு தொடுத்து, நிறுத்தப்பட்டது என்பது இதுவரை திரையுலகில் நடக்காத விசயம். ஆகவே இச்சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post திரையரங்கில் ஓடிக்கொண்டு இருந்த படம் நிறுத்தம்! appeared first on Touring Talkies.
]]>