The post இது என்னடா கோட் படத்துக்கு வந்த சோதனை… அடிமட்ட விலைக்கு சேட்டிலைட் உரிமை பேரம் பேசிய நிறுவனங்கள்… appeared first on Touring Talkies.
]]>தி கோட் படத்தில் விஜய்யுடன் 90களில் உச்சக்கட்ட ஃபார்மில் இருந்த பிரபுதேவா, பிரசாந்த், ஜெயராம், மைக் மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சௌதரி உள்ளிட்டோர் நடித்துவருகின்றனர்.பலர் இப்படத்தில் நடித்தாலும் மைக் மோகன் கதாபாத்திரம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடைசியாக படத்தின் ஷூட்டிங் திருவனந்தபுரம் கேரளாவில் நடைபெற்றது. அதுதான் படத்தின் க்ளைமேக்ஸ் ஷூட்டிங் என கூறப்பட்ட நிலையில் இப்போது ரஷ்யாவில் நடந்துவருகிறது.விஜய்,பிரசாந்த் உள்ளிட்டோர் சில நாட்களுக்கு முன்பு தேர்தலில் வாக்களிப்பதற்காக சென்னை வந்திருந்தனர்.அதே சமயம் தி கோட் படத்தில் சிஜி பணிகள் அதிகம் இருப்பதாக வெங்கட் பிரபு சொல்லியிருக்கிறார்.
முன்னதாக கோட் படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கியிருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் சேட்டிலைட் உரிமை குறித்த புதிய தகவல் கசிந்துள்ளது. முதலில் சன் டிவி GOAT படத்தை வாங்குவதாக முடிவு செய்திருந்ததாம். ஆனால் சில காரணங்களால் அந்த முடிவிலிருந்து சன் டிவி பின்வாங்கிவிட்டதாம். பிறகு ஜீ நெட்வொர்க்கும் கைவிரிக்க கடைசியாக விஜய் டிவி வாங்குவதற்கான முயற்சியில் இறங்கியதாம். ஆனால் 12 கோடி ரூபாய் மட்டும்தான் கொடுப்போம் என்பதில் விஜய் டிவி தரப்பு கறாராக இருப்பதாகவும்; தொகையை ஏற்றுவதற்கு GOAT தரப்பிலிருந்து பேச்சுவார்த்தை தொடர்ந்து நடத்திவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
The post இது என்னடா கோட் படத்துக்கு வந்த சோதனை… அடிமட்ட விலைக்கு சேட்டிலைட் உரிமை பேரம் பேசிய நிறுவனங்கள்… appeared first on Touring Talkies.
]]>The post தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக..! appeared first on Touring Talkies.
]]>சன் டிவிக்கும் விஜய் டிவிக்கும்தான் எப்போதும் போட்டி. இந்த நிலையில் டிஆர்பி ரேட்டிங்கில் விஜய் டிவி, சன் டிவியை பின்னுக்கு தள்ளி இருக்கிறது. ஆம், தற்போது விஜய் டிவிக்கு நம்பர் ஒன் இடம் கிடைத்திருக்கிறது.
The post தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக..! appeared first on Touring Talkies.
]]>The post ரஜினியுடன் நடிக்க மறுத்தது ஏன்? மனம் திறந்த பெப்சி உமா… appeared first on Touring Talkies.
]]>அந்தகால இளைஞர்கள் திருமணம் என்று வரும்போது இந்த நடிகை போல் பெண் இருப்பாள் அல்லது இருக்க வேண்டும் என கட்டளை இடுவார்கள்.சினிமா நடிகைக்கு சரிசமமாக பார்க்கப்பட்டவர் டி.வி.தொகுப்பாளினி பெப்சி உமா.
சினிமா வாய்ப்புக்காக ஏங்கி கிடந்த எத்தனையோ நடிகைகள் மத்தியில் தனக்கு வந்த பல பட வாய்ப்புகளை நிராகரித்தவர் பெப்சி உமா.
சன் டிவியின் தொடக்க காலத்தில் இருந்த சில நிகழ்ச்சிகள் மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தது. இந்த சேனலில் நிகழ்ச்சி என்றால் பெப்சி உமா வழங்கிய உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சி தான்.
ரசிகர்களை மீண்டும் மீண்டும் இந்த நிகழ்ச்சியை பார்க்க தூண்டியது உமாவின் குரல் அவரது ஸ்டைலும். அவருக்காகவே இந்த நிகழ்ச்சியை பார்த்த இளைஞர்களும் உண்டு என சொல்லலாம்.
அந்த காலத்தில் பலரின் கனவு கன்னியாக இருந்த பெப்ஸி உமாவை சினிமா உலகம் வரவேற்க தயாராக இருந்தது. பிரபல இந்தி தயாரிப்பாளர் சுபாஷ் காய் ஷாருக் கானுக்கு ஜோடியாக நடிக்க அழைத்தார்.ஆனால் அவர் எனக்கு சினிமாவில் நடிக்கும் எண்ணம் இல்லை என கூறிவிட்டாராம்.
அடுத்து தமிழில் ரஜினியின் முத்து படத்தில் நடிக்க வாய்ப்பு வந்த போதும் யாருடனும் என்னால் சினிமாவில் நடிக்கவே முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டாராம்.
இது குறித்து ஒரு பேட்டியில் கேட்டதற்கு, “எனக்கு டிவி மீது இருந்த காதல் சினிமா மீது வரவே இல்லை” என்று சிம்பிளாக சொல்லிவிட்டார்.
The post ரஜினியுடன் நடிக்க மறுத்தது ஏன்? மனம் திறந்த பெப்சி உமா… appeared first on Touring Talkies.
]]>The post ‘அன்பே வா’ சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு வரும் நடிகை டெல்னா டேவிஸ் appeared first on Touring Talkies.
]]>2014-ம் ஆண்டில் ‘விடியும்வரை பேசு’ என்ற படத்தின் மூலமாக தமிழ்ச் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை டெல்னா டேவிஸ்.
அதற்குப் பிறகு ‘பட்ற’, ‘49-ஓ’, ‘நனையாத மழையே’, ‘ஆக்கம்’, ‘குரங்கு பொம்மை’ ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்திருக்கிறார். மேலும் ‘யூ டூ புரூட்டஸ்’, ‘ஹேப்பி வெட்டிங்’ போன்ற மலையாளப் படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது ‘மாங்கல்யம் தந்துனானே’ என்னும் தமிழ்ப் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் டெல்னா டேவிஸ் தற்போது சின்னத்திரையில் அடியெடு்த்து வைத்திருக்கிறார்.
சன் டிவியில் வரும் நவம்பர் 2-ம் தேதி முதல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள ‘அன்பே வா’ என்னும் மெகா தொடரில் நாயகியாக அறிமுகமாகிறார் டெல்னா டேவிஸ்.
இந்தத் தொடரை சரிகமா இந்தியா லிட் சார்பாக, அதன் துணைத் தலைவரான B.R.விஜயலட்சுமி தயாரிக்கிறார்.
இந்தத் தொடரில் விராட் நாயகனாகவும், டெல்னா டேவிஸ் நாயகியாகவும் நடிக்கின்றனர். மற்றும் வினயா ப்ரசாத், ஆனந்த், கன்யா, ரேஷ்மா, கெளசல்யா செந்தாமரை, பிர்லா போஸ், துரை ஆகியோரும் நடிக்கின்றனர்.
கதை – சரிகமா கதைக் குழு, திரைக்கதை – ராஜஸ்ரீ N.Roy, வசனம் – ரதி பாலா, இசை – தரண் குமார், க்ரியேட்டிவ் – K.சண்முகம், இயக்கம் – ஆர்.பிரின்ஸ் இம்மானுவேல்.
குடும்பப் பின்னணியில், அழகான காதலை மையமாக வைத்து,
இந்த ‘அன்பே வா’ மெகா தொடரின் கதை அமைக்கப்பட்டுள்ளது.
வருண் – பூமிகா இருவரும் முற்றிலும் மாறுபட்ட இரு வேறு எதிரெதிர் பின்னணியில் இருந்து வந்தவர்கள்.
நாயகி பூமிகா, மிகவும் பொறுப்பான, தன்னம்பிக்கையுள்ளவள். கிராமத்து சூழலில் வளர்ந்த பாரம்பரியம்பிக்க பெண். நாயகன் வருண், பணக்கார சூழலில் வளர்ந்த ஆடம்பரமான இளைஞன். விதியின் சந்தர்ப்பவசத்தால் இருவரும் ஒரே சூழலில் வாழ நேரிடுகிறது.
இருவரும் அவர்களுக்குள் இருக்கும் உண்மையான அன்பையும், காதலையும் கண்டுபிடித்து, திருமணத்தில் இணைவார்களா என்பதே இந்த ‘அன்பே வா’ மெகா தொடரின் கதைச் சுருக்கம்.
The post ‘அன்பே வா’ சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு வரும் நடிகை டெல்னா டேவிஸ் appeared first on Touring Talkies.
]]>