The post ‘சுல்தான்’ வசூல் ரீதியாக வெற்றிப் படமானது..! appeared first on Touring Talkies.
]]>‘மாஸ்டர்’ படத்திற்குப் பிறகு மிகப் பெரிய வசூல் வேட்டையை ‘சுல்தான்’ மட்டுமே பெற்றிருப்பதாகத் திரையரங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் இந்தப் படம் வெளியாகியுள்ளது. தமிழில் விமர்சனங்கள் கலவையாக வந்திருந்தபோதிலும் சென்ற வார இறுதி நாட்களில் நகரத் தியேட்டர்களில் அனைத்து ஷோக்களுமே ஹவுஸ்புல்லாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படம் 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவானது. வெளியான முதல் நாளே தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் கடந்த 5 நாட்களில் 1 கோடியே 87 லட்சம் ரூபாயை வசூலித்துள்ளது.
இந்த 5 நாட்களில் ஒட்டு மொத்த கலெக்சனாக 17 கோடியே 45 லட்சம் ரூபாயை பெற்றுள்ளது ‘சுல்தான்’. அதே நேரம் தெலுங்கில் 4 கோடியே 60 லட்சம் ரூபாயையும், வெளிநாடுகளில் இருந்து 2 கோடியே 15 லட்சம் ரூபாயையும் கலெக்சன் செய்துள்ளது.
ஏற்கெனவே ‘சுல்தான்’ படத்தின் சாட்டிலைட், டிஜிட்டல், ஹிந்தி டப்பிங் உரிமம் எல்லாம் சேர்த்து 18 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. தெலுங்கு பட உரிமை, டிவி, மற்றும் ஓடிடி உரிமத்துடன் 15 கோடி ரூபாய்க்கு விற்பனையாகிவிட்டது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிற்கான தியேட்டர் திரையிடுதலுக்காக 5 கோடிக்கு படம் விற்கப்பட்டுள்ளது.
இந்த வாரம் ‘கர்ணன்’ திரைப்படம் வெளியாகவுள்ளது. 10-ம் தேதி முதல் தியேட்டர்களில் 50 சதவிகிதம்தான் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட வேண்டும் என்ற அரசின் நிபந்தனையும் உள்ளது.
எனவே இந்த வாரத்திய வசூல் ‘சுல்தான்’ படத்திற்கு வெகுவாகக் குறைய வாய்ப்புண்டு. இருந்தாலும், ஒட்டு மொத்தமாகப் பார்க்கப் போனால் இந்த ‘சுல்தான்’ திரைப்படம் தயாரிப்பாளருக்கு மிகப் பெரிய லாபத்தைக் கொடுக்காவிட்டாலும் நிச்சயமாக வெற்றித் திரைப்படமாகத்தான் அமையும்.
The post ‘சுல்தான்’ வசூல் ரீதியாக வெற்றிப் படமானது..! appeared first on Touring Talkies.
]]>The post ‘சுல்தான் படத்தின் ‘ஜெய் சுல்தான்’ பாடல் காட்சி appeared first on Touring Talkies.
]]>The post ‘சுல்தான் படத்தின் ‘ஜெய் சுல்தான்’ பாடல் காட்சி appeared first on Touring Talkies.
]]>The post 2021 பொங்கல் தினத்தில் மும்முனைப் போட்டியா..? appeared first on Touring Talkies.
]]>2021 பொங்கல் தினத்தில் வருவதாக ‘ஈஸ்வரன்’ திரைப்படம் அனைவரையும் முந்திக் கொண்டு சொல்லிவிட்டது. மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிம்புவின் ஆட்டத்தைப் பார்க்க அவரது ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.
நடிகர் விஜய்யின் ‘மாஸ்டர்’ படமும் பொங்கலுக்கு வெளியாகலாம் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இதைவிட்டால் அடுத்து ஜனவரி 26, அல்லது ஏப்ரல் 14 அன்றுதான் வெளியிட முடியும் என்பதால் நிச்சயமாக ‘மாஸ்டர்’ பொங்கல் ரேஸில் கலந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“யாருடைய படம் வெளியானாலும் சரி.. கார்த்தியின் ‘சுல்தானும்’ பொங்கல் தினத்தன்று வெளியாகும்…” என்று அதன் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ‘சுல்தான்’ படமும் மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகியிருப்பதால் அதை அதிக நாட்கள் கையில் வைத்திருக்க முடியாது என்பதால் இந்த முடிவை எடுத்திருக்கிறார் எஸ்.ஆர்.பிரபு.
ஆனால் இடையில் இருக்கும் ‘மாஸ்டர்’ படம் நிச்சயமாக பொங்கலுக்கு வெளியாகிறது என்றால் நிலைமை தலைகீழாக மாற வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் அனைத்துத் திரையரங்கு உரிமையாளர்களும் காத்திருப்பது ‘மாஸ்டர்’ படத்திற்காகத்தான்.
அதனால் ‘மாஸ்டர்’ படமே 75 சதவிகித தியேட்டர்களை அதாவது 600 தியேட்டர்களை எடுத்துக் கொண்டால் மீதமிருக்கும் தியேட்டர்களை ‘சுல்தானும்’, ‘ஈஸ்வரனும்’ பகிர்ந்து கொள்ள வேண்டி வரும். அப்போது கிடைக்கும் தியேட்டர்களில் ‘சுல்தான்’ வெளியானால் போட்ட காசை எடுக்க முடியாது. நஷ்டம் தவிர்க்க முடியாததாக ஆகிவிடும்.
இதனால் ‘சுல்தான்’ படத்தை மட்டும் 2 வாரங்கள் தள்ளி ஜனவரி 26-ம் தேதியன்று வெளியிடலாம் என்ற ஒரு யோசனையும் ‘சுல்தான்’ தயாரிப்பாளரிடத்தில் இருக்கிறது. ஆனால், “பொங்கல் தினத்தன்றே நான் எதிர்பார்க்கும் தியேட்டர்கள் கிடைத்துவிட்டால் போதும் என்ற மனமே பொன் செய்யும் என்ற பழமொழிக்கேற்ப ‘மாஸ்டருக்கு’ போட்டியாக ‘சுல்தானும்’ களமிறங்கும்” என்கிறார் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு.
திறமையைக் காண்பிக்கவோ.. போட்டியிடவோ.. யார் பெரியவர் என்பதைச் சொல்லவோ தகுந்த இடமும், நாளும் 2021 பொங்கல் தினமில்லை..!
இதை அனைவரும் புரிந்து கொண்டால் நல்லது..!
The post 2021 பொங்கல் தினத்தில் மும்முனைப் போட்டியா..? appeared first on Touring Talkies.
]]>The post கார்த்தியின் ‘சுல்தான்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது..! appeared first on Touring Talkies.
]]>இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.
படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். மேலும் பொன்னம்பலம், ராமச்சந்திர ராஜூ மற்றும் பல பெரிய நட்சத்திரங்களும் படத்தில் நடித்துள்ளனர்.
சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்ய.. விவேக் மெர்வின் இசையமைத்திருக்கிறார். சிவகார்த்திகேயன் நடித்த ’ரெமோ’ படத்தை இயக்கிய இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.
சென்ற ஆண்டு ஆகஸ்டு மாதம் துவக்கப்பட்ட இத்திரைப்படம் கொரோனா வைரஸினால் ஏற்பட்ட லாக் டவுன் பிரச்சினையினால் இப்போதுதான் ஒரு வருடம் கழித்து இன்றைக்குத்தான் முடிவுக்கு வந்திருக்கிறது.
இது பற்றி நடிகர் கார்த்தி வெளியிட்டுள்ள செய்தியில், “இன்றைக்கு படம் முடிந்தது. மூன்றாண்டுகளுக்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டம் இப்போதுவரையிலும் எங்களை உற்சாகப்படுத்திக் கொண்டேயிருந்தது. என்னுடைய நடிப்பில் உருவாகிய படங்களில் இதுதான் அதிகப் பொருட் செலவைத் தொட்டுள்ளது. படத்தைச் சிறந்த முறையில் வழங்க ஒத்துழைப்பு தந்த படக் குழுவினர் அனைவருக்கும் எனது நன்றிகள்..” என்று கூறியுள்ளார்.
The post கார்த்தியின் ‘சுல்தான்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது..! appeared first on Touring Talkies.
]]>