The post சோகத்திலிருந்து மீள விஜய் ஆண்டணி எடுத்த முடிவு! appeared first on Touring Talkies.
]]>இவரது மகள் மீரா (16) தனியார் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார். மன அழுத்தத்தில் இருந்த இவர் சில தினங்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் ஒட்டுமொத்த ரசிகர்கள், பிரபலங்கள், குடும்பத்தினர் அனைவரும் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.
தனது மகள் இறப்பு குறித்து மு விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ள அறிக்கை உருக்கமான தகவல்களை தெரிவித்து உள்ளார்.
இது குறித்து நடிகரும், தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன் விவரித்து உள்ளார்.
இதை அறிய, கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..
The post சோகத்திலிருந்து மீள விஜய் ஆண்டணி எடுத்த முடிவு! appeared first on Touring Talkies.
]]>The post இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி மகள் தற்கொலை! appeared first on Touring Talkies.
]]>இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பிறந்தவர். இவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் கொள்ளு பேரன் ஆவார். இவர் இசையமைப்பாளர், பாடகர், நடிகர், தயாரிப்பாளர் என்ற பன்முகங்களை பெற்றுள்ளார்.
காதலில் விழுந்தேன், டிஸ்யூம், வேட்டைக்காரன், அங்காடி தெரு உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து பிரபலமடைந்தார்.
மேலும் காளி, நான், சைத்தான், பிச்சைக்காரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
விஜய் ஆண்டனி தனது குடும்பத்தினருடன் சென்னை டிடிகே சாலையில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இவருடைய மகள் லாரா, சென்னை சர்ச் பார்க் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
லாராவின் அறைக் கதவு இன்று காலை வெகுநேரமாக திறக்கவில்லை. இதனால் கதவை உடைத்துக் கொண்டு அவருடைய பெற்றோர் உள்ளே சென்றனர். அப்போது மின் விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். அவரை மீட்டு ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
லாரா அதிகாலை 3 மணி அளவில் தற்கொலை செய்துக் கொண்டிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் வழக்கு பதிவு செய்து லாராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். லாரா மன அழுத்தம் காரணமாக இறந்திருக்கலாம் என முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
The post இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி மகள் தற்கொலை! appeared first on Touring Talkies.
]]>The post “தற்கொலை எண்ணம் வந்தால்…!”: கமல்ஹாசன் சொல்லும் ஆலோசனை! appeared first on Touring Talkies.
]]>தனது எக்ஸ் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
“மனிதனால் தாங்க முடியாத துயரம் என்று சொல்வதற்கு எதுவுமில்லை. மனதை இழக்காதவரை நாம் எதையுமே இழப்பதி ல்லை’ எனும் ப.சிங்காரத்தின் வரிகளைத் துயருற்ற மனங்களை நோக்கிச் சொல்ல விரும்புகிறேன். தற்கொலை எண்ணம் தலைதூக்கினால் துளியும் தயங்காமல், நொடிகூடத் தாமதிக்காமல் ஆலோசகர்களின் உதவியைப் பெறுங்கள். ‘செயலே விடுதலை’ என்பதை உணர்ந்து உங்கள் வாழ்விற்கு அர்த்தமும் அழகும் கூட்டும் காரியங்களில் தீவிரமாக ஈடுபடுங்கள்.
‘உயிரின் இயல்பு ஆனந்தம்’ என்கிறார் தேவதேவன். நமக்குக் கிடைத்த இந்த அற்புதமான வாழ்க்கையை ஒவ்வொரு நாளும் கொண்டாடுங்கள் என்று உலகத் தற்கொலைத் தடுப்பு நாளில் கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு கமல்ஹாசன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
The post “தற்கொலை எண்ணம் வந்தால்…!”: கமல்ஹாசன் சொல்லும் ஆலோசனை! appeared first on Touring Talkies.
]]>The post பிரபல நடிகை தற்கொலை! appeared first on Touring Talkies.
]]>ஆகான்க்சா, முதன்முறையாக மேரி ஜங் மேரா பைஸ்லா என்ற படத்தில் தனது 17 வயதில் நடித்து அறிமுகம் ஆனார். அதன்பின், போஜ்புரியில் வெளியான முஜ்சே ஷாதி கரோகி என்ற படத்திலும், வீரோன் கே வீர், பைட்டர் கிங், கசம் பைதா கர்ணே கி 2 மற்றும் பிற படங்களிலும் அவர் நடித்து உள்ளார். தனியாக 60 சூப்பர் ஹிட் இசை ஆல்பங்களையும் வெளியிட்டு உள்ளார். போஜ்புரியில் பிரபல நடிகர்களான கேசரி லால் யாதவ், பவன் சிங் மற்றும் பிரதீப் பாண்டே ஆகியோருடனும் ஒன்றாக நடித்து உள்ளார்.
நேற்றிரவு பாடல் ஒன்றுக்கு செல்பி வடிவிலான வீடியோ ஒன்றை பதிவிட்டு தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ளார். இந்நிலையில், தூக்கு போட்ட நிலையில் அவரது உடல் இன்று கண்டெடுக்கப்பட்டு உள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்து உள்ளது. நடிகர் மற்றும் பாடகரான சமர் சிங் என்பவருடன் காதலில் இருந்த ஆகான்க்சா, அதுபற்றி சமீபத்தில், காதலர் தினத்தில் தங்களது இன்ஸ்டாகிராமில் காதலை அவர்கள் உறுதிப்படுத்தி இருந்தனர்.
இந்நிலையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
The post பிரபல நடிகை தற்கொலை! appeared first on Touring Talkies.
]]>The post கொடுமை! டான்சர் ரமேஷ் தற்கொலைக்கு இதுதான் காரணமா! appeared first on Touring Talkies.
]]>இந்த நிலையில்,கடந்த ஜனவரி 27 அன்று கே.பி. பார்க் அரசு குடியிருப்பு பகுதியில் உள்ள இரண்டாவது மனைவி இன்பவள்ளி வீட்டிற்கு சென்றார். அங்கு, 10வது மாடியில் இருந்து திடீரென கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் பலியானார்.
ரமேஷ் தற்கொலை செய்து கொண்டதாக அவரது இரண்டாவது மனைவி கூறினார். ஆனால் முதல் மனைவி சித்ரா, தனது கணவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என புகார் அளித்தார்.
இந்த நிலையில் டான்சர் ரமேஷின் முதல் மனைவி அவரை உருட்டுக்கட்டையால் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அதில் பேசும் டான்சர் ரமேஷ் “எனக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது. எனக்கு குடிக்க காசு கொடுக்க மறுக்கிறார்கள். வேலைக்கு செல் என்கிறார்கள் சம்பாதி என்கிறார்கள். அது வேலைக்கு ஆகாது;நம்மால் அது முடியாது. அதனால் நான் சாகிறேன் ” என்று பேசுகிறார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
The post கொடுமை! டான்சர் ரமேஷ் தற்கொலைக்கு இதுதான் காரணமா! appeared first on Touring Talkies.
]]>The post ‘வாய்தா’ படத்தின் கதாநாயகி தற்கொலை appeared first on Touring Talkies.
]]>இந்த நிலையில் நேற்று மதியம் தனது வீட்டில் உள்ள மின் விசிறியில் துப்பட்டா மூலம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார், தீபாவின் உறவினர்கள் அவரைத் தொடர்பு கொள்ள முயற்சித்த போது அவர் போனை எடுக்காததால் அவரது நண்பர் பிரபாகரன் என்பவர் வீட்டிற்கு நேரில் சென்று பார்த்த பொழுது தீபா தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதனை அடுத்து தீபாவின் சகோதரர் ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவருக்கு தகவல் கொடுத்ததன் பேரில் அவர் நேற்று இரவு சென்னை வந்து கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், முதற்கட்ட விசாரணையில் நடிகை கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. அந்தக் கடிதத்தில், “ஒருவரை உயிருக்கு உயிராக காதலித்தேன், ஆனால் காதல் கை கூடவில்லை. அதனால் இந்த உலகத்தை விட்டு பிரிந்து செல்கிறேன்.. என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை…” என்று எழுதியிருக்கிறாராம்.
The post ‘வாய்தா’ படத்தின் கதாநாயகி தற்கொலை appeared first on Touring Talkies.
]]>