The post இறுதிகட்ட படப்பிடிப்பில் சூர்யாவின் ’கங்குவா’ appeared first on Touring Talkies.
]]>தேவி பிரசாத் இசை அமைக்கிறார். 10 மொழிகளில் வெளியாகும் இந்தப் படத்தின் ஆக் ஷன் காட்சிகள் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடந்து வந்தன. இப்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னை அருகே தொடங்கியுள்ளது. இந்தப் படப்பிடிப்பில், சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
The post இறுதிகட்ட படப்பிடிப்பில் சூர்யாவின் ’கங்குவா’ appeared first on Touring Talkies.
]]>The post ‘பெடியா’ படத்தை நவம்பர் 25-ல் தமிழகமெங்கும் ஸ்டுடியோ கிரீன் வெளியிடுகிறது appeared first on Touring Talkies.
]]>மேடாக் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜியோ ஸ்டூடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் வழங்கும், அமர் கெளஷிக் இயக்கத்தில் வருண் தவான் நடிக்கும் ‘பெடியா’ (ஓநாய்) திரைப்படத்தில் இருந்து ‘எல்லாம் ஓகே வா!’ எனும் உற்சாகமூட்டும் புதிய பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
கதாநாயகன் வருண் தவான் மற்றும் அவரது நம்பிக்கை மிகுந்த ஓநாய் நண்பர்கள் பழைமையான கார் ஒன்றில் மகிழ்ச்சியான சாலைப் பயணம் மேற்கொள்வது போன்று ‘எல்லாம் ஓகே வா!’ பாடல் அமைந்துள்ளது. ‘எல்லாம் ஓகே வா!’ பாடலை உற்சாகத்துடன் பாடிகொண்டே வருண் தவான், அபிஷேக் பானர்ஜி மற்றும் பாலின் கபக் உள்ளிட்டோர் அருணாச்சலப் பிரதேசத்தின் இயற்கை எழில் மிகு சாலைகளில் பயணிக்கின்றனர். மூன்று நண்பர்களுக்குள் உள்ள ஒற்றுமையையும் நட்பையும் இப்பாடல் நன்றாக பிரதிபலிக்கிறது.
அவர்கள் பயன்படுத்தும் பழைய மாருதி 800 கார் கடந்த காலத்தை கச்சிதமாக நினைவுப்படுத்துகிறது. சூழலுக்கு ஏற்ப இசையும், பாடல் வரிகளும் இரண்டற கலந்து கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்தாக அமைந்துள்ளன. சச்சின்-ஜிகார் இசையில், அமிதாப் பட்டாச்சார்யா மற்றும் எஸ் சுனந்தனின் வரிகளில் உருவான பாடலை சந்தோஷ் ஹரிஹரன், வேலு மற்றும் கே ஜே ஐயனார் பாடியுள்ளனர்.
பாடலை பற்றி பேசிய இசை அமைப்பாளர்கள் சச்சின்-ஜிகார், “இளமை ததும்பும், உற்சாகமூட்டும் பாடலாக ‘எல்லாம் ஓகே வா!’ அமைந்துள்ளது. புதுமையான மெட்டுடனும், புத்துணர்ச்சி தரும் வரிகளுடனும் இசையின் மாயாஜலத்தை வெளிப்படுத்தும் வகையில் இப்பாடல் இருக்கிறது,” என்றனர்.
‘பெடியா’ திரைப்படத்தில் இருந்து ஏற்கனவே வெளியிடப்பட்ட மூன்று பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில், தற்போது வெளியாகி உள்ள ‘எல்லாம் ஓகே வா!’ பாடலும் வெற்றி பட்டியலில் இணைந்து பயணத்திற்கு உகந்த நண்பனாக திகழும் என்று படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.
ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் வழங்கும், மேடாக் பிலிம்ஸ் தயாரிப்பில், வருண் தவான், கீர்த்தி சனோன், தீபக் தோப்ரியால் மற்றும் அபிஷேக் பேனர்ஜீ நடித்துள்ள ‘பெடியா’ நவம்பர் 25 அன்று தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பான்-இந்தியா படமாக 2டி மற்றும் 3டியில் வெளியாகவுள்ளது. இப்படத்தை தமிழ்நாடு முழுவதும் ஸ்டுடியோ கிரீன் வெளியிட உள்ளது.
The post ‘பெடியா’ படத்தை நவம்பர் 25-ல் தமிழகமெங்கும் ஸ்டுடியோ கிரீன் வெளியிடுகிறது appeared first on Touring Talkies.
]]>The post ‘சீயான்’ விக்ரம் – பா.ரஞ்சித் இணையும் படம் துவங்கியது..! appeared first on Touring Talkies.
]]>விரைவில் வெளியாக இருக்கும் ‘கோப்ரா’, ‘பொன்னியின் செல்வன்: எனும் இரண்டு பிரம்மாண்ட அகில இந்திய அளவிலான படங்களை தொடர்ந்து, சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்தினை முன்னணி இயக்குநரான பா.ரஞ்சித் இயக்குகிறார்.
இதனை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜா நீலம் புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து தயாரிக்கிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் 22-வது தயாரிப்பாக இந்தப் படம் உருவாகவுள்ளது.
‘சீயான்-61’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தின் கதை, திரைக்கதையை தமிழ் பிரபா எழுத, ஒளிப்பதிவை கிஷோர் குமார் கவனிக்கிறார். ‘இசை அசுரன்’ ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்த படத்தை செல்வா தொகுக்கிறார். சண்டை காட்சிகளை அன்பறிவு அமைக்க, நடனத்தை சாண்டி மேற்கொள்கிறார். பாடல்களை கபிலன், அறிவு, உமாதேவி ஆகியோர் எழுதுகிறார்கள்.
படத்தில் இடம் பெறும் நடிகர், நடிகைகள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
இந்தப் படத்தின் தொடக்க விழா இன்று காலை சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் நடிகர்கள் சிவகுமார், ஆர்யா, தயாரிப்பாளர்கள் T.சிவா, S.R.பிரபு, அபினேஷ் இளங்கோவன், C.V.குமார், இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
‘அட்டக்கத்தி’, ‘மெட்ராஸ்’, ‘கபாலி’, ‘காலா’, ‘சர்பட்டா பரம்பரை’ என தொடர்ந்து வெற்றிப் படைப்புகளை அளித்து, கவனம் ஈர்க்கும் இயக்குநரான பா.ரஞ்சித்தின் இயக்கத்தில், முதன்முறையாக சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடிப்பதால், இந்த படத்திற்கு ரசிகர்களிடையே இப்போதே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
The post ‘சீயான்’ விக்ரம் – பா.ரஞ்சித் இணையும் படம் துவங்கியது..! appeared first on Touring Talkies.
]]>The post ‘மெட்ராஸ்’ படம் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகிறது appeared first on Touring Talkies.
]]>இந்தப் பொங்கலுக்கு மீடியம் பட்ஜெட்டில் உருவான 15 தெலுங்கு படங்கள் வெளியாகவுள்ளன. இதில் ஒன்று நம்முடைய கார்த்தி நடித்த படம்.
இயக்குநர் பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் கார்த்தி, கேத்தரின் தெரேசா மற்றும் பலர் நடிப்பில் 2014-ம் ஆண்டு வெளியான படம் ‘மெட்ராஸ்’. இந்தப் படம் வெளியானபோது நல்ல விமர்சனங்களையும், வசூலையும் பெற்றது.
இந்தப் படத்தைத்தான் இப்போது ஏழு வருடங்களுக்குப் பிறகு தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடுகிறார்கள்.
இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பினை படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் நேற்று வெளியிட்டது.
இந்த டப்பிங் படத்திற்கு ‘நா பேரு சிவா 2’ என பெயர் வைத்துள்ளார்கள். இதற்கு முன்பு கார்த்தி நடித்த ‘நான் மகான் அல்ல’ படத்தை 2010-ம் ஆண்டில் ‘நா பேரு சிவா’ என்ற பெயரில் தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிட்டார்கள். அப்போது அந்தப் படத்திற்கு தெலுங்கில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
அதனால், அதே பெயரில் ‘2’ என்பதை சேர்த்து அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் போல இந்த ‘மெட்ராஸ்’ படத்தையும் ‘நா பேரு சிவா 2’ என தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடுகிறார்கள்.
இந்தப் படம் வரும் ஜனவரி 13-ம் தேதி ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வெளியாகிறது.
The post ‘மெட்ராஸ்’ படம் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகிறது appeared first on Touring Talkies.
]]>The post “இந்தப் படத்தில் எனக்கு நடனக் காட்சியே இல்லை” – பிரபுதேவாவின் வருத்தம் appeared first on Touring Talkies.
]]>இத்திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, திரை பிரபலங்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில், நேற்று சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் படத்தின் நாயகனான நடிகர் பிரபுதேவா பேசும்போது, “இயக்குநர் ஹரிகுமார் மிகச் சிறப்பான பணியினை செய்துள்ளார். இயல்பைவிடவும் பல மடங்கு அற்புதமான உழைப்பை தந்துள்ளார். ரசிகர்கள் இது செட்டா இல்லை.. ஒரிஜினல் லொகேஷனா என சந்தேகப்படும் அளவு அற்புதமாக கலை இயக்கம் செய்துள்ளார்கள்.
இப்படத்தின் டப்பிங் பணி மிக சுவாரஸ்யமானதாக அமைந்தது. முழு டப்பிங்கையும் அரை நாளில் முடித்துவிட்டேன். இசையமைப்பாளர் சத்யா எனது பள்ளி கெமிஸ்ட்ரி ஆசிரியரை ஞாபகப்படுத்தினார். அவர் இப்படத்திற்கு மிக சிறப்பான இசையை தந்துள்ளார். அவரும், நானும் பல படங்களில் இணைந்து பணியாற்றி வருகிறோம்.
ஒரு தயாரிப்பாளராக K.E. ஞானவேல் ராஜா மிக அற்புதமாக செயல்பட்டு வருகிறார். அவர் உருவாக்கி வெளியிட்டு வரும் படங்கள், பல தயாரிப்பாளர்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறது.
ஹரியும் நானும் பல ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்கள். இருவரும் உதவி நடன இயக்குனர்களாக பணியாற்றியிருக்கிறோம். இப்போது அவர் மீண்டும் புதிய தளத்தில் தன் திறமையை நிரூபிக்கவுள்ளார்.
உண்மையாகவே இந்த திரைப்படம் எனக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. இந்தப் படத்தில் எனக்கு நடன காட்சியே இல்லை. மேலும் நான் இடது கை பழக்கம் கொண்டவனாக முதல்முறையாக நடித்திருக்கிறேன். நான் என் வழக்கமான நடிப்பை நடிக்கிறேனா என என்னை செக் செய்து கொண்டே இருப்பார் இயக்குநர். நான் அம்மாதிரி நடித்தால் உடனே அதை மாற்றுவார்.
ஈஸ்வரி மேடம் தமிழில் மிகச் சிறந்த நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார். சம்யுக்தா மிக பப்ளியான அழகான நாயகியாக மிளிர்கிறார். அவரது நடிப்பு இப்படத்தில் மிக முக்கிய அம்சமாக இருக்கும். இப்படம் மிக அழுத்தமான படைப்பாக, அனைவருக்கும் பிடிக்கும் படைப்பாக இருக்கும்…” என்றார்.
The post “இந்தப் படத்தில் எனக்கு நடனக் காட்சியே இல்லை” – பிரபுதேவாவின் வருத்தம் appeared first on Touring Talkies.
]]>The post நடிகர் எஸ்.ஜே.சூர்யாவுக்கு தடை விதித்தது தயாரிப்பாளர்கள் சங்கம் appeared first on Touring Talkies.
]]>இதற்குக் காரணம் பிரபல தயாரிப்பாளரான ‘ஸ்டூடியோ கிரீன்’ ஞானவேல்ராஜாவிடம் வாங்கிய கடனை எஸ்.ஜே.சூர்யா திருப்பித் தராததுதானாம்.
2014-ம் ஆண்டில் ‘இசை’ என்ற திரைப்படத்தை தயாரித்து இயக்கியிருந்தார் எஸ்.ஜே.சூர்யா. அந்தப் படத்தின் உருவாக்கத்தின்போது தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவிடம் 5 கோடி ரூபாயை கடனாக வாங்கியிருந்தார் எஸ்.ஜே.சூர்யா.
இசை படம் வெளியாகி தோல்வியடைந்ததை அடுத்து.. எஸ்.ஜே.சூர்யாவால் அடுத்து படங்களைத் தயாரிக்க முடியவில்லை. மாறாக படங்களில் நடிக்கத் துவங்கினார்.
ஆனால், ஞானவேல்ராஜாவிடம் வாங்கிய 5 கோடியை இன்னமும் அவர் திருப்பித் தரவில்லையாம். இது குறித்து தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஞானவேல்ராஜா புகார் கொடுத்ததையடுத்து இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும்வரையிலும் எஸ்.ஜே.சூர்யாவை தங்களது சங்க உறுப்பினர்கள் எந்தப் படத்திலும் ஒப்பந்தம் செய்ய வேண்டாம் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளதாம்.
The post நடிகர் எஸ்.ஜே.சூர்யாவுக்கு தடை விதித்தது தயாரிப்பாளர்கள் சங்கம் appeared first on Touring Talkies.
]]>The post ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் சிம்பு நடிக்கும் புதிய திரைப்படம் ‘பத்து தல’..! appeared first on Touring Talkies.
]]>இந்த டைட்டிலை தமிழ்ச் சினிமாவின் பிரபலமான 10 இயக்குநர்கள் இணைந்து இன்று காலை அறிவித்தார்கள்.
இயக்குநர்களான வெங்கட் பிரபு, ஆனந்த் சங்கர், விக்னேஷ் சிவன், விஜய் மில்டன், கார்த்திக் சுப்புராஜ், பா.ரஞ்சித், சந்தோஷ் ஜெயகுமார், அஸ்வத், சாம் ஆண்டன், எம்.ராஜேஷ் ஆகிய 10 இயக்குநர்கள் இந்த படத்தின் டைட்டிலை சற்று முன் அறிவித்துள்ளனர்.
இந்தப் படத்தில் சிம்புவுடன் நடிகர் கௌதம் கார்த்திக்கும் இணைந்து நடிக்கிறார். சூர்யா நடித்த ’சில்லுன்னு ஒரு காற்று’ மற்றும் ஆரி நடித்த நெடுஞ்சாலை படங்களை இயக்கிய இயக்குநர் கிருஷ்ணா இந்தப் படத்தை இயக்கவிருக்கிறார்.
கன்னட திரையுலகில் மாபெரும் வெற்றியைப் பெற்ற ’முப்தி’ என்ற படத்தின் ரீமேக் படமான இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல்ராஜா தயாரிக்க உள்ளார். இது இவர் தயாரிக்கும் 20-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் தேர்வு தற்போது நடந்து வருகிறது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் துவங்கவுள்ளது.
The post ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் சிம்பு நடிக்கும் புதிய திரைப்படம் ‘பத்து தல’..! appeared first on Touring Talkies.
]]>