The post தி கோட் படத்தோடு மோதுகிறதா அமரன் திரைப்படம்? appeared first on Touring Talkies.
]]>சிவகார்த்திகேயன் தற்போது அமரன் படத்தில் நடித்துள்ளார்.அடுத்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த இரண்டு படங்களும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. அமரன் படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்ததாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அமரன் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது, இது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக விளங்குகிறார். அவர் நடித்த டாக்டர், டான் ஆகிய படங்கள் 100 கோடி ரூபாய் வசூலித்து வெற்றிப்பெற்றன. இவ்வாறு தனது திறமையை நிரூபித்துள்ள சிவகார்த்திகேயனை, 2K தலைமுறை ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் ஏற்றுக்கொண்டுள்ளனர். விஜய்க்கு இருப்பது போல, சிவகார்த்திகேயனுக்கும் இன்றைய தலைமுறையினரிடையே வரவேற்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
சிவகார்த்திகேயன் தொடர்ச்சியாக வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார் அவரது ‘பிரின்ஸ்’ படம் பலத்த அடி வாங்கிய நிலையில் ‘மாவீரன்’ படமும் அயலான் படமும் சூப்பர் ஹிட் ஆகின.சிவகார்த்திகேயனின் நடிப்பும் இப்படங்களில் பெரிதாக பேசப்பட்டது.
இந்த வெற்றிகளைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயன் ‘அமரன்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்துள்ளது. இப்போது, அமரன் படம் செப்டம்பர் மாதத்தில் ரிலீஸ் ஆக திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதே நேரத்தில், விஜய்யின் ‘GOAT’ படமும் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸாகவிருப்பதால், சிவகார்த்திகேயனின் அமரன் படம் விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
The post தி கோட் படத்தோடு மோதுகிறதா அமரன் திரைப்படம்? appeared first on Touring Talkies.
]]>The post ராணுவ உடையில் கெத்து காட்டும் அமரன்… வெளியான The Final Frame வீடியோ! appeared first on Touring Talkies.
]]>அமரன் படத்தில் நடிப்பை முடித்த அவர், அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில், அமரன் படத்தை பற்றிய ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.சிவகார்த்திகேயன் தொடர்ந்து இரண்டு நூறு கோடி ரூபாய் வசூல் படங்களை கொடுத்து வந்த நிலையில், பிரின்ஸ் படம் சரிவை சந்தித்தது. ஆனால், அதில் விட்டதை மாவீரன் படத்தில் சரி செய்தார்.
மேலும், மாவீரன் ஆடியோ லான்சில் பேசிய சிவகார்த்திகேயன், “பிரின்ஸில் விட்டதை மாவீரனில் பிடித்துவிடுவேன்” என்று உறுதியுடன் சொன்னார். அவர் சொன்னபடி மாபெரும் வெற்றி பெற்றதால், அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் மிதந்தனர். தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்துள்ளார்.
தற்போது, அமரன் படத்தின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது. “The Final Frame” என பெயரிடப்பட்டுள்ள 22 விநாடிகள் கொண்ட அந்த வீடியோவில், சிவகார்த்திகேயன் ராணுவ உடையுடன் கையில் துப்பாக்கியுடன் போஸ் கொடுக்கிறார். அவருடன் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியும் உள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் சிவகார்த்திகேயன் வேற லெவலில் இருக்கிறாரே என்று கமெண்ட் செய்து, அதை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
The post ராணுவ உடையில் கெத்து காட்டும் அமரன்… வெளியான The Final Frame வீடியோ! appeared first on Touring Talkies.
]]>The post சிவகார்த்திகேயனோடு ஜோடி சேரும் ராஷ்மிகா மந்தானா? appeared first on Touring Talkies.
]]>பின்னர், சிபி சக்கரவர்த்தி ரஜினிகாந்த் மற்றும் நானி ஆகியோருக்கு கதை ஒன்றை கூறியுள்ளார். ஆனால் இரண்டு பேருக்கும் அந்த கதை பிடிக்காததால் அவர் தனது முதல் பட ஹீரோவான சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணைய உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்த புதிய படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் சுகன் தயாரிக்க உள்ளார். இதற்கான தொடக்க வேலைகள் தற்போது நடந்து வருகின்றன, மேலும் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன.
படப்பிடிப்பு பணிகள் இன்னும் சில மாதங்களில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிவகார்த்திகேயன் தற்போது அமரன் மற்றும் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கும் படங்களில் நடித்து வருகின்றார்.
The post சிவகார்த்திகேயனோடு ஜோடி சேரும் ராஷ்மிகா மந்தானா? appeared first on Touring Talkies.
]]>The post அள்ளி கொடுத்த சிவகார்த்திகேயன்! நடிகர் சங்கம் கட்டிடம் கட்ட இவ்வளவா கொடுத்தாரு? appeared first on Touring Talkies.
]]>நடிகர் சங்கத்தை விரைவாக கட்டிமுடிக்க நிதி தொடர்ந்து வசூலிக்கப்பட்டு வருகிறது. முன்பாக விஜய் மற்றும் உதயநிதி ஆகியோர் தலா ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளித்திருந்தனர். இவர்களை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனும் ரூபாய் 50 லட்சத்தை நிதியுதவியாக வழங்கியுள்ளார். இதுகுறித்து நடிகர் சங்க தலைவர் நாசர் நடிகர் சங்கம் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சிவகார்த்திகேயன் அவரது நிதியை நடிகர் சங்க தலைவர் நாசர் மற்றும் பொருளாளர் நடிகர் கார்த்தியிடம் வழங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்க கட்டடத்தை விரைவில் கட்டி முடிக்க சங்கத்தினர் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
கட்டப்படும் நடிகர் சங்க கட்டடத்திற்கு மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்தின் பெயரை சூட்ட வேண்டும் என்பது தொடர் கோரிக்கையாக இருந்துவருகிறது.நடிகர்கள் நடிகைகள் பலரும் அடுத்தடுத்து நடிகர் சங்கத்திற்கான நிதியுதவியை நடிகர்கள் போட்டிப் போட்டுக் கொண்டு கொடுத்து வருவதாக தெரிகிறது இந்நிலையில் விரைவில் கட்டடப் பணிகள் நிறைவு பெற்று திறப்பு விழாவை காணலாம் என எதிர்பார்க்கலாம்.
The post அள்ளி கொடுத்த சிவகார்த்திகேயன்! நடிகர் சங்கம் கட்டிடம் கட்ட இவ்வளவா கொடுத்தாரு? appeared first on Touring Talkies.
]]>