The post அது வெளிநாட்டு சலூன் இது உள்ளூர் சலூன்! சிவா, யோகிபாபு சும்மா இருக்க மாட்டாங்க – கவிதா பாரதி appeared first on Touring Talkies.
]]>இவர் சித்தி தொடருக்கு வசனம் எழுதியவர், அருவி படத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளராக, ரைட்டர் படத்தில் வில்லனாக பிரபலமான இவர் சலூன் படத்தை பற்றி சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.அதில் சிங்கப்பூர் சலூன் இருக்க இதென்ன வெறும் சலூன் என்று அவரிடம் கேட்டதற்கு, இந்த படம் எப்பவோ ஆரம்பித்து விட்டதாகவும் சலூன் படத்தின் பாதி படப்பிடிப்பின் போது தான் சிங்கப்பூர் சலூன் வெளியானது.இது உள்ளூர் சலூன் தான் என நகைச்சுவையாக சொன்னார்.
இந்த படம் பாலிடிக்ஸ் படம். சுதந்திர போரட்டத்தை சைலன்டா நடத்துறதா வைலன்டா நடத்துறதானு ஊரு ரெண்டா பிரிஞ்சிடும், சைலன்ட ஆதரிக்குறவங்க சைடு வாக்கெடுத்து தலை சீவுவாங்க அந்து ஊரு சைடுவாருபட்டி, வைலன்ட ஆதரிக்குறவங்க தலையை நேரா சீவுவாங்க அவங்க ஏறுவாருபட்டி நான் ஏறுவாருபட்டியோட தலைவர். சைடுவாருபட்டி தலைவர் வாகை சந்திரசேகர் அவர்கள் என்றார்.
இது இரண்டு ஊருக்கு இடையே நடுக்குற பிரச்சினை பற்றியும் தலைவர்கள் அங்க மக்களை எப்படி வச்சுருக்காங்க அப்புறம் சம கால அரசியலையும் பேசுற கதை தான் இந்த சலூன்.வில்லனா நடிப்பது தான் பிடிக்குமா என்ற கேள்விக்கு நல்லவனாக நடிப்பது போர் அடிக்கும் எனவே வில்லனாக நடிப்பது தான் பிடிக்கும் என்றார். எனக்கு காமெடி கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை மணிவண்ணன் அவர்களை போல எல்லாம் கலந்த கேரக்டரில் நடிக்க மிகவும் விருப்பம் என கூறினார்.
மிர்ச்சி சிவா மற்றும் யோகிபாபு இருவரும் இப்படத்தில் நடித்துள்ளனர் அவர்களை பற்றிய கேள்விக்கு, இருவரும் ஷூட்டிங் ஸ்பாட்-ஐ கலகலப்பாக வைத்துக் கொள்வார்கள்.நாங்கள் சீரியஸாக இருந்தாலும் அவர்கள் சும்மா இருக்க மாட்டார்கள் எதாவது பேசி சிரிக்க வைப்பார்கள் என்றார்.இத்தோடு திரைப்பயணத்தையும் குறித்து பகிர்ந்து கொண்டார்.
கிராமத்தில் இருந்து இயக்குனர் ஆக வேண்டும் என்று வந்தவன் பிரபல பத்திரிக்கையான நக்கீரனில் வேலை செய்து பின்னர் இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றினேன் அப்போது ராதிகா அவர்களின் அறிமுகம் கிடைத்து சித்தி சீரியலுக்கு வசனம் எழுதினேன்.அப்போது எழுத்தாளர்களாக இருப்பவர்களை எழுத்தாளர்களாக மட்டுமே அடையாளப்படுத்துவார்கள் இயக்குனர் ஆவது கடினமாக இருந்தது இந்த பயத்தில் சீரியலை இயக்க ஆரம்பித்து திரைப்படத்தில் நடிக்க ஒரு வாய்ப்பு வந்ததால் நடிகனானேன் என தெரிவித்தார்.
The post அது வெளிநாட்டு சலூன் இது உள்ளூர் சலூன்! சிவா, யோகிபாபு சும்மா இருக்க மாட்டாங்க – கவிதா பாரதி appeared first on Touring Talkies.
]]>The post “ரஜினியுடன் நடித்த படத்தில் மறக்க முடியாத சம்பவம்!”: சொல்கிறார் சோபனா appeared first on Touring Talkies.
]]>“1989இல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் நான் நடித்த திரைப்படம் சிவா. இந்த படத்தில் ‘இரு விழியின் வழியே நீயா வந்து போனது’ என்ற ஒரு பாடல் இருக்கும். அந்த படப்பிடிப்பின் போது எந்தவித முன் அறிவிப்பும் இன்றி ஒரு டிரான்ஸ்பரன்ட் சேலையை கொண்டு வந்து என்னிடம் கொடுத்துவிட்டு, அடுத்த பத்து நிமிடத்தில் பாடல் காட்சி எடுக்கப்படும் என்று கூறிவிட்டார்கள். நான், அந்த சேலையை பார்த்தே இது மழையில் எடுக்கப்படும் பாடல் ஆகத்தான் இருக்கும் என்று நினைத்தேன்.
கைவசம் வேறு எந்த துணியும் என்னிடம் இல்லை, 10 நிமிடத்திற்குள் படப்பிடிப்புக்கு செல்ல வேண்டும்.
என்ன செய்வது என யோசித்த நான், அங்கிருந்த மேஜையில் போடப்பட்டிருந்த பிளாஸ்டிக் கவரை எடுத்து உள்ளே கட்டிக்கொண்டு அதற்கு மேலே புடவை கட்டினேன். ஒரு வழியாக இப்படி அந்த காட்சியில் நடித்து முடித்தேன்” என கூறினார் சோபனா.
The post “ரஜினியுடன் நடித்த படத்தில் மறக்க முடியாத சம்பவம்!”: சொல்கிறார் சோபனா appeared first on Touring Talkies.
]]>The post “காசேதான் கடவுளடா..”: அனுபவத்தை பகிர்ந்த சிவா appeared first on Touring Talkies.
]]>இந்நிலையில் பேட்டி ரீமேக் படத்தில் நடித்தது குறித்து சிவா கூறும்போது, “இந்த படத்தில் நடித்தது நல்ல அனுபவம். நானும், கண்ணனும் இணைந்து படம் பண்ண நீண்ட நாள் திட்டமிட்டு தற்போது நிறைவேறியுள்ளது. எல்லா ரீமேக் படத்திலும் ஒப்பீடு இருக்கும். அதுபோல் இந்த படத்தையும் நிச்சயம் ஒப்பிடுவார்கள்.
காசேதான் கடவுளடா மிகப்பெரிய வெற்றி பெற்ற கிளாசிக் காமெடி படம். அதை விட மேலாக எங்களால் செய்ய முடியாது, எனவே அந்த படத்துடன் ஒப்பிடாமல் பார்த்தால் நிச்சயம் படம் மகிழ்விக்கும்.
படத்தை இயக்குனர் கண்ணன் சிறப்பாக கையாண்டிருக்கிறார். பழைய படத்தில் இடம்பெற்ற காட்சிகளை தற்போது எடுப்பது கொஞ்சம் சவாலாக இருக்கும். தொழில்நுட்ப வளர்ச்சியால் அதை எப்படி செய்வார் என்று யோசித்தேன். ஆனால், மிக சிறப்பான திட்டத்தோடு காட்சிகளை படமாக்கினார். படம் அனைவரையும் சிரிக்க வைக்கும்” என்றார்.
The post “காசேதான் கடவுளடா..”: அனுபவத்தை பகிர்ந்த சிவா appeared first on Touring Talkies.
]]>The post காந்தாரா: சிவா கதா பாத்திரம் எனக்காக உருவாக்கப்பட்டது..! appeared first on Touring Talkies.
]]>பண்ணையாருக்கும்,பழகுடிமக்களுக்கும் நடக்கும் பிரச்சனையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படம் காந்தாரா.சமீபத்தில் தியேட்டரில் வெளியாகி ரசிகர்கள், பிரபலங்களின் பாராட்டை பெற்றுவருகிறது.இந்த படத்தை இயக்குனர் ரிஷப் ஷெட்டி அவரே இயக்கி நடித்திருப்பார்.
‘காந்தாரா’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் வெளியாகி வெற்றியும் பெற்றது. படம் குறித்த கேள்வியில் இயக்குனர் ரிஷப் ஷெட்டி ஒரு பேட்டியில் நான் சிறுவயதாக இருக்கும் போது சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். வாய்ப்பு தேடி அலைந்த போது நடிப்பதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. அப்புறம் வயது ஆகிவிட்ட காரணத்தினால் நானும் வாய்ப்பு தேடவில்லை.
எனக்கான ஒரு வாய்ப்பாக காந்தாரா படத்தில் சிவா கதாபாத்திரத்தை உருவாக்கினேன். ஊரில் எல்லோரும் முரடனாக இருக்காங்க அப்படித்தான் இதில் நான் நடித்தால் நல்லா இருக்கும் என்று இயக்குனராக எனக்கு தோன்றியது. அதனால் நானே எனக்காக உருவாக்கிக் கொண்டது தான் காந்தாரா படத்தின் நாயகன் சிவா கதாபாத்திரம் என்றார் இயக்குனர் ரிஷப் ஷட்டி.
The post காந்தாரா: சிவா கதா பாத்திரம் எனக்காக உருவாக்கப்பட்டது..! appeared first on Touring Talkies.
]]>