The post எம்.ஜி.ஆரை, எம்.ஆர்.ராதா சுட்டது ஏன்?: தொடர் வெளியாகிறது! appeared first on Touring Talkies.
]]>இது தொடர்பான வழக்கு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சுமார் மூன்று மாதங்கள் நடைபெற்றது. துப்பாக்கி சூட்டிற்கு என்னவெல்லாம் காரணம் என்று அரசு தரப்பு வக்கீல் தெளிவாகவே நீதிமன்றத்தில் விவரித்தார். எம்.ஆர்.ராதாவின் வக்கீல் என்.டி.வானமாமலை ஆஜராகினார் எம்.ஆர்.ராதாவுக்கு எம்.ஜி.ஆர்க்கும் நீண்ட நாட்களாக இருந்த கருத்து வேறுபாடுகள் அனைத்தும் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டனர்.
தொழிலாளி படத்தின் சூட்டிங்கில் எம்.ஜி.ஆர், எம்.ஆர்.ராதா இருவரும் நடிக்கும் ஒரு காட்சி படமாக்கப்பட்டது. அதில், “இந்த பஸ் தான் இனிமேல் தொழிலாளர்களின் நம்பிக்கை நட்சத்திரம்” என வசனம் இருந்தது. அதை எம்.ஜி.ஆர், “இனி இதுதான் தொழிலாளர்களின் உதயசூரியன்” என மாற்றி சொன்னார்.
இதனால் ஆத்திரமான எம்.ஆர்.ராதா, “சினிமாவுக்குள் உன் கட்சியை கொண்டுவர கூடாது” என கொந்தளித்தார்.
இதனால் ஏற்பட்ட சண்டையில் எம்.ஜி.ஆர் சூட்டிங் நிறுத்தினார். பிறகு தயாரிப்பாளர் சின்னப்பா தேவர் வந்து இந்த சண்டையை நிறுத்தி எம்.ஜி.ஆரை இந்த பஸ் தான் இனி தொழிலாளர்களை நம்பிக்கை நட்சத்திரம் என்றபடியே வசனம் பேச வைத்தார்.
இது மட்டும் இல்லாமல் எம் ஆர் ராதா எழுதிய ஒரு கட்டுரையில் காமராஜரை கொல்ல சதி நடந்தது என்று எழுதினார்.
இதனால் நீண்ட மன உளைச்சலில் இருந்த எம்.ஜி.ஆர் எம்.ஆர்.ராதாவின் வளர விடாமல் பட வாய்ப்புகளை தட்டிச் சென்றார் என கூறப்படுகிறது. இதுவே இவர்களுக்கு இடையில் இருந்த கருத்து வேறுபாடு ஆகும் இன்று நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது.
இந்த சம்பவத்தை தான் தற்போது ராதிகாவின் ராடான் நிறுவனம் கையில் எடுத்துள்ளது. எம்.ஆர்.ராதாவின் மகளான ராதிகா இந்த தொடர் மூலம் அன்று என்ன நடந்தது என்பதை வெளிப்படையாக காட்டுவாரா என்ற எதிர்பார்ப்பு தற்போது அனைரின் மனதிலும் எழுந்துள்ளது.
The post எம்.ஜி.ஆரை, எம்.ஆர்.ராதா சுட்டது ஏன்?: தொடர் வெளியாகிறது! appeared first on Touring Talkies.
]]>The post நட்புக்கு மரியாதை.. அதுதான் ரஜினி! appeared first on Touring Talkies.
]]>இந்த படத்தில் சிறப்புத் தோற்றத்தில் முக்கிய நடிகர் நடித்தால் நன்றாக இருக்கும் என நினைத்த மௌலி, முதலில் கமல்ஹாசனை நடிக்க வைக்க திட்டமிட்டார். ஆனால் அவர் அப்போது வெளிநாட்டில் இருந்தார்.
அடுத்து அவர் ரஜினியை அணுக.. அவரும் ஒப்புக்கொண்டார். மேலும், “என் வீட்டிலேயே படப்பிடிப்பை வைத்துக்கொள்ளுங்கள்” என்று பெருந்தன்மையுடன் கூறினார். அதன்படியே படப்பிடிப்பும் நடந்தது.
பிறகுதான் படக்குழுவினருக்கு ஒரு விசயம் தெரிந்தது.. அதற்கு முந்தைய நாள்தான் ரஜினிக்கு குழந்தை பிறந்திருக்கிறது. மாடி அறையில் மனைவி லதாவும், குழந்தையும் இருக்க… தரை தளத்தில் படப்பிடிப்பில் நடித்திருக்கிறார் ரஜினி.
மௌலி நெகிழ்ந்துபோய், “இந்த நேரத்தில்.. நடிக்க நீங்கள் ஒப்புக்கொண்டு இருக்க வேண்டுமா.. அதுவும் வீட்டில்..” என கூற, அதற்கு ரஜினி, “நீங்கள் என் நண்பர்.. உங்களுக்காக இது கூட செய்ய மாட்டேனா” என சிம்பிளாக சொல்லிவிட்டார்.
தவிர தான் நடித்ததற்காக சம்பளமும் வாங்கவில்லையாம்!
The post நட்புக்கு மரியாதை.. அதுதான் ரஜினி! appeared first on Touring Talkies.
]]>