Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
seemaan – Touring Talkies https://touringtalkies.co Fri, 07 Oct 2022 06:47:07 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png seemaan – Touring Talkies https://touringtalkies.co 32 32 பிரபாகரன்-ராஜராஜ சோழன் வாழ்க்கைக் கதையை படமாகத் தயாரிக்கப் போகும் சீமான் https://touringtalkies.co/seeman-is-going-to-make-a-film-about-the-life-story-of-prabhakaran-rajaraja-cholan/ Fri, 07 Oct 2022 06:46:37 +0000 https://touringtalkies.co/?p=24937 சமீபத்தில் திரைக்கு வந்திருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் திரையுலகத்தையும் தாண்டி தமிழ் சமூகப் பரப்பில் அரசியல் களத்தையும் சூடாக்கியிருக்கிறது. ராஜராஜ சோழன் தமிழனா, இந்தியனா என்கிற சர்ச்சையை இயக்குநர் வெற்றி மாறன் ஆரம்பித்துவிட.. இது தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் போதும், போதும் என்று சொல்லும் அளவுக்கு சமூக வலைத்தளங்களில் இப்போதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நேரத்தில் “ராஜராஜ சோழன் இந்து இல்லை” என்ற கருத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்கும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், நடிகரும், […]

The post பிரபாகரன்-ராஜராஜ சோழன் வாழ்க்கைக் கதையை படமாகத் தயாரிக்கப் போகும் சீமான் appeared first on Touring Talkies.

]]>
சமீபத்தில் திரைக்கு வந்திருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் திரையுலகத்தையும் தாண்டி தமிழ் சமூகப் பரப்பில் அரசியல் களத்தையும் சூடாக்கியிருக்கிறது.

ராஜராஜ சோழன் தமிழனா, இந்தியனா என்கிற சர்ச்சையை இயக்குநர் வெற்றி மாறன் ஆரம்பித்துவிட.. இது தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் போதும், போதும் என்று சொல்லும் அளவுக்கு சமூக வலைத்தளங்களில் இப்போதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்த நேரத்தில் “ராஜராஜ சோழன் இந்து இல்லை” என்ற கருத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்கும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், நடிகரும், இயக்குநருமான சீமான் ராஜராஜ சோழன் மற்றும், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரான வேலுத்தம்பி பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை  சினிமாவாக தான் தயாரிக்கப் போவதாகவும், அந்தப் படங்களை இயக்குநர் வெற்றிமாறன் இயக்கப் போவதாகவும் அறிவித்திருக்கிறார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள போஸ்டரில், “தமிழர்களின் போற்றுதலுக்குரிய மூதாதை’, ‘எங்கள் பாட்டன்’, ‘அரசனுக்கரசன்’, அருள்மொழி சோழன் அவர்களின் உண்மையான வரலாற்றையும்,

இந்த நூற்றாண்டின் இணையற்ற விடுதலைப் போராளி, எங்கள் அண்ணன், ‘தமிழ்த் தேசியத் தலைவர்’ மேதகு வே.பிரபாகரன் அவர்களின் வரலாற்றையும் ஆகச் சிறந்த கலை வடிவமாக நான் தயாரிக்க, என் அன்புத் தம்பி வெற்றி மாறன் இயக்குவார்.

வரலாற்றில் புறக்கணிக்கப்பட்ட இனத்தின் மக்கள் தங்களுக்கான வரலாற்றை தாங்களே எழுதுவார்கள்’  என்ற ‘அறிவாசான் அண்ணல்’ அம்பேத்கர் அவர்களின் புரட்சி மொழிக்கேற்ப ஒரு நாள் எங்களுக்கான வரலாற்றை நாங்களே எழுதும் நாள் வரும். அன்றைக்குத் தமிழர்கள் நாங்கள் யாரென்று உலகத்திற்குத் தெரிய வரும்..” என்று குறிப்பிட்டுள்ளார் சீமான்.

The post பிரபாகரன்-ராஜராஜ சோழன் வாழ்க்கைக் கதையை படமாகத் தயாரிக்கப் போகும் சீமான் appeared first on Touring Talkies.

]]>
“தற்போதைய அரசியலைப் பேசும் படம்தான் மாநாடு”! – சீமானின் பாராட்டு..! https://touringtalkies.co/seemaan-prasied-maanaadu-movie/ Tue, 30 Nov 2021 07:55:49 +0000 https://touringtalkies.co/?p=19646 தயாரிப்பாளர் சுரேஷ்  காமாட்சியின் தயாரிப்பில் சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் ‘மாநாடு’ படம் உலகம் முழுவதும் பெரும் வெற்றி பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தைப் பார்த்த ‘நாம் தமிழர்’ கடைசியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் “இந்தப் படம் சம காலத்திற்குத் தேவையான அரசியலைப் பேசும் சுவை மிக்க கலைப் படைப்பு…” என்று பாராட்டியிருக்கிறார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை இது : அன்புத் தம்பி சிலம்பரசன் நடிப்பில் வெளியான […]

The post “தற்போதைய அரசியலைப் பேசும் படம்தான் மாநாடு”! – சீமானின் பாராட்டு..! appeared first on Touring Talkies.

]]>
தயாரிப்பாளர் சுரேஷ்  காமாட்சியின் தயாரிப்பில் சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் ‘மாநாடு’ படம் உலகம் முழுவதும் பெரும் வெற்றி பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்தப் படத்தைப் பார்த்த ‘நாம் தமிழர்’ கடைசியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் “இந்தப் படம் சம காலத்திற்குத் தேவையான அரசியலைப் பேசும் சுவை மிக்க கலைப் படைப்பு…” என்று பாராட்டியிருக்கிறார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை இது :

அன்புத் தம்பி சிலம்பரசன் நடிப்பில் வெளியான ‘மாநாடு’ திரைப்படத்தைக் கண்டு களித்தேன். மாறுபட்ட திரைக்கதையோட்டமும், விறுவிறுப்பு குறையாத காட்சியமைப்புகளும் படத்தோடு நம்மை ஒன்றச்செய்து, மிகவும் ரசிக்கும்படியாகத் திரைப்படத்தை நகர்த்திச் செல்கிறது.

மதத்தால் மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சி சமகாலத்தில் ஆளும் வர்க்கத்தால் நாளும் அரங்கேற்றப்படும்போது, அதனை வெகுமக்களுக்கு உணர்த்தி விழிப்பூட்டும் சுவை மிக்கக் கலைப் படைப்பாக இத்திரைப்படத்தைத் தந்திருக்கிறார் தம்பி வெங்கட்பிரபு.

இசுலாமிய மக்கள் குறித்துப் பரப்பப்படும் கற்பிதங்களைக் கேள்விக்குள்ளாக்கி, கோவை கலவரத்தில் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைப் போகிறபோக்கில் பேசி, அவர்கள் குறித்துப் பொதுப் புத்தியில் கட்டமைக்கப்பட்டிருக்கும் தவறானப் பிம்பத்தை தகர்த்தெரியும்விதத்திலான வசனங்களையும், காட்சிகளையும் படத்தின் கருப் பொருளாக அமையச் செய்திருப்பது இத்திரைப்படத்தின் சிறப்பம்சமாகும்.

சொல்ல வந்த செய்தியை மிகச் சரியாகக் காட்சிப்படுத்தி, அதனைத் திரைமொழியில் மக்களுக்கு விருந்தாக்கும் ஆற்றலைக் கொண்டுள்ள தம்பி வெங்கட் பிரபுவின் கலைத் திறன் இத்திரைப்படத்தின் மூலம் மென்மேலும் மெருகேறியிருக்கிறது.

எனது தம்பி சிலம்பரசன் அவர்கள் தனது துடிப்பான நடிப்பாற்றலாலும், மக்களின் மனம்கவரும் வகையிலான தனித்துவமிக்க திரைமொழி ஆளுகையினாலும், நுட்பமான உடல் மொழியாலும், உயிரோட்டமான வசன உச்சரிப்புகளாலும் மீண்டுமொரு முறை முத்திரைப்  பதித்திருக்கிறார். கலையுலகப் பயணத்தில் அவரது வளர்ச்சி குறித்து பெரும் அக்கறை கொள்கிறேன்! அவரது உயரத்தை எண்ணி மன மகிழ்வடைகிறேன்!

அன்புச் சகோதரன் எஸ்.ஜே.சூர்யா அவர்கள் எதிர்மறை கதாபாத்திரத்தைத் தாங்கியிருந்தாலும் தனக்கே உரித்தான மொழி நடையாலும், எவரையும் சுண்டியிழுக்கும் வகையிலான அளப்பெரும் நடிப்புத் திறனாலும் படத்தினையே தாங்கி நிற்கிறார். அவர் திரையில் தோன்றும் காட்சிகள் யாவற்றையும் பெரிதும் விரும்பி ரசித்தேன்!

தம்பி யுவன் சங்கர்ராஜாவின் பலமிக்க பின்னணி இசையும், தம்பி கே.எல்.பிரவீண் நேர்த்தியான படத்தொகுப்பும் படைப்புக்குப் பெரிதும் துணைநிற்கின்றன.

இத்திரைப்படத்தில் நடித்த அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர், ஐயா ஒ.ஜி.மகேந்திரன், தம்பி மனோஜ் பாரதிராஜா, தம்பி சுப்பு அருணாச்சலம், தம்பி பிரேம்ஜி அமரன், தம்பி கருணாகரன், தங்கை கல்யாணி பிரியதர்ஷன் என யாவரும் தங்களது பங்களிப்பினைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.

காலத்திற்கேற்ற அரசியலைப் பேசும் சாலச் சிறந்தப் படைப்பாகவும், மாறுபட்ட திரைக்கதை அமைப்புகொண்ட நல்லதொரு திரைப்படமாகவும் வெளிவந்திருக்கும் இதனைத் தயாரித்து, பெரும் சிரமங்களையும், இடையூறுகளையும் எதிர்கொண்டபோதும் சற்றும் தளராது நின்று வென்று காட்டி, வெற்றிப் படைப்பாக நிலைநாட்டிய ஆருயிர் இளவல் எனது பாசத்திற்குரிய தம்பி சுரேஷ் காமாட்சி அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!

மண்ணுக்கும், மக்களுக்கும் தேவையான இன்னும் பல பல படைப்புகளைத் தந்து, அவர் மென்மேலும் வளர்ந்து உச்சம் தொட வேண்டுமென எனது வாழ்த்துகளையும், அன்பையும் தெரிவிக்கிறேன்!   

எனது தம்பிகள் தங்களது அயராத உழைப்பின் மூலம் ஈட்டிய அளப்பெரும் வெற்றியைக் கண்டு உள்ளம் பூரிப்பு அடைகிறேன்..!  நானே வெற்றி பெற்றதாக எண்ணிப் பெருமிதம் கொள்கிறேன்..!

இப்படைப்புக்காக உழைத்திட்ட அத்தனை பேருக்கும் எனது வெற்றி வாழ்த்துகளையும், உளப்பூர்வமான பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்..!

The post “தற்போதைய அரசியலைப் பேசும் படம்தான் மாநாடு”! – சீமானின் பாராட்டு..! appeared first on Touring Talkies.

]]>