The post எஸ்.ஏ.சி.யை அதிரவைத்த விஜயகாந்த்! appeared first on Touring Talkies.
]]>பிறகு, அப்போது ஹிட் படங்களை கொடுத்து வந்த விஜயகாந்தை அணுக முடிவு செய்தார்.
அவருக்கு போன் செய்து,”நீங்கள் எப்போது ப்ரீ.. உங்களை சந்திக்க வேண்டும்” என்றார்.
பிறகு குளிக்கச் சென்றார். வெளியே வந்த அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது..
# அது என்ன அதிர்ச்சி.. அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..
The post எஸ்.ஏ.சி.யை அதிரவைத்த விஜயகாந்த்! appeared first on Touring Talkies.
]]>The post “அத சொல்லாதீங்க!”: விஜய்க்காக லியோனியிடம் கோரிய எஸ்.ஏ.சி appeared first on Touring Talkies.
]]>அவர், “விஜயகாந்த் – விஜய் நடித்த ‘செந்தூரப்பாண்டி படத்தின் 100வது நாள் விழாவில் எஸ்.ஏ.சி என்னை வைத்து ஒரு பட்டி மன்றம் நடத்தினார். ‘செந்தூரப்பாண்டி படத்தின் வெற்றிக்கு காரணம் காதலா? வீரமா?’ என்பதுதான் தலைப்பு.
பட்டிமன்றம் துவங்குவதற்கு முன்பு என்னிடம் வந்த எஸ்.ஏ.சி ‘வீரம் என நீங்கள் தீர்ப்பு சொன்னால் என் மகன் விஜய் ஃபீல் பண்ணுவான்.. காதல் எனவும் சொல்ல வேண்டாம். ஏனெனில், விஜயகாந்த் எனக்காக இப்படத்தில் நடித்து கொடுத்துள்ளார். எனவே, இரண்டையும் மிக்ஸ் பன்ணி ஒரு தீர்ப்பு சொல்லுங்க’ என கேட்டார். அவர் சொன்னது மாதிரியே தீர்ப்பை சொல்லிவிட்டேன்’ என லியோனி கூறினார்.
The post “அத சொல்லாதீங்க!”: விஜய்க்காக லியோனியிடம் கோரிய எஸ்.ஏ.சி appeared first on Touring Talkies.
]]>The post ‘எஸ்.ஏ.சி. மோசடி!” : விஜயகாந்தின் உதவியாளர் புகார் appeared first on Touring Talkies.
]]>அவர்,“ 1981 ஆம் ஆண்டிலிருந்து விஜயகாந்த்திற்கு உதவியாளராக இருந்தேன். கேப்டன் பிரபாகரன் படத்தில் இருந்து என்னை அவர் ப்ரொடக்ஷன் மேனேஜர் ஆக்கினார். அப்போதுதான் எனக்கும் எஸ் ஏ சந்திரசேகருடன் நல்ல பழக்கம் ஏற்பட்டது. எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் விஜயகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்த பெரியண்ணா படத்தை நான் தயாரித்தேன். இந்த படத்தில் சூர்யா நடித்திருந்தார்.
எனக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் வரும் பணத்தை வைத்துக்கொண்டு தான் நான் வீட்டையும், மூன்று பெண் குழந்தைகளுக்கான டெபாசிட் பணத்தையும் போட்டு விட வேண்டும் என்று எஸ் ஏ சியிடம் விஜயகாந்த் சொல்லி இருந்தார்.
இதனால் பெரியண்ணா படம் எடுக்கும்போது ஏழு லட்சம் சம்பளமாக எஸ்ஏசி வாங்கி இருந்தார்.
படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. பின் அவர் 20 லட்சம் ஆக உயர்த்தி கொண்டார். மேலும், அதிகமாக அவர் பணத்தை கேட்டார். அதற்கும் நான் ஒப்புக்கொண்டேன்.
1999 ஆம் ஆண்டு ஏபிசி பிரைவேட் லிமிடெட் நிதி நிறுவனத்தில் என்னுடைய பணம் டெபாசிட் செய்வதாக எஸ் ஏ சி என்னிடம் கூறினார். அதோடு பிரைவேட் கம்பெனி சோபாவின் சொந்த பெரியப்பா பையன்னு தான் என்றும், அதில் முதலீடு செய்தால் தான் கேரண்டி என்றும் கூறினார். அதனால் நாங்கள் இருவரும் ஜாயிண்ட் அக்கவுண்டில் கையெழுத்து போட்டு 15 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்த முதல் மாதம் 50 ஆயிரம் ரூபாய் வட்டி கொடுத்தார்கள்.
பின்னர் அடுத்த மாதம் 15,000 ஆக வட்டியை குறைத்தார்கள். இதனால் எனக்கு பயம் ஏற்பட்டு பணத்தை திருப்பி கேட்டேன். ஆனால் அந்த பணத்தை தரவில்லை. அதோடு சங்கிலி முருகன், விக்ராந்தின் அப்பா சிவா, நடிகர் விவேக் என பலரும் எஸ் ஏ சியிடும் பணம் குடுத்து ஏமாந்து விட்டார்கள். அதோடு என்னுடைய பொண்ணுக்கு கடந்த 26 ஆம் தேதி திருமணம் நடந்து. இதனால் தொடர்ந்து அவரிடம் நான் பணம் கேட்டு வருகிறேன்.
ஆனால், அவர் பணம் திருப்பி தராமல் ஏமாற்றிக் கொண்டே வருகிறார். இதனால் தான் நான் பத்திரிகையாளர்களை சந்தித்தேன். மேலும், என்னுடைய மகளின் திருமண பத்திரிக்கை கொண்டு எஸ்ஏசி இடம் கொடுக்கும் போது வாட்ச்மேன் உள்ளே விட மறுத்துவிட்டார். இது எனக்கு ரொம்ப மன வேதனை அளிதத்து என்று கண்ணீர் மல்க கதறி அழுது இருக்கிறார்
The post ‘எஸ்.ஏ.சி. மோசடி!” : விஜயகாந்தின் உதவியாளர் புகார் appeared first on Touring Talkies.
]]>The post விஜய் இயக்குநர்களிடம் கதை கேட்கும் ரசகிசயம்! appeared first on Touring Talkies.
]]>அவர், “ஒரு காலத்தில், விஜய்க்காக நான் தான் கதை கேட்பேன். கதையில் ஏதேனும் திருத்தம் இருந்தால் சொல்லி திருத்திக் கொண்டு அதன் பின் தான் விஜயிடம் போகும். நான் சொன்னாலே அது முடிவாகிவிடும்.
கொஞ்ச நாட்களுக்கு பிறகு இருவரும் சேர்ந்து கதை கேட்க ஆரம்பித்தோம். இப்பொழுது விஜய் தனியே கதை கேட்கிறார்.
அவர் கேட்கும் ஸ்டைலே தனி! கதை கேட்கும் போது டேபிளுக்கு அடியில் தனது மடியில், ஒரு லெட்டர் பேட் வைத்துக் கொள்வார். இயக்குநர் கதை சொல்லும் போது ஏதாவது சந்தேகம் இருந்தால் அதை அப்படியே பேடில் எழுதிக் கொள்வார். கடைசியாக அந்த சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்வார்” என்றார் எஸ்.ஏ.சி.
The post விஜய் இயக்குநர்களிடம் கதை கேட்கும் ரசகிசயம்! appeared first on Touring Talkies.
]]>The post விஜய் மகன் சஞ்சய் இயக்கும் முதல் ஹீரோ யார் தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>அதற்கு சஞ்சய், ‘இல்லை தாத்தா, நான் விஜய் சேதுபதியை வைத்துத்தான் முதல் படம் இயக்குவேன்.. ’ என்றார்” என கூறினார் எஸ்.ஏ.சி.
The post விஜய் மகன் சஞ்சய் இயக்கும் முதல் ஹீரோ யார் தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>The post “இப்போவெல்லாம் விஜய்தான் கதை கேக்குறார்” – அப்பா எஸ்.ஏ.சி.யின் வருத்தம் appeared first on Touring Talkies.
]]>இது குறித்து ஏஸ்.ஏ.சந்திரசேகர் அளித்த பேட்டியில், “வாரிசு படத்தில் அரசியல் இருக்கிறதா என்று எனக்குத் தெரியாது. நானும் விஜய்யும் ஒண்ணா உக்காந்து கதை கேட்ட காலமெல்லாம் மாறிருச்சு. இப்போவெல்லாம் அவரே கதை கேட்கிறார். அவரே தீர்மானிக்கிறார். அவரே முடிவெடுக்கிறார். இயக்குநர், தயாரிப்பாளர் தொடங்கி எல்லாத்தையும் அவரே முடிவு செய்றார். அதுல நான் தலையிடப் போறதில்லை.
அதனால இப்போவரைக்கும் எனக்கு வாரிசு படத்தோட கதை என்னன்னு தெரியாது. என்னதான் நம்ம குழந்தைகளா இருந்தாலும் அந்தந்த வயசு வரும்போது அவங்களுக்கான சுதந்திரத்தை நாம கொடுத்திரணும். இல்லைன்னா அதுவே வம்பாகியிரும்..” என்று சொல்லியிருக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகர்.
The post “இப்போவெல்லாம் விஜய்தான் கதை கேக்குறார்” – அப்பா எஸ்.ஏ.சி.யின் வருத்தம் appeared first on Touring Talkies.
]]>The post சினிமா எழுத்தாளர் சங்கத் தலைவராக இயக்குநர் கே.பாக்யராஜ் தேர்வு..! appeared first on Touring Talkies.
]]>தமிழ்த் திரையுலகத்தில் எழுத்தாளர்களுக்கென்று பிரத்யேகமாக இருக்கும் சங்கம் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம்.
2 வருடங்களுக்கு ஒரு முறை இந்தச் சங்கத்திற்கு தேர்தல் நடப்பது வழக்கம். கடந்த நிர்வாகிகளின் பதவிக் காலம் தற்போது முடிவடைய இருப்பதால் புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க இன்று தேர்தல் நடத்தப்பட்டது.
தலைவர் பதவிக்கு இயக்குநர்கள் கே.பாக்யராஜூம், எஸ்.ஏ.சந்திரசேகரும் போட்டியிட்டனர்.
செயலாளர் பதவிக்கு இயக்குநர்கள் லியாகத் அலிகானும், மனோஜ்குமாரும் போட்டியிட்டனர்.
பொருளாளர் பதவிக்கு பாலசேகரனும், ரமேஷ் கண்ணாவும் போட்டியிட்டனர்.
2 துணைத் தலைவர்கள் பதவிக்கு ‘யார்’ கண்ணன், காரைக்குடி நாராயணன், ரவி மரியா, மனோபாலா ஆகியோர் போட்டியிட்டனர்.
4 இணைச் செயலாளர்கள் பதவிக்கு மங்கை அரிராஜன், சின்னி ஜெயந்த், கவிஞர் முத்துலிங்கம், மதுரை தங்கம், வி.பிரபாகர், சி.ரங்கநாதன், எம்.ரத்னகுமார், பி.சாந்தகுமார், டி.கே.சண்முகசுந்தரம், என்.வேல்முருகன் ஆகிய 10 பேர் போட்டியிட்டனர்.
12 செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு அஜயன் பாலா, பாலாஜி சக்திவேல், பாபு கணேஷ், ஏகாம்பவாணன், ஹேமமாலினி, வீ.ஜெயப்பிரகாஷ், யுரேகா, பொன்ராமன், பேரரசு, பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜா கார்த்திக், ஏ.எல்.ராஜா, கே.ராஜேஸ்வர், ராதாரவி, சாய்ரமணி, சினேகன், ஷரவணன் சுப்பையா, சரண், எம்.சி.சேகர், பி.சாந்தகுமார், த.சிங்கபுலி அண்ணாவி, ஏ.வெங்கடேஷ், பா.விஜய், ந.வேல்முருகன், விவேகா ஆகிய 25 பேர் போட்டியிட்டனர்.
இந்தத் தேர்தல் இன்று வடபழனி, கமலா தியேட்டர் அருகில் இருக்கும் திரையிசை கலைஞர்கள் சங்கத்தில் காலை 8 மணி முதல் மாலை 4 மணிவரையிலும் நடைபெற்றது.
மொத்தமுள்ள 485 வாக்குகளில் 346 வாக்குகள் பதிவாயின. மாலை 4 மணிக்கு மேல் வாக்குகள் எண்ணப்பட்டு உடனடியாக முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட கே.பாக்யராஜ் 192 வாக்குகள் பெற்று 40 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் 152 வாக்குகளைப் பெற்றிருந்தார்.
பொதுச் செயலாளர் பதவிக்கு கே.பாக்யராஜ் அணியில் போட்டியிட்ட இயக்குநர் லியாகத் அலிகான் 292 வாக்குகள் பெற்று பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட இயக்குநர் மனோஜ்குமார் 151 வாக்குகள் பெற்றிருந்தார்.
2 துணைத் தலைவர்கள் பதவிக்குப் போட்டியிட்டவர்களில் கே.பாக்யராஜ் அணியில் போட்டியிட்ட இயக்குநர் யார் கண்ணன் 194 வாக்குகளையும், ரவி மரியா 162 வாக்குகளையும் பெற்று வெற்றி பெற்றனர்.
இவர்களுடன் போட்டியிருந்த காரைக்குடி நாராயணன் 155 வாக்குகளையும், மனோபyாலா 146 வாக்குகளையும் பெற்று தோல்வியடைந்தனர்.
4 இணைச் செயலாளர்கள் பதவிக்கு கே.பாக்யராஜ் அணியில் போட்டியிட்ட மங்கை அரிராஜன் மற்றும் கவிஞர் முத்துலிங்கம் இருவரும் வெற்றி பெற்றனர். அதேபோல் எஸ்.ஏ.சந்திரசேகர் அணியில் போட்டியிட்ட சி.ரங்கநாதன், வி.பிரபாகர் இருவரும் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றனர்.
12 செயற்குழு உறுப்பினர்களுக்கான போட்டியில்
1. இயக்குநர் பாலாஜி சக்திவேல்(215) – கே.பாக்யராஜ் அணி
2. பட்டுக்கோட்டை பிரபாகரன்(205) – கே.பாக்யராஜ் அணி
3. பேரரசு(200) – வசந்தம் அணி
4. சரண்(188) – வசந்தம் அணி
5. விவேகா(185) வசந்தம் அணி
6. சிங்கம் புலி(180) வசந்தம் அணி
7. ஹேமமாலினி (179) – கே.பாக்யராஜ் அணி
8. அஜயன் பாலா (177) – கே.பாக்யராஜ் அணி
9. சாய் ரமணி(173) வசந்தம் அணி
10. ராஜா கார்த்திக்(169) – கே.பாக்யராஜ் அணி
11. ஏ வெங்கடேஷ்(160) – வசந்தம் அணி
12. ராதாரவி(159) வசந்தம் அணி
மொத்தமாக இந்தத் தேர்தலில் போட்டியிட்டவர்களில் வசந்தம் அணியின் சார்பில் 10 எழுத்தாளர்களும், கே.பாக்யராஜ் அணியின் சார்பில் 11 பேரும் வெற்றி பெற்றுள்ளனர்.. !
The post சினிமா எழுத்தாளர் சங்கத் தலைவராக இயக்குநர் கே.பாக்யராஜ் தேர்வு..! appeared first on Touring Talkies.
]]>The post “எஸ்.ஏ.சந்திரசேகர் முதலில் தன் வீ்ட்டில் இருக்கும் குழப்பத்தை சரி செய்யட்டும்..” – நடிகை கஸ்தூரியின் அட்வைஸ் appeared first on Touring Talkies.
]]>அப்போது அவர் பேசும்போது, “எனக்கு இப்போதும் பல கட்சிகளில் இருந்தும் அழைப்பு வருகிறது. ஆரம்பித்த கட்சி, ஆரம்பிக்கப் போகும் கட்சி என்றில்லாமல் அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் அழைப்பு வந்தவண்ணம் உள்ளது.
ஆனால், பெண்களை எந்தக் கட்சி மரியாதையாக நடத்துகிறதோ.. பெண்மையை எந்தக் கட்சி போற்றுகிறதோ.. நான் வணங்கும் இந்து மதத்தையும், இந்து மதக் கடவுளர்களையும் யார் அவதூறு பேசாமல் இருக்கிறார்களோ.. அந்தக் கட்சியில்தான் நான் இணைவேன்..” என்றார்.
“எஸ்.ஏ.சந்திரசேகர் துவக்கியுள்ள கட்சியில் சேர்வீர்களா..?” என்று கேட்டதற்கு, “அவர் எல்லாருக்கும் அப்பாதான். எனக்கும் அப்பாதான். நான் அவருடைய இயக்கத்தில் இரண்டு படங்களில் நடித்திருக்கிறேன்.
இப்போது அவர்ஆரம்பித்திருக்கும் கட்சியினால் அவருடைய வீட்டிலேயே குழப்பம் ஏற்பட்டுள்ளது. அவருடைய மனைவியும், மகன் விஜய்யும் அதை எதிர்த்திருக்கிறார்கள்.
முதலில் எஸ்.ஏ.சி. தன் வீட்டில் இருக்கும் குழப்பத்தை சரி செய்ய வேண்டும். பின்பு கட்சி வேலைகளை அவர் பார்ப்பது அவருக்கும் நல்லது.. எல்லாருக்கும் நல்லது..” என்று அட்வைஸ் செய்தார்.
The post “எஸ்.ஏ.சந்திரசேகர் முதலில் தன் வீ்ட்டில் இருக்கும் குழப்பத்தை சரி செய்யட்டும்..” – நடிகை கஸ்தூரியின் அட்வைஸ் appeared first on Touring Talkies.
]]>