The post செய்தியாளர்களை பார்த்து டென்ஷன் ஆகி கத்திய நடிகர் விஜய்யின் தாய்… என்ன நடந்தது? appeared first on Touring Talkies.
]]>அவரது அரசியல் கட்சி அறிவிப்பிற்குப் பிறகு, முதன்முறையாக தன்னுடைய பெற்றோரை சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில், விஜய்யின் பெற்றோர் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். அப்போது, பத்திரிகையாளர்கள் தொடர்ந்து அவர்களை பின்தொடர்ந்ததால், கடுப்பான விஜய்யின் தாய் ஷோபா, “நீங்க வரக்கூடாது… வரக்கூடாது” என்று கோபமாக கூறினார். இதனால், அப்பகுதியில் சில நேரம் பரபரப்பு ஏற்பட்டது
இந்த நிலையில், எஸ்.ஏ. சந்திரசேகரைச் சூழ்ந்த பத்திரிகையாளர்கள், விஜய்யின் அரசியல் வருகை குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது அவர், “என் மகன் கட்சி ஆரம்பித்ததற்கு எனது வாழ்த்துகளும் ஆசிர்வாதங்களும் எப்போதும் இருக்கும். கட்சியில் தலையீடு செய்யவில்லை என்ற செய்தியாளர் கேள்விக்கு ‘எப்போதும் இருக்கும்’ என பதிலளித்துள்ளார்.
The post செய்தியாளர்களை பார்த்து டென்ஷன் ஆகி கத்திய நடிகர் விஜய்யின் தாய்… என்ன நடந்தது? appeared first on Touring Talkies.
]]>The post தனது பெற்றோரை சந்தித்த தளபதி விஜய்… வைரலாகும் புகைப்படம்! appeared first on Touring Talkies.
]]>நடிகர் விஜய், விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் பல ஆண்டுகளாக பல்வேறு சமூக நலத்திட்டங்கள், நிவாரண உதவிகள் மற்றும் சேவைகளை மேற்கொண்டு வந்தவர், கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை உருவாக்கினார்.
அதேபோல் 2023-2024 கல்வியாண்டில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கும் கல்வி விருது விழாவின் ஏற்பாடுகள் துவங்கியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டது, இதில் தவெக தலைவர் விஜய் கலந்து கொள்ளவுள்ளார்.‘லியோ’ படத்துக்கு பிறகு விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இதில், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தின் பெயர் ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், விஜய் தனது பெற்றோர் எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் ஷோபா சந்திரசேகரை இன்று சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் புகைப்படத்தை இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார், இது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
The post தனது பெற்றோரை சந்தித்த தளபதி விஜய்… வைரலாகும் புகைப்படம்! appeared first on Touring Talkies.
]]>The post விஜய்யை வைத்து அரசியல் படம் செய்ய ஆசைப்பட்ட எஸ். ஏ. சந்திரசேகர் – Director Viji | Part – 6 | CWC appeared first on Touring Talkies.
]]>The post அவர் நடத்துவது நாடகம்…புஸ்லி ஆனந்த் பற்றி எஸ்.ஏ.சந்திரசேகர் பரபரப்பு பேச்சு! appeared first on Touring Talkies.
]]>எந்த ஒரு அரசியல்வாதியும் செய்யாததை புஸ்ஸி ஆனந்த் செய்கிறார். ரசிகர் சந்திப்பிற்கு வரும்போது, களைப்பால் மேஜையில் படுத்துக்கொண்டிருப்பதாகப் புகைப்படம் எடுத்து அதை ஆன்லைன் குழுவில் பகிர்ந்து, பிறரிடம் பகிர்ந்து லைக் வாங்கும்படிக் கேட்பதாகக் கூறப்படுகிறது. இது ஒரு நாடகமாக நடப்பதாகச் சொல்லப்படுகிறது.
இதைக் கண்ட விஜய் , தங்களுக்காக உழைத்து களைத்த நிலையில் அவர் இப்படிப் படுத்திருப்பதாக நினைத்து, அவரை மேலும் ஆதரிப்பதாகக் கூறியுள்ளார்.இதுபோன்ற நபர்களுடன் இணைந்திருக்கும்போது, அவரது எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற அச்சம் எனக்கு உள்ளது என்று எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு பேட்டியில் வருத்தத்துடன் கூறியுள்ளார்.
The post அவர் நடத்துவது நாடகம்…புஸ்லி ஆனந்த் பற்றி எஸ்.ஏ.சந்திரசேகர் பரபரப்பு பேச்சு! appeared first on Touring Talkies.
]]>The post விஜய்யை ஏமாற்றுகிறார் புஸ்ஸி ஆனந்த் – எஸ்.ஏ.சந்திரசேகர் appeared first on Touring Talkies.
]]>இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொதுச் செயலாளராக இருக்கும் புஸ்ஸி ஆனந்த் நடிகர் விஜய்யை ஏமாற்றுவதாக விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
அதில் எஸ்.ஏ சந்திரசேகர் கூறி இருப்பதாவது. “ஒரு சமூக வலைதள பக்கத்தை புஸ்ஸி ஆனந்த் வைத்துள்ளார். இதில் விஜய் உட்பட 50 பேர் உள்ளனர். அதில் கட்சிக்காக புஸ்ஸி ஆனந்த் கஷ்டப்படுவது போன்ற பதிவுகள் போடப்படுகின்றன. அதை பலரும் லைக் செய்கின்றனர். இதை பார்த்து புஸ்ஸி ஆனந்த் கடுமையாக உழைப்பதாக விஜய் நம்பிக் கொண்டிருக்கிறார். விஜய்யை ஏமாற்றுகின்றனர். இவ்வாறு அதில் எஸ்.ஏ சந்திரசேகர் கூறியிருக்கிறார்
The post விஜய்யை ஏமாற்றுகிறார் புஸ்ஸி ஆனந்த் – எஸ்.ஏ.சந்திரசேகர் appeared first on Touring Talkies.
]]>