The post R.K.சுரேஷ் – அமீரா வர்மா நடிக்கும் புதிய படம் ‘குளவி’ appeared first on Touring Talkies.
]]>வில்லன் கதாபாத்திரமானாலும் சரி., நாயகன் கதாபாத்திரமானாலும் சரி எந்த கதாபாத்திரமானாலும்., தனது அசாத்தியமான நடிப்பால் இன்று மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்றுள்ள R.K.சுரேஷ் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.
கதாநாயகியாக சசிகுமார் ஜோடியாக ‘அயோத்தி’ படத்தில் நடித்த அமீரா வர்மா நடிக்கிறார். மற்றும் ஆனந்த் நாக், கஞ்சா கருப்பு, சிங்கம் புலி, அப்பு குட்டி, நிமல், முத்துகாளை இவர்களுடன் இன்னும் ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கவிருக்கிறார்கள்.
‘மெரினா’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘பிஸ்தா’ போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த விஜயன் முனுசாமி இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார்.
பல வெற்றி படங்களுக்கு இசையமைத்த யதார்த்த இசையமைப்பாளர் N.R.ரகுநந்தன் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.
பாடல்கள் – கபிலன், மோகன்ராஜ், படத் தொகுப்பு – மு. காசிவிஸ்வநாதன், நடனப் பயிற்சி இயக்கம் – ராதிகா, சக்தி ராஜு, சண்டை பயிற்சி இயக்கம் – ஹரி முருகன், ஷங்கர், நிர்வாக தயாரிப்பு – நிமல், தயாரிப்பு மேற்பார்வை – சிவகுமார், பத்திரிகை தொடர்பு – மணவை புவன், தயாரிப்பு – C. முருகன், அன்னை K. செந்தில் குமார், எழுத்து, இயக்கம் – V.S.செல்வதுரை.
இவர் எழுத்தாளர் பாலகுமாரன், இயக்குநர்கள் A.R.முருகதாஸ், சித்து ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியதோடு ஏராளமான படங்களுக்கு இணை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் ‘குளவி’ படம் பற்றி இயக்குநர் V.S.செல்வதுரை பேசும்போது, “ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாகிறது. அந்த மக்களின் கலாச்சாரம் வாழ்வியலை இதில் பதிவு செய்ய இருக்கிறோம். குடும்பக் கட்டமைப்பு மற்றும் அதில் உள்ள முரண்பாடுகளையும், மனித உறவுகளின் சீரழிவுகளையும் இதில் நேர்த்தியாக சொல்ல இருக்கிறோம்.
ஒவ்வொரு குடும்பத்திலும் பெண்களின் முக்கியத்துவம் எப்படி இருக்கிறது. அதை அவர்கள் எவ்வாறு கையாள வேண்டும் என்பதை சொல்லும் படம் இது. நகைச்சுவையுடன் முழுக்க முழுக்க குடும்ப உறவுகளை பற்றிய படமாக இதை கொடுக்க இருக்கிறோம்.
படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் துவங்கியுள்ளது. தொடர்ந்து திருநெல்வேலி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடைபெற இருக்கிறது என்றார்..” இயக்குநர் V.S. செல்வதுரை.
The post R.K.சுரேஷ் – அமீரா வர்மா நடிக்கும் புதிய படம் ‘குளவி’ appeared first on Touring Talkies.
]]>The post சென்னை சிட்டி, மதுரை நேட்டிவிட்டி கலந்த கதையில் நடிக்கும் ஆர்.கே.சுரேஷ் appeared first on Touring Talkies.
]]>விஜயகாந்தை வைத்து ‘கண்ணுபடப் போகுதய்யா’ என்கிற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய பாரதி கணேஷ் இந்தப் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தின் துவக்க விழா பூஜை நேற்று இனிதே நடைபெற்றது.
இந்த நிகழ்வில், இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்கள் ராதாரவி, சந்தானபாரதி, சாம்ஸ், டேனியல் ஆனி போப் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
படத்தின் இயக்குநர் பாரதி கணேஷ் பேசும்போது, “சென்னை சிட்டியும், மதுரை நேட்டிவிட்டியும் கலந்த ஒரு நல்ல கதையம்சத்துடன் இந்த படத்தை இயக்குகிறேன். இந்த கதைக்கு ஆர்.கே.சுரேஷ்தான் பொருத்தமாக இருந்தார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. இந்தப் படத்தில் நடிக்கும் கதாநாயகி மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்” என்று கூறினார்.
படத்தின் நாயகன் ஆர்.கே.சுரேஷ் பேசும்போது, “இயக்குநர் பாரதி கணேஷ் என் தந்தை காலத்தில் இருந்தே எனக்கு நெருக்கமானவர். எப்படி விஜயகாந்த்தின் வெற்றிக்கு அவர் முதுகெலும்பாக இருந்தாரோ, அதேபோலதான் எனக்கும்.
அவர் சொன்ன மூன்று கதைகளில் இந்த கதை ரொம்ப பிடித்திருந்ததால் முதலில் இதை படமாக்க தீர்மானித்தோம். இந்த படத்தை எப்படியும் வெற்றிப் படமாக்க வேண்டும் என ஒரு வெறியுடன் இருக்கிறார் இயக்குநர் பாரதி கணேஷ்.. அதனால் இப்போதைய டிரெண்டுக்கு ஏற்ற மாதிரி நேட்டிவிட்டியுடன், சிட்டியில் நடக்கும் கதையாக உருவாக்கியுள்ளார்.
நான் தற்போது தமிழில் மூன்று படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறேன். தெலுங்கில் இரண்டு படங்களில் வில்லனாகவும், மலையாளத்தில் ஒரு படத்திலும் வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்து வருகிறேன். குறிப்பாக தெலுங்கில் சூப்பர் ஸ்டார் நடிகர் ஒருவரின் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறேன். இயக்குநர்கள் பாலா, முத்தையா ஆகியோர் கொடுத்த பயிற்சிதான் இந்த அளவுக்கு நான் ஒரு நடிகராக வளர காரணம்.” என்றார்.
The post சென்னை சிட்டி, மதுரை நேட்டிவிட்டி கலந்த கதையில் நடிக்கும் ஆர்.கே.சுரேஷ் appeared first on Touring Talkies.
]]>The post ‘விசித்திரன்’ டைட்டில் விவகாரம் – பாலா-ஆர்.கே.சுரேஷூக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு..! appeared first on Touring Talkies.
]]>அவர் 2015-ம் ஆண்டு ‘விசித்திரன்’ என்ற தலைப்பை தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளர் கில்டில் பதிவு செய்து, கடந்த மார்ச் மாதம்வரை புதுப்பித்து வந்துள்ளார்.
கடந்த 2018-ம் ஆண்டு மலையாளத்தில் எம்.பத்மகுமார் இயக்கத்தில் ஜோஜூ ஜார்ஜ், ஆத்மியா ராஜன், மாளவிகா மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘ஜோசப்’.
மலையாளத்தில் நல்ல வரவேற்பைப் பெற்ற இத்திரைப்படத்தை ‘பி ஸ்டுடியோ’ நிறுவனத்தின் மூலம் இயக்குநர் பாலாவும், இணை தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷூம் இணைந்து தமிழில் தயாரித்து வருகின்றனர். இந்த ரீமேக்கில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் நாயகனாக நடித்து வருகிறார்.
இந்தப் படத்திற்கும் ‘விசித்திரன்’ என்றே பெயர் வைத்திருக்கிறார்கள். இதுதான் இப்போது பிரச்சினையாகியிருக்கிறது.
தான் பதிவு செய்து வைத்துள்ள ‘விசித்திரன்’ என்னும் தலைப்பில் இயக்குநர் பாலாவும், ஆர்.கே.சுரேஷூம் படத்தை தயாரிக்க தடை விதிக்கக் கோரி சதீஷ்குமார் சென்னை 14-வது உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு குறித்து ‘பி ஸ்டுடியோ’ நிறுவனத்தின் உரிமையாளரான இயக்குநர் பாலா மற்றும் இணை தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை ஜனவரி 25-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.
The post ‘விசித்திரன்’ டைட்டில் விவகாரம் – பாலா-ஆர்.கே.சுரேஷூக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு..! appeared first on Touring Talkies.
]]>