The post அதனால் தான் அவர் சூப்பர் ஸ்டார்… ரஜினிகாந்த் குறித்து பாண்டியராஜன் பேசிய வீடியோ வைரல்! appeared first on Touring Talkies.
]]>வெள்ளந்தியாக பேசும் பாணியும், சுறுசுறுப்பான நடையுடன் தனக்கு என்று தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருந்த நடிகர் பாண்டியராஜன். இவரின் படங்களில் நகைச்சுவை காட்சிகளுக்கு பஞ்சம் இருப்பதில்லை. பாக்கியராஜிடம் உதவி இயக்குநராக இருந்த பாண்டியராஜன், அந்த 7 நாட்கள், மெளன கீதங்கள், தூறல் நின்னு போச்சு, விடியும் வரை காத்திரு, இன்று போய் நாளை வா போன்ற படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றினார்.
அதன் பிறகு தனியே கன்னிராசி படத்தை இயக்கினார். இந்த படம் திரையரங்குகளில் பல நாட்கள் ஓடியது. இதையடுத்து, ஆண் பாவம் படத்தை இயக்கி ஹீரோவாக அறிமுகமானார். இந்த படம் பட்டிதொட்டியெங்கும் வெற்றியை குவித்து, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று 225 நாட்களுக்கும் மேலாக ஓடி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் பின் பல படங்களை இயக்கியும், ஹீரோவாக நடித்த பாண்டியராஜன், தற்போதைய நிலையில் துணை நடிகராக சில படங்களில் நடிக்கிறார்.
பாண்டியராஜன் அளித்த பேட்டி வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், “நான் படம் இயக்குவதில் இருந்து ஒதுங்க வில்லை. மனதில் ஒரு கரு தோன்ற வேண்டும். அது தோன்றினால் படம் எடுக்கலாம். முன்பு ஒரு படத்தை சுவாரஸ்யமாக எடுக்க எப்படி முடியும் என்று யோசிக்க வேண்டியிருந்தது. ஆனால் இப்போது, படத்தை எப்படி ரிலீஸ் செய்வது, மக்களை எப்படி திரையரங்குகளுக்கு கொண்டு வருவது என்பதை பற்றியே யோசிக்க வேண்டியிருக்கிறது,” என்றார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து பேசிய பாண்டியராஜன், “ஒருமுறை அவரை விமான நிலையத்தில் பார்த்தேன். அவர் என்னை பார்த்தது போல இருந்ததால், கையை அசைத்தேன். ஆனால், ரஜினி கை அசைக்கவில்லை. சரி, அவர் நம்மை பார்க்கவில்லை என்று நினைத்தேன். மறுநாள் காலை எனக்கு போன் வந்தது. ‘நேற்று விமான நிலையத்தில் கையை அசைத்தீர்கள் பார்த்தேன். ஆனால், அந்த சூழ்நிலையில் எனக்கு கையை அசைக்க முடியவில்லை. மன்னிக்கவும்,’ என்றார். அந்த பண்பால் தான் அவர் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார்,” என்று கூறினார்.
The post அதனால் தான் அவர் சூப்பர் ஸ்டார்… ரஜினிகாந்த் குறித்து பாண்டியராஜன் பேசிய வீடியோ வைரல்! appeared first on Touring Talkies.
]]>The post இயக்குனர் பாண்டிராஜூடன் கூட்டணி அமைக்கும் ஜெயம் ரவி? அப்போ தனி ஒருவன் 2 அவ்வளவு தானா? appeared first on Touring Talkies.
]]>இந்நிலையில், ஜெயம் ரவி தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வெற்றிப் படங்களை கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளார். அவரின் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகவுள்ள ஜெனீ, பிரதர் மற்றும் காதலிக்க நேரமில்லை ஆகிய படங்கள் அவருக்கு வெற்றி தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படங்களின் சூட்டிங் கிட்டத்தட்ட நிறைவடையவுள்ள நிலையில், ஜெயம் ரவி அடுத்தடுத்த அப்டேட்களை அறிவித்து வருகிறார்.
இந்தநிலையில் அவரது சகோதரரான மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும்’தனி ஒருவன் 2′ படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இப்படத்தின் பட்ஜெட் தொடர்பான சிக்கல்கள் காரணமாக, படப்பிடிப்பு தள்ளி போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், மோகன் ராஜா அடுத்ததாக சிரஞ்சீவியுடன் இணைந்து ஒரு புதிய படத்தை இயக்க கமிட் ஆகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், அவர் அஜித்திற்கும் ஒரு கதை வழங்கி ஒப்புதல் பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த இரு புதிய படங்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் ஜெயம் ரவியின் அடுத்த படத்தைப் பற்றிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. முன்னர், சூர்யாவின் நடிப்பில் எதற்கும் துணிந்தவன் படத்தை இயக்கிய இயக்குனர் பாண்டிராஜ், ஜெயம் ரவியின் நடிப்பில் புதிய படத்தை இயக்கவுள்ளார் என கூறப்பட்டுள்ளது. இவர் விஷாலை இயக்க ஏற்கனவே கமிட்டாகியுள்ள நிலையில், இந்தப் புதிய படம் தற்போது ஹோல்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.ஜெயம்ரவி தனது கமிட்மெண்ட்களை ஜூன் மாதத்திற்குள் நிறைவு செய்வார் எனவும் பின்னர், இந்தப் புதிய படத்தின் சூட்டிங் ஜூலை மாதத்தில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
The post இயக்குனர் பாண்டிராஜூடன் கூட்டணி அமைக்கும் ஜெயம் ரவி? அப்போ தனி ஒருவன் 2 அவ்வளவு தானா? appeared first on Touring Talkies.
]]>The post கவிஞர் வாலியை நான் கடுமையாக விமர்சிக்கக் காரணம் …? – James Vasanthan |Chai with Chithra |Part – 3 appeared first on Touring Talkies.
]]>The post பிரபுவை திட்டிய பாண்டியராஜன்! பதிலுக்கு பிரபு… appeared first on Touring Talkies.
]]>இப்படத்தின் படப்பிடிப்பில் நடந்த ஒரு சுவாரஸ்ய சம்பவம் குறித்து இயக்குநர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
அவர்,”சில காட்சிகளில் நான் எதிர்பார்த்ததைப் போல பிரபு நடிக்கவில்லை. இதனால் படப்பிடிப்பு ஆரம்பித்தது முதலே அவரை திட்டிக்கொண்டே இருந்தேன். நான்காவது நாள், என்னை அருகில் அழைத்த அவர், ‘தம்பி, நீ என் நடிப்பு இன்னும் சிறப்பா வேணும்னு நெனச்சா.. என் கிட்ட தனியா வந்து சொல்லு, நான் கேட்டுக்குறேன். மத்தவங்க எதிரே திட்டாதே’ என்றார்.
அப்போதுதான் என் தவறை உணர்ந்தேன். பரபரப்பாக நடித்துக்கொண்டிருந்த ஹீரோ அவர்.. அதுவும் சிவாஜியின் மகன். நானோ புதுமுக இயக்குனர். அவர் நினைத்திருந்தால் என் படத்தில் இருந்து விலகியிருக்கலாம். ஆனால் என்னை அழைத்து மிகவும் சாந்தமாக பேசினார். அதுதான் அவரது பெருந்தன்மை” என்று பழைய நினைவுகளை பகிர்ந்துகொண்டார் பாண்டியராஜன்.
The post பிரபுவை திட்டிய பாண்டியராஜன்! பதிலுக்கு பிரபு… appeared first on Touring Talkies.
]]>