The post இன்றைய சினி ஃபைட்ஸ்! appeared first on Touring Talkies.
]]>1) விற்று தீர்ந்த தி கோட் படத்தின் உரிமம்
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தி கோட் திரைப்படம் க்ளைமாக்ஸ் காட்சி படபிடிப்புகளை நோக்கி நகர்ந்து உள்ள நிலையில் அதற்குள் வெளிநாட்டு உரிமத்தை மிகப்பெரிய தொகைக்கு அஹிம்சா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல்.
2) பாடகரான விஜய் சேதுபதி
கரா என்ற படம் தயாராகி வருகிறது. அதில் மாஸ்டர் மகேந்திரன் கதாநாயகனாகவும், சாகிபா பாஸின் நாயாகியாகவும் , ஜிவா வில்லனாகவும் நடிக்கின்றனர்.இந்த படத்திற்கு அச்சு ராஜாமணி இசையில் விஜய் சேதுபதி ‘காதல் குமாரு வைரல் ஆனாரு…, என்ற பாடலை பாடியுள்ளார்.
3) வதந்திகளை நம்பாதீங்க – நடிகை பூஜா
ஆர்யாவின் திருமணத்தில் நடிகையான பூஜா கலந்து கொள்ளாமல் போனதை பல விதங்களில் பேசப்பட்டதை தொடர்ந்து, நான் ஆஸ்திரேலியாவில் இருந்தேன் ஆர்யா எனக்கு போன் செய்து இருந்தார் அதை பார்க்க தாமதம் ஆகிவிட்டது.அந்த திருமணத்தில் கலந்து கொள்ள முடியவில்லையே தவிர வதந்திகளை நம்பாதீங்க என்றுள்ளார்.
4) நித்தியாமேனனுக்கு காமெடி கதாபாத்திரம்
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாளத்தில் முன்னணி கதாநாயகியாக பல வெற்றிப் படங்களில் நடித்தவர் நித்தியா மேனன். தற்போது விஷ்ணு வர்தனின் உதவி இயக்குனராக பணியாற்றிய காமினி எழுதி இயக்கும் காதல், காமெடி கலந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் நித்யாமேனன். இப்படத்தை பாஸ்க் டைம் தியேட்டர்ஸ் மற்றும் பாப்டர் மீடியா நிறுவனங்கள் தயாரிக்கின்றன.
5) மீரா விஜய் ஆண்டனி தயாரித்துள்ள ‘ரோமியோ’
கவரும் தலைப்பு, கதை, சமூக கருத்து என நடிப்பில் ஈர்க்கும் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. இவரது மனைவி மீரா விஜய் ஆண்டனி தங்களுடைய சொந்த ஃபிலிம் கார்பரேஷன் நிறுவனம் மூலம் ரோமியோ என்ற படத்தை தயாரித்துள்ளார். விஜய் ஆண்டனி இந்த படத்தில் இதுவரை ரசிகர்கள் காணாத விஜய் ஆண்டனியாக நடித்துள்ளாராம்.இவருடன் மிருணாளினி ரவி, யோகி பாபு, தலைவாசல் விஜய், விடிவி கணேஷ் என பலர் நடித்துள்ளனர்.
The post இன்றைய சினி ஃபைட்ஸ்! appeared first on Touring Talkies.
]]>The post ‘அந்த’ போட்டோவை தைரியமாக வெளியிட்ட நித்யாமேனன்! appeared first on Touring Talkies.
]]>படப்பிடிப்புக்கு சென்றதும் மேக்கப் போட்டுக்கொள்வார்கள். சொந்த வேலையாக வெளியே செல்லும்போதும், நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போதும் மேக்கப்புடனேயே இருப்பார்கள். இதற்காக ஒவ்வொரு நடிகையும் சம்பளம் கொடுத்து மேக்கப் கலைஞர்களை அருகிலேயே வைத்து இருக்கிறார்கள்.
வீட்டில் இருக்கும்போது மட்டுமே மேக்கப்பை கலைப்பது உண்டு. இந்த நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் பிரபல நடிகையாக இருக்கும் நித்யாமேனன் மேக்கப் இல்லாமல் இருக்கும் தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் சிலர் பாராட்டியும், இன்னும் சிலர் நித்யாமேனனா இது? அடையாளமே தெரியவில்லையே என்று வியந்தும் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.
தைரியம்தான் உங்களுக்கு என்றும் சிலர் பதிவிட்டு வருகிறார்கள்.
The post ‘அந்த’ போட்டோவை தைரியமாக வெளியிட்ட நித்யாமேனன்! appeared first on Touring Talkies.
]]>The post ‘ஏ’ FOR…. பாடம் எடுத்த ஹீரோயின்! appeared first on Touring Talkies.
]]>சமீபத்தில் அந்த ஆசிரமத்திற்கு வந்த அவர், சிறப்பு தியானத்தில் கலந்து கொண்டார். பின் அதன் அருகிலுள்ள பழங்குடியினர் கிராமத்துக்குச்சென்றார்.
அங்கு அரசு தொடக்க பள்ளிக்குச் சென்ற அவர், மாணவர்களைச் சந்தித்தார். அவர்களுடன் உரையாடிய பிறகு, ஆங்கிலப் பாடம் கற்றுத்தந்தார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
The post ‘ஏ’ FOR…. பாடம் எடுத்த ஹீரோயின்! appeared first on Touring Talkies.
]]>The post கேரளாவை பதற வைத்த நித்யா மேனனும், பார்வதி திருவோத்தும்..! appeared first on Touring Talkies.
]]>பிரெக்னன்ஸி டெஸ்ட் செய்து பாசிட்டிவாக இரு கோடுகள் வந்த கிட்டையும் அதன் அருகே குழந்தைக்கு கொடுக்கப்படும் ரப்பர் நிப்பலையும் வைத்து எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு அன்ட் திவொண்டர் பிகின்ஸ்என கேப்ஷன் கொடுத்து அதனை பார்வதியும், நித்யா மேனனும் வெளியிட்டிருந்தனர். இதைப் பார்த்த கேரள ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
ஏனெனில் இவர்கள் இருவருக்குமே இதுவரையில் திருமணமாகவில்லை. அப்படியிருக்க இருவரும் சொல்லி வைத்தாற்போல் கர்ப்பம் என்று குறியீடு செய்தால் என்னவாகும்..
ஒரு மணி நேரம் கழித்தே இது அஞ்சலி மேனன் இயக்கவிருக்கும் வொண்டர் வுமன் என்ற மலையாளப் படத்திற்காக செய்யப்பட்ட விளம்பரம் என்ற செய்தி வெளியானது.
இந்தப் படம் கர்ப்பிணிப் பெண்களைப் பற்றிய கதையாம். சமீபத்தில் கோழிக்கோட்டில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இந்தப் படத்தில் ரஜிஷா விஜயனும், ஆசீப் அலியும் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தை ‘பெங்களூர் டேய்ஸ்’, ‘பிரேமம்’ ஆகிய படங்களைத் தயாரித்த அன்வர் ரஷீத் தயாரித்துள்ளதாகத் தெரிகிறது.
The post கேரளாவை பதற வைத்த நித்யா மேனனும், பார்வதி திருவோத்தும்..! appeared first on Touring Talkies.
]]>The post “தாய்க் கிழவி என்று அழைக்க வேண்டாம்” – ரசிகர்களிடம் நித்யா மேனன் வேண்டுகோள் appeared first on Touring Talkies.
]]>தனுஷ், நித்யா மேனன் நடிப்பில் கடந்த 18-ம் தேதி வெளியான படம், ’திருச்சிற்றம்பலம்’. மித்ரன் ஜவஹர் இயக்கிய இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இதில் ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர், பிரகாஷ்ராஜ், பாரதிராஜா உட்பட பலர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.
இந்தப் படத்தில் ‘ஷோபனா’ என்ற கேரக்டரில் வரும் நித்யா மேனனின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்தப் படத்தில் ’தாய்க் கிழவி’ என்ற பாடலும் உள்ளது.
இந்தப் பாடல் பெரும் வெற்றி பெற்றதையடுத்து தற்போது சமூக வலைதளங்களில் நடிகை நித்யா மேனனை ‘தாய்க் கிழவி’ என்றே ரசிகர்கள் அழைத்து வருகின்றனர். ஆனால் தன்னை தாய்க் கிழவி என்று பலரும் அழைப்பது தனக்குப் பிடிக்கவில்லை என்று நித்யா மேனன் தெரிவித்துள்ளார்.
தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் நேரலையில் தோன்றிய நித்யா மேனன், “ரசிகர்கள் யாரும் என்னை அந்தப் பெயரில் அழைக்க வேண்டாம். அதில் எனக்கு ஆர்வம் இல்லை” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
The post “தாய்க் கிழவி என்று அழைக்க வேண்டாம்” – ரசிகர்களிடம் நித்யா மேனன் வேண்டுகோள் appeared first on Touring Talkies.
]]>