The post தங்கையின் காதலுக்கு ரவுடி அண்ணனின் கடும் எதிர்ப்பு..! appeared first on Touring Talkies.
]]>இந்த ‘மஞ்சக் குருவி’ படத்தில் ரவுடி குணாவாக கிஷோர், கதிராக விஷ்வா, கிஷோர் தங்கையாக நீரஜா மற்றும் கஞ்சா கருப்பு, கோலிசோடா பாண்டி, சுஜாதா சிவகுமார், சுப்புராஜ் இவர்களுடன், கதையின் முக்கிய பாத்திரத்தில் மாஸ்டர் ராஜநாயகம் நடித்துள்ளார்.
தேசிய விருது பெற்ற ராஜா முகமது படத் தொகுப்பையும், மிரட்டல் செல்வா சண்டை பயிற்சியையும், சௌந்தர்யன் இசையையும், கபிலன் மற்றும் டாக்டர் கிருதியா இருவரும் பாடல்களையும், ஸ்ரீதர் தயாரிப்பு நிர்வாகத்தையும், கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தை அரங்கன் சின்னத்தம்பியும் செய்துள்ளனர்.
இந்தப் படம் பற்றி இயக்குநர் அரங்கன் சின்னத்தம்பி பேசும்போது, “அண்ணனின் பெயர் குணா. இந்தப் பெயருக்கு ஏற்றவன் இவன் இல்லை. ஊரே இவனை பார்த்து மிரளும். இவன் பார்வை பட்டாலே பார்ப்பவர் குலை நடுங்கும். அண்ணன் செய்யும் அட்டகாசத்தால் மக்கள் அனைவரும் நடுக்கத்துடனே வாழ்ந்து வருகின்றனர்.
ரவுடியிசத்தில் உச்சத்தில் திரியும் இவனுக்கு ஒரு அழகான அழகு மங்கை தங்கையாக ஊரில் பவனி வந்தாள். அண்ணனின் ரவுடித்தனம் தங்கைக்கு அறவே பிடிக்கவில்லை. ஆனால், அண்ணனோ தங்கை மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருந்தான். ஆனால், அண்ணனின் பாசமோ, அவனின் கனிவான கவனிப்போ அவள் மனதை மாற்றவில்லை.
ஒவ்வொரு நாளும் கனத்த இதயத்துடன் நாட்களை நகர்த்தி வந்த தங்கை பதினெட்டு வயதை கடந்தாள். இந்த நாளுக்காக காத்திருந்த தங்கை அண்ணனையும், வீட்டையும் விட்டுவிட்டு வெளியேறுகிறாள். அண்ணன் எவ்வளவோ தடுத்தும் அவளைத் தடுக்க முடியவில்லை.
தனியே வசித்து வந்த அவளை கதிர் காதலிக்க தொடங்கினான். அவன் காதலை அவள் ஏற்காமல் புறக்கணித்து வந்தாள். தனது அண்ணன் ரவுடியாக இருப்பதால் தனக்கு வாழப் பிடிக்கவில்லை என கதிரிடம் கூறுகிறாள்.
தங்கையை அண்ணனிடம் பேச வைத்து இருவரின் மனதில் உள்ள கசப்பான எண்ணத்தை வேரோடு பிடுங்கி எறிய நினைத்த கதிர் அவளின் அண்ணனிடம் சென்று சேருகிறான்.
அண்ணன் குணாவிற்கு வாழ்வியலை உணர்த்தி, பாசத்தை புரிய வைக்கிறான். அண்ணனும் திருந்தி தங்கையை பார்க்க வருகிறான். அப்பொழுது யாரும் எதிர்பாராத வண்ணம் அந்தத் திடுக்கிடும் சம்பவம் நிகழ்கிறது.
அதன் பிறகு நடைபெறும் சம்பவத்தை விறுவிறுப்பான திரைக்கதையிலும் நறுக் என்ற வசனத்திலும் சொல்லி இருக்கிறேன்” என்று இடைவிடாமல் சொல்லி முடித்தார் இயக்குநர் அரங்கன் சின்னத்தம்பி.
வரும் டிசம்பர்-2-ம் தேதி இத்திரைப்படம் திரைக்கு வருகிறது.
The post தங்கையின் காதலுக்கு ரவுடி அண்ணனின் கடும் எதிர்ப்பு..! appeared first on Touring Talkies.
]]>The post பாசமலர்’, ‘கிழக்கு சீமையிலே’ வரிசையில் வரும் ‘மஞ்சக் குருவி’ படம் appeared first on Touring Talkies.
]]>வி.ஆர்.கம்பைன்ஸ் சார்பில், விமலா ராஜநாயகம் தயாரித்திருக்கும் இந்த ‘மஞ்சக் குருவி’ படத்தில் கிஷோர் கதையின் நாயகனாக நடித்துள்ளார். வில்லனாக ‘குங்ஃபூ மாஸ்டர்’ ராஜநாயகம் நடித்துள்ளார். விஷ்வா, நீரஜா, கஞ்சா கருப்பு, சாரபாம்பு சுப்புராஜ், சூப்பர் குட் சுப்பிரமணி, கோலிசோடா பாண்டி, சுஜாதா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – அரங்கன் சின்னதம்பி, இசை – சௌந்தர்யன், ஒளிப்பதிவு – ஆர்.வேல், எடிட்டிங் – ராஜா முகமது, சண்டை – மிரட்டல் செல்வா, கலை கே.எம்.நந்தகுமார், மக்கள் தொடர்பு – கோவிந்தராஜ், தயாரிப்பு – விமலா ராஜநாயகம்.
இந்தப் படத்தில் அண்ணனாக கிஷோர் நடிக்க, தங்கையாக நீரஜா நடித்துள்ளார். சௌந்தர்யன் இசையில், தங்கையை நினைத்து, அண்ணன் பாடும் பாடல், கல் நெஞ்சையும் உருக வைக்கும். ‘கூட பொறந்த பொறப்பே’… என தொடங்கும் அந்தப் பாடலை, சொளந்தர்யனே தனது வசீகர குரலில் பாடியுள்ளார்.
சூப்பர் ஹிட் பாடல்களுடன் வெளிவரவிருக்கும் இந்தப் படத்தை மிக விரைவில் திரையில் பார்க்கலாம்!
The post பாசமலர்’, ‘கிழக்கு சீமையிலே’ வரிசையில் வரும் ‘மஞ்சக் குருவி’ படம் appeared first on Touring Talkies.
]]>The post கிஷோர் கதையின் நாயகனாக நடிக்கும் ‘மஞ்ச குருவி’ appeared first on Touring Talkies.
]]>‘ஆடுகளம்’, ‘பொல்லாதவன்’, ‘வட சென்னை’, ‘ஹரிதாஸ்’ போன்ற படங்களில், வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்திய கிஷோர் இந்தப் படத்தில் நாயகனாக நடிருக்க, புதுமுகம் விஷ்வா, நீரஜா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
இவர்களுடன் கஞ்சா கருப்பு, சாரபாம்பு சுப்புராஜ், ‘கோலி சோடா’ பாண்டி, ‘பருத்தி வீரன்’ சுஜாதா, செந்தி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில், அகில இந்திய குங்ஃபூ தலைமை பயிற்சியாளர் மாஸ்டர் ராஜநாயகம் வில்லனாக நடித்துள்ளார்.
வேல் ஒளிப்பதிவில், ராஜா முகமது படத் தொகுப்பு செய்து, சௌந்தர்யன் இசையமைத்துள்ளார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி, அரங்கன் சின்னதம்பி இயக்குநராக அறிமுகமாகிறார்.
சென்னை அருகே ஆர்ட் டைரக்டர் கே.எம்.நந்தகுமார் அமைத்த பிரம்மாண்ட செட்டில் கிஷோர், மாஸ்டர் ராஜநாயகம் மோதும் க்ளைமேக்ஸ் சண்டைக் காட்சியை, ஸ்டண்ட் மாஸ்டர்’ மிரட்டல்’ செல்வா எடுத்துள்ளார்.
இன்றைய சமூக சூழலில், மாற்றங்கள் மட்டுமே மனிதனை நல்வழிபடுத்தும் என்னும் கருத்தில், ஒருவன் தன்னை மாற்றிக் கொள்ள எதையெல்லாம் இழக்கிறான் என்ற கருவோடு, இந்த ‘மஞ்ச குருவி’ படம் தயாராகியுள்ளது.
தற்போது படத்தின் இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. விராவில் இந்த ‘மஞ்ச குருவி’ படத்தின் இசையை விரைவில் வெளியிட, தயாரிப்பாளர் விமலா ராஜநாயகம் ஏற்பாடு செய்து வருகிறார்.
The post கிஷோர் கதையின் நாயகனாக நடிக்கும் ‘மஞ்ச குருவி’ appeared first on Touring Talkies.
]]>The post ‘U’ சான்றிதழோடு திரைக்கு வருகிறது ‘சிதம்பரம் ரெயில்வே கேட்’..! appeared first on Touring Talkies.
]]>இப்படத்தில் அன்பு மயில்சாமியுடன் மாஸ்டர் மகேந்திரன் இணைந்து நடித்துள்ளார். நீரஜா கதாநாயகியாக நடித்துள்ளார், இரண்டாம் நாயகியாக காயத்ரி நடித்துள்ளார். வில்லன் வேடத்தில் சூப்பர் சுப்புராயன் நடித்துள்ளார். மேலும், ‘லொள்ளு சபா’ மனோகர் மற்றும் ‘பிக் பாஸ்’ டேனியல், ஆகியோர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவை R.வேல் கையாண்டுள்ளார். படத் தொகுப்பை சுரேஷ் URS கையாண்டுள்ளார். கலை இயக்கத்தை மார்ட்டின் மேற்கொண்டுள்ளார். கார்த்திக் ராஜா சிறப்பாக இசையமைத்துள்ளார். மேலும் ‘இசைஞானி’ இளையராஜாவும் ஒரு பாடலைப் பாடியுள்ளார்.
இந்தப் படத்தைப் பார்த்தத் தணிக்கைக் குழு, படக் குழுவினரை பெரிதும் பாராட்டி படத்திற்கு ‘U’ சான்றிதழ் அளித்துள்ளது.
இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.
The post ‘U’ சான்றிதழோடு திரைக்கு வருகிறது ‘சிதம்பரம் ரெயில்வே கேட்’..! appeared first on Touring Talkies.
]]>