The post பான் இந்தியா இசையில் தடம் பதித்த டி ஆர்…! appeared first on Touring Talkies.
]]>‘வந்தே வந்தேமாதரம், வாழிய நமது பாரதம்’ பாடல் மூலம் தனது பேரன் மாஸ்டர் ஜேசன் உடன் இணைந்து தமிழ் மற்றும் இந்தி இசை உலகில் முத்திரை பதித்தார்
தனது உற்சாக மற்றும் உள்ளம் உருக்கும் இசை மூலம் பல படங்களுக்கு பிளாட்டினம் டிஸ்க் வாங்கிய இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர், கவிஞர் என்று பன்முகத்தன்மை கொண்ட ஆளுமையான டி ராஜேந்தர் பான் இந்தியா இசையில் முதல் முறையாக ஒரு மியூசிக் ஆல்பம் வெளியிட்டுள்ளார்.
தனது பேரன் மாஸ்டர் ஜேசன் உடன் இணைந்து அவர் உருவாக்கியுள்ள இந்த தேச பக்தி ஆல்பத்தை தனது டி ஆர் ரெக்கார்டஸ் மூலம் இன்று வெளியிட்டார்.
இது குறித்து பேசிய அவர், “ஆங்கில புத்தாண்டு 2023 சமீபத்தில் பிறந்துள்ளது. புத்தாண்டு இது புத்துணர்வு தரும் ஆண்டாக, புதுமைமிக்க ஆண்டாக, பூரிப்பு தரும் ஆண்டாக, மக்களுக்கு மன மகிழ்ச்சி தரும் ஆண்டாக இருக்க எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்து எனது வாழ்த்துகளை அனைவருக்கும் தெரிவித்து கொள்கிறேன்.
புத்தாண்டு மலர்ந்துள்ள தை மாதம் பிறந்துள்ள இந்த தருணத்திலே எனது டி ஆர் ரெக்கார்ட்ஸ் என்ற ஆடியோ மற்றும் மியூசிக் வீடியோ மலர்ந்துள்ளது என்கிற மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொள்கிறேன்.
ஒரு தலை ராகம், வசந்த அழைப்புகள், ரயில் பயணங்களில், ராகம் தேடும் பல்லவி, நெஞ்சில் ஒரு ராகம், உயிருள்ளவரை உஷா, தங்கைக்கோர் கீதம், உறவை காத்த கிளி, மைதிலி என்னை காதலி, ஒரு தாயின் சபதம், என் தங்கை கல்யாணி, சம்சார சங்கீதம், சாந்தி எனது சாந்தி, எங்கள் வீட்டு வேலன், பெற்றெடுத்த பிள்ளை, ஒரு வசந்த கீதம், தாய் தங்கை பாசம், மோனிஷா என் மோனாலிசா, சொன்னால் தான் காதலா, காதல் அழிவதில்லை, வீராசாமி… இப்படி என் படவரிசைகளில் எத்தனையோ பாடல்கள் இசையில் ரெக்கார்ட் பிரேக் பண்ணியிருக்கின்றன.
கிளிஞ்சல்களுக்காக பிளாட்டினம் டிஸ்க் வாங்கினேன், பூக்களை பறிக்காதீர்கள், பூ பூவா பூத்திருக்கு, பூக்கள் விடும் தூது, கூலிக்காரன் இவை அனைத்தும் ரெக்கார்ட் பிரேக். இப்படி ரெக்கார்ட் பிரேக் செய்த நான், என்னுடைய கம்பெனிக்கு டி ஆர் ரெக்கார்ட்ஸ் என்கிற பெயர் வைத்துள்ளேன்.
நான் படத்திற்காக பாட்டெழுதியுள்ளேன், கழகத்திற்காக, கட்சிக்காக, ஏன் காதலுக்காக, பாசத்துக்காக கூட பாட்டெழுதியுள்ளேன். இப்பொழுது முதன் முதலாக இந்த பாரத தேசத்திற்காக ஒரு பாட்டு ‘வந்தே வந்தேமாதரம், வாழிய நமது பாரதம்’ என்கிற பாடலை அகில இந்திய கான்செப்டில் தமிழ் மற்றும் இந்தியில் உருவாக்கியுள்ளேன்,” என்று கூறியுள்ளார்.
மேலும், தனது புதிய முயற்சிக்கு நாடெங்கிலும் உள்ள மக்கள் தங்களது பேராதரவை வழங்குவார்கள் என்று டி ஆர் நம்பிக்கை தெரிவித்தார்.
உஷா ராஜேந்தர், ஆர்ஆர் மூவிஸ் ரமேஷ் மற்றும் கின்னஸ் பாபு கணேஷ் ஆகியோருடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த தேசபக்தி பாடலின் டிஜிட்டல் பார்ட்னர் பிலீவ் ஆகும்.
The post பான் இந்தியா இசையில் தடம் பதித்த டி ஆர்…! appeared first on Touring Talkies.
]]>The post அஜய் கிருஷ்ணா-ஸ்மிருதி வெங்கட் நடித்திருக்கும் ‘ரகட் பாய் காதல்’ இசை ஆல்பம் appeared first on Touring Talkies.
]]>ஒரு திரைப்படக் கதைக்கான முன்னோட்டமாக இந்த இசை ஆல்பம் உருவாகி இருக்கிறது. மூவி மெக்கானிக் நிறுவனம் இந்த ஆல்பத்தைத் தயாரித்துள்ளது.
இதில் கதாநாயகனாக நடித்துத் தயாரித்துள்ளவர் அஜய் கிருஷ்ணா. இவர் ‘நாடோடிகள்’, ‘நிமிர்ந்து நில்’, ‘போராளி’, ‘தரணி’, ‘அனுக்கிரகன்’, ‘கடப்புறா கலைக் குழு’ போன்ற படங்களில் நடித்துள்ளார். ‘கட்டம் போட்ட சட்டை’ என்கிற படத்தையும் தயாரித்து வருகிறார்.
இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளவர் ஸ்மிருதி வெங்கட். இவர் ‘மூக்குத்தி அம்மன்’, ‘வானம்’, ‘தீர்ப்புகள் விற்கப்படும்’, ‘மாறன்’, ‘மன்மத லீலை’, ‘தேஜாவு’ போன்ற படங்களில் நடித்திருப்பவர்.
இசை அமைத்திருப்பவர் டி.எம்.உதயகுமார். இவர் ‘பிரண்ட்ஷிப்’, ‘மை டியர் லிசா’ ஆகிய படங்களில் பணிபுரிந்தவர். அது மட்டுமல்ல ‘குழலி’, ‘கார்முகில்’ போன்ற மியூசிக் ஆல்பங்களுக்கு இசையமைத்தவர்.
இந்த ஆல்பத்தில் பின்னணிப் பாடல் பாடி இருக்கும் பாடகி பிரியங்கா, ‘அவன் இவன்’, ‘உறியடி-2’, ‘பலூன்’, ‘நாச்சியார்’ போன்ற படங்களில் பாடியுள்ளார்.
இதில் பின்னணிப் பாடி இருக்கும் பாடகரான ஜித்தின் ராஜ் ‘பொன்னியின் செல்வன்’ மலையாள வடிவத்தில் பாடி இருப்பவர்.
ஆல்பத்தின் பாடலை எழுதியவர் ராஜா குருசாமி. இவர் ஏராளமான கிராமியப் பாடல்களை எழுதியுள்ளவர். ‘விழா’, ‘பிரண்ட்ஷிப்’, ‘ராஜ வம்சம்’, ‘பபூன்’ போன்ற படங்களிலும் பாடல்கள் எழுதியுள்ளவர்.
இந்த ஆல்பத்திற்கு ஒளிப் பதிவு செய்துள்ளவர் அருண்குமார்.ஆர். இவர் ‘அச்சமில்லை அச்சமில்லை’ என்கிற படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர். ஒளிப்பதிவாளர் ராம்ஜியிடம் ‘பருத்தி வீரன்’, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘மயக்கம் என்ன’ போன்ற படங்களில் பணியாற்றியவர்.
இந்த ஆல்பம் பாடலுக்கு நடனம் அமைத்துள்ளவர் மணி டான்ஸ் ஸ்டுடியோ உரிமையாளரான எம்.மணிகண்டன். இவர் இதில் ஒரு நடன இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். கலை இயக்கம் – கென்னடி, படத் தொகுப்பு – கணேஷ் குமார், டைட்டில் டிசைன்ஸ் – பிரபு மாணிக்கம், நிர்வாகத் தயாரிப்பு – சித்தார்த்தன் பாரதி, பத்திரிகை தொடர்பு – சக்தி சரவணன்.
இந்த இசை ஆல்பத்தை இயக்கியுள்ளவர் ஸ்ரீவித்தகன். இவர் இயக்குநர் சமுத்திரக்கனியிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். ‘நாடோடிகள்’, ‘நிமிர்ந்து நில்’, ‘போராளி’, ‘வினோதய சித்தம்’ போன்ற படங்களில் பணிபுரிந்தவர்.
பொதுவாக ஆல்பம் என்றாலே நகரப் பின்னணியில் உருவாவதுண்டு. இது ஒரு கிராமத்துக் காதல் கதை. கிராமியப் பின்னணியில் அழகுற காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
ஒரு பதின் பருவக் காதலால் புலி ஒன்று எப்படி பூனையாக மாறுகிறது என்பதுதான் இந்த ஆல்பத்தின் கதைக் கரு.
பொறுப்பின்றி கோயில் காளையாக முரட்டுத்தனமாக அடங்காதவனாக வேலையின்றி பொறுப்பின்றித் திரியும் ஒரு கிராமத்து வாலிபன் காதலில் விழுகிறான். கட்டுக்கடங்காத காளையாக இருந்தவனைக் காதல் எப்படிக் கட்டுத்தறிக் காளையாக மாற்றுகிறது என்பதுதான் இந்தப் பாடலின் மையக் கருத்து.
திருவள்ளூர், திருநின்றவூர், பூண்டி அணைக்கட்டு போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.
இந்த இசை ஆல்பத்தை நடிகரும், இயக்குநருமான சசிகுமார் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார். அதேபோல் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் வெளியிட்டுள்ளார்.
அதன் பிறகு இந்த ஆல்பத்தின் மீதான கவனிப்பும், பரவலின் வீச்சும் அதிகமாகி உள்ளது. ஆயிரக்கணக்கான இசை ரசிகர்கள் இதைப் பார்த்து ரசிக்க ஆரம்பித்துள்ளனர்.
தற்போது இந்த மியூஸிக் ஆல்பம் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்கிலும் இடம் பிடித்துள்ளது. ஸ்டார் மியூசிக்கில் வெளியாகி பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.
The post அஜய் கிருஷ்ணா-ஸ்மிருதி வெங்கட் நடித்திருக்கும் ‘ரகட் பாய் காதல்’ இசை ஆல்பம் appeared first on Touring Talkies.
]]>The post கார்த்திகை திட்டிய இளைய ராஜா…! appeared first on Touring Talkies.
]]>அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் கார்த்திக்.இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. நகைசுவை கலந்த கதாநாயகனாகவும் காலப்போக்கில் தனது நடிப்பு மாற்றிக்கொண்டார் கார்த்திக்.
இவரது படத்திற்கு பெரும்பாலும் இளையராஜா தான் இசையமைப்பாளராக இருந்தார். பல வெற்றிப் பாடல்களை கொடுத்தவர். தனது இசையால் ரசிகர்கள் மனதை வசியம் செய்து வைத்துள்ள மாயக்காரர் இளையராஜா.
ஒரு மேடையில் கார்த்திக் நடந்து கொண்டது பிடிக்கமல் இளையராஜா நீ ஒரு ஹீரோ இப்படி காமெடியன் போல் நடந்து கொள்கிறாய். என அனைவரின் முன்னிலையில் அவரை திட்டிவிட்டார்.
கோபத்தில் அக்கரை இருப்பதை புரிந்து கொண்ட கார்த்திக் முகம் சுழிக்காமல் சிரித்துக் கொண்டே தலையாட்டினார்.
The post கார்த்திகை திட்டிய இளைய ராஜா…! appeared first on Touring Talkies.
]]>The post ‘உச்சிமலை காத்தவராயன்’ பாடலுக்காக நடந்த சுவையான பட்டிமன்றம் appeared first on Touring Talkies.
]]>இந்நிலையில் நடிகர் ஆர்.ஜே.விஜய், மா.கா.பா.ஆனந்த் மற்றும் ஆஷ்னா ஜாவேரி நடிப்பில் ‘உச்சிமலை காத்தவராயன்’ பாடலை அறிமுகப்படுத்துவதற்காக, திரையுலக பிரபலங்களுக்கு இடையே நடைபெற்ற பட்டிமன்றத்தின் முன்னோட்ட காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது.
இசையமைப்பாளர் ஆனிவீ இசையில், இயக்குநர் டோங்லீ இயக்கத்தில், நடிகை ஆஷ்னா ஜாவேரி, மா.கா.பா. ஆனந்த் மற்றும் ஆர்.ஜே.விஜய் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘உச்சிமலை காத்தவராயன்’ எனும் பாடலை சரிகம நிறுவனம் வெளியிடுகிறது.
இதற்காக ரசிகர்களை ஆர்வமூட்டும் வகையில், திரை பிரபலங்களான நடிகர் மா.கா.பா.ஆனந்தும், நடிகர் ஆர்.ஜே.விஜயும் தனித்தனி அணியாக பிரிந்து பட்டிமன்றம் நடத்தினர். இதற்கு முன்னதாக ட்வீட்டரில் இருவரும் சுவராசியமான கருத்து மோதல்களில் ஈடுபட்டனர்.
நடிகை ஆஷ்னா ஜாவேரி தனது புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இதனை பார்வையிட்ட நடிகரும், பாடலாசிரியருமான ஆர். ஜே.விஜய், “அழகே பொறாமைப்படும் பேரழகு..” என பதிவிட்டார்.
உடனடியாக மா.கா.பா.ஆனந்த் ட்விட்டரில், ”தம்பி இது ரொம்ப பழைய விசயம்” என பதிவிட்டதுடன், ”தம்பி அடிபட்டா தேவை மெடிக்கல் கிட்டு.. ஆஷ்னாவ கரெக்ட் பண்ண தேவை ஒரு செமையான ட்வீட்டு.. நீ போயிரு இந்த ஏரியாவை விட்டு..” என பதிவிட்டார்.
பதிலுக்கு ஆர்.ஜே.விஜய் ட்விட்டரில்.. ”க்யூட்டுக்கு எதுக்கு ட்வீட்டு? ஆஷ்னாதான் என்னோட ஹார்ட் பீட்டு” என என பதிவிட்டு, மோதலை தொடங்கினார்.
“மழை வந்தா தேவ அம்பர்லா; பெண்ணே நீதான் மை சிண்ட்ரெல்லா..” என்ற வரிகளைக் குறிப்பிட்டு, இசையமைப்பாளர் ஆனிவீ தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நடிகை ஆஷ்னா ஜாவேரியின் பிரத்யேக புகைப்படத்தைப் பதிவிட்டார்.
இவர்களின் தீவிரமான மோதலைக் கண்ட இயக்குநரும், தயாரிப்பு நிறுவனமும், ‘வாங்க பேசிக்கலாம்’ என சமாதான ட்வீட்டை பதிவிட்டது.
பிறகு இருவருக்கும் இடையே ‘ஆஷ்னாவிற்காக’ பட்டிமன்றம் நடைபெற்றது. இந்தப் பட்டிமன்றத்தின் இரு அணிகளும் ரைமிங் வேர்ட்ஸ்களாலும், டைமிங் வேர்ட்ஸ்களாலும் மோதிக் கொண்டன.
‘உச்சிமலை காத்தவராயன்’ பாடலுக்காக ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வகையில் நடைபெற்ற இந்த பட்டிமன்றத்தின் முன்னோட்ட காணொளி தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. விரைவில் பாடல் வெளியாகிறது.
பாடலை ரசிகர்களிடம் வித்தியாசமான முறையில் அறிமுகப்படுத்திய படக் குழுவினரின் முயற்சியை இணையவாசிகளும், திரையுலகினரும் பாராட்டுகிறார்கள்.
The post ‘உச்சிமலை காத்தவராயன்’ பாடலுக்காக நடந்த சுவையான பட்டிமன்றம் appeared first on Touring Talkies.
]]>The post “வாக்காளர் அட்டை வைத்திருப்பவர்களெல்லாம் சினிமா வாய்ப்பு கேக்குறாங்க” – நடிகர் ‘காதல்’ சுகுமார் பேச்சு appeared first on Touring Talkies.
]]>சென்னையில் நேற்று மாலை நடந்த ஒரு இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் பேசும்போது ‘காதல்’ சுகுமார் இதைத் தெரிவித்தார்.
அவர் மேலும் பேசும்போது, “வீட்டைக் கட்டிப் பார்; கல்யாணம் பண்ணிப் பார்’ என்பது போல் ‘சினிமா எடுத்துப் பார்’ என்றும் சொல்லலாம். சினிமா எடுப்பது அவ்வளவு சிரமமானது. நான் 200 படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால், இன்னமும் சினிமாவின் வெற்றிக்கான சூட்சுமம் எனக்குப் புரியவில்லை.
இப்போது ஏராளமான பேர் வாய்ப்பு கேட்டு வருகிறார்கள். வாக்காளர் அட்டை உள்ளவர்கள் எல்லாம் வாய்ப்பு தேடி வந்து விட்டார்கள். அந்த அளவிற்குப் போட்டி நிறைந்ததாக இருக்கிறது சினிமாவுலகம்.
எனவே தயாரிப்பாளர் அருண் குமாரசாமி அவர்கள் சினிமாவை நன்றாகத் தெரிந்து கொண்டு படம் தயாரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இங்கே அறிவுரை சொல்வதற்கு நிறைய ஆட்கள் இருக்கிறார்கள். அதேபோல தவறாக வழிகாட்டுபவர்கள்கூட இங்கு அதிகம். எனவே சரியான நபர்களைக் தேர்ந்தெடுத்து அவர் படம் எடுக்க வேண்டும்…” என்று கூறினார்.
The post “வாக்காளர் அட்டை வைத்திருப்பவர்களெல்லாம் சினிமா வாய்ப்பு கேக்குறாங்க” – நடிகர் ‘காதல்’ சுகுமார் பேச்சு appeared first on Touring Talkies.
]]>The post அஸ்வின் குமார், அஞ்சு குரியன் நடித்திருக்கும் ‘வாடி வாடி’ இசை ஆல்பம் appeared first on Touring Talkies.
]]>அந்த வகையில் இந்த Think Originals நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ‘வாடி வாடி’ வீடியோ பாடல் இன்று வெளியானது..!
இந்தப் பாடலுக்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார்.
இப்பாடல் அதன் அற்புதமான இசை மற்றும் அசத்தலான காட்சிகளுக்காக ரசிகர்களை கவர்ந்திழுத்திருக்கிறது.
ஹாரிஸ் ஜெயராஜின் அற்புதமான இசைக் கோர்வை மற்றும் பாடலாசிரியர் விவேகாவின் நவநாகரீக பாடல் வரிகள் ரசிகர்களை ஈர்க்கும் அம்சமாக அமைந்துள்ளன.
அஸ்வின் குமார், லக்ஷ்மிகாந்தன் மற்றும் அஞ்சு குரியன் ஆகியோரின் அழகான நடிப்பு கெமிஸ்ட்ரி மனதை கொள்ளை கொள்கிறது.
ஒளிப்பதிவு நாயகன் ஆர்.டி.ராஜசேகர் தனது அற்புதமான ஒளிப்பதிவின் மூலம் பாடலுக்கு வலிமை சேர்த்துள்ளார். தமிழ் ஆல்பங்களிலேயே மிக பிரம்மாண்டமாக படமாக்கப்பட்ட முதல் தமிழ் வீடியோ பாடல் ‘வாடி வாடி’ என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ‘வாடி வாடி’ பாடலை கார்த்திக் அரசகுமார் இயக்கியுள்ளார். ஒளிப்பதிவை ஆர்.டி.ராஜசேகர் ISC யும், படத்தொகுப்பை ஆண்டனியும் செய்துள்ளனர். இந்த பாடலுக்கு சாண்டி நடனம் அமைத்துள்ளார். பாடல் வரிகளை விவேகா எழுதியுள்ளார்.
D.R.K.கிரண் (கலை இயக்கம்), போற்றி பிரவின் (காஸ்ட்யூம் டிசைனர்), விக்னேஷ் (இணை இயக்கம்), காமராஜ் (நிர்வாகத் தயாரிப்பாளர்), சரஸ்வதி (நிர்வாக மேலாளர்), திலீப் போர்கர் & ஆகாஷ் போர்கர் (லைன் புரடியூசர்ஸ்) மற்றும் சுரேஷ் சந்திரா-ரேகா D’One (பத்திரிகை தொடர்பு).
The post அஸ்வின் குமார், அஞ்சு குரியன் நடித்திருக்கும் ‘வாடி வாடி’ இசை ஆல்பம் appeared first on Touring Talkies.
]]>The post 12 மொழிகளில் உருவாகும் 75-வது சுதந்திர தின பாடல் ‘பெருங்காற்றே’ appeared first on Touring Talkies.
]]>இந்த ஆல்பம் பற்றிய அறிமுக நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில், தி.நகர் ரெசிடென்ஸி ஹோட்டலில் நடைபெற்றது.
அப்போது இதனைத் தயாரிக்கும் சக்ரா அறக்கட்டளையின் நிறுவனர் ‘சக்ரா’ ராஜசேகர் இது குறித்து விரிவாகப் பேசினார்.
அவர் பேசும்போது, “இந்தியாவின் சுதந்திர தின 75-வது ஆண்டு கொண்டாட்டங்கள் வரும் ஆகஸ்டு 15-லிருந்து துவங்குகிறது.
‘கப்பலோட்டிய தமிழன்’ என்று புகழப்படும் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150-வது பிறந்த நாள் கொண்டாட்டமும் வரும் செப்டம்பர் 5-ம் தேதியிலிருந்து தொடங்குகிறது.
இந்திய சுதந்திர போருக்கு எப்படி தமிழ்நாடு முன்னோடியாக திகழ்ந்ததோ, அதுபோல இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்திற்கும், தமிழ்நாடு முன்னோடியாக திகழ்ந்து வருகிறது.
50-வது சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் இசையில் வைரமுத்து அவர்களின் வரிகளில் பரத்பாலா அவர்களின் இயக்கத்தில், ‘தாய் மண்ணே வணக்கம்’ – ‘வந்தே மாதரம்’ என்ற பாடல் வெளியிடப்பட்டு இந்திய அளவில் பிரபலமானது.
வரும் 75-வது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தில் தமிழர்களின் தியாகத்தை உணர்த்தும்விதமாகவும் இந்தியாவெங்கும் இருக்கும் சுதந்திர வீரர்களின் பெருமைகளை போற்றும்படியும் ஏ.ராஜசேகர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் அருண்ராஜா காமராஜ் வரிகளில் ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவில் பிரம்மாண்டமாக மற்றுமொரு பாடல் உருவாகிறது.
தமிழில் தொடங்கி இந்தியாவில் திரைப்படங்கள் உருவாகும் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, ஒரியா, மராட்டி, பெங்காலி, போஜ்புரி, பஞ்சாபி, குஜராத்தி, கொங்கனி உள்ளிட்ட 12 மொழிகளில் இந்த பாடல் உருவாகிறது.
இந்தியாவில் உள்ள முன்னணி திரைப்பட கலைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் இப்பாடல் உருவாக்கத்தில் பங்கு கொள்ளவிருக்கிறார்கள்.
கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை இயற்கை எழில் கொஞ்சும் பல்வேறு இடங்களிலும் வரலாற்று சிறப்புமிக்க இடங்களிலும் இப்பாடல் படமாக்கப்பட இருக்கிறது.
இந்தியாவில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் காட்சி ஊடகங்களிலும் இப்பாடல் திரையிடப்பட இருக்கிறது.
இப்படப்பிடிப்பின் சிறப்பு நிகழ்வாக கனெக்டிங் இந்தியா வித் கலர்ஸ் (Connecting India With Colors) என்ற தலைப்பில் உலக சாதனை முயற்சியாக 6 கி.மீ. நீளத்திற்கு கேன்வாஸ் பெயிண்டிங் (Canvas Painting) வரையப்படுகிறது.
தமிழகம் தொடங்கி இந்தியாவெங்கும் சுதந்திரத்திற்காக போராடிய வீரர்களின் வரலாற்று நிகழ்வுகள் வரையப்படுகிறது, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 75 முன்னணி ஓவியக்கலைஞர் வரைகிறார்கள்.
இந்த உலக சாதனையை (Guinness book of records, limca book of records and Asian book of records) -ல் பதிவு செய்யப் போகிறோம்.
இந்த பாடலின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் (FIRST LOOK MOTION POSTER) வெளியீடு வரும் செப்டம்பர் 5-ல் தொடங்கும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150-வது ஆண்டு விழாவில் வெளியிடப்பட இருக்கிறது.
இவ்விழாவில், வ.உ.சி. எழுதிய அனைத்து நூல்களையும் உள்ளடக்கிய வ.உ.சி பெட்டகம்’ வெளியிடப்பட இருக்கிறது.
வ.உ.சி-யின் 150-வது ஆண்டை குறிக்கும் பொருட்டு உலகெங்கும் இருக்கும் 150 தமிழ் ஆளுமைகள் எழுதும் ‘வ.உ.சி 150’ என்ற புத்தகம் வெளியிடப்படவிருக்கிறது.
இந்தியாவில் உள்ள சுதந்திர போராட்ட வீரர்களில் வ.உ.சிதம்பரனார் அவர்களுக்குத்தான் முதன் முதலில் அரசியல் வாழ்க்கை வரலாறு 1906-ல் எழுதப்பட்டது.
வெள்ளையர்களால் இந்தியாவில் தடை செய்யப்பட்டு லண்டன் அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுவிட்ட அந்த நூலை மீட்டெடுத்து (நூலகர் மற்றும் ஆய்வாளர் திரு.ரங்கையா முருகன்) தமிழில் ‘தமிழ் பெருஞ்சொல் வ.உ.சி.’ என்றும் ஆங்கிலத்தில் ‘தி பிக் வேர்ட் வி.ஒ.சி. THE BIG WORD V.O.C.’ என்ற பெயரிலும் வெளியிடுகிறோம்.
இவையனைத்தும் ஆடியோ புத்தகமாகவும் (AUDIO BOOK ), வீடியோ புத்தகமாகவும் (VIDEO BOOK), கிண்டில் வர்ஷனாகவும் (KIDLE VERSION) வ.உ.சி. செயலியாகவும் (V.O.C. MOBILE APP) இலவசமாக டிஜிட்டலில் பதிவேற்றுகிறோம்…” என்று பேசினார்.
இந்த விழாவில் ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள்.
இந்த மாபெரும் இந்நிகழ்வை நல்லறிஞர்களின் துணை கொண்டு சக்ரா அறக்கட்டளை நிறுவனர் சக்ரா ராஜசேகர் மற்றும் விதை புத்தக வெளியீட்டு நிறுவனர் ஆ.சுப்ரமணியன் இணைந்து முன்னெடுத்திருக்கிறார்கள்.
The post 12 மொழிகளில் உருவாகும் 75-வது சுதந்திர தின பாடல் ‘பெருங்காற்றே’ appeared first on Touring Talkies.
]]>The post கரோனா நெருக்கடியில் வெளியாகியிருக்கும் நம்பிக்கையூட்டும் பாடல் ’போட்டும் போகட்டுமே’ appeared first on Touring Talkies.
]]>‘போட்டும் போகட்டுமே’ என்று தலைப்பிட்டுள்ள வீடியோ பாடலில் நடிகர் அர்ஜூன் தாஸும், நடிகை லாவண்யா திரிபாதியும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – பிரிட்டோ, படத் தொகுப்பு – ஆகாஷ், இசை – ஜென், சத்யா, காட்சி இயக்கம் – அசோக் மாஸ்டர், ஆடை வடிவமைப்பு – ஸ்ருதி, VFX – Real Works Studios, இயக்கம் – லோகி.
இந்த வீடியோ பாடல் பற்றி நாயகன் அர்ஜூன் தாஸ் பேசும்போது, “இந்த ’போட்டும் போகட்டுமே’, பாடல் அன்பு, நம்பிக்கை, மன உறுதி, வலிமையை வலியுறுத்துகிறது. உண்மையான அன்பு எல்லாவற்றையும் வெல்லும்.
இதை உருவாக்குவதன் பின்னணியில் நிறைய பேரின் கடினமான உழைப்பு இருக்கிறது. இந்த கடினமான நேரத்தில் இந்த வீடியோ உங்கள் ஆன்மாவிலிருந்து நிம்மதியைக் கொணர்ந்து முகத்தில் மகிழ்ச்சியைக் கொண்டு வரச் செய்யும். இந்த கடினமான காலகட்டத்தைக் கடக்க அதீத அன்பை உங்களுக்கு உரித்தாக்குகிறேன்…” என்றார்.
படத்தில் நடித்திருக்கும் நடிகை லாவண்யா திரிபாதி பேசும்போது, “நாம் இந்தக் கொரோனா காலத்தில் தைரியமாக இருக்க வேண்டும். இந்தப் ’போட்டும் போகட்டும்’ பாடலும் அதைத்தான் வலியுறுத்துகிறது. அன்பானவர்களை இழப்பது மிகப் பெரிய துயரம். ஆனாலும் நம்பிக்கையை இழக்கக் கூடாது. இதுவும் கடந்து போகும் என்ற எண்ணம் நமக்குள் வேண்டும்…” என்றார்.
The post கரோனா நெருக்கடியில் வெளியாகியிருக்கும் நம்பிக்கையூட்டும் பாடல் ’போட்டும் போகட்டுமே’ appeared first on Touring Talkies.
]]>