The post ‘மூக்குத்தி அம்மன்’-‘சூரரைப் போற்று’ படங்கள் தியேட்டர்களுக்கு வருமா..? appeared first on Touring Talkies.
]]>ஆனால், தியேட்டர் உரிமையாளர்களோ “படங்களை தியேட்டரில் மட்டுமே வெளியிட வேண்டும். ஓடிடிக்கு சென்றால் அவற்றை தியேட்டரில் வெளியிட மாட்டோம்…” என்று அடம் பிடிக்கிறார்கள். இந்தப் பிடிவாதத்தால் பல திரைப்படங்களின் வசூலும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே ஓடிடியில் வெளியிடப்பட்ட பல திரைப்படங்கள் மிக அதிகப் பார்வையாளர்களை சந்திக்காமல் தடுமாறினாலும், கடைசியாக வெளியான ‘மூக்குத்தி அம்மன்’, மற்றும் ‘சூரரைப் போற்று’ திரைப்படங்கள் ஒரு குறிப்பிடத்தக்க அளவிலான பார்வையாளர்களைப் பெற்றுள்ளன.
ஆனாலும், இந்தப் படங்களைப் பார்க்க முடியாத தமிழர்கள் கோடிக்கணக்கில் தமிழ்நாட்டில் உள்ளனர். அவர்களைத் திருப்திப்படுத்தவும், தியேட்டர்களுக்கு வர மறந்து போயிருக்கும் சினிமா ரசிகர்களை தியேட்டர்களுக்கு மீண்டும் வரவழைக்கவும் இந்தப் படங்களை தியேட்டர்களில் வெளியிட வேண்டும்.
இதனால் தியேட்டர்காரர்களுக்கும் வசூல் அள்ள வாய்ப்புண்டு. ஏனெனில் சமீபத்திய இந்த இரண்டு படங்களைப் பற்றியும் சமூக வலைத்தளங்களில் மிகப் பெரிய விளம்பரம் கிடைத்திருக்கிறது. இந்த விளம்பரத்தை தியேட்டர்காரர்கள் பயன்படுத்திக் கொண்டால் அவர்களுக்கும் நல்லதுதான்.
இதேபோல் அடுத்தடுத்து படங்களை வெளியிடும்போது அவற்றுடன் ஓடிடி தளத்திலும் வெளியிடுவதற்கு தியேட்டர்காரர்கள் ஆட்சேபணை தெரிவிக்காமல் இருந்தால் தமிழ்த் திரைப்படத் துறைக்கு மிகப் பெரிய உதவியாக இருக்கும்.
ஏற்கெனவே தியேட்டர்களில் தற்போது பாதி டிக்கெட்டுகள்தான் தரப்படுகிறது. இது பெரிய பட்ஜெட் படங்களுக்கு போதவே போதாது. அதே சமயம் அவர்களுக்கும் நிதி நெருக்கடி இல்லாமல் அடுத்தடுத்த படங்களைத் தயாரிக்கும் வாய்ப்பு வேண்டுமெனில் போட்ட காசாவது திரும்ப வர வேண்டும். அதற்கு தியேட்டர் வசூல் மட்டுமே போதாது.
எனவே, தியேட்டர்காரர்கள் மனம் வைத்து ஓடிடியிலும் படங்களை வெளியிட்டுக் கொள்ளுங்கள் என்று கூறினால்தான் பெரிய பட்ஜெட் தயாரிப்பாளர்கள் பிழைப்பார்கள். இல்லையேல்.. தயாரிப்பாளர்கள் நலிவடைய.. தொடர்ந்து தியேட்டர்காரர்களும் நலிவடைவார்கள்..!
இரு தரப்பினரும் இதைப் புரிந்து கொண்டு செயலாற்றினால் திரைப்படத் துறைக்கே நலம் பயக்கும்..!
The post ‘மூக்குத்தி அம்மன்’-‘சூரரைப் போற்று’ படங்கள் தியேட்டர்களுக்கு வருமா..? appeared first on Touring Talkies.
]]>The post ‘மூக்குத்தி அம்மன்’ படத்திற்கு எதிர்ப்பு வலுக்கிறது..! appeared first on Touring Talkies.
]]>படத்தில் ஆர்.ஜே.பாலாஜியின் குல தெய்வமான ‘மூக்குத்தி அம்மன்’ தன்னை வணங்காமல் திருப்பதி சென்று பெருமாளை கும்பிட நினைக்கும் பாலாஜியின் குடும்பத்தினரைக் கண்டிக்கிறார். “இது இந்து மத தெய்வங்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தும் முயற்சி..” என்கிறார்கள் இந்து மதப் பற்றாளர்கள்.
“திருப்பதிக்குப் போனால் லட்டு கிடைக்கும்.. பழனிக்குப் போனால் பஞ்சாமிர்தம் கிடைக்கும். இதற்காகத்தான் அங்கே கூட்டம் ஓடுகிறது…” என்று ஒரு வசனத்தை நயன்தாரா பேசுவார். இது அந்தக் கோவில்களுக்குச் செல்லும் உண்மையான பக்தர்களை மிகவும் கேவலப்படுத்துவதாக கொதித்தெழுந்துள்ளனர் பெருமாள் மற்றும் முருக பக்தர்கள்.
அதோடு படத்தில் இடம் பெற்றிருக்கும் ஒரு சாமியார் இந்து மதத்தை வைத்து சட்ட விரோதக் காரியங்களை செய்வது போலவும் “கடவுளுக்கும், பக்தனுக்கும் இடையில் எப்போதும் ஒரு புரோக்கர் தேவையில்லை…” என்று குலதெய்வ சாமி சொல்வது போலவும் படத்தை முடித்திருக்கிறார்கள். இது இந்து மதத்தின் பிரதிநிதிகளாக இருக்கும் சாமியார்களை கேவலைப்படுத்துவதாக உள்ளது என்கிறார்கள் இந்து மத அமைப்புகளின் தலைவர்கள்.
கூடவே, படத்தில் இடம் பெற்றிருந்த கிறித்துவ மோசடி ஜெப கூட்டம் பற்றிய காட்சிகளை வேண்டுமென்று பட வெளியீட்டுக்கு முன்பேயே வெளியிட்டுவிட்டு.. படத்தில் அதை நீக்கம் செய்திருப்பது இயக்குநரின் உள்நோக்கம் சார்ந்த செயல் என்று கொதிக்கிறார்கள் இந்து மத ஆதரவாளர்கள்.
“மாற்று மதத்தில் நடக்கும் அக்கிரமங்களையும், அநியாயங்களையும் மட்டும் வெளிச்சத்துக்குக் கொண்டு வராத இந்த சினிமா இந்து மதத்தை மட்டும் கேவலப்படுத்துவது ஏன்..? உண்மையான பக்தர்களாக இருந்தால் அனைத்து மதங்களிலும் இருக்கும் திருட்டுக் கும்பல்களை அடையாளம் காட்ட வேண்டியதுதானே..? ஏன் இந்து மதம் மட்டும்தான் இவர்களுக்குக் கிடைத்ததா…?” என்கிறார்கள்.
“அதிலும் நயன்தாரா என்ற கிறிஸ்துவப் பெண்ணை இந்து மதத்தின் குல தெய்வ சாமியாக்கி.. அந்தப் பெண்ணின் மூலமாக இந்து மதத்தின் பிற தெய்வங்களை கிண்டல் செய்திருப்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று…” என்று இந்து மத அமைப்புகளின் தலைவர்கள் குமுறியுள்ளனர்.
சத்குரு ஜக்கி வாசுதேவைஅடையாளப்படுத்தும்விதத்தில் படத்தில் இடம் பெற்றிருக்கும் சாமியார் வேடத்தில் அஜய் கோஷ் நடித்திருக்கிறார். ஜக்கி வாசுதேவின் ஆசிரமம் இருக்கும் இடம் கோவையை அடுத்த ‘வெள்ளியங்கிரி’ மலை. இந்தப் படத்தில் அஜய் கோஷின் ஆசிரமம் அமையும் இடம் ‘வெள்ளிமலை’. ஜக்கி வாசுதேவை பல இடங்களில் கிண்டல் செய்யும் காட்சிகள் படத்தில் இடம் பெற்றுள்ளன.
ஆனால், மனோபாலா நடித்த கிறிஸ்துவ ஜெபக் கூட்டத்தை மட்டும் தயாரிப்பாளர் தரப்பே நீக்கியிருப்பதால் இந்து மதத்தில் இருந்து கொண்டே இந்து மதத்தைக் கிண்டல் செய்திருக்கும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள் இந்து மதத் தலைவர்கள்.
தற்போது ஐசரி கணேஷ் திருப்பதி பெருமாள் கோவிலின் நிர்வாகக் கமிட்டியில் ஒரு உறுப்பினராக இருக்கிறார். “அவர் உறுப்பினராக இருக்கும் கோவிலையே அவர் தயாரிக்கும் படத்தில் எப்படி கிண்டல் செய்யலாம்…? எனவே அவரை அந்தப் பதவியில் இருந்து விலக்க வேண்டும்…” என்று கேட்டு இந்து மத அமைப்புகள் தற்போது போர்க்கொடி தூக்கிவிட்டன.
இனி இதை வைத்துதான் அடுத்தடுத்த நிகழ்வுகள் தமிழ்ச் சினிமாவில் நடைபெறும் என்பதால் திரையுலகம் அடுத்து என்ன நடக்கும் என்று எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கிறது.
The post ‘மூக்குத்தி அம்மன்’ படத்திற்கு எதிர்ப்பு வலுக்கிறது..! appeared first on Touring Talkies.
]]>The post நயன்தாரா 3 வேடங்களில் நடிக்கும் புதிய திரைப்படம் appeared first on Touring Talkies.
]]>அதில் ‘அம்மன்’ வேடத்தில் நயன்தாரா ஏற்றிருந்த கதாபாத்திரம் அனைவரும் ரசிக்கப்பட்டுள்ளது. கேரக்டருக்காக அல்லாமல் அந்த ‘அம்மன்’ தோரணையில் நயன்தாராவின் அழகும், சிரிப்பும் பார்ப்பவர்களை கவர்ந்திழுத்துள்ளது.
பொதுவாக நயன்தாரா போன்ற நடிகைகள் இதற்கு முன்பாக பல படங்களில் அரைகுறை ஆடைகளில் குத்தாட்டம் போட்டிருப்பதால் அவர் ‘அம்மன்’ வேடத்தில் நடிக்கலாமா என்றெல்லாம் வெளியில் விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தன.
இது இன்று நேற்றல்ல.. பல ஆண்டுகளாகவே தமிழ்த் திரையுலகத்தில் எழுப்பப்பட்டு வருகிறது.
அம்மன் படங்களுக்கே அத்தாரிட்டியாக இருந்த மூத்த நடிகையான கே.ஆர் விஜயா ‘பட்டணத்தில் பூதம்’ படத்தில் ஸ்விம்மிங் டிரெஸ்ஸில் ஒரு பாடல் காட்சியில் நடித்திருந்தார். இந்தப் படத்திற்குப் பின்புதான் ‘கந்தன் கருணை’,’ திருமால் பெருமை’, ‘ஆதி பராசக்தி’, ‘சக்தி லீலை’, ‘தேவி கருமாரியம்மன்’ போன்ற கடவுளர் கதை கூறும் படங்களில் ‘அம்மன்’ வேடத்தில் நடித்தார். இதை ரசிகர்கள் முழுமையாக ஏற்றுக் கொண்டார்கள்.
தெலுங்குலகில் கவர்ச்சியின் எல்லைக்கே சென்றுவிட்ட ராதா, ரம்பா, ரம்யா கிருஷ்ணன், மீனா போன்றோரும் இதே போல் பிற்காலத்தில் ‘அம்மன்’ வேடத்தில் நடித்துப் புகழ் பெற்றனர்.
நயன்தாராவின் இந்தப் புகழுக்குக் காரணம் அவருடைய அழகுதான். அதிலும் அம்மன் வேடத்திற்குக் கச்சிதமாகப் பொருந்தும் அளவுக்கு இருக்கும் அவருடைய முகமும், சிரிப்பும் இன்னும் பல ஆண்டுகள் அவரை இங்கே வாழ வைக்கும்போலத்தான் தோன்றுகிறது.
இப்போது நயன்தாராவை 3 வேடங்களில் நடிக்க வைத்து ஒரு படத்தைத் தயாரிக்கும் பணிகள் துவங்கியிருக்கிறது. இந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனின் சகோதரரான சுரேஷ் தயாரிக்கவிருப்பதாகத் தகவல்.
இத்திரைப்படம் திரில்லர் கலந்த கதையில் உருவாகிறது. புகழ் பெற்ற நாவலாசிரியரும், எழுத்தாளருமான இந்திரா செளந்தர்ராஜன் இந்தப் படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதுகிறார். புதுமுக இயக்குநர் ஒருவர் இயக்கவிருக்கிறார். இது பற்றிய பேச்சுவார்த்தை தொடங்கியிருப்பதாகச் செய்திகள் வந்துள்ளன.
நயன்தாராவுக்கு இந்த ‘லேடி சூப்பர் ஸ்டார்’ பட்டம் கிடைத்தற்கான காரணமே அவர் தனக்குப் பொருத்தமான கதையைத் தேர்வு செய்து நடிப்பதுதான். இந்தத் திறமையிருக்கும்வரையிலும் நயன்தாராவை எந்தப் புது நடிகையும் வந்து வெல்ல முடியாது என்பது உறுதி..!
The post நயன்தாரா 3 வேடங்களில் நடிக்கும் புதிய திரைப்படம் appeared first on Touring Talkies.
]]>The post மூக்குத்தி அம்மன் – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.
]]>படத்தின் நாயகனான ஆர்.ஜே.பாலாஜி நாகர்கோவில் அருகேயிருக்கும் மணப்பாடு கிராமத்தில் லோக்கல் டிவி சேனலில் வேலை செய்யும் இளைஞன். மூன்று தங்கைகள், அம்மா மற்றும் தாத்தாவோடு கஷ்டப்பட்டு ஜீவனம் நடத்துகிறார்.
அதேநேரம் அந்தப் பகுதியில் பரந்து விரிந்திருக்கும் 11,000 ஏக்கர் நிலத்தை தன் சுயலாபத்திற்காக ஆட்டையப் போட நினைக்கும் ஒரு சாமியாரின் முகத்திரையை கிழிக்கவும் அவர் போராடுகிறார். அதற்கு அவருடைய குல தெய்வமான ‘மூக்குத்தி அம்மனும்’ உதவுகிறார்.
முடிவில் சாமி ஜெயித்ததா..? அல்லது சாமியார் ஜெயித்தாரா..? என்பதே இந்த ‘மூக்குத்தி அம்மனின்’ மீதிக் கதை.
‘L.K.G.’ படத்தில் இப்போதுதான் எல்.கே.ஜி ஸ்டுடண்ட் என்ற ரேஞ்சிற்கு பவ்யமாய் நடிக்க வந்த ஆர்.ஜே பாலாஜி, இந்தப் படத்தில் டிகிரி பெற்றவர் போல் சில இடங்களில் வெளுத்துக் கட்டியிருக்கிறார். (கவனிக்க சில இடங்களில் மட்டும்)
நடிகர்களின் நடிப்பைப் பட்டியல் போட்டால் நயன்தாராவை பின்னுக்குத் தள்ளி முன்னுக்கு வந்துவிடுகிறார் நடிகை ஊர்வசி. அவரின் அனுபவ நடிப்பு மொத்தத்தையும் கொட்டி, கண்ணில் நீர் வரும் அளவுக்கு சிரிக்கவும் வைக்கிறார். சில இடங்களில் கனத்த இதயத்தோடு கண்ணீர் வரவும் வைக்கிறார்.
மெளலி மெஸ்ஸில் சர்வர்கள் பேசும் அளவிற்கு கொஞ்சம்தான் பேசுகிறார். ஆனாலும், அவரது கதாப்பாத்திரம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. படத்தில் கூடுதல் எனர்ஜியை கொடுத்திருப்பது அந்தப் ‘பகவதி பாபா’ சாமியார். மனிதரின் உடலும் கண்களும் கதகளி ஆடுகின்றன. மிகச் சிறந்த நடிப்பு.
‘மூக்குத்தி அம்மனாக’ வரும் நயன்தாராவை மூக்குத்தி அம்மனாகவே ஏற்கத் துவங்கி விடுகிறோம். அதுதான் அவரின் நடிப்பைப் பற்றி சொல்ல வேண்டிய அளவு. ஊர்வசியின் மூன்று மகள்கள், ஒரே சீனில் அசத்திய மயில்சாமி, வெட்டிங் போட்டோ கிராபராக வரும் ஆர்.ஜே.பாலாஜியின் நண்பர் கேரக்டர் என படத்தில் ஆங்காங்கே புஸ் ஆகாத பட்டாசு கேரக்டர்கள் இருப்பது சிறப்பு.
கிரிஷின் இசையில் பாடல்கள், பின்னணி இசை இரண்டுமே தரம். குறிப்பாக நயன்தாராவிற்காக…. இல்லை மூக்குத்தி அம்மனுக்காக உருவாக்கப்பட்டுள்ள பி.ஜி.எம். செம! நாகர்கோவிலின் அழகை அதன் அழகு கொஞ்சமும் கெடாமல் கேமராவிற்குள் கொண்டு வந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன்.
அரசியல் வசனங்களை வம்படியாக திணிக்காமல் போகிறபோக்கில் தெளித்திருப்பது இயக்குநர்கள் ஆர்.ஜே. பாலாஜி சரவணன் இருவரின் புத்திசாலித்தனத்தைக் காட்டுகிறது.
மதத்தின் பெயரால் நடக்கும்… சாமியார்கள் நடத்தும் மோசடிகளை எந்தச் சமரசமும் இல்லாமல் பேசியிருப்பது அசத்தல். அதிலும் கடவுள் சம்பந்தப்பட்ட மூட நம்பிக்கை சார்ந்த விசயங்களை கடவுளை வைத்தே பேசியிருப்பது மாஸ் மெட்டிரியல்.
நிறைய விசயங்களை குறிப்பிட்டுச் சொல்லிப் பாராட்டும்போது குறைகளையும் சொல்லித்தான் ஆகணும். போலிச் சாமியார்கள் என்றாலே மங்குனிகள்தான் என்றாலும் அதை ஒரு சினிமாவாக காட்டும்போது கொஞ்சம் லாஜிக்கையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அந்தச் சாமியார் கேரக்டர் இடைவேளைக்குப் பிறகு வெறும் காமெடி நடிகர் போல் டீல் செய்யப்பட்டிருப்பதால் அவரால் எதுவும் ஆபத்து நடக்காது என்பது மனதில் நன்றாகப் பதிந்து விடுகிறது. அதனால் படத்தின் மீது பெரிய தாக்கம் வரவில்லை.
அந்த ஏரியாவை மட்டும் இன்னும் பலப்படுத்தி இருந்தால் இந்த ‘மூக்குத்தி அம்மனின்’ ஆசி நமக்கு முழுமையாக கிடைத்திருக்கும். நாம் இப்படி சொல்வதற்கும் படத்தில் பதில் இருக்கிறது.
ஆமாம்.. நாம்தான் எவ்வளவு கிடைத்தாலும் திருப்தி அடைய மாட்டோமே..!!!
The post மூக்குத்தி அம்மன் – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.
]]>The post ‘மூக்குத்தி அம்மன்’ விக்கிக்கும், விக்னேஷ் சிவனுக்கும் சம்பந்தமே இல்லீங்கோ..! appeared first on Touring Talkies.
]]>இந்த நேரத்தில் இந்தப் படத்தைச் சம்பந்தப்படுத்தி ஒரு விஷயம் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. அது இந்தப் படத்தின் இணை தயாரிப்பாளர் நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவனா என்பதுதான்..
காரணம், ‘மூக்குத்தி அம்மன்’ போஸ்டரில் ‘இணை தயாரிப்பு – விக்கி’ என்று இருப்பதுதான். விசாரித்தால் ‘அந்த விக்கி வேறு.. இந்த விக்னேஷ் சிவன் வேறு’ என்கிறார்கள்.
இது பற்றி அந்தப் படத்தின் நடிகரும், இயக்குநருமான ஆர்.ஜே.பாலாஜி பேசும்போது, “அதை ஏன் ஸார் கேக்குறீங்க.. இந்த ஒரு கேள்விக்குப் பதில் சொல்லியே நான் ஓய்ஞ்சு போயிட்டேன். இந்தப் படத்துக்கும் விக்னேஷ் சிவனுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
அந்தப் போஸ்டரில் இருக்கும் ‘விக்கி’ என்பவரின் இயற்பெயரும் ‘விக்னேஷ்’தான். ஆனால் அவர் ‘முள்ளும் பலரும்’ படத்தைத் தயாரித்த பழம் பெரும் தயாரிப்பாளரான ‘ஆனந்தி பிலிம்ஸ்’ வேணு செட்டியாரின் பேரன்.
இரண்டு தலைமுறைகளாக இந்த விக்னேஷின் குடும்பமும், மூக்குத்தி அம்மன் படத்தின் தயாரிப்பாளரான ஐசரி கே.கணேஷன் குடுமபமும் நெருக்கமான நண்பர்கள் என்பதால் ஐசரி கணேஷின் அனைத்து படங்களிலும் இணை தயாரிப்பாளராக இருந்து தயாரிப்புப் பணியை பார்த்துக் கொண்டிருக்கிறார் இந்த விக்கி.
இவர் இல்லையேல் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் கம்பெனியே இல்லை. அப்படியொரு திறமைசாலி. உழைப்பாளி. அவர்தான் இந்த விக்கி.. இதை நீங்களாச்சும் வெளில சொல்லுங்க..” என்று கதறினார் ஆர்.ஜே.பாலாஜி.
இதோ சொல்லிவிட்டோம்..!
The post ‘மூக்குத்தி அம்மன்’ விக்கிக்கும், விக்னேஷ் சிவனுக்கும் சம்பந்தமே இல்லீங்கோ..! appeared first on Touring Talkies.
]]>The post “அரசியலுக்கு வர மாட்டேன்…” – நடிகர் ஆர்.ஜே.பாலாஜி அறிவிப்பு appeared first on Touring Talkies.
]]>காரணம் டிரெயிலரில் இன்ன விஷயத்தைத்தான் சொல்ல வருகிறோம் என்பதை வெளிக்காட்டாத அளவுக்கு டிரெயிலரை கட் செய்திருந்தாலும் ஆன்மீகம் என்னும் பெயரில் சாமியார்கள் செய்யும் அட்டகாசத்தை அக்குவேறு ஆணி வேறாக அலசி ஆராய்ந்திருப்பதுபோல் தெரிகிறது.
கூடவே அரசியலும் கலந்திருக்கிறது. இதனால், ‘ஆர்.ஜே.பாலாஜி அரசியலுக்கு அடி போடுகிறாரா?’ என்ற கேள்வி எழுந்தது. இந்தக் கேள்விக்குப் பதிலளித்த பாலாஜி, “எட்டாவது படிக்கும்போது நீ என்னவாக விரும்புகிறாய்..?” என்று பள்ளி ஆசிரியர் கேட்டார். அப்போது “அரசியல்வாதியாக வர விரும்புகிறேன்…” என்பது என் பதிலாக இருந்தது. இப்போது விவரம் தெரிந்ததற்குப் பின்னாலே அரசியல் எனக்கு பிடிக்காமலேயே போய்விட்டது…” என்கிறார் பிரபல நடிகரும், இயக்குநருமான ஆர்.ஜே.பாலாஜி.
“இயக்குநர் சரவணன் உடன் இணைந்து நான் இயக்கியுள்ள முதல் திரைப்படமான இந்த ‘மூக்குத்தி அம்மன்’ படத்தில் நயன்தாரா, மூக்குத்தி அம்மன் ஆக நடித்திருக்கிறார். “மூக்குத்தி அம்மன் வேடத்தில் நயன்தாராவை பார்த்தபோது எங்களுடைய மொத்த யூனிட்டும் பிரம்மித்துப் போய் நின்றது. அந்த அளவிற்கு அம்மனின் பாடம் கனகச்சிதமாக நயன்தாராவுக்கு பொருந்தியிருந்தது” என்று பெருமிதப்படுகிறார் ஆர்.ஜே.பாலாஜி.
கூடவே, “மூக்குத்தி அம்மன்’ ஒரு பக்திப் படமாக இருந்தாலும் சமூகத்துக்கு தேவையான நல்ல சில கருத்துக்களையும் இருக்கிறேன்” என்கிறார் ஆர்.ஜே.பாலாஜி.
The post “அரசியலுக்கு வர மாட்டேன்…” – நடிகர் ஆர்.ஜே.பாலாஜி அறிவிப்பு appeared first on Touring Talkies.
]]>The post நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் OTT-யில் வெளியாகிறதா..? appeared first on Touring Talkies.
]]>இத்திரைப்படம் ஹாட் ஸ்டார் ஓடிடியில் வரும் தீபாவளி தினத்தன்று ஒளிபரப்பாக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்தப் படத்தில் நயன்தாரா, ஆர்.ஜே.பாலாஜி, ஸ்ருமிதி வெங்கட், ஊர்வசி, அஜய் ஜோஷ், இந்துஜா ரவிச்சந்திரன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
கிரிஷ் இசையமைத்துள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவில், செல்வா படத் தொகுப்பில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது.
வரும் தீபாவளி அன்று நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மனின்’ தரிசனம் Hot Star மூலம் ரசிகர்களின் வீட்டிலேயே கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
The post நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் OTT-யில் வெளியாகிறதா..? appeared first on Touring Talkies.
]]>