The post விரைவில் கலகலப்பு 3 இவருக்கு பதில் இவராம்! சுந்தர் சி வைத்த ட்விஸ்ட்… appeared first on Touring Talkies.
]]>இச்சமயத்தில் சுந்தர் சி அரண்மனை போல் தனது மற்றொரு ட்ரேட் மார்க் படமான கலகலப்பு படத்தின் அடுத்த பாகத்தையும் எடுக்க திட்டமிட்டுள்ளார். இந்த மாத இறுதியில் கலகலப்பு படத்தின் மூன்றாம் பாகத்தை ஆரம்பிக்கப் போகிறார். அதற்கான முன் வேலைகளை ஏற்கனவே முடித்துவிட்டார் என தெரிகிறது.
முதல் பாகம் போல் கலகலப்பு இரண்டாம் பாகம் பெரிதாக ஜோலிக்கவில்லை. முதல் பாகத்தில் நடிகர் சந்தானம் இருந்ததால் காமெடி காட்சிகள் தூள் பறந்தன. இப்பொழுது மூன்றாம் பாகத்தில் சிவா மற்றும் விமல் ஆகியோர் நடிக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இப்படத்தில் சந்தானம் இல்லாத குறையை வேறு ஒரு நடிகரை வைத்து தீர்க்க சுந்தர் சி.அரண்மனை நான்காம் பாகத்தில் காமெடியில் கலக்கிய நகைச்சுவை பிரபலமான விடிவி கணேசை வைத்து தான் கலகலப்பு 3 காமெடியை திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. சமீபகாலமாக கணேஷின் காமெடி வொர்க் அவுட் ஆகிறது என்பதால் சுந்தர் சி இந்த முடிவை எடுத்துள்ளார் என கருதப்படுகிறது.
The post விரைவில் கலகலப்பு 3 இவருக்கு பதில் இவராம்! சுந்தர் சி வைத்த ட்விஸ்ட்… appeared first on Touring Talkies.
]]>The post அது வெளிநாட்டு சலூன் இது உள்ளூர் சலூன்! சிவா, யோகிபாபு சும்மா இருக்க மாட்டாங்க – கவிதா பாரதி appeared first on Touring Talkies.
]]>இவர் சித்தி தொடருக்கு வசனம் எழுதியவர், அருவி படத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளராக, ரைட்டர் படத்தில் வில்லனாக பிரபலமான இவர் சலூன் படத்தை பற்றி சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.அதில் சிங்கப்பூர் சலூன் இருக்க இதென்ன வெறும் சலூன் என்று அவரிடம் கேட்டதற்கு, இந்த படம் எப்பவோ ஆரம்பித்து விட்டதாகவும் சலூன் படத்தின் பாதி படப்பிடிப்பின் போது தான் சிங்கப்பூர் சலூன் வெளியானது.இது உள்ளூர் சலூன் தான் என நகைச்சுவையாக சொன்னார்.
இந்த படம் பாலிடிக்ஸ் படம். சுதந்திர போரட்டத்தை சைலன்டா நடத்துறதா வைலன்டா நடத்துறதானு ஊரு ரெண்டா பிரிஞ்சிடும், சைலன்ட ஆதரிக்குறவங்க சைடு வாக்கெடுத்து தலை சீவுவாங்க அந்து ஊரு சைடுவாருபட்டி, வைலன்ட ஆதரிக்குறவங்க தலையை நேரா சீவுவாங்க அவங்க ஏறுவாருபட்டி நான் ஏறுவாருபட்டியோட தலைவர். சைடுவாருபட்டி தலைவர் வாகை சந்திரசேகர் அவர்கள் என்றார்.
இது இரண்டு ஊருக்கு இடையே நடுக்குற பிரச்சினை பற்றியும் தலைவர்கள் அங்க மக்களை எப்படி வச்சுருக்காங்க அப்புறம் சம கால அரசியலையும் பேசுற கதை தான் இந்த சலூன்.வில்லனா நடிப்பது தான் பிடிக்குமா என்ற கேள்விக்கு நல்லவனாக நடிப்பது போர் அடிக்கும் எனவே வில்லனாக நடிப்பது தான் பிடிக்கும் என்றார். எனக்கு காமெடி கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை மணிவண்ணன் அவர்களை போல எல்லாம் கலந்த கேரக்டரில் நடிக்க மிகவும் விருப்பம் என கூறினார்.
மிர்ச்சி சிவா மற்றும் யோகிபாபு இருவரும் இப்படத்தில் நடித்துள்ளனர் அவர்களை பற்றிய கேள்விக்கு, இருவரும் ஷூட்டிங் ஸ்பாட்-ஐ கலகலப்பாக வைத்துக் கொள்வார்கள்.நாங்கள் சீரியஸாக இருந்தாலும் அவர்கள் சும்மா இருக்க மாட்டார்கள் எதாவது பேசி சிரிக்க வைப்பார்கள் என்றார்.இத்தோடு திரைப்பயணத்தையும் குறித்து பகிர்ந்து கொண்டார்.
கிராமத்தில் இருந்து இயக்குனர் ஆக வேண்டும் என்று வந்தவன் பிரபல பத்திரிக்கையான நக்கீரனில் வேலை செய்து பின்னர் இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றினேன் அப்போது ராதிகா அவர்களின் அறிமுகம் கிடைத்து சித்தி சீரியலுக்கு வசனம் எழுதினேன்.அப்போது எழுத்தாளர்களாக இருப்பவர்களை எழுத்தாளர்களாக மட்டுமே அடையாளப்படுத்துவார்கள் இயக்குனர் ஆவது கடினமாக இருந்தது இந்த பயத்தில் சீரியலை இயக்க ஆரம்பித்து திரைப்படத்தில் நடிக்க ஒரு வாய்ப்பு வந்ததால் நடிகனானேன் என தெரிவித்தார்.
The post அது வெளிநாட்டு சலூன் இது உள்ளூர் சலூன்! சிவா, யோகிபாபு சும்மா இருக்க மாட்டாங்க – கவிதா பாரதி appeared first on Touring Talkies.
]]>The post மிர்ச்சி சிவாவின் ‘சலூன்’ படத்தின் போஸ்டர் வெளியானது appeared first on Touring Talkies.
]]>2012-ம் ஆண்டு சிவா, விமலுடன் இணைந்து சுந்தர்.சி இயக்கத்தில் நடித்த ‘கலகலப்பு’ திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று வணிக ரீதியிலும் மிகப் பெரிய வெற்றியடைந்தது.
1981-ம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்து வெற்றி படமான ‘தில்லு முல்லு’ மறுபதிப்பில் சிவாவுடன், ஈஷா தல்வார் ஜோடி சேர 2013-ம் ஆண்டு சிவாவின் தனி நாயகனுக்கான முதல் படமாக அமைந்தது.
இதில் சிவா மட்டுமே முழு படத்தையும் தன் தோளில் சுமக்கும் அளவுக்கு தன் முழு திறமையையும் வெளிபடுத்தியிருந்தார் என அனைவராலும் பாராட்டப்பட்டார்.
இதே ஆண்டு வெளியான ‘சொன்னா புரியாது’ திரைப்படத்தில் பிண்னனி பேசும் கலைஞராக நடித்திருந்தார். இறுகிய முகத்தை வைத்து கொண்டு இவ்வளவு அழகாக காமெடி செய்வதில் சிவாவை மிஞ்ச ஆள் இல்லை, சிவா ஒரு வேடிக்கையான மனிதர் அதை தவிர வேறொன்றும் முக்கியமில்லை என்று பத்திரிகைகள் சிவாவை பாராட்டித் தள்ளின.
சிவாவின் அடுத்த வெளியீடான ‘யா யா’-வில் சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சிவாவின் அடுத்த படமான ‘வணக்கம் சென்னை’-யில் பிரியா ஆனந்துடன் ஜோடி சேர கிருத்திகா உதயநிதி இயக்கியிருந்தார். இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வணிக ரீதியாக வெற்றி பெற்றது.
அடுத்து ஒரு வருடம் கழித்து பாபி சிம்ஹாவுடன் இணைந்து நடித்து வெளிவந்த ‘மசாலா’ படத்திற்கு நேர்மறை விமர்சனமும், சிவா நடிப்புக்கு பாராட்டும் கிடைத்தது.
2007 ல் மிகப் பெரிய வெற்றியடைந்த ‘சென்னை-600028’-ன் இரண்டாம் பாகத்திலும் சிவா நடித்துள்ளார்.
தற்பொழுது இவர் நடிப்பில் ‘சுமோ’, ‘சலூன்’ என்ற புதிய படங்கள் திரைக்கு வரவிருக்கின்றன.
இதில் ‘சலூன்’ படத்தின் புதிய போஸ்டர் சிவாவின் பிறந்த நாளையொட்டி நேற்றைக்கு வெளியானது..!
The post மிர்ச்சி சிவாவின் ‘சலூன்’ படத்தின் போஸ்டர் வெளியானது appeared first on Touring Talkies.
]]>The post மொரீஷியஸில் படமான ‘கோல்மால்’ திரைப்படம் appeared first on Touring Talkies.
]]>இந்தப் படத்தில் ஜீவா, மிர்ச்சி சிவா இருவரும் நாயகர்களாக நடித்துள்ளனர். இவர்களுக்கு ஜோடியாக பாயல் ராஜ்புத் மற்றும் தான்யா ஹோப் இருவரும் நடித்துள்ளனர்.
மேலும், யோகி பாபு, ‘ஆடுகளம்’ நரேன், மனோபாலா, சுப்பு பஞ்சு, வையாபுரி, யூகி சேது, சஞ்சனா சிங், சாது கோகிலா, விபின் சித்தார்த், ரமேஷ் கண்ணா, கே.எஸ்.ஜி.வெங்கடேஷ், மாளவிகா, ஜார்ஜ் மரியன் மற்றும் மது சினேகா உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவை எஸ்.சரவணன் கையாள, அருள் தேவ் இசையமைக்கிறார். படத்தொகுப்புக்கு டான் போஸ்கோவும், கலை இயக்கத்திற்கு சிவாவும், பாடல் வரிகளுக்கு மதன் கார்க்கி, விவேகா ஆகியோரும் பொறுப்பேற்றுள்ளனர்.
கே.பாக்யராஜ் மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோரிடம் உதவியாளராக இருந்த பொன் குமரன் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.
இவர், ரஜினிகாந்த் நடித்த ‘லிங்கா’ படத்தின் கதையை எழுதியவர். ‘விஷ்ணுவர்தனா’, ‘ஏஜமானா’ ஆகிய வெற்றி பெற்ற கன்னட படங்களையும், தமிழ்-கன்னட இரு மொழி திரைப்படமான ‘சாருலதா’வையும் இயக்கியுள்ளார். இவர் இயக்கும் முதல் நேரடித் தமிழ்ப் படம் இது.
இந்தப் படம் பற்றி இயக்குநர் பொன் குமரன் பேசும்போது, “கடந்த மாதம் சுமார் 25 நாட்கள் மொரீஷியஸின் முக்கியப் பகுதிகளில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளது.
கிறிஸ்துமஸ் – புத்தாண்டு விடுமுறைக்காக தற்போது சென்னை திரும்பியுள்ளோம். சென்னையில் சில முக்கிய காட்சிகளை படமாக்கிய பின்னர், மீண்டும் ஜனவரி மாதம் மொரிஷியஸ் செல்லவுள்ளோம்.
இதுவரையிலும் படமாக்கிய காட்சிகள் அனைத்தும் சிறப்பாக வந்துள்ளன. முழு நீள நகைச்சுவைப் படமாக அனைத்துப் பிரிவினரும் ரசிக்கக் கூடிய வகையில் இந்தக் கோல்மால் படம் இருக்கும்…” என்றார் இயக்குநர் பொன் குமரன்.
2022-ம் ஆண்டின் முதல் பாதியில் இந்தப் படத்தை வெளியிட படக் குழு திட்டமிட்டுள்ளதாம்.
The post மொரீஷியஸில் படமான ‘கோல்மால்’ திரைப்படம் appeared first on Touring Talkies.
]]>The post ஜீவா-மிர்ச்சி சிவா இணைந்து நடிக்கும் ‘கோல்மால்’ திரைப்படம் appeared first on Touring Talkies.
]]>இந்தப் படத்தில் பாயல் ராஜ்புத் மற்றும் தான்யா ஹோப் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் முரளி சர்மா, யோகி பாபு, சோனியா அகர்வால், மனோபாலா, கருணாகரன், ரமேஷ் கண்ணா, நரேன், ஜார்ஜ் மரியான், சஞ்சனா சிங், மொட்டை ராஜேந்திரன், பஞ்சு சுப்பு, சாது கோகிலா, விபின் சித்தார்த் மற்றும் கே.எஸ்.ஜி.வெங்கடேஷ் உள்ளிட்ட பல பிரபலங்களும் இந்தப் படத்தில் நடிக்கவுள்ளனர்.
இசை – அருள் தேவ், ஒளிப்பதிவு – எஸ்.சரவணன், படத் தொகுப்பு – டான் போஸ்கோ, கலை இயக்கம் – சிவா, பாடல்கள் – மதன் கார்க்கி, விவேகா, கிரியேட்டிவ் தயாரிப்பாளர் – எம்.நரேஷ் ஜெயின், நிர்வாகத் தயாரிப்பு – எம்.செந்தில், தயாரிப்பு வடிவமைப்பு – டூனி, மக்கள் தொடர்பு – நிகில் முருகன், தயாரிப்பாளர்கள் – ஜாகுவார் ஸ்டுடியோஸ் வினோத் ஜெயின்.
இயக்குநர்கள் கே.பாக்யராஜ், கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி பின்பு கன்னடத்தில் பல வெற்றி படங்களை இயக்கியுள்ள பொன் குமரன் இந்த தமிழ் திரைப்படத்தை இயக்குகிறார்.
இந்தப் படம் குறித்து இயக்குநர் பொன் குமரன் பேசுகையில், “இந்தக் கோல்மால் படம் முழு நீள நகைச்சுவையுடன் கூடிய குடும்ப பொழுதுபோக்கு படமாக இருக்கும். இப்படம் அனைவரையும் மகிழ்விக்கும். ரசிகர்களை அவர்களது குடும்பத்துடன் திரையரங்கிற்கு வரவழைக்கும்.
ஜீவாவும் சிவாவும் நல்ல நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள். அவர்கள் கூட்டணி அமைக்கும்பொழுது அது இன்னும் சிறப்பாக இருக்கும். முழு படமும் மொரீஷியலில் படமாக்கப்படவுள்ளது.
நவம்பரில் படப்பிடிப்பு தொடங்கி டிசம்பர் மாதம் நிறைவடையும். 2022-ம் ஆண்டின் முதல் பாதியில் படம் வெளியிடப்படும்..” என்றார்.
The post ஜீவா-மிர்ச்சி சிவா இணைந்து நடிக்கும் ‘கோல்மால்’ திரைப்படம் appeared first on Touring Talkies.
]]>The post “டான்ஸ்ல எனக்கு பாக்யராஜ் ஸார்தான் குரு” – மிர்ச்சி சிவாவின் கலாய்ப்பு appeared first on Touring Talkies.
]]>இந்த விழாவில் நடிகர் ‘மிர்ச்சி’ சிவா பேசும்போது, “இந்தப் படத்தில் எனக்கு மிகவும் பிடித்தது டைட்டில்தான். இதில் நிறைய அர்த்தம் இருக்கிறது. தயாரிப்பாளருக்கு சிப்ஸ் ரொம்ப பிடிக்கும் என்று நினைக்கிறேன். சாந்தனு எல்லா நேரத்திலும் கூப்பிடுவார். ஆனால் ஏனோ இன்று கூப்பிடவே இல்லை. அவர் மிகவும் திறமையானவர். அவருக்கான நேரம் வரும். இரண்டு வருடங்களாக அவருக்கு எந்தப் படமும் வரவில்லை என்றார். உலகத்திலேயே எந்தப் படமும் வரவில்லை. அதனால் அவர் அதற்கெல்லாம் கவலைப்பட வேண்டாம். நாயகி நன்றாக நடித்திருக்கிறார்.
பாண்டியராஜ் சார், பாக்யராஜ் சார் பற்றி ஒரு கதை சொன்னார். ஒரு படம் எடுக்கும் நேரத்தில் வேறொரு படத்தின் சாயல் தெரிய, ஒரே இரவில் அவர் தயார் செய்த கதைதான் ‘இன்று போய் நாளை வா’ என்றார். எனக்கு பிரமிப்பாக இருந்தது. அதனால்தான் அவர் இந்தியாவிலேயே சிறந்த திரைக்கதையாளராக கொண்டாப்படுகிறார்.
எனக்கு டான்ஸில் குரு அவர்தான். அவருடனும், சாந்தனுவுடனும் இணைந்து ஒரு படத்தில் டான்ஸ் ஆட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். விரைவில் அது நடக்கும் என்று எதிர்பார்க்கிறேன்..” என்றார்.
The post “டான்ஸ்ல எனக்கு பாக்யராஜ் ஸார்தான் குரு” – மிர்ச்சி சிவாவின் கலாய்ப்பு appeared first on Touring Talkies.
]]>