The post ’சலார் ’ 230 அடி உயர கட் அமைத்து பிரபாஸுக்கு பால் அபிஷேகம்.! appeared first on Touring Talkies.
]]>ஹைதராபாத்: நடிகர் பிரபாஸ் நடித்துள்ள ‘சலார்- பார்ட் 1 சீஸ்ஃபயர்’ டிச. 22-ம் தேதி வெளியாகிறது. இதைத்தொடர்ந்து அமிதாப்பச்சன், கமல்ஹாசனுடன் ‘கல்கி 2898 ஏடி’ , ‘ஸ்பிரிட்’ படங்களில் நடித்து வருகிறார்.
இவர் பிறந்த நாள் திங்கட்கிழமை கொண்டாடப்பட்டது. திரையுலகினர், ரசிகர்கள் அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துத் தெரிவித்தனர். இதை முன்னிட்டு, தெலுங்கு ரசிகர்கள் அவருக்கு பிரம்மாண்ட கட் அவுட் ஒன்றை வைத்துள்ளனர்.
ஹைதராபாத்தில் உள்ள குக்கட்பள்ளி எனும் இடத்தில் 230 அடி உயர கட் அமைத்துள்ள அவர்கள், பால் அபிஷேகம் மற்றும் பூக்கள் தூவி பிறந்த நாளை கொண்டாடியுள்ளனர்.
The post ’சலார் ’ 230 அடி உயர கட் அமைத்து பிரபாஸுக்கு பால் அபிஷேகம்.! appeared first on Touring Talkies.
]]>The post வெள்ளி டம்ளரில் பால் குடிக்க மறுத்த எம்.ஜி.ஆர். appeared first on Touring Talkies.
]]>அந்த நினைவலைகளை, திரையரங்கு உரிமையாளர், லயன் ராம்குமார் பகிர்ந்துள்ளார்.
“ ‘ரிக்ஷாக்காரன் படத்தின் வெற்றி விழாவிற்கு 1971 செப்டம்பர் 22ம் தேதி, எங்கள் அலங்கார் திரையரங்கிற்கு வந்தார். அப்போது அவர், சிறுசேமிப்புத் துறை தலைவராக இருந்தார். தி.மு.க. அமைச்சரவையில் இடம்பெற்று இருந்த ராஜாராமும் அவருடன் வந்திருந்தார்.
படம் தொடங்குதற்கு முன் திரை முன்பாக அமைக்கப்பட்டு இருந்த மேடையில் எம்.ஜி.ஆர். தோன்றி ரசிகர்களிடம் பேசினார். நிகழ்ச்சி முடிந்ததும் எங்களது வீட்டுக்கு வந்தார். நாங்கள் சாப்பிடும்படி வற்புறுத்தினோம். அவர், “ஒரு டம்ளர் பால் மட்டும் கொடுங்கள்” என்றார். அவர், காபி, டீ சாப்பிட மாட்டார். எனவே பால் மட்டும் போதும் என்றார்.
அன்போடு நாங்கள், வெள்ளி டம்ளரில் அவருக்குப் பால் கொடுத்தோம். அவர் குடிக்க மறுத்துவிட்டார். “எவர்சில்வர் டம்ளரில் கொடுத்தால் போதுமே!” என்றார். அவரது எளிமை எங்களுக்கு புரிந்தது. அவ்வாறே எவர்சில்வர் டம்ளரில் கொடுத்தோம். அதன் பிறகுதான் குடித்தார்” என்று கூறியிருக்கிறார் லயன் ராம்குமார்.
The post வெள்ளி டம்ளரில் பால் குடிக்க மறுத்த எம்.ஜி.ஆர். appeared first on Touring Talkies.
]]>