The post “இப்படியொரு காட்சி வேறு எந்தப் படத்திலும் வந்ததில்லை” – ‘மீண்டும்’ படத்தின் சிறப்பு appeared first on Touring Talkies.
]]>‘கந்தர்வன்’, ‘ஒன்பதிலிருந்து பத்துவரை’ உட்பட ஐந்து படங்களை தயாரித்தவர் மணிகண்டன். இவருடைய நிறுவனத்தின் பெயர் ‘ஹீரோ சினிமாஸ்’.
மணிகண்டன் மிகுந்த பொருட்செலவில் சரவணன் சுப்பையா இயக்கத்தில் தயாரித்துள்ள படம்தான் ‘மீண்டும்.’
தயாரிப்பாளர் மணிகண்டன் இந்த ‘மீண்டும்’ படத்தில் ‘கதிரவன்’ என பெயர் மாற்றி கதாநாயகனாக நடித்துள்ளார். அனேகா கதாநாயகியாக நடித்துள்ள இந்தப் படத்தில் இயக்குநர் சரவணன் சுப்பையாவும் நடித்துள்ளார்.
மேலும், எஸ்.எஸ்.ஸ்டேன்லி, ‘யார்’ கண்ணன், ‘கேபிள்’ சங்கர், சுப்ரமணிய சிவா, பிரணவ் ராயன், ‘களவாணி’ புகழ் துரை சுதாகர், சுபா பாண்டியன், இந்துமதி மணிகண்டன், மோனிஷா, அனுராதா நாகராஜன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
வைரமுத்துவின் பாடல்களுக்கு நரேன் பாலகுமார் இசையமைத்துள்ளார். சூப்பர் சுப்பராயன் சண்டைப் பயிற்சியையும், ராதிகா நடனப் பயிற்சியையும் அளித்துள்ளனர். தேசிய விருது பெற்ற ராஜா முகமது படத்தொகுப்பையும், ஸ்ரீனிவாஸ் தேவாம்சம் ஒளிப்பதிவையும், நாகராஜ் தயாரிப்பு நிர்வாகத்தையும் கவனித்துள்ளனர். கதை, திரைக்கதை. வசனம், எழுதி இயக்கி உள்ளார் சரவணன்சுப்பையா. ஹீரோ சினிமாஸ் நிறுவனம் சார்பில் சி.மணிகண்டன் தயாரித்துள்ளார்.
தாய் நாட்டுக்கு எதிரான முக்கிய பிரச்சனை ஒன்றை குற்றப் புலனாய்வு துறை அதிகாரியான கதாநாயகன் கதிரவனிடம் ஒப்படைக்கிறது. தாய் நாட்டுப் பற்று அதிகம் உள்ள கதிரவன் இந்த உத்தரவை சவாலாக ஏற்று களம் இறங்குகிறார். கடமையை செய்ய செல்கிறார்.
இவர் வருகையை கண்டுபிடித்துவிட்ட எதிரிகள் அவரை பிடித்து தனிமைச் சிறையில் அடைத்து மிகக் கொடூரமான முறையில் சித்திரவதை செய்கின்றனர். சித்திரவதையின் உச்சகட்டமாக நடைபெறும் அந்த கொடூர சம்பவங்கள் அதிர்ச்சியின் உச்சம்.
அந்த காட்சி இதுவரை ஆசிய திரைப்படங்களிலேயே வந்திராத காட்சி என்றால் அது மிகையாகாது. அந்தக் காட்சியில் நாயகனான கதிரவன் துணிச்சலுடன் நடித்ததை இயக்குநர் உட்பட படக் குழுவினர் அனைவரும் கை தட்டி பாராட்டி வாழ்த்தினார்கள்.
தணிக்கை சான்றிதழ் பெற்றுள்ள ‘மீண்டும்’ திரைப்படம் ஊரடங்கு முடிந்தவுடன் திரையரங்குகளில் வருகிறதா..? ஊரடங்கின்போதே ஓ.டி.டி. தளத்தில் வரப் போகிறதா…? என்பதற்கான பேச்சுவார்த்தை தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
The post “இப்படியொரு காட்சி வேறு எந்தப் படத்திலும் வந்ததில்லை” – ‘மீண்டும்’ படத்தின் சிறப்பு appeared first on Touring Talkies.
]]>The post அதிர்ச்சியான கிளைமாக்ஸை கொண்ட ‘மீண்டும்’ திரைப்படம் appeared first on Touring Talkies.
]]>படத்தில் கதிரவன், அனைகா, சுப்ரமணியம் சிவா, எஸ்.எஸ்.ஸ்டான்லி, டி.கே.சண்முகம், கேபிள் சங்கர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
“இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் மிகவும் அதிர்ச்சியைத் தரக் கூடியது” என்று இப்போதே பயமுறுத்துகிறார் இயக்குநர் சரவண சுப்பையா.
படம் பற்றி இயக்குநர் சரவண சுப்பையா பேசுகையில், “இந்த ‘மீண்டும்’ படத்தின் கதையை இப்போதே சொல்வதில் கொஞ்சம் சிக்கல் இருக்கிறது. இது ஒரு வகையான ஸ்பை திரில்லர் திரைப்படம்.
தமிழகத்தில் 20 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவத்தை மையமாக வைத்துதான் இந்தப் படம் உருவாகியிருக்கிறது. அது வெறும் விபத்தாக கடந்துவிட்டது. எல்லாரும் இ்ப்போது மறந்தேவிட்டார்கள்.
ஆனால், அது இயற்கையாக நடந்த சம்பவம் அல்ல. சர்வதேச நாடுகளின் சதி என்பதுதான் நான் சொல்ல வருவது.
அந்தச் சம்பவத்தைப் பற்றி ஒரு உளவாளி துப்பறிகிறார். அவர் ஏன் இத்தனையாண்டுகளுக்குப் பிறகு அதைத் துப்பறிய வேண்டும்..? அவர் என்ன கண்டுபிடிக்கிறார் என்பதுதான் மீதிக் கதை.
இதற்கிடையில் ஒரே பெண்ணை இரண்டு ஆண்கள் திருமணம் செய்து கொள்கிற ஒரு காதல் நாடகக் கதையும் இந்தப் படத்தில் இருக்கிறது. அந்த உளவாளி கதைக்கும் இந்த காதல் கதைக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அது என்ன என்பதற்கான பதிலும் படத்தில் இருக்கிறது..” என்று சஸ்பென்ஸாகவே சொல்கிறார் இயக்குநர் சரவணன் சுப்பையா.
20 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் நடந்த கதை என்றால் அதை எப்படி தேடுவது..?
The post அதிர்ச்சியான கிளைமாக்ஸை கொண்ட ‘மீண்டும்’ திரைப்படம் appeared first on Touring Talkies.
]]>