The post ஒரு பாடலால் ஒரு திருமணமே நடந்தது! appeared first on Touring Talkies.
]]>திரைப்படங்களை தயாரிக்க ஆசைப்பட்டு நிறைய பணங்களை இழந்தார் கவிஞர் கண்ணதாசன். கடன் கொடுத்தவர்கள் பணம் கேட்டு நெருக்க வீட்டை விற்கும் நிலைக்கும் சென்றார். அப்போது எம்.ஜி.ஆர் உதவி செய்ததாகவும் செய்திகள் உண்டு.
ஆனாலும் கடன் நெருக்கடிகள் முழுமையாக தீரவில்லை. அவரது மகளின் திருமண செலவுக்கு பணமில்லாமல் தவித்து வந்தார். அப்போது தெய்வம் என்கிற படத்தில் பாடல் எழுத அவருக்கு அழைப்பு வந்தது. அந்த படத்திற்கு இசையமைத்தவர் வயலின் வித்வான் குன்னக்குடி வைத்தியநாதன். அப்போது கண்ணதாசனை சோதிப்பதற்காக அவர் பல கடினமான மெட்டுக்களை வாசித்து காட்ட கண்ணதாசனோ சலிக்காமால் பாடலை சொல்லிக்கொண்டே இருந்தார்.
அப்போது ஒரு மெட்டுக்கு ‘மருதமலை மாமனியே முருகைய்யா.. தேவரின் குலம் காக்கும் வேலையா’ என கண்ணதாசன் சொல்ல பக்கத்து அறையிலிருந்து ஓடிவந்த தயாரிப்பாளர் சின்னப்பா தேவர் கண்ணதாசனின் கைகளை பற்றிக்கொண்டு அப்போதே ஒரு லட்சத்தை அவரின் கையில் வைத்தார். அந்த பணம் அவரின் மகள் திருமணத்தை நடத்த உதவியாக இருந்தது.
The post ஒரு பாடலால் ஒரு திருமணமே நடந்தது! appeared first on Touring Talkies.
]]>The post ஹீரோயினை பாடலிலேயே கிண்டலடித்த கண்ணதாசன்! appeared first on Touring Talkies.
]]>அன்னை இல்லம் திரைப்படத்தில் சிவாஜி கணேசன், தன்னுடைய காதலியான தேவிகாவை நினைத்து பாடுவது போல் ஒரு பாடல். அதை, ‘எண்ணிரண்டு 16 வயது..’ என துவங்கி இருந்தார் கண்ணதாசன்.
அந்தப் பாடல் வரியை கேட்ட இயக்குனரும் இசையமைப்பாளரும் தேவிகாவை பார்த்தால் உங்களுக்கு 16 வயது பெண் போலவா தெரிகிறது என்று நக்கலாக கேட்டிருக்கிறார்கள்.
அதற்கு கவிஞர் நன்றாக கேளுங்கள் எண்ணிரண்டு பதினாறு என்று நான் எழுதி இருக்கிறேன். இரண்டு 16, 32 அல்லவா என்று கேட்டு சிரித்திருக்கிறார். உண்மையில் தேவிகா இந்த படத்தில் நடிக்கும் பொழுது அவருக்கு 32 வயது தானாம். பொதுவாக நடிகைகள் தங்களுடைய வயதை வெளியில் சொல்ல விரும்ப மாட்டார்கள். ஆனால் இப்படி ஒரு பாட்டை எழுதி தேவிகாவை சிக்கலில் மாட்டி விட்டிருக்கிறார் கவிஞர்.
The post ஹீரோயினை பாடலிலேயே கிண்டலடித்த கண்ணதாசன்! appeared first on Touring Talkies.
]]>The post பாடல் எழுதுவதில் இந்த மூன்று விதிகள்!: கவிஞர் தாமரை appeared first on Touring Talkies.
]]>அதில் தாமரை, “பாடல்களில் தேவையில்லாத ஆங்கில வார்த்தைகளில் சேர்க்க மாட்டேன். ஆபாச வார்த்தைகளை சேர்க்க மாட்டேன். இரட்டை அர்த்தம் வரும் அர்த்தம் வரும் வார்த்தைகளை பயன்படுத்த மாட்டேன். இதுவே என்னுடைய மூன்று நிபந்தனைகள். சினிமாவில் நுழைந்த ஆரம்பத்தில் என்னுடைய அனுமதி இல்லாமல் பல பாடல்களின் வரிகள் சேர்க்கப்பட்டிருக்கிறது, மாற்றப்பட்டிருக்கின்றது.
ஆனால், காலப்போக்கில் என்னை புரிந்துகொண்டவர்கள் பாடல் சூழ்நிலைகளோடு என்னை தேடி வந்தார்கள். இந்த சமூகத்தை திருத்துகிறேனோ இல்லையோ கெடுக்கக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். மேலும், போதைப் பொருள்களை தூக்கி பிடிக்கும் பாடல்களுக்கு என்னிடம் இடம் இல்லை” என்று அந்த வீடியோவில் கூறியிருக்கிறார்.
The post பாடல் எழுதுவதில் இந்த மூன்று விதிகள்!: கவிஞர் தாமரை appeared first on Touring Talkies.
]]>The post வைரமுத்து – இளையராஜா! சங்கடத்தில் தவித்த பாரதிராஜா! appeared first on Touring Talkies.
]]>
பாரதிராஜா – இளையராஜா – வைரமுத்து கூட்டணியில் ஏராளமான பாடல்கள் ஹிட் ஆகின. ஆன்ல ஒரு கட்டத்தில் இளையராஜாவிடம் இருந்து மற்ற இருவரும் பிரிய வேண்டிய சூழல் ஏற்பட்டது.
ஒரு முறை ஒரு நிகழ்ச்சியில் இது குறித்து வைரமுத்துவிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர், “வைரமுத்துவிற்கு இளையராஜா பிரச்சனை, இளையராஜாவிற்கு வைரமுத்து பிரச்சனை” என்று பதிலளித்தார்.
இந்த நிலையில் பிரபல மூத்த பத்திரிக்கையாள் பிஸ்மி, ஒரு பேட்டியில் இது குறித்து ஒரு சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.
“கடலோரக் கவிதைகள்” திரைப்படத்தின் பாடல்கள் பதிவின்போது “பள்ளிக்கூடம் போகாமலே” என்ற பாடலை வைரமுத்து எழுதுவதாக இருந்தது. ஆனால் அதற்குள் அந்த பாடலை இளையராஜாவே எழுதிவிட்டார்.
வைரமுத்து இளையராஜாவின் ஸ்டூடியோவிற்கு போனபோது, இளையராஜா அவரது உதவியாளரை கொண்டு வைரமுத்துவை திரும்ப வீட்டிற்கே அனுப்பிவிட்டார்.
இதனை தொடர்ந்து பாரதிராஜா, “வேதம் புதிது” திரைப்படத்தை இயக்கியபோது இளையராஜா, “வைரமுத்து பாட்டெழுதுவதாக இருந்தால் நான் இசையமைக்கமாட்டேன்” என கூறினார்.
அதனை தொடர்ந்துதான் பாரதிராஜா “வேதம் புதிது” திரைப்படத்திற்கு தேவேந்திரனை இசை அமைக்க வைத்தார்” இவ்வாறு பிஸ்மி கூறினார்.
The post வைரமுத்து – இளையராஜா! சங்கடத்தில் தவித்த பாரதிராஜா! appeared first on Touring Talkies.
]]>