The post முதல் கணவரால் 2-ம் கணவருக்கு வந்த கோபம்!: குட்டி பத்மினியின் சோகம் appeared first on Touring Talkies.
]]>சமீபத்தில் இவர், தனது சினிமா வாழ்க்கை மற்றும் திருமண வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
“காதலித்து ஒருவரை திருமணம் செய்துகொண்டேன். குழந்தையும் பிறந்தது. தொலைக்காட்சி தொடர்களை தயாரித்து பிரபலமாக இருந்தேன். அது அவருக்குப் பிடிக்கவில்லை. வீண் தகராறு செய்தார். ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் பிரிந்தோம்.
வேதனையில் இருந்த எனக்கும் என் குழந்தைக்கும் ஆதரவாக இருப்பார் என நம்பி இன்னொருவரை திருமணம் செய்தேன்.
மகிழ்ச்சியாகத்தான் குடும்பம் போய்க்கொண்டு இருந்தது. இந்த நிலையில் என் முதல் கணவர் விபத்தில் சிக்க சிரமப்படுகிறார் என்பதை அறிந்து அவருக்கு உதவினேன். என்ன இருந்தாலும் அவர் என்னுடன் வாழ்ந்தவர்.. என் மகளின் தந்தை.
ஆனால் இப்படி நான் உதவி செய்வது இரண்டாவது கணவருக்குப் பிடிக்கவில்லை. அவரும் பிரிந்தார்” என தனது வாழ்க்கை சோகத்தை பகிர்ந்துள்ளார் குட்டி பத்மினி.
The post முதல் கணவரால் 2-ம் கணவருக்கு வந்த கோபம்!: குட்டி பத்மினியின் சோகம் appeared first on Touring Talkies.
]]>The post “ஸ்ரீதேவிக்கு மோசமான பழக்கம்! அம்மாதான் காரணம்!”: appeared first on Touring Talkies.
]]>கடந்த 2018 ஆம் ஆண்டு துபாயில் நடைபெற்ற உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சிக்கு குடும்பத்தோடு நடிகை ஸ்ரீதேவி சென்று இருந்தார். அப்போது ர் குளிக்கும் டப்பில் மூழ்கி உயிரிழந்த நிலையில் கடந்துள்ளார். உடற்கூறு ஆய்வில் மது போதையில் அவர் இறந்துவிட்டார் என்பது தெரிந்தது.
இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவியின் நெருக்கமான தோழிகளில் ஒருவரான நடிகை குஷ்பு பத்மினி ஸ்ரீதேவி குறித்த உண்மை சம்பவம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். “ ஸ்ரீதேவியின் அம்மா குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்தார். தினமும் மது அருந்துவதை வழக்கமாக வைத்திருந்தார். ஸ்ரீதேவிக்கும் இரவு தூங்குவதற்கு ஒயின் ஊற்றிக் கொடுத்து மதுப் பழக்கத்திற்கு அடிமை ஆக்கி விட்டார். தனது தாயால் மதுப்பழக்கத்திற்கு நடிகை ஸ்ரீதேவியும் அடிமையானார். இறுதியாக அவரது வாழ்க்கை இப்படி முடியும் என எதிர்பார்க்கவில்லை” என வருத்ததுடன் தெரிவித்தார்.
The post “ஸ்ரீதேவிக்கு மோசமான பழக்கம்! அம்மாதான் காரணம்!”: appeared first on Touring Talkies.
]]>The post எங்களுக்கு எவ்ளோ எரியும்!: குட்டி பத்மினிக்கு நடிகை அபிராமி பதில் appeared first on Touring Talkies.
]]>ன்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் உள்ள பேராசிரியர் ஹரிபத்மன் மீது மகளிர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிக்பாஸ் அபிராமி, இந்த கலாஷேத்ரா விவகாரம் குறித்தும் பேசினார். ஏனெனில் அவர் அந்த கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவி ஆவார்.
அவர் ஒரு தரப்பில் இருக்கும் குற்றச்சாட்டை மட்டும் வைத்து பேசக்கூடாது. இதன் மறுபக்கத்தையும் தெரிந்துகொள்ள வேண்டும். நான் இந்த கல்லூரியில் பயின்ற போதெல்லாம் இதுபோன்ற எந்தவித சம்பவமும் நடந்ததில்லை. கலாஷேத்ரா என்கிற பெயரை ஒழுங்காக கூட சொல்லத் தெரியாதவர்கள் எல்லாம் இந்த கல்லூரியை பற்றி குறை சொல்வதை பார்க்கும் போது மனதிற்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.
எந்த ஒரு பாலியல் தொல்லை நடந்தாலும் அதைப்பற்றி அப்போதே பேச வேண்டும். இதேபோல் ஒருவர் ஏற்கனவே செய்திருக்கிறார் என கூறியிருந்தார்.
மேலும் இதுகுறித்து பேட்டி அளித்த நடிகை அபிராமி, தான் 10 ஆண்டுகளுக்கு முன் படித்தபோது இதுபோன்று நடந்ததில்லை. இந்த விவகாரம் அரசியலாக்கப்படுகிறது. ஹரிபத்மன் மிகவும் நல்லவர் என பேட்டி அளித்து இருந்தார்.
அவரின் இந்த பேட்டியை பார்த்த நடிகை குட்டி பத்மினி சமீபத்தில் இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் பேசி உள்ளார். அதில் “நீங்கள் திரைத்துறையில் இருப்பதால் ஒருவர் உங்களை தொடுவது என்பது எந்த பீலும் உங்களுக்கு இருக்காது. ஆனால் மற்ற பெண்களும் அப்படியா? என அபிராமியிடம் கேள்வி எழுப்பி இருந்தார் குட்டி பத்மினி.
இதற்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அபிராமி பதிலடி கொடுத்து பதிவிட்டுள்ளார். அதில், “திரைத்துறையில் இருக்கும் எல்லா பெண்களும் உங்களை மாதிரி இருக்க மாட்டார்கள் குட்டி பத்மினி ஆண்ட்டி. உங்களுக்கு எந்த பீலிங்கும் வரவில்லை என நினைக்கும் போது வருத்தமாக உள்ளது.
இன்னொரு விஷயம் சொல்ல வேண்டும் உங்களுக்கே பத்திக்கிட்டு வருதுன்னா, நல்ல குடும்பத்துல பிறந்த எங்களுக்கு எவ்ளோ எரியும் ஆண்ட்டி! நாங்க பாத்துக்குறோம் ஆண்ட்டி. இந்த வயசான காலத்துல நீங்க உடம்ப பாத்துக்கோங்க” என்று பதில் கொடுத்து இருக்கிறார்.
The post எங்களுக்கு எவ்ளோ எரியும்!: குட்டி பத்மினிக்கு நடிகை அபிராமி பதில் appeared first on Touring Talkies.
]]>