Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
director selvaraghavan – Touring Talkies https://touringtalkies.co Wed, 10 Mar 2021 11:01:32 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png director selvaraghavan – Touring Talkies https://touringtalkies.co 32 32 ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் சர்ச்சையானது நாயகனின் பெயர்..! https://touringtalkies.co/heros-name-was-crisis-in-nenjam-marappathillai-movie/ Wed, 10 Mar 2021 11:00:49 +0000 https://touringtalkies.co/?p=13501 இயக்குநர் செல்வராகவனின் இயக்கத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா, நந்திதா ஸ்வேதா, ரெஜினா கேஸண்ட்ரா நடிப்பில் உருவான திரைப்படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. இத்திரைப்படம் உருவாகி 5 ஆண்டுகள் கழித்து சென்ற வாரம்தான் வெளியானது. படம் ரசிகர்களிடையே பரவலாக வரவேற்பைப் பெற்றுள்ளது. கிளைமாக்ஸ் மட்டுமே ரசிகர்களுக்குப் பிடிக்கவில்லை என்றார்கள். செல்வராகவனின் வழக்கமான கதையம்சம் இல்லாமல் இது பேய்க் கதையாக இருந்தாலும் இயக்கம் சிறப்பாக இருந்ததால் தப்பித்தார் செல்வராகவன். ஆனால் படத்தில் நாயகனான எஸ்.ஜே.சூர்யா ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் பெயரை ‘இராமசாமி’ என்று வைத்திருப்பது […]

The post ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் சர்ச்சையானது நாயகனின் பெயர்..! appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் செல்வராகவனின் இயக்கத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா, நந்திதா ஸ்வேதா, ரெஜினா கேஸண்ட்ரா நடிப்பில் உருவான திரைப்படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’.

இத்திரைப்படம் உருவாகி 5 ஆண்டுகள் கழித்து சென்ற வாரம்தான் வெளியானது. படம் ரசிகர்களிடையே பரவலாக வரவேற்பைப் பெற்றுள்ளது. கிளைமாக்ஸ் மட்டுமே ரசிகர்களுக்குப் பிடிக்கவில்லை என்றார்கள்.

செல்வராகவனின் வழக்கமான கதையம்சம் இல்லாமல் இது பேய்க் கதையாக இருந்தாலும் இயக்கம் சிறப்பாக இருந்ததால் தப்பித்தார் செல்வராகவன்.

ஆனால் படத்தில் நாயகனான எஸ்.ஜே.சூர்யா ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் பெயரை ‘இராமசாமி’ என்று வைத்திருப்பது பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கிறது.

இந்த ‘இராமசாமி’ என்ற பெயரை சுருக்கி ‘இராம்ஸே’ என்று வைத்துக் கொண்டதாக படத்திலேயே ஒரு வசனம்கூட வருகிறது.

ஆனால் எஸ்.ஜே.சூர்யாவின் கதாபாத்திரப்படி அவர் தன் மகனைப் பார்த்துக் கொள்ள வரும் ரெஜினாவை பாலியல் பலாத்காரம் செய்கிறார். கூடவே அவர் வீட்டில் வேலை செய்யும் 4 வேலையாட்களும் இதற்கு உடந்தையாக இருக்கிறார்கள். கடைசியாக ரெஜினாவை கொலை செய்து புதைத்தும் விடுகிறார்கள்.

புதைக்கப்பட்ட ரெஜினா பேயாக மீண்டு வந்து எஸ்.ஜே.சூர்யாவை பழி வாங்குகிறார். படத்தின் கதைப்படி ரெஜினா கிறிஸ்தவர். இதனால் இந்த ‘இராமசாமி’ என்ற பெயரும் சர்ச்சையாகியுள்ளது.

திராவிடர் கழகத்தை நிறுவிய தந்தை பெரியாரின் இயற்பெயர் ‘இராமசாமி நாயக்கர்’ என்பது அனைவரும் அறிந்ததே. அந்தப் பெயரை இப்படியொரு கிரிமினலுக்கு வைத்ததுடன்.. கூடவே ஒரு கிறிஸ்தவ பெண்ணால் அவர் கொல்லப்படுவதுபோலவும் காட்சிகள் வைத்திருப்பது செல்வராகவன் வேண்டுமென்றே திட்டமிட்டு செய்திருக்கும் உள்ளடி வேலை என்று சமூக வலைத்தளங்களில் பலரும் எழுதி வருகிறார்கள்.

நேற்றுகூட ஒரு வீடியோ பேட்டியில் இது பற்றி செல்வராகவனிடம் கேட்டபோது முதலில் ‘அது உண்மை’ என்று ஒத்துக் கொண்டார் செல்வராகவன். ஆனால் சில மணி நேரங்கள் கழித்து, ‘அந்தப் பேட்டியாளர் கேட்ட கேள்வி புரியாமல் நான் பதில் அளித்துவிட்டதாகச்’ சொல்லியிருக்கிறார் செல்வராகவன்.

ஆனால், இப்போதும் ‘இராமசாமி’ என்ற பெயர்ப் பொருத்தம் ஏன் அமைந்தது என்பதற்கான விளக்கத்தை செல்வராகவன் சொல்லவில்லை.

செல்வராகவனின் அப்பாவான இயக்குநர் கஸ்தூரிராஜா, தற்போது பாரதீய ஜனதா கட்சியில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் சர்ச்சையானது நாயகனின் பெயர்..! appeared first on Touring Talkies.

]]>
“புதுப்பேட்டை படத்தின் 2-ம் பாகமும் உருவாகப் போகிறது” – இயக்குநர் செல்வராகவன் தகவல்..! https://touringtalkies.co/pudhupettai-2-nd-part-will-begninning-very-soon/ Fri, 22 Jan 2021 09:31:27 +0000 https://touringtalkies.co/?p=12325 நடிகர் தனுஷ் மற்றும் அவரது அண்ணனான செல்வராகவன் இணைந்து இதுவரையிலும் 7 திரைப்படங்களை வழங்கியிருக்கிறார்கள். சமீபத்தில் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகப் போவதாக செல்வராகவன் அறிவித்திருந்தார். இந்தப் படம் 2014-ம் ஆண்டுதான் வெளியாகும் என்பதையும் இப்போதே சொல்லிவிட்டார். இதற்குப் பிறகு தயாரிப்பாளர் தாணுவின் தயாரிப்பில் நடிகர் தனுஷின் நடிப்பில் ஒரு படத்தை இயக்குநர் செல்வராகவன் இயக்கப் போவதாகத் தகவல் வெளியானது. இந்தப் படத்திற்கு ‘நானே வருவேன்’ என்று தலைப்பிட்டுள்ளனர். இப்போது 2014-ம் ஆண்டு வெளியாகப் […]

The post “புதுப்பேட்டை படத்தின் 2-ம் பாகமும் உருவாகப் போகிறது” – இயக்குநர் செல்வராகவன் தகவல்..! appeared first on Touring Talkies.

]]>
நடிகர் தனுஷ் மற்றும் அவரது அண்ணனான செல்வராகவன் இணைந்து இதுவரையிலும் 7 திரைப்படங்களை வழங்கியிருக்கிறார்கள்.

சமீபத்தில் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகப் போவதாக செல்வராகவன் அறிவித்திருந்தார். இந்தப் படம் 2014-ம் ஆண்டுதான் வெளியாகும் என்பதையும் இப்போதே சொல்லிவிட்டார்.

இதற்குப் பிறகு தயாரிப்பாளர் தாணுவின் தயாரிப்பில் நடிகர் தனுஷின் நடிப்பில் ஒரு படத்தை இயக்குநர் செல்வராகவன் இயக்கப் போவதாகத் தகவல் வெளியானது. இந்தப் படத்திற்கு ‘நானே வருவேன்’ என்று தலைப்பிட்டுள்ளனர்.

இப்போது 2014-ம் ஆண்டு வெளியாகப் போகும் ‘ஆயிரத்தில் ஒருவன் 2-ம் பாகம்’ படத்திற்கும், ‘நானே வருவேன்’ படத்திற்கும் இடையில் ஒரு புதிய படத்தை இயக்கப் போவதாக இயக்குநர் செல்வராகவன் அறிவித்திருக்கிறார்.

இந்தப் படம் தனுஷ் மற்றும் தன்னுடைய ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் ‘புதுப்பேட்டை படத்தின் 2-ம் பாகம்’ என்று சொல்லியிருக்கிறார் செல்வராகவன்.

இந்தத் தொடர் அறிவிப்புகளே அதிரடியாக இருக்கிறது.

தனுஷ்-செல்வராகவன் கூட்டணி நிச்சயம் வெற்றி கூட்டணி என்பதால் இப்போதே அவர்களது ரசிகர்களிடையே இந்த அறிவுப்புகள் பெரும் எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது.

The post “புதுப்பேட்டை படத்தின் 2-ம் பாகமும் உருவாகப் போகிறது” – இயக்குநர் செல்வராகவன் தகவல்..! appeared first on Touring Talkies.

]]>
தனுஷ்-செல்வராகவன்-யுவன் சங்கர் ராஜா ஜோடி மீண்டும் இணைகிறது..! https://touringtalkies.co/dhanush-selva-yuvan-shankar-raja-combo-re-united-for-new-movie/ Thu, 24 Dec 2020 05:18:39 +0000 https://touringtalkies.co/?p=11411 தமிழ்ச் சினிமாவில் புதிய அலையைத் தோற்றுவித்த தனுஷ்-செல்வராகவன் கூட்டணி மீண்டும் இணைகிறது. நடிகர் தனுஷ் 2002-ம் ஆண்டில் ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலமாகத் தமிழ்த் திரையுலகத்திற்கு அறிமுகமானார். இந்தப் படத்தை இயக்கியவர் அவருடைய அண்ணன் செல்வராகவன். இதைத் தொடர்ந்து 2003-ம் ஆண்டு ‘காதல் கொண்டேன்’, 2006-ம் ஆண்டு ‘புதுப்பேட்டை’, 2011-ம் ஆண்டில் ‘மயக்கம் என்ன’ ஆகிய படங்களில் செல்வராகவனின் இயக்கத்தில் நடித்திருந்தார் தனுஷ். இப்போது 5-வது முறையாக மீண்டும் தனது அண்ணன் செல்வராகவனின் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கிறார். […]

The post தனுஷ்-செல்வராகவன்-யுவன் சங்கர் ராஜா ஜோடி மீண்டும் இணைகிறது..! appeared first on Touring Talkies.

]]>
தமிழ்ச் சினிமாவில் புதிய அலையைத் தோற்றுவித்த தனுஷ்-செல்வராகவன் கூட்டணி மீண்டும் இணைகிறது.

நடிகர் தனுஷ் 2002-ம் ஆண்டில் ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலமாகத் தமிழ்த் திரையுலகத்திற்கு அறிமுகமானார். இந்தப் படத்தை இயக்கியவர் அவருடைய அண்ணன் செல்வராகவன்.

இதைத் தொடர்ந்து 2003-ம் ஆண்டு ‘காதல் கொண்டேன்’, 2006-ம் ஆண்டு ‘புதுப்பேட்டை’, 2011-ம் ஆண்டில் ‘மயக்கம் என்ன’ ஆகிய படங்களில் செல்வராகவனின் இயக்கத்தில் நடித்திருந்தார் தனுஷ்.

இப்போது 5-வது முறையாக மீண்டும் தனது அண்ணன் செல்வராகவனின் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கிறார்.

படத்திற்கு செல்வராகவனின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான அரவிந்த் கிருஷ்ணா பணியாற்றப் போகிறார்.

பெயர் வைக்கப்படாத இந்தப் படத்தில் இசையமைப்பளராக யுவன் சங்கர் ராஜா அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

செல்வராகவன்-யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் உருவான பாடல்கள் அனைத்துமே இன்றைய இளைய தலைமுறையினரால் மறக்க முடியாத பாடல்கள். இந்தக் கூட்டணி இதிலும் ஹிட் அடிக்கும் என்று நம்பலாம்.

என்ன.. இதில் இருக்கும் ஒரேயொரு வருத்தம்..?! இந்தக் கூட்டணியில் இதுவரையிலும் இடம் பெற்றிருந்த கவிஞர் நா.முத்துக்குமார் இல்லையே என்பதுதான்.

இது குறித்து தனது டிவிட்டரில் செய்தியை வெளியிட்ட தனுஷ், “செல்வராகவன், யுவன், அரவிந்த் கிருஷ்ணா.. நல்லது.. நல்லது.. நான் இவர்களுடன்தான் துவங்கினேன். மீண்டும் இவர்களுடனேயே இணைந்ததில் எனக்குப் பெரும் மகிழ்ச்சி. நான் இன்று இங்கே இருப்பதற்குக் காரணம் என்னை உருவாக்கிய எனது அண்ணன் செல்வராகவன்தான். இந்த முறையும் நான் நிச்சயமாக அவரை திருப்தி செய்வேன் என்று நம்புகிறேன்…” எனக் குறிப்பிட்டுள்ளார்.

The post தனுஷ்-செல்வராகவன்-யுவன் சங்கர் ராஜா ஜோடி மீண்டும் இணைகிறது..! appeared first on Touring Talkies.

]]>