Friday, April 12, 2024

“புதுப்பேட்டை படத்தின் 2-ம் பாகமும் உருவாகப் போகிறது” – இயக்குநர் செல்வராகவன் தகவல்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் தனுஷ் மற்றும் அவரது அண்ணனான செல்வராகவன் இணைந்து இதுவரையிலும் 7 திரைப்படங்களை வழங்கியிருக்கிறார்கள்.

சமீபத்தில் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகப் போவதாக செல்வராகவன் அறிவித்திருந்தார். இந்தப் படம் 2014-ம் ஆண்டுதான் வெளியாகும் என்பதையும் இப்போதே சொல்லிவிட்டார்.

இதற்குப் பிறகு தயாரிப்பாளர் தாணுவின் தயாரிப்பில் நடிகர் தனுஷின் நடிப்பில் ஒரு படத்தை இயக்குநர் செல்வராகவன் இயக்கப் போவதாகத் தகவல் வெளியானது. இந்தப் படத்திற்கு ‘நானே வருவேன்’ என்று தலைப்பிட்டுள்ளனர்.

இப்போது 2014-ம் ஆண்டு வெளியாகப் போகும் ‘ஆயிரத்தில் ஒருவன் 2-ம் பாகம்’ படத்திற்கும், ‘நானே வருவேன்’ படத்திற்கும் இடையில் ஒரு புதிய படத்தை இயக்கப் போவதாக இயக்குநர் செல்வராகவன் அறிவித்திருக்கிறார்.

இந்தப் படம் தனுஷ் மற்றும் தன்னுடைய ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் ‘புதுப்பேட்டை படத்தின் 2-ம் பாகம்’ என்று சொல்லியிருக்கிறார் செல்வராகவன்.

இந்தத் தொடர் அறிவிப்புகளே அதிரடியாக இருக்கிறது.

தனுஷ்-செல்வராகவன் கூட்டணி நிச்சயம் வெற்றி கூட்டணி என்பதால் இப்போதே அவர்களது ரசிகர்களிடையே இந்த அறிவுப்புகள் பெரும் எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது.

- Advertisement -

Read more

Local News