Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
dindigul – Touring Talkies https://touringtalkies.co Sat, 24 Jul 2021 06:38:20 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png dindigul – Touring Talkies https://touringtalkies.co 32 32 மிஷ்கின் இயக்கும் ‘பிசாசு-2’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது https://touringtalkies.co/pisaasu-2-movie-shooting-was-restarted-in-dindugal/ Sat, 24 Jul 2021 06:37:38 +0000 https://touringtalkies.co/?p=16461 இயக்குநர் மிஷ்கினின் இயக்கத்தில் ‘பிசாசு-2’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியுள்ளது. இயக்குநர் மிஷ்கின் இயக்கி வரும் புதிய திரைப்படம் ‘பிசாசு-2’. அவருடைய இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பையும், பெயரையும் பெற்றுக் கொடுத்த பிசாசு படத்தின் அடுத்த பாகமாக இத்திரைப்படம் உருவாகி வருகிறது. ஆனால் கதையின் தொடர்ச்சியில்லையாம். இந்தப் படத்தில் ஆண்ட்ரியா, பூர்ணாஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தில் ஒரு காட்சியில் ஆண்ட்ரியா முழு நிர்வாணமாக நடித்ததாகக்கூட செய்திகள் பரவின. கொரோனா-2-ன் தாக்குதலின்போது இந்தப் படத்தின் […]

The post மிஷ்கின் இயக்கும் ‘பிசாசு-2’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் மிஷ்கினின் இயக்கத்தில் பிசாசு-2’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியுள்ளது.

இயக்குநர் மிஷ்கின் இயக்கி வரும் புதிய திரைப்படம் ‘பிசாசு-2’. அவருடைய இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பையும், பெயரையும் பெற்றுக் கொடுத்த பிசாசு படத்தின் அடுத்த பாகமாக இத்திரைப்படம் உருவாகி வருகிறது. ஆனால் கதையின் தொடர்ச்சியில்லையாம்.

இந்தப் படத்தில் ஆண்ட்ரியா, பூர்ணாஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தில் ஒரு காட்சியில் ஆண்ட்ரியா முழு நிர்வாணமாக நடித்ததாகக்கூட செய்திகள் பரவின.

கொரோனா-2-ன் தாக்குதலின்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. லாக் டவுன் காரணமாக இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இப்போது லாக் டவுன் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதால் ‘பிசாசு-2’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியுள்ளது. திண்டுக்கல் அருகேயுள்ள மீனாட்சி நாயக்கன்பட்டியில் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறதாம்.

இந்த ‘பிசாசு-2’ படத்தில் அண்மையில் நடிகை நமீதா கிருஷ்ணமூர்த்தியும் நடிக்கிறார் என்று லேட்டஸ்ட் தகவல்கள் தெரிவித்துள்ளன.

மேலும், இந்த படத்தில் விஜய் சேதுபதி பேய் ஓட்டுபவர் கதாபாத்திரத்தில் கெஸ்ட் ரோல் செய்யவிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனாலேயே இந்த பிசாசு-2’ படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

The post மிஷ்கின் இயக்கும் ‘பிசாசு-2’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது appeared first on Touring Talkies.

]]>
மின்னல் வேகத்தில் சுசீந்திரனின் படத்தில் நடித்து முடித்த சிம்பு..! https://touringtalkies.co/actor-simbu-completed-suseenthiran-movie/ Sun, 08 Nov 2020 10:42:24 +0000 https://touringtalkies.co/?p=9832 இயக்குநர் சுசீந்திரனுக்கு தமிழ்த் திரையுலகத்தில் ஒரு நல்ல பெயர் உண்டு. “ஏக் தம்மில் ஒரு படத்தை முடித்துவிடுவார்…” என்பார்கள் தமிழ்த் திரையுலகத்தினர். இந்த நிலையில், சிம்புவை வைத்து சுசீந்திரன் ஒரு படத்தை இயக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியானபோதே.. சிம்புவை வைத்தா…? ஒரே ஷெட்யூலில் படத்தை முடித்துவிடுவாரா..? படம் முடிஞ்சிருமா..? சிம்பு வந்திருவாரா..? என்றெல்லாம் கேலிகளும், கிண்டல்களும் கோடம்பாக்கத்தில் பறந்து வந்தன. ஆனால், இது பற்றி எதையும் கண்டு கொள்ளாமல் சிம்புவைத் திண்டுக்கல்லுக்குத் தூக்கிக் கொண்டு போன […]

The post மின்னல் வேகத்தில் சுசீந்திரனின் படத்தில் நடித்து முடித்த சிம்பு..! appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் சுசீந்திரனுக்கு தமிழ்த் திரையுலகத்தில் ஒரு நல்ல பெயர் உண்டு. “ஏக் தம்மில் ஒரு படத்தை முடித்துவிடுவார்…” என்பார்கள் தமிழ்த் திரையுலகத்தினர்.

இந்த நிலையில், சிம்புவை வைத்து சுசீந்திரன் ஒரு படத்தை இயக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியானபோதே.. சிம்புவை வைத்தா…? ஒரே ஷெட்யூலில் படத்தை முடித்துவிடுவாரா..? படம் முடிஞ்சிருமா..? சிம்பு வந்திருவாரா..? என்றெல்லாம் கேலிகளும், கிண்டல்களும் கோடம்பாக்கத்தில் பறந்து வந்தன.

ஆனால், இது பற்றி எதையும் கண்டு கொள்ளாமல் சிம்புவைத் திண்டுக்கல்லுக்குத் தூக்கிக் கொண்டு போன சுசீந்திரன் சொன்னதுபோலவே… எண்ணி முப்பதே நாட்களில் மொத்தப் படத்தையும் முடித்துவிட்டு சென்னைக்கு வந்துவிட்டார். வந்த கையோடு அடுத்த நாளே சிம்புவை டப்பிங்கும் பேச வைத்துவிட்டாராம்.

இப்படி சிம்பு, சுசீந்திரனிடம் சமர்த்துப் பிள்ளையாக மாறியதன் மர்மம் என்ன என்பது தெரியாமல் முழிக்கிறார்கள் கோடம்பாக்கத்து கிசுகிசு மன்னர்கள்.

இதற்கிடையில் நாளை நவம்பர் 9-ம் தேதி துவங்குவதாக இருந்த ‘மாநாடு’ ஷூட்டிங் ஒரு நாள் தள்ளிப் போய் 10-ம் தேதி துவங்குகிறதாம். இதுகூட சுசீந்திரன் படத்திற்காக சிம்பு, டப்பிங் பேசி முடிக்கத்தானாம்.

பாண்டிச்சேரியில் வரும் 10-ம் தேதி துவங்கும் ‘மாநாடு’ ஷூட்டிங் தொடர்ச்சியாக 40 நாட்கள் நடைபெறும் என்று தெரிகிறது. இதில் முதல் 15 நாட்கள் சிம்பு தொடர்ச்சியாக நடிப்பாராம். அடுத்து ஒரு 15 நாட்கள் இடைவெளிவிட்டு சிம்புவுக்கு விடுமுறை தரப்பட்டுள்ளதாம்.

இந்த விடுமுறைக்குக்கூட இன்னொரு காரணம் சொல்கிறார்கள். ’மாநாடு’ படத்தின் இயக்குநரான வெங்கட் பிரபு, நடிகர் அசோக் செல்வனை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறாராம்.

அந்தப் படத்தின் பாதி நாட்கள் ஷூட்டிங் இப்போதே முடிந்துவிட்டதாம். இன்னும் ஒரு 15 நாட்கள் கிடைத்தால் இந்தப் படம் முடிந்துவிடுமாம். இதனால் ‘மாநாடு’ படத்தின் இடையில் கிடைக்கும் அந்த 15 நாள் இடைவெளியில் அசோக் செல்வனின் படத்தை இயக்கி முடிப்பார் வெங்கட் பிரபு என்கிறது ‘மாநாடு’ வட்டாராம்.

The post மின்னல் வேகத்தில் சுசீந்திரனின் படத்தில் நடித்து முடித்த சிம்பு..! appeared first on Touring Talkies.

]]>
சிம்பு பிடித்தது பிளாஸ்டிக் பாம்பு – தயாரிப்பாளர் தரப்பு தகவல்..! https://touringtalkies.co/simbu-snake-eeswaran-movie-news/ Sat, 07 Nov 2020 06:30:26 +0000 https://touringtalkies.co/?p=9781 சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் ‘ஈஸ்வரன்’ படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு திண்டுக்கல் பகுதியில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் அந்தப் படப்பிடிப்புத் தளத்தில் படத்தின் நாயகனான சிம்பு பாம்பு பிடித்தது போன்ற காட்சி ஊடகங்களில் வீடியோவாக வெளியானது. இதைப் பார்த்து சமூக ஆர்வலர் ஒருவர் வனத்துறையிடம் புகார் கொடுத்தார். இந்தப் புகாரையடுத்து இது குறித்து அந்தப் படத்தின் தயாரிப்பு தரப்பு செய்தியொன்றை வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியில், “உண்மையில், அந்தக் காட்சி போலியான ப்ளாஸ்டிக் பாம்பு […]

The post சிம்பு பிடித்தது பிளாஸ்டிக் பாம்பு – தயாரிப்பாளர் தரப்பு தகவல்..! appeared first on Touring Talkies.

]]>
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் ‘ஈஸ்வரன்’ படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு திண்டுக்கல் பகுதியில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் அந்தப் படப்பிடிப்புத் தளத்தில் படத்தின் நாயகனான சிம்பு பாம்பு பிடித்தது போன்ற காட்சி ஊடகங்களில் வீடியோவாக வெளியானது.

இதைப் பார்த்து சமூக ஆர்வலர் ஒருவர் வனத்துறையிடம் புகார் கொடுத்தார். இந்தப் புகாரையடுத்து இது குறித்து அந்தப் படத்தின் தயாரிப்பு தரப்பு செய்தியொன்றை வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியில், “உண்மையில், அந்தக் காட்சி போலியான ப்ளாஸ்டிக் பாம்பு போன்ற ஒன்றை வைத்து படமாக்கினோம். அது படத்தில் நிஜ பாம்பு போன்று கிராபிக்ஸ் செய்யப்படவுள்ளது.

இந்தக் காட்சியைப் பற்றிய செய்தியையும், புகைப்படத்தையும் தயாரிப்பு நிறுவனம் சார்பாகவோ மற்றவர்கள் மூலமாகவோ அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை.

கணினி கிராபிக்ஸ் செய்யும்போது இந்த வீடியோ சில நபர்களால் கசிந்துள்ளது. எங்கள் தரப்பிலிருந்து காட்சிகள் எவ்வாறு கசிந்தன என்பது பற்றி நாங்கள் தற்போது விசாரித்து வருகின்றோம்.

இது சம்பந்தமாக சமூக ஆர்வலர் ஒருவர் அளித்த புகார் தொடர்பாக, வனத்துறை அதிகாரி கிளமண்ட் எடிசன் எங்களை விசாரணைக்கு அழைத்தார்.

நாங்கள் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து எங்கள் தரப்பு விளக்கத்தை தெளிவுபடுத்தினோம். அதற்கு உண்டான ஆதாரங்களை விரைவில் சமர்ப்பிப்பதாக தெரிவித்துள்ளோம்.

படத்தின் முழு படப்பிடிப்பும் தமிழக அரசின் வழிகாட்டிதலைக் கடைப்பிடித்து நடைபெற்று வருகிறது…” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சிம்பு பிடித்தது பிளாஸ்டிக் பாம்பு – தயாரிப்பாளர் தரப்பு தகவல்..! appeared first on Touring Talkies.

]]>