The post தனுஷை அறைந்த செல்வராகவன்! appeared first on Touring Talkies.
]]> இயக்குனர் கஸ்தூரி ராஜா என பெயர் வந்தாலும் பல காட்சிகளை இயக்கியது தனுஷின் அண்ணன் செல்வராகவன்தான்.
அடுத்து செல்வராகவன் தம்பி தனுஷை வைத்து இயக்கிய திரைப்படம் காதல் கொண்டேன். இப்படத்தில் சோனியா அகர்வால் கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது ஒரு காட்சியில் தனுஷ் சரியாக நடிக்கவில்லை.
அண்ணன் செல்வராகவன் ரொம்ப பொறுமையாக தனுஷுக்கு சொல்லி கொடுத்திருக்கிறார், ஆனால் தனுஷ் மறுபடியும் நிறைய டேக் எடுத்திருக்கிறார். ஒரு கட்டத்தில் செல்வராகவன் கோபத்தில் எல்லோர் முன்னிலையிலும் தனுஷுன் கன்னத்தில் பளார் என ஒரு அறைவிட்டார்.
உடனே தனுஷ் அழுதுகொண்டே அறைக்குள் போய்விட்டார்.
அப்போது அப்படத்தின் ஒளிப்பதிவாளர் செல்வராகவனிடம் ‘அவர் இப்பதான நடிக்க வந்துருக்கிறார்.. அவரை ஏன் அடிச்சிங்க? என கேட்டிருக்கிறார்’. மேலும் செல்வராகவனுடைய உதவியாளர்கள் தனுஷை சமாதானம் செய்து மீண்டும் அழைத்து வந்தனர்.
இந்த தகவலைஇயக்குநர் மித்ரன் ஜவகர் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
The post தனுஷை அறைந்த செல்வராகவன்! appeared first on Touring Talkies.
]]>The post தள்ளிய ரசிகர்கள்! தடுக்காத தனுஷ்! appeared first on Touring Talkies.
]]>இந்த நிலையிலும் தனது ரசிகர்கள் மீது மாறா அன்பு கொண்டவர் தனுஷ். படப்பிடிப்பின் போதுகூட, தன்னை சந்திக்க வரும் ரசிகர்களை அவர் தவிர்ப்பதே இல்லை. அவர்களுக்கு என்று நேரம் ஒதுக்கி அன்புடன் பேசுவார்.
இந்த குணம் அவருக்கு எப்போதுமே உண்டு என்பதற்கு ஒரு சம்பவம்.
“துள்ளுவதோ இளமை” திரைப்படத்துக்குப் பிறகு அவர், “காதல் கொண்டேன்” திரைப்படத்தில் நடித்தார். அத்திரைப்படம் தனுஷிற்கு ஒரு முக்கிய திருப்புமுனையான திரைப்படமாக அமைந்தது. அவரின் நடிப்பை பெரிதும் வியந்து பாராட்டினர்.
“காதல் கொண்டேன்” திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் நடித்த “திருடா திருடி” திரைப்படமும் வெற்றி பெற்றது. அடுத்து வெளியான திருடா திருடி படம் பிளாக் பஸ்டர் திரைப்படமாக உருவானது. இதனால் ரசிகர்கள் பெருகினர்.
இந்த நிலையில் ஒரு முறை வெளிநாட்டில் இருந்து திரும்பினார் தனுஷ். விமான நிலையத்தில் இருந்து வெளிவந்தபோது ரசிகர்கள் கூட்டம் சூழ்ந்துகொண்டது. அனைவரும் இவரிடம் ஆட்டோகிராஃப் வாங்க துடித்தனர்.
நெரிசல் அதிகமாக, ஒரு கட்டத்தில் தவறி விழுந்துவிட்டார் தனுஷ். அனைவரும் பதறிவிட்டார்கள். அதோடு, கடுமையா திட்டப்போகிறார் என நினைத்தனர்.
ஆனால் எழுந்த தனுஷ் முகத்தில் புன்னகையுடன் மீண்டும் ரசிகர்களுக்கு ஆட்டோ கிராப் போட்டுக்கொடுத்தார்.
இது குறித்து பின்னாட்களில் அவர் கூறும்போது, “ரசிகர்கள் என்மீதான அன்பினால்தானே ஆட்டோகிராப் வாங்க சூழ்ந்துகொள்கிறார்கள்.. அந்த அன்பை நிராகரிக்க முடியாதே..” என்றார்.
இதனால்தான் அவரது ரசிகர்கள், தனுஷ் மீது அத்தனை ஈடுபாட்டுடன் இருக்கிறார்கள்.
The post தள்ளிய ரசிகர்கள்! தடுக்காத தனுஷ்! appeared first on Touring Talkies.
]]>