The post சாப்பாட்டுக்காக படப்பிடிப்பை நிறுத்திய கமல்! appeared first on Touring Talkies.
]]>“கமல் அறிமுகமான படம் களத்தூர் கண்ணம்மா. அப்போது அவர் சிறுவன். அந்த படத்தில் ஒரு காட்சியில், ஆசிரியராக வரும் சாவித்திரி, சாப்பிட்டுக்கொண்டு இருப்பார். வெளியில், சிறுவன் கமல் பசியை போக்குவதற்காக தண்ணீர் பம்பில் தண்ணீர் குடித்துக் கொண்டிருப்பார். அதை பார்த்த சாவித்ரி வெளியே வந்து, “ஏன் சாப்பிடலயா ?” என்று கேட்பார்.
அதற்கு கமல், “நான் அனாதை இல்லத்தில் வசிக்கிறேன். காலை இரவு மட்டும் தான் சாப்பாடு. மதிய நேரத்தில் இங்கு வந்து தண்ணீர் குடித்து பசியை போக்கிவிடுவேன்” என்று கூறுவார். உடனே சாவித்ரி தான் வைத்திருந்த உப்புமாவை ஊட்டிவிடுவார்.
கமலும் சாப்பிட வேண்டும்.
ஆனால் கமல் சாப்பிட மறுத்துவிட்டார்.. “மாந்தோப்பு என்று சொல்லி அழைத்துப் போனீர்கள்.. அங்கே மாம்பழங்களுக்கு பதிலாக பொம்மைகளை தொங்கவிட்டிருந்தீர்கள், இங்கு வந்து பார்த்தால் வீடுக்கு பதிலாக சேலைகளை தொங்கவிட்டு செட் போட்டு வைத்துள்ளீர்கள், இப்பொழுது உப்புமாவை காட்டி சாப்பிடு என்றால் எப்படி சாப்பிட முடியும்? அதுவும் ஒருவேளை மண்ணாக இருந்தால் ?” என கூறினார்.
பிறகு, நான் அந்த உப்புமாவை சாப்பிட்டு காட்ட.. அதன் பிறகே கமல் சாப்பிட்டார்.. கமல் அடம் பிடித்ததால் கொஞ்ச நேரம் படப்பிடிப்பு நின்றது.” என்றார் எஸ்.பி. முத்துராாமன்.
The post சாப்பாட்டுக்காக படப்பிடிப்பை நிறுத்திய கமல்! appeared first on Touring Talkies.
]]>The post தமிழகத்தில் சினிமா டிக்கெட் கட்டணங்கள் திடீர் உயர்வு..! appeared first on Touring Talkies.
]]>இதுநாள்வரையில் மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் அதிகபட்ச கட்டணமாக 160 ரூபாய் வசூலிக்கப்பட்டது. அது 30 ரூபாய் உயர்த்தப்பட்டு இன்றிலிருந்து 190 ரூபாயாக வசூலிக்கப்படுகிறது.
சிங்கிள் ஸ்க்ரீன் தியேட்டர்களில் 130 ரூபாய்வரை வசூலிக்கப்பட்டு வந்தது. அது தற்போது 60 ரூபாய்வரை உயர்த்தப்பட்டு 190 ரூபாயாக வசூலிக்கப்படுகிறது.
இந்த திடீர் உயர்வுக்கு அரசாணை எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. ஆனால் தியேட்டர்காரர்களே கட்டணத்தை உயர்த்தியிருக்கிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.
ஆனால் சில நாட்களுக்கு முன்புதான் தியேட்டர் உரிமையாளர்கள் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று கோரி தமிழக அரசிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில், “தற்போது மல்டி பிளக்ஸ், மால் மற்றும் தனி தியேட்டர்களில் மின்சார கட்டணம், ஊழியர்களுக்கான சம்பளம் உள்ளிட்டவை ஒரே வகையில் உள்ளன. எனவே அனைத்தும் தியேட்டர்களுக்கும் டிக்கெட் கட்டணத்தை ஒரேவிதமாக நிர்ணயித்து வழங்க வேண்டும். அதேபோல் பராமரிப்பு கட்டணத்தையும் உயர்த்தி தர வேண்டும்.
அதன்படி ஏசி வசதி கொண்ட தியேட்டர்களில் தற்போது வசூலிக்கப்படும் ரூ.4 கட்டணத்தை ரூ.10 எனவும், ஏசி அல்லாத தியேட்டர்களில் வசூலிக்கப்படும் ரூ.2 கட்டணத்தை ரூ.5 ஆகவும் உயர்த்தி தர வேண்டும்.
பெரிய தியேட்டர்களை சிறு தியேட்டர்களாக மாற்ற பொது பணித்துறை அலுவலகத்தில் உரிமம் பெற்றால் போதும் என்ற முறையை கொண்டு வர வேண்டும்.
ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படும் C படிவ உரிமையை மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க அனுமதி வேண்டும்” என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியிருந்தனர்.
இந்தக் கோரிக்கைகளுக்கு அரசின் பதில் என்னவென்று தெரியாத சூழலிலேயே தியேட்டர் உரிமையாளர்கள் தாங்களாகவே டிக்கெட் கட்டணத்தை உயர்த்தியிருப்பது பொது மக்களுக்கு அதிருப்தியை தந்துள்ளது.
அதேசமயம் இவர்கள் கோரிக்கை நடைமுறைக்கு வரும் முன்பே பல தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு காட்சிகள் திரையிட அனுமதி வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு தியேட்டர்கள் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்திருந்தனர்.
அதை ஏற்று அக்., 21 முதல் 27 வரை சிறப்பு காட்சிகளை திரையிட அரசு அனுமதி அளித்துள்ளது.
The post தமிழகத்தில் சினிமா டிக்கெட் கட்டணங்கள் திடீர் உயர்வு..! appeared first on Touring Talkies.
]]>The post செப்டம்பர் 16-ம் தேதி சினிமா டிக்கெட் கட்டணம் 75 ரூபாய் மட்டுமே..! appeared first on Touring Talkies.
]]>அமெரிக்காவைத் தொடர்ந்து பிரிட்டனிலும் தேசிய சினிமா தினம் கடைப்பிடிக்க துவங்கி இருக்கும் நிலையில், இந்தியாவில் இந்த மாதம் 16-ம் தேதி தேசிய சினிமா தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
அந்த வகையில் ஐநாக்ஸ், பி.வி.ஆர்., சினிபொலிஸ் உள்ளிட்ட மல்டி-ப்ளெக்ஸ் திரையரங்குகளும் இந்த தேசிய சினிமா தினத்தில் கலந்து கொள்கின்றன.
அதையொட்டி அன்று ஒரு நாள் மட்டும் நாடு முழுவதும் உள்ள தங்களது 4000 தியேட்டர்களில் டிக்கெட்டுகள் விலையை 75 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்று அறிவித்துள்ளனர்.
இருப்பினும், ஆன்லைன் தளங்கள் மூலம் முன் பதிவு செய்பவர்களுக்கு டிக்கெட் விலையுடன், ஜி.எஸ்.டி. உள்ளிட்ட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிகிறது.
திரையரங்குகளில் சென்று வரிசையில் காத்திருந்து டிக்கெட் புக் செய்பவர்களுக்கு மட்டும் 75 ரூபாய்க்கு டிக்கெட் கிடைக்குமாம்.
The post செப்டம்பர் 16-ம் தேதி சினிமா டிக்கெட் கட்டணம் 75 ரூபாய் மட்டுமே..! appeared first on Touring Talkies.
]]>The post “அண்ணாத்த’ படம் மட்டுமே வெளியானால் போதுமா?” – ‘எனிமி’ பட தயாரிப்பாளரின் கொதிப்பான பேச்சு..! appeared first on Touring Talkies.
]]>‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி நடிப்பில் இயக்குநர் சிவாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அண்ணாத்த’ திரைப்படம் நவம்பர் 4-ம் தேதி தீபாவளி தினத்தில் திரைக்கு வர உள்ளது. நயன்தாரா.
மீனா ,கீர்த்தி சுரேஷ், குஷ்பூ என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க, உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இந்த திரைப்படத்தை விநியோகம் செய்யும் பொறுப்பை கவனித்து வருகிறது.
இதன் காரணமாக தீபாவளி தினத்தில் வெளியாகும் பிற திரைப்படங்களுக்கு போதிய எண்ணிக்கையில் திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் இருக்கும் அனைத்து மால் தியேட்டர்களிலும் அனைத்துத் தியேட்டர்களிலும் ‘அண்ணாத்த’ படத்தை மட்டுமே வெளியிடும்வகையில் ரெட் ஜெயன்ட் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. இதனால் மற்ற படங்களுக்குத் தியேட்டர்கள் கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது.
ரெட் ஜெயன்ட் நிறுவனம் தமிழக முதல்வர் ஸ்டாலினின் குடும்ப நிறுவனம் என்பதால் தியேட்டர்காரர்கள் கண்ணை மூடிக் கொண்டு அவர்கள் சொன்னதை மட்டுமே கேட்கிறார்களாம்.
இதனால் ‘அண்ணாத்த’ படத்தோடு வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நடிகர் விஷாலின் ‘எனிமி’ படத்திற்குத் தியேட்டர்கள் கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து ‘எனிமி’ படத்தின் தயாரிப்பாளரான வினோத் தான் உறுப்பினராக இருக்கும் தயாரிப்பாளர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் ஒரு ஆடியோ பதிவொன்றை அனுப்பியுள்ளார்.
அந்த ஆடியோ பதிவில், “அண்ணாத்த’ திரைப்படம் அதிக திரையரங்குகளில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால் தனது திரைப்படத்திற்கு போதிய திரையரங்குகள் கிடைக்கவில்லை.
முக்கியமான விடுமுறை தினமான தீபாவளியன்று ‘அண்ணாத்த’ திரைப்படம் மட்டுமே வெளியானால் அது ரசிகர்களுக்கு போதுமானதாக இருக்காது. மேலும் அது ஒருதலைப்பட்சமான முடிவு. ஒரு சாரார் மட்டுமே ஆதிக்கம் செலுத்தக் கூடியது. தமிழகத்தில் மொத்தமுள்ள 900 திரையரங்குகளில் 250 திரையரங்குகளையாவது தங்களுக்கு ஒதுக்கித் தர வேண்டும்…” என்று வினோத் வலியுறுத்தியுள்ளார்.
ஏற்கெனவே சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ‘அண்ணாத்த’ படத்திற்குக் கிடைத்த தியேட்டர்கள் லிஸ்ட்டை பார்த்துவிட்டு போட்டியிலிருந்து விலகியுள்ளது.
இப்போது ‘எனிமி’ படத்தையும் இதேபோல் ஒதுக்கித் தள்ளிவிட்டு முழுக்க, முழுக்க ‘அண்ணாத்த’ படமே தியேட்டர்களில் ஆதிக்கத்தைச் செலுத்த திட்டமிட்டு வருவதாக தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
The post “அண்ணாத்த’ படம் மட்டுமே வெளியானால் போதுமா?” – ‘எனிமி’ பட தயாரிப்பாளரின் கொதிப்பான பேச்சு..! appeared first on Touring Talkies.
]]>The post OTT-யில் படங்களை வெளியிட நடிகர் சந்தானம் ஆதரவு appeared first on Touring Talkies.
]]>இதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்தப் போக்கு நீடித்தால் இன்னும் சில நாட்களில் ரசிகர்கள் தியேட்டருக்கு வருவதையே மறந்துவிடுவார்கள். பின்பு தியேட்டர்களில் எந்தப் படத்தைப் போட்டாலும் கூட்டம் வராது என்கிறார் தியேட்டர் உரிமையாளர்கள்.
ஆனால், “இப்படி படங்கள் ஓடிடியில் வெளியாவது சரிதான்” என்கிறார் நடிகர் சந்தானம். இது குறித்து அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், “இந்தக் கொரோனா தொற்றுக் காலத்தில் தியேட்டர்கள் திறக்கப்படுவது அவ்வளவு சரியானதாக இல்லை. அதனால் ஓடிடியில் படங்கள் வெளியாவதில் தவறில்லை.
திரைப்படங்கள் கடவுளைப் போல.. இதில் தியேட்டர்கள் கோவில் போன்றவை.. ஓடிடிக்கள்தான் பூஜையறை. இதனால் ஒன்றும் பாதிப்பில்லை.
சினிமாவை நம்பி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இருக்கின்றன. கோடிக்கணக்கான ரூபாய்களை முதலீடு செய்யும் தயாரிப்பாளர்கள் துவங்கி போஸ்டர் ஒட்டும் தொழிலாளர்கள்வரையிலும் பல்லாயிரக்கணக்கான பேர் இந்த சினிமா தொழிலை நம்பியே உள்ளார்கள்.
தியேட்டர்களை தற்போது திறக்க முடியாத சூழல் உள்ளது என்பதால் அனைவரது நலனுக்காகவும் ஓடிடிக்களில் படங்களை வெளியிடுவதே சரியானதாக இருக்கும்…” என்று சொல்லியிருக்கிறார் சந்தானம்.
The post OTT-யில் படங்களை வெளியிட நடிகர் சந்தானம் ஆதரவு appeared first on Touring Talkies.
]]>The post “ஓடிடி தளம், தியேட்டர்களுக்குப் போட்டியில்லை…” – தியேட்டர் உரிமையாளர் அபிராமி ராமநாதன் சொல்கிறார் appeared first on Touring Talkies.
]]>இந்தத் தருணத்தில் ஓடிடி தளங்கள் தியேட்டர்களுக்கு என்றுமே போட்டியில்லை என்கிறார் அபிராமி மால் தியேட்டர் உரிமையாளரும், தயாரிப்பாளருமான அபிராமி ராமநாதன்.
அவர் இது குறித்து அளித்திருக்கும் பேட்டியில், “ஒரு படத்தைத் தியேட்டரில் ரிலீஸ் செய்துவிட்டு 100 கோடி, 200 கோடி வசூல் என்று விளம்பரம் தருகிறார்கள் தயாரிப்பாளர்கள். ஆனால் எந்த ஓடிடி அவ்வளவு பெரிய தொகைக்கு படங்களை வாங்குகிறது..?
இப்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் என்றே தெரியாத சூழல் இருப்பதால்… பொருளாதார நட்டத்தைத் தவிர்ப்பதற்காக குறைந்த லாபம் கிடைத்தாலும் போதும் என்றெண்ணி படத்தை ஓடிடிக்குக் கொடுக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.
டிவி எப்படி தியேட்டருக்கு போட்டி கிடையாதோ அது மாதிரிதான் ஓடிடியும் தியேட்டர்களுக்கு போட்டி கிடையாது. தற்போதைய நிலையில் புதிய படங்களை வெளியிட தியேட்டர்களால் முடியவில்லை. ஓடிடியால் முடிகிறது. அவ்வளவுதான் விஷயம்.
ஓடிடி கிள்ளிதான் கொடுக்கும். ஆனால் தியேட்டர்களோ அள்ளிக்கொடுக்கும். ஸ்கிரீன் அனுபவம் என்பது வேறு. ஓடிடியில் ஒரே படத்தை ஏழு நாள் பார்க்கும் சூழ்நிலையும் இருக்கிறது. ஆனால் தியேட்டர் அனுபவமோ, செயின் ஸ்மோக்கர்ஸைகூட இரண்டரை மணி நேர படத்தை ஒரே இடத்தில் பார்க்க வைத்துவிடும்.
ஓடிடியில் அடல்ட் காட்சி வந்தால் பக்கத்தில் யார் இருக்கிறார்கள் என்ற பயத்துடன் பார்த்தாக வேண்டும். தியேட்டர்களில் அப்படியில்லை. பிரம்மாண்டமான ஸ்கிரீன், டால்பி சவுண்ட் சிஸ்டமெல்லாம் ஓடிடியில் இல்லை.
ஆனால், தற்சமயம் ஓடிடி தயாரிப்பாளர்களைக் காப்பாற்றுகிறது. அது நல்ல விஷயம்தான். ஏனெனில் தயாரிப்பாளர்கள் அழிந்துவிட்டால் தியேட்டர்களின் நிலைமை என்னாகும் என்று சொல்ல முடியாதே.. அதனால் தயாரிப்பாளர்களைத் தக்க வைத்துக் கொள்ள தற்போதைக்கு ஓடிடியில் பட வெளியீடு தவிர்க்க முடியாததாக இருக்கிறது..” என்று சொல்லியிருக்கிறார் அபிராமி ராமநாதன்.
The post “ஓடிடி தளம், தியேட்டர்களுக்குப் போட்டியில்லை…” – தியேட்டர் உரிமையாளர் அபிராமி ராமநாதன் சொல்கிறார் appeared first on Touring Talkies.
]]>The post சினிமா தியேட்டர்களில் 100 சதவிகித பார்வையாளர்களுக்கு அனுமதி-மத்திய அரசு அரசாணை பிறப்பித்தது..! appeared first on Touring Talkies.
]]>மத்திய அரசின் செய்தி மற்றும் ஒளிபரப்புத் துறை இது குறித்து இன்று அரசாணையை வெளியிட்டுள்ளது.
கொரோனா லாக்டவுன் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்தியா முழுவதுமாக சினிமா தியேட்டர்கள் முழுமையாக மூடப்பட்டன.
பின்பு கொரோனா கொஞ்சம், கொஞ்சமாக குறையத் துவங்கிய நேரத்தில் கடந்த நவம்பர் மாதத்தில் சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டன.
தியேட்டர்கள் திறந்தாலும் இதுநாள்வரையிலும் 50 சதவிகிதம்வரையிலும் மட்டுமே பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்த அனுமதியை 100 சதவிகிதமாக உயர்த்த வேண்டும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் திரைப்படத் துறையினர் பல்வேறு வகைகளில் மத்திய, மாநில அரசுகளிடம் கோரிக்கை வைத்து வந்தனர்.
இதையடுத்து இந்த மாதம் மத்திய உள்துறை அமைச்சகம் சுகாதாரத் துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி சினிமா தியேட்டர்களில் 100 சதவிகிதம் பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என்று அனுமதியளித்தது.
இந்த அனுமதியை அடுத்து மத்திய செய்தி ஒளிபரப்புத் துறை இன்று இது குறித்து அரசாணையை வெளியிட்டுள்ளது.
இதன்படி கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதே நேரம் தியேட்டர்களின் உள்ளே 100 சதவிகிதம் பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த அனுமதி உத்தரவு எந்த நாளில் இருந்து அமலாகும் என்பது அந்தந்த மாநில அரசுகள் முடிவெடுத்து அறிவிப்பார்கள் என்று தெரிகிறது.
The post சினிமா தியேட்டர்களில் 100 சதவிகித பார்வையாளர்களுக்கு அனுமதி-மத்திய அரசு அரசாணை பிறப்பித்தது..! appeared first on Touring Talkies.
]]>The post “நடிகர் விஜய் தன்னிடம் பேசியது என்ன..?” – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் appeared first on Touring Talkies.
]]>இந்தச் சந்திப்பின்போது ‘மாஸ்டர்’ படத்திற்காக 100 சதவிகித இருக்கைகளுக்கு அனுமதி, கூடுதல் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி.. இரவு நேர ஊரடங்கினை ரத்து செய்வது.. போன்ற சில கோரிக்கைகளை விஜய் தனக்காக முதல்வரிடம் கோரிக்கை வைத்திருந்ததாகச் செய்திகள் தெரிவித்தனர்.
ஆனால், இன்று கோவையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியபோது, விஜய் தன்னிடம் என்ன கேட்டார் என்கிற விவரத்தை வெளியிட்டார்.
“திரையரங்குகள் இன்னும் முழுமையாக திறக்கப்படவில்லை என்றும் அனைத்து திரையரங்குகளும் திறப்பதற்கு தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று விஜய் தன்னிடம் கேட்டுக் கொண்டதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
The post “நடிகர் விஜய் தன்னிடம் பேசியது என்ன..?” – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் appeared first on Touring Talkies.
]]>The post தள்ளாடும் சினிமா தியேட்டர்கள்..! appeared first on Touring Talkies.
]]>ஆனால், கொரோனா பாதிப்பின் காரணமாக தியேட்டரின் மொத்த டிக்கெட்டுக்களையும் வழங்காமல் 50 சதவிகித டிக்கெட்டுகள் மட்டுமே கொடுக்கப்பட வேண்டும். இடைவேளையில் தின்பண்டங்கள் வாங்க ரசிகர்கள் கியூவில் நிற்கக் கூடாது. மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் என்றெல்லாம் பல்வேறு நிபந்தனைகளும் விதிக்கப்பட்டிருந்தன.
இதையும் தாண்டி மக்கள் நிச்சயமாகத் திரண்டு வருவார்கள் என்று எதிர்பார்த்து சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டன. ஆனால், வந்த கூட்டம் தீபாவளியையொட்டிய சில தினங்கள் மட்டுமே தொடர்ந்து வந்தது.
அதன் பிறகு ஒவ்வொரு காட்சிக்கும் 10 பேர் அல்லது 15 பேராக வந்து செல்லத் துவங்க.. தியேட்டர் அதிபர்கள் மீண்டும் சிக்கலில் மாட்டிக் கொண்டார்கள்.
இந்தக் கூட்டமில்லாத நிலையால் ஒவ்வொரு தியேட்டரிலும் மின்சாரக் கட்டணத்தை்ககூட கட்ட முடியாது என்னும் யதார்த்தத்தை பல தியேட்டர் உரிமையாளர்கள் உணர்ந்ததால் பல தியேட்டர்கள் திறந்த வேகத்தில் மூடப்பட்டுவிட்டன.
மக்களுக்கு கொரோனா பயம் ஒரு புறம்.. இன்னொரு பக்கம் கொரோனா தாக்கத்தால் பல்வேறு வழிகளில் பண வரவு குறைந்ததால் அவர்கள் கையிலும் பணமில்லாத நிலை.. இதனாலேயே கூட்டம் தியேட்டர்களுக்கு வரவில்லை என்பதை யூகித்தனர் தியேட்டர் உரிமையாளர்கள்.
தற்போது மழைக் காலம் வேறு.. சினிமா தியேட்டர்கள் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்தாலே மக்கள் வெளியில் வர மாட்டார்கள். இந்த நேரத்தில் நிவார் புயல் உட்பட பல்வேறு மழை, வெள்ளம் என்று வரிசையாக சோதனைகள் வந்து கொண்டிருக்க மக்களின் கவனம் வேறு பக்கம் திசை திரும்பியிருக்கிறது.
இந்தச் சூழலில் எப்படி இந்த சினிமா தியேட்டர்களை தொடர்ந்து நடத்துவது என்பது புரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் தியேட்டர் உரிமையாளர்கள்.
சென்னை, மதுரை, கோவை, திருச்சி போன்ற மெட்ரோபாலிட்டன் ஊர்களில் இருக்கும் மால் தியேட்டர்களில்கூட இதே நிலைமைதான் என்றவுடன் என்ன செய்வது.. எப்படி இதிலிருந்து தப்பிப்பது என்று யோசிக்கத் துவங்கியிருக்கிறார்கள் தியேட்டர் உரிமையாளர்கள்.
சென்னையில் இருக்கும் ‘காசி’ தியேட்டர்ஸ் அதிரடி ஆபராக.. ஒரு டிக்கெட்டுக்கு இன்னொரு டிக்கெட் ப்ரீ என்று அறிவித்தது. போரூர் ‘ஜி.கே.’ தியேட்டரும் இந்த சலுகையை ரசிகர்களுக்கு அறிவித்திருக்கிறது.
இதன் கூடவே கேண்டீனில் விற்கும் பாப்கார்ன் முதற்கொண்டு அனைத்துத் திண்பண்டங்களுக்கும் விலை குறைப்பை சில தியேட்டர்கள் அறிவித்துள்ளன.
இருந்தாலும் மக்கள் தைரியமாக வந்து செல்லவும், தாராளமாக பணம் செலவு செய்யவும் வேண்டுமெனில் புத்தம் புதிய படங்கள் தியேட்டர்களுக்கு வர வேண்டும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் விரும்புகிறார்கள்.
அதிலும், மிகப் பெரிய நடிகர்கள் நடித்த படங்கள் தியேட்டர்களுக்கு வந்தால் மட்டுமே இனிமேல் மக்கள் தியேட்டருக்கு வருவார்கள். இல்லையெனில் இப்போது இருப்பதுபோல ஒற்றை இலக்கத்தில்தான் டிக்கெட்டுகளை விற்க முடியும் என்கிறார்கள் தியேட்டர் உரிமையாளர்கள்.
“ரஜினி, கமல், அஜீத், விஜய், சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, தனுஷ், சிம்பு, கார்த்தி என்று ஸ்டார் நடிகர்கள் அனைவரும் வருடத்திற்கு குறைந்தபட்சம் 4 படங்களில் நடித்தாலே போதும்..
ஒவ்வொரு நடிகருக்கும், ஒவ்வொரு படத்திற்கும் 3 வாரங்கள் என்று வைத்துக் கொண்டால்கூட வருடம் முழவதும் கூட்டம் வந்து கொண்டேயிருக்கும். வசூலுக்குக் குறைவில்லாமல் இருக்கும். நாங்களும் பொழைப்போம்.. சினிமா துறையும் நன்றாக இருக்கும். நடிகர், நடிகைகள், சினிமா தொழிலாளர்கள் அனைவருக்கும் வேலையும் கிடைக்கும்.
இதை மனதில் வைத்தாவது அந்த நடிகர்கள் மின்னல் வேகத்தில் தங்களது படங்களை முடித்துக் கொடுத்து படத்தைத் தியேட்டர்களுக்கு கொண்டு வர வேண்டும்..” என்கிறார்கள் தியேட்டர் உரிமையாளர்கள்.
இதை நடிகர்களிடம் யார் போய் சொல்வது..?
The post தள்ளாடும் சினிமா தியேட்டர்கள்..! appeared first on Touring Talkies.
]]>The post இந்தத் தீபாவளிக்கு 11 தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. appeared first on Touring Talkies.
]]>அதற்கடுத்து உலகம் தழுவிய அளவில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பினால் மார்ச் 23-ம் தேதி தியேட்டர்கள் மூடப்பட்டதால் திரைப்படங்கள் வெளியாவது நிறுத்தப்பட்டது.
இப்போது திரையரங்குகள் திறக்கப்பட்டு சில நாட்கள் கழித்து தீபாவளி தினத்தையொட்டி இன்றைக்குத்தான் 7 திரைப்படங்கள் நேரடியாக தியேட்டர்களில் வெளியாகியுள்ளன.
‘பிஸ்கோத்’, ‘இரண்டாம் குத்து’,. ‘தட்றோம் தூக்குறோம்’, ‘மரிஜூவானா’, ‘பச்சைக்கிளி’, ‘கோட்டா’, ‘நுங்கம்பாக்கம்’ ஆகிய திரைப்படங்கள் இன்றைக்குத் தியேட்டர்களில் வெளியாகியுள்ளன. இதில் ‘நுங்கம்பாக்கம்’ திரைப்படம் ஏற்கெனவே ஓடிடி தளத்தில் வெளியாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தாண்டு தீபாவளியை முன்னிட்டு இரு நாட்களுக்கு முன்பாக ‘அமேஸான் பிரைம் வீடியோ’ என்னும் ஓடிடி தளத்தில் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது.
இன்றைய தீபாவளி தினத்தில் ஓடிடி தளத்திலும் நேரடியாக 2 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. ‘மூக்குத்தி அம்மன்’, ‘பச்சை விளக்கு’ ஆகியவைதான் அந்தத் திரைப்படங்கள். ‘மூக்குத்தி அம்மன்’ ஓடிடியில் வெளியீடு என்பது ஒரு மாதத்திற்கு முன்பே முடிவு செய்து ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்ததால் தற்போது தியேட்டர்களுக்குக் கொண்டு வர முடியவில்லை. ‘மூக்குத்தி அம்மன்’ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இன்று காலை 8.30 மணிக்கு வெளியானது.
‘பச்சை விளக்கு’ திரைப்படம் ஏற்கெனவே தமிழகத்தில் தியேட்டர்களில் வெளியான திரைப்படம்தான். தற்போது ‘மூவி இன்’ என்னும் ஓடிடி தளத்தில் ‘பே பார் வியூ’ என்னும் திட்டத்தின் கீழ் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தைப் பார்க்க 50 ரூபாய் பணம் கட்ட வேண்டும்.
இவையிரண்டும் இல்லாமல் நேரடியாக சன் தொலைக்காட்சியில் ‘நாங்க ரொம்ப பிஸி’ என்ற திரைப்படம் இன்று காலை வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் நேரடி தயாரிப்பில் இந்தக் கொரோனா லாக் டவுன் காலத்திலேயே துவக்கப்பட்டு, முடிக்கப்பட்டு இன்று தீபாவளியை முன்னிட்டு இன்று காலை 11 மணிக்கு சன் தொலைக்காட்சியில் இத்திரைப்படம் ஒளிபரப்பாகிவிட்டது.
முன்பெல்லாம் பண்டிகை தினங்களில் தியேட்டர்களில் வெளியிடப்படும் திரைப்படங்களைப் பார்க்க அங்கே குவியும் ரசிகர்களின் கூட்டமே அன்றைய தினம் ஒரு மிகப் பெரிய பண்டிகை தினம் என்று சொல்லும்.. ஆனால், இன்றைக்கு தியேட்டர்கள், ஓடிடி, டிவிக்கள் என்று மூன்று இடங்களிலும் புதிய படங்கள் வெளியாகி ரசிகர்களை குழப்பத்தில் ஏற்படுத்தியுள்ளன.
இன்று ரிலீஸான புதிய படங்களின் வசூல் விவரங்கள் வெளியில் வந்தால்தான் உண்மையான வெற்றி யாருக்கு என்பது தெரியும்..
The post இந்தத் தீபாவளிக்கு 11 தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. appeared first on Touring Talkies.
]]>