The post பீறிட்டு வந்த இரத்தம்! விஜயகாந்த் செய்த காரியம்! appeared first on Touring Talkies.
]]>“விஜயகாந்த் பரதன் படப்பிடிப்பின் போது அதற்கான காட்சிகளை எடுத்துக் கொண்டிருந்தார்கள். அது, ஜெயிலில் இருந்து அவர் தப்பித்து வருகிற காட்சி.
அடுத்து, ஒரு குவாரியில் இருந்து கடகடவென கீழே உருண்டு வருகிற காட்சி. அதில் கம்பெனி ஆர்ட்டிஸ்ட் ஒருவருக்கு கல் குத்தி காலில் இரத்தம் பீறிட்டு வந்துவிட்டது. யாரும் அதை கவனிக்கவில்லை.
ஆனால் விஜயகாந்த் அதை பார்த்துவிட்டார். உடனே அந்த நபரை தன் காரில் தூக்கிக் கொண்டு வந்து மருத்துவமனைக்கு கொண்டு போக முயற்சித்தார். ஆனால் அதற்குள் பக்கத்தில் இருந்த அனைவரும் அவரை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்லிவிட்டார்கள். அதன் பிறகு தான் தெரிந்தது, விஜயகாந்திற்கும் கல் குத்தி இரத்தம் வந்தது.
ஆனால் தன்னைப் பற்றி கவலைப்படாமல், அடுத்தவருக்கு உவினார் விஜயகாந்த்” என்றார் அந்த உதவியாளர்.
The post பீறிட்டு வந்த இரத்தம்! விஜயகாந்த் செய்த காரியம்! appeared first on Touring Talkies.
]]>The post அடம்பிடித்து விஜயகாந்தை மாற்றிய பிரபுதேவா! appeared first on Touring Talkies.
]]>இது குறித்து நடிகர் ரோபோ சங்கர் ஒரு பேட்டியில் கூறும்போது, ““பரதன்” திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனது. குறிப்பாக இதில் இடம்பெற்ற “புன்னகையில் மின்சாரம்” என்ற பாடல் இப்போதும் ரசிக்க வைக்கும்.
இந்த படத்துக்கு பிரபுதேவா நடன இயக்குநராக பணியாற்றினார். அதுவரை நடனத்துக்கு முக்கியத்துவம் அளிக்காத விஜயகாந்தை, சிறப்பாக நடனமாட வைத்துவிட வேண்டும் என்று முடிவெடுத்தார். அதற்கேற்ப ஸ்டெஸ்கள் – நடன அசைவுகளை – உருவாக்கினார்.
ஆரம்பத்தில் விஜயகாந்த், நடனத்துக்கு இவ்வளவு மெனக்கடல் தேவையா என கேட்க, பிரபு தேவா வற்புறுத்தி இருக்கிறார்.
இதனால், விஜயகாந்தும் பயிற்சி எடுத்து சிறப்பாக நடனமாடினார். அதுவரை யாரும் பார்க்காத ஒரு நடனத்தை ஆடியிருந்தார் விஜயகாந்த். மிகவும் ஸ்டைலிஷாக அந்த காட்சியில் இருப்பார்.
அதற்கு முன்பும் பின்பும் அப்படி ஓர் நடனம் விஜயகாந்துக்கு அமைந்ததில்லை” என்றார் பிரபுதேவா.
The post அடம்பிடித்து விஜயகாந்தை மாற்றிய பிரபுதேவா! appeared first on Touring Talkies.
]]>