The post நடிகை அஞ்சலியின் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ஜான்ஸி’ இணைய தொடர் appeared first on Touring Talkies.
]]>இயக்குநர் திருவின் இயக்கத்தில், கணேஷ் கார்த்திக்கின் கதை மற்றும் திரைக்கதையில், நடிகை அஞ்சலி முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் இந்த ஜான்ஸி இணையத் தொடர் 10 எபிசோடுகளைக் கொண்டதாகும்.
இந்த சீரீஸில் அஞ்சலி, சாந்தினி சௌத்திரி, ராஜ் அர்ஜுன், ஆதர்ஷ் பாலகிருஷ்ணா, ராமேஸ்வரி தல்லூரி, சம்யுக்தா ஹார்நாட், சரண்யா ராமச்சந்திரன், சுரேஷ் சக்ரவர்த்தி, கல்யாண் மாஸ்டர், முமைத் கான் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இயக்கம் – திரு, ஒளிப்பதிவு – அர்வி, இசை – ஶ்ரீசரண் பக்கலா, படத் தொகுப்பு – ஆண்டனி, சண்டைப் பயிற்சி இயக்கம் – யானிக் பென், உடை வடிவமைப்பு – அனு வர்தன், கலை இயக்கம் – ராஜ் கமல், தயாரிப்பாளர் – கிருஷ்ணா குலசேகரன், தயாரிப்பு நிறுவனம் – Tribal Horse Entertainment, ஓடிடி தளம் – டிஸ்னி + ஹாட் ஸ்டார்.
வாழ்வின் கடந்த கால நினைவுகளை மறந்து போன ஒரு பெண், கடந்த காலத்தின் பின்னிருக்கும் ரகசியங்களை தேடுவதே, இந்த தொடரின் கதை.
இத்தொடர் டிஸ்னி + ஹாட் ஸ்டார் தளத்தில் அக்டோபர் 27-ம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி முதலாக பல மொழிகளில் உலகமெங்கும் வெளியாகிறது.
இதையொட்டி இத்தொடரின் குழுவினர் கலந்து கொள்ள பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் பத்திரிக்கையாளர் முன் திரையிடல் நிகழ்ச்சி நேற்று பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.
இவ்விழாவில் நடிகர் ஆதித்யா பேசும்போது, “என்னுடைய ஃபர்ஸ்ட் புராஜக்ட்டுக்கு கிருஷ்ணா சார்தான் புரொடியூசர். அவர் என் ஷோ ரீல் பார்த்து அரை மணி நேரம் பாராட்டினார். ஒரு நடிகராக இருந்து கொண்டு அடுத்தவரை பாராட்ட பெரிய மனம் வேண்டும். அவர் கூப்பிட்டபோது நான் யோசிக்கவே இல்லை. உடனே ஒப்புக் கொண்டேன். தெலுங்கில் நானே டப் பண்ணியிருக்கேன். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்.” என்றார்.
எழுத்தாளர் கணேஷ் கார்த்திக் பேசும்போது, “இந்தக் கதையை எழுதிவிட்டு பலரிடம் சொல்லிக் கொண்டிருந்தபோதுதான் கிருஷ்ணா சாரை சந்தித்தேன். அவர் கேட்டவுடன் “இதை நாம் பண்ணலாம்” என்றார். இயலாமை கொண்ட ஒரு பெண்ணின் கோபம்தான் இந்தக் கதை.
மிகவும் அர்ப்பணிப்போடு உருவாக்கியுள்ளோம். திரு சாரிடம் இத்தொடரில் வேலை பார்த்து நிறைய கற்றுக் கொண்டேன். அஞ்சலி கேமரா முன் வந்துவிட்டால் அப்படியே கதாப்பாத்திரமாக மாறிவிடுவார். மிக திறமைசாலி. என்னுடைய திரை வாழ்வின் ஆரம்ப பயணம் இந்த ‘ஜான்ஸி’. உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன்…” என்றார்.
இயக்குநர் திரு பேசும்போது, “கிருஷ்ணா ஒரு நாள் எனக்கு போன் செய்து இந்தக் கதையைப் பற்றி சொன்னார். முதலில் வெப் சீரிஸாக எடுக்க நிறைய தயக்கம் இருந்தது. இதை எப்படி எடுக்க முடியும் என பயமாக இருந்தது. மிகப் பெரிய ஸ்கேலில் எடுக்க வேண்டிய கதை இது.
எல்லோரும் சேர்ந்து அதை குறிப்பிட்ட பட்ஜெட்டில் 10 எபிஸோடில் எடுத்துள்ளோம். இதில் மிகப் பெரிய ப்ளஸ் திரைக்கதைதான். மிக அட்டகாசமாக எழுதியிருந்தார். பார்க்கும்போது உங்களுக்கு தெரியும். கிருஷ்ணாவுடன் நடிகராக அவரை இயக்குவேன் என நினைத்தேன். ஆனால், அவர் புரடியூசராக இருக்கும் படைப்பில் வேலை பார்த்திருக்கிறேன். என்னை அவ்வளவு நன்றாக பார்த்துக் கொண்டார்.
ஒளிப்பதிவாளர் மிக அட்டகாசமாக செய்துள்ளார். ஜீகே மிக சிறந்த இயக்குநராக வருவார். அஞ்சலி இதில் அதிரடி ஆக்சன் பண்ணியிருக்கார். எல்லோரும் கடினமாக உழைத்துள்ளார்கள். இந்தப் படைப்பு கண்டிப்பாக உங்களை ஆச்சரியப்படுத்தும் நன்றி.” என்றார்.
நடிகரும், தயாரிப்பாளருமான கிருஷ்ணா பேசும்போது, “இந்த வருடம் எனக்கு படம் எதுவும் வரவில்லை என்பதால் உங்களை சந்திக்க முடியவில்லை. ஆனால் அடுத்ததாக ‘பெல்பாட்டம்’ வருகிறது.
எனக்கு தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிக்க வேண்டும் என்பது கனவு. இது எங்கள் நிறுவனத்தின் மூன்றாவது படைப்பு. ஹாட் ஸ்டாரில் இந்த கதையை சொன்னவுடன் ஒப்புக் கொண்டார்கள். ஜீகேயிடம் இதை பெரிய இயக்குநர் செய்தால் நல்லாயிருக்கும் என்றவுடன் ஜீகே ஒப்புக் கொண்டார். திருவிடம், ஜீகே “ஒரு எபிஸோடாவது டைரக்ட் பண்ணணும்” என்றேன். அவரும் பெருந்தன்மையாக “ஓகே” என்றார்.
அஞ்சலி போன்ற திறமையான நடிகர்களை பல மொழிகளிலும் இருந்து கூட்டி வந்திருக்கிறோம். “இந்தப் படத்தில் எனக்கு எதாவது வேஷம் கொடுங்க” என்று கேட்டேன். ஆனால் கடைசிவரை தரவில்லை. இந்தத் தொடர் மிக நன்றாக வந்துள்ளது. முக்கியமாக இத்தொடருக்கு பெரும் ஒத்துழைப்பு தந்த டிஸ்னி + ஹாட் ஸ்டாருக்கு நன்றி. இது எங்கள் மனதுக்கு மிகவும் பிடித்தப் படைப்பு..” என்றார்.
The post நடிகை அஞ்சலியின் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ஜான்ஸி’ இணைய தொடர் appeared first on Touring Talkies.
]]>The post நடிகை அஞ்சலியின் பேய் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘பூச்சாண்டி’..! appeared first on Touring Talkies.
]]>அவரது நடிப்பில் அடுத்து வெளிவரவுள்ள ‘பூச்சாண்டி’ திரைப்படமும், அவரது புகழுக்கு மேலும் ஒரு மணி மகுடமாகத் திகழும் என உறுதியாக தெரிகிறது.
The Soldiers Factory நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் K.S.சினீஷ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தில் அஞ்சலி, யோகிபாபு, விஜய் டிவி ராமர் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
எழுத்து, இயக்கம் – கிருஷ்ணன் ஜெயராஜ், இசை – விஷால் சந்திரசேகர், ஒளிப்பதிவு – ஆர்வி & மருதநாயகம், கலை இயக்கம் – சக்தி வெங்கட் ராஜ், பாடல்கள் – கு. கார்த்திக், காதல் வேந்தன், நடன இயக்கம் – ஷெரீஃப், நந்தா, சண்டை இயக்கம் – சில்வா, உடைகள் – சண்முகப்பிரியா தினேஷ், தயாரிப்பு நிர்வாகம் – T. முருகேஷன், ஒலிக் கலவை – M.சரத்குமார், விஷுவல் எபெக்ட்ஸ் – DTM லவன் & குசன், ஒப்பனை – ராஜு, புகைப்படங்கள் – ராஜா, விளம்பர வடிவமைப்பு – N.T.ப்ரதூல், இணை தயாரிப்பு – T.ஏழுமலையான்.
அறிமுக இயக்குநரான கிருஷ்ணன் ஜெயராஜ் இப்படத்தினை எழுதி, இயக்குகிறார்.
படம் குறித்து இயக்குநர் கிருஷ்ணன் ஜெயராஜ் பேசும்போது, “இந்தப் ‘பூச்சாண்டி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு கிடைத்திருக்கும் அபார வரவேற்பு, மனதிற்கு பெரும் சந்தோஷத்தை தந்திருக்கிறது.
இத்திரைப்படம் முழுக்க, முழுக்க குழந்தைகளை மையமாக கொண்டு, வேடிக்கைகள் நிறைந்த பொழுது போக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்தில் அஞ்சலி தனது அற்புதமான நடிப்பால், படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறார்.
படத்தின் வெளியீட்டுக்கு பிறகு அஞ்சலி கண்டிப்பாக குழந்தைகள் விரும்பும் நாயகியாக மாறிவிடுவார். அஞ்சலியும், யோகிபாபுவும் பேயாக நடித்துள்ள பகுதிகளை, குழந்தைகள் 100 சதவீதம் வயிறு வலிக்க சிரித்து மகிழ்ந்து கொண்டாடுவார்கள்.
மேலும் விஜய் டிவி புகழ் ராமர் ஒரு முக்கிய பாத்திரத்தில் வந்து, படத்தின் காமெடிக்கு மேலும் வலு சேர்த்துள்ளார். படத்தின் 95 சதவிகிதப் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. மீதமிருக்கும் காட்சிகளும் விரைவில் படமாக்கப்படும். டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்…” என்றார்.
நேற்று வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இப்படம் கண்டிப்பாக குழந்தைகள் கொண்டாடும் அட்டகாசமான கமர்ஷியல் படமாக இருக்கும் என்பதை ஆருடம் சொல்வதாக அமைந்திருக்கிறது.
The post நடிகை அஞ்சலியின் பேய் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘பூச்சாண்டி’..! appeared first on Touring Talkies.
]]>The post ‘நிசப்தம்’ படத்திற்காக ரசிகர்களிடத்தில் ‘ஸாரி’ கேட்ட நடிகர் மாதவன் appeared first on Touring Talkies.
]]>ஆனால், இப்போதுதான் படம் வெளியாகி ஒரு வாரத்திற்குள்ளாகவே படம் சரியாக போகவில்லை ஒத்துக் கொள்கிறேன் என்று ஒரு நடிகர் பகிரங்கமாக சொல்லியிருப்பது நடந்திருக்கிறது. இதனைச் செய்திருப்பவர் நடிகர் மாதவன்.
மாதவன், அனுஷ்கா, அஞ்சலி நடிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய நான்கு மொழிகளில் உருவான திரைப்படம் ‘நிசப்தம்’. 35 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக ஏற்பட்ட லாக்டவுனில் சிக்கியதால் தியேட்டர்களுக்கு வர முடியவில்லை.
கடைசியாக சென்ற வாரம்தான் அமேஸான் பிரைம் வீடியோ என்னும் ஓ.டி.டி. தளத்தில் வெளியானது. வெளியான முதல் நாளிலிருந்தே அந்தப் படத்திற்கு சரியான வரவேற்பில்லை. காரணம் சரியான கதை, திரைக்கதை இல்லாததுதான். இந்தப் படத்துக்கா இவ்வளவு பில்டப்பு என்பது போல ரசிகர்கள் கருதியதால் படம் அப்படியே அமுங்கிப் போனது.
இந்த எதிர்பாராத தோல்வியை உணர்ந்த படத்தின் நாயகன் மாதவன் தனது ரசிகர்களிடத்தில் இதற்காக மன்னிப்பு கேட்டுள்ளார். இது குறித்து டிவிட்டரில் அவர் வெளியிட்ட செய்தியில் “நிசப்தம்’ படத்தைப் பெரிதாக எதிர்பார்த்தேன். பட்.. சரியாக வரவில்லை.. ஸாரி…” என்று குறிப்பிட்டுள்ளார்.
The post ‘நிசப்தம்’ படத்திற்காக ரசிகர்களிடத்தில் ‘ஸாரி’ கேட்ட நடிகர் மாதவன் appeared first on Touring Talkies.
]]>The post சைலன்ஸ் – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.
]]>ஒரு திரில்லர் படத்திற்கான அனைத்து அம்சங்களுடன்தான் படத்தின் ஆரம்பக் காட்சியே அமைந்திருக்கிறது.
ஒரு பழமையான பங்களாவில் ஒரு காதல் ஜோடி கொல்லப்படுகிறார்கள். பல ஆண்டுகளாக அந்த பங்களா அனாதையாக இருக்கிறது. நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு அனுஷ்காவும், மாதவனும் அங்கே வருகிறார்கள். இப்படியாக ஆரம்பம் ஆகும் படத்தில் அடுத்தடுத்து பெரும் திருப்பங்கள் வருகிறது.
அந்த பங்களாவில் மாதவனுக்கு ஓர் அசம்பாவிதம் நடக்க,.. அதற்கு யார் காரணம் என்ற விசாரணையில் படம் விரிகிறது.
ஒரு பேய்ப் படத்திற்கான சாத்தியங்கள் இருந்தும் படத்தை அந்த ரூட்டில் கொண்டு போகாமல் முழுக்க, முழுக்க க்ரைம், திரில்லரில் பயணிக்க வைத்திருக்கிறார்கள்.
வயலின் செலிபிரட்டியான மாதவனுக்கும் வாய் பேச முடியாத, காது கேட்காத அனுஷ்காவிற்கும் காதல் மலரும் இடங்களும், அது சம்பந்தப்பட்ட காட்சிகளும் ஓர் ஓவியக் கவிதை. அனுஷ்கா வரைந்த ஓவியத்தை மாதவன் வாங்கும் காட்சி நல்ல இண்ட்ரெஸ்டிங் ஏரியா.
மாதவனுக்கு வழக்கமான கேரக்டர் இல்லாமல் கொஞ்சம் புகுந்து விளையாடும் இடமும் இருக்கிறது. அளவாக நடித்து அப்ளாஸ் அள்ளுகிறார். அனுஷ்கா சவால் மிகுந்த கேரக்டரை ஓரளவு சமாளித்துள்ளார். பெரும்பாலும் படம் முழுதும் அவர் முகம் சோர்வாகவே இருக்கிறது..! Why?
சாலினி பாண்டே கேரக்டர் நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அவரும் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். படத்தில் அவரின் காதலனாக வரும் சுப்பாராஜு சூப்பர் ராஜுவாக க்ளைமாக்ஸில் ஈர்க்கிறார். உண்மையைக் கண்டு பிடிக்கும் போலீஸ் அதிகாரியாக அஞ்சலி. அவர் குரலில் ஒரு போலீஸுக்கான கம்பீரம் இல்லை. ஆனாலும் தனது உடல் மொழியாலும் நடிப்பாலும் கவனம் பெற முயற்சித்துள்ளார்.
படத்தில் வில்லன் போலீஸாக வரும் ஹாலிவுட் நடிகர் மைக்கேல் பல காட்சிகளில் அசால்ட் காட்டி அசத்தியிருக்கிறார். அஞ்சலியின் கணவராக வரும் ஸ்ரீனிவாசஸுக்கு சொல்லிக் கொள்ளும்படியான காட்சிகள் இல்லை.
படத்தின் கலரிங்கும் ஒளிப்பதிவும் ஒரு ஹாலிவுட் படத்திற்கான தரத்தைக் கொண்டுள்ளது. ஒளிப்பதிவு சின்ன சின்னக் காட்சிகளிலும் அசத்துகிறது. பின்னணி இசைதான் இப்படியான திரில்லர் படங்களுக்கு ஆன்மா. அதை இசை அமைப்பாளர் சரியாக உள் வாங்கி உழைத்திருக்கிறார். ஆர்ட் டிபார்ட்மெண்டின் டீடெயிலிங் வொர்க்கும் மெச்சத்தக்கது.
ஒரே நேரத்தில் மூன்று மொழியில் எடுக்கப்பட்ட படம் என்பதால் சில இடங்களில் லிப்சிங் பிரச்சனை இருக்கிறது. 2 மணி நேரம்தான் படத்தின் நீளம் என்பதால் திரைக்கதையில் இன்னும் சில ரசவாத விசயங்களை இணைத்திருக்கலாம்.
சி.சி.டிவி புட்டேஜ் லாஜிக்குகளை இன்னும் கவனமாக கையாண்டிருக்கலாம். படத்தின் ஆதார ஜீவனே சாலினி பாண்டேதான் என்பதால் அவரது காதல் காட்சிகளில் இன்னமும் கொஞ்சம் வலு சேர்த்திருக்கலாம்.
அஞ்சலியின் இன்வெஸ்டிகேசன், அனுஷ்கா மாதவன் லவ், அனுஷ்கா சாலினி பாண்டே நட்பு, மைக்கேல் கேரக்டரின் வில்லனத்தனம் என்பதைத் தாண்டி படம் ஒரு கட்டத்தில் சின்ன தேக்கநிலையை அடைந்தாலும் க்ளைமாக்ஸ் நெருங்கும்போது ஒரு பரபரப்பை தொற்ற வைத்து விடுகிறார் இயக்குநர் ஹேமந்த் மதுகர்.
சிறு சிறு லாஜிக் சத்தங்கள் அதிகம் இருந்தாலும், சைலன்ஸ் Mood-ல் பார்த்தால் இந்த சைலன்ஸ் பிடிக்கவே செய்யும்..!
The post சைலன்ஸ் – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.
]]>