Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
actor vijay sethupathy – Touring Talkies https://touringtalkies.co Mon, 29 Aug 2022 07:07:41 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png actor vijay sethupathy – Touring Talkies https://touringtalkies.co 32 32 ‘ஜவான்’ படத்திற்காக விஜய் சேதுபதி வாங்கிய சம்பளம் இவ்வளவா..? https://touringtalkies.co/vijay-sethupathys-salary-in-jawaan-movie/ Mon, 29 Aug 2022 07:07:05 +0000 https://touringtalkies.co/?p=24090 இயக்குநர் அட்லீ இயக்கி வரும் ‘ஜவான்’ படத்தின் ஷுட்டிங் சென்னையில் துவங்கியுள்ளது. இதற்காக சென்னை வந்து இறங்கிய நடிகர் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன், அட்லீ ஆகியோரின் போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் சம்பந்தப்பட்ட காட்சிகள் சென்னையில் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். இந்த செய்தியை அவரே அண்மையில் உறுதிப்படுத்தி இருந்தார். இது தவிர கெஸ்ட் ரோலில் விஜய்யும் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் […]

The post ‘ஜவான்’ படத்திற்காக விஜய் சேதுபதி வாங்கிய சம்பளம் இவ்வளவா..? appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் அட்லீ இயக்கி வரும் ஜவான்’ படத்தின் ஷுட்டிங் சென்னையில் துவங்கியுள்ளது. இதற்காக சென்னை வந்து இறங்கிய நடிகர் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன், அட்லீ ஆகியோரின் போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் சம்பந்தப்பட்ட காட்சிகள் சென்னையில் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தப் படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். இந்த செய்தியை அவரே அண்மையில் உறுதிப்படுத்தி இருந்தார். இது தவிர கெஸ்ட் ரோலில் விஜய்யும் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் இந்தப் படத்திற்காக விஜய்சேதுபதிக்கு கொடுக்கப்பட்டுள்ள சம்பளம் குறித்த விபரம் தற்போது வெளியாகி, பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

இந்தப் படத்திற்காக விஜய் சேதுபதிக்கு  21 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தச் செய்தி உண்மையெனில் தனது கேரியரில் விஜய் சேதுபதி அதிகம் சம்பளம் வாங்கிய படம் இதுவாகத்தான் இருக்கும்.

இதற்கு முன் விஜய் சேதுபதி ஒரு படத்திற்கு 15 கோடி சம்பளம் வாங்கி வந்தார். ஆனால் ‘விக்ரம்’ படத்தின் அமோக வெற்றிக்குப் பின்பு விஜய் சேதுபதி தனது சம்பளத்தை 15 கோடி முதல் 21 கோடிவரை உயர்த்தியிருப்பதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஜவான்’ படத்தில் நடிப்பதற்காக விஜய் சேதுபதி இரண்டு படங்களில் நடிக்கும் வாய்ப்பை இழந்துவிட்டதால் ஜவான் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஷாருக்கான், விஜய் சேதுபதி கேட்டதைவிட அதிக சம்பளம் தர ஓகே சொல்லி விட்டதாக தகவல்.

அதே சமயம் இந்தப் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் விஜய், ஒரு ரூபாய்கூட சம்பளமாக வாங்கவில்லை என்றும் சொல்கிறார்கள்.

The post ‘ஜவான்’ படத்திற்காக விஜய் சேதுபதி வாங்கிய சம்பளம் இவ்வளவா..? appeared first on Touring Talkies.

]]>
“ஒரு கோடி மட்டுமல்ல… இன்னும் உதவுவேன்..” – ஃபெப்ஸி விழாவில் விஜய் சேதுபதி பேச்சு https://touringtalkies.co/vijay-sethupathy-donate-1-crore-to-fefsi-employees-housing-plan/ Sat, 02 Oct 2021 15:59:44 +0000 https://touringtalkies.co/?p=18456 திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் சார்பில் சென்னையில் எழுப்பப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்திற்கு நடிகர் விஜய் சேதுபதி ஒரு கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கினார். இதற்காக நடைபெற்ற விழாவில் பெஃப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி, செயலாளர் சபரீ கீரிசன் மற்றும் 23 சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளும், செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இவர்களுடன் தயாரிப்பாளர் எஸ்.தாணு, நடிகர் விஜய் சேதுபதி ஆகியோரும் கலந்து கொண்டனர். விழாவில் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை நடிகர் விஜய் சேதுபதி, பெஃப்ஸியின் தலைவர் […]

The post “ஒரு கோடி மட்டுமல்ல… இன்னும் உதவுவேன்..” – ஃபெப்ஸி விழாவில் விஜய் சேதுபதி பேச்சு appeared first on Touring Talkies.

]]>
திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் சார்பில் சென்னையில் எழுப்பப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்திற்கு நடிகர் விஜய் சேதுபதி ஒரு கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கினார்.

இதற்காக நடைபெற்ற விழாவில் பெஃப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி, செயலாளர் சபரீ கீரிசன் மற்றும் 23 சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளும், செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இவர்களுடன் தயாரிப்பாளர் எஸ்.தாணு, நடிகர் விஜய் சேதுபதி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

விழாவில் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை நடிகர் விஜய் சேதுபதி, பெஃப்ஸியின் தலைவர் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட பெஃப்ஸி நிர்வாகிகளிடம் வழங்கினார்.

முன்னதாக மேன் கைண்ட்(Man Kind)  என்ற நிறுவனத்தின் சார்பில் 31 லட்ச ரூபாய் நிதி உதவியாக பெஃப்ஸி சம்மேளனத்தின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.

இவ்விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேசுகையில், ”இயக்குநர் செல்வமணி ஸார் என்னிடம் இது தொடர்பாக வேண்டுகோள் விடுத்து இரண்டு ஆண்டுகள் ஆகியிருக்கும். என்னால் உதவி செய்ய முடியவில்லையே என்ற வருத்தம் எனக்குள் இருந்து கொண்டே இருந்தது. உதவி செய்வதில் தொடர்ந்து தாமதம் ஏற்படுகிறது. அதற்காக மன்னிப்பு கேட்பதற்காகத்தான் அவரை நான் தொடர்பு கொண்டேன்.

இந்த தருணத்தில் மேன் கைண்ட் மற்றும் காசா கிராண்ட் ஆகிய நிறுவனங்களின் விளம்பரத்தில் நடித்தேன். அதில் கிடைத்த ஊதியத்தை ஆர்.கே.செல்வமணியிடம் கொடுத்துவிட வேண்டும் என முடிவு செய்தேன். ஏனெனில் ஒவ்வொரு முறையும் பணம் வரும் போதெல்லாம் ஏதேனும் கடன்காரர்களுக்கு கடனை திருப்பிக் கொடுப்பதற்கே சரியாகி விடுகிறது.

அதன் பிறகு, நாம் செய்வது ஏதோ பெரிய உதவி என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால், இந்தத் திட்டம் 800 கோடி மதிப்பிலானது. அதில், நான் கொடுப்பதெல்லாம் ஒரு சிறிய புள்ளி அவ்வளவுதான்.

இது ஒரு மிகப் பெரிய கனவு. மிகப் பெரிய முயற்சி. மிக சிறப்பாக தொடங்கி நல்லவிதமாக நிறைவடைய வேண்டும்.  நம்முடைய தொழிலாளர்கள் அனைவரும் அவருடன் இணைந்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். குறுகிய காலத்திற்குள் இது நடைபெறும் என்றும், அதற்கு சரியான தலைவர்தான் இதற்கு பொறுப்பேற்றிருக்கிறார் என்றும் நான் முழுதாக முழுமனதுடன் நம்புகிறேன்.

என்னுடைய உதவியை ஒரு கோடி ரூபாயுடன் நிறுத்திக் கொள்ளும் எண்ணமில்லை. தொடர்ந்து இந்த திட்டத்திற்கு என்னாலான உதவிகளை தொடர்ந்து செய்வேன்.

சொந்த வீடு கனவு என்பது எல்லா தொழிலாளர்களுக்கும் இருக்கும் ஒரு கனவு. அந்தக் கனவு.. அந்த ஆசை.. இன்று நிறைவேறத் தொடங்குகிறது. கண்டிப்பாக இந்தக் கனவை என்னால் மட்டும் சுமக்க இயலாது. ஏனெனில் இதற்காக செல்ல வேண்டிய தூரம் அதிகம். அதனால் இந்த திட்டம் சிறப்பாக தொடங்கி, சிறப்பாக நிறைவடைய வேண்டும் என ஆசைப்படுகிறேன்.

இந்த கனவுத் திட்டத்தை நிறைவேற்றும் கட்டுமான நிறுவன உரிமையாளர் சுரேஷ் பாபு அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எங்களுடைய தொழிலாளர்களின் வீட்டினை தலைமுறை, தலைமுறையாக  உறுதியுடன் இருக்கும் வகையில் கட்டித் தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இதற்காக எந்த சமரசத்தையும் மேற்கொள்ளாமல், தரமாக கட்டிடத்தை கட்டித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்…” என்றார்.

The post “ஒரு கோடி மட்டுமல்ல… இன்னும் உதவுவேன்..” – ஃபெப்ஸி விழாவில் விஜய் சேதுபதி பேச்சு appeared first on Touring Talkies.

]]>
ஹிந்தியில் தயாராகும் மவுனப் படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி..! https://touringtalkies.co/vijay-sethupathy-will-act-in-silence-movie-gandhi-talks/ Sun, 17 Jan 2021 06:22:28 +0000 https://touringtalkies.co/?p=12199 பாலிவுட்டில் உருவாகும் ‘காந்தி டாக்ஸ்’ என்கிற மவுனப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பலேகர் இந்தப் படத்தை இயக்குகிறார்.  தமிழ் திரையுலகின் மிகப் பெரிய நட்சத்திரமும், பிரபலமான முகங்களில் ஒருவருமான விஜய் சேதுபதி, இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பலேகரின் ‘காந்தி டாக்ஸ்’ திரைப்படத்தின் மூலம் தனது தடத்தை பாலிவுட்டில் பதிவு செய்யத் தயாராகிவிட்டார். கிட்டத்தட்ட 33 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியத் திரையுலகில் தயாராகப் போகும் மவுனத் திரைப்படம் இது. […]

The post ஹிந்தியில் தயாராகும் மவுனப் படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி..! appeared first on Touring Talkies.

]]>
பாலிவுட்டில் உருவாகும் ‘காந்தி டாக்ஸ்’ என்கிற மவுனப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பலேகர் இந்தப் படத்தை இயக்குகிறார். 

தமிழ் திரையுலகின் மிகப் பெரிய நட்சத்திரமும், பிரபலமான முகங்களில் ஒருவருமான விஜய் சேதுபதி, இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பலேகரின் ‘காந்தி டாக்ஸ்’ திரைப்படத்தின் மூலம் தனது தடத்தை பாலிவுட்டில் பதிவு செய்யத் தயாராகிவிட்டார்.

கிட்டத்தட்ட 33 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியத் திரையுலகில் தயாராகப் போகும் மவுனத் திரைப்படம் இது.

1987ஆம் ஆண்டு, கமல்ஹாசன் நடிப்பில் உருவான ‘புஷ்பக விமானா’ என்கிற திரைப்படமே பாலிவுட்டில் கடைசியாக உருவான மவுனப் படம்.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க முடிவெடுத்தது பற்றிப் பேசிய இயக்குநர் கிஷோர், “இந்தப் படம் உணர்ச்சிரீதியாக என் இதயத்துக்கு நெருக்கமான படம். ஒரு நடிகரும் அந்த யோசனை மற்றும் அதே உணர்ச்சிகளோடு தன்னை தொடர்புபடுத்திக் கொள்ளும்போது அது இயக்குநருக்குக் கிடைக்கும் வரம்.

எனக்கு விஜய் சேதுபதி அப்படி ஒரு நடிகர்தான். தனது நடிப்பின் மூலம் சவாலான  ஒரு கதைக்கு உரிய நடிப்பைத் தரக் கூடியவர். அவர் இந்தத் திரைக்கதையைப் படித்தவுடனேயே, படம் குறித்த எனது பார்வையை, அணுகுமுறையை முழுவதுமாகப் புரிந்து கொண்டார்.

ஒவ்வொரு இயக்குநரும் தங்கள் நடிகர்களிடமிருந்து குறிப்பிட்ட சில குணாதிசயங்களை எதிர்பார்க்கிறார்கள். இந்தப் படத்தில் நாயகனாக நடிக்க பாலிவுட்டில் நடிகர்களைத் தேடிக் கொண்டிருந்த அதே நேரத்தில் மற்ற மொழித் திரைத் துறைகளிலும் தேடினேன். அப்போதுதான் விஜய் சேதுபதி பற்றி தெரிய வந்தது.

அவரது நடிப்புத் திறன், ஸ்டைல், குரலில் இருக்கும் ஆற்றல் எல்லாம் வியக்க வைத்தது. அவரைப் பார்த்தவுடன் தான் என் கதையின் நாயகன் கிடைத்து விட்டான் என்பதை உணர்ந்தேன்.

அவர், அவரது தொழிலில் அற்புதத் திறமையாளர் என்பது மட்டுமல்ல, மிகவும் எளிமையான, பிரச்சாரம் செய்யாத ஒரு நட்சத்திரம். தனது படங்களுக்காக எந்தவிதமான எல்லைக்கும் செல்லக் கூடியவர். அவரோட பணியாற்றுவதில், எனது கனவுப் படத்தை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஆரம்பிப்பதில் உற்சாகமாக இருக்கிறேன்…” என்கிறார்.

நடிகர் விஜய் சேதுபதி ஏற்கனவே சில முன்னணி பாலிவுட் படைப்புகளில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அந்தாதுன்’ இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கும் அடுத்த படம், சந்தோஷ் சிவன் இயக்கும் ‘மும்பைக்கர்’, ஷாஹித் கபூர் நடிப்பில் உருவாகும் வெப் சீரிஸ் என வரிசையாக பல பிராஜெக்ட்டுகளில் அவர் நடிக்கவுள்ளார். மேலும் தமிழில் அவர் வில்லனாக நடித்த விக்ரம் வேதா’ திரைப்படமும் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது.

திவய் தமிஜா க்ரியேட்டிவ் ப்ரொடியூஸராக பணியாற்றும் ‘காந்தி டாக்ஸ் திரைப்படத்தை மூவி மில் எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கிறது.

The post ஹிந்தியில் தயாராகும் மவுனப் படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி..! appeared first on Touring Talkies.

]]>
“மாமனிதன்’ படத்தை வெளியிடத் தடையில்லை…” – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு https://touringtalkies.co/mamnithan-movie-release-case-disputed-by-chennai-high-court/ Tue, 15 Dec 2020 10:49:25 +0000 https://touringtalkies.co/?p=11083 நடிகர் விஜய் சேதுபதி நடித்த ‘மாமனிதன்’ படத்தை வெளியிடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை நீக்கம் செய்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். பிரபல இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா தனது YSR Productions நிறுவனத்தின் சார்பாக தயாரித்திருக்கும் திரைப்படம் ‘மாமனிதன்’. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம், ஷாஜி, ஜீவல் மேரி, அனிகா மற்றும் பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு – எம்.சுகுமார், இசை – இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, படத் தொகுப்பு – கர் பிரசாத், […]

The post “மாமனிதன்’ படத்தை வெளியிடத் தடையில்லை…” – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Touring Talkies.

]]>
நடிகர் விஜய் சேதுபதி நடித்த மாமனிதன்’ படத்தை வெளியிடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை நீக்கம் செய்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

பிரபல இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா தனது YSR Productions நிறுவனத்தின் சார்பாக தயாரித்திருக்கும் திரைப்படம் ‘மாமனிதன்’.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம், ஷாஜி, ஜீவல் மேரி, அனிகா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – எம்.சுகுமார், இசை – இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, படத் தொகுப்பு – கர் பிரசாத், எழுத்து, இயக்கம் – சீனு ராமசாமி.

இந்தப் படம் 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் துவங்கி 2019-ம் வருடம் மார்ச் மாதமே முடிந்து திரைக்கு வரத் தயாராக இருந்தது.

ஆனால் பல பிரச்சினைகள் காரணமாக இதுநாள்வரையிலும் இத்திரைப்படம் வெளியாகவில்லை.

இதற்கிடையில் இத்திரைப்படம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் இந்தப் படத்தைத் திரையிட இடைக்காலத் தடையும் விதிக்கப்பட்டிருந்தது.

அபிராமி மெகா மால்’ நிறுவனத்தின் சார்பில் இந்தப் படத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு படத்தை வெளியிட இடைக்காலத் தடை பெற்றிருந்தார்கள்.

அபிராமி மெகா மால்’ நிறுவனம் தாக்கல் செய்திருந்த மனுவில், “மாமனிதன் திரைப்படத்தின் சென்னை விநியோக உரிமையை ‘வான்சன்’  என்ற நிறுவனத்திடம் இருந்து வாங்கியிருக்கிறோம்.  தற்போது, தங்களுக்குத் தராமல் வேறொரு நிறுவனம் மூலமாக அந்தப் படத்தை வெளியிட முயற்சிகள் நடக்கிறது.

நாங்கள் ஏற்கெனவே அந்தப் படத்தை சென்னையில் வெளியிட வான்சன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதால் சென்னை விநியோக உரிமையை எங்களுக்குத்தான் தர வேண்டும். இல்லையேல் படத்திற்குத் தடை விதிக்க வேண்டும்…” என்று கோரியிருந்தார்.

இந்த மனுவினால்தான் ‘மாமனிதன்’ படத்தை வெளியிடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்தது.

ஆனால், படத்தின் தயாரிப்பாளரான யுவன்சங்கர்ராஜா, “மாமனிதன் படத்தின் விநியோக உரிமை தொடர்பாக அபிராமி மெகா மால் நிறுவனத்துடன் தான் எந்தவித ஒப்பந்தமும் செய்யவில்லை என்றும், வின்சன் நிறுவனத்திற்கும், அபிராமி மெகா மால் நிறுவனத்திற்கும் இடையிலான ஒப்பந்தத்திற்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

வான்சன்’ நிறுவனத்திற்கும் ஒய்.எஸ்.ஆர். நிறுவனத்துக்கும் இடையிலான ஒப்பந்தம் அவர்கள் பணம் தராததால் முறந்துவிட்டது. எனவே இந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட தடையாணையை நீக்க வேண்டும்.” என்றும் சொல்லி பதில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நேற்று நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “அபிராமி மெகா மால் நிறுவனம் யுவன் சங்கர் ராஜாவின் தயாரிப்பு நிறுவனத்திடம் நேரடியாக எந்தவித ஒப்பந்தமும் செய்து கொள்ளாததால், அவர்கள் விருப்பப்படி படத்தை வெளியிட்டுக் கொள்ளலாம். படத்தை வெளியிட விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை நீக்கப்படுகிறது..” என்று சொல்லி தீர்ப்பளித்தார்.

இதனால் மாமனிதன்’ திரைப்படம் வெளியாக இருந்த தடை நீங்கியுள்ளது. விரைவில் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்..!

The post “மாமனிதன்’ படத்தை வெளியிடத் தடையில்லை…” – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Touring Talkies.

]]>
விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் படங்களுக்கு கால்ஷீட் சொதப்பலால் சிக்கல்..! https://touringtalkies.co/sivakarthikeyan-vijay-sethupathy-movies-halt-on-call-sheet-problems/ Sun, 08 Nov 2020 05:10:00 +0000 https://touringtalkies.co/?p=9855 நடிகர் சிவகார்த்திகேயன் கொரோனா லாக் டவுனுக்குப் பிறகு உடனடியாக தான் நடித்து வரும் 2 படங்களுக்கும் கால்ஷீட் கொடுத்து எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடியுங்கள் என்று சொல்லியிருக்கிறார். ஆனால், விதி யோகிபாபு வடிவத்தில் சிவகார்த்தியை பார்த்து சிரிக்கிறது. ஒரு நாளைக்கு மூன்று ஷிப்ட் போட்டு நடித்தும் யோகிபாபுவால் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படத்தின் படப்பிடிப்புக்கு சொன்ன நாளில் வர முடியவில்லையாம். யோகிபாபு இப்போது நடிப்பதெல்லாம் மிடில் கிளாஸ் படங்கள் என்பதால் அந்தந்த படங்களில் அவர்தான் பிரதானமாக […]

The post விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் படங்களுக்கு கால்ஷீட் சொதப்பலால் சிக்கல்..! appeared first on Touring Talkies.

]]>
நடிகர் சிவகார்த்திகேயன் கொரோனா லாக் டவுனுக்குப் பிறகு உடனடியாக தான் நடித்து வரும் 2 படங்களுக்கும் கால்ஷீட் கொடுத்து எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடியுங்கள் என்று சொல்லியிருக்கிறார்.

ஆனால், விதி யோகிபாபு வடிவத்தில் சிவகார்த்தியை பார்த்து சிரிக்கிறது. ஒரு நாளைக்கு மூன்று ஷிப்ட் போட்டு நடித்தும் யோகிபாபுவால் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படத்தின் படப்பிடிப்புக்கு சொன்ன நாளில் வர முடியவில்லையாம்.

யோகிபாபு இப்போது நடிப்பதெல்லாம் மிடில் கிளாஸ் படங்கள் என்பதால் அந்தந்த படங்களில் அவர்தான் பிரதானமாக இருக்கிறார். அவர் இல்லாத காட்சிகளே குறைவு என்பதால் அவர் தினமும் ஏதாவது ஒரு படப்பிடிப்பில் இருந்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ‘டாக்டர்’ படப்பிடிப்பு தடைபட்டு சிவகார்த்திகேயனுக்கு தலைவலி ஆரம்பித்துள்ளதாம். இந்த ‘டாக்டர்’ படப்பிடிப்பை முடித்துவிட்டு உடனேயே இயக்குநர் ரவிக்குமாரின் ‘அயலான்’ படத்திற்கு கால்ஷீட் கொடுத்திருந்தார் சிவகார்த்திகேயன்.

அந்த ‘அயலானில்’ சிவாவுக்காக ராகுல் ப்ரீத் சிங் வெயிட்டிங்காம். அம்மணி இப்போது தெலுங்கில் மாடலாடிக் கொண்டிருப்பதால் அவரும் ரொம்ப பிஸி. சிவா சொன்ன டயத்துக்கு வரவில்லையெனில் ராகுலின் கால்ஷீட் வீணாகும். பின்பு ‘அயலான்’ தள்ளிப் போகும் நிலைமைக்குப் போகும் என்பதால் இரண்டு பட கலைஞர்களும் யோகிபாபுவை, ‘சீக்கிரமா வந்துரு சாமி’ என்று வேண்டி அழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தப் பக்கம் சிவகார்த்திகேயனுக்கு இந்த சிக்கல் என்றால், வரும் அட்வான்ஸ்களையெல்லாம் வாங்கிப் போட்டு, நட்புக்காக கேட்டவர்களுக்கெல்லாம் கால்ஷீட்டை வாரி வழங்கிய ‘நவீன தர்மதுரை’ விஜய் சேதுபதியும், இப்போது இந்த கால்ஷீட் சிக்கலில் மாட்டியிருக்கிறார்.

அவருடைய நடிப்பில் உருவாகிக் கொண்டிருந்த ‘துக்ளக் தர்பார்’ திரைப்படம் அப்படியே அந்தரத்தில் நிற்கிறது. விஜய் சேதுபதி வந்தால்தான் படம் கொஞ்சமேனும் நகரும். விஜய் சேதுபதியோ தன்னுடைய சொந்தப் பணத்தில் இருந்து பெரும் தொகையை முதலீடு செய்திருக்கும் ‘லாபம்’ படத்திற்கும் ‘அனபெல் சுப்ரமணியம்’ படத்திற்கும் இடையே ஓடி, ஓடி உழைத்தபடியே இருக்கிறார்.

‘துக்ளக் தர்பாரில்’ விஜய் சேதுபதியின் தர்பார் என்றைக்கு துவங்கும் என்பது அவருக்கே தெரியாது என்பதுதான் சோகம்..!இன்றைய தமிழ்ச் சினிமாவின் முன்னணி நாயகர்களான சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி இருவருமே இப்படியொரு கால்ஷீட் சிக்கல்களால் இப்போது மாட்டிக் கொண்டு முழிக்கிறார்கள்..!

The post விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் படங்களுக்கு கால்ஷீட் சொதப்பலால் சிக்கல்..! appeared first on Touring Talkies.

]]>
விஜய் சேதுபதியைத் தொடரும் தனுஷ்.. https://touringtalkies.co/dhanush-vijay-sethupathy-upcoming-list-news/ Thu, 29 Oct 2020 05:38:23 +0000 https://touringtalkies.co/?p=9403 தற்போதைய நிலையில் தமிழ்ச் சினிமாவில் மிக அதிகமான படங்களைக் கையில் வைத்திருப்பவர் விஜய் சேதுபதிதான். சுகுமார் இயக்கத்தில் ‘புஷ்பா’, வெங்கட கிருஷ்ணா ரோகாந்த் இயக்கத்தில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’, எம்.மணிகண்டன் இயக்கத்தில் ‘கடைசி விவசாயி’, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ‘நவரசா’, எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் ‘லாபம்’, டெல்லி பிரசாத் தீனதயாள் இயக்கத்தில் ‘துக்ளக் தர்பார்’ என்று கைவசம் விரல்களையும் தாண்டிய படங்களை வைத்திருக்கிறார். இதற்கு ஊடாகவே சீனு ராமசாமியின் […]

The post விஜய் சேதுபதியைத் தொடரும் தனுஷ்.. appeared first on Touring Talkies.

]]>
தற்போதைய நிலையில் தமிழ்ச் சினிமாவில் மிக அதிகமான படங்களைக் கையில் வைத்திருப்பவர் விஜய் சேதுபதிதான்.

சுகுமார் இயக்கத்தில் ‘புஷ்பா’, வெங்கட கிருஷ்ணா ரோகாந்த் இயக்கத்தில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’, எம்.மணிகண்டன் இயக்கத்தில் ‘கடைசி விவசாயி’, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ‘நவரசா’, எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் ‘லாபம்’, டெல்லி பிரசாத் தீனதயாள் இயக்கத்தில் ‘துக்ளக் தர்பார்’ என்று கைவசம் விரல்களையும் தாண்டிய படங்களை வைத்திருக்கிறார்.

இதற்கு ஊடாகவே சீனு ராமசாமியின் இயக்கத்தில் உருவான ‘இடம் பொருள் ஏவல்’ திரைப்படமும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யுடன் நடித்த ‘மாஸ்டர்’ படமும் திரைக்கு வரத் தயாராக இருக்கின்றன.

இந்த நேரத்தில் நடிகர் தனுஷும் வரிசையாக படங்களை ஒப்புக் கொண்டே வருகிறார். இப்போது தனுஷ் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘ஜகமே தந்திரம்’, மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘கர்ணன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இவர்களையடுத்து கார்த்திக் நரேன், மித்ரன் ஜவஹர், வெற்றிமாறன், அருண் மாதேஸ்வரன் ஆகியோரும் தனுஷுக்கான ஸ்கிரிப்ட்டுடன் தயாராகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்போது கூடுதலாக ‘ராட்சஸன்’ படத்தை இயக்கிய இயக்குநர் ராம்குமாரும் தனுஷை வைத்து இயக்கப் போகும் இயக்குநர்கள் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்.

தமிழ்ச் சினிமாவில் இதுவரையிலும் சொல்லப்படாத ஒரு அறிவியல் புனைவுக் கதையை தனுஷூக்காகத் தயார் செய்திருக்கிறாராம் இயக்குநர் ராம்குமார். இந்தப் படமும் அடுத்த வருடம் துவங்கவிருக்கிறதாம். படத்திற்கு ‘வால் நட்சத்திரம்’ என்று பெயர்கூட வைத்துவிட்டதாக லேட்டஸ்ட் தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post விஜய் சேதுபதியைத் தொடரும் தனுஷ்.. appeared first on Touring Talkies.

]]>
“800 படம் எதிரொலியாக எனக்குக் கொலை மிரட்டல் வருகிறது” – இயக்குநர் சீனு ராமசாமி புகார்..! https://touringtalkies.co/director-seenu-ramasamy-complaint-about-death-threatens/ Wed, 28 Oct 2020 06:46:33 +0000 https://touringtalkies.co/?p=9370 தனக்குக் கொலை மிரட்டல்கள் வருவதாக இயக்குநர் சீனு ராமசாமி திடீர் புகார் தெரிவித்துள்ளார். இயக்குநர் சீனு ராமசாமி தமிழ் சினிமாவில் ‘கூடல் நகர்’, ‘தென் மேற்குப் பருவக் காற்று’, ‘நீர்ப்பறவை’, ‘தர்மதுரை’, ‘கண்ணே கலைமானே’, ‘மாமனிதன்’, ‘இடம் பொருள் ஏவல்’ ஆகிய படங்களை இயக்கியவர். இதில் ‘தென்மேற்குப் பருவக் காற்று’ படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதையும் வென்றவர். இவருக்குத் தற்போது கொலை மிரட்டல் வந்துள்ளதாக அவரே புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று காலை டிவீட்டரில் […]

The post “800 படம் எதிரொலியாக எனக்குக் கொலை மிரட்டல் வருகிறது” – இயக்குநர் சீனு ராமசாமி புகார்..! appeared first on Touring Talkies.

]]>

தனக்குக் கொலை மிரட்டல்கள் வருவதாக இயக்குநர் சீனு ராமசாமி திடீர் புகார் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் சீனு ராமசாமி தமிழ் சினிமாவில் ‘கூடல் நகர்’, ‘தென் மேற்குப் பருவக் காற்று’, ‘நீர்ப்பறவை’, ‘தர்மதுரை’, ‘கண்ணே கலைமானே’, ‘மாமனிதன்’, ‘இடம் பொருள் ஏவல்’ ஆகிய படங்களை இயக்கியவர். இதில் ‘தென்மேற்குப் பருவக் காற்று’ படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதையும் வென்றவர்.

இவருக்குத் தற்போது கொலை மிரட்டல் வந்துள்ளதாக அவரே புகார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று காலை டிவீட்டரில் ஒரு அவசரச் செய்தியொன்றை பகிர்ந்தார் சீனு ராமசாமி.

அதில், “என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன். முதல்வர் அய்யா உதவ வேண்டும். அவசரம்.” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதன் தொடர்ச்சியாக இன்று காலையில் அவசரமாகப் பத்திரிகையாளர்களை சந்தித்த இயக்குநர் சீனு ராமசாமி இது குறித்துப் பேசுகையில், “முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமான ‘800’ பிரச்சனையில் எல்லோரையும் போலவே நானும் தம்பி விஜய் சேதுபதியிடம் ‘அதில் நடிக்க வேண்டாம்’ என்று வேண்டுகோள் வைத்தேன்.

இதற்கடுத்து நான் விஜய் சேதுபதிக்கு எதிரானவன் என்று சித்தரித்து எனக்கு பல்வேறு இடங்களில் இருந்தும் தொலைபேசி மூலமாக மிரட்டல்கள் வருகின்றன.

எனக்கும், தம்பி விஜய்சேதுபதிக்கும் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சனை போல இதனை சித்தரிக்கின்றனர். எனக்கும் விஜய் சேதுபதிக்கும் இடையே முரண்பாடுகளை உருவாக்கி அதனைக் கூர்மையாக்கி எங்களிடையே பிளவை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர்.

எனக்கு அரசியல் பற்றிய சினிமாக்களை எடுக்கத் தெரியும். ஆனால் சினிமாவிற்குள் இருக்கும் அரசியல் தெரியாது. தம்பி விஜய் சேதுபதியின் நலன் கருதியே அவரை அந்தப் படத்தில் நடிக்க வேண்டாம் என்று நான் சொன்னேன். ஆனாலும் எனக்கு மிரட்டல்களும், ஆபாச அர்ச்சனைகளும் வந்து கொண்டேயிருக்கின்றன.

இது பற்றி தம்பி விஜய் சேதுபதியிடமும் நான் பேசினேன்.  விஜய் சேதுபதியின் ரசிகர்களும் என்னுடைய தம்பிகள்தான். அவர்கள் இதனை ஒருபோதும் செய்ய மாட்டார்கள். நமக்கு இடையே யாராலும் முரண்பாடுகளை உருவாக்க முடியாது’ என்று விஜய் சேதுபதியும் என்னிடம் கூறியிருக்கிறார்.

ஆபாச வார்த்தைகளால் தொலைபேசியில் நள்ளிரவிலும் மிரட்டல் விடுக்கின்றனர். அதனால்தான் ட்விட்டரில் அப்படி ஒரு பதிவை போட்டேன். இது தொடர்பாக காவல் துறையில் எழுத்துப்பூர்வமாகவும் புகார் தரப் போகிறேன்..” என்று கூறினார் சீனு ராமசாமி.

The post “800 படம் எதிரொலியாக எனக்குக் கொலை மிரட்டல் வருகிறது” – இயக்குநர் சீனு ராமசாமி புகார்..! appeared first on Touring Talkies.

]]>
“800 படத்தில் நடிக்க வேண்டாம்” – விஜய் சேதுபதிக்கு பாரதிராஜா கண்டனம்..! https://touringtalkies.co/bharathiraja-request-to-vijay-sethupathy-not-to-act-in-800-movie/ Thu, 15 Oct 2020 06:22:46 +0000 https://touringtalkies.co/?p=8834 பிரபல இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற் பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கைக் கதை ‘800’ என்கின்ற பெயரில் சினிமாவாக தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தில் நடிகர் விஜய்சேதுபதி, முத்தையா முரளிதரனாக நடிக்கிறார். அவருடைய கெட்டப் தாங்கிய பலவித போஸ்டர்கள் நேற்று முதல் வெளியிடப்பட்டு வருகின்றன. முத்தையா முரளிதரன் ஈழத்தில் நடைபெற்ற தனி ஈழப் போராட்டங்கள் எதையும் ஆதரித்தவரில்லை. மாறாக இலங்கை அரசுகளை மட்டுமே தொடர்ந்து ஆதரித்து பேசியும் வந்திருக்கிறார். இதனால், தமிழகம் மட்டுமன்றி அவருடைய சொந்த […]

The post “800 படத்தில் நடிக்க வேண்டாம்” – விஜய் சேதுபதிக்கு பாரதிராஜா கண்டனம்..! appeared first on Touring Talkies.

]]>
பிரபல இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற் பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கைக் கதை ‘800’ என்கின்ற பெயரில் சினிமாவாக தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்தப் படத்தில் நடிகர் விஜய்சேதுபதி, முத்தையா முரளிதரனாக நடிக்கிறார். அவருடைய கெட்டப் தாங்கிய பலவித போஸ்டர்கள் நேற்று முதல் வெளியிடப்பட்டு வருகின்றன.

முத்தையா முரளிதரன் ஈழத்தில் நடைபெற்ற தனி ஈழப் போராட்டங்கள் எதையும் ஆதரித்தவரில்லை. மாறாக இலங்கை அரசுகளை மட்டுமே தொடர்ந்து ஆதரித்து பேசியும் வந்திருக்கிறார். இதனால், தமிழகம் மட்டுமன்றி அவருடைய சொந்த நாடான தமிழ் ஈழத்தில்கூட அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

இதையொட்டி தமிழகத்தில் இருந்து பல்வேறு பிரமுகர்களும், சினிமா பிரபலங்களும் இந்தப் படத்தில் நடிக்க வேண்டாம் என்று விஜய் சேதுபதிக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

இயக்குநர் இமயம் பாரதிராஜாவும் தாமரை இது குறித்து விஜய் சேதுபதிக்கு கோரிக்கை வைத்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கை இது :

அன்பின் கதாநாயகன் விஜய் சேதுபதிக்கு,

பாசத்திற்குரிய பாரதிராஜா எழுதிக் கொள்வது..

வணக்கம்.

மக்களிடம் நல்ல பெயர் எடுப்பது ரொம்பக் கடினம். ஆனால் பொதுமக்கள் வெகு வேகமாகவே உங்கள் மீது அன்பைக் கொட்டியுள்ளனர்.

அதற்கு இயல்பான, யதார்த்தமான பேச்சும் .. கடைக்கோடி மக்களின் எண்ண பிரதிபலிப்புமே காரணம். இன்னும் நீண்டு செல்லும் இந்தப் பயணத்தில் மேலும் புகழ் பெறவே வாழ்த்துகிறேன்.

நிற்க.

தாங்கள் செய்யவிருக்கும் ‘800’ என்ற படம் பற்றிக் கேள்விப்பட்டேன். இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனைப் பற்றிய பயோபிக் படமாக அது உருவாகப் போவதாக அறிந்தேன்.

நம் ஈழத் தமிழ்ப் பிள்ளைகள் செத்து விழுந்தபோது பிடில் வாசித்தவர் இந்த முத்தையா. சிங்கள இனவாதத்தை முழுக்க, முழுக்க ஆதரித்தவர்.

விளையாட்டு வீரனாக என்னதான் சாதித்தாலும், தன் சொந்த மக்கள் கொல்லப்பட்டபோது சிரித்து மகிழ்பவர் என்ன சாதித்து என்ன பயன்..?

 எத்தனையோ துரோகங்களை எம்மினம் கடந்து வந்துள்ளது. எங்களைப் பொருத்தவரை முத்தையா முரளீதரனும் ஒரு நம்பிக்கைத் துரோகிதான்.

அடிபட்ட வலியை நினைவு கூறும் மக்கள் என்னிடம், ஏன் நம்ம விஜய் சேதுபதி அதில் நடிக்கிறார்..? மறுத்திருக்கலாமே… என கேட்கின்றனர்.

அவர்களின் வேதனையும், வலியும் புரியும். அதேசமயம், அவர்கள் உங்கள் மீது வைத்திருக்கும் அன்பையும் என்னால் காண முடிந்தது.

உலகெங்கிலும் வாழும் தமிழர்களின் சார்பாக நான்  கோரிக்கை வைக்கிறேன்.

இனத் துரோகம் செய்த ஒருவரின் முகம் காலகாலமாக உங்கள் முகமாக வெறுப்போடே எம் மக்கள் பார்க்க வேண்டுமா..?

எந்த வகையிலாவது தமிழின வெறுப்பாளனின் வாழ்வியல்  படத்தில் நடிப்பதை தவிர்க்க முடியுமா பாருங்கள்.

தவிர்த்தால் எப்போதும் எம் ஈழ மக்களின் மனதிலும், என் மனதிலும் நன்றியோடு நினைவு கொள்ளப்படுவீர்கள்.

பின் குறிப்பு :  ‘800’ திரைப்படத்தை எடுக்க இருக்கும் Dar media நிறுவனம் நேற்று மாலை ஒரு அறிக்கை வெளியிட்டதை அறிந்தேன்.

‘800’ – திரைப்படம் அரசியல் படமில்லை. ஒரு விளையாட்டு வீரனின் வாழ்க்கை வரலாற்றை மட்டுமே படமாக்க இருக்கிறோம்.. இந்த திரைப்படம் எடுத்தால் பல ஈழத் தமிழர் திரைக் கலைஞர்கள், தொழில் நுட்பக் கலைஞர்களின் திறமை  உலக அரங்கில் வெளிக் காட்ட அடித்தளமாக இருக்கும் என்று வெளியீட்டு இருந்தீர்கள்.

துரோகிக்கு துணை போகும் உங்களை நினைத்து கோபப்படுவதா…? இல்லை.. உங்கள் அறியாமையை கண்டு சிரிப்பாதா…? அனைத்து துறைகளிலும் உலகரங்கில் தமிழர்களின் பங்களிப்பு என்னவென்று வரலாற்றை புரட்டிப் பாருங்கள்.. பாடம் சொல்லும்.

ஒரு செய்தியை அழுத்தமாக இங்கு பதிவிட விரும்புகிறேன். உங்களுக்கு வேண்டுமானால் முத்தையா முரளிதரன் சிறந்த விளையாட்டு வீரனாக கருதலாம். எங்களைப் பொறுத்தவரை அவர் இனத் துரோகி. துரோகிகளை ஒரு போதும் தமிழினம் மன்னிக்க இயலாது. ஒரு போராளியின் தியாகம், ஆயிரம் முத்தையா முரளிதரன்கள் வந்தால்கூட ஈடு செய்ய முடியாது.

உண்மையிலேயே நீங்கள்  தமிழர்களின் திரைக் கலைஞர்கள், தொழில் நுட்பக் கலைஞர்களின் திறமையை பயன்படுத்திக் கொள்ள விரும்பினால்.. அகிம்சை வழியில் போராடி  தீயாக இன்றும் சுடர்  விட்டுக் கொண்டிருக்கும் தம்பி திலீபனின் வாழ்க்கை வரலாறு, அல்லது எங்கள் மக்களுக்காக  தன்னையே உயிராயுதமாக உருக்கி எம் மண்ணோடு , காற்றோடு, கலந்த போன பல்லாயிரக்கணக்கான போராளிகளில், ஒரு மாவீரனின் வாழ்க்கை வரலாற்றை,  உலகரங்கில் எடுக்க முன் வாருங்கள்… ஒட்டு மொத்த தமிழர்களும், திரைத் துறையினரும் இலவசமாக பணியாற்றக் காத்திருக்கோம்.

நன்றி

இயக்குநர் பாரதிராஜா

The post “800 படத்தில் நடிக்க வேண்டாம்” – விஜய் சேதுபதிக்கு பாரதிராஜா கண்டனம்..! appeared first on Touring Talkies.

]]>
“எட்டப்பனாகிவிடாதீர்கள்…” – விஜய் சேதுபதிக்கு கவிஞர் தாமரையின் அறிவுரை..! https://touringtalkies.co/kavingar-thamarai-advice-to-vijay-sethupathy-about-800-movie/ Wed, 14 Oct 2020 15:49:05 +0000 https://touringtalkies.co/?p=8811 பிரபல இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற் பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கைக் கதை ‘800’ என்கின்ற பெயரில் சினிமாவாக தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தில் நடிகர் விஜய்சேதுபதி, முத்தையா முரளிதரனாக நடிக்கிறார். அவருடைய கெட்டப் தாங்கிய பலவித போஸ்டர்கள் நேற்று முதல் வெளியிடப்பட்டு வருகின்றன. முத்தையா முரளிதரன் ஈழத்தில் நடைபெற்ற தனி ஈழப் போராட்டங்கள் எதையும் ஆதரித்தவரில்லை. மாறாக இலங்கை அரசுகளை மட்டுமே தொடர்ந்து ஆதரித்து பேசியும் வந்திருக்கிறார். இதனால், தமிழகம் மட்டுமன்றி அவருடைய சொந்த […]

The post “எட்டப்பனாகிவிடாதீர்கள்…” – விஜய் சேதுபதிக்கு கவிஞர் தாமரையின் அறிவுரை..! appeared first on Touring Talkies.

]]>

பிரபல இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற் பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கைக் கதை ‘800’ என்கின்ற பெயரில் சினிமாவாக தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்தப் படத்தில் நடிகர் விஜய்சேதுபதி, முத்தையா முரளிதரனாக நடிக்கிறார். அவருடைய கெட்டப் தாங்கிய பலவித போஸ்டர்கள் நேற்று முதல் வெளியிடப்பட்டு வருகின்றன.

முத்தையா முரளிதரன் ஈழத்தில் நடைபெற்ற தனி ஈழப் போராட்டங்கள் எதையும் ஆதரித்தவரில்லை. மாறாக இலங்கை அரசுகளை மட்டுமே தொடர்ந்து ஆதரித்து பேசியும் வந்திருக்கிறார். இதனால், தமிழகம் மட்டுமன்றி அவருடைய சொந்த நாடான தமிழ் ஈழத்தில்கூட அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

இதையொட்டி தமிழகத்தில் இருந்து பல்வேறு பிரமுகர்களும், சினிமா பிரபலங்களும் இந்தப் படத்தில் நடிக்க வேண்டாம் என்று விஜய் சேதுபதிக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான தாமரை இது குறித்து விஜய் சேதுபதிக்கு கோரிக்கை வைத்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கை இது :

விஜய் சேதுபதி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்…!

என்னை நீங்கள் அறிந்திருக்கலாம். உங்கள் படங்கள் சிலவற்றில் பாடல் எழுதியுள்ளேன். நேரில் சந்தித்திருக்கிறோமா என்று நினைவில்லை. கடந்த ஒரு வாரமாக உங்களிடம் தொலைபேசி வாயிலாக ஒரு செய்தி சொல்லிவிட வேண்டுமென்று காத்திருக்கிறேன்.

முத்தையா முரளிதரன் வாழ்க்கைப் படத்தில் நீங்கள் நடிக்க இருப்பதன் தொடர்பான பின் வினைச் செய்திகளை இப்போது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கலாம். இந்த அளவுக்கு அது வளரும் முன்பாகவே உங்களை எச்சரித்துவிட வேண்டுமென்றுதான் விரும்பினேன்.

முரளிதரன் வெறும் கிரிக்கெட் வீரர், சாதனையாளர் என்றால் அதில் நீங்கள் நடிப்பதை யாரும் பொருட்படுத்தியிருக்க மாட்டார்கள். அவர் இலங்கையிலிருந்து இலங்கை அணிக்காக விளையாடி வந்ததுகூட, தமிழர்களால் நடுநிலையாகவே பார்க்கப்பட்டு வந்தது. 

ஆரம்பக் காலத்தில் அது விமர்சனத்துக்குள்ளானபோது, புலிகள் கோலோச்சிய காலத்தில், தேசியத் தலைவர் ”அவர் விளையாட்டுக்கு எந்த ஊறும் விளைவிக்க வேண்டாம், நம் பிள்ளை ஒருவர் விளையாடுகிறார் என்றே கொள்வோம்” என்று பெருந்தன்மையோடு கூறியதால் சர்ச்சை முற்றுப் பெற்று முரளிதரன் தொடர்ந்து விளையாட முடிந்தது. அன்று தலைவர் நினைத்திருந்தால், அன்றே முரளிதரனின் விளையாட்டு வாழ்க்கை முடிவுக்கு வந்திருக்கும்.

முரளிதரன் சிங்களவர்க்கிடையே ஒற்றைத் தமிழராக இருந்ததுகூட பெரும் நெருக்கடியாக இருந்திருக்கலாம். தன் வாழ்விருப்பிற்காக அவர் சிங்களராகவே மாறியிருந்ததைக்கூட புரிந்து கொள்ளலாம். ஆனால், அவர் அந்த இடத்தில் நிற்கவில்லையே…

ஐயகோ !

சிங்களராக மாறியதோடல்லாமல் சிங்கள அரசியல்வாதியாகவும் மாறினார். தமிழ்மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்று போட்ட ராசபக்சேக்களின் ஒலிபெருக்கியாக அவதாரமெடுத்தார். தமிழரின் இரத்த ஆறு முள்ளிவாய்க்காலில் பெருக்கெடுத்து ஓடியபோது, ‘இந்த நாள் இனிய நாள்’ என்று அறிக்கை விட்டு விருந்துக் கூத்தாடினார்…. காணாமல் போன தம் வீட்டுப் பிள்ளைகளைத் தேடித் தலைவிரி கோலமாகத் தமிழ்த் தாய்மார்கள் கதறியதை, ‘நாடகம்’ என்று வர்ணித்தார்.

இனப் படுகொலையை மறைக்க இலங்கை அரசு போடும் நாடகத்தில் இவர் பங்கேற்று வேடம் கட்டியிருப்பதை, தொழில்முறை நடிகனான உங்களால் எப்படி இனம் கண்டு கொள்ள முடியாமல் போனது மக்கள் செல்வனே??? அப்படியென்றால், அவர் உங்களைவிடத் திறமையான நடிகர் என்றுதானே பொருள் !?

ஆக, உங்கள் வாழ்க்கையைப் படமெடுத்தால் முரளிதரனை நடிக்கச் சொல்லலாம் என்பதுதானே சரியாக இருக்கும்…?!

வரலாறு பல கதைகள் சொல்லும் வி.சே அவர்களே..! அது தன் பாட்டுக்கு எழுதிப் போகும்…. எட்டப்பன் ஒரேயொரு குட்டி வேலைதான் செய்தான், இன்றளவும் ‘எட்டப்பன்’ என்கிற பெயர் எப்படிப் பயன்படுத்தப்படுகிறது என்று தெரியுமல்லவா..? உங்கள் பெயர் அப்படியொன்றாக மாறிவிடக் கூடாது என்பதில் உங்கள் மேல் அன்பும் அக்கறையும் கொண்ட எங்களுக்கு பதைபதைப்பு இருக்காதா…?

நானொரு சாதாரண பாடலாசிரியர். ஆனால் திரையுலகில் தமிழை உயர்த்திப் பிடிப்பதற்காகவே ஓடாத ஓட்டம் ஓடிக் கொண்டிருப்பவள். எத்தனையோ பாடல்களை மறுத்தவள், அதனால் எத்தனையோ நட்டங்களைச் சந்தித்தவள்..!

என்னது… நட்டமென்றா சொன்னேன்..??! மற்றவர்களின் அளவுகோலுக்குப் புரிவதற்காக அப்படிச் சொன்னேன். என் மொழிக்காக நான் ஓடுகிறேன். என் மக்களுக்காக நான் வதைபடுகிறேன். என் இனம் உயர்வதற்காக நான் வறுபடுகிறேன். இதில் நட்டமென்ன வந்தது நட்டம்..?? ஒரு தமிழ்ப் பெண் தன் ‘பங்களிப்பாக’ இதைச் செய்தாள் என்றுதான் சொல்ல வேண்டும். ஆம், நட்டமல்ல, பங்களிப்பு என்பதே பொருத்தமான சொல்!..

நாமென்ன போர் முனையில் துப்பாக்கி தூக்கிக் கொண்டு ரத்தமும் குண்டு சிதறலுமாக அலைந்தோமா?.. போராட்டங்களில் முன் வரிசையில் நின்று மண்டையடி வாங்கினோமா?..

அண்ணனைக் காணோம்.. அக்காவைக் காணோம்.. அம்மாவை சாகக் கொடுத்தோம்.. என்று பைத்தியமாக தெருக்களில் அலைந்தோமா..?? இசைப் பிரியாக்களின் ஒரு துண்டுத் துணியாகவாவது இருந்திருப்போமா..? இல்லை.. அங்கு காயம் பட்டுக் கதறிய எம்குலக் குழந்தைகளுக்கு மஞ்சள் அரைத்துப் பணி புரிந்தோமா..?

ஒரு பாடலை எழுத மறுக்கிறோம். ஒரு படத்தில் நடிக்க மறுக்கிறோம். அவ்வளவுதானே..? என்ன ‘நட்டம்’..?

நமக்குத் தெரிந்த வகையில் ‘பங்களி’க்கிறோம், அவ்வளவுதானே..??

நான் மறைந்தாலும் வரலாறு என்னை, தலை நிமிர்ந்த தமிழச்சியாகவே கொண்டாடும். நீங்கள் மறைந்தாலும் தமிழனுக்காக தடுத்தாடிய வீரனாகவே மகுடம் சூடும்.

தமிழர்களாகப் பிறந்துவிட்டு, இந்தத் தன்மானம்கூட இல்லையென்றால் அப்புறமென்ன நமக்கு அகம், புறம், அடுப்படி, மூன்று வேளை சோறு..????

தமிழன் தாழ்ந்திருக்கும் காலம் இது..! காலக் கோளாறு இது..!

தமிழன் தாழலாம்.. ஆனால் வீழக் கூடாது…

வீழ்த்த முனைபவர்கள் பல வேடமிட்டு வரத்தான் செய்வார்கள். நாம் ஏமாந்து விடக் கூடாது. நம் கையை எடுத்து நம் கண்ணையே குத்துவார்கள். நாம் தூங்கிவிடக் கூடாது.

முத்தையா முரளிதரன் ஒரு வரலாற்று எச்சில்..! அதை நாம்தான் துப்ப வேண்டும். அது நம்மை நனைத்து விடக் கூடாது..!

மக்கள் செல்வன்’ விஜய சேதுபதி அவர்களே, நல்ல முடிவாக எடுங்கள்..

என்ன ஆகிவிடும் என்று பார்க்கலாம்..! உலகத் தமிழர்கள் நம் பக்கம் இருக்கிறார்கள்.

பி.கு.: சிறந்த நடிப்புக் கலைஞரான உங்களுடைய தோற்றப் பொருத்தம் இன்னொருவருக்கானது..! அதை ஏற்று நடியுங்கள். வரலாறு உங்களை என்னவாக எழுதுகிறது என்று பார்ப்போம் !

தேசியத் தலைவர் மாவீரன் பிரபாகரன் வாழ்க்கை படமாகும் நாள் தொலைவிலில்லை! படம் வெளியிட்டிருக்கிறேன். கண்ணாடி முன் நின்று ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள்..!

The post “எட்டப்பனாகிவிடாதீர்கள்…” – விஜய் சேதுபதிக்கு கவிஞர் தாமரையின் அறிவுரை..! appeared first on Touring Talkies.

]]>
“முத்தையா முரளிதரனாக நடிக்காதீர்கள்..” – விஜய் சேதுபதிக்கு தோழர் தியாகு வேண்டுகோள்..! https://touringtalkies.co/thozar-thiyagu-appeals-to-vijay-sethupathy-not-to-act-in-800-movie/ Wed, 14 Oct 2020 15:13:50 +0000 https://touringtalkies.co/?p=8808 பிரபல இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற் பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கைக் கதை ‘800’ என்கின்ற பெயரில் சினிமாவாக தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, முத்தையா முரளிதரனாக நடிக்கிறார். அவருடைய கெட்டப் தாங்கிய பலவித போஸ்டர்கள் நேற்று முதல் வெளியிடப்பட்டு வருகின்றன. முத்தையா முரளிதரன் ஈழத்தில் நடைபெற்ற தனி ஈழப் போராட்டங்கள் எதையும் ஆதரித்தவரில்லை. மாறாக இலங்கை அரசுகளை மட்டுமே தொடர்ந்து ஆதரித்து பேசியும் வந்திருக்கிறார். இதனால், தமிழகம் மட்டுமன்றி அவருடைய […]

The post “முத்தையா முரளிதரனாக நடிக்காதீர்கள்..” – விஜய் சேதுபதிக்கு தோழர் தியாகு வேண்டுகோள்..! appeared first on Touring Talkies.

]]>
பிரபல இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற் பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கைக் கதை ‘800’ என்கின்ற பெயரில் சினிமாவாக தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, முத்தையா முரளிதரனாக நடிக்கிறார். அவருடைய கெட்டப் தாங்கிய பலவித போஸ்டர்கள் நேற்று முதல் வெளியிடப்பட்டு வருகின்றன.

முத்தையா முரளிதரன் ஈழத்தில் நடைபெற்ற தனி ஈழப் போராட்டங்கள் எதையும் ஆதரித்தவரில்லை. மாறாக இலங்கை அரசுகளை மட்டுமே தொடர்ந்து ஆதரித்து பேசியும் வந்திருக்கிறார். இதனால், தமிழகம் மட்டுமன்றி அவருடைய சொந்த நாடான தமிழ் ஈழத்தில்கூட அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

இதையொட்டி தமிழகத்தில் இருந்து பல்வேறு பிரமுகர்களும், சினிமா பிரபலங்களும் இந்தப் படத்தில் நடிக்க வேண்டாம் என்று விஜய் சேதுபதிக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

‘தமிழ்த் தேசிய விடுதலை இயக்க’த்தின் பொதுச் செயலாளரான தியாகுவும் இது குறித்து விஜய் சேதுபதிக்கு கோரிக்கை வைத்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கை இது :

நடிகர் விஜய் சேதுபதி – இதுவே கடைசி விளம்பரமாக இருக்கட்டும்.

அன்பிற்குரிய விஜய் சேதுபதி அவர்களே..!

வணக்கம்.

நீங்கள் இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டு வீர்ர் முத்தையா முரளிதரன் வேடத்தில் ஒரு திரைப்படத்தில் நடிப்பதாக ”முதல் தோற்ற விளம்பரங்கள்” (first look posters) வந்துள்ளன. இவையே கடைசித் தோற்ற விளம்பரமாகவும் இருந்து விட்டால் நல்லது.

இதற்கு மேல் நீங்கள் இந்தப் படத்திலிருந்து விலகிய செய்தி தவிர வேறு எதுவும் வராமலிருக்க வேண்டும் என விரும்பும் தமிழர்கள் சார்பில் உங்களுக்கு இந்த மடல். உங்கள் முகவரி எனக்குத் தெரியாது. ஆனால் எப்படியும் இந்த மடல் உங்கள் பார்வைக்குச் சென்று விடும் என்ற நம்பிக்கையுடன் எழுதுகிறேன்.

ஒரு நடிகர் என்ற முறையில் எந்தக் கதை மாந்தராகவும் நடிக்க உங்களுக்கு உரிமையுண்டு, அதுதான் உங்கள் ’தொழில் தர்மம்’ என்பதில் ஐயமில்லை. திரு முத்தையா முரளிதரனைப் பொறுத்தவரை உலக சாதனை புரிந்த ஒரு தலைசிறந்த கிரிக்கெட் வீர்ர் என்பதில் மறுப்புக்கே இடமில்லை. ஆக, அவராக நீங்கள் நடிப்பது உங்கள் இருவருக்குமே இயல்பாகப் பெருமை தரக் கூடியது என எடுத்த எடுப்பில் தோன்றத்தான் செய்யும்.

ஆனால், நீங்கள் நடிகர் என்பதோடு குறுகிய காலத்தில் தமிழ் மக்களின் அன்பைப் பெற்ற தமிழ்க் கலைஞராகவும் விளங்குவதற்கு உங்கள் நடிப்புத் திறன் மட்டுமே காரணமன்று. அறம் சார்ந்த முற்போக்குக் கண்ணோட்டமும் உடையவராகத் தமிழ் மக்களிடையே நீங்கள் கொண்டிருக்கும் படிமமும் சேர்ந்துதான் உங்களுக்குப் புகழ் சேர்த்துள்ளது எனக் கருதுகிறேன்.

முத்தையா முரளிதரன் கிரிக்கெட்டில் சுழற்பந்து வீச்சாளர் மட்டும்தான் என்றால் இந்த மடல் எழுத வேண்டிய தேவையே எழுந்திருக்காது.

2009 மே மாதம் முள்ளிவாய்க்காலில் உச்சம் கண்டதே சிங்கள அரசின் தமிழர் இனவழிப்பு, போரின் இறுதிக் கட்டத்தில் மட்டும் சற்றொப்ப ஒன்றரை இலட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்களே, குடும்பத்துடன் சரணடைந்தவர்கள் உட்பட பல்லாயிரம் தமிழர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டார்களே, இந்த உண்மைகள் எல்லாம் உங்களுக்குத் தெரியும், முத்தையா முரளிதரனுக்கும் தெரியும்.

ஆனால் இந்தக் கொடிய இனவழிப்பைத் தலைமையேற்று நடத்திய இராசபட்சேக்களுக்கு முரளி ஆதரவு தெரிவித்தவர் என்பது உங்களுக்குத் தெரியுமா? தமிழரான அவர் இனவழிப்பின் நிறைவை மகிழ்ந்து கொண்டாடி சிங்களப் பேரினவாதிகளுக்குத் தன் விசுவாசத்தைக் காட்டிக் கொண்டவர் என்பது உங்களுக்குத் தெரியுமா?

ஒன்றரை இலட்சம் உயிர்களை மாய்த்த கொலைகாரச் சாதனையை முத்தையா முரளிதரன் இரசித்துச் சுவைத்தார் என்பது தெரிந்த பின்னும் 800 விக்கெட்டுகளைச் சாய்த்த அவரது ’தூஸ்ரா’வை இரசிக்கவும் கொண்டாடவும் தமிழர்களுக்கு எப்படி மனம் வரும்..?

அருள் கூர்ந்து எண்ணிப் பாருங்கள் விஜய்!

ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனவழிப்புப் போர்க் காலத்தில் நடந்த போர்க் குற்றங்கள், மானிடப் பகைக் குற்றங்கள். மாந்தவுரிமை மீறல்கள் பற்றியெல்லாம் வந்துள்ள ஐநா அறிக்கைகள். மாந்தவுரிமைப் பேரவைத் தீர்மானஙகள், சேனல் நான்கின் ஆவணப் படங்கள்… இவை குறித்தெல்லாம் உங்களுக்குத் தெரியாமலிருக்காது என நம்புகிறேன்.

எவ்வளவு தரவுகள் தேவையானாலும் உங்களுக்கு அனுப்ப தமிழ் இளைஞர்கள் அணியமாய் உள்ளனர்.

உங்களைப் போன்றவர்களை இழந்து விடக் கூடாது என்ற அக்கறை தவிர வேறு நோக்கமில்லை.

நீங்கள் நினைக்கலாம், யாரோ சிலர் விடுக்கும் வேண்டுகோளை மதிக்க வேண்டுமா என. இல்லை, விஜய். இது உலகத் தமிழினத்தின் ஒன்றுபட்ட இதயத் துடிப்பு என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

இலங்கையில் நடந்தது இனப் படுகொலை என்று தமிழகச் சட்டப் பேரவையும், சிறிலங்காவின் வட மாகாண சபையும் ஒருமனதாக இயற்றிய தீர்மானங்களை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

இலங்கையைப் புறக்கணிக்கும் கோரிக்கையின் தொடர்ச்சியாகத்தான் அப்போதைய முதலமைச்சர் மாண்புமிகு ஜெயலலிதா அவர்கள் சென்னையில் இலங்கை வீர்ர்கள் விளையாடும் ஐபிஎல் போட்டிகள் நடத்தத் தடை விதித்தார் என்பதை நினைவிற்கொள்ளுங்கள்.

இன்றளவும் சன் குழுமத்தின் முதலாளி கலாநிதி மாறன் தனது ஐதரபாத் சன்ரைசர்ஸ் அணிக்குப் பந்து வீச்சுப் பயிற்சியாளராக விலைக்கு வாங்கி வைத்துள்ள முத்தையா முரளிதரனை அன்று தமிழகத்தின் சார்பில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளேவிட மறுத்தார்.

இன்று அதே முரளிதரனின் படிமம் உங்கள் அரிதார வடிவில் தமிழ்நாட்டுக்குள்ளும் புலம்பெயர் தமிழுலகத்துக்குள்ளும் நுழையும் முயற்சி பத்துக் கோடித் தமிழர்களையும் இழிவுபடுத்துவதல்லவா?

விளையாட்டிலும், கலையிலும் அரசியல் கலக்கலாமா…? என்று ஒரு கலப்படக் கும்பல் கிளம்பி வரும்.

அவர்களுக்கு நீங்கள் எடுத்துக் காட்ட வேண்டிய சில வரலாற்றுப் பக்கங்களை உங்கள் பார்வைக்குக் கொண்டுவர விரும்புகிறேன். “கொழும்புக் கொழுப்பைக் கரைக்கும் அரசியல் எது?” என்ற கட்டுரையில் தோழர் நலங்கிள்ளி புரட்டிக் காட்டும் அந்தப் பக்கங்கள் உங்கள் பார்வைக்கு:

தமிழகத்தில் அனைவரும் அறிந்த பெயர் மார்லான் பிராண்டோ. ஆலிவுட்டின் பெரும் நடிகர். சிவாஜி கணேசனைத் தமிழகத்தின் மார்லான் பிராண்டோ என்று தமிழ்த் திரைச் சுவைஞர்கள்  போற்றிய போது, இல்லை, மார்லான் பிராண்டோதான் அமெரிக்காவின் சிவாஜி என்றார் அறிஞர் அண்ணா. மார்லான் பிராண்டோ நாயகனாக நடித்த ’காட்ஃபாதர்’ நீங்களும் பார்த்திருப்பீர்கள்.

இப்படிப்பட்ட நடிகர்தான் உலகத் திரைப்பட நடிகர்களுக்கும் இயக்குநர்களுக்கும் திரைக்கதை ஆசிரியர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் 1961-ல் ஒரு கோரிக்கை விடுத்தார். ஒரு படத்துக்கு ஒப்பந்தமாகும் முன்பு அப்படத்தைத் தென்னாப்பிரிக்காவில் திரையிடக் கூடாதென ஒப்பந்தம் செய்து கொள்ளும்படி அவர்களைக் கேட்டுக் கொண்டார்.

ஏன் தெரியுமா…? தென்னாப்பிரிக்க வெள்ளை நிறவெறி அரசு, கறுப்பின மக்களை எதிர்த்து இனஒதுக்கலைக் கடைப்பிடித்து வந்ததால் அந்த அரசை எல்லா வகையிலும் உலகமே புறக்கணித்தது. இந்தப் புறக்கணிப்பில் ஆலிவுட்டும் சேர்ந்து கொண்டது. ஆலிவுட் கலைஞர்களில் வெள்ளையர்கள் பெரும்பான்மையாக இருந்தும் அவர்களைத் திரட்டி தென்னாப்பிரிக்காவுக்குப் பாடம் புகட்டியவர் மார்லான் பிராண்டோ.

அவ்வளவு பெரிய பாடம் இல்லையென்றாலும் முத்தையா முரளிதரன் போன்றவர்களின் இரண்டகத்துக்கு நீங்கள் சிறிய பாடமாவது புகட்டலாமே விஜய்?

இன ஒதுக்கல் கோலோச்சிய காலத்தில் தென்னாப்பிரிக்கா சென்று இசை நிகழ்ச்சிகள் நடத்தி விட்டு வந்த தமிழக பக்திப் பாடகர் பித்துக்குளி முருகதாசை இந்திய அரசு நேரில் அழைத்துக் கண்டித்தது.

விளையாட்டுத் துறைப் புறக்கணிப்பால் தலைசிறந்த தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீர்ர்கள் கிரயம் பொல்லாக், பேரி ரிச்சர்ட்ஸ் போன்றோர் தங்கள் கிரிக்கெட் வாழ்வையே இழந்தனர். தம் வாழ்நாளில் ஒரே ஒரு சர்வதேச ஆட்டம் கூட அவர்களால் ஆட  முடியவில்லை.

கிரிக்கெட் விளையாட்டின் வரலாற்றில் ஒப்பாரும் மிக்காருமில்லாத மட்டையடி வீர்ராக விளங்கியவர் யார் என்று முத்தையா முரளிதரனிடமே கேட்டுப் பாருங்கள், டான் பிராட்மன் என்ற விடை கிடைக்கும்.

பிராட்மன் 1971-ம் ஆண்டு தென்னாப்பிரிக்க அதிபர் ஜான் ஃபார்ஸ்டரைச் சந்தித்த போது, தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியில் கறுப்பின வீர்ர்களைச் சேர்த்துக் கொள்ளாமை குறித்துக் கேள்வி எழுப்பினார். அறிவில் பின்தங்கிய கறுப்பர்களால் எப்படி வெள்ளையர்கள் போல் அழகாகக் கிரிக்கெட் விளையாட முடியுமெனக் கிண்டலடித்தார் ஃபார்ஸ்டர்.

“நீங்கள் கேரி சோபர்ஸ் எனும் மாபெரும் கறுப்பினக் கிரிக்கெட்டர் பந்தடித்து ஆடும் ஒயிலையும் மிடுக்கையும் கண்டதில்லையா ஃபாஸ்டர்…?” எனக் கேட்டார் பிராட்மன். “நிறவெறியில் நீங்கள் முரண்டு பிடிக்கும்வரை ஆஸ்திரேலியக் கிரிக்கெட் அணி, ஒருபோதும் தென்னாப்பிரிக்காவின் வாசல் மிதியாது” என்று அறிவித்தார்.

மண்டேலா சிறையிலிருந்து மீண்டு வந்ததும், பிராட்மன் குறித்து அன்புடன் வினவினாராம்..! விளையாட்டுத் துறையிலான இன ஒதுக்கலைக் கைவிட்ட பிறகு தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியை நெல்சன் மண்டேலாவே இந்தியாவுக்கு அழைத்து வந்தார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

கிரகாம் கூச் தலைமையிலான இங்கிலாந்து அணி தடையை மீறி தென்னாப்பிரிக்கா செல்லலாம் என 1982-ல் முடிவெடுத்தது. இந்தப் பயணம் ‘கலகப் பயணம்’ என்றும், பயணம் சென்றோர் ‘கலக அணியினர்’ என்றும் அழைக்கப்பட்டனர்.

”ஆல்-ரவுண்டர்’ இயான் போதமைத் தவிர முழு வலிமையுடன் தென்னாப்பிரிக்காவில் களமிறங்கிய இந்த இங்கிலாந்து அணியினரை உலக ஊடகங்களும், அரசியல் தலைவர்களும் கடுமையாக எதிர்த்தனர். அவர்களைக் ‘கேவலமான பன்னிருவர்’ என இங்கிலாந்து நாடாளுமன்றமே வண்ணித்தது.

அது மட்டுமல்ல, அந்த அணியினர் பன்னாட்டுக் கிரிக்கெட்டிலிருந்து மூன்றாண்டுக் காலத்துக்கு விலக்கி வைக்கப்பட்டனர். இங்கிலாந்தின் தலைசிறந்த மட்டையாளர்களில் ஒருவரான ஜெஃப்ரி பாய்காட் உள்ளிட்டோரின் கிரிக்கெட் வாழ்க்கை அத்துடன் முடிவுக்கு வந்தது.

வரலாற்றில் ஒரே ஒரு முறைதான் இந்தியா டேவிஸ் கோப்பை டென்னிஸ் இறுதிப் போட்டிவரை முன்னேறியது. அது 1974ஆம் ஆண்டு. விஜய் அமிர்தராஜ் ஒற்றையர் ஆட்டத்திலும், விஜய் ஆன்ந்த் உடன்பிறப்புகள் இரட்டையர் ஆட்டத்திலும் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்ததால் கோப்பை இந்தியாவுக்கே என்று நம்பப்பட்டது.

ஆனால் இந்த இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்த்து விளையாட வேண்டிய கட்டாயம். என்ன செய்வது…? புறக்கணிப்பது தவிர வேறு வழியில்லை என்று இந்திய அரசு சொல்லி விட்டது.

பிற்காலத்தில் ஐ.நா. துணைக் கூட்டம் ஒன்றில் விஜய் அமிர்தராஜ் இது பற்றிப் பேசினார். ”அப்போது ஏமாற்றமாக இருந்தாலும் இந்தப் புறக்கணிப்பு எவ்வளவு சரியானது என்பதைத் தெரிந்து கொண்டபோது பெருமைப்பட்டேன்” என்றார். விஜய் அமிர்தராஜுக்குக் கிடைத்த பெருமை சிறிதாவது விஜய் சேதுபதிக்கும் கிடைக்க வேண்டும் அல்லவா?

ஒப்புக் கொண்டதிலிருந்து இப்போது பின்னெடுப்பது உங்களுக்கு சங்கடமாகத் தெரியலாம், ஆனால் எதிர்காலம் உங்களைப் போற்றும் என்பதை எண்ணிப் பாருங்கள்.

விஜய் சேதுபதி அவர்களே…! முத்தையா முரளிதரன் பற்றிய படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு ஒப்பந்தம் செய்த பின் எப்படிப் பின் வாங்குவது… என்று நீங்கள் தயங்கத் தேவையில்லை.

நம் காலத்தின் தலைசிறந்த பூதியல் (இயற்பியல்) அறிவியலர் ஸ்டீபன் ஹாக்கிங் 2013-ம் ஆண்டு இசுரேலில் ஒரு கல்வி நிறுவனத்தின் ஒன்று கூடலுக்கு வந்த அழைப்பை ஏற்றுக் கொண்டிருந்தார்.

இசுரேல் நாட்டின் அதிபரும் அதில் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் பாலத்தீனர்களுக்கு எதிராக இசுரேல் நடத்தி வரும் கொடுமைகளைக் கண்டித்து அவர் இம்மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் என்று பல நண்பர்களும் கேட்டுக் கொண்டபோது அதை ஏற்று இசுரேல் செல்வதில்லை என்று அறிவித்தார். துயருற்ற பாலத்தீன மக்களுக்கு அவரால் முடிந்த ஒரு சிறு ஆறுதல்..!

உங்கள் சக தமிழர்களுக்கு சிங்களப் பகை புரிந்த கொடுமைகளை நியாயப்படுத்திய ஒருவராக நடிக்க மறுத்து, விஜய், நீங்களும் தரலாமே சிறு ஆறுதல்..?

அண்மையில் மறைந்த எஸ்.பி.பாலசுப்ரமண்யம் போன்ற தமிழ்நாட்டுத் திரை ஆளுமைகள் இலங்கை செல்ல ஒப்புக் கொண்டு பிறகு தமிழர்களின் வேண்டுகோளை ஏற்றுப் போகாமலிருந்த செய்தி தெரியுமா உங்களுக்கு..?

அமிதாப்பச்சன் போன்ற வேற்றுமொழி ஆளுமைகளும் கூட தமிழர்களின் உணர்வை மதித்து இலங்கை நிகழ்ச்சிகளைப் புறக்கணித்தார்கள் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். சர்வதேச இந்தியத் திரைப்பட விழா சொதப்பியதே. நினைவுள்ளதா…? இந்தி நடிகர்கள்கூட தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தார்கள். தமிழராகிய நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள்…?

இனவழிப்புக்கு நீதி கோரித் தமிழினம் கடினமான நீண்ட போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கும் இக்காலத்தில் நீங்கள் எடுக்கும் முடிவு நீதியை மறுக்கும் இனக் கொலைக் குற்றவாளிகளுக்குத் துணைபோகும் இரண்டகருக்கு ஊக்கமளிப்பதாக இருந்து விடக் கூடாது என விரும்புகிறேன், விரும்புகிறோம்.

அன்புடன்,

தியாகு / பொதுச் செயலாளர்,

தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்.

14/10/2020

The post “முத்தையா முரளிதரனாக நடிக்காதீர்கள்..” – விஜய் சேதுபதிக்கு தோழர் தியாகு வேண்டுகோள்..! appeared first on Touring Talkies.

]]>