Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
actor simbu – Touring Talkies https://touringtalkies.co Mon, 23 May 2022 08:18:49 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png actor simbu – Touring Talkies https://touringtalkies.co 32 32 “என்னை கல்யாணம் பண்ணனும்” – சிம்பு வீட்டு முன்பாக போராட்டம் நடத்திய சின்னத்திரை நடிகை https://touringtalkies.co/marry-me-the-serial-actress-who-protested-in-front-of-simbus-house/ Mon, 23 May 2022 08:17:09 +0000 https://touringtalkies.co/?p=22220 சின்னத்திரை நடிகையான ஸ்ரீநிதி நடிகர் சிம்புவைத் திருமணம் செய்ய விரும்பி அவரது வீட்டின் முன் தர்ணா போராட்டத்தில் இறங்கியதாக அவரே செய்தியை வெளியிட்டு பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘7சி’ என்ற தொடரில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், ‘யாரடி நீ மோகினி’, ‘புதுப்புது அர்த்தங்கள்’ போன்ற தொடர்களில் நடித்து புகழ் பெற்றவர். இந்த ஸ்ரீநிதி கடந்த சில நாட்களாக சிம்புவை முன் வைத்து பல சர்ச்சைகளில் ஈடுபட்டு வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் […]

The post “என்னை கல்யாணம் பண்ணனும்” – சிம்பு வீட்டு முன்பாக போராட்டம் நடத்திய சின்னத்திரை நடிகை appeared first on Touring Talkies.

]]>
சின்னத்திரை நடிகையான ஸ்ரீநிதி நடிகர் சிம்புவைத் திருமணம் செய்ய விரும்பி அவரது வீட்டின் முன் தர்ணா போராட்டத்தில் இறங்கியதாக அவரே செய்தியை வெளியிட்டு பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான 7சி’ என்ற தொடரில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், ‘யாரடி நீ மோகினி’, ‘புதுப்புது அர்த்தங்கள்’ போன்ற தொடர்களில் நடித்து புகழ் பெற்றவர்.

இந்த ஸ்ரீநிதி கடந்த சில நாட்களாக சிம்புவை முன் வைத்து பல சர்ச்சைகளில் ஈடுபட்டு வருகிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகர் சிம்பு குறித்து மீம் ஒன்றை பதிவிட்டிருந்த ஸ்ரீநிதி, “ஒரு நாள் எல்லாருக்கும் திருமணம் ஆகிருக்கும். நானும் சிம்புவும் மட்டும்தான் சிங்கிளா இருப்போம்…” என அதில் குறிப்பிட்டிருந்தார்.

இதைப் படித்த ஒருவர், “நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாமே..?” என்று கமெண்ட் போட, “இதுவும் நல்லாத்தான் இருக்கு..” என பதிலளித்திருந்தார் ஸ்ரீநிதி.

இது பேச்சோடு பேச்சாக அப்படியே இணையத்திலேயே இருக்கும் என்று நினைத்தால் நிலைமை சீரியஸாகிவிட்டது.

நடிகை ஸ்ரீநிதி இதை சீரியஸாகவே எடுத்துக் கொண்டு நடிகர் சிம்புவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளக் கோரி அவரது வீட்டின் முன் தர்ணாவில் ஈடுபட்டதாக அவரது அவருடைய இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் இது குறித்து ஸ்ரீநிதி குறிப்பிட்டிருப்பது இதுதான் :

“சிம்பு எனக்காக இத்தனை ஆண்டுகள் சிங்கிளாக இருந்திருக்கிறார் என்பதை என்னால நம்பவே முடியல. இன்னைக்குத்தான் புரிஞ்சது சிம்பு. எல்லாரும் எங்களை சேர்த்து வைங்க ப்ளீஸ்..! எனக்கு லேட்டாதான் புரிஞ்சது. ஆனால் புரிஞ்சிருச்சு. சிம்புவைத் தவிர வேறு யாரையும் நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். ஜல்லிக்கட்டுக்கு மட்டும்தான் போராட்டமா? லவ்வுக்கெல்லாம் போராட்டம் இல்லையா..?

இப்போது என் போனில் 4 சதவீதம்தான் சார்ஜ் உள்ளது. ப்ளீஸ் வாங்க. பர்ஸ்ட்டு சிம்பு வேணும். நெக்ஸ்ட் தண்ணி வேணும். கோவமா இருக்காரு. அவரை மட்டும் புரிஞ்சிக்கனுமா? நம்மள புரிஞ்சிக்கமாட்டாரா? ப்ளீஸ் வாங்க. வந்து சேர்த்து வைங்க.

இப்போ கத்துறதுக்கு என்கிட்ட எனர்ஜி இல்ல. எனக்கு அவ்ளோ ஒர்த்து இருக்குன்னு இவ்ளோ வருஷமா எனக்கே தெரியல.. புரிய வச்சிட்டாரு சிம்பு..! வேணும், அவரை இப்பவே நான் பார்க்கணும்…” என்று எழுதியுள்ளார்.

பைத்தியம் முத்திருச்சு” என்று இணையத்தளவாசிகள் இதற்கு பதில் கமெண்ட் எழுதியிருக்கிறார்கள்.

The post “என்னை கல்யாணம் பண்ணனும்” – சிம்பு வீட்டு முன்பாக போராட்டம் நடத்திய சின்னத்திரை நடிகை appeared first on Touring Talkies.

]]>
சிம்பு-ஹன்ஸிகா நடிக்கும் ‘மகா’ படத்தின் வெளியீட்டு உரிமையை ON SKY நிறுவனம் வாங்கியது https://touringtalkies.co/on-sky-distribution-company-bought-theaterical-rights-of-mahaa-movie/ Tue, 25 Jan 2022 13:31:30 +0000 https://touringtalkies.co/?p=20414 நடிகர் சிம்பு கவுரவ வேடத்தில் நடித்து, நடிகை ஹன்சிகா மோத்வானி முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் ‘மகா’ திரைப்படம் திரைக்கு வர தயாராகிவிட்டது. Etcetera Entertainment நிறுவனம் சார்பில்   தயாரிப்பாளர் V. மதியழகன், Malik Streams Corporations (Production & Distribution) நிறுவனத்தின் தத்தோ அப்துல் மாலிக் உடன் இணைந்து தயாரித்துள்ளார். இப்படத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்துள்ளார். சிம்பு மற்றும் ஹன்சிகாவைத் தவிர, பிரபல மாடலும், நடிகையுமான சனம் ஷெட்டியும் மகா படத்தில் ஒரு முக்கிய துணை வேடத்தில் […]

The post சிம்பு-ஹன்ஸிகா நடிக்கும் ‘மகா’ படத்தின் வெளியீட்டு உரிமையை ON SKY நிறுவனம் வாங்கியது appeared first on Touring Talkies.

]]>
நடிகர் சிம்பு கவுரவ வேடத்தில் நடித்து, நடிகை ஹன்சிகா மோத்வானி முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் மகா’ திரைப்படம் திரைக்கு வர தயாராகிவிட்டது.

Etcetera Entertainment நிறுவனம் சார்பில்   தயாரிப்பாளர் V. மதியழகன், Malik Streams Corporations (Production & Distribution) நிறுவனத்தின் தத்தோ அப்துல் மாலிக் உடன் இணைந்து தயாரித்துள்ளார்.

இப்படத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்துள்ளார். சிம்பு மற்றும் ஹன்சிகாவைத் தவிர, பிரபல மாடலும், நடிகையுமான சனம் ஷெட்டியும் மகா படத்தில் ஒரு முக்கிய துணை வேடத்தில் நடிக்கிறார்.

மேலும் தம்பி ராமையா, கருணாகரன், நாசர் ஆகியோரும் இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

இசை – ஜிப்ரான், ஒளிப்பதிவு – J.லக்‌ஷ்மன், படத் தொகுப்பு – J.R.ஜான் ஆப்ரஹாம், கலை இயக்கம் – மணிமொழியன் ராமதுரை, பாடல்கள் –  கார்க்கி, விவேகா, நடன இயக்கம் – ஷெரீஃப், காயத்திரி ரகுராம்.

இந்த மகா’ ஹன்சிகா மோத்வானியி 50-வது மற்றும் இசையமைப்பாளர் ஜிப்ரானின் 25-வது படமாகும்.

இந்தப் படம் ஏற்கனவே ரசிகர்களிடம் விஷுவல் புரமோக்களின் மூலம்,  பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. படத்திற்கான எதிர்பார்ப்பும் பெரிய அளவில் உள்ள நிலையில், இத்திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 

தற்போது இந்த மகா’ திரைப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை, ON SKY நிறுவனம் பெற்றுள்ளது.

இந்த படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

The post சிம்பு-ஹன்ஸிகா நடிக்கும் ‘மகா’ படத்தின் வெளியீட்டு உரிமையை ON SKY நிறுவனம் வாங்கியது appeared first on Touring Talkies.

]]>
‘மஹா’ படத்தை வெளியிட தடை கோரி படத்தின் இயக்குநரே வழக்கு தொடுத்துள்ளார்..! https://touringtalkies.co/the-director-of-the-film-has-filed-a-case-seeking-a-ban-on-the-release-of-maha/ Fri, 14 May 2021 07:59:45 +0000 https://touringtalkies.co/?p=15079 நடிகர் சிம்பு மற்றும் நடிகை ஹன்ஸிகா இணைந்து நடித்திருக்கும் ‘மஹா’ படத்தினை வெளியிட தடை கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் வி.மதியழகன் தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘மகா’. இந்தப் படத்தில் ஹன்சிகா மோத்வானி கதையின் நாயகியாக நடிக்கிறார். இத்திரைப்படம் ஹன்ஸிகா நடிக்கும் 50-வது திரைப்படமாகும். ஹன்ஸிகாவின் முன்னாள் காதலரான நடிகர் சிம்பு இந்தப் படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். மேலும் ஸ்ரீகாந்த், தம்பிராமையா, கருணாகரன் உள்ளிட்ட நடிகர்களும் நடித்துள்ளனர். படத்திற்கு […]

The post ‘மஹா’ படத்தை வெளியிட தடை கோரி படத்தின் இயக்குநரே வழக்கு தொடுத்துள்ளார்..! appeared first on Touring Talkies.

]]>
நடிகர் சிம்பு மற்றும் நடிகை ஹன்ஸிகா இணைந்து நடித்திருக்கும் ‘மஹா’ படத்தினை வெளியிட தடை கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் வி.மதியழகன் தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘மகா’.

இந்தப் படத்தில் ஹன்சிகா மோத்வானி கதையின் நாயகியாக நடிக்கிறார். இத்திரைப்படம் ஹன்ஸிகா நடிக்கும் 50-வது திரைப்படமாகும்.

ஹன்ஸிகாவின் முன்னாள் காதலரான நடிகர் சிம்பு இந்தப் படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். மேலும் ஸ்ரீகாந்த், தம்பிராமையா, கருணாகரன் உள்ளிட்ட நடிகர்களும் நடித்துள்ளனர். படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இது இவருக்கு 25-வது படமாகும்.

‘Magnetizing, Alluring, Hidden & Aggressive’ ஆகியவை இந்த ‘MAHA’ படத்தின் தலைப்பின் முதல் எழுத்துக்களை குறிப்பவை. படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்களில் ஹன்சிகா மோத்வானியின் ஸ்டில்ஸுக்கு பொருத்தமாகவும் இவை அமைந்திருந்தன.

அந்தப் போஸ்டரில் நடிகை ஹன்சிகா மோத்வானி காவி உடையில் கஞ்சா புகைப்பதுபோல போஸ் கொடுத்திருந்தார். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில்கூட ஒரு வழக்கு பதிவாகியுள்ளது.

தற்போது படம் முழுவதும் முடிவடைந்து திரைக்கு வரத் தயாராக இருக்கிறது. ஆனால் கொரோனா லாக் டவுன் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால், ஓடிடி தளத்தில் இந்தப் படத்தைத் திரையிடும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்தப் படத்தை ஓடிடியில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரி அந்தப் படத்தின் இயக்குநரே நீதிமன்றத்தை அணுகியிருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

படத்தின் இயக்குநர் யு.ஆர்.ஜமீல் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “தனக்கு இந்தப் படத்தை இயக்குவதற்காக தனக்கு 24 லட்சம் ரூபாய் சம்பளமாக பேசப்பட்டதாகவும் ஆனால் இதுவரையிலும் தனக்கு 8 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மட்டுமே தரப்பட்டுள்ளதால், இன்னமும் 15 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் பாக்கியாக தர வேண்டியிருக்கிறது.

மேலும், இந்தப் படத்தின் ஒரிஜினல் கதாசிரியரான தனக்கே தெரியாமல் கதைகளில் மாற்றம் செய்து உதவி இயக்குநர் ஒருவரின் இயக்கத்தில் படத்தில் மேலும் சில காட்சிகளை படமாக்கி இணைத்திருக்கிறார்கள். இதனால் தனக்கு இழப்பீடாக 10 லட்சம் ரூபாய் தர வேண்டும். அதுவரையிலும் படத்தை ஓடிடியில் வெளியிட தடை விதிக்க வேண்டும்..”  என்று இயக்குநர் ஜமீல் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி இந்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு படத்தின் தயாரிப்பாளர், படத்தின் உதவி இயக்குநர், படத் தொகுப்பாளர் மூவருக்கும் உத்தரவு பிறப்பித்து வழக்கையும் தள்ளி வைத்துள்ளார்.

The post ‘மஹா’ படத்தை வெளியிட தடை கோரி படத்தின் இயக்குநரே வழக்கு தொடுத்துள்ளார்..! appeared first on Touring Talkies.

]]>
‘மாநாடு’ படத்தின் முதல் பாடல் வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டது. https://touringtalkies.co/maanaadu-movies-first-song-teaser-was-postponed/ Tue, 11 May 2021 08:34:07 +0000 https://touringtalkies.co/?p=15021 “இயக்குநர் வெங்கட் பிரபுவின் தாயாரான திருமதி.மணிமேகலையின் திடீர் மறைவினால் ‘மாநாடு’ படத்தின் முதல் பாடல் வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது…” என்று அந்தப் படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார். இயக்குநர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன், கருணாகரன், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாநாடு’. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக ரிச்சர்ட் எம்.நாதனும், இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜாவும் பணியாற்றுகிறார்கள். இந்தப் படத்தின் […]

The post ‘மாநாடு’ படத்தின் முதல் பாடல் வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டது. appeared first on Touring Talkies.

]]>
“இயக்குநர் வெங்கட் பிரபுவின் தாயாரான திருமதி.மணிமேகலையின் திடீர் மறைவினால் ‘மாநாடு’ படத்தின் முதல் பாடல் வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது…” என்று அந்தப் படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார்.

இயக்குநர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன், கருணாகரன், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாநாடு’.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக ரிச்சர்ட் எம்.நாதனும், இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜாவும் பணியாற்றுகிறார்கள்.

இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்தது. இன்னும் ஓரிரு நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே பாக்கி இருக்கிறது. இதனை எங்கு படமாக்கலாம் என்று திட்டமிட்டு வருகிறது படக் குழு.

இதுவரை முடிக்கப்பட்ட காட்சிகளுக்கான இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

அரசியல் பின்னணியில் உருவாகி வரும் இந்தப்படத்தில் அப்துல் காலிக் என்கிற கதாபாத்திரத்தில் சிலம்பரசன் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தின் முதல் பாடல் ரம்ஜான் தினத்தன்று வெளியாகும் என்று ஏற்கெனவே படக் குழுவால் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த மே 9-ம் தேதியன்று, படத்தின் இயக்குநரான வெங்கட் பிரபுவின் தாயார் மணிமேகலை உடல் நலக் குறைவு காரணமாகக் காலமானார்.

இதைத் தொடர்ந்து ‘மாநாடு’ படக் குழுவினர் உள்ளிட்ட திரையுலகினர் பலரும் வெங்கட் பிரபுவின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தனர். இதே நேரத்தில் மாநாடு படத்தின் முதல் பாடல் வெளியீட்டையும் ஒத்தி வைத்துள்ளதாக அந்தப் படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, “நம் இஸ்லாமிய உறவுகள் கொண்டாடும் ரம்ஜான் தினத்தன்று வெளியிடுவதாக இருந்த நமது #மாநாடு படத்தின் first single நமது இயக்குநர் வெங்கட் பிரபு அவர்களின் தாயாரின் மறைவின் வருத்தத்தில் பங்கு கொள்ளும் பொருட்டு இன்னும் சில நாட்கள் தள்ளி வெளியாக உள்ளது என்பதை வருத்தமுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்னொரு தேதியில் first sigle வெளியிடுவோம். அதற்கான அறிவிப்பை விரைவில் தெரிவிப்போம். நண்பர்களின் துக்கத்தில் பங்குகொள்வோம். கொண்டாட்டத்தையும் தாண்டி கவனமாக இருங்கள். விரைந்து மீள்வோம். நன்றி சகோதரர்களே..” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post ‘மாநாடு’ படத்தின் முதல் பாடல் வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டது. appeared first on Touring Talkies.

]]>
6 நிமிட காட்சியில் ஒரே டேக்கில் நடித்து அசத்திய சிம்பு https://touringtalkies.co/actor-simbu-acting-6-minutes-long-scene-in-one-take-in-the-maanaadu-movie/ Sun, 25 Apr 2021 09:11:52 +0000 https://touringtalkies.co/?p=14671 சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரித்துவரும் படம் மாநாடு. சிம்பு கதாநாயகனாக நடித்துவரும் இந்தப் படத்தை இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கி வருகிறார். கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்கிறார். எஸ்.ஜே.சூர்யாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும், ஒய்.ஜி.மகேந்திரன், வாகை சந்திரசேகர், எஸ்.ஏ.சந்திரசேகர், அஞ்சனா கீர்த்தி, உதயா, மனோஜ் கே. பாரதி, பிரேம்ஜி, கருணாகரன், மகத்,  டேனியல் போப்,  உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். உமேஷ் ஜே […]

The post 6 நிமிட காட்சியில் ஒரே டேக்கில் நடித்து அசத்திய சிம்பு appeared first on Touring Talkies.

]]>
சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரித்துவரும் படம் மாநாடு. சிம்பு கதாநாயகனாக நடித்துவரும் இந்தப் படத்தை இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கி வருகிறார். கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்கிறார். எஸ்.ஜே.சூர்யாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

மேலும், ஒய்.ஜி.மகேந்திரன், வாகை சந்திரசேகர், எஸ்.ஏ.சந்திரசேகர், அஞ்சனா கீர்த்தி, உதயா, மனோஜ் கே. பாரதி, பிரேம்ஜி, கருணாகரன், மகத்,  டேனியல் போப்,  உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். உமேஷ் ஜே குமார் கலையை கவனிக்க, ஸ்டண்ட் சில்வா சண்டைப் பயிற்சியைக் கையாள, மதன் கார்க்கி பாடல்கள் எழுத, நடனம் அமைக்கிறார் ராஜூ சுந்தரம். வாசுகி பாஸ்கர் ஆடை  வடிவமைப்பினை கவனித்துக் கொள்கிறார்.

அரசியல் பின்னணியில் உருவாகி வரும் இந்தப் படத்தில் ‘அப்துல் காலிக்’ என்கிற கதாபாத்திரத்தில் சிம்பு நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நேற்றைய படப்பிடிப்பின்போது, சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்டோர் நடிக்கும் காட்சியை படமாக்கினார் வெங்கட் பிரபு. படத்தின் மிக முக்கியமான, கிட்டத்தட்ட ஆறு நிமிடம் நீளமாகக் கொண்ட இந்த காட்சியில், ஒரே டேக்கில் நடித்து அசத்தினார் சிம்பு.

சிம்பு சிங்கிள் டேக் நடிகர் என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனால் ஆறு நிமிட காட்சியை கூட, ஒரே டேக்கில் அவர் நடித்து முடித்ததை கண்டு அசந்துபோன படக் குழுவினர், காட்சி படமாக்கப்பட்டு முடிந்ததும்… உடனே கை தட்டல் மூலமாக நடிகர் சிம்புவுக்கு தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.

The post 6 நிமிட காட்சியில் ஒரே டேக்கில் நடித்து அசத்திய சிம்பு appeared first on Touring Talkies.

]]>
“நடிகர் சிம்புவுக்கு ஒத்துழைப்பு தர மாட்டோம்”-தயாரிப்பாளர் கவுன்சில் அதிரடி அறிவிப்பு..! https://touringtalkies.co/tamil-film-producers-council-ban-of-actor-simbu-acting-movies/ Wed, 13 Jan 2021 17:52:00 +0000 https://touringtalkies.co/?p=12143 “நடிகர் சிம்பு நடிக்கும் திரைப்படங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை” என்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தடாலடியாக அறிவித்துள்ளது. சிம்புவின் நடிப்பில் சுசீந்திரனின் இயக்கத்தில் ‘ஈஸ்வரன்’ என்ற திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. இந்த நிலையில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்திற்கு சிம்பு வழங்க வேண்டிய நஷ்ட ஈட்டுத் தொகையினை தராததால் “அந்தப் படத்தை வெளியிட வேண்டாம்” என்று கியூப் நிறுவனத்திற்கு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கடிதம் அளித்தது. இதையடுத்து சிம்புவின் தரப்பில் டி.ராஜேந்தரும், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் […]

The post “நடிகர் சிம்புவுக்கு ஒத்துழைப்பு தர மாட்டோம்”-தயாரிப்பாளர் கவுன்சில் அதிரடி அறிவிப்பு..! appeared first on Touring Talkies.

]]>
“நடிகர் சிம்பு நடிக்கும் திரைப்படங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை” என்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தடாலடியாக அறிவித்துள்ளது.

சிம்புவின் நடிப்பில் சுசீந்திரனின் இயக்கத்தில் ‘ஈஸ்வரன்’ என்ற திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்திற்கு சிம்பு வழங்க வேண்டிய நஷ்ட ஈட்டுத் தொகையினை தராததால் “அந்தப் படத்தை வெளியிட வேண்டாம்” என்று கியூப் நிறுவனத்திற்கு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கடிதம் அளித்தது.

இதையடுத்து சிம்புவின் தரப்பில் டி.ராஜேந்தரும், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனும் பரஸ்பரம் தங்களது தரப்பு நியாயத்தை பத்திரிகையாளர்களிடத்தில் எடுத்து வைத்தார்கள்.

ஆனாலும் இன்று மாலைவரையிலும் சிம்பு நஷ்ட ஈட்டுத் தொகையினை தராததால், இன்று இரவு அவசரமாக கூடிய தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அவசர செயற்குழு சிம்புவின் படங்களுக்கு இன்று முதல் ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்று அதிரடியாக முடிவெடுத்துள்ளது.

இதனால் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த எந்த உறுப்பினரும் சிம்புவை நடிக்க வைத்து படங்களை இனிமேல் தயாரிக்க மாட்டார்கள். மற்றைய மூன்று சங்கங்களைச் சேர்ந்தவர்கள் சிம்புவை வைத்து படமெடுத்தால் பெப்சிக்கு கடிதம் கொடுத்து அந்தப் படப்பிடிப்பை நிறுத்தவும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தயங்காது என்றே தோன்றுகிறது.

எனவே, சிம்பு தரப்பினர் இந்தப் பிரச்சினையில் எப்படியாவது இறுதி முடிவை எடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

The post “நடிகர் சிம்புவுக்கு ஒத்துழைப்பு தர மாட்டோம்”-தயாரிப்பாளர் கவுன்சில் அதிரடி அறிவிப்பு..! appeared first on Touring Talkies.

]]>
ரசிகர் மன்றத் தலைவரை நீக்கக் கோரி சிம்புவின் ரசிகர்கள் போராட்டம்..! https://touringtalkies.co/simbus-fans-protest-demanding-removal-of-fan-club-leader/ Wed, 06 Jan 2021 13:31:47 +0000 https://touringtalkies.co/?p=11859 அரசியல் கட்சிகளில்தான் ஏதாவது ஒரு பிரிவின் தலைவரை, செயலாளரை நீக்கம் செய்யக் கோரி அவருக்கு எதிரானவர்கள் போராட்டம் நடத்துவார்கள். இந்த வியாதி, இப்போது நடிகர்களின் ரசிகர் மன்றத்திலும் புகுந்துவிட்டது. நடிகர் சிம்புவிற்கு ‘அகில இந்திய சிலம்பரசன் டி.ஆர். ரசிகர் மன்றம்’ என்ற பெயரில் ஒரு சங்கம் உள்ளது. சிம்புவின் அதிகாரப்பூர்வமான சங்கமும் இதுதான். இது முன்பு ‘அகில இந்திய சிம்பு ரசிகர் மன்றம்’ என்ற பெயரில் இருந்து வந்தது. அப்போது இந்தச் சங்கத்தை டி.ராஜேந்தரின் தம்பியான வாசுதான் […]

The post ரசிகர் மன்றத் தலைவரை நீக்கக் கோரி சிம்புவின் ரசிகர்கள் போராட்டம்..! appeared first on Touring Talkies.

]]>
அரசியல் கட்சிகளில்தான் ஏதாவது ஒரு பிரிவின் தலைவரை, செயலாளரை நீக்கம் செய்யக் கோரி அவருக்கு எதிரானவர்கள் போராட்டம் நடத்துவார்கள். இந்த வியாதி, இப்போது நடிகர்களின் ரசிகர் மன்றத்திலும் புகுந்துவிட்டது.

நடிகர் சிம்புவிற்கு ‘அகில இந்திய சிலம்பரசன் டி.ஆர். ரசிகர் மன்றம்’ என்ற பெயரில் ஒரு சங்கம் உள்ளது. சிம்புவின் அதிகாரப்பூர்வமான சங்கமும் இதுதான். இது முன்பு ‘அகில இந்திய சிம்பு ரசிகர் மன்றம்’ என்ற பெயரில் இருந்து வந்தது. அப்போது இந்தச் சங்கத்தை டி.ராஜேந்தரின் தம்பியான வாசுதான் நிர்வகித்து வந்தார்.

அதன் பிறகு சிம்பு தன் பெயரை ‘டி.ஆர்.சிலம்பரசன்’ என்று மாற்றிக் கொண்ட பின்பு, சங்கத்தின் பெயரும் ‘அகில இந்திய சிலம்பரசன் டி.ஆர். ரசிகர் மன்றம்’ என்று பெயர் மாற்றப்பட்டது.

இந்தச் சங்கத்திற்கு தற்போது நாகு தம்பி என்பவர் தலைவராக இருந்து வருகிறார். இவரை மாற்றக் கோரி இன்று மதியம் திடீரென்று நடிகர் சிம்புவின் வீட்டின் முன்பாக 50 ரசிகர்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினார்கள்.

“நாகு தம்பி, சங்கத்தில் ஏதேச்சதிகாரமாக நடந்து கொள்கிறார். ஒரு சிலரை மட்டும் வைத்துக் கொண்டு சங்கத்தை நடத்துகிறார். பெருவாரியான ரசிகர்களின் குரலை அவர் கேட்பதில்லை. மற்றைய மாவட்டத் தலைவர்களை அவர் மதிப்பதில்லை.. சமீபத்தில் நடைபெற்ற ‘ஈஸ்வரன்’ படத்தின் இசை வெளியீ்ட்டு விழாவுக்கான அழைப்பிதழைக்கூட பல மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு அவர் முறையாக அனுப்பவில்லை..” என்று பலவித குற்றச்சாட்டுக்களைத் தற்போதை தலைவர் மீது சுமத்தியுள்ளனர் ரசிகர்கள்.

சிம்புவின் வீட்டின் முன்பு கூட்டம் கூடியதை அடுத்து, சங்கத்தின் ஏனைய நிர்வாகிகள் வந்திருந்த ரசிகர்களில் சிலரை அழைத்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிகிறது.

The post ரசிகர் மன்றத் தலைவரை நீக்கக் கோரி சிம்புவின் ரசிகர்கள் போராட்டம்..! appeared first on Touring Talkies.

]]>
‘ஈஸ்வரன்’ படத்தின் வெளியீட்டுக்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்..! https://touringtalkies.co/eeswaran-movie-release-crisis-news/ Thu, 31 Dec 2020 10:04:04 +0000 https://touringtalkies.co/?p=11623 நடிகர் சிம்பு 2017-ம் ஆண்டு நடித்திருந்த ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்திற்கான நஷ்ட ஈட்டுத் தொகையைக் கேட்டு ‘ஈஸ்வரன்’ படத்தின் தயாரிப்பாளரிடமும், விநியோகஸ்தரிடமும் சிலர் போன் மூலம் மிரட்டல் விட்டனராம். இதையொட்டி ‘தமிழ்நாடு மூவி மேக்கர்ஸ் சங்கம்’ இன்றைக்கு ஒரு கண்டன அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அன்புடையீர் வணக்கம். ‘ஈஸ்வரன்’ திரைப்படம் வெளியிடுவது சம்மந்தமாக பிரச்சினைகள் நடந்து கொண்டிருக்கிறது. இது மிகவும் கண்டனத்திற்குரியது.  இந்த கொரோனா பிடியிலிருந்து மீண்டு வந்திர மாட்டோமா என்று அத்தனை பேரும் காத்துக் கொண்டிருக்கும் […]

The post ‘ஈஸ்வரன்’ படத்தின் வெளியீட்டுக்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்..! appeared first on Touring Talkies.

]]>
நடிகர் சிம்பு 2017-ம் ஆண்டு நடித்திருந்த ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்திற்கான நஷ்ட ஈட்டுத் தொகையைக் கேட்டு ‘ஈஸ்வரன்’ படத்தின் தயாரிப்பாளரிடமும், விநியோகஸ்தரிடமும் சிலர் போன் மூலம் மிரட்டல் விட்டனராம்.

இதையொட்டி ‘தமிழ்நாடு மூவி மேக்கர்ஸ் சங்கம்’ இன்றைக்கு ஒரு கண்டன அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அன்புடையீர் வணக்கம்.

‘ஈஸ்வரன்’ திரைப்படம் வெளியிடுவது சம்மந்தமாக பிரச்சினைகள் நடந்து கொண்டிருக்கிறது. இது மிகவும் கண்டனத்திற்குரியது. 

இந்த கொரோனா பிடியிலிருந்து மீண்டு வந்திர மாட்டோமா என்று அத்தனை பேரும் காத்துக் கொண்டிருக்கும் வேளையில், தைரியமாக ‘ஈஸ்வரன்’ படத்தை வெளியிட முன்வந்திருக்கும் அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு நம்ம வரவேற்பு கொடுக்கனும்.

அதை விட்டுவிட்டு அந்தத் தயாரிப்பாளருக்கும், படத்தை வாங்கிய விநியோகஸ்தருக்கும் போன் செய்து “இந்த படம் வெளியாகணும்னா ‘AAA’ படத்திற்கு இவ்வளவு கோடி பணம் கட்டணும்…” என்று சொல்வது எந்த வகையிலும் நியாயம் இல்லை.

அந்த தீய சக்திகளுக்கு எனது வன்மையான கண்டனத்தை இந்த நேரத்தில் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறோம்.

சொன்ன தேதியில் ‘ஈஸ்வரன்’ படம் வெளியாகும் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

அந்த தயாரிப்பாளருக்கு தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் பக்க பலமாக இருக்கும்.

‘AAA’ படத்திற்கும், ‘ஈஸ்வரன்’ பட தயாரிப்பாளருக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. ‘AAA’ படம் சம்பந்தமாக நிறைய பிரச்சினைகள் இருந்தது. அதற்காக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அந்த படத்தின் கதாநாயகன் திரு. சிம்பு அவரது சம்பளத்தை விட்டுக் கொடுத்துள்ளார். மீண்டும் பல முறை பேச்சுவார்த்தை நடைபெற்றும் இரண்டு பேருக்கும் உடன்பாடு ஏற்படவில்லை.

‘AAA’ படத்தின் தயாரிப்பாளருக்கும், நடிகர் சிம்புவுக்கும் சரியான புரிதல் இல்லை. அதன் பிறகு சங்கம் மூலமாக பேசியும், கட்டப் பஞ்சாயத்து மூலமாகப் பேசியும் எந்தவித பலனும் ஏற்படவில்லை. ஆகையால் சிம்பு அவர்கள் நீதிமன்றத்தை நாடியிருக்கிறார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

எனவே இந்தப் பிரச்சினையை நீதிமன்றத்தில்தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.  அதைவிட்டுவிட்டு நாங்கள் கட்ட பஞ்சாயத்து செய்து பணத்தை வாங்கி கொடுத்து விடுவோம் என்று சொன்னால், அவர்கள் மீது சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆகையால் மீண்டும் ஒரு முறை எங்களது கண்டத்தை தெரிவிப்பதோடு, சொன்ன தேதியில் ‘ஈஸ்வரன்’ படம் வெளியிடப்படும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்...” என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

The post ‘ஈஸ்வரன்’ படத்தின் வெளியீட்டுக்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்..! appeared first on Touring Talkies.

]]>
சிம்பு-கெளதம் கார்த்திக் நடிப்பில் கிருஷ்ணா இயக்கும் புதிய திரைப்படம்..! https://touringtalkies.co/krishna-directs-new-movie-starring-simbu-and-gautam-karthik/ Wed, 23 Dec 2020 09:15:34 +0000 https://touringtalkies.co/?p=11382 சிம்புவின் அடுத்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சிம்பு சமீபத்தில் இயக்குநர் சுசீந்திரனின் இயக்கத்தில் ’ஈஸ்வரன்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை பொங்கல் தினத்தன்று வெளியாகவுள்ளது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். ‘ஈஸ்வரன்’ படத்தையடுத்து சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ’மாநாடு’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு விரைவில் ஏற்காட்டில் தொடங்க […]

The post சிம்பு-கெளதம் கார்த்திக் நடிப்பில் கிருஷ்ணா இயக்கும் புதிய திரைப்படம்..! appeared first on Touring Talkies.

]]>
சிம்புவின் அடுத்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சிம்பு சமீபத்தில் இயக்குநர் சுசீந்திரனின் இயக்கத்தில் ’ஈஸ்வரன்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை பொங்கல் தினத்தன்று வெளியாகவுள்ளது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.

ஈஸ்வரன்’ படத்தையடுத்து சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ’மாநாடு’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு விரைவில் ஏற்காட்டில் தொடங்க உள்ளது.

‘மாநாடு’ படத்துக்குப் பிறகு சிம்பு நடிக்கவிருக்கும் புதிய படம் பற்றிய அறிவிப்பு இன்றைக்கு வெளியாகியுள்ளது.

சிம்பு நடிக்கும் புதிய படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தயாரிக்க இருக்கிறார்.

?????????????????????????????????????????????????????????

ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் 20-வது படமான இந்தப் படத்தை இயக்குநர் கிருஷ்ணா இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே சூர்யா நடித்த ’சில்லுனு ஒரு காதல்’ ஆரி நடித்த ’நெடுஞ்சாலை’ உள்பட ஒரு சில திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

சிம்பு உடன் தற்போதைய இளம் ஹீரோக்களில் ஒருவரான கௌதம் கார்த்திக் நடிக்கும் இந்தப் படம் கன்னடத்தில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ’முப்தி’ என்ற படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் டைட்டில் வரும் 24-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளதாக ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் அறிவித்துள்ளது.

’மாநாடு’ படத்தின் படப்பிடிப்பை முடித்த உடன் சிம்பு இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post சிம்பு-கெளதம் கார்த்திக் நடிப்பில் கிருஷ்ணா இயக்கும் புதிய திரைப்படம்..! appeared first on Touring Talkies.

]]>
தயாரிப்பாளர் சங்கத்திற்காக உருவாகும் படத்தில் இணைகிறது சிம்பு-வெங்கட் பிரபு கூட்டணி..! https://touringtalkies.co/simbu-venkat-prabhu-will-joins-for-tfpc-production-movie/ Mon, 30 Nov 2020 09:32:41 +0000 https://touringtalkies.co/?p=10466 நடிகர் சிம்பு சமீப காலங்களில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறார். அதிகமான படங்களுக்கு ஒத்துக் கொள்வது.. கொடுத்த கால்ஷீட்டில் சமர்த்துப் பிள்ளையாய் வந்து நடித்துக் கொடுப்பது என்று தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர்களுக்கும் செல்லமாய் உருமாறிக் கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் இன்னொரு அதிர்ச்சி கலந்த ஆச்சரியமான ஒரு விஷயத்தையும் செய்திருக்கிறார். சமீபத்தில் நடந்து முடிந்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் அவரது தந்தையான இயக்குநர் டி.ராஜேந்தர் தேர்தல் தோல்வியடைந்தாலும் “தயாரிப்பாளர்கள் சங்கத்திற்காக ஒரு படத்தை உருவாக்கித் தர வேண்டும்” […]

The post தயாரிப்பாளர் சங்கத்திற்காக உருவாகும் படத்தில் இணைகிறது சிம்பு-வெங்கட் பிரபு கூட்டணி..! appeared first on Touring Talkies.

]]>
நடிகர் சிம்பு சமீப காலங்களில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறார். அதிகமான படங்களுக்கு ஒத்துக் கொள்வது.. கொடுத்த கால்ஷீட்டில் சமர்த்துப் பிள்ளையாய் வந்து நடித்துக் கொடுப்பது என்று தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர்களுக்கும் செல்லமாய் உருமாறிக் கொண்டிருக்கிறார்.

இந்த நேரத்தில் இன்னொரு அதிர்ச்சி கலந்த ஆச்சரியமான ஒரு விஷயத்தையும் செய்திருக்கிறார்.

சமீபத்தில் நடந்து முடிந்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் அவரது தந்தையான இயக்குநர் டி.ராஜேந்தர் தேர்தல் தோல்வியடைந்தாலும் “தயாரிப்பாளர்கள் சங்கத்திற்காக ஒரு படத்தை உருவாக்கித் தர வேண்டும்” என்று கொள்கையில் இருக்கிறார் டி.ராஜேந்தர்.

அந்தக் கொள்கைக்குத் துணை கொடுக்க தனது மகன் சிம்புவை நாடியிருக்கிறார் டி.ராஜேந்தர். அப்பா பேச்சுக்கு செவி கொடுத்த சிம்பு இதற்கு டபுள் “ஓகே” சொல்லியிருக்கிறாராரம்.

படத்திற்கு ‘மெண்டல்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இந்தப் படத்தையும் இயக்குநர் வெங்கட் பிரபுதான் இயக்கப் போகிறார் என்பது உறுதியாகிவிட்டது.

இந்த ஒரு படத்தின் மூலமாகக் கிடைக்கும் லாபத் தொகை முழுவதும் அப்படியே தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு அளிக்கப்படுமாம். தோராயமாக 10 அல்லது 12 கோடி ரூபாய் இதன் மூலமாக தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நன்கொடையாகத் தரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டி.ராஜேந்தரின் இந்த உயரிய எண்ணத்திற்கு சிம்புவின் காட் மதரான உஷா ராஜேந்தரும் ஒப்புதல் அளித்துவிட்டாராம். எனவே, படம் தயாராவது உறுதி. தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பேங்க் பேலன்ஸை டி.ராஜேந்தர் உயத்தப் போவதும் உறுதி.

ஆனால், இதை மனமுவந்து ஏற்றுக் கொள்ளும் மன நிலையில் தற்போது புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் இருக்கிறார்களா என்பதுதான் தெரியவில்லை.

அவர்களும் ‘தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை’ என்று சொன்னால்.. தயாரிப்பாளர்கள் சங்கம் நிச்சயமாக வலு பெறும். கஷ்டப்படும் ஏழை, எளிய தயாரிப்பாளர்கள் நலம் பெறுவார்கள் என்பது உறுதி.

The post தயாரிப்பாளர் சங்கத்திற்காக உருவாகும் படத்தில் இணைகிறது சிம்பு-வெங்கட் பிரபு கூட்டணி..! appeared first on Touring Talkies.

]]>