The post ‘வடக்குப்பட்டி ராமசாமி’ சர்ச்சை: சந்தானம் விளக்கம்! appeared first on Touring Talkies.
]]>‘இது, தந்தை பெரியாரை கிண்டலடிப்பதாக ஊள்ளது’ என கண்டனங்கள் எழுந்தன. உடனடியாக, இது குறித்த ட்விட்டை டெலிட் செய்தார் சந்தானம். ஆனால் விளக்கம் ஏதும் அளிக்கவில்லை.
விமர்சித்துள்ளனர் என எதிர்ப்புகள் கிளம்பின. இதுகுறித்து கருத்து தெரிவிக்காமல் இருந்த நடிகர் சந்தானம், இன்று நடைபெற்ற வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் விளக்கம் அளித்தார். அதுவும் இந்த திரைப்படத்தில் சர்ச்சையான விஷயங்கள் எதுவும் இல்லை, முழுக்க முழுக்க ரசிகர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கில் மட்டுமே எடுக்கப்பட்டிருக்கிறது என தெரிவித்தார்.
The post ‘வடக்குப்பட்டி ராமசாமி’ சர்ச்சை: சந்தானம் விளக்கம்! appeared first on Touring Talkies.
]]>The post நடிகர் சந்தானத்தின் மைத்துனர் தயாரிக்கும் புதிய படம்..! appeared first on Touring Talkies.
]]>NN pictures சார்பில் இவர் தயாரிக்கும் புதிய படத்தில் நடிகர் மைக்செட் ஶ்ரீராம் கதையின் நாயகனாக வெள்ளித் திரையில் அறிமுகமாகிறார். நடிகை மானசா மற்றும் ரிமி ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர்.
படத்தில் நடிக்கும் மற்ற முக்கிய கதாப்பாத்திரங்களுக்காக தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர், நடிகைகளுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
இயக்குநர் விவேக் எழுதி இயக்குகிறார். அருள்ராஜ் கென்னடி இசையமைக்க, முத்து மூவேந்தர் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். P.S.ராபர்ட் கலை இயக்கம் செய்கிறார்.
முழுக்க, முழுக்க இளைஞர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும்விதமாக, ரொமான்ஸ் காமெடி ஜானரில் அனைவரும் ரசிக்கும் வண்ணம் இப்படம் உருவாகவுள்ளது.
இந்தப் படத்தின் பூஜை நிகழ்வு நேற்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த பூஜை நிகழ்வில் படக் குழுவினருடன், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவரான தேனாண்டாள் ஃபிலிம்ஸ் முரளி, PVR மீனா, Divo நிறுவனத்தின் தலைமை அதிகாரியான விசு ஆகியோருடன் 4 you கம்பெனி நிறுவனர் R.பிரகாஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவினை தொடந்து, படக் குழுவினர் நடிகர் சந்தானத்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். படம் குறித்த செய்திகளை கேட்டறிந்த நடிகர் சந்தானம், படக் குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
The post நடிகர் சந்தானத்தின் மைத்துனர் தயாரிக்கும் புதிய படம்..! appeared first on Touring Talkies.
]]>The post OTT-யில் படங்களை வெளியிட நடிகர் சந்தானம் ஆதரவு appeared first on Touring Talkies.
]]>இதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்தப் போக்கு நீடித்தால் இன்னும் சில நாட்களில் ரசிகர்கள் தியேட்டருக்கு வருவதையே மறந்துவிடுவார்கள். பின்பு தியேட்டர்களில் எந்தப் படத்தைப் போட்டாலும் கூட்டம் வராது என்கிறார் தியேட்டர் உரிமையாளர்கள்.
ஆனால், “இப்படி படங்கள் ஓடிடியில் வெளியாவது சரிதான்” என்கிறார் நடிகர் சந்தானம். இது குறித்து அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், “இந்தக் கொரோனா தொற்றுக் காலத்தில் தியேட்டர்கள் திறக்கப்படுவது அவ்வளவு சரியானதாக இல்லை. அதனால் ஓடிடியில் படங்கள் வெளியாவதில் தவறில்லை.
திரைப்படங்கள் கடவுளைப் போல.. இதில் தியேட்டர்கள் கோவில் போன்றவை.. ஓடிடிக்கள்தான் பூஜையறை. இதனால் ஒன்றும் பாதிப்பில்லை.
சினிமாவை நம்பி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இருக்கின்றன. கோடிக்கணக்கான ரூபாய்களை முதலீடு செய்யும் தயாரிப்பாளர்கள் துவங்கி போஸ்டர் ஒட்டும் தொழிலாளர்கள்வரையிலும் பல்லாயிரக்கணக்கான பேர் இந்த சினிமா தொழிலை நம்பியே உள்ளார்கள்.
தியேட்டர்களை தற்போது திறக்க முடியாத சூழல் உள்ளது என்பதால் அனைவரது நலனுக்காகவும் ஓடிடிக்களில் படங்களை வெளியிடுவதே சரியானதாக இருக்கும்…” என்று சொல்லியிருக்கிறார் சந்தானம்.
The post OTT-யில் படங்களை வெளியிட நடிகர் சந்தானம் ஆதரவு appeared first on Touring Talkies.
]]>The post நடிகர் சந்தானத்தின் ‘பாரிஸ் ஜெயராஜ்’ படத்தின் டிரெயிலர் appeared first on Touring Talkies.
]]>The post நடிகர் சந்தானத்தின் ‘பாரிஸ் ஜெயராஜ்’ படத்தின் டிரெயிலர் appeared first on Touring Talkies.
]]>The post திடீரென்று புலிப் பாய்ச்சல் காட்டும் நடிகர் சந்தானம் appeared first on Touring Talkies.
]]>நடிகர் சந்தானத்தின் நடிப்பில் உருவான ‘சர்வர் சுந்தரம்’ மற்றும் ‘டிக்கிலோனா’ ஆகிய படங்கள் வெளியீ்ட்டுக்குத் தயார் நிலையில் உள்ளன.
இந்த நிலைமையில் கடந்த மாதம் ‘பாரீஸ் ஜெயராஜ்’ படத்தினை முழுமையாக முடித்துக் கொடுத்த சந்தானம், அடுத்த இரண்டே நாட்களில் அடுத்தப் படத்தின் படப்பிடிப்பை தொடரச் சென்றுவிட்டாராம்.
அந்தப் படம் ‘சபாபதி’. சத்தமே இல்லாமல் இந்தப் படத்தின் படப்பிடிப்பும் இடையிடையே நடத்தப்பட்டு இப்போது வெறும் 2 நாட்களில் மொத்தப் படப்பிடிப்பும் முடிந்துவிடும் அளவுக்கு இருக்கிறதாம்.
சமீபத்தில் நடிகர் சந்தானத்தின் பிறந்த நாளன்று வெளியான இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரின்போதுதான் இந்தப் படம் பற்றிய தகவலையே வெளியில் தெரிவித்தார்கள். இந்தப் படத்தை புதுமுக இயக்குநர் சீனிவாச ராவ் என்பவர் இயக்கி வருகிறார்.
ஆக. மொத்தம் அடுத்த மாத இறுதிக்குள் சந்தானம் நடிப்பில் உருவான நான்கு திரைப்படங்கள் வெளியீட்டுக்குத் தயார் என்ற நிலையில் காத்துக் கொண்டிருக்கும்.
இந்த நிலைமை தற்போது தமிழ்ச் சினிமாவில் யாருக்குமே கிடைக்காத ஒரு பெருமை என்றே சொல்லலாம்.
‘சர்வர் சுந்தரம்’ மற்றும் ‘டிக்கிலோனா’ ஆகிய படங்களை ஓடிடியில் வெளியிடலாம் என்றுதான் அந்தப் படங்களின் தயாரிப்பாளர்கள் முடிவு செய்திருந்தார்கள். ஆனால், இப்போது ‘மாஸ்டர்’ படத்திற்கு தியேட்டர்களில் கிடைத்திருக்கும் வரவேற்பு அவர்களை சற்று யோசிக்க வைத்திருக்கிறதாம்.
ஓடிடியா.. அல்லது நேரடியாக தியேட்டர்களாக என்பதை முடிவு செய்ய வேண்டிய இறுதியான தருணத்தில் இந்தப் படங்களின் தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள்.
இன்னொரு பக்கம் சந்தானம் தற்போது தனது படங்களின் ஸ்கிரிப்ட்டுகளை வெளியில் இருக்கும் சில எழுத்தாளர்களுக்கும், நண்பர்களுக்கும் அனுப்பி இந்தக் கதை தனக்கு செட்டாகுமா.. ஏதாவது திருத்தம் செய்தால் சோபிக்குமா என்றெல்லாம் விசாரிக்கவும் ஆரம்பித்திருக்கிறார்.
இதெல்லாம் அவருடைய கேரியரை வலுப்படுத்த அவர் செய்யும் விஷயம் என்றாலும் சந்தானத்தின் இந்த திடீர் மாற்றம் அவருக்கும், அவரது ரசிகர்களுக்கும் நன்மை பயக்கும் என்றே கருதலாம்..!
The post திடீரென்று புலிப் பாய்ச்சல் காட்டும் நடிகர் சந்தானம் appeared first on Touring Talkies.
]]>The post “பா.ஜ.க.வில் நானா..? இது செம காமெடி” – நடிகர் சந்தானத்தின் பதில்..! appeared first on Touring Talkies.
]]>அதன் பின்பு செய்தியாளர்களையும் சந்தித்தனர். அப்போது சந்தானம் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையில், “நான் பா.ஜ.க.வில் சேர்வதாகச் சொல்வது ‘பிஸ்கோத்’ படத்தைவிட பெரிய காமெடி..” என்றார்.
மேலும் சந்தானம் பேசுகையில், “கொரோனா காலத்தில் மக்கள் வெளியே வருவது மன உளைச்சல் நிறைந்தது. இதை தாண்டி தியேட்டருக்கு ரசிகர்கள் வருவார்களா என்ற சந்தேகத்தில் படத்தை ரிலீஸ் செய்தோம். தற்போது ரசிகர்கள் ஆதரவு கொடுத்திருக்கிறார்கள்.
சினிமாவுக்கு வந்து இத்தனை வருடங்களில் இதுபோல் நான் பயந்தது இல்லை. கொரோனா காலத்தில் ‘பிஸ்கோத்’ படத்தை தியேட்டரில் வெளியிடுகிறோமே.
மக்கள் வருவார்களோ, இல்லையோ என்று பயந்தேன். தற்போது அந்த பயம் போய்விட்டது. ரசிகர்கள் அரசு அறிவித்திருக்கும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை அறிவுரைகளைக் கடைப்பிடித்து தியேட்டர்களுக்கு ஓடி வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு எனது நன்றிகள்..!
ஓடிடி என்பது பூஜை அறை. சினிமா தியேட்டர் என்பது கோயில் மாதிரி. ஓடிடியைவிட தியேட்டர்களில் படங்கள் வெளியாவதுதான் சிறப்பானது. ரசிகர்கள் திரையில் நடிகர்களைப் பார்த்து கை தட்டி ரசிப்பதில்தான் சந்தோஷம் இருக்கிறது. நடிகர்கள் மீது ரசிகர்கள் அன்பு வைத்திருப்பதும் அவர்களைக் கொண்டாடுவதும் தியேட்டர்களில் படங்கள் வெளியாவதன் மூலமாகத்தான் நடக்கிறது. இதனால் தியேட்டர்களில்தான் உண்மையான சந்தோஷமே ரசிகர்களுக்குக் கிடைக்கும். இதேபோல் தயாரிப்பாளர்களுக்கும், நடிகர், நடிகைகளுக்கும் பாராட்டு கிடைக்கும். இது ஓடிடியில் நிச்சயமாகக் கிடைக்காது.
நான் பா.ஜ.வில் இணைந்ததாக தகவல்கள் வெளியாகிறது. இது ‘பிஸ்கோத்’ படத்தைவிட பெரிய காமெடி. எனக்கு எதற்கு அரசியல்… ? சினிமாவில் இருக்கும் வேலையை ஒழுங்காக செய்தாலே போதும் என்று நினைக்கிறேன்…” என்றார்.
The post “பா.ஜ.க.வில் நானா..? இது செம காமெடி” – நடிகர் சந்தானத்தின் பதில்..! appeared first on Touring Talkies.
]]>The post டப்பிங் பேச வராமல் டபாய்க்கும் நடிகர் சந்தானம்..! appeared first on Touring Talkies.
]]>பொதுவாக திரைப்படங்களில் பெரிய நட்சத்திரங்களுக்கான சம்பளத்தில் பாதியை படத்தின் துவக்கத்திலும் மீதியை அவர்கள் டப்பிங் பேசி முடித்த பின்பும்தான் கொடுப்பது வழக்கம். உச்ச நட்சத்திரங்களைத் தவிர மற்றவர்களுக்கு இதுதான் நடைமுறை.
டப்பிங் பேசுவதற்கு முன்பாக மொத்தமுள்ள மீதித் தொகையையும் கொடுத்தால்தான் டப்பிங் பேசவே வருவேன் என்று சொல்லி கறாராய் சம்பளத்தை வசூலிக்கும் நட்சத்திரங்களும் திரையுலகத்தில் உண்டு. இதற்கு உதாரணமாக கவுண்டமணியைத்தான் சொல்வார்கள். மீதிப் பணம் அவர் கைக்குப் போகாமல், அவர் வீட்டில் இருந்து காரில் ஏற மாட்டார் என்று தயாரிப்பாளர்கள் சொல்வார்கள்.
அந்த வரிசையில் இப்போது சந்தானமும் இணைந்திருக்கிறாராம். தற்போது தான் நடித்த ‘டிக்கிலோனா’ திரைப்படத்தின் டப்பிங் பணிகளுக்கு வராமல் டிமிக்கி கொடுக்கிறாராம் நடிகர் சந்தானம்.
ஒரு நாள் ‘தலைவலி’.. அடுத்த நாள் ‘காய்ச்சல்’.. மூன்றாவது நாள் ‘மூடு சரியில்லை’ என்று ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி தவிர்க்கிறாராம். இத்தனைக்கும் படத்தின் முற்பாதி முழுவதும் சந்தானம் டப்பிங் பேசி முடித்துவிட்டார். இடைவேளைக்குப் பின்னான காட்சிகளுக்குத்தான் தற்போது டப்பிங் பேச வேண்டியிருக்கிறதாம்.
ஒருவேளை சம்பளப் பாக்கியிருக்குமோ என்று விசாரித்தால் அதுவும் இல்லை. மொத்தப் பணமும் ஷூட்டிங் துவங்குவதற்கு முன்பாகவே சந்தானத்திற்கு செட்டில் செய்யப்பட்டுவிட்டதாம்.
பிறகென்னதான் பிரச்சினை என்று விசாரித்தபோது, சம்பளப் பாக்கி கதையைவிடவும் சுவாரஸ்யமான ஒரு விஷயம் சிக்கியிருக்கிறது.
சந்தானம் நடித்து வெளியாகாமல் இருக்கும் ‘சர்வர் சுந்தரம்’, ‘பிஸ்கோத்து’ ஆகிய திரைப்படங்கள் தற்போது ஓடிடியில் வெளியாவது உறுதியாகிவிட்டதாம். இந்த நிலைமையில் மூன்றாவதாக இந்த ‘டிக்கிலோனா’ திரைப்படமும் தற்போது தயாராகி நின்றால், இதுவும் ஓடிடிக்கே போய்விடும் என்று சந்தானம் பயப்படுகிறாராம்.
வரிசையாக தனது அனைத்துப் படங்களும் ஓடிடியில் ரிலீஸானால் தன்னுடைய ரசிகர்கள் தன்னை மறந்து போகும் நிலைமைக்கு போய்விடுமே என்றெண்ணிதான் சந்தானம் ‘டிக்கிலோனா’ படத்திற்கு டப்பிங் பேச வராமல் தப்பிக்கிறாராம்.
சமீபத்தில் இந்தப் படத்தை எடுத்தவரைக்கும் போட்டுப் பார்த்தபோது பிரிவியூ தியேட்டரே சிரிப்பாய் சிரித்ததாம். அந்த அளவுக்கு நகைச்சுவை படத்தில் தெறிக்கிறதாம். இந்த அளவுக்கு சிறந்த படமாக இருக்கும்போது இதை எதற்கு ஓடிடியில் தள்ளிவிட வேண்டும்..? இந்தப் படம் தியேட்டருக்குத்தான் வர வேண்டும் என்று நினைக்கிறார் சந்தானம்.
ஆனால், தயாரிப்பாளரோ தியேட்டர்கள் இல்லையெனில் உடனேயே ஓடிடியில் வெளியீடு என்பதில் குறியாக இருக்கிறார்.
இந்த இருவரில் யார் ஜெயிப்பார்கள் என்பது வரும் நாட்களில் தெரிந்துவிடும்..!
The post டப்பிங் பேச வராமல் டபாய்க்கும் நடிகர் சந்தானம்..! appeared first on Touring Talkies.
]]>