The post ரஜினி, கமல், விஜய்யை முந்திய தனுஷ்..! appeared first on Touring Talkies.
]]>நடிகர் தனுஷை டிவிட்டரில் 11 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள். அதாவது 1 கோடியே 10 லட்சம் பேர்.
மற்றைய நடிகர்கள் பெற்றுள்ள பாலோயர்ஸ் லிஸ்ட் இதோ :
நடிகர் சூர்யா – 8.1 மில்லியன் – 81 லட்சம் பேர்
நடிகர் கமல்ஹாசன் – 7.5 மில்லியன் – 75 லட்சம் பேர்
நடிகர் சிவகார்த்திகேயன் – 7.5 மில்லியன் – 75 லட்சம் பேர்
நடிகர் ரஜினிகாந்த் – 6.2 மில்லியன் – 62 லட்சம் பேர்
நடிகர் விஜய் 4 – மில்லியன் – 40 லட்சம் பேர்
நடிகர் கார்த்தி – 2.7 மில்லியன் – 27 லட்சம் பேர்
விஜய் சேதுபதி – 2.6 மில்லியன் – 26 லட்சம் பேர்
நடிகர் சிம்பு – 634.9 K – 6 லட்சத்து 35 ஆயிரம் பேர்
The post ரஜினி, கமல், விஜய்யை முந்திய தனுஷ்..! appeared first on Touring Talkies.
]]>The post ‘தி கிரே மேன்’ – பார்வையாளர்களை மயக்கத்தில் மூழ்கடிக்கும் ஒரு அதிசய உலகம் appeared first on Touring Talkies.
]]>உலகத்தின் மிகப் பெரும் நட்சத்திரங்களின் பங்களிப்பில், இத்திரைப்படம் ரசிகர்களை மகிழ்விக்க இம்மாதம் திரைக்கு வருகிறது.
ஒரு புத்தகத்திலிருந்து திரைப்படமாக, ‘தி கிரே மேன்’ படத்தை உருவாக்க, இந்தக் கதை ரூஷோ சகோதரர்களை எப்படி கவர்ந்தது என்பதை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
ரூஷோ சகோதரர்கள் இது குறித்து கூறுகையில்.. “ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தும் சுவாரசியமான கதைகளை உருவாக்குவதற்கான தேடலில்தான் நாங்கள் எப்போதும் இருக்கிறோம். நாங்கள் வளர்ந்த 1970களின் த்ரில்லர்களால் ஈர்க்கப்பட்ட வகையில், ‘தி கிரே மேன்’ திரைப்படமும், அதே போன்று மிகவும் சிக்கலான அரசியல் மற்றும் அமைப்புக்கு எதிரான போராட்டத்தை உள்ளடக்கியதாக இருக்கும்.
மேலும் உலகத்தைப் பற்றிய நமது பார்வையை, அச்சங்களை இப்படத்தில் பிரதிபலித்துள்ளோம். இப்படத்தின் வித்தியாசமான வகையைக் கருத்தில் கொண்டு, பார்வையாளர்கள் தங்களை முழுதாக மறக்கும் வகையில் ஒரு உலகத்தை உருவாக்க விரும்பினோம்.
எங்களிடம் ஒரு நம்பமுடியாத நடிகர் பட்டாளம் இருந்தனர். இப்படத்தின் ஒவ்வொரு நடிகருக்கும் படத்தில் தனித்த சிந்தனை மற்றும் பின் கதை உள்ளது.
ஒளிப்பதிவில் புதிய அணுகுமுறையுடன், லாஸ் ஏஞ்சல்ஸ், பிரான்ஸ், செக் குடியரசு, தாய்லாந்து, குரோஷியா, ஆஸ்திரியா மற்றும் அஜர்பைஜான் உள்ளிட்ட ஏழு வெவ்வேறு நாடுகளில் இந்த ‘தி கிரே மேன்’ படத்தை படமாக்கியுள்ளோம்.
எங்கள் பிஸியான ஷெட்யூலால் இந்தப் படத்தைத் தயாரிக்க எங்களுக்கு ஒன்பது வருடங்கள் ஆனது. மார்க் க்ரேனியின் எழுத்து மற்றும் அவர் ஒவ்வொரு விசயம் குறித்து செய்யும் ஆராய்ச்சிகளை கண்டும் நாங்கள் வியந்தோம்…” என்றார்.
ஜோ ரூஷோ மேலும் கூறுகையில், “இந்த ‘தி கிரே மேன்’ படத்தில் அதிக ஆற்றல், கடும் நிர்ப்பந்தம் மற்றும் மிகக் குறைந்த காலக்கெடுவுடன் பரப்பரப்பாக பயணிக்கும் கதை உள்ளது. இது உங்களை இருக்கையின் நுனியில் உட்கார வைக்கும்…” என்றார்.
‘தி கிரே மேன்’ பிரத்தியேகமாக Netflix OTT-யில் வரும் ஜூலை 22-ம் தேதி வெளியாகிறது.
The post ‘தி கிரே மேன்’ – பார்வையாளர்களை மயக்கத்தில் மூழ்கடிக்கும் ஒரு அதிசய உலகம் appeared first on Touring Talkies.
]]>The post தனுஷின் ஹாலிவுட் படமான ‘தி கிரேமேன்’ ஜூலை 22-ம் தேதி வெளியாகிறது appeared first on Touring Talkies.
]]>அற்புதமான இரட்டை இயக்குநர்களான ஆன்டனி மற்றும் ஜோ ரூசோ இருவரும் நடிகர் தனுஷுடன் இணைந்திருக்கும் தங்களின் அடுத்த பிளாக் பஸ்டர் படமான, ‘தி கிரே மேன்’ திரைப்படத்தின் விளம்பரத்திற்காக இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் வர உள்ளனர்.
ருஸ்ஸோ சகோதரர்களான, ஆண்டனி மற்றும் ஜோருஸ்ஸோ இருவரும் ஹாலிவுட்டில் மிகப் பெரிய மற்றும் மிகவும் வெற்றிகரமான படங்களுக்கு பெயர் பெற்றவர்கள்.
தற்போது நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு அதிரடி நிரம்பிய படைப்பான – ‘தி கிரேமேன்’ படத்தை உருவாக்கி வருகிறார்கள். இந்தப் படத்தில் தனுஷுடன் ரையான் கோஸ்லிங், கிறிஸ் எவன்ஸ், அனாடி அர்மாஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.
மேலும் – நெட்ஃபிலிக்ஸ் இந்தியாவில் உள்ள ரசிகர்களை படைப்பாளர்கள் ரூசோ பிரதர்ஸ் உடன் நெருக்கமாக்கவுள்ளது. இந்தியாவில் நடைபெறும் தி கிரேமேன் பிரீமியரில் ரசிகர்களை சந்திக்க இயக்குநர்கள் இருவரும் விரைவில் மும்பையில் சூப்பர் ஸ்டார் தனுஷுடன் சேரவுள்ளனர்.
தங்களது இந்திய ரசிகர்களுக்கான ஒரு வீடியோ செய்தியை ருஸ்ஸோ சகோதரர்கள் பகிர்ந்து கொண்டனர்.
அதில், “அனைவருக்கும் வணக்கம்! நான் ஜோ ருஸ்ஸோ மற்றும் நான் ஆன்டனி ருஸ்ஸோ. எங்களின் புதிய படமான ‘தி கிரேமேன்’ படத்திற்காக எங்கள் அன்பு நண்பர் தனுஷைப் பார்க்க இந்தியா வருவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். தயாராகுங்கள் இந்தியா. விரைவில் சந்திப்போம்.” என்று கூறியுள்ளனர்.
‘தி கிரேமேன்’ படத்தில் நடித்த அனுபவம் பற்றி தனுஷ் பேசும்போது,”இது அற்புதமாக உள்ளது. இந்தப் படம் ஒரு ரோலர் கோஸ்டர் பயணம் போன்றதாகும். இதில் ஆக்ஷன், டிராமா, வேகம் மற்றும் பெரிய சேஸிங் எல்லாம் உள்ளது. அற்புதமான நபர்கள் நிறைந்த இந்தப் படத்தில் ஒரு அடக்கமான கதாபாத்திரத்தில் நடிக்கக் கிடைத்ததற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.” என்று கூறினார்.
வரும் ஜூலை 22 அன்று ‘தி கிரேமேன்’ படம் நெட்ஃபிலிக்ஸில் மட்டும் வெளியாகிறது.
The post தனுஷின் ஹாலிவுட் படமான ‘தி கிரேமேன்’ ஜூலை 22-ம் தேதி வெளியாகிறது appeared first on Touring Talkies.
]]>The post பிரிட்டிஷ் இசைக் கலைஞர்கள் பணியாற்றிய ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் appeared first on Touring Talkies.
]]>இப்படத்தில் இருந்து ஏற்கனவே வெளியான ‘ரகிட ரகிட’, ‘புஜ்ஜி’, ‘நேத்து’ ஆகிய பாடல்கள் இந்திய அளவில் பெரும் வரவேற்பை பெற்று, ரசிகர்களின் உள்ளங்களை வென்றுள்ளன.
இந்த அனைத்து புகழும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அவர்களையே சேரும். தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் சந்தோஷ் நாராயணன், ஒவ்வொரு படத்திலும் தனது வித்தியாசமான இசையமைப்பில் பல மாயங்களை நிகழ்த்தி, நம்மை ஆச்சர்யப்படுத்திகொண்டே இருக்கிறார்.
‘ஜகமே தந்திரம்’ போன்ற படைப்பில் அளவிலா சுதந்திரமும், படைப்பிற்கான நேரமும் கிடைத்தபடியால், அற்புதமான மாயங்களை நிகழ்த்தி ரசிகர்களை திணறடித்திருக்கிறார்.
இப்படத்தின் இசைப் பணிகள் குறித்து சந்தோஷ் நாராயணன் பேசும்போது, “இப்படத்தின் இசைப் பணிகளுக்காக எனக்கு மிகப் பெரிய அளவில் நேரம் கிடைத்தது. இது உலக அளவில் பயணப்படும் படம் என்பதால் நிறைய மெனக்கெட்டேன்.
ஒரு கலைஞனாக, பலவிதமான எனது புதிய முயற்சிகளுக்கு இப்படத்தில் இடம் கிடைத்ததில் எனக்குப் பெரும் மகிழ்ச்சி.
இந்தப் படத்தின் இசை நம் மக்களுக்கு அந்நியமாக இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். காட்சிகளுக்குத் தேவையான மண்ணின் இசையை, படத்தில் கொண்டு வந்துள்ளோம். மதுரை நாட்டுப் புற இசையையும் இப்படத்தில் முயற்சித்திருக்கிறேன்.
இந்தப் படம் ஒரு வகையில் பிரிட்டிஷ் படைப்பென்றே சொல்லலாம். அதிலும் பிரிட்டிஷ் பேண்ட் குழுவினர் மற்றும் இசை கலைஞர்கள், ஸ்காட்டிஷ் இசை கலைஞர்கள் என உலகம் முழுவதிலிருந்தும் பல திறமையாளர்களுடன் இணைந்து இப்படத்தில் பணி புரிந்திருக்கிறேன்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பிலும், கலந்து கொண்டேன். அதனால் படத்தில் இசை காட்சிகளில் எப்படி பொருந்தும்… எது பொருந்தாது என்கிற தெளிவு இருந்தது. இந்த அனுபவமே புதுமையாக இருந்தது.
‘ரகிட ரகிட’ பாடல் முதல்முறையாக எனது ஸ்டூடியோவிற்கு வெளியே பதிவு செய்த பாடல். அந்த பாடலே ஒரு அனுபவத்தின் உணர்வின் வெளிப்பாடுதான். ரசிகர்கள் அந்த அனுபவத்தை உணர வேண்டும் என்று நினைத்தோம். ரசிகர்கள் படத்தை கொண்டாடுவார்கள் என நம்புகிறேன்…” என்றார்.
The post பிரிட்டிஷ் இசைக் கலைஞர்கள் பணியாற்றிய ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் appeared first on Touring Talkies.
]]>The post ‘கர்ணன்’ படத்தின் முன் பதிவு நாளை துவங்குகிறது.. appeared first on Touring Talkies.
]]>இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் நாயகனாக நடித்திருக்கிறார். உடன் ‘நட்டி’ நட்ராஜ், யோகிபாபு, ரஜிஷா விஜயன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
இந்தப் படம் வரும் ஏப்ரல் 9-ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. தனுஷ் நடித்த ‘அசுரன்’ படத்திற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்துள்ள சூழலில் அதே ‘அசுரன்’ படத்திற்கு தமிழில் சிறந்த படத்திற்கான தேசிய விருதும் கிடைத்துள்ளது என்பதால் படத்தின் தயாரிப்பாளரான தாணு மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்.
இந்தச் சூழலில் தாணுவின் அடுத்தப் படம்.. தனுஷின் அடுத்தப் படம் என்ற ரீதியில் வெளியாகவிருக்கும் ‘கர்ணன்’ திரைப்படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பாக பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மேலவளவு பஞ்சாயத்து யூனியன் தலைவர் முருகேசனின் கொலைச் சம்பவம்தான் இந்தப் படத்தின் மையக் கரு என்பதால், இதுவும் படத்திற்குக் கிடைத்த இன்னொரு மிகப் பெரிய விளம்பரமாகியுள்ளது.
அதோடு இந்தப் படத்தில் இடம் பெறும் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டு அவையும் சர்ச்சைகளை உருவாக்கி, மிகப் பெரிய வெற்றியையும் பெற்றுள்ளன.
‘பரியேறும் பெருமாள்’ என்னும் சமூக விழிப்புணர்வு படத்தை ஹிட்டாக்கி காட்டிய இயக்குநர் மாரி செல்வராஜின் அடுத்தப் படம் இது என்பதால் மொத்த திரைப்பட ரசிகர்களும் இந்தப் படத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தப் படம் வரும் 9-ம் தேதி வெளியாவதையொட்டி.. நாளை மாலை 7.10 மணி முதல் இந்தப் படத்தின் முன் பதிவ தமிழகமெங்கும் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
‘மாஸ்டர்’ படத்திற்குப் பிறகு இந்தக் ‘கர்ணன்’ படம்தான் மிகப் பெரிய ஹிட்டை கொடுக்கும் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.
The post ‘கர்ணன்’ படத்தின் முன் பதிவு நாளை துவங்குகிறது.. appeared first on Touring Talkies.
]]>The post நடிகர் தனுஷ் போயஸ் கார்டனில் புது வீடு கட்டுகிறார்..! appeared first on Touring Talkies.
]]>போயஸ் கார்டனில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டின் அருகே புதிய வீடு கட்டுவதற்காக இடத்தை வாங்கியிருந்தார் நடிகர் தனுஷ்.
அந்த வீட்டில் புதிய வீட்டினை கட்டுவதற்கான பூஜை நிகழ்வு இன்று காலை நடந்தேறியுள்ளது.
இந்தப் பூஜை நிகழ்ச்சியில் தனுஷின் குடும்பத்தினர், மாமனார் ரஜினிகாந்த், மாமியார் லதா ரஜினி உட்பட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
தனுஷ் தற்போது ஆழ்வார்பேட்டையில் ஒரு அபார்ட்மெண்ட்டில் குடியிருக்கிறார். மிக விரைவில் இந்த வீடு கட்டப்பட்டு தனி வீட்டில் குடியேறப் போகிறார்.
The post நடிகர் தனுஷ் போயஸ் கார்டனில் புது வீடு கட்டுகிறார்..! appeared first on Touring Talkies.
]]>The post “புதுப்பேட்டை படத்தின் 2-ம் பாகமும் உருவாகப் போகிறது” – இயக்குநர் செல்வராகவன் தகவல்..! appeared first on Touring Talkies.
]]>சமீபத்தில் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகப் போவதாக செல்வராகவன் அறிவித்திருந்தார். இந்தப் படம் 2014-ம் ஆண்டுதான் வெளியாகும் என்பதையும் இப்போதே சொல்லிவிட்டார்.
இதற்குப் பிறகு தயாரிப்பாளர் தாணுவின் தயாரிப்பில் நடிகர் தனுஷின் நடிப்பில் ஒரு படத்தை இயக்குநர் செல்வராகவன் இயக்கப் போவதாகத் தகவல் வெளியானது. இந்தப் படத்திற்கு ‘நானே வருவேன்’ என்று தலைப்பிட்டுள்ளனர்.
இப்போது 2014-ம் ஆண்டு வெளியாகப் போகும் ‘ஆயிரத்தில் ஒருவன் 2-ம் பாகம்’ படத்திற்கும், ‘நானே வருவேன்’ படத்திற்கும் இடையில் ஒரு புதிய படத்தை இயக்கப் போவதாக இயக்குநர் செல்வராகவன் அறிவித்திருக்கிறார்.
இந்தப் படம் தனுஷ் மற்றும் தன்னுடைய ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் ‘புதுப்பேட்டை படத்தின் 2-ம் பாகம்’ என்று சொல்லியிருக்கிறார் செல்வராகவன்.
இந்தத் தொடர் அறிவிப்புகளே அதிரடியாக இருக்கிறது.
தனுஷ்-செல்வராகவன் கூட்டணி நிச்சயம் வெற்றி கூட்டணி என்பதால் இப்போதே அவர்களது ரசிகர்களிடையே இந்த அறிவுப்புகள் பெரும் எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது.
The post “புதுப்பேட்டை படத்தின் 2-ம் பாகமும் உருவாகப் போகிறது” – இயக்குநர் செல்வராகவன் தகவல்..! appeared first on Touring Talkies.
]]>The post தனுஷூடன், மாளவிகா மோகனன் நடிப்பதற்குக் காரணம் யார்..? appeared first on Touring Talkies.
]]>தனுஷ் நடிக்கும் 43-வது படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்தை இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்குகிறார்.
இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க மாளவிகா மோகனன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
இது எப்படி நடந்தது என்பது பற்றி சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில்தான், இது கொரோனாவால் நடந்த உதவி என்பது தெரிய வந்துள்ளது.
இது பற்றி நடிகை மாளவிகா மோகனன் பேசும்போது, “கொரோனா லாக் டவுன் காலத்திற்கு முன்பேயே இந்தப் படத்தில் நடிக்க என்னிடம் தேதி கேட்டார்கள். அப்போது நான் 2 தெலுங்குப் படங்களில் நடிக்க ஒத்துக் கொண்டிருந்ததால் அவர்கள் கேட்ட தேதி என்னிடம் இல்லை. அதனால் மன வருத்தத்தோடு இருந்தேன்.
ஆனால், திடீரென்று ஏற்பட்ட கொரோனா லாக் டவுனால் அனைத்தும் மூடப்பட்டதால் தனுஷ் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் தேதிகள்கூட மாதக் கணக்கில் தள்ளிப் போனது.
இதற்குப் பிறகு அவர்கள் மீண்டும் என்னிடம் தேதிகள் கேட்டபோது என்னிடம் இருந்தது. நான் நடிப்பதாக இருந்த படங்கள் அனைத்தும் அடுத்தாண்டுக்கு தள்ளிப் போனதால் அதிர்ஷ்டவசமாக கொரோனா புண்ணியத்தால், தனுஷுடன் இந்தப் படத்தில் நடிக்கப் போகிறேன்.. வரும் டிசம்பர் மாதம் இந்தப் படத்தின் ஷூட்டிங் துவங்கவிருக்கிறது..” என்று சொல்லியிருக்கிறார் நடிகை மாளவிகா மோகனன்.
மாளவிகா மோகனன் ஏற்கெனவே தமிழில் ‘பேட்டை’ படத்தில் நடித்திருந்தார். அதற்குப் பிறகு விஜய்க்கு ஜோடியாக ‘மாஸ்டர்’ படத்தில் நடித்திருக்கிறார். இதற்கடுத்து தனுஷுடன் ஜோடி சேர்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
எடுத்த எடுப்பிலேயே ரஜினி, விஜய், தனுஷ் என்று பெரிய நடிகர்களுடன் சுற்றி வருவதால் மாளவிகா மோகனின் மார்க்கெட் ரேட்டும் ஏறித்தான் இருக்கிறது.
The post தனுஷூடன், மாளவிகா மோகனன் நடிப்பதற்குக் காரணம் யார்..? appeared first on Touring Talkies.
]]>The post ‘ஜகமே தந்திரம்’ படத்தின் ‘புஜ்ஜி’ பாடலின் வீடியோ காட்சி..! appeared first on Touring Talkies.
]]>The post ‘ஜகமே தந்திரம்’ படத்தின் ‘புஜ்ஜி’ பாடலின் வீடியோ காட்சி..! appeared first on Touring Talkies.
]]>The post விஜய் சேதுபதியைத் தொடரும் தனுஷ்.. appeared first on Touring Talkies.
]]>சுகுமார் இயக்கத்தில் ‘புஷ்பா’, வெங்கட கிருஷ்ணா ரோகாந்த் இயக்கத்தில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’, எம்.மணிகண்டன் இயக்கத்தில் ‘கடைசி விவசாயி’, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ‘நவரசா’, எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் ‘லாபம்’, டெல்லி பிரசாத் தீனதயாள் இயக்கத்தில் ‘துக்ளக் தர்பார்’ என்று கைவசம் விரல்களையும் தாண்டிய படங்களை வைத்திருக்கிறார்.
இதற்கு ஊடாகவே சீனு ராமசாமியின் இயக்கத்தில் உருவான ‘இடம் பொருள் ஏவல்’ திரைப்படமும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யுடன் நடித்த ‘மாஸ்டர்’ படமும் திரைக்கு வரத் தயாராக இருக்கின்றன.
இந்த நேரத்தில் நடிகர் தனுஷும் வரிசையாக படங்களை ஒப்புக் கொண்டே வருகிறார். இப்போது தனுஷ் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘ஜகமே தந்திரம்’, மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘கர்ணன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இவர்களையடுத்து கார்த்திக் நரேன், மித்ரன் ஜவஹர், வெற்றிமாறன், அருண் மாதேஸ்வரன் ஆகியோரும் தனுஷுக்கான ஸ்கிரிப்ட்டுடன் தயாராகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இப்போது கூடுதலாக ‘ராட்சஸன்’ படத்தை இயக்கிய இயக்குநர் ராம்குமாரும் தனுஷை வைத்து இயக்கப் போகும் இயக்குநர்கள் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்.
தமிழ்ச் சினிமாவில் இதுவரையிலும் சொல்லப்படாத ஒரு அறிவியல் புனைவுக் கதையை தனுஷூக்காகத் தயார் செய்திருக்கிறாராம் இயக்குநர் ராம்குமார். இந்தப் படமும் அடுத்த வருடம் துவங்கவிருக்கிறதாம். படத்திற்கு ‘வால் நட்சத்திரம்’ என்று பெயர்கூட வைத்துவிட்டதாக லேட்டஸ்ட் தகவல்கள் தெரிவிக்கின்றன.
The post விஜய் சேதுபதியைத் தொடரும் தனுஷ்.. appeared first on Touring Talkies.
]]>